இலங்கையில் குறைந்த வேகத்தில் கிடுகிடுவென உயரும் தங்கத்தின் விலை : மீண்டும் 4 இலட்சத்தை நெருங்கும் நிலை!!

கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் (26.03.2026) 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 393000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 361500 ரூபாவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4400 முதல் 4500 டொலர்களாக பதிவாகியுள்ளது.

சமீபத்திய வர்த்தகத்தில் அதிக ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டாலும், தினசரி அதிகபட்சமாக $ 4,544 வரையிலும், குறைந்தபட்சமாக $ 4,415 வரையிலும் விலை சரிந்துள்ளது.

எனினும் அண்மையில் தங்கத்தின் விலையானது ஐயாயிரம் டொலர்களை கடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

இஸ்ரேலிலிருந்து தனியாக இலங்கை வந்த பெண் : பயணத்தின் பயங்கர அனுபவங்கள்!!

மத்திய கிழக்கில் உக்கிர போர் நடந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இஸ்ரேலில் பணியாற்றிய இலங்கைப் பெண் ஒருவர் தனியாக இலங்கைக்கு வந்த தனது பயங்கர அனுபவம் தொடர்பில் தெரிவித்த கருத்து.

நான் முக்கியான தேவைமித்தமே புறப்பட்டு வந்தேன். நான் இஸ்ரேலில் இருந்து இலங்கைக்கு வருவது எனது கணவர் பிள்ளைகள் மட்டுமே அறிவர். என்னிடம் இருக்கும் நண்பர்களுக்கு கூட அறிவிக்கவில்லை.ஏனென்றால் அவர்கள் போக விடமாட்டார்கள்.

அவ்வளவு பயங்கரமான பயணமாகும்.நான் 13 வருடங்கள் இஸ்ரேலில் தொழில் செய்கிறேன்.எந்த யுத்தத்திலும் நான் இலங்கைக்கு வரவில்லை.

யுத்தம் நடந்தாலும் மக்கள் தங்களின் அன்றாடம் பணிகளை செய்து கொண்டிருக்கும் அளவுக்கு பாதுகாப்பு இருக்கிறது.

இப்போது பஸ் நிறுத்தும் இடத்திலும் பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜோர்தான எல்லை அல்லது எகிப்து எல்லையூடாகவே வர முடியும்.

ஆனால் எகிப்து எல்லையூடாக வருவது கஷ்டமான காரியமாகும்.எமது நாட்டு சில இளைஞர்கள் அவர்களில் தொழில் வீசா முடிவடைந்த நிலையில லெபனான் எல்லையூடாக செல்ல முயற்சித்தனர்.

அவர்கள் திரும்பி இஸ்ரேலுக்கு வருபவர்கள் அல்ல.அவர்கள் பிரயாண கஷ்டங்களை அனுபவித்தனர். அவர்களுக்கு தூதுவராலயம் உதவி செய்தது.

நான் ஜோர்தான் எல்லையூடாக தான் வந்தேன்.இலங்கைக்கு வருவதற்கு தூதுவராலயம் ஊடாக வீசாவுக்கு நேரடியாக விண்ணப்பிக்க முடியாது.

நான் முகவர் ஊடாகவே விண்ணப்பித்தேன்.72 மணித்தியாலத்திற்குள் வீசா கிடைத்தது.இலங்கையர்கள் அதிகமானோர் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு வருவதற்காக வீசாவுக்கு விண்ணப்பித்திருந்தனர் ஆனால் அனைத்தும் தள்ளுப்படி செய்யப்பட்டுள்ளது.

இலங்கையர் யாரும் முடங்கி இருக்கவில்லை.புத்தாண்டுக்கு வருவதற்கு முயற்சித்தவர்களுக்கே முடியாமல் போனது. நேற்று முன்தினம் 12 மணிக்கு இலங்கைக்கு வந்தேன்.ஆனால் ஒரு பெண்ணாக பயங்கர அனுபவமாக இருந்தது.

