நள்ளிரவு இடம்பெற்ற கோர விபத்து :!13 வயது சிறுமி உயிரிழப்பு : தீவிர சிகிச்சைப்பிரிவில் இருவர்!!

குருநாகல் – தம்புள்ளை பிரதான வீதியில் கொக்கரல்ல பகுதியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற கோர விபத்தில் 13 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்து குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த பிக்கப் ரக வாகனமும், எதிரே வந்த பேருந்தும் நேருக்கு நேர் மோதியதிலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்தின் போது பிக்கப் ரக வாகனத்தில் பயணித்த 13 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அத்துடன், அந்தச் சிறுமியின் தாயார் மற்றும் மாமா ஆகிய இருவருமே படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனையடுத்து காயமடைந்தவர்கள் உடனடியாக அப்பகுதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

நாட்டில் எலிக்காய்ச்சல் தீவிரம் : கடந்த ஆண்டில் 200 பேர் மரணம் – 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!!

இலங்கையில் வருடாந்தம் சுமார் 13 ஆயிரம் பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவதுடன், கடந்த ஆண்டில் மட்டும் இந்நோயினால் 200 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தொற்றுநோய்ப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் துஷானி தம்பேரரா எச்சரித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த ஆண்டில் மட்டும் 11 ஆயிரத்து 585 பேர் எலிக்காய்ச்சல் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். நடப்பு ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 1,800 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

குறிப்பாக இரத்தினபுரி, காலி, கேகாலை, மொனராகலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

லெப்டோஸ்பைரா எனும் பக்டீரியாவினால் இந்நோய் ஏற்படுகின்றது. தொற்றுக்குள்ளான எலிகள் மற்றும் ஏனைய பாலூட்டி விலங்குகளின் சிறுநீர் மூலமே இந்தப் பக்டீரியா பரவுகின்றது.

பக்டீரியா பரவியுள்ள நீர்நிலைகள், சதுப்பு நிலங்கள் மற்றும் வயல் நிலங்களில் நடமாடுவது அல்லது வேலை செய்வதன் மூலம் மனிதர்களுக்கு இந்நோய் தொற்றுகின்றது.

தற்போது கொழும்பு, கண்டி உள்ளிட்ட நகர்ப்புறங்களில் முறையற்ற விதத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால், எலிகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நகர்ப்புறங்களிலும் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் தீவிரமடைந்துள்ளது.

பொதுவாக 20 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களே அதிகம் பாதிக்கப்பட்டாலும், அண்மைக்காலமாகச் சிறுவர்களும் இத்தொற்றுக்கு உள்ளாவது அவதானிக்கப்பட்டுள்ளது.

சிறுபோக நெற்செய்கை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையிலும், பெரும்போக அறுவடைப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலும் விவசாயிகள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். வயல் நிலங்கள் மற்றும் கால்வாய்களில் இறங்குவோர் உரிய சசுகாதார பாதுகாப்பு ஆலோசனைகளைப் பின்பற்றுவது அவசியமாகும்.” – என்றார்.

காத்தான்குடி கடற்கரையில் மர்மப் பொருள் : காணக் குவிந்த மக்கள்!!

மட்டக்களப்பு – காத்தான்குடி கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் மர்ம பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் பொறுப்பதிகாரி ஐ. பி அழக கோன் தெரிவித்தார்.

குறித்த மர்மப் பொருள் நேற்று மாலை கரையொதுங்கியுள்ளது. சுமார் 25 அடி நீளமும், 4 ஆடி உயரமும் கொண்ட இந்த மர்மப்பொருள் ரெஜிபோர்மினால் காணப்படுகிறது.

இந்நிலையில் கப்பல் தரைதட்டும்போது அதன் பாதுகாப்பிற்கு பயன்படும் தடுப்பு ஆணையாக இது இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் குறித்த மர்ம பொருளை மக்கள் சென்று பார்வையிட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த மர்மப்பொருள் தொடர்பான விசாரணைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

 

போதைப்பொருள் விற்று மனைவிக்கு சொகுசு வீடு : முடக்கிய அதிகாரிகள்!!

