களுத்துறை, இசுரு உயன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு இரண்டு வயோதிப பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இருவரது சடலங்களும் சிதைந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இருவரும் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
களுத்துறை குற்றப் புலனாய்வு ஆய்வக அதிகாரிகள் நீதவான் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையின் இளம் பெட்மிட்டன் வீரர் ஒருவர் பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளதாக விளளயாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
20 வயதான விரான் நெட்டசிங்க என்ற இளம் வீரரே இவ்வாறு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.
எதிர்வரும் ஜூலை மாதம் 26ம் திகதி பிரான்ஸில் பாரிஸ் நகரில் ஒலிம்பிக் போட்டித் தொடர் ஆரம்பமாக உள்ளது. ஒலிம்பிக் போட்டித் தொடரில் பங்கேற்பதற்கு நேரடியாக தகுதியை பெற்றுக்கொண்ட மிக இள வயது வீரர்களில் ஒருவராக ஹிரான் தெரிவாகியுள்ளார்.
உடவலவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் வீடொன்றின் படுக்கையில் எரிகாயங்களுடன் உயிரிழந்த நபரின் சடலம் ஒன்று நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மரணத்தில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக உயிரிழந்தவரின் மகன் மற்றும் மனைவி கைது செய்யப்பட்டதாக உடவலவ பொலிஸார் தெரிவித்தனர்.
உடவலவ பகுதியை சேர்ந்த 48 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான பொடி அப்பு எனப்படும் பத்திரனகே அஜித் விஜேரத்ன என்பவரே உயிரிழந்துள்ளார்.
இறந்தவரின் மனைவி, வீட்டுக்கு முன்பாக கடை நடத்தி வருவதாகவும், அன்றைய தினம் அதிகாலை அந்த கடையில் இருந்த பொருட்களை கணவர் சேதப்படுத்தியதாகவும், மனைவி பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதன் பின்னர், குறித்த நபர் தனது வீட்டின் அறைக்குள் சென்று தனது உடலில் பெற்றோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் படுக்கையில் கிடந்ததுடன், படுக்கையின் மெத்தை மற்றும் தலையணை எரிந்து நாசமானது.
தீயினால் அறை சேதமடையவில்லை எனவும், அறையின் தரையில் லைட்டர், மண்ணெண்ணெய் கொள்கலன் இருந்ததாகவும், மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பிலிபிட்டிய தலைமையக பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். மரணம் சந்தேகத்திற்குரியது என உயிரிழந்தவரின் சகோதரி ஒருவர் நீதவான் முன்னிலையில் தெரிவித்தார்.
சமீபகாலமாக ஏற்படும் உயிரிழப்புகளுக்கு பிரதான காரணமாக மாரடைப்பு அமைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய்களுக்கான பணிப்பாளர் அலுவலகத்தின் விசேட வைத்தியர் ஷெரில் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
2010ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை பொது மருத்துவமனைகளில் பதிவான அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் மாரடைப்பால் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இதயத்திற்கு இரத்தத்தை வழங்கும் இரத்த நாளங்கள் சேதமடைவதால் இந்த நோய் நிலை ஏற்படுகிறது. இதை மாரடைப்பு அல்லது ஹாட் ஹெட்டக் என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
தொற்றா நோய்களுக்கு பல சிறப்பு ஆபத்து காரணிகள் உள்ளன. முதலாவது ஆரோக்கியமற்ற அதிகப்படியான சர்க்கரை, உப்பு மற்றும் எண்ணெயின் பயன்பாடு, உடல் செயல்பாடு இல்லாமை, புகையிலை மற்றும் மதுபானம் ஆகியவற்றின் பயன்பாடு ஆகும்.
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கணினிகளின் அதிகரித்த பாவனையினால் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் இருவரும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையிலிருந்து விலகியுள்ளனர். குழந்தைகள் ஒரே இடத்தில் அதிக நேரம் செலவழித்து ஒன்லைன் கம்ப்யூட்டர் கேம்களுக்கு அடிமையாகி வருகின்றனர்.