நான் இஸ்ரேலின் வடக்கு பகுதியில் தான் இருந்தேன். லெபனானுக்கு தெற்கே.நான் இருந்த இடத்திற்கு அருகில் விமானப் படைத்தளம் அமைந்துள்ளது.

கபீர் விமானங்களின் சத்தத்தில் காது கேட்காமல் போய்விட்டது.இன்னும் தெளிவாக கேட்ட முடியாமல் இருக்கிறது.ஏவுகணைகள் சத்தம் கேட்பதில்லை.

து நாட்டுக்குள் வருவதற்கு முன்னேரே வெடித்து விடும்.இலங்கையில் இருந்து சென்ற ஊழியர்கள் எவ்வித தடையும் இன்றி தொழில் செய்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

குளிர்சாதனப்பெட்டிக்குள் 4 மாதக் கருவை மறைத்து வைத்த தம்பதி!!

இந்தியாவின் கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், குளிர்சாதனப்பெட்டிக்குள் (Fridge) மூன்று மாதக் கருவை இளம் தம்பதி மறைத்து வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கேரளாவைச் சேர்ந்த தம்பதியினரிடம் தற்போது தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பெங்களூருவில் வசித்து வரும் 23 வயது இளைஞரும், 28 வயது பெண்ணும் கடந்த ஓராண்டாகத் திருமணம் செய்து ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இவர்களது வீட்டில் சந்தேகத்திற்கிடமான ஏதோ ஒன்று இருப்பதாகக் காவல்துறைக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, அந்த குறிப்பிட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது, வீட்டிலிருந்த குளிர்சாதனப்பெட்டியில் ஒரு பிளாஸ்டிக் பெட்டிக்குள், சுமார் 3 முதல் 4 மாதங்கள் வளர்ச்சியடைந்த நிலையிலிருந்த கரு ஒன்றைக் காவல்துறையினர் கண்டெடுத்தனர்.

விசாரணையின் போது, கடந்த மார்ச் 20ஆம் திகதி இரவு குறித்த பெண்ணுக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதாகவும், அப்போது கழிவறையில் வைத்துத் தானாகவே கருச்சிதைவு ஏற்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

செவிலியர் பயிற்சி பெற்று வரும் அந்தப் பெண், ஒரு கத்தரிக்கோல் கொண்டு தொப்புள் கொடியைத் தானே வெட்டியுள்ளார்.

பின்னர், அந்தக் கருவை என்ன செய்வதென்று தெரியாத காரணத்தால், அதனைப் பிளாஸ்டிக் பெட்டியில் வைத்து பிரீஸருக்குள் மறைத்து வைத்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகச் சந்தேக மரணம் மற்றும் சட்டவிரோதமாகக் கருவை மறைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விமானப்பயணச் சீட்டுகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

விமானப்பயணச் சீட்டுகள் தொடர்பில் பொலிஸார் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமூக ஊடகங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் விமானப்பயணச் சீட்டு மோசடிகள் குறித்து இதன்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வழக்கத்திற்கு மாறாக குறைந்த விலைகள் அல்லது விசேட தள்ளுபடி விலைகளில் விமானப்பயணச் சீட்டுக்களை வழங்குவதாகக் கூறி, பொதுமக்களை ஏமாற்றி பணம் மற்றும் தனிப்பட்ட தகவல்களை திருடும் நோக்கில் இவ்வாறான போலி விளம்பரங்கள் பரப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான மோசடிகளில் சிக்கிப் பாதிக்கப்படாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்:

அதன்படி, உறுதிப்படுத்தப்படாத அல்லது சந்தேகத்திற்குரிய இணையத்தள இணைப்புகளை அழுத்துவதைத் தவிர்க்கவும். இவ்வாறான தளங்கள் உங்களது இரகசியத் தகவல்களைத் திருடப் பயன்படுத்தப்படலாம்.

அத்துடன், கடவுச்சொற்கள் அல்லது ஒருமுறை பயன்படுத்தும் இரகசியக் குறியீடுகளை எக்காரணம் கொண்டும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். உத்தியோகபூர்வ விமான நிறுவனங்கள் தொலைபேசி அழைப்புகள் ஊடாக இவ்வாறான தகவல்களைக் கோருவதில்லை.

