இலங்கையில் எரிபொருள் அதிகரிப்பால் பொருளாதாரத்தில் ஏற்படப்போகும் அபாயம்!!

டீசல் விலை அதிகரிப்பதால் போக்குவரத்து கட்டணங்கள் உயரும் நிலையில், தேநீர் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிக்கும். இதன் மூலம் நாட்டுக்குள் பெரும் பணவீக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாக வயம்ப பல்கலைக்கழக கணக்கியல் பீட பேராசிரியர் அமின்த் மெத்சில் பெரேரா தெரிவித்துள்ளார்.

எரிபொருட்களுக்கான விலை அதிகரிப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கம் மக்களுக்கு தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு எரிபாெருட்களுக்கான விலை அதிகரித்திருக்கிறது.

அதேநேரம் எரிபொருட்களின் விலை திருத்தம் மேற்கொள்ளும் போது நாங்கள் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்டுள்ள இணக்கப்பாட்டுக்கு அமைய, விலை சூத்திரத்திற்கமையவே மேற்கொள்ள வேண்டும்.

அதன் பிரகாரம் மாத்தின் ஆரம்பத்திலே இந்த திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பும் எரிபொருட்களுக்கான விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

என்றாலும் தற்போது மாதத்தின் நடுப்பகுதியில் எரிபொருட்களுக்கான விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாலே இந்த விலை அதிகரிப்புக்கு காரணம் என அரசாங்கம் தெரிவித்து வருகிறது. உலக சந்தையில் மசகு எண்ணெய் பெரல் ஒன்று 115 டொலர் வரை அதிகரித்திருந்தது.

அதனடிப்படையில், இங்கு விலை அதிகரிக்கப்பட்டது. அதேநேரம் தற்போது உலக சந்தையில் 80 முதல் 90 டொலர் வரை பெரல் ஒன்றின் விலை குறைந்துள்ளது.

அதன் பிரகாரம் எரிபொருள் விலை குறைவடைய வேண்டும். அதன் பிரகாரம் அரசாங்கம் தற்போது எரிபொருட்களுக்கு விலை அதிகரிப்பு செய்திருப்பது நியாயமானதா என கேட்கிறோம்.

அத்துடன், ஒரு மாத காலத்துக்கு தேவையான எரிபொருள் கைவசம் இருப்பதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது. அரசாங்கத்தின் கைவசம் இருந்த எரிபொருட்களையே தற்போது அரசாங்கம் விநியோகித்து வருகிறது.

அப்படியாயின் கைவசம் இருந்த எரிபொருட்களுக்கு அரசாங்கம் எவ்வாறு விலை அதிகரிப்பு செய்ய முடியும் என கேள்வி எழுகிறது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை பார்க்கும்போது, கறுப்புக்கடை முதலாளிமார் மேற்கொள்ளும் நடவடிக்கையையே அரசாங்கம் மேற்கொள்கிறது என்ற நியாயமான சந்தேகம் மக்கள் மத்தியில் எழுகிறது என்றார்.

எண்ணெய் விலை 200 டொலர் ஆக உயரும் : ஈரான் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!!

உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 200 அமெரிக்க டொலர்களை எட்டக்கூடும் என ஈரானிய இராணுவ அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று (11.03.2026) ஹோர்முஸ் நீரிணையில் மேலும் மூன்று கப்பல்கள் தாக்கப்பட்டதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று ஹோர்முஸ் நீரிணையில் தாய்லாந்து நாட்டுக்குச் சொந்தமான ‘Mayuree Naree’ உட்பட மூன்று சரக்குக் கப்பல்கள் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

இதில் ஒரு கப்பல் தீப்பற்றியதுடன், அதன் பணியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தீவிரத் தாக்குதல்களுக்கு மத்தியிலும், எரிசக்தி விநியோகத்தை சீர்குலைக்கும் திறன் ஈரானிடம் இருப்பதை இந்த தாக்குதல்கள் நிரூபித்துள்ளதாக ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.

ஈரானிய இராணுவ ஊடகப்பேச்சாளர் இப்ராஹிம் சோல்பகாரி கூறுகையில், “எண்ணெய் விலை $200 ஆக உயரத் தயாராகுங்கள். ஏனெனில் நீங்கள் சீர்குலைத்த பிராந்திய பாதுகாப்பிலேயே எண்ணெய் விலையும் தங்கியுள்ளது,” என அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தெஹ்ரானில் உள்ள வங்கி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, அமெரிக்கா அல்லது இஸ்ரேலுடன் தொடர்புடைய வங்கிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனால் மக்கள் அத்தகைய இடங்களிலிருந்து குறைந்தது 1,000 மீட்டர் தொலைவில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் விநியோகிக்கப்படும் ஹோர்முஸ் நீரிணை முடங்கியுள்ளதால், 1970களுக்குப் பிறகு மிகப்பெரிய எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருப்பினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இப்போர்ச் சூழலுக்கு விரைவில் தீர்வு காண்பார் என்ற நம்பிக்கையில் பங்குச் சந்தைகள் ஓரளவு ஸ்திரத்தன்மையைக் காட்டி வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

மீண்டும் பாரியளவில் அதிகரித்த எரிபொருள் விலை இலங்கைக்கு மேலும் பாதிப்பு!!