போதைப்பொருள் விற்று மனைவியின் பெயரில் ஜா-எல, வெலிகம்பிட்டிய பகுதியில் கொள்வனவு செய்யப்பட்ட 400 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று மாடி வீட்டை 7 நாட்களுக்கு தடை செய்வதற்கு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நேற்று (13) நடவடிக்கை எடுத்துள்ளது.

கொலை செய்யப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் நெருங்கிய சகாவும், தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள ‘பட்டுவத்த சாமர’ என்ற மனோஜ் சுரங்க என்பவரின் மவியின் சொகுசு வீடே முடக்கப்பட்டுள்ளது.

மூன்று சந்தர்ப்பங்களில் வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு

படுவத்த சாமர என்பவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தில் இந்த வீட்டை கொள்வனவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் வௌியானதையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வீட்டை இரண்டு மாதங்களுக்கு முன்பு மற்றொரு தரப்பினர் வாடகைக்கு எடுத்து முதியோர் இல்லம் ஒன்றை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அங்கு தங்கியிருந்த 9 முதியவர்களும் 4 தாதியர்களும் நேற்று அவ்விடத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.

படுவத்த சாமரவின் மனைவியான சதுரிக்கா வீரசூரிய இதற்கு முன்னர் இந்த வீட்டில் வசித்து வந்த நிலையில், மூன்று சந்தர்ப்பங்களில் வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இறுதியாக கடந்த 7ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சொத்து தொடர்பாக மேல் நீதிமன்றில் விடயங்களை அறிக்கையிட்டு, அதன் பின்னர் தடை உத்தரவை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

 

பல மாவட்டங்களில் அதிகரிக்கும் வெப்பம் : வெளியான முக்கிய எச்சரிக்கை!!

பல மாவட்டங்களில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி வரை கடும் வெப்பமான வானிலை நீடிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன் காரணமாக, கடும் வெயிலுக்கு மத்தியில் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என பாடசாலை விளையாட்டு வீரர்களுக்கு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

நாட்டில் நிலவும் இடைப் பருவக்காற்று காலநிலை காரணமாக, கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் நாட்டின் பல பகுதிகளில் தற்போது கடும் வெப்பமான வானிலை நிலவுகிறது.

இதன் விளைவாக மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலையானது அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தை எட்டியுள்ளது.

வெப்பச் சுட்டெண்ணின்படி, இந்த மதிப்பானது 45 இற்கும் அதிகமானது என்பதோடு, இது ‘அதிக அவதானம்’ செலுத்த வேண்டிய மட்டமாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் தங்க விலையில் பதிவாகியுள்ள நிலவரம் : சர்வதேச சந்தையில் தலைகீழ் மாற்றம்!!

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5020 டொலர் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 80.61 அமெரிக்க டொலர்களாக விற்பனையாகிறது.

அந்த வகையில் பார்க்கும் போது வெள்ளியின் விலையும் சுமார் 4 சதவீதம் வரை சரிந்துள்ளதாக தெரியவருகிறது.

அமெரிக்க டொலரின் பெறுமதி சர்வதேச சந்தையில் வலுவடைந்து வருவது மற்றும் பணவீக்கம் தொடர்பான கவலைகள் தங்கத்தின் விலையில் இந்த சரிவை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கொழும்பு செட்டியார்தெருவின் இன்றைய தினத்திற்கான தகவல்களின் படி 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 406000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 375500 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாலி கட்டும்வரை காதலனை கைது செய்ய வேண்டாம் : பொலீசிடம் கெஞ்சிய மணப்பெண்!!

