இலங்கைக்கு சுற்றுலா வந்த ஜேர்மன் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

அம்பலாங்கொடையில்..

அம்பலாங்கொடைக்கு வருகை தந்த 23 வயதுடைய ஜேர்மன் சுற்றுலாப் பயணி ஒருவர் கடற்கரையில் தனியாக சென்று கொண்டிருந்த போது வன்புணர்வு முயற்சியில் இருந்து தப்பியுள்ளார் என தெரியவருகின்றது.

இச் சம்பவம் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. அடையாளம் தெரியாத ஒரு நபர் திடீரென அவர் மீது பாய்ந்ததில் அவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதுடன் அதிர்ச்சியான நிலைக்கு சென்றுள்ளார்.

உள்ளூர் ஹோட்டலில் தங்கியிருந்த அவர், சம்பவம் நடந்தபோது அமைதியான கடற்கரை அமைப்பை அனுபவித்துக் கொண்டிருந்திருந்துள்ளார்.

அம்பலாங்கொடை காவல்துறையிடம் அவர் அளித்த வாக்குமூலத்தின்படி, தாக்குதல் நடத்திய நபர் எதிர்பாராதவிதமாக தன்னை அணுகி பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றார். அதைத் தொடர்ந்து தப்பிக்க நடந்த போராட்டத்தில், தனது மார்பு பகுதியில் காயம் இருந்ததாக தெரிவித்தார்.

ஹோட்டல் நிர்வாகம் உடனடி மருத்துவ உதவிவழங்கி அவரது காயங்களுக்கு சிகிச்சை அளித்தது. இதற்கிடையில், அம்பலாங்கொடை காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்வதற்கான முழுமையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அவர்கள் தற்போது பாதுகாப்பு காட்சிகளை மதிப்பாய்வு செய்து, சம்பவங்களை ஒன்றிணைத்து சந்தேக நபரை அடையாளம் காண விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

காதலித்து திருமணம் செய்த பெண்ணை கடத்திய குடும்பத்தினர்!!

வாணியம்பாடியில்..

வாணியம்பாடி அருகே பட்டியலின இளைஞரை காதலித்து திருமணம் செய்த பெண்ணை, உறவினர்கள் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தியாகு (21).

பட்டியலின இளைஞரான இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த நர்மதா என்ற பெண் காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதனையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 6ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய நர்மதா, காதலரைத் திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து, தங்கள் மகளைக் காணவில்லை என நர்மதாவின் பெற்றோர், அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், விசாரணை நடத்தி, காதல் ஜோடியை கடந்த டிசம்பர் 7ம் தேதி வாணியம்பாடி நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நீதிமன்றத்தில் நர்மதா கணவருடன் செல்ல விரும்புவதாக கூறினார். இதையடுத்து, அவர் மேஜர் என்பதால், கணவருடன் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், நர்மதாவின் குடும்பம் ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இருவரது உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம் என கூறப்பட்ட நிலையில், இருவரும் வெளியூர் சென்று வசித்து வந்தனர். இந்த சூழலில் நர்மதாவின் உறவினர்கள் தியாகுவையும், நர்மதாவையும் தீவிரமாகத் தேடியுள்ளனர்.

இது குறித்து அறிந்த இருவரும், 2 வாரங்களுக்கு முன்பு தங்கள் சொந்த ஊரான சங்கராபுரத்திற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, தியாகு வீட்டிற்கு வந்த நர்மதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், தியாகுவையும் அவரது பெற்றோரையும் தாக்கிவிட்டு, நர்மதாவை காரில் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, தியாகு அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில், தனது மனைவி நர்மதாவை அவரது தந்தை ராஜேந்திரன், அண்ணன்களான கோவிந்த ராஜ், பிரபு, ராஜேஷ் மற்றும் ஈச்சங்கால் ஊராட்சி மன்றத் தலைவர் ஏழுமலை ஆகியோர் காரில் கடத்திச் சென்று விட்டனர். மனைவியின் உயிருக்கு ஆபத்து இருப்பதால், அவரை உடனடியாக கண்டுபிடித்துத் தர வேண்டும் என அந்தப் புகாரில் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், நர்மதாவை கடத்திச் சென்ற அவரது தந்தை, அண்ணன் உள்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும், தனிப்படை அமைத்து அவர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், சங்கராபுரம் பகுதியில் எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

8 விமானங்கள், 700 கார்கள், ரூ 4000 கோடி அரண்மனை.. உலகிலேயே பெரும் பணக்கார குடும்பம் இவர்கள்!!