உலக சந்தையில் மீண்டும் கச்சாய் எண்ணெய்யின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.

இதன்படி, இன்றையதினம்(12/03/2026) காலை வர்த்தக நடவடிக்கைகளின் ஆரம்பத்தின் போது ஒரு பீப்பாய் கச்சாய் எண்ணெய்யின் விலை மீண்டும் 100 அமெரிக்க டொலர்களைத் தாண்டி பதிவாகியுள்ளது.

மத்தியக் கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, கடந்த 09ஆம் திகதி, 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக கச்சாய் எண்ணெய்யின் விலை பாரியளவில் அதிகரித்து 110 அமெரிக்க டொலர்களைத் தாண்டியிருந்தது.

மீண்டும் அதிகரிப்பு

எனினும், மறுதினம் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அறிவிப்பிற்கு அமைய கச்சாய் எண்ணெய்யின் விலை மீண்டும் சடுதியாக குறைவடைந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்றையதினமும் விலை குறைந்த அளவிலேயே பதிவாகியிருந்தது.

எனினும், இன்று காலை வர்த்தக நடவடிக்கைகளின் ஆரம்பத்தின் போதே கச்சாய் எண்ணெய்யின் விலை மீண்டும் 100 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தின் இராணுவ நிலைமை உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் ஏற்படுத்திய கடுமையான தாக்கமே இதற்கு முக்கிய காரணமாகும்.

சர்வதேச எரிசக்தி அமைப்பின் உறுப்பு நாடுகளான G7 நாடுகள் நேற்று ஒருமனதாக 400 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் இருப்புக்களை உலக சந்தையில் வெளியிட ஒப்புக்கொண்ட போதிலும் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

அதேசமயம், சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலையில் ஏற்படும் இந்த தாக்கங்கள் உலகளாவிய ரீதியில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் இலங்கையிலும் தாக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளது.

இதன்படி, மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு புறம்பாக கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மீண்டும் எரிபொருளின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டது.

மத்தியக் கிழக்கு போர் நிலைமைகள் காரணமாக எதிர்வரும் மாதங்களில் எரிபொருளின் விலையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ள நிலையில், அந்த விலையை சமப்படுத்தும் நோக்கில் இவ்வாறு எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதாக அரசாங்த்தினால் அறிவிக்கப்பட்டது.

எனினும், உலக சந்தையில் எண்ணெய்யின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் எதிர்வரும் மாதங்களில் இலங்கையில் கடுமையான தாக்கங்களை செலுத்தக்கூடும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இலங்கையில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு!!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ.ராஜகருணா தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஏப்ரல் மாதத்தின் இரண்டாம் பகுதியில் நான்கு பிரதான எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன.

அதன்படி ஏப்ரல் 14 – 15 இற்குள் முதலாவது கப்பலும், ஏப்ரல் 17 – 18 இற்குள்இரண்டாவது கப்பலும், ஏப்ரல் 21 – 22 இற்குள் மூன்றாவது கப்பலும், ஏப்ரல் 29 – 30 இற்குள் நான்காவது கப்பலும் வரவுள்ளது.

இந்த எரிபொருள் கப்பல்கள் அனைத்தும் இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து வருகை தரவுள்ளன.

குறித்த எரிபொருள் கையிருப்புகள் அனைத்தும், கப்பல்களில் இருந்து எரிபொருள் இறக்கப்படும் தருணத்தில் உலக சந்தையில் நிலவும் சந்தை விலைக்கு ஏற்ப கொள்வனவு செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் திட்டமிடப்பட்ட இறக்குமதிகள் மூலம் பண்டிகைக் காலத்திலும் அதற்குப் பின்னரான காலப்பகுதியிலும் தட்டுப்பாடின்றி எரிபொருளை விநியோகிக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 

மத்திய கிழக்கில் தொடரும் தாக்குதல்கள் : இலங்கை மக்களுக்கு பேரிடியான செய்தி!!