தாலி கட்டும்வரை மணமகனை விடுவிக்குமாறு மணப்பெண் காவல்துறையினரிடம் கெஞ்சியுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கடந்த மார்ச் 11 ஆம் திகதி அன்று பூரா ஹடி என்று அழைக்கப்படும் ஆகாஷ் என்பவருக்கும் சீமா என்ற அவரது காதலிக்கும் திருமணம் நடைபெற இருந்தது.

திருமண ஏற்பாடு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருந்த சூழலில், திருமண மண்டபத்திற்கு வந்த காவல்துறையினர் மணமேடையில் இருந்த மணமகன் ஆகாஷ் கைது செய்து அழைத்து சென்றனர்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண் உடனடியாக காவல்நிலையத்திற்கு விரைந்து, மண்டபத்தில் விருந்தினர்கள் காத்துக்கொண்டுள்ளனர். திருமண சடங்குகள் முடிந்து தாலி கட்டும் வரை அவரை அனுமதியுங்கள். அதன் பின்னர் கைது செய்து கொள்ளுங்கள் என காவல்துறையினரிடம் அழுதபடியே கெஞ்ச துவங்கியுள்ளார்.

ஆனால் காவல்துறையினர் அதற்கு சம்மதிக்கவில்லை. காவல்நிலையத்தில் வைத்தே திருமண உறுதிமொழிகளை மேற்கொள்ள அனுமதி கேட்டுள்ளார். அதற்கு காவல்துறை ஒப்புக்கொள்ளவில்லை. சீமாவும், ஆகாஷும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆகாஷின் கூட்டாளிகளான ராஜம்ஜி தாக்கூர், அபிஷேக் உபாத்யாய், அபிஷேக் மீனா, நீரஜ் காங்கே மற்றும் அமித் ஓஸ்வால் ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஆகாஷ் மீது கொலை உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ள 31 வழக்குகள் உள்ளது. சட்டவிரோத கும்பல்” என்ற பெயரில் அழைக்கப்படும் இந்தக் கும்பல் 2018 முதல் போபாலில் செயல்பட்டு வருகிறது.

வாஜ்பாய் நகரைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்தக் குழுவில் இருந்தனர், அவர்களில் பலர் விசுவாசம் மற்றும் அடையாளத்தின் அடையாளமாக தங்கள் கழுத்தில் “illegal” என்ற வார்த்தையை பச்சை குத்தியுள்ளனர்.

2024 ஆம் ஆண்டில் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆகாஷ், 18 மாதங்கள் சிறையில் இருந்த அவர், 4 மாதங்களுக்கு முன்பே ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

26 வயது பூசாரியை கடத்தி ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அடைத்து வைத்து தாக்கி ரூ.8 லட்சம் செலுத்துமாறு மிரட்டினர். பணம் செலுத்தாவிட்டால் என்னுடைய காதலியை துஸ்பிரயோகம் செய்ததாக பொய் புகாரில் சிக்க வைத்து விடுவோம் என மிரட்டியுள்ளனர்.

முதலில் ரூ.50,000 ஆன்லைன் மூலம் செலுத்துமாறும், மீதமுள்ள தொகையை படிப்படியாக செலுத்துமாறும் கூறியுள்ளனர். தனது திருமண செலவிற்காகவே ஆகாஷ் இந்த கடத்தலை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

அவர் விடுவிக்கப்பட்ட நிலையில், அவர் அளித்த புகாரின் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண் : சந்தேகநபர்கள் தலைமறைவு!!

இரத்தினபுரி – அயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தூல்கல பகுதியில் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று காலை தூல்கல பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முன்னால் பெண் ஒருவர் கழுத்தில் பலத்த வெட்டுக்காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் விழுந்து கிடக்கின்றார் என்று அயகம பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், உயிருக்கு போராடிய பெண்ணை மீட்டு அயகம வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த கொலையைச் செய்த சந்தேகநபர்கள் யார்? அல்லது எதற்காக இந்த கொலை செய்யப்பட்டது? என்பது குறித்த எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

தலைமறைவாகியுள்ள சந்தேகநபர்களை கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை அயகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மிஸ் ஜேர்மனி அழகிப்பட்டம் வென்றுள்ள அகதிப்பெண்!!