ஏதேனும் சலுகைகள் அறிவிக்கப்பட்டால், அவற்றை அந்தந்த விமான நிறுவனங்களின் உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் அல்லது உறுதிப்படுத்தப்பட்ட சமூக ஊடகப் பக்கங்கள் ஊடாகச் சரிபார்க்கவும்.

மேலும், பயணச் சீட்டுக்களைக் கொள்வனவு செய்வதற்கு முன்னர், அவை பதிவுசெய்யப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

இவ்வாறான மோசடிகள் குறித்து விழிப்புடன் செயற்படுமாறும், நிதி இழப்புகளைத் தவிர்க்க ஒத்துழைக்குமாறும் இலங்கை பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

மின்சாரம் மற்றும் எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை!!

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மின்சாரம் மற்றும் எரிபொருள் பயன்பாட்டை சிக்கனமாக பயன்படுத்துமாறு பிரதேச சபை தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட அலுவலகங்கள், நூலகங்கள் மற்றும் பொது விளையாட்டு மைதானங்களில் இதனை கடைப்பிடிக்குமாறும் உத்தியோகத்தர்கள்,பொதுமக்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் வளங்கள் வீணடிக்கப்படுவதைத் தடுத்து, சபையின் நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள முக்கிய வழிகாட்டல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அலுவலக மற்றும் நூலகப் பயன்பாட்டில் தேவையற்ற நேரங்களில் மின்விளக்குகள் மற்றும் மின்விசிறிகளை அணைத்து வைக்க வேண்டும்.

இயற்கை வெளிச்சத்தைப் பயன்படுத்தக்கூடிய இடங்களில் மின் பாவனையைக் குறைக்க உத்தியோகத்தர்கள் பழக வேண்டும் என்பதுடன் விளையாட்டு மைதானங்களில் பொது விளையாட்டு

மைதானங்களில் இரவு நேர மின்விளக்குகளை (Floodlights) அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பயன்படுத்த வேண்டும். நிகழ்வுகள் முடிந்தவுடன் உடனடியாக அவற்றை அணைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் எரிபொருள் பயன்பாட்டின் போது பிரதேச சபைக்குச் சொந்தமான வாகனங்கள் மற்றும் இயந்திரங்களைப் பயன்படுத்தும்போது தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்

என்பதுடன் பிரதேச சபையின் இந்தச் சிக்கன நடவடிக்கைகளுக்குத் துறைசார் உத்தியோகத்தர்கள் மாத்திரமன்றி பொதுமக்களும்,

விளையாட்டுப் கழகங்களும் தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு!!

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகள் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்பு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தேவையான செயல்முறைகள் தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே நேற்று முன்தினம் (24) உறுதிப்படுத்தியுள்ளார்.

நவம்பர் 10ஆம் திகதி ஆரம்பமான உயர்தர பரீட்சையின் சில பாடங்கள், டித்வா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, ஜனவரி 12 முதல் 20 வரை மீண்டும் நடத்தப்பட்டன. இதற்கமையஈ அனைத்து பரீட்சைகளும் 16ஆம் திகதி நிறைவடைந்தன.

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சுமார் மூன்று லட்சம் பரீட்சார்த்திகள் பங்கேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், அடுத்த ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உயர் தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நேற்று முதல் கோரப்பட்டுள்ளதுடன், கடைசி திகதி அடுத்த மாதம் 24ஆம் திகதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் சடுதியாக குறைக்கப்படவுள்ள 600 பொருட்களின் விலைகள்!!

600 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர்.எம்.ஜயவர்தன அறிவித்துள்ளார்.

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த விசேட விலை குறைப்புத் திட்டத்தின் கீழ் உள்ள பொருட்கள் அனைத்தும் நாடு முழுவதும் உள்ள சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக பொது மக்களுக்குக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பண்டிகை காலங்களில் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களிடமிருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதே இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம்.

