கனடாவில் இருந்து யாழ் வந்தவருக்கு நேர்ந்த துயரம் : சோகத்தில் உறவுகள்!!

கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்தவர் நிமோனியா காய்ச்சலினால் உயிரிழந்துள்ளார். கனடாவில் வசித்து வந்த 42 வயதான குறித்த நபர் அண்மையில் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார்.

குறித்த நபர் வட்டுக்கோட்டை பகுதியில் தங்கியிருந்த நிலையில் , கடந்த 31ஆம் திகதி காய்ச்சல் காரணமாக தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் , சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை(3) உயிரிழந்துள்ளார். கனடாவாழ் நபரின் உயிரிழப்புக்கு நிமோனியா காரணம் என வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.

 

2.5 கோடி சம்பளம் : மாணவனுக்கு கிடைத்த மிகப்பெரிய வேலை!!

இந்திய தொழில்நுட்பக் கழகம், ஹைதராபாத் (IIT Hyderabad) தனது வரலாற்றில் மிகப்பெரிய வேலை வாய்ப்பை பதிவு செய்துள்ளது.

கணினி அறிவியல் பிரிவில் இறுதியாண்டு B.Tech படிக்கும் மாணவரான 21 வயதான எட்வர்ட் நாதன் வர்கீஸ், நெதர்லாந்தில் அமைந்துள்ள Optiver என்ற டிரேடிங் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக (Software Engineer) ஆண்டுக்கு ரூ.2.5 கோடி சம்பளத்துடன் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

இது IIT Hyderabad நிறுவப்பட்ட 2008 முதல் கிடைத்த அதிகபட்ச சம்பளம் கொண்ட வேலை வாய்ப்பாகும். இதற்கு முன்பு 2017-ல் சுமார் ரூ.1 கோடி சம்பளம் மிகப்பெரியதாகக் கருதப்பட்டது.

சமீப காலங்களில் 60-90 லட்சம் ரூபாய் சம்பள வாய்ப்புகள் கூட அசாதாரணமாகக் கருதப்பட்டன.

வர்கீஸ், Optiver நிறுவனத்தில் இரண்டு மாத Internship செய்தார். Internship காலத்தில் சிறப்பாக செயல்பட்டதால், Pre-Placement Offer (PPO) வழங்கப்பட்டது.

Internship-க்கு IIT Hyderabad-இல் இருந்து இரண்டு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும், முழுநேர வேலை வாய்ப்பு கிடைத்தது இவர் ஒருவருக்கே.

“இது நான் சந்தித்த முதல் மற்றும் ஒரே Interview. என் Mentor, Offer வழங்கப்படும் எனச் சொன்னபோது நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். என் பெற்றோர்களும் அதேபோல் மகிழ்ந்தனர்” என வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Competitive Programming-இல் நாட்டம், இந்திய அளவில் Top 100 இடம் பெற்றது, நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

இந்த சாதனை, IIT Hyderabad-இன் சர்வதேச வேலை வாய்ப்பு திறனை வெளிப்படுத்துகிறது. மேலும், உலகளாவிய நிறுவனங்கள் இந்திய மாணவர்களின் திறனை அதிகம் மதிப்பிடுகின்றன என்பதற்கும் இது ஒரு சான்றாகும்.

மகனை 2வதாக திருமணம் செய்த பெண்ணை கொலை செய்து தலையை தனியாக புதைத்த மாமியார்!!

தமிழக மாவட்டம் கள்ளக்குறிச்சியில் மருமகளை மாமியார் கொலை செய்து புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கிறிஸ்துவமேரி என்ற பெண்ணின் மகனை நந்தினி இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

இது கிறிஸ்துவமேரிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மருமகளை கொலை செய்ய மூன்று மாதங்களாக திட்டமிட்டுள்ளார்.

இதனையடுத்து அவர் நந்தினியை தலையில் அடித்து கொலை செய்துள்ளார். மேலும் அவரது தலையை ஒரு இடத்தில் புதைத்துள்ளார். அத்துடன் நந்தினியின் மற்ற உடல் பாகங்களை மற்றொரு இடத்திலும் புதைத்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் கொலை நடந்த இடத்திற்கு சென்றுள்ளனர். தடயவியல் நிபுணர்களுடன் பொலிஸார் அங்கு ஆய்வு செய்வதாக தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

உறங்கிக்கொண்டிருந்த மனைவி மீது மின்சாரம் பாய்ச்சி கொன்ற கணவன்!!

