உலக தங்க சந்தையில் அதிர்வு : 7 ஆண்டுகளில் மிகப்பெரிய வீழ்ச்சி!!

துருக்கியின் பொருளாதாரம் மற்றும் அந்நாட்டு நாணயமான ‘லிரா’வின் (Lira) மதிப்பை நிலைநிறுத்துவதற்காக, துருக்கி மத்திய வங்கி தனது தங்கம் மற்றும் அந்நிய செலாவணி கையிருப்பைப் பயன்படுத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மார்ச் 13 மற்றும் மார்ச் 20 ஆகிய வாரங்களுடன் முடிவடைந்த இரு வார காலப்பகுதியில் மட்டும் சுமார் 58 டன் தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதன் மதிப்பு 8 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமாகும். மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் எரிசக்தி இறக்குமதிச் செலவுகள் அதிகரிப்பால் துருக்கியின் லிரா நாணயம் கடும் அழுத்தத்தை சந்தித்துள்ளது.

டொலருக்கான தட்டுப்பாட்டைப் போக்கவும், உள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்செய்யவும் இந்த தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது. விற்பனை செய்யப்பட்ட தங்கத்தில் பாதிக்கும் மேற்பட்டவை ‘சுவாப்’ (Swap) ஒப்பந்தங்கள் மூலம் அமெரிக்க டொலரைக் கடனாகப் பெறப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மீதமுள்ளவை நேரடியாகச் சந்தையில் விற்கப்பட்டுள்ளன. இந்த அதிரடி விற்பனையால் துருக்கியின் தங்கக் கையிருப்பு சுமார் 513 டன்களாகக் குறைந்துள்ளது. இது கடந்த ஏழு ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சியாகக் கருதப்படுகின்றது.

அதேபோல், அந்நாட்டின் ஒட்டுமொத்த அந்நியச் செலாவணி கையிருப்பு சுமார் 40 பில்லியன் டொலர்கள் குறைந்து, 175 பில்லியன் டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

இது 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்குப் பிறகு பதிவான மிகக் குறைந்த அளவாகும். துருக்கியின் இந்த பாரிய தங்கம் விற்பனை உலகளாவிய தங்கச் சந்தையிலும் (Bullion Market) கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலக அளவில் தங்கத்தின் விலை சுமார் 2.4% முதல் 3.1% வரை சரிவைச் சந்தித்தது. சர்வதேச அளவில் தங்க முதலீட்டு நிதியங்கள் (Gold-backed ETFs) வெளியேற்றிய 43 டன் தங்கத்தை விட, துருக்கி தனிநாடாக விற்பனை செய்த அளவு அதிகமாகும்.

நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், நாணய மதிப்பை நிலைநிறுத்தவும் துருக்கி எடுத்துள்ள இந்த முயற்சி, உலகப் பொருளாதார ஆய்வாளர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

காதலியை கொலை செய்து துண்டு போட்டு ஃபிரிட்ஜில் வைத்த கடற்படை ஊழியர் : தலை இன்னும் கிடைக்கவில்லை!!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கடற்படை ஊழியர் ஒருவர், தனது காதலியைக் கொடூரமாகக் கொலை செய்து, உடலைச் சிதைத்து, துண்டு துண்டாக ஸ்லைஸ் போட்டு பிரிட்ஜூக்குள் வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடற்படையில் பணியாற்றி வரும் ரவீந்திரா என்பவருக்கும், மௌனிகா என்ற இளம் பெண்ணுக்கும் இடையே காதல் இருந்துள்ளது. ரவீந்திராவிற்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி உள்ளார்.

ரவீந்திராவின் மனைவி தனது சொந்த ஊருக்குச் சென்றிருந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட அவர், மௌனிகாவைத் தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அங்கு இருவருக்கும் இடையே உல்லாசத்தின் போது ஏற்பட்ட தகராறில், மௌனிகாவை ரவீந்திரா கொலை செய்துள்ளார்.