துபாயில்..

ஐக்கிய அமீரகத்தின் Al Nahyan குடும்பத்தினருக்கு சொந்தமாக துபாய் மாகாணத்தில் ரூ 4,078 கோடி மதிப்பில் அரண்மனை உள்ளது. இந்த குடும்பத்தின் முக்கிய உறுப்பினர் ஒருவரே தற்போது ஐக்கிய அமீரகத்தின் ஜனாதிபதியாக பொறுப்பில் உள்ளார். Al Nahyan குடும்பத்திற்கு சொந்தமாக 8 விமானங்கள் மற்றும் உலகிலேயே பணக்கார கால்பந்து அணியும் இவர்களுக்கு சொந்தம் என்றே கூறப்படுகிறது.

ஜனாதிபதி Sheikh Mohamed bin Zayed Al Nahyan என்பவருக்கு 18 சகோதரர்கள் மற்றும் 11 சகோதரிகள். மட்டுமின்றி, ஜனாதிபதிக்கு 9 பிள்ளைகளும் 18 பேரப்பிள்ளைகளும் உள்ளனர். உலகின் மொத்த எண்ணெய் இருப்புக்களில் 6 சதவிகிதம் இவர்களுக்கு சொந்தம் என்றே கூறப்படுகிறது.மட்டுமின்றி, Manchester City கால்பந்து அணியும் இவர்களுக்கு சொந்தம். உலகில் பிரபலமான பல நிறுவனங்களில் Al Nahyan குடும்பம் முதலீடு செய்துள்ளது. எலான் மஸ்கின் Space X நிறுவனத்திலும் இவர்கள் முதலீடு செய்துள்ளனர்.

அமீரக ஜனாதிபதியின் இளைய சகோதரரான Sheikh Hamad என்பவருக்கே பிரபலமான மற்றும் அரியவகை 700 கார்களின் சேகரிப்பு உள்ளது. Al Nahyan குடும்பம் அபுதாபி மாகாணத்தில் அமைந்துள்ள Qasr Al-Watan அரண்மனையில் வசித்து வருகிறது.

94 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த அரண்மனை போன்று மேலும் சில அரண்மனைகள் இந்த குடும்பத்திற்கு சொந்தமாக உள்ளது. ஜனாதிபதியின் சகோதரர் ஒருவர் முன்னெடுத்து நடத்தும் முதலீடு நிறுவனத்தின் சந்தை மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 28,000 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

தற்போதைய சந்தை மதிப்பு என்பது 235 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே கூறப்படுகிறது. Al Nahyan குடும்பத்திற்கு ஐக்கிய அமீரகம் மட்டுமின்றி, லண்டன் மற்றும் பாரிஸ் நகரங்களிலும் சொத்துக்கள் உள்ளது. 2008ல் தான் Al Nahyan குடும்பம் ரூ 2,122 கோடிக்கு Manchester City கால்பந்து அணியை வாங்கியுள்ளது.

கிளிநொச்சியில் கழிவு வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்!!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்னங்கண்டி பாடசாலைக்கு முன்பாக உள்ள கழிவு வாய்க்கால் ஒன்றிலேயே இளைஞனின் சடலம் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபரை நேற்று மாலை 7 மணியளவில் மக்கள் இறுதியாக அவதானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், குறித்த இளைஞன் இன்று(20) காலை சடலமாக காணப்படுவது அவதானிக்கப்பட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் மருதநகர் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன்,

சம்பவ இடத்தில் நீதவான் விசாரணைகளின் பின்னர் குற்றத்தடுப்பு பொலிசார் விசாரணையின் பின்னர் இளைஞனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மகன், மகளை ஏரியில் வீசிய தாய் எடுத்த விபரீத முடிவு!!

