திஸ்ஸமஹாராம (Tissamaharama) பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் கடும் வறுமையினால் உயிரை மாய்க்க முயன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த குடும்பம் எந்த சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழும் எந்த உதவியும் பெறவில்லை தெரியவந்துள்ளது. தனது 2 பிள்ளைகளுக்கு உணவு, பானங்கள் மற்றும் கல்வியை வழங்க முடியாத நிலையில் இந்த குடும்பத்தினர் சிக்கியுள்ளனர்.
அன்றாடம் உணவு இல்லாமை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமான மனவிரக்தியில் இருந்த தந்தை விஷம் அருந்திய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் வசிக்கும் தந்தையொருவரே இவ்வாறான செயலை செய்துள்ளார்.
தாய்வானின் கிழக்கு கடற்கரையில் இன்று 7.4 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தாய்வானின் ஹுவாலியன் நகருக்கு தெற்கே 18 கிலோமீட்டர் (11 மைல்) தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக தாய்வானில் உள்ள கட்டடங்கள் பல தரைமட்டம் ஆகியுள்ளதுடன் இடிந்து விழுந்துள்ள கட்டிடங்கள் உள்ளே மக்கள் சிக்கியிருப்பதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தை தொடர்ந்து தாய்வானின் மத்திய வானிலை நிர்வாகம் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது.
வடக்கு கடலோர பகுதியில் சுனாமி அலைகள் தாக்கத்தை ஏற்படுத்தும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மக்களை உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஜப்பான் வானிலை ஆய்வு மையம் மியாகோஜிமா மற்றும் ஒகினாவா தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது. 3 மீற்றர் உயரத்திற்கு அலைகள் எழும்பும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மட்டக்குளிய – இக்பாவத்தை (Mattakuleya) பகுதியில் சுற்றுலாச்சென்ற தனியார் பேருந்தொன்று இன்று அதிகாலை (03.04.2024) திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த பேருந்தின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும் வீதியில் பேருந்தினை நிறுத்திவிட்டு தேநீர் அருந்த சென்ற போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொட்டாஞ்சேனை பொலிஸார் விசாரணை
கண்டி நோக்கிச்சென்ற சுற்றுலா பேருந்தே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளதாகவும், இதன்போது பேருந்தில் யாரும் இருக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில், தீ விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போலவே, ஃபேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன் உள்ளது. எழுத்துப் பிழை அல்லது வார்த்தைப் பிழையுடன் செய்தியை அனுப்பினால், அதை முழுவதுமாக நீக்க வேண்டாம், எடிட் ஆப்ஷனைப் பயன்படுத்தி எளிதாகத் திருத்தலாம்.
செய்தியை அனுப்பிய 15 நிமிடங்களில் திருத்தவும்.
அதுவரை மட்டுமே இந்த விருப்பம் செயல்படுத்தப்படும். இந்த விருப்பம் iOS மற்றும் Android இரண்டிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்த, மெசஞ்சரை சமீபத்திய பதிப்பிற்குப் புதுப்பிக்க வேண்டும்.
மெசஞ்சரில் எடிட் ஆப்ஷனை பயன்படுத்தும் முறை
முதலில் மெசஞ்சரில் உள்ள செட்டிங்ஸ் பக்கத்திற்கு செல்லவும். குறிப்பிட்ட செட் பக்கத்திற்குச் சென்று, நீங்கள் திருத்த விரும்பும் செய்தியை நீண்ட நேரம் அழுத்தவும்.
அடுத்து எடிட் என்பதைத் தேர்ந்தெடுக்கவும், இப்போது நீங்கள் அந்த செய்தியை திருத்தலாம். ஒரு செய்தியை அதிகபட்சம் 5 முறை திருத்தலாம். செய்தியை எடிட் செய்த பிறகு, அதன் கீழ் எடிட்டட் ஹைலைட் செய்யப்படும்.
யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த பெண்ணின் கை பெரு விரலில் மை கிடந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
உயிரிழந்த மூதாட்டியின் சொத்துக்களை சட்டவிரோதமாக பெற்று இருக்கலாம் என சந்தேகமடைந்த நிலையிலேயே பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழ். மானிப்பாய் பகுதியை சேர்ந்த குறித்த மூதாட்டி திடீர் சுகவீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் மகன் வெளிநாட்டில் இருந்து, வைத்தியசாலை பணிப்பாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ” தாயிடம் இருந்து சிலர் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை எழுதி வாங்கியுள்ளார்” என எனக்கு தகவல் கிடைத்துள்ளது.
