இந்தியாவில் தஞ்சமடைந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 இலங்கையர்கள்!!

இலங்கையின், மத்திய மலைநாட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கண்டியைச் சேர்ந்த 43 வயதுடைய எம்.மொஹமட் கியாஸ், அவரது மனைவியான 34 வயதுடைய எம். பாத்திமா ஃபர்ஹானா ஆகியோரும், 12 மற்றும் 4 வயதுடைய அவர்களது மூன்று பிள்ளைகளுமே இவ்வாறு தமிழ் நாட்டில் தஞ்சமடைந்துள்ளனர்.

படகு மூலமாக இலங்கையிலிருந்து பயணித்த இவர்கள், இன்று(10.06) அதிகாலை இராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடிக்கு இடையேயான கரையில் இறக்கிவிடப்பட்டுள்ளதாகத் தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோசமான பொருளாதார நிலைமை காரணமாக தாங்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக, அவர்கள் இந்திய பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அவர்களை மண்டபம் மறுவாழ்வு மையத்தில் தங்க வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வற்றாப்பளைக்கு சென்று திரும்பிய இளைஞருக்கு நேர்ந்த சோகம்!!

முல்லைத்தீவு – வற்றாப்பளை ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திற்கு சென்று திரும்பிய இளைஞரொருவர் விபத்தில் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் இன்று அதிகாலை வேளையில் இடம்பெற்றிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர் மோட்டார்சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் ஒலுமடு பகுதியில் விபத்திற்கு உள்ளாகி வாய்க்காலொன்றுக்குள் விழுந்துள்ளார்.

நித்திரை கலக்கம் காரணமாக இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

100 ஆண்டு கனேடிய பல்கலைக்கழக வரலாற்றில் பட்டம் பெற்ற முதல் இலங்கைப் பெண்!!

கனடாவின் புனித ஜோன்ஸ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற முதல் இலங்கை பெண்மணி என்ற பெருமையை குசானி சந்தகிரி பெற்றுள்ளார்.

100 வது ஆண்டு நிறைவை எட்டியுள்ள இந்த பல்கலைக்கழகத்தில், முதல் தடவையாக பொறியியல் பட்டப்படிப்பை மேற்கொள்ள சென்றவரும், அதேநேரம் அந்த பட்டத்தை பெற்றவருமாக குசானி திகழ்கிறார்.

இலங்கையில் வேதியியல் பொறியியலில் ஒரு தேசிய டிப்ளோமா கற்கை நெறியை மேற்கொண்ட சந்தகிரி, பின்னர், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பணி செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பெற்ற அனுபவமே தம்மை, கனேடிய கற்கைக்கு வழிவகுத்தது என்றும் குசானி குறிப்பிட்டுள்ளார்.

தாம் கனடாவில் படித்துக்கொண்டே, இலங்கையில் உள்ள தமது குடும்பத்தினருக்கு பணம் அனுப்புவதற்காக வேலை ஒன்றில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், தாம் கனடாவில் எரிவாயு துறையில் தொடர்ந்து பணியாற்றவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோர விபத்தில் தூக்கி வீசப்பட்ட சாரதிகள்!!

ஹொரணை – வாகவத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி மீது எதிர் திசையில் இருந்து வந்த கார் மோதியதில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதியும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு விழுந்தமை அருகில் உள்ள சிசிரிவி கருவியில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும் ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் களுபோவில வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், விபத்தில் காயமடைந்த காரின் ஓட்டுநர் ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த கதி : பெருந்தொகை டொலர்கள் நாசம்!!

அமெரிக்காவில் சிகோபி பகுதியில் இலங்கை உணவக லொறியான Island Spice தீவிபத்துக்குள்ளாகி முழுமையாக சேதமடைந்துள்ளது.

அதன் உரிமையாளர் டீ பெர்னாண்டோ என்ற பெண், வியாழக்கிழமை காலை ஒரு உணவு தொடர்பான நிகழ்வுக்குச் செல்லும் வழியில் தனது உணவு லொரி தீப்பிடித்ததாக கூறினார்.

எனது உறவினர் லொறியை ஓட்டி வந்தார். அதில் இருந்து திடீரென புகை வெளியேற தொடங்கியபோது நான் பின்னால் இருந்தேன்,” என பாதிக்கப்பட்ட இலங்கை பெண் கண்ணீருடன் தெரிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் உணவு லொறியை இனி பயன்படுத்த முடியாத நிலைக்குள்ளாகியுள்ளதென அவர் கூறியுள்ளார்.

இந்த லொறி எங்களுக்கு சமையலறையை விட மிகவும் பெரியது. இது எங்கள் இதயத்தின் மற்றும் சமூகத்தின் ஒரு பகுதியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தீ விபத்துகளிலிருந்து பாதுகாக்கவும், அது விதிமுறைகளுக்கு ஏற்ப உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும் லொறிக்கு சரியான உபகரணங்களைப் பெற ஆயிரக்கணக்கான டொலர்களை செலவிட்டதாக பாதிக்கப்பட்ட பெண்ணான பெர்னாண்டோ தெரிவித்தார்.