கர்நாடகவில்..

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏரியில் திடீரென 2 குழந்தைகள் ஒரு பெண்ணின் உடல் மிதந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் யார் என்பது குறித்து அக்கம்பக்கத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அத்துடன் தீயணைப்பு படையினர் உதவியுடன் ஏரியில் கிடந்த 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதலில் அவர்கள் யார்? எந்தப்பகுதியை சேர்ந்தவர்கள்? என்பது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை. பின்னர் இது குறித்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், ஏரியில் உயிரிழந்த சடலமாக மிதந்தவர்கள் சிந்தாமணி தாலுகா யாகவகோட்டையை சேர்ந்த மல்லிகார்ஜுன் மனைவி ராதா. இவருடன் அவர்களின் 4 வயது மகள் பூர்விதா மற்றும் 1½ வயது மகனும் என்பது உறுதி செய்யப்பட்டது.

ராதா எதற்காக தனது மகன்மற்றும் மகளை ஏரியில் வீசி கொன்றுவிட்டு அவரும் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதாவின் கணவர் மல்லிகார்ஜுனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வகுப்பில் படித்துக் கொண்டிருந்த மாணவர் திடீரென சரிந்து விழுந்து மரணம்!!

இந்தியாவில்..

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவர் ஒருவர், வகுப்பிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான மத்திய பிரதேசம், சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ராஜா லோதி (20). இவர் மத்தியப் பிரதேச அரசுப் பணியாளர் தேர்வாணையம் (MPPSC) தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்தார்.

அதாவது, இந்தூரில் மாநில சிவில் சர்வீஸ் தேர்வுக்கு பயிற்சி வகுப்பில் சேர்ந்து படிப்பில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில், வகுப்பறையில் நிமிர்ந்து உட்கார்ந்து படித்த லோகி திடீரென மார்பைப் பற்றிக் கொண்டு சில நொடிகளில் நாற்காலியில் இருந்து சரிந்து விழுந்தார்.

அப்போது, அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். இதில், இளைஞரின் மரணம் குறித்து சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாழில் நாய் குறுக்கே பாய்ந்ததால் பரிதாபமாக பறிபோன உயிர்!!

யாழ்ப்பாணம் நாவற்குழி செம்மணி வீதியுடாக முச்சக்கர வண்டியில் குடும்பத்துடன் பயணித்த நபர் ஒருவர் நாய் குறுக்கே பாய்ந்ததில் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மனைவி மற்றும் இரண்டு வயது ஆண் குழந்தை காயமடைந்துள்ளனர். இச் சம்பவம் நேற்று முன் தினம்(18) நாவற்குழி செம்மணி வீதியில் இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்த குறித்த இளம் குடும்பத்தர் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் உயிரிழந்தார்.

சம்பவத்தில் சாவகச்சேரி நாவற்குழி பகுதியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை அமல்ராஜ் வயது 35 என்ற இரண்டு வயது பிள்ளையின் தந்தை உயிரிழந்தவர் ஆவார். இந்நிலையில் இளம் குடும்பஸ்தர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சித் தகவல் : தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!!

தங்கம்..

இலங்கையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இவ்வாறானதொரு நிலையில், இன்றைய தினம்(2024.01.19), 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 182,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,350 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலத்திரனியல் கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

இலத்திரனியல் கடவுச்சீட்டு..

இலங்கையில் இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஐ.எஸ்.எச்.ஜே.இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். இந்த வருடம் இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை விநியோகிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், இலத்திரனியல் கடவுச்சீட்டு விநியோகத்திற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முகக்கவசம் அணியுமாறு இலங்கையில் மக்களுக்கு அறிவுறுத்தல்!!

இலங்கையில்..