அதன் பின்னர் கொலையை மறைக்க எண்ணிய ரவீந்திரா, மௌனிகாவின் உடலைச் சிறிய துண்டுகளாக வெட்டி, வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைத்துள்ளார்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ரவீந்திரா அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியைத் தந்துளது.

மௌனிகா தன்னைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தியதாகவும், அடிக்கடி பணத்திற்காகத் தொந்தரவு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்தத் தொல்லையிலிருந்து விடுபடவே அவரைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ரவீந்திரா அளித்த தகவலின் பேரில், அவரது வீட்டில் இருந்த உடல் பாகங்களை போலீசார் கைப்பற்றினர். எனினும், கொல்லப்பட்ட மௌனிகாவின் தலைப் பகுதி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

அதனை அவர் எங்கே வீசினார் என்பது குறித்து போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் டெல்லியில் நடந்த ‘ஷ்ரத்தா வாக்கர்’ கொலை வழக்கினை நினைவுபடுத்துவதாகப் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

 

பட்டப்பகலில் வீதியின் நடுவில் மனைவியை கொலை செய்த கணவன்!!

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில், பட்டப்பகலில், சாலையின் நடுவில் தன் மனைவியை கழுத்தை அறுத்துக் கொன்ற நபர் ஒருவர், அவர் மீது காரையும் ஏற்றிச் சென்ற பயங்கரம் நிகழ்ந்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் தன் மனைவியான சாஹேலியுடன் (26) காரில் பயணித்துகொண்டிருந்துள்ளார் அக்‌ஷய் என்னும் நபர்.

Balurgi கிராமத்தின் அருகே நெடுஞ்சாலையில் காரை நிறுத்திய அவர், நடுரோட்டில் வைத்து தன் மனைவியின் கழுத்தை கூர்மையான ஆயுதம் ஒன்றால் அறுத்துள்ளார்.

அத்துடன், அவர் மீது காரையும் ஏற்றியுள்ளார் அக்‌ஷய். பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கரத்தை பார்த்தும் அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்களாம் அந்த வழியாக பயணித்துக்கொண்டிருந்தவர்கள்.

அக்‌ஷய் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது இந்த பயங்கர முடிவுக்கு, தவறான உறவு காரணமாக இருக்கலாம் என கருதும் பொலிசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

முற்பகல் 11 மணிக்குப் பிறகு வெளியே செல்லாதீர்கள் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!!

இலங்கையில், காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெப்பம் மிகவும் கடுமையாக இருக்கும் என்றும், அந்த நேரத்தில் வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைத்து, தவறாமல் தண்ணீர் அருந்துவது அவசியம் என்றும் வானிலை ஆய்வு மையத்தின் மேலதிக பணிபாபளர் நாயகம் அஜித் விஜேமன்ன தெரிவித்துள்ளார்.

தற்போதைய வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் வரை தொடரும் என்றும், மே மாத இறுதியில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தென் மேற்குப் பருவமழை தொடங்கும் காலகட்டத்தில் தற்போதைய வெப்பம் ஓரளவு தணியக்கூடும் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் வரை தற்போதைய வெப்பம் தொடரும். அதன்படி ஏப்ரல் மாதத்திலும் தீவின் பல பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவும்.

முதல் இடைப்பருவமழை வானிலை தொடங்கியுள்ள நிலையில், தற்போது குறிப்பிட்ட திசையிலிருந்து காற்று வீசவில்லை. காற்றின் வேகமும் மிகவும் குறைவாக உள்ளது.

மேலும், இந்தக் காலகட்டத்தில், சூரியன் உச்சத்தில் இருப்பதாலும் மேகங்கள் குறைவதாலும், கடல் மற்றும் நிலத்திலிருந்து வெப்ப அலைகள் வெளிப்பட்டு, வளிமண்டலத்தை வெப்பமாக்கும்.

காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெப்பம் மிகவும் கடுமையாக இருக்கும். அந்த நேரத்தில் வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைத்து, தவறாமல் தண்ணீர் அருந்துவது அவசியம்.

நாம் முதல் இடைப்பருவமழைக் காலத்தில் இருக்கிறோம். முதல் இடைப்பருவமழைக் காலம் மார்ச் முதல் ஏப்ரல் வரை நீடிக்கும்.

அதன்பிறகு, தென்மேற்குப் பருவமழை மே மாதத்தின் நடுப்பகுதியில், அதாவது 20ஆம் தேதிக்குப் பிறகு தொடங்கி, சுமார் 5 மாதங்கள் நீடிக்கும்.

இந்த முதல் இடைப்பருவமழைக் காலத்தை எடுத்துக்கொண்டால், தீவு முழுவதும் காற்று ஒரு குறிப்பிட்ட திசையிலிருந்து வீசுவதில்லை. காற்றின் வேகமும் மிகவும் குறைவாக இருக்கும்.

மேலும், இந்த நேரத்தில் தீவில் சூரியன் அதன் உச்சத்தில் இருக்கும். அத்துடன், மேகங்கள் குறைவாக இருப்பதால், நமக்கு நேரடி சூரிய வெப்பம் கிடைக்கிறது.

கடல் வெப்பமடைகிறது, நிலம் வெப்பமடைகிறது, அவ்வாறு வெப்பமடையும்போது, ​​கடலிலிருந்தும் நிலத்திலிருந்தும் வெப்ப அலைகள் வெளிப்படுகின்றன. அப்போது வளிமண்டலம் மிகவும் வெப்பமடைகிறது.

பொதுவாக, மற்ற மாதங்களுடன் ஒப்பிடும்போது ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் வெப்பமாக இருக்கும். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களும் தாங்க முடியாத அளவுக்கு வெப்பமாகத் தொடர்கின்றன.

இந்தக் காலநிலை மாற்றத்தால் இது அதிகரித்துள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் தீவின் பல பகுதிகளில் கடுமையான வெப்ப அலை பாதிப்புகள் ஏற்படும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

பொதுவாக, ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில் மழை குறைவாக இருக்கும். ஆனால் இந்தச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டால், மழை பெருமளவு குறையும், அதாவது வறட்சி போன்ற நிலை ஏற்படலாம்.

ஆனால் இந்த நிலையில், இரண்டாவது இடைப்பருவமழை, அதாவது அக்டோபர் – நவம்பர் மாதங்களில், பின்னர் நவம்பரில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும், அப்போது மழை மீண்டும் அதிகரிக்கலாம். இந்த எல் நினோ சூழலில், மழை குறைவதை நாம் எதிர்பார்க்கலாம்.

இன்று, மாலை நேரங்களில் வெப்பநிலை அதிகரிக்கும். பிற்பகல் 3 மணியளவில் வெப்பநிலை உயரும்.

இந்த நாட்களில், மத்திய மாகாணம் மற்றும் பதுளை மாவட்டத்தைத் தவிர, மற்ற எல்லா இடங்களிலும் வெப்பக் குறியீடு மனித உடலால் உணரக்கூடிய அளவில் உள்ளது. எனவே அவர்கள் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்.

குறிப்பாக காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரையிலான நேரம் மிகவும் கடினமானது. அந்த நேரத்தில், விளையாட்டு வீரர்கள் அல்லது வேலை செய்பவர்கள் வெளியில் இருக்க வேண்டாம் என்று நாங்கள் அறிவுறுத்துகிறோம்.

முடிந்தவரை அதிக தண்ணீர் அல்லது திரவங்களை அருந்தவும், வெளியில் செல்லும்போது அணியும் ஆடைகள் வெளிர் நிறத்தில் இருக்க வேண்டும்.

குறிப்பாக சிறு குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வெளியே செல்வதை தவிர்த்து நிழலான இடத்தில் இருப்பது சிறந்தது என குறிப்பிட்டுள்ளார்.

புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புக்களை தவிர்க்குமாறு கோரிக்கை!!

வாரத்தின் ஒவ்வொரு புதன்கிழமையும் அனைத்து வகையான மேலதிக வகுப்புக்களையும் இடைநிறுத்துமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இருப்பினும், இது எவ்வகையிலும் ஒரு கட்டாய உத்தரவு அல்ல என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புக்களை நடத்துவது தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் நிலை குறித்து வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசிய சேவைகளுக்கு அதிக இடமளித்தல் மற்றும் எரிபொருள் பயன்பாட்டை பாதுகாப்பான முறையில் முகாமைத்துவம் செய்யும் நோக்கில் அரசாங்கத்தினால் அண்மையில் சில விசேட தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இதற்கமைய, மறு அறிவித்தல் வரை ஒவ்வொரு புதன்கிழமையும் அரச அலுவலகங்களுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை அரச கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் அதிகாரசபைகளுக்கும் பொருந்தும்.

குறித்த தீர்மானம் கல்வித்துறைக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அரச, அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகள், முன்பள்ளிகள், பிரிவெனாக்கள், தொழிற்பயிற்சி மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அனைத்து அரச விழாக்களையும் தற்காலிகமாக நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், தனியார் துறையினர் முடிந்தவரை ‘ஒன்லைன்’ முறையில் ஊழியர்களை பணியில் அமர்த்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், சுகாதாரம், வங்கி, மின்சாரம், நீர், துறைமுகம், சுங்கம் மற்றும் விமான சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த விடுமுறை முறைமை பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

யாழ்ப்பாண வைத்தியசாலையில் வைத்தியர் இல்லை : மயங்கிய மாணவன் வாசலில் காத்திருந்த பரிதாபம்!!

யாழ்ப்பாணம் இளவாலை பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர் இல்லாத காரணத்தால் மயக்கமுற்ற பாடசாலை மாணவனுக்கு சிகிச்சை வழங்க முடியாது என தெரிவித்த நிலையில் மாணவன் வாசலில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்றையதினம்(26.03.2026) இளவாலைப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் மயங்கி விழுந்துள்ளான்.

அருகில் உள்ள பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு வைத்தியர் இல்லை எனவும் இரண்டு மணிக்கு பின்னரே வருகை தருவார் என வைத்தியசாலை ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மாணவனின் நிலை கருதி தாதியர் ஒருவரை முதலுதவி செய்யுமாறு ஆசிரியர் ஒருவர் கேட்ட நிலையில் மாணவனுக்கு ஏதாவது நடந்தால் தமக்கு பொறுப்பாயிடும் செய்ய மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

மாணவனை அனுப்புவதற்கு ஆம்புலன்ஸ் வண்டி ஏதாவது ஒழுங்கு செய்து தாருங்கள் என கேட்ட நிலையில் அதுவும் தம்மிடம் இல்லை வேறு ஆம்புலன்ஸ் வண்டிகளும் இங்கு வராது என கூறியுள்ளார்.

வேறு வழி இன்றி மயக்கமடைந்த மாணவனை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இத்தாலியில் பணியாற்றிய இலங்கையரான பொலிஸ் அதிகாரி மர்மமான முறையில் மரணம்!!

இத்தாலிய பொலிஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த ஒரே இலங்கை அதிகாரியான ஷெஹான் பெர்னாண்டோ, மிலனில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வென்னப்புவ, தல்டேனாவைச் சேர்ந்த 27 வயதான ஷெஹான், மிலனில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஷெஹான் பெர்னாண்டோவின் சடலம், அவரது பணித் துப்பாக்கியுடன் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஷெஹான் தனது பணித் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டாரா? அல்லது இது கொலையா? என இத்தாலிய பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

ஷெஹான் பெர்னாண்டோ, இத்தாலிய பொலிஸ் மற்றும் அந்நாட்டு மக்களிடையே மதிக்கப்பட்ட ஒரு அதிகாரியாக இருந்தார்.