மத்திய கிழக்கில் பதிவாகி வரும் பதற்றம் காரணமாக இலங்கையில் அனைத்துப் பொருட்களினதும் விலைகள் அதிகரிக்கக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போதைய மத்திய கிழக்கு போர்ச்சூழல் உலக அளவில் எண்ணெய் விநியோகத்தை பாதித்துள்ளது. குறிப்பாக ஹார்முஸ் வழியாக கப்பல் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால் எண்ணெய் விநியோகத்தில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

எண்ணெய் இறக்குமதி சார்ந்த நாடுகளுக்கு இது நேரடி பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது பொருளாதாரம், எரிபொருள் விலை, உணவு விலை உள்ளிட்டவற்றில் தாக்கம் செலுத்துகிறது.

இவ்வாறான சூழலில் நேற்று முன் தினம் முதல் இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒக்டன் 92 பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை 317 ரூபாவாக உயர்ந்துள்ளது (முந்தைய விலை 293 ரூபாவாகும்) இதன்படி ஒரு லீற்றருக்கு 24 ரூபா விலை அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

Octane 95 பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை 365 ஆக உயர்ந்துள்ளது (முந்தையது 340 ரூபாவாகும்) இதன்படி ஒரு லுீற்றருக்கு 25 ரூபா விலை அதிகரிப்பு பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டோ டீசல் ஒரு லீற்றர் 303ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதுடன், இதன்படி ஒரு லீற்றருக்கு 22 ரூபா விலை அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

சூப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 353 ரூபாவாக உயர்ந்துள்ளது, இதன்படி ஒரு லீற்றருக்கு 24 ரூபா விலை அதிகரிப்பு பதிவாகியுள்ளது. இதேவேளை, மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 195 ரூபாவாக உயர்ந்துள்ளது இதன்படி ஒரு லீற்றருக்கு 13 ரூபா விலை அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

அதனை தொடர்ந்து லிட்ரோ எரிவாயு விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 12.5 கிலோ சிலிண்டரின் விலை ரூ.300 அதிகரித்து ரூ.3,990 ஆகவும், 05 கிலோ சிலிண்டரின் விலை ரூ.120 அதிகரித்து ரூ.1,602 ஆகவும் உள்ளது.

இதற்கிடையில், 2.3 கிலோ சிலிண்டரின் விலை ரூ.56 அதிகரித்து புதிய விலை ரூ.750 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையையும் அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு கொள்கலன் விலை 300 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 4,330 ரூபாவாக இருந்த இதன் புதிய விலை 4,630 ரூபாவாகும். 5 கிலோகிராம் எரிவாயு கொள்கலன் விலையானது 120 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 1,742 ரூபாவாக இருந்த இதன் புதிய விலை 1,862 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது. இதன் எதிரொலியாக சில உணவு வகைகளின் விலைகள் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சாதாரண தேநீர் 5 ரூபாவாலும், பால் தேநீர் மற்றும் சிற்றுண்டிகள் 10 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ரைஸ் மற்றும் கொத்துரொட்டி ஆகியவை 25 ரூபாவாலும் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை உணவகம் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான சூழலில் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்பானது, ‘டிட்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புகளை விடவும் அதிகமாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொருளாதார ஆய்வுத் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட கலந்துரையாடலின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இதன் விளைவாக, இலங்கையில் அனைத்துப் பொருட்களினதும் விலைகள் அதிகரிக்கக்கூடும் எனவும் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தங்க விலையில் இன்று பதிவான மாற்றம்!!

24 கரட் தங்கப் பவுணொன்று நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் (12.03.2026) 3000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 412,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 381,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு : சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5171.26 டொலராக இன்றைய தினம் (12.03.2026) பதிவாகியுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் காரணமாக தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

உலகளாவிய ரீதியில் அமெரிக்க டொலரின் மதிப்பு வலுவடைந்துள்ளதாலும், முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நகர்வுகளாலும் தங்கம் விலை குறைவடைந்துள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை வெள்ளியின் விலையிலும் வீழ்ச்சி அவதானிக்கப்பட்டுள்ளதுடன் இன்று ஒரு அவுண்ஸ் வெள்ளி 85.35 டொலராக காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச விலை வீழ்ச்சியடைந்தாலும், டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி மற்றும் இறக்குமதி செலவுகள் காரணமாக, உள்நாட்டு சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று சற்றே அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கண்டியில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் நேர்ந்த விபத்து : 7 வயது மாணவன் பலி!!

கண்டி, மஹியாவ பகுதியில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவரின் வாகனத்தில் சிக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று (12.3.2026) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் அதே பாடசாலையில் கல்வி பயிலும் 7 வயதுடைய மாணவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த பணிப்பாளர் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு அதிலிருந்து இறங்கிச் சென்றதன் பின்னர், வாகனத்தின் பிரேக் பகுதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாகனம் திடீரென நகரத் தொடங்கியுள்ளது.