இதையெல்லாம் மாற்றுவதற்கு எவ்வளவு செலவாகும் என்று எனக்குத் தெரியவில்லை என பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். இந்த தீ விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் ஆலய இரத உற்சவம்!!

வவுனியா – குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் இரதோற்சவம் இன்று (09.06.2025) காலை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. பக்தர்கள் சூழ இன்று காலை முதல் கிரியைகள் இடம்பெற்று காலை வசந்தமண்டப பூஜை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து காளி அம்பாள் உள்வீதி வலம் வந்து தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதன்போது, அடியார்கள் அங்கபிரதட்சனை, காவடிகள் மற்றும் கற்பூர சட்டி என்பவற்றை ஏந்தி தங்களது நேர்த்திகடன்களை செலுத்தினர்.

இதேவேளை, காலை 10.30 மணியளவில் தேர் இருப்பிடத்தை வந்தடைந்ததை தொடர்ந்து அர்ச்சனை இடம்பெற்றது.

தேனிலவுக்கு சென்றபோது மாயமான தம்பதி : சடலமாக புதுமாப்பிள்ளை : அம்பலமான புதுப்பெண்ணின் சதி!!

இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் தேனிலவுக்கு சென்றபோது காணாமல்போன புதுமாப்பிள்ளை, தன் மனைவியின் கூலிப்படையால் கொல்லப்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த மே 23ஆம் திகதி புதுமணத் தம்பதியான ராஜா ரகுவன்ஷி, சோனம் மேகாலயாவிற்கு தேனிலவுக்கு சென்றனர். அங்கு சில பகுதிகளை சுற்றிப் பார்த்த அவர்கள் இருவரும் மாயமாகினர். இதனையடுத்து சூன் 2ஆம் திகதி, ராஜா ரகுவன்ஷியின் உடல் மட்டும் ரியாத் அர்லியாங்கில் கண்டெடுக்கப்பட்டது.

ஆழமான பள்ளத்தாக்கில் அவரது சடலம் கிடைக்க, அருகே அவரைக் கொல்லப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கத்தி ஒன்றும் கிடைத்தது.

பின்னர் அவரது மனைவி சோனமை தேடும் பணி தொடர்ந்தது. ஆனால், திடீர் திருப்பமாக காஜிப்பூரில் உள்ள ஒரு தாபாவில் சோனம் மயக்க நிலையில் மீட்கப்பட்டார்.

உடனே சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் அவரிடம் விசாரித்தபோது கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, இரவு நேர சோதனைகளில் மூன்று குற்றவாளிகளை பொலிஸார் கைது செய்தனர்.

மேலும் இந்தூரில் இருவரும், உத்தரப்பிரதேசத்தில் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

கணவனை காப்பாற்ற போராடிய இளம் மனைவி, மகள் உட்பட நான்கு பேர் பலி : சுற்றுலாவின் போது நேர்ந்த துயரம்!!

பொலன்னறுவையில் ஏரி ஒன்றில் உயிருக்கு போராடிய நபரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, அவர்களின் மகள் மற்றும் இன்னுமொரு பெண்ணும் உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

திம்புலாகலவில் உள்ள எல்லே ஏரியில் குளிக்கச் சென்ற நான்கு பேர் நேற்று காலை நீரில் மூழ்கி உயிரிழந்ததாக அரலகங்வில பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பின் புறநகர் பகுதியான இரத்மலானையில் இருந்து பொலன்னறுவையிலுள்ள அவர்களின் உறவினர் வீட்டுக்கு சுற்றுலா சென்ற நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 30 வயதான மேனகா தர்ஷினி, 27 வயதான தாரக டி சில்வா, 25 வயதான திலோகம திலகரட்ன, 13 வயதான லிஹினி பத்திரிகா ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

திலோகம திலகரத்ன என்பவர் ஏரியில் நீந்தச் சென்றபோது நீரில் மூழ்கியுள்ளார். ​​அவரைக் காப்பாற்ற மூன்று பெண்களும் ஏரியில் குதித்ததாகவும், இதனாலேயே அவர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்று இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிள்ளைகள் முன்னிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட தந்தை : மனைவி மீதும் தாக்குதல்!!