நாட்டில் தற்போது இன்புளுவென்சா மற்றும் அதனை ஒத்த வைரஸ் காய்ச்சல் அதிகம் பரவவதாக வைரஸ் நோய்கள் தொடர்பான சுகாதார வைத்திய நிபுணர் வைத்தியர் ஜூட் ஜயமஹா எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே, இருமல் இருப்பவர்கள் அது மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்க முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இன்புளுவென்சா மற்றும் அதனை ஒத்த வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகளாக காய்ச்சல், இருமல், தொண்டை புண், சளி அல்லது அடைப்பு, தசை அல்லது உடல் வலி, தலைவலி மற்றும் சோர்வு போன்றவைகள் ஏற்படலாம். இவ்வாறு அடையாளம் காணபட்டவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

குறிப்பாக நவம்பர் முதல் பெப்ரவரி மாதம் வரையிலும் மற்றும் ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையிலும் இரண்டு காலக்கட்டங்களில் இன்புளுவென்சா வைரஸ் பரவும். கடந்த டிசம்பர் மாதம் மற்றும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் பரிசோதனைகளில் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு 25 சதவீதம் பேருக்கு இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொழும்பு, ராகம, களுபோவில, நீர்கொழும்பு, லேடி ரிஜ்வே சிறுவர்களுக்கான வைத்தியசாலை மற்றும் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை உள்ளிட்ட 20 வைத்தியசாலைகளில் இன்புளுவென்சா மற்றும் அதனை ஒத்த வைரஸ் காய்ச்சல் தொடர்பில் கண்காணிப்பை அதிகரிக்க சுகாதார அமைச்சின் செயலாளர் தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதன்படி, நாளாந்தம் மாதிரிகள் தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்படுகின்றன. தற்போது பரவும் முதன்மையான வைரஸ் வகை இன்புளுவென்சா ஏ என கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், கோவிட் 19 வைரஸ் தொடர்பிலும் கண்காணிப்பை மேம்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 9 நாட்களில் 500 மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 6 ஆறு பேருக்கு நோய் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கர்ப்பிணித் தாய்மார்கள், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் இன்புளுவென்சா போன்ற நோய்களால் பாதிக்கப்படக் கூடியவர்களாவர். எனவே, இருமல் இருப்பவர்கள் மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்க முகக்கவசம் அணிய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

வீதி விபத்தொன்றில் பரிதாபமாக உயிரிழந்த 15 வயது பாடசாலை மாணவன்!!

புத்தளத்தில்..

புத்தளம் – மதுரங்குளி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் மதுரங்குளி – எள்ளுச்சேனை பகுதியில் நேற்றிரவு (17-01-2024) இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் மதுரங்குளி – விருதோடையைச் சேர்ந்த 15 வயதுடைய கலீல் அஹ்மட் முஹம்மது எனும் பாடசாலை மாணவனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த மாணவன் விருதோடை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் 10 ஆம் தரத்தில் கல்வி கற்றுவந்துள்ளார். மேலும், மாணவன் பயணித்த மோட்டார் சைக்கிள், விருதோடை பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த லொறியொன்றுடன், பின்னால் சென்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த குறித்த மாணவனை அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த போதிலும், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிசாம் , உயிரிழந்த மாணவனின் சடலம் மீதான மரண விசாரணையை நடத்தினார்.

மேலும், உயிரிழந்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் நல்லடக்கத்திற்காக அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டதாக புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிசாம் கூறினார். இந்த விபத்துச் சம்மவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் தொடரும் துயரம் : இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!!

யாழில்..