இதன்போது பாடசாலையில் நீர் அருந்திக் கொண்டிருந்த இரண்டு மாணவர்கள் அந்த வாகனத்தில் சிக்கியுள்ளனர். வாகனத்தில் சிக்கிய இரண்டு மாணவர்களில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காயமடைந்த மற்றைய மாணவன் தற்போது கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த விபத்து தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வாகனத்தின் உரிமையாளரான பணிப்பாளர், தான் வாகனத்தை நிறுத்திவிட்டு அதிலிருந்து இறங்கிச் சென்ற பின்னரே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

முச்சக்கரவண்டி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : மூவர் படுகாயம்!!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா அக்கரபத்தினை பிரதான வீதியில் முச்சக்கரவண்டியொன்று 75 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் 03 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா அக்கரபத்தினை பிரதான வீதியில் என்.சி தோட்டப்பகுதியில் இன்று(12.3.2026) காலை 9 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

அட்டன் பிரதேசத்தில் இருந்து வியாபாரத்திற்காக அக்கரபத்தனை பிரதேசத்திற்கு சென்று கொணடிருந்த முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

முச்சக்கர வண்டியில் சென்ற மூவரில் இருவர் சிறுசிறு காயங்களுடனும் சாரதிக்கு பலத்த காயங்களுடன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணையை நோர்வூட் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அறிகுறிகள் தென்பட்டால் உடன் வைத்திய உதவியை நாடவும் : பொது மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்!!

இலங்கையில் தற்போது வேகமாக பரவி வரும் எலிக்காய்ச்சல் (Leptospirosis) தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 13,000 எலிக்காய்ச்சல் (Leptospirosis) சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், கிட்டத்தட்ட 300 மரணங்கள் சம்பவித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் தரவுகளின்படி, 2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 18,000 எலிக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் துஷானி தாபரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

கடும் காய்ச்சல், தலைவலி, மூட்டு வலி, தசை வலி மற்றும் கண்கள் சிவப்படைதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அவற்றை உதாசீனம் செய்ய வேண்டாம் எனவும், சிக்கல்களை தவிர்க்க உடனடியாக மருத்துவ ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறும் நிபுணர்கள் பொதுமக்களை வலியுறுத்துகின்றனர்.

நோய்த்தொற்றுள்ள விலங்குகளின் சிறுநீர் கலந்த நீர் அல்லது மண்ணுடன் மக்கள் தொடர்பு கொள்ளும்போது, தோலில் உள்ள காயங்கள் அல்லது சளிச்சவ்வு வழியாக பாக்டீரியாக்கள் உடலுக்குள் நுழைகின்றன என்று வைத்தியர் தாபரேரா விளக்கியுள்ளார்.

அதிக அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் பணிபுரிபவர்கள், குறிப்பாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவிறுத்தப்பட்டுள்ளது.

அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காது சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

பாலைவனத்தில் ஆறு மணி நேரம் : மத்திய கிழக்கிலிருந்து தப்பிய தந்தை மகளின் திகில் அனுபவம்!!

பிரித்தானியர் ஒருவரும் அவரது மகளும் சற்று ரிலாக்ஸ் செய்துகொள்ளலாம் என மத்திய கிழக்குக்குச் சென்ற சிறிது நேரத்தில் போர் வெடிக்க, ஆறு மணி நேரம் பாலைவனம் வழியாக பயணித்து பின் பிரித்தானியா திரும்பியுள்ளார்கள்.

இங்கிலாந்திலுள்ள Southamptonஐச் சேர்ந்தவர் ஜேமி (Jamie Mallon, 54). ஜேமியின் மகளான இஸ்ஸி (Izzy, 27) தாய்லாந்தில் இரண்டரை ஆண்டுகள் பணி முடித்து பிரித்தானியா திரும்ப, தந்தையும் மகளும் சற்று ரிலாக்ஸ் செய்துகொள்ளலாம் என அபுதாபிக்குப் புறப்பட்டுள்ளார்கள்.

தந்தையும் மகளும் அபுதாபியில் கால்வைத்த நேரத்தில், துரதிர்ஷ்டவசமாக ஈரான் வீசிய ஏவுகணைகளும் ட்ரோன்களும் வானில் பறக்க, அவற்றை அமீரகம் தடுத்து அழிக்க, ரிலாக்ஸ் செய்யவந்த ஜேமியும் மகளும் போருக்கு மத்தியில் சிக்கிக்கொண்டார்கள்.

பிரித்தானியாவிலிருக்கும் ஜேமியின் மனைவியும் தாயும் கவலையில் மூழ்க, எப்படியாவது அமீரகத்திலிருந்து வெளியேறி நாடு திரும்ப முடிவு செய்துள்ளார்கள் தந்தையும் மகளும்.