வீட்டில் வயதான இல்லத்தரசிகள் கூட எப்போதும் டி.வி பார்த்து மணிக்கணக்கில் அமர்ந்துதான் இருப்பார்கள். மேலும் வயது வரம்பு இல்லாமல் கையடக்கத் தொலைபேசிகளுக்கு அடிமையாகி இருப்பது பெரும் சோகம். நாம் முடிந்த போதெல்லாம் நடக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
வவுனியா நெடுங்கேணியில் மாரடைப்பு காரணமாக கணவன் இறந்ததும், கணவனின் இறப்பை தாங்க முடியாத மனைவி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். இன்று (18.04) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா வடக்கு, நெடுங்கேணி, 6ம் கட்டை பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவர் அவசரமாக நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கிருந்து குறித்த நபரை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல தயாராகிய போது குறித்த குடும்பஸ்தரின் மனைவி வவுனியா வைத்தியசாலை செல்வதற்கான பொருட்களை எடுத்து வர வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதன்போது, நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையிலேயே மரணமடைந்துள்ளார்.
குறித்த தகவலை வீட்டிற்கு சென்றிருந்த அவரது மனைவிக்கு தெரியவந்ததையடுத்து, கணவனின் இறப்பை தாங்க முடியாது மனைவி தவறான முடிவெடுத்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச் சம்பவத்தில் 18 மற்றும் 15 வயதுடைய இரு பெண் பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய ராமச்சந்திரன் ரவீந்திரன் மற்றும் மனைவியான 49 வயதுடைய ராமச்சந்திரன் ஜோதீஸ்வரி ஆகிய இருவருமே மரணமடைந்தவர்களாவார். சம்பவம் தொடர்பில் நெடுங்கேணி பொலிசார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பனங்காட்டூர் கிராமத்தில் வசித்து வருபவர் முருகன். இவரது மனைவி சித்ரா (35). இந்நிலையில் இவர் சம்பவத்தன்று இவர் வீட்டின் முன் நின்று உறவினர் ஒருவருடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரை திடீரென பாம்பு ஒன்று கடித்து விட்டு சென்றது. வலி தாங்க முடியாமல் சித்ரா அலறியதால் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.
பின்னர் அவர்கள் சித்ராவை கடித்த பாம்பை தேடினர். புதருக்குள் இருந்த பாம்பை கண்டுபிடித்து பிடித்தனர். இதையடுத்து சித்ராவை மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் பிடிபட்ட பாம்பை பிளாஸ்டிக் கவரில் வைத்து எடுத்து சென்றனர்.
இதனால், நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவத்தால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வவுனியாவில் திருமணமாகி ஒரே மாதத்தில் இளம் குடும்பஸ்தர் காணாமல்போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் வவுனியா வேப்பங்குளம் மெதடிஸ்ட் தேவாலய வீதியில் தற்காலிகமாக வசித்து வந்த இளம் குடும்பஸ்தரே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.
இந்நிலையில் கணவனை கடந்த 12 ஆம் திகதி முதல் காணவில்லை என மனைவியால் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பதிவு திருமணம் செய்து ஒரு மாதகாலமான நிலையில் குறித்த இளம் குடும்பத்தினர் தற்காலிகமாக மேற்குறிப்பிட்ட முகவரியில் வசித்து வந்த நிலையில் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த 12 ஆம் திகதி மனைவியை அவரது பணித்தளத்தில் இறக்கிவிட்டு தான் தனது பணிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வரவில்லை என மனைவி தெரிவித்துள்ளார்.
25 வயதுடைய வில்வராசா ரக்சன் என்பவரே காணாமல் போனவராவார் குறித்த நபரை அடையாளம் காண்பவர்கள் 0741822912 குறித்த தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அறிவிக்குமாறு மனைவி உருக்கமாக கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் இளம் குடும்பஸ்தர் காணாமல்போன சம்பவம் தொடர்பான விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
பவானியில் தனியார் விடுதியில் 3 வயது மகளை கொன்றுவிட்டு பட்டதாரி இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சூரியம்பாளையத்தை சேர்ந்தவர் சோந்தவ் சசிதரன்.
