வீதியில் விளையாடிய சிறுவன் : பறந்து சென்ற பந்தை எடுக்க சென்றபோது நேர்ந்த விபரீதம்!!

சென்னையில்..

கிரிக்கெட் விளையாடும்போது நீர் சேமிப்பு தொட்டியில் விழுந்த பந்தை எடுக்க முயன்ற ஏழு வயது சிறுவன் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சின்னமலை எல்.டி.ஜி சாலையை சேர்ந்தவர் லூர்து ராஜ் – மோனிஷா தம்பதி.

லூர்து ராஜ் ஓட்டுநராக பணியாற்றி வரும் நிலையில், இவர்களுக்கு ஆருண் ராஜ் என்ற வயது சிறுவனும், 2 வயது பெண் பெண் குழந்தையும் உள்ளனர். இதில் 7 வயது ஆருண் ராஜ் என்ற சிறுவன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த சூழலில் நேற்று மாலை சிறுவன் ஆருண் ராஜ் பள்ளியை முடித்து விட்டு வழக்கமாக வீடு திருப்பினார். பிறகு தெருவில் தனது சக நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அந்த பந்தானது அருகே பூட்டி கிடந்த வீட்டின் உள்ளே விழுந்துள்ளது.

இதனால் சிறுவன் பந்தை எடுப்பதற்காக இருசக்கர வாகனத்தின் மீது ஏறி காம்பவுண்டுக்குள் குதித்து சென்றுள்ளார். அப்போது பந்து அங்கிருந்த நீர் சேமிப்பு தொட்டியில் கிடந்ததை கண்ட சிறுவன், அதனை எடுக்க முயன்றபோது தவறி உள்ளே விழுந்தார்.

இதைத்தொடர்ந்து சிறுவனால் மூச்சு விட முடியாமல் திணறிய நிலையில், சுமார் 6 அடி நீர் சேமிப்பு தொட்டியில் சிக்கிய சிறுவன் ஆருண் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நீ்ண்ட நேரமாகியும் சிறுவன் வராத காரணத்தினால் பயந்துபோன நண்பர்கள், இதுகுறித்து ஆருண் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், உள்ளே சென்று பார்க்கையில் சிறுவன் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி படுத்தினர்.

இதையடுத்து இந்த நிகழ்வு குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பூட்டி இருந்த அந்த வீட்டின் உரிமையாளர் யார்? எனவும் நீர் சேமிப்பு தொட்டியை மூடாமல் விட்டது ஏன்? எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளவத்தையில் பொலிஸாரால் கொடூரமாக தாக்கப்பட்ட இளைஞன்!!

வெள்ளவத்தையில்..

கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் பொலிஸார் குழுவொன்று அராஜகமான முறையில் இளைஞன் ஒருவரை தாக்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் (21.01.2024) இடம்பெற்றுள்ளது. வெள்ளவத்தை பசல் பேட்ஸ் வீதிக்கு வந்த பொலிஸார், அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரை அகற்றும்படி உரிமையாளரான கோவில் பூசகரிடம் கோரியுள்ளனர்.

இதன்போது முறையற்ற வார்த்தைகளை பொலிஸார் பிரயோகித்துள்ளனர். இதன்போது அங்கு வந்த பூசகரின் மகன் பொலிஸாரிடம் இது தொடர்பில் வினவியமைக்கு, ஆத்திரமடைந்த பொலிஸ் அதிகாரிகள், அந்த இளைஞரை கொடூரமாக தாக்கி முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாத்தறை துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞன் தொடர்பில் வெளியான தகவல்!!

மாத்தறையில்..

மாத்தறை துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞன் தொடர்பில் தற்போது மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது நண்பரின் கையடக்கத் தொலைபேசி உபகரணக்கடையின் உரிமையாளரின் ஆசனத்தில் கையடக்கத் தொலைபேசியை சார்ஜ் செய்து கொண்டிருந்த மிந்திக அளுத்கமகே என்ற 22 வயதுடைய இளைஞன் துரதிஷ்டவசமாக சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

