சுட்டுக் கொல்லப்பட்ட சிறுவனுக்கு நீதி வேண்டி ஊர்காவற்றுறையில் போராட்டம்!!

கடந்த பெப்ரவரி மாதம் அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான அ.அருள்பாயஸ் என்ற சிறுவனின் கொலைக்கு நீதி வேண்டி இன்று (10) ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையம் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மனித உரிமை ஆர்வலர் அமைபினரால் முனெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில் சிறுவனின் உறவுகள் மற்றும் ஏனையோர் கலந்துகொண்டு, பொலிசாருக்கு எதிரான கோசங்கள் தாங்கிய பதாகைகளுடன் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பொலிசாரின் செயலைக் கண்டித்து

குறிப்பாக குறித்த போராட்டம் ஊர்காவற்றுறை நீதிமன்றின் முன்பாக காலை 11 மணிக்கு ஆரம்பமானது.

போராட்டம் ஆரம்பமான சில நிமிடங்களில் நீதிமன்ற பொலிசாரால் நீதுமன்றுக்கு முன்பாக போராட்டம் நடத்த முடியாது எனக் கூறி நீதிமன்ற வளாகத்தை கடந்து போராட்டத்தை முன்னெடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

பொலிசாரின் கோரிக்கையை ஏற்ற போராட்டக்காரர்கள் பின்பு ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையம் முன்பாக ஒன்றுகூடி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது பொலிசாரின் செயலைக் கண்டித்து பல்வேறு சுலோங்கள் எழுதப்பட்ட பதாகைகளை தாங்கி,

கோசமிட்டு தமது எதிர்ப்பை காட்டிய போராட்டக்காரர்கள் குறித்த கொலைக்கு காரணமான பொலிசாரை தண்டிக்க வேண்டும் என்றும் குறிப்பாக தனது மகனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியே சுட்டதாக குற்றம் சாட்டினர்.

அத்துடன் மிலேச்சத்தனமான கொலைகளை பொலிசார் இனியொரு தடவை மேற்கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தியதுடன் நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

முன்னதாக கடந்த 10 ஆம் திகதி அதிகாலை 1.15 மணியளவில் வேலணை –

அல்லைபிட்டிப் பகுதியில் உத்தரவை மீறி கடமையில் இருந்த பொலிசாரை மோதிவிட்டு தப்பிச்செல்ல முற்றட்ட ஹயஸ் ரக வாகனம் மீதே தாம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அதன் போதே குறித்த 17 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

 

தடுமாறும் தங்கத்தின் விலை : இலங்கையில் நகை வாங்க காத்திருப்போருக்கான செய்தி!!

கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் (11.03.2026) 24 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 415000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 383800 ரூபாவாக காணப்படுகிறது.

உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5204.67 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலில் ஏற்பட்டுள்ள புதிய நகர்வுகள் காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்றைய தினம் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டொலரின் மதிப்பு வலுவடைந்துள்ளதும், முதலீட்டாளர்கள் லாபமீட்டலில் (Profit-booking) ஈடுபட்டுள்ளதும் இந்த சரிவுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

இதேவேளை வெள்ளியின் விலையிலும் சரிவு காணப்படுகிறது. இன்றைய தினம் ஒரு அவுண்ஸ் வெள்ளி 88.31 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை வீழ்ச்சி காரணமாக, கொழும்பு செட்டியார்தெரு மற்றும் ஏனைய உள்நாட்டுத் தங்கச் சந்தைகளிலும் இன்றைய தினம் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அளவு சரிவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரானில் கறுப்பு மழை : வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு அவசர எச்சரிக்கை!!

ஈரானில் கருப்பு மழை பெய்துள்ளமையினால் பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படியும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், ஈரானில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் கரும்புகை வான் வரை பரவி வருகின்றது.

இந்நிலையில், கரும்புகையும், அமில மழையும் சேர்ந்து பெய்வதனால் சுவாச கோளாறுகள், பல பாதிப்புகள் ஏற்பட கூடும் என அந்நாட்டில் செயல்பட்டு வரும் உலக சுகாதார அமைப்பு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளது.

ஈரானில், உலக சுகாதார அமைப்பின் அலுவலக அதிகாரிகள் அந்நாட்டு சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், எண்ணெய்யுடன் கூடிய மழை பெய்துள்ளமை மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்த கூடும் என அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் கிறிஸ்டியன் லிண்ட்மெயர் கூறியுள்ளார்.