இவரது மனைவி கோகிலவாணி (25). இவர்களது மகள் இதாஜிகா (3). சசிதரன் ஓராண்டுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், கோகிலவாணி தனது மகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். பட்டதாரியான இவர் அப்பகுதியில் உள்ள தனியார் எண்ணெய் ஆலையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், குழந்தையை பராமரிக்காமல், வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் இருந்த கோகிலவாணியை அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் கோகிலவாணி சனிக்கிழமை இரவு இதாஜிகாவுடன் வீட்டை விட்டு வெளியேறி பவானி கூடுதுறை அருகே உள்ள தனியார் விடுதியில் தங்கினார். இரண்டு நாட்களாகியும் அறை திறக்கப்படாததால், விடுதி ஊழியர்கள் திங்கள்கிழமை பார்வையிட்டனர். அப்போது, அங்கு துர்நாற்றம் வீசியது.
இதுகுறித்து பவானி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் முன்னிலையில் கிராம நிர்வாக அலுவலர் குமார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, கோகிலவாணி மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும்,
இதாஜிகா படுக்கையில் பிணமாக கிடந்ததும் தெரியவந்தது. போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கணவர் இறந்த துக்கத்தில் இருந்த கோகிலவாணி, மகளைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கடை பகுதியில் உள்ள Street Foods கடை ஒன்றில் கொத்து ரொட்டியை 1900 ரூபாய்க்கு விற்க போய் , அது விலை அதிகம் என மறுத்த வெளிநாட்டவர் ஒருவரை கடைக்காரர் அவமானப்படுத்தி விரட்டிய சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
Emeka Iwueze என்ற அமெரிக்கர், வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்கடை பகுதியில் உள்ள Street Foods கடைக்கு விஜயம் செய்த போது, இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
அநாகரீகமாக துரத்திய கடைக்காரர்
சம்பந்தப்பட்ட கடைக்காரர், மோசமாக திட்டி விரட்டும் வெளிநாட்டவரை , அந்த இடத்தை விட்டு துரத்தும் காட்சியை அநேகர் சமூக ஊடகங்களில் வெளியிட்ட நிலையில் , Street Food கடைக்காரர் Get Out என அநாகரீகமாக துரத்தும் சாட்சிகளை பார்த்த போது , அது அநேக இலங்கையரை வெட்கப்படவைத்தது .
நாட்டினை சுற்றுலாத்துறையின் மூலம் மீள திட்டமிடும் ஒரு நாட்டில், வியாபாரியின் இந்த செயல் இலங்கை சுற்றுலா துறையின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.
கடைக்காரர் அநாகரிகாமாக நடத்துகொண்டது மட்டுமல்லாது வெளிநாட்டவரை திட்டி விரட்டியதால் திகைத்து போன அவர் தனது மோசமான அனுபவத்தை கூறியுள்ளார்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் கொழும்பு 12 இல் வசிக்கும் 51 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட நபர் இன்று (17) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இந்நிலையில் குறித்த கடைக்காரரின் செயல் ஒட்டுமொத்த இலங்கை மக்களையும் விசனம் கொள்ள வைத்துள்ளது.
தென்னிலங்கையில் மனிதநேயம் கொண்டவரான முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரின் இழப்பு செய்தி நாட்டிலுள்ள மூவின மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரதியமைச்சராக செயற்படும் அரசியல்வாதி என்ற நிலையை கடந்து தானும் சாதாரண மனிதன் என்பதை நிரூபிக்கும் வகையில் அவரின் வாழ்க்கை நடைமுறைகள் காணப்பட்டிருந்தன.
இந்நிலையில், தனது மரணத்திற்கு ஏற்கனவே தயாராக இருந்ததாக பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.
மரணிக்க சில வாரங்களுக்கு முன்னர் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தனது மரணம் நிகழ்ந்தால் அதற்கான பெரிய செலவுகள் எதனையும் செய்யக் கூடாது என தனது பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தன்னை அடக்கம் செய்ய பயன்படுத்தும் பிரேத பெட்டிக்கு கூட சிறிய தொகையை செலுத்திவிட்டு அந்த பணத்தில் வீட்டிற்கு வரும் சிறுவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் பொருட்களை பெற்றுக் கொடுக்குமாறு கூறியுள்ளேன்.