அது குறித்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனையடுத்து, பணிப்பாளர் சட்ட வைத்திய அதிகாரிக்கு இந்த விடயத்தினை தெரியப்படுத்தியுள்ளார். மேலும், திடீர் மரண விசாரணை அதிகாரியும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.
இதன்போது, குறித்த மூதாட்டியின் கை பெருவிரலில் மை அடையாளம் காணப்பட்டுள்ளது, அது தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பொலிஸார் உயிரிழந்த மூதாட்டியை பராமரித்தவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்த வேளை தாம் வைத்தியசாலையில் பெண்ணை அனுமதிக்கும் போது பெருவிரலில் மை அடையாளம் இல்லை எனவும், பின்னர் எப்படி வந்தது என தமக்கு தெரியாது எனவும் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, வெளிநாட்டில் வசிக்கும் உயிரிழந்த பெண்ணின் மகன் வைத்தியசாலைக்கு நேரில் வருகை தந்து பெண்ணை அடையாளம் காட்டிய பின்னரே உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும், அது வரை சடலம் பிரேத அறையில் பாதுகாப்பாக வைத்திருக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கிளிநொச்சி பகுதியில் இரண்டு தரப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக வீடொன்றில் இருந்த முக்கிய ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சியில் உள்ள தர்மபுரம், உழவனூர் பகுதியில் இன்றைய தினம் (02-04-2024) காலை இருவீட்டாருக்கு இடையில் வாய்த்தக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக வீட்டு உரிமையாளர் இல்லாத சமயத்தில் வீட்டின் ஒரு அறையில் இருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் ஆடைகள் அனைத்தும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. மேலும், பிள்ளைகளுக்கு சமைத்து வைத்த மதிய உணவிலும் விஷமிகளால் விஷம் கலக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட வருகிறது.
தனியார் உயர்கல்வி நிறுவனமொன்றில் பாடநெறி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்ற மாணவனை காணவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் 17 வயதுடைய குறித்த மாணவன் தனது 21 வயது காதலியுடன் கடலில் நீராட சென்ற போது கடலலையில் மாணவன் அடித்துச் செல்லப்பட்டதாக காதலி பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
இருப்பினும் காதலியின் கருத்து தொடர்பில் மாணவனின் உறவினர்கள் சந்தேகம் வௌியிட்டுள்ளனர். காலி(Galle) வலஹந்துவ பகுதியைச் சேர்ந்த சேனுக தேஷான் என்ற மாணவனே மார்ச் 18ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்.
தனியார் உயர்கல்வி நிறுவனத்தில் பாடநெறி ஒன்றில் கலந்துகொள்வதாக அம்மாவிடம் கூறிவிட்டு அன்று காலை வீட்டில் இருந்து புறப்பட்ட மாணவன், தனது 21 வயது காதலியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக காலி ஜங்கள் கடற்கரைக்கு சென்றது பின்னர் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜங்கள் கடற்கரையில்(Jungle beach) இருந்து திரும்புவதற்கு தயாராகிக் கொண்டிருந்த வேளையில் திடீரென ஏற்பட்ட அலையினால் இருவரும் கடலில் அடித்துச் செல்லப்பட்டதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார். அதில், தான் உயிர் பிழைத்ததாகவும் ஆனால் தனது காதலன் நீரில் மூழ்கியதாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் பொலிஸில் பல தடவைகள் முறைப்பாடு செய்துள்ள சேனுகவின் உறவினர்களுக்கு, காதலி தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவ்வித குற்றவியல் குற்றங்கள் தொடர்பிலும் பதிவாகவில்லை எனவும் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஹபராதுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வளிமண்டலவியல் திணைக்களம் (Department of meteorology sri lanka) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை வெளியிட்டுள்ளது. அந்தவகையில், மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், மத்திய, சப்ரகமுவ, மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
வவுனியா சூடுவெந்தபுலவு பகுதியில் நேற்று (02.04.2024) மதியம் தனியார் பேரூந்தினை வழிமறித்து மற்றொரு தனியார் பேரூந்து சாரதி, நடத்துனர் குறித்த பேரூந்து நடத்துனர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொண்டமையுடன் அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர்.
செட்டிக்குளம் வீரபுரம் ஊடாக வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேரூந்தினை பாவற்குளத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேரூந்தின் சாரதி மற்றும் நடத்துனர் வழி மறித்து செட்டிக்குளம் தனியார் பேரூந்தின் நடத்துனர் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சி மேற்கொண்டமையுடன் அவருக்கு அச்சுறுத்தலும் விடுத்துள்ளார்.