பண்டிகை காலத்தில் எவ்வித தட்டுப்பாடுமின்றி அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் விலை உயர்வு மற்றும் அதன் எதிரொலியாக சில பொருட்களின் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ள இந்த நிலையில் குறித்த அறிவிப்பானது மக்களுக்கு நிம்மதியளிக்கும் என நம்பப்படுகிறது.

வவுனியா உட்பட பல மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

இலங்கையின் பல பகுதிகளில் இன்று (26.3.2026) வெப்பநிலையானது ‘எச்சரிக்கை’ மட்டத்திற்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அனுராதபுரம், மன்னார், வவுனியா மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் இந்த அதீத வெப்பம் உணரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நேரம் வெயிலில் இருப்பதோ அல்லது வெளிப்புற வேலைகளில் ஈடுபடுவதோ கடுமையான உடல் சோர்வை ஏற்படுத்தும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் தொடர்ந்து இருப்பது தசைப்பிடிப்பு (Heat Cramps) போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் போதியளவு நீர் அருந்தி உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருக்குமாறும், தேவையற்ற கடினமான வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்பாக முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பில் மேலதிக அவதானம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எரிபொருள் QR குறியீடு மோசடி பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!!

நாட்டில் கியூஆர் (QR) அமைப்பின் கீழ் எரிபொருள் விநியோகிக்கப்பட்டாலும், பொதுமக்கள் தேவையற்ற முறையில் எரிபொருளைப் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வசந்த அதுகோரல அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், நெருக்கடியாக இக்காலக்கட்டத்தில் அரசியல்வாதிகளும், பொதுமக்களும் பொய்யான அறிக்கைகளை வெளியிடுவதை தவிர்க்குமாறும் பேராசிரியர் வசந்த அதுகோரல கூறினார்.

அதன்படி, பொதுமக்கள் எரிபொருள் நுகர்வை தொடர்ந்து குறைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை,எரிபொருள் கியூஆர் குறியீட்டு முறைக்காக 6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பதிவு செய்துள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, எரிபொருள் நிரப்புவதற்கான கியூஆர் குறியீட்டை மோசடியாக உருவாக்கிய பலர் தொடர்பில் தகவல் கிடைக்கப்பெற்றமைக்கமைய குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

தங்கத்தின் விலையில் சரமாரியான மாற்றங்கள் : தளம்பல் நிலையிலேயே தொடரும் பெறுமதி!!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று (26) வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று 125.39 அமெரிக்க டொலர்களால் (2.75%) சரிவடைந்துள்ளது.

இதன்மூலம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் தற்போதைய விலை 4,428.17 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. கடந்த ஒரு மாத காலப்பகுதியில் மட்டும் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 653.55 அமெரிக்க டொலர்களால் (12.55%) வீழ்ச்சியடைந்துள்ளது.

தற்போதைய இந்த திடீர் சரிவு தற்காலிகமான ஒன்றாகக் கருதப்பட்டாலும், கடந்த ஒரு ஆண்டு காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை இன்னும் 49.30 சதவீத உயர்விலேயே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இணைப்பு :  இலங்கையில் தங்கத்தின் விலையானது இன்று (26) குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் இன்று காலை 24 கரட் தங்கம் ஒரு பவுண் 393,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 5000 ரூபாயால் குறைக்கப்பட்டு 388,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

இன்று காலை 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 361,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 4500 ரூபாயால் குறைக்கப்பட்டு 357,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

முதலாம் இணைப்பு : கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் (26.03.2026) 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 393000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 361500 ரூபாவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4400 முதல் 4500 டொலர்களாக பதிவாகியுள்ளது.

சமீபத்திய வர்த்தகத்தில் அதிக ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டாலும், தினசரி அதிகபட்சமாக $ 4,544 வரையிலும், குறைந்தபட்சமாக $ 4,415 வரையிலும் விலை சரிந்துள்ளது.