மக்கள் கூட்டம்
மேலும் எனது மரணத்திற்கு மக்கள் கூட்டமாக வருவார்களா என தெரியவில்லை. அதிகாரத்தில் இருந்தால் மாத்திரமே மக்கள் ஒருவரை தேடி வருவார்கள்.
அதனால் யாருக்காகவும் காத்திருக்க வேண்டாம். நால்வர் இணைந்து என்னை தூக்கி சென்று புதைத்தால் போதும் என சிறிய மகனிடம் கூறிவிட்டேன்.
எனது பெரிய மகன் எனக்கு முன்னரே உயிரிழந்துவிட்டார். நான் அவருக்கும் தொல்லை கொடுத்தததில்லை. சொத்துக்கள், வாகனங்கள் மீது எனக்கு எவ்வித ஆசையும் இல்லை.
பதவியில் இருந்த காலத்திலும் கிராமங்கள் முழுவதும் நடந்தே செல்வதனை பழக்கமாக கொண்டுள்ளேன். மக்கள் சொத்துக்களை கொள்ளையடித்து வீடுகள், சொத்துக்களை சேர்த்துக் கொள்ளவில்லை. மக்களின் அன்பை மட்டுமே சம்பாதித்துள்ளேன்.
நான் எனக்கான தேவைகளை தனியாக தேடிக் கொண்ட ஒருவன் . நான் யாருக்கும் சுமையாக இருந்ததில்லை. செல்லும் இடம் எல்லாம் மக்கள் என்னை சூழ்ந்துக் கொள்வார்கள்.
நான் சுயமாக வாழ்ந்த மனிதன் என்று நான் இல்லாத போது வரலாற்றில் இருப்பேன் என நினைக்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா NASA வில் கடமை புரிந்து வரும் புத்தளத்தைச் சேர்ந்த இளம் விஞ்ஞானி ரொஸ்மின் மஹ்ரூப் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
இன்று திடீர் சுகயீன மடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கபப்டுகின்றது,
புத்தளம் சாஹிரா கல்லூரியின் முன்னாள் மாணவரான ரொஸ்மின் மஹ்ரூப் வானியல்யியற்பியல் துறையில் தேர்ச்சி பெற்றவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் NASA வில் கடமையாற்ரிய இலங்கை இளம் விஞ்ஞானியின் மரணம் பெரும் தியரத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியா Batu Pahat நகரில் மலேசியா வாழ் இலங்கையர்களின் புது வருட விளையாட்டு போட்டி கோலாகலமாக நடைப்பெற்றுள்ளது. குறித்த மரதன் போட்டியில் புத்தளத்தைச் சேர்ந்த சிப்ரான் நப்லி முதலிடம் பெற்றார்.
சிப்ரான் நப்லி சாஹிரா கல்லூரி பழைய மாணவரும், பாடசாலைக் காலத்தில் 4 தடவை மரதன் போட்டியில் முதலிடம் மற்றும் நெடுந்தூர ஓட்ட சம்பியனாகவும் திகழ்ந்துள்ளார்.
மேலும் இவர் புத்தளம் BigBang சமூக அமைப்பின் அணியின் தலைவராகவும், மலேசியாவில் தொழில் புரிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
களுத்துறை – அளுத்கம, மொரகல்ல கடற்கரையில் பாடசாலை மாணவன் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பெந்தோட்டை காவல்துறையினர் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் மாலை நீராடச் சென்ற போது காணாமல் போன பாடசாலை மாணவனின் சடலமே நேற்று பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. 16 வயதுடைய மொஹமட் சமீன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள சாதாரணதர பரீட்சைக்குத் தோற்ற இருந்த நிலையில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த மாணவன் நேற்று முன்தினம் மாலை தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சிலருடன் பெந்தோட்டை உல்லாச விடுதிக்கு அருகில் உள்ள கடலில் நீராடிக் கொண்டிருந்த போது அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார். இந்நிலையில் குறித்த மாணவனின் சடலம் நேற்றையதினம் கரை ஒதுங்கியுள்ளது.