 

 

தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி : இலங்கையில் பொருளாதார நடவடிக்கைகள் முடக்கப்படுமா?

இலங்கையில் எரிபொருள் நுகர்வைக் குறைப்பதற்காகப் பொருளாதார நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் எண்ணம் இல்லை என்று அரசாங்கம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் உலகச் சந்தையில் எரிபொருள் விலை உச்சத்தை எட்டியுள்ள போதிலும், பொருளாதார நடவடிக்கைகள் முடக்கப்படாது என தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இது குறித்த விளக்கத்தை அளித்துள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகள் எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்க பாடசாலைகள், பல்கலைக்கழகங்களை மூடுதல் மற்றும் ‘வீட்டிலிருந்து வேலை’ (Work From Home) போன்ற முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.

இது போன்ற நடவடிக்கைகள் இலங்கையிலும் எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார்.

பொருளாதாரத்தின் ஒரு பகுதியை முடக்குவதன் மூலம் எரிபொருள் நுகர்வைக் குறைக்க அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை எனவும் நாட்டில் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தைப் பேணுவதே எமது இலக்கு எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களில் இலங்கையில் எரிபொருள் நுகர்வு பாரியளவில் அதிகரித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தரையிறங்கும் போது தொழிற்படாத விமானத்தின் முன்புற சக்கரம் : விமானியின் சாமர்த்தியத்தால் தப்பிய 133 உயிர்கள்!!

ஐதராபாத்தில் இருந்து தாய்லாந்தில் உள்ள புக்கெட் நகருக்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், தரையிறங்கும் போது முன்புற சக்கரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஓடுதளத்தை சேதப்படுத்தியபடி தரையிறங்கியது. தரையிறங்கும் நேரத்தில் விமானத்தின் முன்புற சக்கரத்தில் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் விமானம் ஆபத்தான நிலையை எதிர்கொண்டது. எனினும் விமானி சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார் .விமானத்தில் இருந்த 133 பயணிகளும் எவ்வித காயமுமின்றி பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த சம்பவத்தையடுத்து உடனடியாக புக்கெட் விமான நிலையத்தின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. விமானம் தரையிறங்கும் போது ஓடுதளம் சேதமடைந்தது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

இருப்பினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. எனினும், விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட இந்த எதிர்பாராத நிகழ்வால் பயணிகள் பீதி அடைந்தனர்.

 

பராமரிப்பு நிலையத்தில் குழந்தையை விட்டு வேலைக்கு சென்ற தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி!!

எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் பகல்நேர பராமரிப்பு நிலையம் ஒன்றில் இருந்த 18 மாதக் குழந்தை ஒன்று, அங்கிருந்த குளத்தில் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மெதமுலன, கதமடித்த பிரதேசத்தைச் சேர்ந்த 18 மாதக் குழந்தையான எயோன் தீசர அவிநாத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குழந்தையின் தாய், குழந்தையைப் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு தனது வேலைக்குச் சென்றுள்ளார்.

அதன் பின்னர் பராமரிப்பு நிலையத்தின் காப்பாளர் தாயைத் தொடர்புகொண்டு மித்தெனிய காரியமடித்த வைத்தியசாலைக்கு வருமாறு கோரியுள்ளார்.

அங்கு சென்ற பின்னரே தனது மகன் குளத்தில் விழுந்து உயிரிழந்த செய்தியை அந்தத் தாய் அறிந்துள்ளார்.

குழந்தையின் பாதுகாப்பு விடயத்தில் கவனக்குறைவாகச் செயற்பட்ட குற்றச்சாட்டின் கீழ், குறித்த பராமரிப்பு நிலையத்தின் காப்பாளர் எம்பிலிப்பிட்டிய தலைமையகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் 20 முதல் 30 சதவீதம் அதிகரிக்கும் மின் கட்டணம்?

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் மின் கட்டணங்களை 20 முதல் 30 சதவீதம் வரை அதிகரிக்க வேண்டியிருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக தெரிவித்துள்ளார். கொழும்பில் வைத்து அவர் இந்த விடயத்தை அவர் கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கம் வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் அழைக்கப்படும் நிலக்கரி டெண்டரை நான்கு மாதங்கள் தாமதப்படுத்தியுள்ளது. தகுதிகளைத் தளர்த்தி நட்பு நிறுவனங்களுக்கு வாய்ப்பளித்துள்ளது.