எனினும் அண்மையில் தங்கத்தின் விலையானது ஐயாயிரம் டொலர்களை கடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் பாடலுக்கு நடனமாடிய ஆசிரியை பணி நீக்கம்!!

இந்தியாவில் ஏப்ரல் 23 ஆம் திகதி சட்டமன்ற தேர்தல் நடபெறவுள்ல நிலையில், தேர்தர்கள் சூடு பிடித்துள்ளது.

திமுக மற்றும் தவெக இடியில் கடும்போட்டி நிலவும் நிலையில், விஜய் பாடல்களை பாடவோ ஒலிபரப்பவோ கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் தஞ்சாவூர் ஒரத்தநாடு பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய விழாவில் நடனம் ஆடிய அரசு பள்ளி தலைமை ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள பின்னையூரை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (58). இவர் முன்பு சங்கரநாதர் குடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

தற்போது வெள்ளத்தேவன் விடுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஒரத்தநாடு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

இதில் கலந்து கொண்ட தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி, விழா மேடையில் ஒலிபரப்பப்பட்ட விஜய் திரைப்பட பாடலுக்கு நடனமாடினார். அவர் நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

ஒரு அரசியல் கட்சி நடத்தும் நிகழ்ச்சியில், அரசு பள்ளியின் தலைமை ஆசிரியையாக இருக்கும் ஒருவர் நடனமாடியதற்காக, கிருஷ்ணவேனி பணியிடை நீக்கம் செய்து பட்டுக்கோட்டை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மதியழகன் உத்தரவிட்டார்.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய விழாவில் பங்கேற்று நடனமாடியதால் அரசு பள்ளி தலைமை ஆசிரியை ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மட்டக்களப்பை தொடர்ந்து முல்லைத்தீவில் சம்பவம் : வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள் : பெண்ணுடன் ஐவர் கைது!!

மட்டக்களப்பு கொள்ளை சம்பவம் நாட்டை உலுக்கிய நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, மந்துவில் பகுதியில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட 5 சந்தேக நபர்களைப் புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மந்துவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த நகைகள் மற்றும் பணம் உட்பட சுமார் 56 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களைத் திருடிச் சென்றிருந்தனர்.

இது குறித்து புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

திருடப்பட்ட கைத்தொலைபேசி ஒன்றை அடிப்படையாகக் கொண்டு, முல்லைத்தீவு நீதவானின் அனுமதியுடன் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் முதலில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் ஏனைய நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

திருடப்பட்ட பணம் மற்றும் நகைகளைப் பயன்படுத்தி சந்தேக நபர்களால் கொள்வனவு செய்யப்பட்ட வாகனம் ஒன்று , இயந்திரம் இரண்டு உந்துருள்ளிகள் மற்றும் ஏனைய பெறுமதியான பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் மந்துவில் பகுதியைச் சேர்ந்த உறவினர்கள் என்பதுடன், இவர்கள் 2023 ஆம் ஆண்டு முதல் இரணைப்பாலை, மந்துவில், சிவநகர் மற்றும் பல பகுதிகளில் தொடர்ச்சியாகக் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களும் கடந்த 24 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளைப் புதுக்குடியிருப்பு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா ‘Kids Creative Art Centre’ மாணவர்களின் கலை வரலாற்றுச் சாதனை!!

வவுனியா மடுக்கந்த ஸ்ரீ தலதா விகாரையில் “Lord Buddha” ஓவியப் பயிலரங்கு (Paint Workshop) மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கலை வரலாற்றில் தடம் பதிக்கும் வகையில் அமைந்த இந்தப் பயிலரங்கில், மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் இணைந்து ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

இப் பயிலரங்கில் பங்குபற்றிய மாணவர்களுக்கு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான பௌத்த நீதித்துறையின் பிரதான சங்க நாயக்க தேரரால் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மாணவர்களால் மிகவும் கலைத்துவமான முறையில் உருவாக்கப்பட்ட புத்த பெருமானின் உருவச் சிலைகள், வவுனியா மடுக்கந்த ஸ்ரீ தலதா விகாரையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு பாழடைந்த கிணறு விவகாரம் : வேலையில்லாது சொத்து கொள்வனவு : விசாரணை வளையத்துள் உறவினர்கள்!!

