இந்திய மாநிலம் தெலங்கானாவில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற புதுமாப்பிள்ளை, தவறி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் உரகொண்டா சாய் (28). இவருக்கும் மாதுரி (23) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.
இதனைத் தொடர்ந்து, தேனிலவைக் கொண்டாட புதுமணத் தம்பதி கோவாவிற்கு செல்ல முடிவெடுத்துள்ளனர். அதன்படி செகந்திராபாத் ரயில் நிலையத்திற்கு சாய், மாதுரி புதுமணத் தம்பதி சென்றுள்ளனர்.
புதுப்பெண் மாதுரி ரயிலில் இருக்க, சாய் தண்ணீர் போத்தல் வாங்கிவிட்டு ஓடும் ரயிலில் ஏற முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி தண்டவாளத்திற்கும், ரயிலுக்கும் இடையில் விழுந்துவிட்டார். இதில் பரிதாபமாக அவர் இறந்துவிட்டார்.
ஆனால், கணவர் இறந்தது தெரியாமல் மனைவி மாதுரி மாற்றம் நண்பர்கள் கசேகுடா வரை பயணித்துள்ளார். இதனையடுத்து பொலிஸார் தகவல் தெரிவித்த பின்னரே கணவர் இறந்தது அவருக்கு தெரிய வந்துள்ளது.
கொழும்பிலிருந்து மும்பைக்குச் சென்றுக்கொண்டிருந்த கொள்கலன் கப்பல் கேரளாவில் கோழிக்கோடு அருகே நடுக்கடலில் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சிங்கப்பூரைச் சேர்ந்த கப்பலில் ஏற்பட்டவேளையில், விபத்து நடந்த இடத்திற்கு விரைத்த இந்திய கடற்படை கப்பல்கள், தீயை அணைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது.
12.5 மீற்றர் இழுவை கொண்ட 270 மீற்றர் நீளமுள்ள இந்தக் கப்பல் ஜூன் 7 ஆம் திகதி கொழும்பிலிருந்து புறப்பட்டு மும்பைக்குச் சென்று கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கப்பலில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் காணாமல் போயுள்ளதாகவும் 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
கொழும்பு – தலங்கமை பிரதேசத்தில் வெளிநாட்டு துப்பாக்கி மற்றும் 14 தோட்டாக்களுடன் சமையல்காரர் ஒருவர் தலங்கமை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தலங்கமை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் கொழும்பு – தலவத்துகொட பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய இளைஞன் ஆவார்.
சந்தேக நபர் ஏதேனுமொரு குற்றச் செயலுக்காக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை தம்வசம் வைத்திருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பில் தலங்கமை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக நேற்று (08.06) கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திறுவையாறு பகுதியில் நள்ளிரவு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, சந்தேக நபரின் வீட்டு வளாகத்தில் கைவிடப்பட்ட சாக்கு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 31 கிராம் 300 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞன் இன்று (09) கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பயனர்கள் தங்கள் தொலைபேசி சேமிப்பிடத்தை மிகவும் திறமையாக நிர்வகிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த வாட்ஸ்அப் (WhatsApp) தயாராகி வருகிறது.
உலகலாவிய ரீதியில், ஊடகப் பகிர்வு அதிகரித்து வரும் நிலையில், குழு அரட்டைகளில் உயர் தெளிவுத்திறன் கொண்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை தானாக பதிவிறக்கம் செய்வதால் பல பயனர்கள் வரையறுக்கப்பட்ட இடத்துடன் சிரமப்படுகிறார்கள்.
இதைச் சரி செய்வதற்காக, வாட்ஸ்அப் ஒரு ‘பதிவிறக்கத் தரம்’ அம்சத்தை உருவாக்கி வருகிறது, இது பயனர்கள் தரவு கோப்புகளைப் பதிவிறக்குவதற்கு முன்பு அவற்றின் தெளிவுத்திறனைத் தெரிவுசெய்ய அனுமதிக்கும்.
இந்த அம்சம், பயனர்களுக்கு HD தரம் மற்றும் SD தரத்திற்கு இடையேயான தெரிவை வழங்குகிறது.