42 நாள் டெண்டர் காலம் 21 நாட்களாகக் குறைக்கப்பட்டு செயற்கையான அவசரம் உருவாக்கப்பட்டாலும், டெண்டரை இரண்டு மாதங்கள் வழங்குவதில் எந்த அவசரமும் இல்லை என்பது தெளிவாகிறது. இது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாகும்.

தேவையான 38 நிலக்கரி கப்பல்களுக்குப் பதிலாக, இந்த முறை குறைந்த எண்ணிக்கையிலான கப்பல்களை மட்டுமே இறக்குமதி செய்ய முடியும்.

நிலக்கரி பற்றாக்குறை காரணமாக, ஜூலை முதல் செப்டெம்பர் வரை டீசலைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க வேண்டியிருக்கும். மேலும் ஒவ்வொரு கப்பலுக்கும் சுமார் 500 மில்லியன் ரூபாய் செலவிட வேண்டியிருக்கும்.

குறைந்த விலையில் நிலக்கரி வழங்கப்படும் என்று கூறப்பட்டாலும், தரமற்ற நிலக்கரியைப் பெற்றதால் அரசுக்கு கடுமையான இழப்பு ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

 

இலங்கை – ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு : வெளியான காரணம்!!

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை இருதரப்பு தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடர் மார்ச் 13 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த நிலையில் தற்போதைய பிராந்திய சூழ்நிலையால் எழும் விமானக் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ACB) அறிவித்துள்ளது.

தொடர் ஒத்திவைப்பு

ஆப்கானிஸ்தான் அணி இலங்கையை முதன்முறையாக நடத்தும் இந்தத் தொடரில், ஆறு வெள்ளைப் பந்துப் போட்டிகள் இடம்பெற திட்டமிடப்பட்டது.

மூன்று டி20 சர்வதேசப் போட்டிகள் மார்ச் 13, 15 மற்றும் 17 ஆகிய திகதிகளில் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்திலும், அதைத் தொடர்ந்து மார்ச் 20, 22 மற்றும் 25 ஆகிய திகதிகளில் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும் மூன்று ஒருநாள் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டது.

இதன்படி, குறித்த தொடரை இந்த ஆண்டின் இறுதிப் காலாண்டில் நடத்துவதற்குத் தற்போது திட்டமிடப்பட்டுள்ளது.

வவுனியா மன்னார் வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து : மூவர் காயம்!!

வவுனியா மன்னார் வீதி பட்டானிச்சூர் பகுதியில் நேற்று (10.03.2026) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நகரிலிருந்து மன்னார் வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியின் மறுபக்கம் திரும்ப முற்பட்ட சமயத்தில் அதே பாதையில் பயணித்த மற்றுமொரு அதிவேக திறன்கொண்ட மோட்டார் சைக்கிள் குறித்த மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு வீதி ஒழுங்கு விதிகள் தொடர்பில் செயலமர்வு!!

வவுனியா பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பொலிசாரின் ஏற்பாட்டில் வீதி போக்குவரத்து விதிமுறை தொடர்பான பயிற்சிப் பட்டறை நிகழ்வு வவுனியா நகரில் இடம்பெற்றது.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 1000க்கு மேற்பட்ட மாணவர்கள் வீதி விதிமுறைகளை பின்பற்ற பாடசாலை மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வீதி ஒழுங்கு கண்காணிப்பு மாணவர்களுக்கே இப் பயிற்சிகள் வவுனியா பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பட்டறையும் வீதி ஒழுங்கு முறை பற்றிய விளக்கமளிப்பும் இடம்பெற்றது. முன்னதாக வீதிக்குறியீடுகள், சமிக்ஞைகள், போக்குவரத்து விதிகள் தொடர்பாக விளக்கமளிப்பு செயலமர்வும் அதனைத் தொடர்ந்து வவுனியா நகர கண்டி வீதியில் விபத்துக்களை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் காண்பிக்கப்பட்டது.

இதில் வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் போக்குவரத்து பொலிஸாருடன் தெரிவு செய்யப்பட்ட வீதி ஒழுங்கு கண்காணிப்பு மாணவர்களும் பங்குபற்றியிருந்தனர்.

வவுனியா பண்டாரிக்குளம் வீதியில் அனுமதியற்ற வாகன திருத்துமிடம் : மாநகரசபை நடவடிக்கை!!

வவுனியா மாநகரசபை எல்லைக்குட்பட்ட பண்டாரிகுளம் அம்மன் கோவில் வீதியில் அனுமதியற்ற வகையில் நடாத்தப்பட்டுவந்த வாகன திருத்துமிடத்தினை அகற்றுவதற்கான இறுதி அறிவித்தல் வவுனியா மாநகரசபையினால் வழங்கப்பட்டுள்ளது.