யாழில் டெங்கு நோயாயால் பாதிக்கப்பட்டு வீடு திரும்பிய இரு பிள்ளைகளின் தந்தை உயிர்ழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய இரண்டு பிள்ளைகளின் இளம் தந்தை இன்றைய தினம் (19) யாழ் நகரப்பகுதியில் வங்கியொற்றுக்கு சென்ற சமயம் மயங்கமடைந்து விழ்ந்து உயிரிழந்துள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் டெங்கு நோய் காரணமாக சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார் தனது தேவைக்காக வங்குயொன்றுக்கு பணம் பெற சென்றபோது இவ் துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அரியாலை இராசதோட்டம் பகுதியைச் சேர்ந்த செல்வராசா சிந்துஜன் வயது 31என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் உடல் கூற்று சோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. அதேவேளை யாழ்மாவட்டத்தில் டெங்கின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதனால் உயிரிழப்புக்களும் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாட்டை சோகத்தில் ஆழ்த்திய சிறுவனின் மரணம்!!

களனியில்..

களனி ஆற்றில் நீராடச் சென்ற போது முதலை ஒன்றால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவனின் சடலம் உறவினர்களின் கண்ணீருக்கு மத்தியில் அடக்கம் செய்யப் பட்டுள்ளது. கடுவெல வெலிவிட்ட புனித அந்தோனி மாவத்தையில் களனி ஆற்றுப்படுகையில் இந்த துயர சம்பவம் பதிவாகியிருந்தது.

சிறுவனின் பாட்டி துணி துவைத்துக் கொண்டிருந்த போது, ​​சிறுவன் திஷ்ன தனது தம்பியுடன் அருகில் நீராடிக் கொண்டிருந்த போது, ​​எதிர்பாராதவிதமாக அங்கு வந்த முதலை திஷ்னவை இழுத்துக் சென்றது. அதன் பின்னர் அந்த இடத்திற்கு வந்த பொலிஸ் கடற்படை பிரிவினர் மற்றும் கடற்படை சுழியோடி அதிகாரிகள் பிரதேசவாசிகள் இணைந்து சிறுவனை தேடும் பணி முன்னெடுக்கபப்ட்டது.

இதனையடுத்து சிறுவன் நீராடிய இடத்தில் இருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் ஆற்றின் கீழ் பகுதியில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. முதலைவாயில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆற்றில் நீராடச் சென்ற போது முதலை ஒன்றால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவனின் சடலம் உறவினர்களின் கண்ணீருக்கு மத்தியில் அடக்கம் செய்யப் பட்டுள்ளது.

கடுவெல வெலிவிட்ட புனித அந்தோனி மாவத்தையில் களனி ஆற்றுப்படுகையில் இந்த துயர சம்பவம் பதிவாகியிருந்தது. சிறுவனின் பாட்டி துணி துவைத்துக் கொண்டிருந்த போது, ​​சிறுவன் திஷ்ன தனது தம்பியுடன் அருகில் நீராடிக் கொண்டிருந்த போது, ​​எதிர்பாராதவிதமாக அங்கு வந்த முதலை திஷ்னவை இழுத்துக் சென்றது.

அதன் பின்னர் அந்த இடத்திற்கு வந்த பொலிஸ் கடற்படை பிரிவினர் மற்றும் கடற்படை சுழியோடி அதிகாரிகள் பிரதேசவாசிகள் இணைந்து சிறுவனை தேடும் பணி முன்னெடுக்கபப்ட்டது. இதனையடுத்து சிறுவன் நீராடிய இடத்தில் இருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் ஆற்றின் கீழ் பகுதியில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. முதலைவாயில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் பிரதிபலிக்கும் கிழக்கிலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட மாணவி!!

அம்பாறையில்..

அம்பாறை – அக்கரைப்பற்றுப் பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட பாத்திமா பேகம் ஜலீல் அமெரிக்காவில் Westfield middle school 8 ஆம் தரத்தில் கல்வி கற்கிறார். இம்மாணவி கல்வியிலும் இதர செயற்பாடுகளிலும் சிறந்து விளங்கியதால் அமெரிக்காவில் 300 பாடசாலை மாணவிகள் ஒன்றிணையும் சமூக மேம்பாட்டு ஒன்றிய ஒன்று கூடலுக்கு பாத்திமா பேகம் ஜலீல் Westfield middle school சார்பில் தூதுவராக(Ambassador ) ஆக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் தனது மார்க்கத்தை கைவிடாது பாடசாலையில் ஹிஜாப் அணிந்து கொண்டு தன்னை தூதுவராக (Ambassador) அடையாளப்படுத்தி இருப்பது பாராட்டுக்குரியது. அமெரிக்காவில் பல நாட்டு மாணவர்களுக்கு மத்தியில் பாத்திமா ஜலீல் தூதுவராக (Ambassador) தெரிவு செய்யப்படிருப்பது இவரின் திறமைக்கு ஒரு சான்றாகப் பதிவாகியுள்ளது.