சிரியாவிலிருந்து ஜேர்மனிக்கு அகதியாக வந்த இளம்பெண்ணொருவர், 2026ஆம் ஆண்டுக்கான மிஸ் ஜேர்மனி பட்டத்தை வென்றுள்ளார். சிரியாவில் பிறந்த ரோஸ் மாண்டி (Rose Mondy, 26) சிறுபிள்ளையாக இருக்கும்போது, அவரது குடும்பம் சிரியா உள்நாட்டு யுத்தத்துக்குத் தப்பி ஜேர்மனிக்கு வந்தது.

ஜேர்மனியிலுள்ள Ruhr என்னுமிடத்தில் வளர்ந்த ரோஸ், ஒரு சமூக ஊடகப் பிரபலம் ஆவார்.

2024ஆம் ஆண்டிலும் மிஸ் ஜேர்மனி போட்டியில் பங்கேற்றார் ரோஸ். இறுதிச் சுற்றுவரை வந்த நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவர் கடைசி நேரத்தில் போட்டியிலிருந்து வெளியேறினார்.

என்றாலும், தனது முயற்சியைக் கைவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த ரோஸ், மீண்டும் இந்த ஆண்டு போட்டியில் பங்கேற்றதுடன், மிஸ் ஜேர்மனி பட்டத்தையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த மனைவி!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த அந்தோணி ராபின் (25) தனியார் எரிவாயு நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.

அவரது மனைவி அம்மு (22). காதலித்து திருமணம் செய்த இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். அம்முவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தனது அக்காவின் கணவருடன் ஒழுக்கமற்ற தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இதை அறிந்த அந்தோணி ராபின் மனைவியை கண்டித்ததால் இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த 10ம் தேதி இரவு வீட்டில் படுத்திருந்த அந்தோணி ராபின், அதிகாலை 3 மணியளவில் தீக்காயங்களுடன் அலறி சத்தம் போட்டுள்ளார்.

அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதையடுத்து மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டதால் அந்த பகுதியிலிருந்த கண்காணிப்பு கருவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் வீட்டின் முன் நின்றிருந்த ஆணின் மீது பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தது போன்ற காட்சி பதிவாகியிருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அந்தோணி ராபின் மரணத்திற்கு மனைவி காரணமாக இருக்கலாம் என உறவினர்கள் சந்தேகம் தெரிவித்தனர். சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி அவர்கள் சடலத்தை பெற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எரிபொருள் பற்றாக்குறை ஏற்படலாம் : ஜனாதிபதி அநுர வெளியிட்டுள்ள தகவல்!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் 2 மாதங்களுக்கு மேல் நீடித்தால், நாட்டின் எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவது சவாலாக அமையும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், தற்போதைய நிலையில் அடுத்த 2 மாதங்களுக்கு மட்டுமே தடையின்றி எரிபொருள் வழங்க அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்க முடியும் எனக் கூறினார்.

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்து மாற்றமடைந்து வருவதால், சில எரிபொருள் டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. போர் நீடித்தால் விலையில் கடும் மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் அவர் எச்சரித்தார்.

2022ஆம் ஆண்டு ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு டொலர் பற்றாக்குறையால் உருவானது. ஆனால் தற்போது இலங்கையிடம் 7.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கையிருப்பு உள்ளதால், நிதிச் சிக்கல் இல்லை என்றும், விநியோகப் பாதைகளில் ஏற்படும் தடைகளே தற்போதைய கவலை என்றும் அவர் குறிப்பிட்டார்.