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே, குடும்பத் தகராறு மற்றும் சந்தேகத்தின் காரணமாக மனைவியை மின்சாரம் பாய்ச்சிக் கொன்று விட்டு, உடல்நலக்குறைவால் மனைவி இறந்தது போல நாடகமாடிய கணவனைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

பள்ளிகொண்டா அடுத்த காட்டுக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன் (43). இவருக்கும் கலையரசி (33) என்பவருக்கும் 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, 3 மகன்கள் உள்ளனர்.

கடந்த சில காலமாகவே தனது மனைவியின் நடத்தையில் கருணாகரனுக்குச் சந்தேகம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கணவன் – மனைவி இடையே அடிக்கடி கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்தன.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கலையரசி வழக்கம் போல உணவு அருந்தி விட்டுத் தூங்கச் சென்றுள்ளார். அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நள்ளிரவு நேரத்தில்,

கருணாகரன் மின்சார வயர்களைக் கொண்டு கலையரசியின் கை மற்றும் கால்களில் மின்சாரத்தைப் பாய்ச்சியுள்ளார். இதில் மின்சாரம் தாக்கி கலையரசி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

மறுநாள் காலை, தனது மனைவியின் தந்தைக்குப் போன் செய்த கருணாகரன், “கலையரசி காலை 7 மணி ஆகியும் எழுந்திருக்கவில்லை, எழுப்பிப் பார்த்தும் அசைவின்றி இருக்கிறார்” என்று கூறி நாடகமாடியுள்ளார்.

அங்கு விரைந்து சென்ற கலையரசியின் பெற்றோர், மகளின் திடீர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகப் பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கருணாகரனைப் பிடித்துத் தீவிர விசாரணை நடத்தியபோது அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.

மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல், அவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டு மின்சாரம் பாய்ச்சிக் கொன்றதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து கருணாகரனைப் போலீசார் முறைப்படி கைது செய்து சிறையில் அடைத்தனர். 14 ஆண்டு கால திருமண வாழ்க்கை சந்தேகத்தின் பலியால் மூன்று சிறுவர்கள் அநாதையாக நிற்கும் நிலை அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் மீண்டும் கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை : யாழ்.பல்கலைக்கழக நிபுணர் எச்சரிக்கை!!

வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களுக்கு 06.01.2026 முதல் 12.01.2026 வரை கனமானது முதல் மிகக் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை பேராசிரியர் மற்றும் தலைவர் நாகமுத்து பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த 28.12.2025 அன்று வங்காள விரிகுடாவில் இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் தோன்றிய காற்றுச் சுழற்சி தற்போது தாழ்வு நிலையாக வலுப்பெற்றுள்ளது.

இக்காற்றுச்சுழற்சிக்கு தேவையான மறை வெப்பச் சக்தியின் பற்றாக்குறையால் இது எதிர்பார்த்த வேகத்தில் நகராமல் மிக மிக மெதுவாக நகர்ந்து நேற்று மாலை காற்றழுத்த தாழ்வு நிலையாக விருத்தி பெற்றுள்ளது.

இது மேலும் மேற்கு, வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து, இலங்கைக் தெற்காக நகர்ந்து குமரிக்கடலைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காற்றுச் சுழற்சி காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுப்பெற்றுள்ளது.

இதன் காரணமாக வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களுக்கு நாளை முதல் 12.01.2026 வரை கனமானது முதல் மிகக் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

குறிப்பாக 06.01.2026 முதல் 11.01.2026 வரை மேற்குறிப்பிட்ட மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

மிக முக்கியமாக நாளை 06.01.2026 முதல் 11.01.2016 வரை வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கு மிக மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அதேவேளை இக்காலப்பகுதியில் இலங்கையின் ஏனைய மாகாணங்களிலும் பரவலாக மிதமானது முதல் சற்று கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொடர்ச்சியாக மழை கிடைக்கும் என்பதனால் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளிலும் நிலச்சரிவு அனர்த்தங்கள் இடம்பெறக்கூடும்.