ஈரான் வீசிய ஏவுகணைகளை அமீரகம் தாக்கி அழிப்பதைப் பார்த்துக்கொண்டே ஐந்து நாட்கள் திகிலுடன் கடக்க, கடைசியாக டெக்ஸி ஒன்று கிடைக்க, ஆறு மணி நேரம் பாலைவனம் வழியாக பயணித்து ஓமான் வந்தடைந்துள்ளார்கள் இருவரும்.

அங்கிருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் பிரித்தானியாவை வந்தடைந்துள்ளார்கள் இருவரும்.

தாய்லாந்தில் ஆய்வாளராக பணிபுரிந்த இஸ்ஸி, அபுதாபி சென்றடைந்த சில நிமிடங்களில் ஏவுகணைகள் மழைபோல் பொழிந்ததையும், அவற்றில் ஒன்று வெடித்ததையும் திகிலுடன் நினைவுகூருகிறார்.

மகளை எப்படி திரும்ப பத்திரமாக பிரித்தானியா கொண்டு சேர்ப்பது என்பதுதான் தன்னுடைய பயமாக இருந்தது என்று கூறும் ஜேமி, அபுதாபியில் தாங்கள் தங்கியிருந்த ஹொட்டல்,

தங்களை வற்புறுத்தி இலவசமாக உணவும் பானங்களையும் கொடுத்ததை நினைவுகூருவதுடன், அமீரகம் தங்களை மிக நன்றாக கவனித்துக்கொண்டது என்றும், தாங்கள் அதற்கு என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.

இலங்கையில் மற்றுமொரு விலை அதிகரிப்பு : வெளியான அறிவிப்பு!!

இன்று (11.03.2026) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சில உணவு வகைகளின் விலைகள் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிவாயு விலை உயர்வு காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சாதாரண தேநீர் 5 ரூபாவாலும், பால் தேநீர் மற்றும் சிற்றுண்டிகள் 10 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

மேலும், ரைஸ் மற்றும் கொத்துரொட்டி ஆகியவை 25 ரூபாவாலும் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவகம் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

பெட்ரோல் – டீசல் வாங்கும் மக்களுக்கு கடுமையான எச்சரிக்கை : இலங்கையில் மீண்டும் QR முறை!!

எரிபொருளுக்கான QR முறையை மீண்டும் நடைமுறைப்படுத்தியதன் மூலம் எரிபொருள் இருப்பை முறையாக மேலாண்மை செய்திருக்க முடியும் என பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பதில் தலைவரும்,

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் பெட்ரோலிய ஆலோசகருமான சிறில் சுதுவெல்ல தெரிவித்துள்ளார். எரிபொருள் விலையை அதிகரிப்பதற்குப் பதிலாக இந்த நடவடிக்கையை எடுத்திருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியதுடன், மேலும் நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடும் பல்தேசிய நிறுவனங்கள், விலை அதிகரிப்பின் மூலம் மேலதிக இலாபத்தைப் ஈட்ட முடிந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நீண்ட வரிசைகள் ஏற்பட்டன. இதனை தொடர்ந்து இலங்கையில் எரிபொருள் QR முறை முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு வாகனத்திற்கும் (வாகனப் பதிவு எண் அடிப்படையில்) QR குறியீடு வழங்கப்பட்டது. இதனால் வரிசைகள் குறைந்தன, சட்டவிரோத பதுக்கல் தடுக்கப்பட்டது, எரிபொருள் இறக்குமதி செலவு குறைந்தது.

இந்த நிலையில் தற்போது பலரும் எரிபொருளுக்கான QR முறையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இவ்வாறான சூழலில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் தெரிவிக்கையில், போதிய எரிபொருள் கையிருப்பு உள்ளதால் QR முறை தேவையில்லை எனவும், பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பானது போதுமான அளவில் உள்ளது எனவும் கூறியுள்ளனர்.

இதேவேளை அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் எரிசக்தி பிரதி அமைச்சர் முஹம்மது இல்யாஸ் முஹம்மது அர்கம் ஆகியோர் தெரிவிக்கையில், பொதுமக்கள் அதிகமாக எரிபொருள் சேமித்து பதுக்கினால் QR முறை மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் என எச்சரித்துள்ளனர்.

மேலும் எரிபொருளுக்கான QR முறை தற்போது அவசியம் இல்லை என்ற போதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டால் அல்லது பதுக்கல் கட்டுப்படுத்த முடியாவிட்டால் குறித்த நடைமுறையை கொண்டு வர தயாராக இருப்பதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

 

மத்திய கிழக்கில் வெடிக்கும் போர் : கடலின் ஆழத்திலிருந்து வெளிவந்த உலக அழிவின் அறிகுறி!!

உலக அழிவு அல்லது ‘Doomsday’ என்பது ஒவ்வொரு வருட முடிவின் போதும் பிரபலமான பேசுபொருளாக உள்ளது. பண்டைய மத நூல்களிலிருந்து நவீன அறிவியல் ஆராய்ச்சிகள் வரை, பல்வேறு கணிப்புகள் உலகின் முடிவைப் பற்றி விவாதித்துள்ளன.