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை, நெல்லிக்காடு வயல் பகுதியில் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண்ணொருவர் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் அந்த சம்பவத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவினர்கள் தொடர்பாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் விசாரணை அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி இந்த தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள 3 சந்தேகநபர்களின் உறவினர்கள் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாக விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

குறிப்பாக, சந்தேக நபர்களின் உறவினர்கள் சிலர் எந்தவித பணிகளுக்கும் செல்லாது சொத்துக்களைக் கொள்வனவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதற்கமைய, முச்சக்கர வண்டி மற்றும் வீடுகளைக் கொள்வனவு செய்வதற்கு அவர்கள் முயற்சித்துள்ளதாக விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

இந்த நிலையில், இவ்வாறான சொத்துக்களைக் கொள்வனவு செய்வதற்கு அவர்களுக்கு எவ்வாறு பணம் கிடைத்தது, அவர்களும் சந்தேக நபர்களுடன் தொடர்புப்பட்டுள்ளனரா என்பது குறித்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முச்சக்கர வண்டி சாரதியான பிரதான சந்தேக நபர், நிதி கொடுக்கல் வாங்கல்களிலும் மோசடிகளைச் செய்துள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதற்கமைய, தடுத்துவைக்கப்பட்டுள்ள உறவினர்களும் பல சம்பவங்களுடன் தொடர்புப்பட்டிருக்கலாம் என்ற கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

 

ஈழத்தமிழர்கள் பெருமை : பிரான்ஸில் துணை மேயரானார் யாழ்ப்பாண தமிழ் பெண்!!

பிரான்ஸின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரின் துணை மேயராக புலம்பெயர் தமிழரான யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட ஆதித்யா ஆனந்தராசா பொறுப்பேற்றுக்கொண்டார்.

பிரான்ஸ் நாட்டின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரில் நடைபெற்ற நகராட்சி தேர்தலைத் தொடர்ந்து, இலங்கை பூர்வீகத்தைக்கொண்ட ஆதித்யா ஆனந்தராசா, துணை மேயராக தனது பதவிப் பொறுப்புகளை நேற்று திங்கட்கிழமை ( 23 ) அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டார்.

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த ஆதித்யா ஆனந்தராசா, வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு பெருமையை ஏற்படுத்தும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் கொண்ட ஆதித்யா ஆனந்தராசா, 19 வயதிலேயே நகர மன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தவர்.

தொடர்ந்து பொதுச் சேவையில் ஈடுபட்டு, மக்களுடன் நெருக்கமாக செயல்பட்டதன் பலனாக தனது 25 ஆவது வயதில் ஆதித்யா ஆனந்தராசா துணை மேயர் பதவியை அடைந்துள்ளார்.

அவரது இந்த முன்னேற்றம், இளம் தலைமுறையினருக்கு அரசியல் மற்றும் பொதுச் சேவையில் ஈடுபட ஊக்கமளிக்கும் சிறந்த முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில் பல்துறை சமூகத்துடன் இணைந்து செயல்படுவதிலும், உள்ளூர் நிர்வாகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதிலும் அவர் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் இன்று வரலாறு காணாத உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை!!

இலங்கையில் தங்கத்தின் விலையானது நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (25) ஒரே நாளில் 8,000 ரூபாயால் அதிரடியாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் தளம்பல் நிலை மற்றும் உள்நாட்டில் தங்கத்திற்கான கேள்வி தீவிரமாக அதிகரித்துள்ளமையே இந்த வரலாறு காணாத விலை உயர்வுக்குக் காரணம் என வர்த்தக வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

அந்தவகையில், இலங்கையில் தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 393,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 361,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,188 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தைத் தெரிவு செய்து வருவதால், உள்நாட்டில் தங்கத்திற்கான தட்டுப்பாடு மற்றும் கேள்வி அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.