எனவே மக்கள் இது தொடர்பாக மிகவும் விழிப்பாக இருப்பது அவசியம். வடக்கு, கிழக்கு,மத்திய, வட மத்திய மாகாணங்களின் நீர்த்தேக்கங்களின் முகாமையாளர்கள் இந்த காற்றழுத்த தாழ்வு நிலையோடு தொடர்புடைய கனமழை நிகழ்வு தொடர்பாக அதிக கரிசனை கொள்வது விரும்பத்தக்கது.

அதேவேளை இலங்கையின் வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு கடற்பிராந்தியங்கள் நாளை 06.01.2026 முதல் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதில் மிக அவதானமாக இருப்பது அவசியம்.

அதே வேளை கிழக்கு, தென்கிழக்கு கடற்பகுதிகளில் பலநாட் கலங்களில் ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்றுள்ளவர்களும் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்பில் அவதானமாக இருப்பது சிறந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா அம்மாச்சி உணவகம் மீண்டும் திறக்கப்பட்டது!!

வவுனியா அம்மாச்சி உணவகம் புணரமைப்பு பணிகளின் பீன் இன்று காலை (02.01.2026)மீண்டும் திறக்கப்பட்டது.

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள வடக்கின் பாரம்பரிய உணவகமான அம்மாச்சி புணரமைப்பு பணிகளுக்காக கடந்தசில நாட்களாக பூட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் புணரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று காலை மீண்டும் அது உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அரச அதிபர் பி.ஏ.சரத்சந்திர, மற்றும் விவசாய திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

இளம் யுவதியின் விபரீத முடிவு : பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்!!

சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் உள்ள வென்னப்புவ, நைனமட பகுதியில் ஜின் ஓயாவில் குதித்து உயிரிழந்த யுவதியின் மரணம் நீரில் மூழ்கியதால் நிகழ்ந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த யுவதியின் பிரேத பரிசோதனையை சிலாபம் பொது வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி டி.கே. விஜேவர்தன மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், யுவதியின் மரணம் நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட பிற காரணங்களால் நிகழ்ந்துள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கடந்த 28 ஆம் திகதி வென்னப்புவ, ஜின் ஓயா பாலத்திற்கு வந்த யுவதியொருவர் தனது காதலனுக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்திய பின்னர் ஜின் ஓயாவில் குதித்து உயிரிழந்திருந்தார்.

கொச்சிக்கடை பகுதியில் தற்காலிகமாக வசித்து வந்த ஜா-எல, போபிட்டியவைச் சேர்ந்த 17 வயதுடைய உமயங்கனா சத்சரணி என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.

அதே நேரத்தில், குறித்த யுவதியின் காதலன் என அறியப்படும் இளைஞன் அவரை காப்பாற்ற ஜின் ஓயாவில் குதித்த நிலையில், அயலவர்களின் உதவியுடன் இளைஞன் மீட்கப்பட்டிருந்தார்.

இருப்பினும், யுவதி காணாமல்போயிருந்த நிலையில், மறுநாள் (29 ஆம் திகதி) பாலத்தின் அருகே மிதந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இதன்போது காப்பாற்றப்பட்ட இளைஞன் 1990 ஆம்புலன்ஸ் மூலம் மாரவில வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட இளைஞன் யுவதியின் மரணம் குறித்து பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் கரப்பான் பூச்சி நூடில்ஸ் : புத்தாண்டில் ஹோட்டலுக்கு சென்ற குடும்பத்திற்கு அதிர்ச்சி!!

யாழ்ப்பாணம் – கோண்டாவில் சந்திக்கு அருகாமையில் உள்ள உணவகம் ஒன்றில், கரப்பான் பூச்சியுடன் கூடிய உணவு வழங்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பம் ஒன்று புத்தாண்டு தினமான நேற்று வியாழக்கிழமை குறித்த உணவகத்துக்கு உணவருந்த சென்றுள்ளனர். இவ்வாறு சென்றவர்களுக்கு வழங்கிய நூடில்ஸ் உணவில் கரப்பான்பூச்சி இருந்தமை அவதானிக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த விடயத்தை உணவக பணியாளர்களுக்கு எடுத்துக் கூறிய போது, அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பாக சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில் கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்!!