இத்தாலிய பொலிஸ் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரே இலங்கையர் அவர் என்பதால், அவரது மரணம் இத்தாலிய அதிகாரிகளையும், அந்நாட்டில் உள்ள இலங்கை சமூகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அவரது பெற்றோரும் இத்தாலியில் வசித்து வருகின்றனர், அவர்களும் தங்கள் மகனின் இழப்பால் ஆழ்ந்த அதிர்ச்சியில் உள்ளனர். ஷெஹான் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்குகள் நாளை இத்தாலியின் மிலனில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

அதிவேக வீதியில் பற்றி எரிந்த சொகுசு பேருந்து!!

கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த பயணிகள் போக்குவரத்து சொகுசு பேருந்து ஒன்று, தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்ன இடைமாறல் பகுதிக்கு அருகில் தீப்பிடித்து எறிந்துள்ளது.

இந்த சம்பவம் இன்று(27.03.2026) பிற்பகல் 01.55 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

இந்த தீ விபத்தில், பேருந்து முழுமையாக தீக்கிரையாகியுள்ளது. தீ விபத்தினால் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

மே மாதம் வரை கடும் வெப்பம் தொடரும் : பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!!

தற்போது நிலவும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவிக்கையில், தென்மேல் பருவக்காற்று மே மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளதால், அதுவரை நிலவும் வெப்பமான வானிலை அதன் பின்னரே ஓரளவு குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.

தற்போதைய சூழலில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெப்பமான வானிலை அதிகமாகக் காணப்படும். குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் வெப்பம் நிலவும் என அவர் தெரிவித்தார்.

தற்போது முதலாவது இடைப்பருவப் பெயர்ச்சிக் காலம் ஆரம்பமாகியுள்ளது. இந்த காலப்பகுதியில் குறிப்பிட்ட திசையிலிருந்து காற்று வீசாது என்பதுடன், காற்றின் வேகமும் மிகக் குறைவாகவே இருக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.

இக்காலப்பகுதியில் சூரியன் இலங்கைக்கு நேர் உச்சியில் காணப்படுவதாலும், மேகமூட்டம் குறைவாக இருப்பதாலும் கடல் மற்றும் நிலப்பரப்பு வெப்பமடைந்து வெப்ப அலைகளை வெளியிடுகின்றன.

இதன் மூலம் வளிமண்டலம் மேலும் வெப்பமடைகிறது. தினமும் முற்பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரையிலான காலப்பகுதியில் வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும்.

எனவே, அந்த நேரத்தில் வெளிப்புறச் செயல்பாடுகளை முடிந்தவரை தவிர்த்துக்கொள்ளுமாறும், அடிக்கடி நீர் அருந்துமாறும் அவர் அறிவுறுத்தினார்.

 

திருமணமான 4 மாதங்களில் சோகம் : உடல் உறுப்பு தானம் செய்த புதுமணப் பெண்ணுக்கு அரசு மரியாதை!!

இருசக்கர வாகன விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த வேலூர் இளம்பெண் நர்மதாவின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. அவரது தியாகத்தைப் போற்றும் வகையில் தமிழக அரசு சார்பில் அவருக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

வேலூர் மாவட்டம் கருகம்புத்தூரைச் சேர்ந்த நர்மதா (24) என்பவருக்கும், சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் திருவேங்கடம் (27) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.

கடந்த 21-ஆம் தேதி, சென்னையில் இருந்து ராணிப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றனர்.

காஞ்சிபுரம் அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாகச் சரக்கு வாகனம் ஒன்றின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் திருவேங்கடத்திற்கு எலும்பு முறிவு ஏற்பட, நர்மதாவிற்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 24-03-2026 அன்று நர்மதா மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

தனது மகளின் கனவுகள் சிதைந்த போதிலும், மற்றவர்களின் வாழ்வாவது மலரட்டும் என்ற உயரிய நோக்கில் அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்ய உறவினர்கள் முன்வந்தனர்.