இவை பெரும்பாலும் அச்சங்கள், மத நம்பிக்கைகள், சுற்றுச்சூழல் கவலைகள் அல்லது தொழில்நுட்ப முன்னேற்றங்களை அடிப்படையாகக் கொண்டவை. இருப்பினும், வரலாற்றில் பெரும்பாலான இத்தகைய கணிப்புகள் தோல்வியடைந்துள்ளன.

இதுவரை உலக அழிவிற்கு வழங்கப்பட்ட காலக்கெடு பொய்த்துப் போனதை நாம் அனைவருமே கண்கூடாக கண்டுள்ளோம்.

இந்த நிலைமையானது உலகம் தொடர்ந்து இருக்கும் என்பதை நினைவூட்டும் போதிலும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது.

வரலாற்று கணிப்புகள்: தோல்வியடைந்த அழிவு அறிவிப்புகள்

உலக அழிவு பற்றிய கணிப்புகள் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்த வண்ணமே உள்ளது. மனிதகுலத்தின் அழிவு, நாகரீகத்தின் சரிவு அல்லது கிரகத்தின் அழிவு போன்ற விடயங்களுக்கு திகதியறிவித்தவர்கள் பலர்.

தவறான கணிப்புகள் கண்முன்னே தவறாகும் போதும் அவை நமக்கு வழங்கும் எச்சரிக்கை தவறானது இல்லை என்பதே உண்மை.

2012 மாயன் கலண்டர் அழிவு கணிப்பு ஒரு பிரபலமான உதாரணம். ஆனால் 13 ஆண்டுகளுக்குப் பிறகும் மனிதகுலம் இந்த பூமியில் நிலைத்துள்ளது.

காலநிலை மாற்றம் தொடர்பான 50 ஆண்டுகளுக்கும் மேலான தோல்வியடைந்த கணிப்புகள், குளிர்ச்சி, பஞ்சம் மற்றும் அழிவை முன்னறிவித்தன, ஆனால் அவை நிகழவில்லை.

1910 ஹாலேயின் வால்மீன் பீதி, ஜெஹோவாவின் சாட்சிகளின் பல கணிப்புகள் போன்றவையும் தோல்வியுற்றன. இவை அனைத்தும் மனிதர்களின் அச்சங்களை வெளிப்படுத்தினாலும், உலகம் தொடர்ந்து இருக்கிறது.

அறிவியல் அடிப்படையிலான சாத்தியமான ஆபத்துகள் அறிவியல் ரீதியாக, உலக அழிவு சாத்தியமான ஆபத்துகள் உள்ளன, ஆனால் அவை உடனடியானவை அல்ல.

அச்சுறுத்தல்கள்

ஏலியன்கள், ஆஸ்டிராய்டுகள், தொற்றுநோய்கள், போர், காலநிலை மாற்றம் போன்றவை. இவை திரைப்பட காட்சிகள் போல தோன்றினாலும்,

அவை உண்மையானவை. உதாரணமாக, காலநிலை மாற்றம் உலக வெப்பமயமாதலை அதிகரிக்கிறது, ஆனால் அது உடனடி அழிவு அல்ல, மாறாக நீண்டகால சவால்.

அஸ்டிராய்ட் தாக்குதல் அல்லது அணு போர் போன்றவை குறைந்த வாய்ப்புள்ளவை, ஆனால் அவை நிகழ்ந்தால் பேரழிவு.எதிர்காலத்தில், சூரியனின் விரிவடைதல் அல்லது பூமியின் அழிவு போன்றவை பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு நிகழலாம்,

ஆனால் அவை இப்போதைய கவலை அல்ல. காலநிலை அறிவியலில் கணிப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன, ஆனால் பழையவை தோல்வியுற்றன.

உலகத்தின் தற்போதைய நிலவரம்

2025 ஆம் ஆண்டு உலகம் சவால்கள் நிறைந்த ஒரு ஆண்டாக இருந்தது, ஆனால் நம்பிக்கைக்குரிய அறிகுறிகளும் உள்ளன.

பொருளாதார ரீதியாக, மெக்கின்சி அறிக்கையின்படி, உலக பொருளாதார எதிர்பார்ப்புகள் 2025 இன் எந்த நேரத்தையும் விட பிரகாசமாக உள்ளன, நம்பிக்கை அதிகரித்துள்ளது.

இருப்பினும், IMF இன் உலக பொருளாதார அவுட்லுக் படி, உலக வளர்ச்சி குறைந்து 2.3% ஆக இருக்கும், வர்த்தக தடைகள் மற்றும் கொள்கை நிச்சயமின்மை காரணமாக. Ipsos கருத்துக்கணிப்பின்படி, 41% பேர் தங்கள் நாடு சரியான திசையில் செல்கிறது என்கின்றனர், 39% பொருளாதாரம் நல்லது என்கின்றனர்.