யாழ்.வடமராட்சி கிழக்கு உடுத்துறை வேம்படி கடற்கரை பகுதியில் இன்று (02.01.2026) மர்மப் பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளது. கடலில் நிலவும் கடும் காற்று மற்றும் கொந்தளிப்பால் குறித்த பொருள் அடித்துவரப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

மக்கள் யாரும் அருகில் செல்ல வேண்டாம் என்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு சம்பவம் தொடர்பாக தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

அமெரிக்க டொலர், யூரோ, பவுண்டிற்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் வீழ்ச்சி!!

கடந்தாண்டு அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு 5.6 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டில் இலங்கை ரூபாயின் மதிப்பு 12.1 சதவீதமும், 2024 ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருக்கு எதிராக 10.7 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த ஆண்டு பல முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அதற்கமைய, கடந்த ஆண்டு யூரோவிற்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு 16.3 சதவீதம்,

பிரித்தானிய பவுண்டிற்கு எதிராக 12 சதவீதம், சீன யுவானுக்கு எதிராக 9.6 சதவீதம்,  ஜப்பானிய யென்னுக்கு எதிராக 5.6 சதவீதம், அவுஸ்திரேலிய டொலருக்கு எதிராக 12.2 சதவீதம் மற்றும் இந்திய ரூபாய்க்கு எதிராக 1 சதவீதம் என இலங்கை ரூபாயின் மதிப்பு சரிந்தது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

2025 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பகுதியை ஜனவரி 12 ஆம் திகதி மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, பரீட்சை தொடர்பான அனைத்து தொடர்புடைய விபரங்களும் அடங்கிய சுற்றறிக்கை இன்று (02) வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சு கூறுகின்றது.

இந்த முடிவின்படி, ஜனவரி 12 ஆம் திகதி தொடங்கும் உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாட வினாத்தாள்களை ஜனவரி 20 ஆம் திகதி வரை நடத்த பரீட்சை திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக நாடு முழுவதும் உள்ள பரீட்சை மையங்கள் மீண்டும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், பரீட்சைகள் வழக்கமான நடைமுறையின் படி நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே பரீட்சை மையங்களுக்குச் செல்லும்போது தேவையான அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுமாறும் அமைச்சகம் மாணவர்களைக் கேட்டுக்கொள்கின்றது.

மேலும், புதிய அட்டவணையின் விபரங்கள சுற்றறிக்கை மூலம் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் நாட்டை தாக்கிய டித்வா சூறாவளி காரணமாக, பல பகுதிகளில் மோசமான வானிலை நிலவியதை தொடர்ந்து அந்த நேரத்தில் நடைபெற்று வந்த உயர்தரப் பரீட்சையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க பரீட்சைகள் திணைக்களம் முடிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடக கணக்குகளை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை : குவியும் முறைப்பாடுகள்!!

இலங்கையில் 2025ஆம் ஆண்டில் சமூக ஊடக தவறான பயன்பாடு மற்றும் இணையப் பாதுகாப்பு தொடர்பான முறைப்பாடுகள் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (Sri Lanka CERT) தெரிவித்துள்ளது.

2025ஆம் ஆண்டில் மட்டும் இது தொடர்பாக சுமார் 12,650க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இணைய மோசடிகள், டிஜிட்டல் நிதி மோசடி மற்றும் இணையவழி துன்புறுத்தல்கள் (Cyber Harassment) ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள ஒரு பாரிய உயர்வாகும்.

இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் முன்னணி தகவல் பாதுகாப்பு பொறியாளர் சாருகா தமுனுபோல இது குறித்துத் தெரிவிக்கையில்,

பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளில் பெரும்பாலானவை போலி சமூக ஊடகக் கணக்குகள் (Fake Accounts), கணக்குகள் ஹேக் செய்யப்படுதல் (Hacked Accounts) மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் தொடர்பானவை என்று குறிப்பிட்டுள்ளார்.