வவுனியா நகரில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை வழிமறித்து அவர்களின் குழந்தை மீது கத்தியை வைத்து தாயை மிரட்டி நகைகளை பறித்தமையுடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளையும் அபகரித்துச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமனை முன்பாகவுள்ள கடவுச்சிட்டு அலுவலகத்திற்கு செல்லும் வீதியில் இன்று (17.04) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண் கடவுச்சீட்டு காரியாலத்திற்கு முன்பாக விண்ணப்படிவம் நிரப்பும் தொழிலில் ஈடுபட்டு வருபவர் ஆவார். அவர் தனது தொழில் நிமித்தம் வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமனை முன்பாகவுள்ள கடவுச்சிட்டு அலுவலகத்திற்கு செல்லும் வீதியில்,
இன்று (17.04) அதிகாலை மோட்டார் சைக்கிளில் தனது குழந்தையுடன் பயணித்த சமயத்தில் வீதியில் மறைந்து நின்ற முகமூடியணித்த மூவர் குறித்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து குழந்தையின் கழுத்தில் கத்தியினை வைத்து மிரட்டி அவர்கள் அணிந்திருந்த நகைகளை அபகரித்ததுடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளையும் அபகரித்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய முறைப்பாட்டின் பிரகாரம் வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா பொதுவைத்தியசாலையின் காவலாளிகள் மீது இளைஞர்குழு ஒன்று நேற்றயதினம் (16.04.2024) இரவு தாக்குதல் மேற்கொண்டதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்… நேற்றயதினம் இரவு 11 மணியளவில் வைத்தியசாலையில் நோயாளி ஒருவரை பார்வையிடுவதற்காக இளைஞர்கள் குழு ஒன்று வருகைதந்துள்ளது.
இதன்போது கடமையில் இருந்த காவலாளிகளுக்கும் அவர்களுக்கும் இடையில் வாய்தர்க்கம் ஏற்ப்பட்டுள்ளது. அது கைகலப்பாக மாறியுள்ளது.
சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளான காவலாளி ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையின் விபத்துப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலை மேற்கொண்டவர்கள் தப்பிச்சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் கொடுமுண்டா கடற்கரை சாலையில் எரிந்த நிலையில் இளம்பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்ட நிலையில், இளம்பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், கொலைச் செய்யப்பட்ட பெண்ணின் பெயர் பிரிவியா(30) என்பதும் தெரிய வந்துள்ளது.
திரிதாலா பட்டித்தர கங்கநாத் பரம்பு பகுதியைச் சேர்ந்தவர் பிரிவியா (30). இவர் வழக்கம் போல காலையில் வேலைக்குச் செல்லும் போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. திரிதாலா பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் பிரிவியாவைக் கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஏற்கெனவே திருமணமான நிலையில், பிரிவியா தனது கணவருடனான கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்ற நிலையில், விவாகரத்துக்கு பிறகு சந்தோஷுடன் நெருங்கி பழகி வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
பிரிவியாவை சந்தோஷ் திருமணம் செய்து கொள்ள விரும்பியுள்ளார். ஆனால், சந்தோஷுடன் உல்லாசம் அனுபவித்து, தொடர்ந்து பழகி வந்த பிரிவியா, சந்தோஷைத் திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். அதன் பின்னர், சந்தோஷுடன் பழகுவதையும் நிறுத்தியுள்ளார்.
இந்நிலையில், பிரிவியாவுக்கு வேறொரு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இம்மாதம் 29ம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில், இருவருக்குமிடையே இருந்த இந்த முன்விரோதம் தான் கொலைக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலைப் பார்த்து வரும் பிரிவியாவின் உடல் வயலை ஒட்டிய சாலையில் எரிந்த நிலையில் கிடந்துள்ளது. அந்த பகுதியில் சுற்றிலும் இருந்த புற்கள் எரிந்து காணப்பட்டது.
அருகில் பிரிவியாவின் ஸ்கூட்டரும் கண்டெடுக்கப்பட்டது. பிரிவியா கத்தியால் பலமாக குத்தி கொல்லப்பட்டு, உடல் எரிக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் இருந்து கொலைச் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியை போலீசார் கண்டெடுத்துள்ளனர். இறந்தவரை அடையாளம் கண்டதில், கொலையை செய்தது சந்தோஷ் என்பதும், அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
பிரிவியாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.