களுத்துறை பிரதேச சபையின் மின்சார ஊழியரை அவர்களது இரண்டு பிள்ளைகளின் முன்னிலையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாள்கள் மற்றும் தடிகளுடன் வந்த ஆயுதமேந்திய குழு ஒன்று வீட்டிற்குள் புகுந்து, அவரை கொலை செய்த பின்னர் அவரது மனைவியை தாக்கி காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை, பனாபிட்டிய, வத்தகொட பகுதியை சேர்ந்த 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான சுகத் பிரசன்ன என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், நேற்று அதிகாலை 2 மணியளவில் வீட்டிற்குள் நுழைந்த ஆயுதக் குழுவே இந்தக் கொலையைச் செய்ததாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை நடந்த நேரத்தில் 16 வயது மகளும் 5 வயது மகனும் வீட்டில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. வீட்டில் இருந்த நாயும் காணவில்லை என்று குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

கொலையாளிகள் முச்சக்கர வண்டியில் வந்ததாக தகவல் கிடைத்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேன் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : இருவர் படுகாயம்!!

இரத்தினபுரி – எம்பிலிப்பிட்டிய வீதியில் கப்புஹேன்தென்ன சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (09.06) காலை இடம்பெற்றுள்ளது. வேன் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கணவனின் கொடூர செயலால் துடிதுடித்து இறந்த மனைவி!!

குளியாப்பிட்டிய – வல்பிடகம பிரதேசத்தில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 44 வயதுடைய வடுமுன்னேகெதர பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மண்வெட்டியைக் கொண்டு கணவன் தாக்கியதில் குறித்த பெண் மரணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தற்போது குளியாப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, 43 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மோட்டார் சைக்கிளால் பரிதாபமாக பறிபோன குடும்பஸ்தரின் உயிர்!!

திஹகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாத்தறை மித்தெனிய வீதியின் ஹொரொன்தூவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹக்மன பிரதேசத்தில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். யடியன பிரதேசத்தில் வசித்து வந்த 40 வயதுடைய ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சடலம் மாத்தறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திஹகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் கரையொதுங்கிய திமிங்கிலத்தால் பரபரப்பு!!

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கடற்கரையில் இறந்த நிலையில் திமிங்கிலம் ஒன்று திங்கட்கிழமை (09) கரை ஒதுங்கியுள்ளது. ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடிதீவு கடற்கரையில் 15 அடி நீளமுள்ள குறித்த திமிங்கலமே இறந்து கரையொதுங்கியது.

குறித்த திமிங்கிலம் உயிரிழந்தமைக்கான காரணம் தெரியவராத நிலையில் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டு வாசலில் நடந்த சோகம் : தெருநாய்கள் கடித்து குதறியதில் 3 வயதுச் சிறுவன் பலி!!

வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவனை தெருநாய்கள் கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதுமே பல மாநிலங்களிலும் வெறிநாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தபோதிலும் அடுத்தடுத்த சம்பவங்கள் நிகழ்ந்து பொதுமக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தி வருகின்றன.

அந்த வகையில் மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை தெருநாய்கள் கடித்ததில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம் மான்ஸர் பகுதியில் வசித்து வந்த 3 வயது சிறுவன் ஆயுஷ் வீட்டிற்கு வெளியே தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு கூட்டமாக வந்த தெரு நாய்கள் ஆயுஷை சராமாரியாக கடித்து குதறியதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து உடனடியாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

காதலித்து ஏமாற்றிய இளைஞன் : 12ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு!!

கோவையில் இன்ஸ்டா மூலம் அறிமுகமாகி காதலித்து வந்த இளைஞன் ஏமாற்றி திருமணத்திற்கு மறுத்ததால், 12ம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி, தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதிநகரைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் ரமா பிரபா(17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 12ம் வகுப்பு படித்து வந்த ரமா பிரபாவுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 21 வயது இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து 2 பேரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அந்த இளைஞர் ரமா பிரபாவுடன் பேசுவதை தவிர்த்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவர் மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.

அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில், அந்த இளைஞர் ரமா பிரபாவைக் காதலிக்க மறுத்து குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதனால் கடும் மனஉளைச்சலில் இருந்து வந்த ரமா பிரபா, வீட்டில் தனியாக இருந்த நிலையில், திடீரென சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் காதல் தோல்வியில், மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இன்ஸ்டகிராம் காதலால் பரிதாபமாக பறிபோன மாணவியின் உயிர்!!

பொருந்தா காதலால், கோவையில் 12ம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி, தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதிநகரைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் ரமா பிரபா(17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 12ம் வகுப்பு படித்து வந்த ரமா பிரபாவுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 21 வயது இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து 2 பேரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அந்த இளைஞர் ரமா பிரபாவுடன் பேசுவதை தவிர்த்து வந்ததாக தெரிகிறது.

இதனால் அவர் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில், அந்த இளைஞர் ரமா பிரபாவைக் காதலிக்க மறுத்து குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதனால் கடும் மனஉளைச்சலில் இருந்து வந்த ரமா பிரபா, வீட்டில் தனியாக இருந்த நிலையில், திடீரென சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் காதல் தோல்வியில், மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.