இவை தவிர, வெறுக்கத்தக்கப் பேச்சுகள், ஆபாசமான அல்லது பாலியல் துன்புறுத்தல் தொடர்பான பதிவுகள் மற்றும் தவறான தகவல்களைப் பரப்புதல் போன்றவை தனிநபர்களுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக, இணையப் பாதுகாப்பு குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் புதிதாக இணையத்தைப் பயன்படுத்துபவர்களே இத்தகைய குற்றவாளிகளின் இலக்காக மாறியுள்ளனர்.

பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட தகவல்களையோ அல்லது வங்கி விவரங்களையோ இணையத்தில் பகிர வேண்டாம் என்றும், சந்தேகத்திற்கிடமான செய்திகள் மற்றும் இணைப்புகளை (Links) சரிபார்க்காமல் கிளிக் செய்ய வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சமூக ஊடகக் கணக்குகளுக்கு வலுவான கடவுச்சொற்களைப் பயன்படுத்துவதுடன், ‘இரு காரணி அங்கீகாரம்’ (Two-factor authentication) போன்ற பாதுகாப்பு வசதிகளைச் செயல்படுத்தி விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏதேனும் இணையவழித் தாக்குதல்கள் அல்லது மோசடிகள் நடந்தால், உடனடியாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு அமைப்பிற்குப் முறைப்பாடு அளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

உலகின் மோசமான நாடுகளின் வரிசையில் இடம் பிடித்த இலங்கை!!

உலகில் வாழ்க்கைத் தரம் குறைந்த நாடுகளின் வரிசையில் இலங்கை இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது. 2025ம் ஆண்டுக்கான உலகின் வாழ்க்கைத் தரம் மிகவும் குறைந்த நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தர வரிசையில் நைஜீரியா முதலிடத்தை பெற்றுக் கொண்டுள்ளது. உலகின் மிகவும் மோசமான வாழ்க்கைத் தரத்தைக் கொண்ட நாடுகளின் வரிசையில் நைஜீரியா முதலிடத்தையும் இலங்கை இரண்டாம் இடத்தையும் பங்களாதேஷ் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளன.

வாழ்க்கைத் தரம் மோசமான நாடுகளின் வரிசையில் நைஜீரியா பூச்சிய புள்ளிகளுடன் முதலிடத்தையும் 61 புள்ளிகளுடன் இலங்கை இரண்டாம் இடத்தையும் 73 புள்ளிகளுடன் பங்களாதேஷ் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளன.

கொள்வனவு இயலுமை, வீடுகளை பெற்றுக்காள்ளக்கூடிய நிலைமை, வாழ்க்கச் செலவு, பாதுகாப்பு, சுகாதார, போக்குவரத்து நேரம் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களின் அடிப்படையில் இந்த வாழ்க்கைத் தர சுட்டி கணிக்கப்பட்டு தர வரிசை வெளியிடப்பட்டுள்ளது.

உலகின் சிறந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்ட நாடுகளின் வரிசையில் நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் லக்ஸ்சம்பேர்க் ஆகிய நாடுகள் முன்னணி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

சனிபகவான் அருளால் 2026 ல் கோடிகளை குவிக்கப்போகும் ராசிகள் எவை தெரியுமா?

ஜோதிடத்தில் சனிபகவானின் பங்கு என்பது மிகவும் முக்கியமானது. அனைத்து கிரகங்களின் இயக்கங்களால் ஏற்படும் பலன்களும் சனிபகவானின் நகர்வைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.

2026-ல் சனிபகவான் மீன ராசியில் நிலைபெற்றிருக்கிறார். இருப்பினும் மற்ற கிரகங்களின் நகர்வுகள் சனிபகவானின் இயக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். சனிபகவானின் அருளால் 2026-ல் நேர்மறையான மாற்றங்களை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள் யாரென்று நாம் இங்கு பார்ப்போம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் சனிபகவான் அருளாள் நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சனைகளுக்கு இறுதியாகத் தீர்வைக் காண்பார்கள். அவர்களின் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும், புதிய பொறுப்புகள் அல்லது தொழில் வாய்ப்புகள் உருவாகலாம், மேலும் சமூகத்தில் அந்தஸ்தும்,

அங்கீகாரமும் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் அவர்கள் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல வெற்றியை எதிர்பார்க்கலாம். சனிபகவானின் தாக்கம் சிம்ம ராசிக்காரர்களின் நம்பிக்கையை அதிகரிக்கிறது மற்றும் புதிய திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்த வழிவகுக்கிறது.