இவ்வாறு துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த மிந்திக அளுத்கம என்ற இளைஞன் மூன்று சகோதரர்களைக் கொண்ட குடும்பத்தில் இளையவர் எனவும் மூத்த சகோதரர் விமானப்படை அதிகாரி எனவும் மற்றுமொரு சகோதரர் கொரியாவில் பணிபுரிவதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். மிந்திக அளுத்கம கொரிய வேலைவாய்ப்பிற்காக இன்னும் சில நாட்களில் கொரியாவிற்கு செல்லவிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உடுகாவ பிரதேசத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மிந்திக தனது நண்பரின் கடைக்கு சென்றிருந்த போதே துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளார். கடையின் உரிமையாளரான உயிரிழந்தவரின் நண்பர் தொலைபேசி அழைப்பிற்காக வெளியே வந்தபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கடையின் உரிமையாளர் பிரதேசத்தில் உள்ள மதுபானக் கடையொன்றில் இருந்து 21 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் உத்தியோகத்தர்கள் தம்மை தாக்கியதாக அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாக உரிமையாளர் பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த மனுவைத் தாக்கல் செய்த பின்னர் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பல தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும், நீதவானின் விசாரணையில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில், அவரது உயிருக்கு உள்ள அச்சுறுத்தல்களை கருத்திற்கொண்டு அவரை பொலிஸ் காவலில் வைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் கொலையாளிகள் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள், இலக்கத் தகடுகளின்றி, தலைக்கவசங்களுடன் மாத்தறையில் சதுப்பு நிலத்தில் கைவிடப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தென்னிலங்கையில் பதற்றம் : அரசியல்வாதி உட்பட ஐவர் சுட்டுக்கொலை!!

தென்னிலங்கையின் பெலியத்தை நகரில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பிரபல அரசியல்வாதியொருவர் உயிரிழந்துள்ளார்.

அபே ஜனபல பக்‌ஷய எனப்படும் கட்சியின் தலைவரான சமன் பெரேரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சம்பவ இடத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

கடந்த பொதுத் தேர்தலின் போது சிங்கள பௌத்த வாக்குகளை குறிவைத்து களமிறங்கிய இக்கட்சி, கடைசியில் ஒரு தேசியப் பட்டியலைப் பெற்றுக் கொண்டது.

சர்ச்சைக்குரிய பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரும் இக்கட்சியின் ஊடாகவே தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.

எனினும் குறித்த தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்வது தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் மற்றும் சமன் பெரேரா ஆகியோருக்கு இடையில் கடும் சர்ச்சையும் மோதல்களும் ஏற்பட்டிருந்தது.

பின்னர் குறித்த கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக அதுரலியே ரத்ன தேரர் நாடாளுமன்றம் சென்றிருந்தார்.

இந்நிலையில் இன்று காலை பெலியத்தை நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் கட்சியின் தலைவர் சமன் பெரேரா , இனந்தெரியாதவர்களின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த இன்னும் நால்வரும் குறித்த துப்பாக்கிச் சூட்டின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

முதல் இணைப்பு : தென்னிலங்கையில் சற்று முன்னர் ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாத்தறை – பெலியத்தை பகுதியில் இன்று காலையில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்தை – கஹவத்த வெளியேறும் பகுதிக்கு அருகில், இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது. சம்பவ இடத்தில் 4 சடலங்கள் காணப்படுவதுடன், ஒருவரின் சடலம் தங்காலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8.30 மற்றும் 8.40 க்கு இடையில், பச்சை நிற கெப் வண்டியில் வந்த குழுவொன்று வெள்ளை டிபென்டர் பயணித்த 5 பேரை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு : இலக்கு தவறியதில் பரிதாபமாக பலியான இளைஞன்!!

மாத்தறையில்..

மாத்தறை – தெலிஜ்ஜவில பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர், இலக்கு வைக்கப்பட்ட நபர் அல்ல என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கிச் சூட்டில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், “மாத்தறை – மாலிம்படை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெலிஜ்ஜவில சந்தியில் நேற்று (20.01.2024) இரவு 08 மணி அளவில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் அங்கிருந்த சிசிரிவி கருவியிலும் பதிவாகியுள்ளது. இந்நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் தொலைபேசி உபகரணக் கடைக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இதன்போது குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 22 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தெனிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த மிந்திக அளுத்கமகே எனவும், அவர் தனது கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்வதற்காக கடைக்கு வந்துள்ளாதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணை நடத்தப்பட்டதுடன், கடையின் உரிமையாளரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், மாத்தறை பிரதான நீதவான், அவரை பொலிஸ் காவலில் எடுத்து பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.” என்றார்.