அந்தவகையில், இந்த அம்சத்தை அமைப்புகள் > சேமிப்பு மற்றும் தரவு தானியங்கி-பதிவிறக்கத் தரம் வழியாக அணுகலாம், அதில் பயனர்கள் தங்களுக்கு விருப்பமான தரவு தரத்தைத் தேர்ந்தெடுக்க முடியும்.
குறிப்பாக தினமும் அதிக அளவிலான தரவுகளை பெறுபவர்களுக்கு, இந்த நடவடிக்கை சேமிப்பக பயன்பாட்டின் மீது அதிக கட்டுப்பாட்டை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து அண்மைய வாட்ஸ்அப் புதுப்பிப்பைப் பதிவிறக்கிய பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டுமே இந்த புதிய அம்சம் தற்போது அணுகக்கூடியதாக உள்ளது என்று வாட்ஸ்அப்பீட்டா தரவுத்தளம் (WABetaInfo) தெரிவித்துள்ளது.
A9 பிரதான வீதியின் முகமாலைப்பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து சம்பவமானது நேற்று(08.06.2025) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச்சென்ற இலங்கை போக்குவரத்துச்சபை பேருந்தும் கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் பளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞர், சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 7,600 வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் நேற்று (08) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் எலபடகம பகுதியைச் சேர்ந்த 20 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. போதைப்பொருள் தடுப்பு பொலிஸ், போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதன்படி, நேற்று (08) இரவு நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
வவுனியாவில் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 10 கிலோ கஞ்சா மீட்கப்பட்டதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார் என்று ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, கதிரவேல்பூவரசங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 10 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. அத்துடன் சந்தேகநபராக 45 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது குறித்த பகுதியில் கஞ்சா மீட்கப்பட்டது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் வவுனியா ஓமந்தை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்தியாவில் மனைவியின் தலையுடன் கணவன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துயுள்ளது.
இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூரு அனேகல் பகுதியை சேர்ந்த ஒருவர் மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் வீடு வாடைக்கு எடுத்து வாழ்ந்து வந்துள்ளார்.
கடந்த 3 ஆம் திகதி, குறித்த கணவர் தனது மனைவியிடம் நான் வேலைக்குச் செல்கிறேன். 4 ஆம் திகதி காலைதான் திரும்பி வருவேன் எனத் தெரிவித்து விட்டு வேலைக்குச் சென்றுள்ளார். வேலை விரைவாக முடிய, இரவே வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
வீட்டிற்கு வந்தபோது அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவருடைய மனைவி மற்றொரு நபருடன் இருந்துள்ளார். இதைப் பார்த்த பயங்கர கோபம் அடைந்துள்ளார். மனைவியுடன் இது தொடர்பாக சண்டையிட்டுள்ளார்.
மனைவியும் இவருடன் சண்டையிட்டுள்ளார். பின்னர் வீட்டை விட்டு வெளியேறுவதாக மனைவி கூறியுள்ளார். வீட்டைவிட்டு வெளியேறிய மனைவி, அடிக்கடி வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். இதுபோன்றுதான் நேற்றும் அவரது மனைவி வந்து தகராறு செய்துள்ளார்.
இதனால் கடுங்கோபம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்திற்குப் பிறகு மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். அத்துடன் அவரது கோபம் தீரவில்லை. மனைவியின் கழுத்தை கூர்மையான ஆயுதத்தால் துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.
அதோடு மட்டுமல்லாமல், மனைவியின் தலையை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்று சரணடைந்துள்ளார்.
தனது மனைவியை தலை துண்டித்து கொலை செய்ததாக பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். பொலிஸார் அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் உள்ள ஏரியில் மூழ்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். பலாஎல்ல ஏரியில் நீராடச் சென்ற நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்கள் ரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இச் சம்பவம் அப் பகுதியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
யாழில் புத்தூர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர் தண்டித்ததால் பாடசாலை மாணவர் ஒருவர் கிருமி நாசினியை அருந்திய சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ் புத்தூர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன், தன்னிடம் அனுமதி பெறாமல் விளையாட்டு நிகழ்வு ஒன்றுக்காக சென்றமையால் ஆசிரியர் குறித்த மாணவனை தண்டித்துள்ளார்.