மாநகரசபை அதிகார எல்லைக்குள் பொது வீதிகளுக்கு சேதங்களை ஏற்படுத்துதல் மற்றும் அவ்வீதிகளில் போக்குவரத்துக்குத் தடைகளை ஏற்படுத்துவதைத் தவிர்த்தல், முறைப்படுத்தல், ஒழுங்குபடுத்தல்,

கண்காணிப்புச் செய்தல் மற்றும் நிர்வகித்தல் மாநகரசபைகள் கட்டளைச் சட்டத்தின் 267 (1) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 272(6) (ஆ) (இ) உப பிரிவின் கீழ் மாநகரசபைக்கு உரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பிரகாரம்,

பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவித்தல் மற்றும் பொதுப் போக்குவரத்திற்கு தடைகளை ஏற்படுத்துதல் போன்றவை தொடர்பில் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் பண்டாரிகுளம் அம்மன் கோவில் வீதியில் அனுமதியற்ற வகையில் நடாத்தப்பட்டுவந்த வாகன திருத்துமிடத்தினை அகற்றுவதற்கான இறுதி அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் மக்களின் பொதுப்போக்குவரத்து மற்றும் பொதுச்சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலினை விளைவிக்கும் வகையில் செயற்படும் அனைத்து வியாபாரங்கள் தொடர்பிலும் மாநகர சபையினால் தொடர் கவனம் செலுத்தப்படவுள்ளதுடன் குறித்த வியாபாரங்களுக்கு எதிராக மாநகர சபை கட்டளை சட்டத்திற்கிணங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வவுனியா மாநகர ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

திடீரென அதிகரித்த எரிபொருள் விலைகள் : பொதுமக்களிடம் விடுத்துள்ள அவசர வேண்டுகோள்!!

மத்திய கிழக்கில் போரை அடுத்து ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க, முடிந்தவரை சிக்கனமாக எரிபொருளை பயன்படுத்துமாறு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எரிபொருள் விலை உயர்வு குறித்து இன்று (10) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், எரிபொருள் பயன்பாட்டை முடிந்தவரை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் பற்றாக்குறை

எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சத்தில் கடந்த சில நாட்களாக மக்கள் அதிகமாக எரிபொருளை வாங்கியமை இந்த விலை உயர்வுக்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறியுள்ளார்.

எரிபொருளை சிக்கனமாக வாங்கியிருந்தால் இந்த மாத இறுதி வரை இருந்த விலையில் எரிபொருளை வாங்க முடிந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தற்போதைய எரிபொருள் நெருக்கடி முழு உலகையும் பாதித்து வருவதால், கூட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால் கடுமையான ஆபத்துகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், நுகர்வை மட்டுப்படுத்துமாறு பொதுமக்களிடம் மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்வதாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் அடுத்த மாதம் மேலும் அதிகரிக்கும் எரிபொருள் விலை : குறைக்கும் சந்தர்ப்பத்தை அறிவித்த அதிகாரி!!

எதிர்வரும் மாதங்களில் எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள திடீர் அதிகரிப்பைக் தடுக்கும் நோக்கில் நோக்கில் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருளின் விலையை அதிகரித்ததாக பெட்ரோலிய மொத்த விற்பனை முனையங்கள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மயூர நெத்தி குமார தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், நாட்டில் ஏற்படுத்தப்பட்ட திடீர் எரிபொருள் விலை உயர்வுக்கான காரணங்களையும் அவர் இதன்போது விளக்கினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அடுத்து வரும் மாதங்களில் எரிபொருள் விலை திடீரென உயர்வதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பொதுவாக, கடந்த மாத எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு விலை நிர்ணயம் செய்யப்படும். தற்போது எங்களிடம் 30 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பு நிலையாக உள்ளது.

எனினும், அடுத்த மாதத்திற்காக வரவிருக்கும் கப்பல்களில் உள்ள எரிபொருளின் விலை பெருமளவில் அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில் எங்களிடம் தற்போது உள்ள எரிபொருள் இருப்பைப் பாதுகாக்கும் அதேவேளை, விலையைச் சமநிலைப்படுத்துவதற்கும் நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.