யாழில் கதிரையில் அமர்ந்தவாறு பறிபோன உயிர்!!

யாழில்..

யாழ் – பாசையூர் பகுதியில் வீட்டில் கதிரையில் உட்கார்ந்திருந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் (20.01.2024) உயிரிழந்துள்ளார். இதன்போது பாசையூர் பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் யாக்கோலின் குலசிங்கம் (வயது 46) என்ற என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் நேற்று (20.01.2024) காலை 09.00 மணியளவில் கதிரையில் அமர்ந்திருந்தார். இந்நிலையில் காலை 9.30 மணியளவில் அவரது சகோதரி அவரை எழுப்ப முற்பட்டவேளை அவர் உயிரிழந்து காணப்பட்டார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் சிறுவனுக்கு எமனாகிய ஊஞ்சல்!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு – செம்மலை பகுதியில் கழுத்தில் ஊஞ்சல் கயிறு சுற்றி இறுகியதில் சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் இன்றையதினம்(20.01.2024) மாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது 10 வயதுடைய பிரசாத் தனேஷ் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன் வீட்டில் ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கழுத்தில் ஊஞ்சல் கயிறு சுற்றி இறுகியுள்ளது. இதனையடுத்து அவரை மீட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன்னரே குறித்த சிறுவன் உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன. மேலும் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்த பகுதி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறிய பெண் பொலிஸ்.. ஒரு குழந்தைக்கு தந்தையான அதிசயம்!!

இந்தியாவில்..

அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறிய பெண் ஒருவர், குழந்தை ஒன்றிற்கு தந்தையான ஆச்சரிய நிகழ்வொன்று இந்தியாவில் நிகழ்ந்துள்ளது. மஹாராஷ்ட்ராவிலுள்ள Rajegaon என்னும் கிராமத்தில் பிறந்தவர் லலிதா (Lalita Salve) என்ற பெண்.

அவர் பொலிஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றிவருகிறார். 2013ஆம் ஆண்டு தனது உடலில் வித்தியாசமான மாற்றங்கள் ஏற்படுவதைக் கண்ட லலிதா, மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

அப்போது, அவரது உடலில் Y குரோமோசோம் இருப்பது தெரியவந்தது. அதாவது, பெண்கள் உடலில் இரண்டு X குரோமோசோம்கள் இருக்கும் நிலையில், ஆண்கள் உடலில் X மற்றும் Y குரோமோசோம்கள் இருக்கும். ஆக, தான் ஆண் தன்மை உள்ளவர் என தெரியவரவே, 2018 முதல் 2020 வரை, மூன்று அறுவை சிகிச்சைகள் செய்து ஆணாக மாறினார் லலிதா, இப்போது அவர் பெயர் லலித் (Lalit Salve).

2020ஆம் ஆண்டு, சீமா என்ற பெண்ணைத் திருமணமும் செய்துகொண்டார் லலித். இந்நிலையில், பெண்ணாக இருந்து ஆணாக மாறிய லலித், ஒரு குழந்தைக்கு தந்தையாகியுள்ளார். திங்கட்கிழமை, அதாவது, ஜனவரி 15ஆம் திகதி, லலித், சீமா தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பெண்ணாகப் பிறந்து ஆணாக மாற நான் பயணித்த பாதை பல சிக்கல்கள் உள்ளதாக இருந்தது. ஆனால், பலர் எனக்கு ஆதரது தந்தார்கள். என் மனைவி சீமா குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என ஆசைப்பட்டாள். தந்தையானதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி, எங்கள் குடும்பமும் மகிழ்ச்சியில் திழைக்கிறது என்கிறார் லலித்.

இரவு உணவை தவிர்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் : மருத்துவர் கூறும் எச்சரிக்கை!!

உணவு..