இதயம், சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டுத் தேவையான நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டன.

உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் இறுதிச் சடங்கிற்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பின்படி, வேலூர் கருகம்புத்தூரில் வைக்கப்பட்டிருந்த நர்மதாவின் உடலுக்கு வேலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார் மலர்வளையம் வைத்து அரசு மரியாதை செலுத்தினார்.

தனது வாழ்வின் வசந்த காலத்தைத் தொடங்கும் முன்பே விபத்தில் மறைந்த நர்மதா, மறைந்தும் வாழும் ஒரு முன்னுதாரணமாக மாறியுள்ளார்.

விமான நிலையத்தில் இலங்கை பயணியின் பொதியை சோதனையிட்ட அதிகாரிகள் அதிர்ச்சி!!

இன்று (27) அதிகாலை , 38 அரிய வகை செல்லப்பிராணிகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்த முயன்ற இலங்கை பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி, திகனவைச் சேர்ந்த 56 வயதான சந்தேக நபர் இன்று அதிகாலை பெங்கோக்கிலிருந்து வந்தடைந்தபோது, ​​பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் அவரை வழிமறித்து சோதனையிட்டனர்.

அவரது பயணப் பைகளில் கினி எலிகள், அணில்கள், புறாக்கள், சுகர் கிளைடர்ஸ் (Sugar Gliders) மற்றும் முள்ளம்பன்றிகள் ஆகியவை அவரிடமிருந்து இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விசாரணையைத் தொடர்ந்து, சுங்கத்துறை சந்தேக நபருக்கு 2,50,000 ரூபா அபராதம் விதித்தது. அத்துடன் பறிமுதல் செய்யப்பட்ட விலங்குகள் பின்னர் பங்கொக்கிற்குத் திருப்பி அனுப்பப்படுவதற்காக தாய் ஏர்வேஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

 

காருக்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட மருத்துவ மாணவி : தந்தையின் குற்றச்சாட்டு!!

இந்தியாவின் ஹரியானா மாநில மாணவி ஒருவர், தான் வேலை செய்துவந்த மருத்துவமனையின் அருகில் தனது காருக்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

ஹரியானா மாநிலத்திலுள்ள, அம்பாலா என்னுமிடத்தைச் சேர்ந்த 26 வயது இளம்பெண்ணொருவர் உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள டெஹ்ராடூனில் மருத்துவம் பயின்றுவந்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை இரவு தன் தந்தையை அழைத்த அவர் பேசும்போது கவலையாக இருந்ததை கவனித்த அவரது தந்தை, பின்னர் அவரை தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் பதிலளிக்காததால் மகளைத் தேடி புறப்பட்டுள்ளார்.

புதன்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் மகள் தங்கியிருந்த இடத்தை அடைந்த அவர், தன் மகளைத் தேடியும் அவர் கிடைக்காததால் அவர் வேலை செய்யும் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

அப்போது, அந்த மருத்துவமனையின் அருகே நிறுத்தப்பட்டிருந்த அந்த இளம்பெண்ணின் காருக்குள் அவர் சுயநினைவற்றுக் கிடப்பதைக் கண்டுள்ளார் அவரது தந்தை.

கார் கண்ணாடியை உடைத்து கதவைத் திறந்து அவர் தனது மகளை மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்ல, அந்த இளம்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

தனது மகள் மரணத்தைத் தொடர்ந்து, தன் மகளுடைய துறைத்தலைவர் அவருக்கு கடந்த நான்கு மாதங்களாக தொந்தரவு கொடுத்துவந்ததாக புகாரளித்துள்ளார் அந்த இளம்பெண்ணின் தந்தை.