விநியோகப் பாதைகள் பாதிக்கப்பட்டால், எரிபொருளைப் பெற்றுக்கொள்ள நட்பு நாடுகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார். நவீன தொழில்நுட்பப் போர் முறைகளால் நீண்டகால பாதிப்புகளைக் கணிப்பது கடினம் என்றும் ஜனாதிபதி அநுர சுட்டிக்காட்டினார்.

கனடாவில் இந்திய வம்சாவளிப் பெண் படுகொலை வழக்கு : சமீபத்திய தகவல்!!

சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்திவந்த இந்திய வம்சாவளிப் பெண்ணொருவர் கனடாவில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

பஞ்சாப் பின்னணி கொண்டவரான நான்சி க்ரெவால் (45), மார்ச் மாதம் 3ஆம் திகதி இரவு 9.30 மணியளவில், மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு பொலிசாருடன் சென்ற மருத்துவ உதவிக்குழுவினர் நான்சியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள். ஆனால், காயங்கள் காரணமாக அவர் உயிரிழந்துவிட்டார்.

இந்நிலையில், நான்சியைக் கொலை செய்த நபர்கள் வந்த வாகனம், அந்த தெருவில் நிறுத்தப்பட்டு இருந்துள்ளது. அந்த நபர்கள் நான்சியைக் கத்தியால் குத்திவிட்டு அதே வாகனத்தில் தப்பியோடியுள்ளார்கள்.

ஆக, அந்த வாகனம் பார்க் செய்யப்பட்டிருந்ததை அப்பகுதியில் வாழும் மக்கள் யாராவது பார்த்தார்களா, அல்லது அந்த வாகனம் மீண்டும் புறப்பட்டுச் செல்வது அந்த தெரு வழியாக வந்த யாருடைய காரிலுள்ள கமெராவிலாவது பதிவாகியுள்ளதா என விசாரித்துவரும் பொலிசார், அது குறித்து தகவல் ஏதாவது கிடைத்தால் தங்களுக்குத் தெரியப்படுத்துமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுளார்கள்.

இதற்கிடையில், இந்த வழக்கில் ஒன்ராறியோ மாகாண பொலிசாரும் இணைந்துகொண்டுள்ளார்கள். இதற்கிடையில், நான்சி வழக்கைப் பொருத்தவரை, அவர் தற்செயலாக தாக்கப்படவில்லை, யாரோ திட்டமிட்டே அவரை கொலை செய்துள்ளார்கள் என்பது உறுதியாகியுள்ளது.

சமூக ஊடகப் பிரபலமான நான்சி, இந்தியா கனடாவுக்கிடையிலான தூதரக உறவுகளில் ஏற்பட்ட விரிசல், மற்றும் இந்திய அரசியல், தான் சார்ந்த பஞ்சாப் அரசியல், குறிப்பாக காலிஸ்தான் அமைப்பு குறித்த கருத்துக்களை சமூக ஊடகங்களில் பகிர்வதன் மூலம் பரபரப்பை ஏற்படுத்திவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவின் புதிய புலம்பெயர்தல் விதிகளால் பாதிப்புக்குள்ளாகியுள்ள இலங்கையர்கள் மற்றும் இந்தியர்கள்!!

பிரித்தானியாவின் புதிய புலம்பெயர்தல் விதிகளால் பாதிப்புக்குள்ளாகியுள்ளவர்களில் இலங்கையர்கள் மற்றும் இந்தியர்களும் அடங்குவர்.

விரைவில், பிரித்தானியாவில் காலவரையறையின்றி வாழ அனுமதி கிடைக்கும் என நம்பியிருந்த நிலையில், புதிய விதிகள் அந்த நிலையை மாற்றியுள்ளதால், அவர்கள் தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

2023ஆம் ஆண்டு, இலங்கையிலிருந்து தன் பிள்ளைகளுடன் skilled worker pathway என்னும் திட்டத்தின் கீழ் பிரித்தானியாவுக்கு வந்தார் குஷானி சுரவீரா (Kushani Suraweera).