காலை உணவு அரசனைப் போலவும், மதிய உணவு அரசியைப் போலவும், இரவு உணவு ஒரு யாசகனைப் போலவும் இருக்க வேண்டும் என்று பலர் சொல்லுவது உண்டு. அந்தவகையில் இரவு உணவை தவிர்ப்பது என்பது அனைவருக்கும் இப்பொழுது வழக்கமாகியுள்ளது. இரவு உணவை தவிர்ப்பதால் உண்டாகும் ஆபத்துகள் பற்றி மருத்துவர் ஷைனி சுரேந்திரன் பகிர்ந்திருக்கிறார். அவர் கூறியது குறித்து விரிவாக காணலாம்

இரவு உணவை தவிர்த்து வேலையில் செய்து கொண்டிருக்கும்போது சோர்வாக உணர்ந்தால் அதன் பின் தேவையற்றை உணவுகளை உன்ன நேரிடும். இரவு உணவை தவிர்ப்பதால் தூக்கமின்மை ஏற்பட்டு மறுநாள் முழுக்க சோர்வாக இருக்கும்.

மேலும் தலைவலி ஏற்பட்டு, புத்துணர்ச்சி இல்லாமல் இருக்கும். மேலும் இரவு உணவை தவிர்ப்பது அமிலத்தன்மை(Acidity), இரைப்பை சார்ந்த பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இரவு உணவு சாப்பிட்ட பின் குறைந்தது 2½ மணி நேரம் கழித்து தான் தூங்கவேண்டும். அப்போது தான் உணவு செரிமானமாகி வயிறு நிரம்பிய உணர்வை தராது.

இரவு உணவாக என்ன எடுத்துக்கொள்ளலாம்?
1 கப் சுண்டல்
பழங்கள்
காய்கறிகள் சூப்
அரிசி கஞ்சி
சோள அவல்(Cornflakes)
பால்
உடைத்த கோதுமை உப்மா
உடைத்த கோதுமை கஞ்சி
காய்கறிகள் சாலட்
காய்கறிகள் சான்வெஜ்
புதினா சட்னி
காரம் இல்லாத இறைச்சி
ஓட்ஸ் கஞ்சி

உலகின் மிக விலையுயர்ந்த Private Jet வைத்திருக்கும் கோடீஸ்வர இளவரசர்!!

அல் வலீத் பின் தலால் அல் சௌத்..

முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா மற்றும் கௌதம் அதானி உட்பட ஆடம்பரமான வாழ்க்கை முறை மற்றும் ஏராளமான கார்கள் மற்றும் சொத்துக்களை வைத்திருக்கும் பல பணக்கார தொழிலதிபர்களின் தாயகமாக இந்தியா உள்ளது.

ஆனால் உலகின் மிக விலையுயர்ந்த தனியார் ஜெட் விமானத்தின் உரிமையாளர் இந்தியர் அல்ல. உலகின் மிக விலையுயர்ந்த தனியார் விமானத்தின் உரிமையாளர் வேறு யாருமல்ல, சவூதி அரேபிய இளவரசரும் தொழிலதிபருமான அல் வலீத் பின் தலால் அல் சௌத் (Saudi prince Alwaleed bin Talal al-Saud) ஆவார்.

அவர் ஒரு முக்கிய மத்திய கிழக்கு அரச குடும்பத்தின் உறுப்பினராகவும், பெரும் செல்வத்தை உடையவராகவும் உள்ளார். Saudi prince Alwaleed bin Talal al-Saud, most expensive private jet in the world, Mukesh Ambani private jet, Gautam Adani private jets, Ratan Tata most expensive private jet, Elon Musk, Bill Gates, Jeff Bezos, இந்த ஒன்றை விமானம் ரூ.16,000 கோடி., உலகின் மிக விலையுயர்ந்த Private Jet வைத்திருக்கும் கோடீஸ்வர இளவரசர்

சவூதி இளவரசர் அல்வலீத் பின் தலால் அல்-சவுத் உலகின் மிக விலையுயர்ந்த தனியார் ஜெட் விமானத்தை வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது, இது 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புடையதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது இலங்கை பண மதிப்பில் ரூ. 16,000 கோடிக்கு மேல் இருக்கும். இதை ஒப்பிடும்போது, அம்பானி மற்றும் டாடா இருவரும் வைத்திருக்கும் தனியார் ஜெட் விமானங்களின் மதிப்பு மிகவும் குறைவானதாகவே உள்ளன.