ஆனால், பொலிசார் புகார் பதிவு செய்துள்ளார்களே தவிர அந்த நபர் மீது வழக்குப் பதியவில்லை. காரணம், ஏற்கனவே அந்த இளம்பெண் மன நல பாதிப்பு ஒன்றிற்காக சிகிச்சை பெற்றுவந்ததாகவும், கடந்த டிசம்பர் மாதம், அவர் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொள்ள முயன்றதாகவும் மருத்துவக்கல்லூரி கூறியுள்ளது.

ஆகவே, பொலிசார் அந்த இளம்பெண்ணின் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

அர்ச்சுனா இராமநாதனின் நாடாளுமன்ற உறுப்புரிமை வாதத்திற்கான திகதியை அறிவித்த மேன்முறையீட்டு நீதிமன்றம்!!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து பதவி வகிப்பதற்கான தகுதியை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான வாதங்களுக்கான திகதியை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று(26.03.2026) அறிவித்துள்ளது.

நீதிபதி மாயாதுன்ன கொரியா மற்றும் நீதிபதி மகேன் கோபல்லாவா ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வின் முன் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் எதிராக சமர்ப்பிக்கப்பட்ட மனுவை அபிநவ நிவாஹல் பெரமுனவின் தலைவர் ஓசலா ஹெரத் தாக்கல் செய்திருந்தார்.

அதாவது, நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன், அரசாங்க மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றி வந்தபோதே, சமீபத்திய பொதுத் தேர்தலுக்கான தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்ததாக அவர் குற்றம் சாட்டுகிறார்.

அரசாங்கப் பணியிலிருந்து முதலில் விலகாமல் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வது, நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் விதிகளை மீறுவதாகும் என்றும் மனுதாரர் வாதிட்டுள்ளார்.

முதல் பிரதிவாதியான நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர், தனது ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய மேலும் அவகாசம் கோரியதோடு, நாடாளுமன்ற உறுப்பினருக்கு அவரது தனிப்பட்ட கோப்புக்கான அணுகல் இன்னும் வழங்கப்படவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அரசு சார்பில் முன்னிலையான அரச வழக்கறிஞர், தனிப்பட்ட கோப்பு தற்போது சம்பந்தப்பட்ட அமைச்சகத்திடம் இருப்பதாகவும், குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு முதல் பிரதிவாதி அந்த ஆவணங்களை அணுகலாம் என்றும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அர்ச்சுனா எம்.பி மீதான குற்றச்சாட்டு

முதல் பிரதிவாதி, காலந்தாழ்த்தும் தந்திரமாக மீண்டும் மீண்டும் அவகாசம் கோருவதாகவும், அந்தத் தாமதம் தனக்குச் சாதகமாக அமைவதாகவும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதனின் வழக்கறிஞர் இந்தக் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, முதல் பிரதிவாதி தனது ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்கு நீதிமன்றம் இறுதித் தேதியை வழங்கியதுடன், இந்த வழக்கை 2026 ஜூலை 2ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

மனுதாரர் ஓசல ஹெரத் சார்பில் வழக்கறிஞர் என்.கே. அசோக்பரனும், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனுக்காக வழக்கறிஞர் சேனானி தயரத்னவும் முன்னிலையாகியிருந்தார்கள் என்பதுடன், அரசு சார்பில் அரசு வழக்கறிஞர் பிரபாஷனி ஜெயசேகர முன்னிலையாகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் வாரங்களில் தீவிரமடையும் நிலைமை தேவையின்றி வீட்டிலிருந்து வெளியே வருவதை தவிர்க்குமாறு எச்சரிக்கை!!

பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பத்துடனான காலநிலை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கக்கூடும் என்பதால் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அவர் கூறியுள்ளார். கொழும்பில் இன்று (27.03.2026) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், குறிப்பாக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சூரியன் இலங்கைக்கு நேராக உச்சத்திருப்பதாலும், உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றங்களினாலும் இம்முறை வெப்பத்தின் தாக்கம் அதிகத்துள்ளது.