தனது தந்தையின் அயராத உழைப்பும் அர்ப்பணிப்பும் வழிகாட்டலும் தன்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்ததாக பாத்திமா ஜலீல் தெரிவித்துள்ளார்.

வீதி விபத்தொன்றில் பரிதாபமாக உயிரிழந்த 15 வயது பாடசாலை மாணவன்!!

புத்தளத்தில்..

புத்தளம் – மதுரங்குளி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் மதுரங்குளி – எள்ளுச்சேனை பகுதியில் நேற்றிரவு (17-01-2024) இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் மதுரங்குளி – விருதோடையைச் சேர்ந்த 15 வயதுடைய கலீல் அஹ்மட் முஹம்மது எனும் பாடசாலை மாணவனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த மாணவன் விருதோடை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் 10 ஆம் தரத்தில் கல்வி கற்றுவந்துள்ளார். மேலும், மாணவன் பயணித்த மோட்டார் சைக்கிள், விருதோடை பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த லொறியொன்றுடன், பின்னால் சென்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த குறித்த மாணவனை அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த போதிலும், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிசாம் , உயிரிழந்த மாணவனின் சடலம் மீதான மரண விசாரணையை நடத்தினார்.

மேலும், உயிரிழந்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் நல்லடக்கத்திற்காக அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டதாக புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிசாம் கூறினார். இந்த விபத்துச் சம்மவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் 35000 ரூபா கொடுப்பனவை அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் சமமாக வழங்க கோரி சுகாதார சிற்றூழியர்கள் போராட்டம்!!

சம்பள அதிகரிப்பு, பதவி உயர்வு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்களினால் நேற்று (18.01.2024) மதியம் 12.30 மணியளவில் கவனயீரப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்களினால் முன்னெடுக்கப்பட்ட இவ் கவனயீர்ப்பு போராட்டம் பேரணியாக வைத்தியசாலை முன்றலில் ஆரம்பமாகி வைத்தியசாலை வீதியூடாக ஏ9 வீதியினை வந்தடைந்து ஏ9 வீதியூடாக பண்டாரவன்னியன் சுற்றுவட்டம் வரை சென்று மீன்றும் ஏ9 வீதியூடாக வருகை தந்து வைத்தியசாலையின் ஊழியர் நூழைவாயில் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அரசே அனைத்து பதவி உயர்வையும் வழங்கு, பொருளாதார நீதிக்காக வைத்தியர்களுக்கு வழங்கிய 35000 ரூபா கொடுப்பனவை அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் சமமாக வழங்கு, வருமானம் அற்ற வரிச்சுமை எதற்கு? போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் பேரணியில் கலந்து கொண்டிருந்ததுடன் சம்பளத்தினை அதிகரி, பதவி உயர்வு வழங்கு போன்ற கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

இக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் 200க்கு மேற்பட்ட வைத்தியசாலை சிற்றூழியர்கள் கலந்து கொண்டிருந்தமையுடன் ஸ்ரீலங்கா ஜனரஜ சுகாதார சேவைச்சங்கம் இக் கவனயீர்ப்புப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

மேலும் நோயார்களின் நலனை கருத்தில் கொண்டு சுகாதார சிற்றூழியர்கள் தமது மதிய நேர இடைவேளையின் போதே இப் போராட்டத்தினை முன்னெடுந்தமையும் குறிப்பிடத்தக்கது.