இளவரசர் அல்வலீத் பின் தலால் அல்-சவுத் Boeing 747 தனியார் விமானத்தை வைத்திருக்கிறார், இது பொதுவாக 150 முதல் 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை மதிப்புடையதாக உள்ளது. Saudi prince Alwaleed bin Talal al-Saud, most expensive private jet in the world, Mukesh Ambani private jet, Gautam Adani private jets, Ratan Tata most expensive private jet, Elon Musk, Bill Gates, Jeff Bezos, இந்த ஒன்றை விமானம் ரூ.16,000 கோடி., உலகின் மிக விலையுயர்ந்த Private Jet வைத்திருக்கும் கோடீஸ்வர இளவரசர்.

ஆனால், விரிவான மேம்படுத்தல்கள் மற்றும் மாற்றங்கள் காரணமாக, இளவரசரின் தனியார் விமானத்தின் மொத்த விலை சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது. இந்த விமானத்தில் 800 விருந்தினர்கள் வரை தங்கலாம் மற்றும் 10-seat dining hall, opulent master suite, prayer room, home theatre system, spa மற்றும் sauna ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Saudi prince Alwaleed bin Talal al-Saud, most expensive private jet in the world, Mukesh Ambani private jet, Gautam Adani private jets, Ratan Tata most expensive private jet, Elon Musk, Bill Gates, Jeff Bezos, இந்த ஒன்றை விமானம் ரூ.16,000 கோடி., உலகின் மிக விலையுயர்ந்த Private Jet வைத்திருக்கும் கோடீஸ்வர இளவரசர்.

அல் வலீத் பின் தலால் அல் சவுதின் மொத்த சொத்து மதிப்பு 18.7 billion USD, இலங்கை பணமதிப்பில் கிட்டத்தட்ட ரூ. 6 லட்சம் கோடி என Forbes மதிப்பிட்டுள்ளது. இந்திய கோடீஸ்வரரான Mukesh Ambaniக்கு சொந்தமான Boeing Business Jet 2 விமானத்தின் மதிப்பு ரூ.603 கோடி என கூறப்படுகிறது.

அதானி குழுமத்தின் Gautam Adaniயிடம் Hawker Beechcraft 850XP, Embraer Legacy 650, and Bombardier Challenger 605 மொடல்கள் உட்பட பல தனியார் விமானங்களும் உள்ளன. இதற்கிடையில், டாடா குழுமத்தின் Ratan Tata மிகவும் விலையுயர்ந்த தனியார் ஜெட் மாடல்களில் ஒன்றான Dassault Falcon 2000 விமானத்தைக் கொண்டுள்ளது, அதன் மதிப்பு ரூ.200 கோடிக்கு மேல் என கூறப்படுகிறது. Elon Musk, Bill Gates மற்றும் Jeff Bezos போன்ற மற்ற பில்லியனர்களும் தனியார் ஜெட் விமானங்களை வைத்திருக்கின்றனர்.

நிறைமாத கர்ப்பிணிப் பெண் தூக்கிட்டு தற்கொலை : கதறும் குடும்பம்!!

கள்ளக்குறிச்சியில்..

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 8 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. கள்ளக்குறிச்சி மாவட்டம் அகரகோட்டாலத்தைச் சேர்ந்த வெற்றிச்செல்வனும், ஆரோக்கிய ஷர்மிளா என்ற இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர், கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்சனைகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனக்கசப்பு ஏற்பட்ட ஆரோக்கிய ஷர்மிளா தனது தாய் வீட்டிற்கு செல்ல முடிவு செய்துள்ளார்.

8 மாத கர்ப்பிணியான ஆரோக்கிய ஷர்மிளா கள்ளக்குறிச்சியில் தனது தாய் வீடு இருக்கும் ராயபுரம் கிராமத்திற்கு வந்துள்ளார். சிறிது காலம் அங்கேயே தங்கியுள்ளார். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட மனக்கசப்பு சண்டையாக முற்றியதாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலில் இருந்து வந்த ஆரோக்கிய ஷர்மிளா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

அதன்படி, வீட்டில் யாரும் இல்லாத வேளையில், படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதைப் பார்த்த பெற்றோர்கள், உறவினர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

10 வருடங்களாக மனைவியின் நடத்தையில் சந்தேகம் : கணவன் செய்த கொடூர செயல்!!