பிரித்தானியாவில் அவர் senior care worker என்னும் பணி செய்துவந்த நிலையில், ஐந்து ஆண்டுகளில் நிரந்தரமாக பிரித்தானியாவில் வாழும் அனுமதி கிடைத்துவிடும் என அவரது குடும்பம் நம்பிக்கொண்டிருந்திருக்கிறது.

துரதிர்ஷ்டவசமாக, 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், இலங்கையிலிருந்த குஷானியின் கணவர் உடல் நலக்குறைவால் மரணமடைந்துள்ளார்.

பிரித்தானியாவில் விசா புதுப்பிக்கும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுவந்ததால், அவரது இறுதிச்சடங்குக்காக இலங்கை செல்ல முடியாத நிலை ஏற்பட, குஷானியும் பிள்ளைகளும் பரிதவித்துப்போயுள்ளார்கள்.

இப்படி கடினமான சூழல்களைக் கடந்து பிரித்தானியாவில் ஒரு புதுவாழ்வை அமைத்துக்கொடுக்க முயன்றுகொண்டிருந்த நிலையில்தான், பிரித்தானிய உள்துறை அமைச்சரான ஷபானா மஹ்மூத் அந்த அதிர்ச்சியளிக்கும் அறிவிப்பை வெளியிட்டார்.

ஆம், ஐந்து ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்தால், அதன் பின் காலவரையறையின்றி வாழ தகுதி பெறலாம் என இருந்த விதியை மாற்றி, இனி 10 ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்தால் மட்டுமே அது சாத்தியம் என ஷபானா புது விதி ஒன்றை அறிவிக்க, குஷானி போன்றவர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்கள்.

குஷானியைப்போலவே, இந்தியர்களான வினோத் சேகரும் அவரது மனைவியான தீபா நடராஜனும், பிரித்தானியாவில் காலவரையறையின்றி வாழும் ஐந்து ஆண்டுகள் விதி நிறைவேற இன்னும் எட்டு மாதங்கள் மட்டுமே உள்ளன என்னும் சந்தோஷத்தில் இருக்க, ஷபானாவின் புதிய விதி அவர்களுக்கும் சிக்கலை உருவாக்கியுள்ளது.

தம்பதியர், குழந்தைப்பேறு சிகிச்சைக்காக காத்திருக்கும் நிலையில், புதிய விதியால், அதற்கு பல ஆண்டுகள் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளதால் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப்போயிருக்கிறார்கள் அவர்கள்.

அதேபோல, யாருடைய உதவியும் இல்லாமல், தங்கள் சேமிப்பு முழுவதையும் செலவிட்டு பிரித்தானியா வந்த ஜேம்ஸ் குணதிலகே (James Theje Gunatilake) என்னும் இலங்கையரும் விரைவில் பிரித்தானியாவில் காலவரையறையின்றி வாழமுடியும் என நம்பிக்கொண்டிருந்த நிலையில், ஷபானாவின் புதிய விதியால் அவரது குடும்பமும் கவலைக்குள்ளாகியுள்ளது.

ஆனால், இப்படி புதிய விதியால் ஏராளம் திறன் மிகுப்பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், பிரித்தானிய உள்துறை அலுவலகமோ, தாங்கள் கொண்டுவந்த கட்டுப்பாடுகளுக்காக அரசு மன்னிப்புக் கேட்கப்போவதில்லை என்கிறது.

வீடு முழுக்க இரத்த : ஆறு மனைவி, மருமகள், 6 வயதுப் பேத்தி மூவரையும் ஆயுதத்தால் தாக்கி கொலை : கதறும் மகன்!!

ஒடிசா மாநிலத்தின் தேவ்கர் மாவட்டம் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவி, மருமகள் மற்றும் பேத்தியை கொலை செய்ததாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.