அதன்பின் வீடு சென்ற மாணவன் விவசாய தேவைக்காக வீட்டில் வைத்திருந்த கிருமி நாசினியை அருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அதேவேளை, குறித்த ஆசிரியர் ஏற்கனவே தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவனுக்கு தடியால் தாக்கிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர் என அறியவருகிறது.
குறித்த விடயம் தொடர்பில் பாடசாலை அதிபருடன் தொடர்பு கொண்ட போது, தான் விடுமுறையில் நிற்பதாகவும் பாடசாலை ஆசிரியர் மாணவனைப் பேசியதாகவும் பின்னர் வீடு சென்ற மாணவன் மருந்து அருந்தியதாக அறிந்ததாக தெரிவித்தார்.
வவுனியா கல்மடு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பூம்புகார் பகுதியில் இன்று (08.06.2025) காலை 22 வயது இளைஞர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.
குறித்த இளைஞனை காணவில்லை என வீட்டார் தேடிய போது வீட்டின் முன்பாகவுள்ள மரத்தில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக காணப்பட்டுள்ளார்.
பொலிஸார் மற்றும் கிராம சேவையாளருக்கு அயலவர்கள் வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இளைஞரின் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
‘2024 YR4’ எனும் விண்கல் நிலவை மோத வாய்ப்பு இருப்பதாகவும், இந்த சம்பவத்தால் நாம் நிலவை நிரந்தரமாகக்கூட இழக்கலாம் என விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்திருக்கின்றனர்.
அப்படி நடந்தால் அது பூமியிலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். நாசாவின் ‘ஜேம்ஸ் வெப்’ தொலைநோக்கி ‘2024 YR4’ எனும் விண்கல்லை, தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.
இக்கல் பயணிக்கும் பாதைக்கு குறுக்கே பூமி வரும், இதனால் இந்த விண்கல் பூமி மீது மோதும் என்று தொடக்கத்தில் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கான சாத்தியங்கள் இல்லை என்று இப்போது உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் இக்கல் நிலவு மீது மோத வாய்ப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
நிலவை இக்கல் 2032ம் ஆண்டு தாக்கலாம். முதன் முதலில் இக்கல் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்டது. நிலவுடன் ஒப்பிடும்போது இக்கல், மிகவும் எடை குறைந்தது. எனவே பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.
எனவே அச்சப்பட வேண்டியதில்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஆனால் சில தனியார் விண்வெளி ஆய்வாளர்கள், இக்கல் நிலவு மீது மோதும்போது நிலவு பூமியை விட்டு மேலும் விலகி செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள்.
அப்படி நடந்தால், அதன் விளைவுகளை பூமி எதிர்கொள்ள வேண்டி இருக்கும். நிலவின் ஈர்ப்பு விசையால் கடல் அலைகள் உருவாகின்றன. நிலவு இல்லையெனில், சூரியனின் ஈர்ப்பு மட்டுமே அலைகளை உருவாக்கும், இதனால் அலைகள் மிகவும் பலவீனமாகவும் ஒழுங்கற்றதாகவும் இருக்கும். நிலவு பூமியின் சுழற்சி அச்சை நிலைப்படுத்த உதவுகிறது.
இல்லையெனில், பூமியின் அச்சு பெரிய அளவில் பாதிக்கப்படும். இது காலநிலையில் தீவிர மாற்றங்களை ஏற்படுத்தும். நிலவு இரவில் இயற்கையான வெளிச்சத்தை வழங்குகிறது. இது இல்லையெனில், இரவுகள் மிகவும் இருண்டதாக இருக்கும், இது விலங்குகள் மற்றும் மனிதர்களின் நடவடிக்கைகளை பாதிக்கும்.
உதாரணத்திற்கு கடற்கரை மணற் பரப்பிலிருந்து வெளிவரும் ஆமை குஞ்சுகள் நிலவின் வெளிச்சத்தை அடையாளம் கண்டுதான் கடலுக்கு போகிறது. கடல்வாழ் உயிர்களுக்கு இனப்பெருக்கம், வேட்டையாடுதல் உள்ளிட்டவற்றிற்கு நிலவு வெளிச்சம் அவசியம்.
நிலவு இல்லையெனில் ஆமை போல பல உயிர்கள் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியா ஹொரவப்பொத்தானை வீதி இறம்பைக்குளம் பகுதியில் வீட்டு வளாகத்திலிருந்து ரி-56 ரக துப்பாக்கிகள் இரண்டுடன் 450க்கு மேற்பட்ட ரவைகளும் மீட்கப்பட்டன.