சுற்றுச்சூழல் ரீதியாக, பசி குறைப்பில் முன்னேற்றம் உள்ளது, ஆனால் காலநிலை அழுத்தங்கள், பொருளாதார ஸ்திரமின்மை மற்றும் மோதல்கள் தொடர்கின்றன.

உலக வங்கி படி, வளர்ச்சி 2.3% ஆக குறையும். அரசியல் ரீதியாக, அமைதி மற்றும் பாதுகாப்பு, வளர்ச்சிக்கான நிதியுதவி போன்ற 5 முக்கிய பிரச்சினைகள் 2025 இல் கவனம் பெறுகின்றன.

ஜியோபாலிடிக்ஸ் முதல் தொழில்நுட்பம் வரை மாற்றங்கள் உள்ளன, உலக பொருளாதார ஆளுமைக்கு தாக்கம்.

சந்தைகள் கொந்தளிப்பான ஆண்டை முடித்தாலும், உறுதியான அடிப்படையில் உள்ளன. முடிவுஉலக அழிவு கணிப்புகள் பெரும்பாலும் தோல்வியுற்றாலும், அவை நமது சமூகத்தின் அச்சங்களை பிரதிபலிக்கின்றன.

அறிவியல் ஆபத்துகள் உள்ளன, ஆனால் அவை நிர்வகிக்கக்கூடியவை. 2025 இன் உலகம் கொந்தளிப்பானது, ஆனால் பொருளாதார நம்பிக்கை, சுற்றுச்சூழல் முன்னேற்றங்கள் மற்றும் அரசியல் சவால்களுடன் தொடர்கிறது. உலகம் அழியாது, ஆனால் நிலைத்திருக்க நாம் செயல்பட வேண்டும்.

உலக அழிவின் அறிகுறி

இதேவேளை மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், மெக்சிகோவின் காபோ சான் லூகாஸ் கடற்கரையில் ‘உலக அழிவின் அறிகுறி’ எனக் கருதப்படும் இரண்டு ‘ஓர்பிஷ்’ (Oarfish) மீன்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தையும் அச்சத்தையும் கிளப்பியுள்ளது.

மத்திய கிழக்கில் தற்போது ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே மோதல் வலுத்து வருகிறது.

ஏனைய மத்திய கிழக்கு நாடுகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த மோதல் ஒரு ‘மூன்றாம் உலகப் போராக’ உருவெடுக்குமோ என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.

இவ்வாறான பதற்றமான சூழலில், மெக்சிகோ கடற்கரையில் ‘டூம்ஸ்டே’ எனப்படும் இரண்டு ஓர்பிஷ் மீன்கள் கரை ஒதுங்கியுள்ளன.

சுமார் 30 அடி நீளம் வரை வளரக்கூடிய இந்த மீன்கள், பொதுவாகக் கடலுக்கு அடியில் 3,000 அடி ஆழத்திலேயே வாழக்கூடியவை. இவை மிகவும் அரிதாகவே நீரின் மேற்பரப்பிற்கு வரும்.

புராதன நம்பிக்கைகளின்படி, ஆழ்கடலில் வாழும் இந்த மீன்கள் நீரின் மேற்பரப்பிற்கு வருவது என்பது ஒரு பெரும் இயற்கைப்பேரழிவு அல்லது உலகளாவிய மாற்றங்கள் நிகழப்போவதற்கான சமிக்ஞையாகக் கருதப்படுகிறது.

இதனாலேயே இவை ‘உலக அழிவு மீன்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. மெக்சிகோ கடற்கரையில் நடந்து சென்ற சகோதரிகளான மோனிகா பிட்டிங்கர் மற்றும் அவரது சகோதரி, ஆழமற்ற நீரில் ரிப்பன் போல மின்னிய இந்த மீன்களைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து மோனிகா தெரிவிக்கையில், “அவை மிக அழகாக மின்னின. முதலில் எங்களால் எங்களது கண்களையே நம்ப முடியவில்லை” எனக் கூறி, அது தொடர்பான வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நிலவும் போர்ச் சூழலையும், இந்த மீன்களின் வருகையையும் ஒப்பிட்டுப் பலரும் விவாதித்து வருகின்றனர். இது ஒரு தற்செயலான நிகழ்வா அல்லது உலகிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா என்ற கேள்வி தற்போது பலமாக எழுந்துள்ளது.

ஆனால் இது அரிதான sighting மட்டுமே – அறிவியலாளர்கள் இதை இயற்கை நிகழ்வு என்றே கூறுகின்றனர்.