அப்பகுதியில் மூவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 52 வயதான ரமேஷ் கரியா என்பவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கோபமடைந்து கொடூரமாக தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

கோபத்தில் கட்டுப்பாட்டை இழந்த அவர், தனது மனைவி, மருமகள் மற்றும் 6 வயது பேத்தியை கனமான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார். உயிருக்கு பயந்து மருமகளின் அறைக்குள் ஓடிய மனைவியையும் அவர் துரத்திச் சென்று தாக்கியதாக கூறப்படுகிறது.

வேலை முடிந்து வீட்டிற்கு வந்த அவரது மகன் தீரன், தாய், மனைவி மற்றும் குழந்தை உயிரிழந்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாகியுள்ள ரமேஷ் கரியாவை பிடிக்க போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிணற்றில் குதித்த மனைவி : காப்பாற்றச் சென்ற கணவனும் உயிரிழப்பு!!

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சக்தி பரதன் என்பவர், அந்த பகுதியில் விவசாயம் பார்த்துக் கொண்டே பால் வியாபாரமும் செய்து வந்தார்.

இவருடைய மனைவி ராஜகுமாரி. இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கணவன் மனைவிக்குள் குடும்பத் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த ராஜகுமாரி, வாக்குவாதம் முற்றிய நிலையில், திடீரென தான் தற்கொலைச் செய்துக் கொள்ளப் போவதாக ஆவேசமாக கூறிவிட்டு,

வீட்டின் பின்புறம் உள்ள விவசாயக் கிணற்றை நோக்கி ஓடினார். அவரைத் தடுக்க சக்தி பரதன் ராஜகுமரியின் பின்னாலேயே ஓடிச் சென்று சமாதானப்படுத்த முயற்சி செய்தார்.

ஆனால் அதற்குள் ராஜகுமாரி கிணற்றில் குதித்து விட்டு உயிருக்கு போராடிய படியே தத்தளித்தார். மனைவியை காப்பாற்றுவதற்காக சக்திபரதனும் துணிச்சலாக கிணற்றில் குதித்தார்.

ஆனால் சக்தி பரதனுக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். சில நிமிடங்களில் ராஜகுமாரியும் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடல்களையும் மீட்டு,

விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களின் இரு குழந்தைகளும் ஒரே நாளில் தாய், தந்தையை இழந்து நின்றது அங்கிருந்தவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

விமானத்தில் சத்தமாக வீடியோ பார்த்த பெண் : பாதியிலேயே இறக்கிவிட்ட ஊழியர்கள்!!

அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தில் சக பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், ஹெட்போன் அணியாமல் சத்தமாக வீடியோ பார்த்த பெண் ஒருவர் பாதியிலேயே இறக்கிவிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மியாமியிலிருந்து தம்பா நோக்கி செல்லவிருந்த அந்த விமானத்தில், ஒரு பெண் தனது மொபைலில் அதிக சத்தத்துடன் வீடியோக்களை தொடர்ந்து பார்த்துள்ளார்.

விமான ஊழியர்கள் பலமுறை எச்சரித்தும், அவர் ஹெட்போன் பயன்படுத்த மறுத்து முரட்டுத்தனமாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு அதிகாரிகள் அவரை விமானத்திலிருந்து வெளியேற்ற முயன்றபோது அந்த பெண் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில் “வெறும் 30 வினாடிகள் மட்டுமே வீடியோ பார்த்தேன், இதற்காகவா என்னை இறக்கிவிடுகிறீர்கள்?” என அவர் கூச்சலிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இறுதியில் போலீசார் அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றியபோது, மற்ற பயணிகள் கைதட்டி வரவேற்றனர். அதேசமயம் சமீபத்தில் ஹெட்போன் இன்றி ஆடியோ அல்லது வீடியோக்களை சத்தமாக பார்ப்பது விதிமீறல் என்றும், இதற்காக பயணிகளுக்கு தடை விதிக்கப்படலாம் என்றும் விமான நிறுவனங்கள் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.