எதிர்வரும் வாரங்களில் இந்த வெப்ப நிலை மேலும் தீவிரமடையும் என வானிலை ஆராய்சி மத்திய நிலையம் எதிர்வு கூறியுள்ளது. ஆகையால் பொதுமக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளின் போது வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க அதிக கவனம் செலுத்த வேண்டும்.

குறிப்பாக காலை 11.00 மணி முதல் மாலை 3.00 மணி வரையிலான காலப்பகுதியில் சூழலில் அதிக வெப்பம் நிலவுவதால், அத்தியாவசிய தேவைகளின்றி வீட்டிலிருந்தோ அல்லது கட்டடங்களில் இருந்தோ வெளியில் வந்து நடமாடுவதை தவிர்ப்பது நல்லது.

உடலில் ஏற்படுக்கூடிய நீரிழப்பைத் தடுக்க அதிகளவு நீர் அருந்த வேண்டும். சாதாரண நீரை விடவும் ஜீவனி அல்லது உப்பு கலந்த திரவ ஆகாரங்களை உட்கொள்ளலாம்.

மேலும் கடும் வெயிலில் வேலை செய்பவர்கள் வெப்பத்தைப் பிரதிபலிக்கக்கூடிய வெள்ளை அல்லது இளநிறத்திலான ஆடைகளை அணிவதுடன், தொப்பிகளைப் பயன்படுத்துவதன் வியர்வை வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தலாம்.

தற்போது பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகள் மற்றும் இல்ல விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருவதால் சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் குறித்தும் அதிக அவதானம் செலுத்த வேண்டும்.

நீண்ட நேரம் வெயிலில் இருப்பவர்களுக்குத் தசைப்பிடிப்பு, வாந்தி அல்லது மயக்க நிலை போன்ற அறிகுறிகள் தென்படின் உடனடியாக தகுதியான வைத்தியரை நாடுமாறு கோருகிறேன்.

சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் நீரிழிவு, சிறுநீரக பாதிப்பு போன்ற நீண்டகால நோய்களுக்காக சிகிச்சை பெறுபவர்களும் இந்த வெப்பமான காலநிலையால் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளது.

ஆகையால் பாடசாலை விளையாட்டு நிகழ்வுகளைத் திட்டமிடும் போது முறையான மருத்துவ வசதிகளுடன் அவற்றை முன்னெடுப்பது பாடசாலை நிர்வாகத்தினரின் பொறுப்பாகும் என்றார்.

குவைத்தின் வர்த்தகத் துறைமுகம் மீது தாக்குதல் : அவசரகால நிலை நடைமுறை!!

குவைத்தின் பிரதான வர்த்தகத் துறைமுகம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் துறைமுக அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில், சுவைக் துறைமுகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

ஆரம்பகட்ட அறிக்கைகளின்படி, இந்தத் தாக்குதலினால் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துறைமுகத்தில் தற்போது அவசரகால நிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

 

நாய் கொண்டு வந்த பொருளால் சிறுவன் வைத்தியசாலையில்!!

பல்லேவெல – பந்துராகொட பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற விசித்திரமான சம்பவத்தில், நாய் கொண்டு வந்த பந்து போன்ற பொருள் வெடித்ததில் சிறுவன் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பல்லேவெல பொலிஸார் தெரிவித்ததாவது, சிறுவன் வீட்டில் இருந்தபோது, அவர்களது வளர்ப்பு நாய் பந்து போன்ற பொருளொன்றை கவ்விக்கொண்டு வீட்டிற்குள் வந்துள்ளது. அதனை சிறுவன் நாயிடமிருந்து எடுத்துக்கொண்டு விளையாடத் தொடங்கியுள்ளார்.

சிறுவன் விளையாடிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அந்தப் பொருள் வெடித்துள்ளது. வெடிப்பில் காயமடைந்த சிறுவன் உடனடியாக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

சம்பவம் தொடர்பாக பல்லேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.