அதன்படி, எரிபொருள் விலையில் திடீர் அதிகரிப்பைத் தடுக்கவும், கிடைக்கக்கூடிய இருப்புகளை மாதங்களுக்கு இடையில் சமநிலையில் பேணுவதற்கும், விலைகளை அதிகரித்தோம்.

மேலும், உலக சந்தையில் விலை குறைந்தால் அடுத்த சில நாட்களுக்குள் எமது நாட்டிலும் எரிபொருளின் விலையை நிச்சயமாகக் குறைக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றநிலை : தங்கம் வாங்க காத்திருந்தவர்களுக்கு தொடரும் அதிர்ச்சி!!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றநிலை காரணமாக சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

அதன்படி, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று 5,159 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இதேவேளை, வெள்ளியின் விலையும் அதிகரிப்பை பதிவு செய்து 88.15 அமெரிக்க டொலர்களாக விற்பனையாகின்றது.

அந்தவகையில், இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (10) 7,000 ரூபாய் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகை கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 415,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 383,800 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 51,875 ரூபாவாகவும் 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,975 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

உலகத்தின் முடிவு வந்துவிட்டது : எச்சரிக்கும் ரஷ்யா!!

ஈரான் மீதான தாக்குதலை குறிப்பிட்டு உலகத்தின் முடிவு வந்துவிட்டது என ரஷ்யா எச்சரித்துள்ளது.

ஈரான் மீதான பாரிய அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதலை ‘சரியான புயல்’ என்று ரஷ்யா முத்திரை குத்தியது. அமெரிக்க, இஸ்ரேலிய இராணுவ நிலைகளில் ஈரானுக்கு உளவு வேலையில் மட்டுமே ரஷ்யா உதவுகிறது.

மத்திய கிழக்கில் நடந்த போர், எண்ணெய் விலையில் மிகப்பெரிய ஏற்றத்தை ஏற்படுத்தியதால், ஒரு பீப்பாயின் விலை பல ஆண்டுகளில் முதல் முறையாக 100 டொலர்களைத் தாண்டியது.

சர்வதேச சட்டத்தின் முறிவினை, விளாடிமிர் புடினின் (Vladimir Putin) செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தாக்கி பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், “மனித வரலாற்றில் மோசமான விடயங்கள் நடந்துள்ளன. ஆனால் அப்போது நாம் உயிருடன் இருக்கப்போவதில்லை, எனவே உலகின் முடிவு நம் மீது வந்துவிட்டது என்று நமக்கு தோன்றுகிறது.

நாம் அனைவரும் சர்வதேச சட்டம் என்று அழைப்பதை இழந்துவிட்டோம் என்று புடின் நம்புகிறார். சர்வதேச சட்டத்தின் விதிமுறைகள் மற்றும் கொள்கைகளைப் பின்பற்ற மற்றவர்களை எப்படி அழைக்க முடியும் என்று கூட எனக்குப் புரியவில்லை.

அது இனி இல்லை. சர்வதேச சட்டத்தை மாற்றியமைத்த சட்டம் எது என்பதை இப்போது யாராலும் உருவாக்க முடியாது. தெளிவான வரையறையை யாராலும் வழங்க முடியாது” என தெரிவித்துள்ளார்.

மேலும் “புடின் சொல்வது சரிதான். இப்போது தொடங்கியுள்ள இந்த சரியான புயலின் பின்னணியில், நாம் நம் மீதும், நமது நலன்கள் மீதும், நமது ஆற்றலிலும் கவனம் செலுத்த வேண்டும். அது இல்லாத இடத்தில், நாம் அதை கட்டியெழுப்ப வேண்டும். கவனமாக சிந்திக்க வேண்டும், கவனம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

 

யாழில் அர்ச்சகர்கள் அடிதடியில் பறிபோன உயிர் : நடந்தது என்ன?

யாழ் நயினாதீவில் இரு குருக்கள்மாரிடையேயான மோதலில் வாளால் வெட்டிக் கிருஷ்ணகுமார் ஐயா கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று திங்கட்கிழமை (09) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தொழில் நிமிர்த்தம் யாழ் நயினாதீவுக்கு சென்று தங்கியிருந்த வேளை யாழ் நயினாதீவு வீரகத்தி விநாயகர் ஆலய குருக்களின் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

அர்ச்சகர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மற்றொரு நபர் கத்தியால் குத்தி இவரைக் கொலை செய்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொட்டகலை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இறைவனுக்கு பூசைசெய்யும் அர்ச்சரகள் , அடிதடியில் இறங்கியதோடு வாளால் வெட்டிகொல்லபப்ட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.