தெலுங்கானாவில்..

சந்தேகத்தின் பேரில் மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் விஜய் (41). ஆட்டோ டிரைவரான இவருக்கும் புஷ்பலதாவுக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகனும், 9 வயதில் ஒரு மகளும் உள்ளனர். புஷ்பலதா பியூட்டிஷியன் படித்து வந்தார்.

மனைவி புஷ்பலதாவின் நடத்தையில் விஜய்க்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் இவருக்கும் புஷ்பலதாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கிடையில், விஜய்யின் சகோதரி சமீபத்தில் NNURM காலனியில் அரசுக்கு சொந்தமான இரண்டு படுக்கையறைகள் கொண்ட வீட்டை வாங்கினார்.

நேற்று மாலை வீட்டை சுத்தம் செய்ய மனைவி புஷ்பலதாவை அழைத்துச் சென்றார் விஜய். விஜய் படுக்கையறையில் கழுத்தை அறுத்து புஷ்பலதாவை கொன்றார். இதையடுத்து, ரத்த வெள்ளத்தில் அவர் வீட்டை விட்டு வெளியேறியதை பார்த்த பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அப்துல்லாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட புஷ்பலதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் புஷ்பலதாவை கொலை செய்ய அவரது சகோதரி வீட்டிற்கு விஜய் அழைத்துச் சென்றது தெரியவந்தது. கொலை நடந்த முந்தைய நாள் விஜய் கத்தியை வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து நேற்று இரவு போலீசார் விஜய்யை கைது செய்தனர்.

அப்துல்லாபூர்மேடு போலீசார் கூறுகையில், விஜய் தனது மனைவி புஷ்பலதா தனக்கு துரோகம் செய்ததாக சந்தேகம் கொண்டதால் இந்த கொலையை செய்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக கணவன்-மனைவி இடையே சந்தேகத்தின் காரணமாக பிரச்னை இருந்து வந்தது.

இதுகுறித்து புஷ்பலதாவும் புகார் அளித்துள்ளார்,” என்றனர். கடந்த 2014ம் ஆண்டு புஷ்பலதாவை தாக்கிய விஜய் மீது மெடிப்பள்ளி காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வீதிகளில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கு எச்சரிக்கை!!

பாணந்துறையில்..

ஆள்நடமாட்டம் குறைந்த வீதிகளில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாணந்துறையில் வீதியொன்றில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் 74 வயதுடைய பெண்ணொருவரின் கழுத்தில் இருந்த நகையை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சுமார் ஒன்றரை பவுண் கொண்ட 130,000 ரூபா பெறுமதியான தங்க சங்கிலி திருடப்பட்டுள்ளது.

அருகாமையில் உள்ள மத ஸ்தலத்தில் இருந்து வீடு திரும்பிய போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி பெண்ணை தரையில் உருட்டி நகையை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவம் அருகில் உள்ள நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் பாணந்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நகைகளுடன் பயணிக்கும் பெண்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடாவில் குடியேற காத்திருப்போருக்கு ஏற்பட உள்ள சிக்கல்!!

கனடாவில்..

கனடா அரசியல்வாதிகளும் மக்களில் ஒரு பகுதியினரும் புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு வருவதை எதிர்ப்பதாக ஆய்வுகள் தகவல் வெளியிட்டுள்ளன. அத்தோடு கனடாவில் ஏற்ப்பட்டுள்ள வீட்டுப் பற்றாக்குறைக்கு புலம்பெயர்ந்தோர் தான் காரணம் என சில அமைச்சர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கனடாவில் புலம்பெயர்தலானது பேசு பொருளாகியுள்ள நிலையில் அரசியல்வாதிகள் புலம்பெயர்தலை எதிர்ப்பதை அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. புலம்பெயர்வோரை வரவேற்கும் நீங்கள் அதற்கேற்ப வீடுகளைக் கட்டவேண்டாமா என அரசை நோக்கி எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன.