கடகம்

கடக ராசிக்காரர்கள் சனிபகவான் அருளால் 2026-ல் பல நன்மைகளை அடையப்போகிறார்கள். அவர்களின் தொழில் நிலை வலுப்பெறும் மற்றும் நிதி நிலைத்தன்மை மேம்படும். இந்த காலகட்டத்தில் அவர்களின் ஆளுமை மிகவும் வலிமையானதாக மாறும்.

அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிப்பதால், அதிக தைரியத்துடன் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்கள். வேலையில்லாத கடக ராசிக்காரர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் வேலை கிடைக்க அனைத்து வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளன.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு, 2026 ஆம் ஆண்டு நம்பிக்கைக்குரிய ஆண்டாக இருக்கும். தொழில் மாற்றங்கள், பதவி உயர்வுகள் அல்லது வேலை மாறுதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

சொத்து அல்லது வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகளும் ஏற்படலாம். இந்த நேரத்தில் அவர்களுக்கு திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். தொழில் வாழ்க்கையில், பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. நிலுவையில் உள்ள அனைத்து பணிகளையும் சிறப்பாக முடிக்க முடியும்.

 

திருகோணமலையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 21 வயது இளைஞர் பலி!!

திருகோணமலையில், விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (01.01.2026) இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் முத்துச்சேனையைச் சேர்ந்த 21 வயது ஜமனராஜ் ஜதுர்ஷன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஈச்சிலம்பற்று காவல் பிரிவுக்குட்பட்ட புன்னையடி பகுதியில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இலங்கைத்துறை முகத்துவாரத்தில் இருந்து புன்னையடி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

உலகம் அழியப்போகிறது எனக் கூறி அதிர்ச்சியைக் கிளப்பிய எபோ நோவா அதிரடியாக கைது!!

மேற்கு ஆப்பிரிக்காவில் கானாவை சேர்ந்த இவான்ஸ் எஷுன் என்ற நபர், தன்னை ‘எபோ நோவா’ என்று அழைத்துக்கொண்டு, 2025 டிசம்பர் 25 அன்று உலகம் அழியும் என்று கூறி பீதி கிளப்பியதால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கானா பொலிஸின் இணையவழி குற்றப் பிரிவு நேற்று (31) கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் தன்னை தீர்க்கதரிசி என்று கூறிக்கொண்டு, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி பொதுமக்கள் அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தியமையே கைதுக்கு காரணம் என்று கூறப்படுகின்றது.

எபோ நோவா கடந்த ஆகஸ்ட் மாதம் பெரிய மரக் கப்பலை கட்டும் வீடியோக்கள் வைரலாகி உலக அளவில் பிரபலமானார்.

நத்தார் தினத்தில் என்னுடைய வேண்டுதலை கடவுள் ஏற்றுக்கொண்டு விட்டார். அதனால் உலகை அழிக்கும் முடிவை கடவுள் ஒத்திவைத்திருக்கிறார் அதனால் தொடர்ந்து இன்னும் பல கப்பல்களை கட்டப் போகிறேன்.

அதற்கு எனக்கு கடவுள் போதிய நேரம் கொடுத்திருக்கிறார் என்று கூறிய அவர் நோவாவை தேடி வந்த மக்களிடம் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் மகிழ்ச்சியாய் இருங்கள் என கூறினார்.

இதனால் மக்கள் கோபடைந்தனர். அவரை கைது செய்ய வலியுறுத்தி கோரிக்கை வைத்தனர். இந்தநிலையில் அவர் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

எபோ நோவா மழுப்பலாக வீடியோ வெளியிட்ட நிலையில், அவரை பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதாகக் கூறி பொலிஸார் கைது செய்துள்ளனர்.