வீட்டின் உரிமையாளரினால் கழிவு தொட்டி ஒன்று அமைப்பதற்காக வீட்டின் பாவனையற்ற வாயில் முன்பாக குழி ஒன்றினை ஜெ.சி.பி உதவியுடன் இன்று (08.06.2025) காலை வீட்டின் உரிமையாளர் தோண்டியுள்ளார்.
இதன் போது அக் குழியினுள் துப்பாக்கி மற்றும் ரவைகள் காணப்பட்டதனையடுத்து வீட்டின் உரிமையாளர் பொலிஸாருக்கு வழங்கியிருந்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மற்றும் தடவியல் பிரிவு பொலிஸார் ஆகியோர் வீட்டின் உரிமையாளர் மற்றும் வேலையாட்களிடம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தமையுடன் குழியினுள் ஒர் பையில் போடப்பட்டு உரைப்பையினுள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகளை மீட்டெடுத்திருந்தனர்.
அதன் பின்னர் தடவியல் பிரிவு பொலிஸார் பாகுப்பாய்வுகளை மேற்கொண்டிருந்தமையுடன் மீட்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகள் 20வருடங்களுக்கு மேற்பட்டதாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டமையுடன் அவை ரி-56 ரகத்தினை சேர்ந்த இரு துப்பாக்கிகளும் 450க்கு மேற்பட்ட ரவைகளும் என தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகளை பொலிஸார் எடுத்து சென்றமையுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்ற உத்தரவுடன் அவற்றை கொழும்புக்கு அனுப்புவதற்குரிய நடவடிக்கையினையும் முன்னெடுத்துள்ளனர்.
மொரட்டுவ பகுதியில் நள்ளிரவில் நிகழ்ந்த கோர விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். எகொடஉயன பகுதியில் இன்று (08.06) அதிகாலை 1.00 மணியளவில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது. மோட்டார் சைக்கிள் வீதியில் கவிழ்ந்து, அருகில் சென்று கொண்டிருந்த டிப்பர் லொறியில் மோதியுள்ளது.
சம்பவத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிறு காயங்களுடன் பாணந்துறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி மற்றும் டிப்பர் லொறியின் சாரதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாந்து வந்த ஐ.டி., நிறுவன பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது,
திருச்சியைச் சேர்ந்த 26 வயதான நித்யா அம்பத்துாரில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த நிலையில் கொடுங்கையூர், டீச்சர்ஸ் காலனியில் இரு மாதங்களாக தங்கியிருந்தார்.
இவரும், கொடுங்கையூர், வெங்கடேஸ்வர காலனியைச் சேர்ந்த 28 வயதான பாலமுருகன் என்பவருக்கும் காதலித்து வந்துள்ளனர். பாலமுருகன், ஹோட்டல் மேனேஜ்மென்ட் முடித்து, வேலையின்றி இருந்த நிலையில் நித்யா, அவருடன் லிவிங் டூ கெதர்’ முறையில் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம், தன்னை பார்க்க பெற்றோர் வருவதாக கூறி, பாலமுருகனை வெளியிடத்தில் தங்க சொல்லியுள்ளார். அன்றிரவு, தன் வீட்டில் தங்கிய பாலமுருகன், நேற்று காலை நித்யா வீட்டிற்கு சென்றார்.
கதவு திறந்து கிடந்தது. உள்ளே படுக்கை அறையில், மயங்கிய நிலையில் நித்யா கிடந்துள்ளார். படுக்கை அறையில் துாக்க மாத்திரைகள் கிடந்தன. இதுகுறித்து பாலமுருகன் பொலிசாருக்கு தகவல் அவ்ழங்கிய நிலையில், கொடுங்கையூர் போலீசார் சென்றனர்.
போலீசார் பரிசோதித்தபோது, நித்யா ஏற்கனவே இறந்தது தெரிந்தது. பாலமுருகனிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிப்., 26ம் தேதி, அம்பத்துாரில் நித்யா தங்கியிருக்கும்போது, வீட்டில் தாலி கட்டி ஒன்றாக வசித்ததாக கூறியுள்ளார்.
இந்நிலையில் பெண்ணின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.