கனடா அரசியல்வாதிகள் மட்டுமின்றி கனடா மக்களில் ஒரு பகுதியினரும் புலம்பெயர்தலுக்கு எதிராக இருப்பது ஆய்வுகளில் வெளியாகி உள்ளது. சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் வெறும் 9 சதவிகித கனேடியர்கள் மட்டுமே பெரும் எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு வருவதை ஆதரிக்கிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

அத்துடன், 43% பேர் இப்போது இருக்கும் எண்ணிக்கையிலேயே புலம்பெயர்வோர் வருகை இருக்குமானால் தங்களுக்குப் பிரச்சினையில்லை என்று கூற 39% பேர் குறைந்த எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு வந்தால் போதும் என நினைக்கின்றார்கள். அத்துடன், 72% கனேடியர்கள் கனடாவின் மக்கள்தொகை அதிகரிப்பதில் புலம்பெயர்ந்தோரின் பங்கு முக்கியமானது என கருதுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதே எண்ணிக்கையிலானவர்கள், அதாவது 75% கனேடியர்கள் வீடுகள் பற்றாக்குறை பிரச்சினைக்கு புலம்பெயர்ந்தோர் தான் காரணம் என்றும், 73% கனேடியர்கள் கனடாவின் மருத்துவ அமைப்புக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதற்கு புலம்பெயர்ந்தோர் காரணம் என்றும் கருதுகின்றனர்.

63% கனேடியர்கள் பள்ளிகளில் கனேடிய மாணவர்களுக்கு இடப்பற்றாக்குறை ஏற்படுவதற்கு புலம்பெயர்ந்தோர் காரணம் என்றும் கருதுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

2025ஆம் ஆண்டு இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய வரி!!

இலங்கையில்..

2025ஆம் ஆண்டு இலங்கையில் புதிய சொத்து வரி அறிமுகப்படுத்தப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுக் குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்ட வேலைத்திட்டத்தின் பிரகாரம் இந்த வரி அறிமுகப்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வரி மூலம் சொத்து உரிமையாளர்களிடம் இருந்து அரசாங்கத்தால் வரி வசூலிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2022இல் வரி வருவாய் 7%ஆகக் குறைந்திருந்தது. இலங்கையின் வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியம் பூரண ஆதரவை வழங்கி வருகிறது.

அரசாங்கத்தின் வரி வருமானத்தை முன்னைய நிலைக்கு அதிகரிப்பது மிகவும் முக்கியமானது. மேலும், கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகள் தொடர்பில் மிக விரைவில் இறுதி உடன்படிக்கைகளை எட்டுவது மிகவும் முக்கியமானது என சுட்டிக்காட்டியுள்ளார்.

சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவி குடும்பஸ்தர் : பொலிஸாருக்கு ஏற்பட்ட பெரும் அவமானம்!!

குருணாகலில்..

குருணாகலில் அப்பாவி குடிமகன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவம் பொலிஸ் திணைக்களத்திற்கு பெரும் அவமானம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாரம்மல பிரதேசத்தில் உப பொலிஸ் பரிசோதகரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் லொறி சாரதி ஒருவர் உயிரிழந்தார்.

இந்த செயற்பாடு தனிப்பட்ட ரீதியிலும் திணைக்களமும் எதிர்கொண்ட பாரிய அவமானம் என குருநாகல் மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், மிகவும் போராடி சம்பாதித்த மக்களின் நம்பிக்கையை ஒரே நொடியில் அழிக்க முடியும் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் எதுவுமில்லை என அவர் கூறியுள்ளார்.

குற்றஞ்சாட்டப்பட்ட இந்த அதிகாரியின் நடவடிக்கையால் வீதியில் பயணித்த அப்பாவி குடிமகன் ஒருவரின் துரதிர்ஷ்டவசமான மரணம் ஏற்பட்டுள்ளது.

இழப்பீடு அல்லது விலையால் ஈடுகட்ட முடியாத இழப்பு எனவும் ஒரு குடும்பத்திற்கு கணவர் மற்றும் பிள்ளைகளுக்கு தந்தை இல்லாமல் போயுள்ளதென அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகத்திற்குரிய இந்த அதிகாரி தொடர்பில் நியாயமானதும் வெளிப்படையானதுமான விசாரணையை நடத்துவதற்கு சாத்தியமான அனைத்து சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என சுஜித் வேதமுல்ல உறுதியளித்துள்ளார்.