அதேநேரம் பல்கேரியாவைச் சேர்ந்த பார்வையற்ற பாபா வாங்காவின், தற்போதைய மத்திய கிழக்கு போர் தொடர்பான கணிப்புகளும் பெருமளவு விவாதிக்கப்பட்டு வருகின்றன.

போர் “கிழக்கிலிருந்து” (East) தொடங்கி மேற்கு நோக்கி பரவும் என்று கூறப்படுகிறது. மத்திய கிழக்கு (Middle East) பதற்றங்கள், குறிப்பாக ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா மோதல் இதற்கு பொருந்துவதாக பலர் இணைக்கின்றனர்.

எது எவ்வாறாக இருந்த போதும் உலக அழிவு என்பது மனித குலத்தின் கணிப்புக்களுக்கு அப்பாற்பட்டது என்பதே நிதர்சனம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ மாணவி எடுத்த மோசமான முடிவு : கடிதத்தில் எழுதிவைத்துள்ள திடுக்கிடவைக்கும் செய்தி!!

இந்தியாவின் மும்பையில், தன் காதலனால் மனோரீதியாக துன்புறுத்தப்பட்டதால் பல் மருத்துவம் பயின்றுவந்த இளம்பெண் ஒருவர் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டார்.

மும்பையைச் சேர்ந்த ஸ்துதி சோன்வானே (24) என்னும் இளம்பெண், பல் மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பயின்றுவந்துள்ளார்.

செவாய்க்கிழமை காலை 11.00 மணி ஆகியும் ஸ்துதி தன் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் மகளைக் கூப்பிட்டும் அவர் பதிலளிக்காததால் பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர்.

பொலிசார் வந்து கதவை உடைத்து அறைக்குள் நுழைய, அங்கே ஸ்துதியின் உயிரற்ற உடலைத்தான் அவரது பெற்றோரால் பார்க்கமுடிந்துள்ளது.

ஸ்துதியின் அறையில் ஆறு பக்க கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில், தன் காதலர் தன்னை நம்பாமல் தன் நடத்தை குறித்து மோசமாக விமர்சித்தது முதலான பல்வேறு விடயங்களை அவர் எழுதிவைத்துள்ளார்.

கடிதத்தில் எழுதிவைத்திருந்த திடுக்கிடவைக்கும் விடயம்

அந்த கடிதத்தில் ஸ்துதி எழுதிவைத்துள்ள மற்றொரு விடயம் திடுக்கிடவைப்பதாக அமைந்துள்ளது. டெல்லியில், ஷ்ரத்தா வால்க்கர் என்னும் இளம்பெண்ணைக் கொலை செய்தார் அவரது காதலனான ஆஃப்தாப் பூனாவாலா என்பவர்.

ஆஃப்தாபின் வீட்டை பொலிசார் சோதனையிட்டபோது, ஷ்ரத்தாவின் உடல் பாகங்கள் ஆஃப்தாபின் வீட்டிலிருந்த ஃப்ரிட்ஜுக்குள் வைக்கப்பட்டிருந்த விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியது.

இந்நிலையில், ஸ்துதி எழுதிவைத்துள்ள கடிதத்தில், தனக்கும் தன் காதலனுக்கும் பிரச்சினை இருப்பதை நன்கறிந்த தனது தோழிகள்,

ஷ்ரத்தாவைப் போலவே ஒரு நாள் உன் உடலும் ஃப்ரிட்ஜுக்குள் கண்டெடுக்கப்படும் பார் என அவரிடம் வேடிக்கையாக கூறுவதுண்டு என்றும் எழுதிவைத்துள்ளார் ஸ்துதி.

பொலிசார் இந்த துயர சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

மாவட்ட ரீதியில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை இதோ!!

நாட்டில் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ள மாவட்ட ரீதியிலான லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களுக்கான புதிய விலைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவன் இந்த அறிவிப்பௌ வெளியிட்டுள்ளது. வளைகுடாநாட்டில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக நாட்டில் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

லிட்ரோ (Litro) சமையல் எரிவாயுவின் விலை நேற்று (10) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றங்களுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.

 

இன்று நள்ளிரவு முதல் ரைஸ் மற்றும் கொத்துரொட்டி விலைகளில் மாற்றம்!!

நாட்டில் எரிவாயு விலை உயர்வு காரணமாக இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சில உணவு வகைகளின் விலைகள் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சாதாரண தேநீர் 5 ரூபாவாலும், பால் தேநீர் மற்றும் சிற்றுண்டிகள் 10 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

மேலும், ரைஸ் மற்றும் கொத்துரொட்டி ஆகியவை 25 ரூபாவாலும் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவகம் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வளைகுடா போர் பதற்றத்தால் உலகில் எரிவாயு மற்றும் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையில் விலை மாற்றம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.