நேரசூசி பிரச்சனை காரணமாகவே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருவதுடன் பொலிஸார் இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.
வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமணை, மாவட்ட பொது வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களின் இடம்மாற்றங்கள் இடம்பெற்றன.
அந்த வகையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக ஜி.சுகுணன் இன்று (03.04.2024) காலை தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாட்டில் ஈடுபட்டதுடன் பின்னர் வவனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளராக தனது கடமைகளை ஆரம்பித்தார்.
புதிய பணிப்பாளர் ஜி.சுகுணன் இதற்கு முன்னர் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக வேலை இல்லாப் பிரச்சனை இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாகியுள்ள நிலையில் அரச மற்றும் தனியார் துறைகளில் வேலை ஒன்றை பெற்றுக்கொள்வது என்பதும் பெரும்பாலும் எட்டாக்கனியாகியுள்ளது.
அரச மற்றும் தனியார் துறைகளில் வேலை செய்பவர்கள் கூட தமது அன்றாட செலவீனங்களை சமாளிப்பதில் திணறி வரும் இந்த வேளையில் “வீட்டிலிருந்தே ஒன்லைனில் சம்பாதிப்பது எப்படி” என்பது தொடர்பான இலவச தொழில்வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்றினை வவுனியா Tech Masters Campus ஆகிய நாம் வரும் சனிக்கிழமை (06.04.2024) காலை 10 மணியளவில் ஒழுங்கு செய்துள்ளோம்.
இவ் இலவச கருத்தரங்கில் “இணையத்தில் நேர்மையான வழியில் பணம் சம்பாதிப்பது” தொடர்பான முழுமையான விளக்கங்களுடன் பயிற்சியும் வழங்கப்படும்.
இத் துறையில் பலவருட அனுபவம் கொண்ட பயிற்சியாளரால் பயிற்சி வழங்கப்படுவதுடன் ஆர்வமுள்ள அனைவரும் கலந்துகொள்ள முடியும்.
இக் கருத்தரங்கில் கலந்துகொள்ள விரும்புவோர் கீழுள்ள முகவரிக்கு நேரடியாக வருகைதந்து இலவச அனுமதி அட்டை ஒன்றை பெற்று உங்கள் வருகையை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
Tech Masters Campus
No 206 1/8 First Floor, Station Road, Vairavapuliyankulam, Vavuniya
(குருமன்காடு சந்தியில் இருந்து 100 மீற்றர் தூரத்தில் புகையிரத நிலைய வீதியில்)
பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறைக்கப்பட மாட்டாது என பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறைக்கப்படும் தீர்மானம் இல்லை என்று குறித்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட போதிலும் தமது சங்கம் உற்பத்திப் பொருட்களின் விலைகளை உயர்த்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், மூலப் பொருட்களுக்கான விலை குறைக்கப்பட்டால் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை குறைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு கோரி வவுனியா வைத்தியசாலையின் சுகாதார தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனர்.
வவுனியா வைத்தியசாலை வளாகத்திற்குள் இன்று (02.04.2024) மதியம் ஆரம்பமான குறித்த பேரணி யாழ்வீதிவழியாக சென்று மீண்டும் வைத்தியசாலையினை அடைந்து நிறைவுபெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள்..
சுகாதாரத்துறையின் ஒரு பகுதியினருக்கு மாத்திரம் வழங்கப்பட்ட கொடுப்பனவு அனைவருக்கும் வழங்கப்படவேண்டும், அத்துடன் முறையான பதவி உயர்வுகள் வழங்கப்படவில்லை, இதேவேளை நிலுவைக் கொடுப்பனவுகள், சீருடைக் கொடுப்பனவுகள் போன்றன நீண்டகாலமாக வழங்கப்படவில்லை,
இந்த விடயங்கள் தொடர்பாக தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்ற போதும் அதனால் எந்த பயனும் கிடைக்காத நிலமையே நீடிக்கின்றது.
எனவே எமது கோரிக்கையினை அரசாங்கம் செவிமடுக்காது விடில் நாளையதினத்திலிருந்து தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு தாயாராகிவருவதாக தெரிவித்தனர்.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சொந்த நாட்டில் வேலை செய்யும் எமக்கா இந்த நிலமை, அரசாங்கமே வீடு செல்,வாக்குறுதி அளித்தபடி பொருளாதார கோரிக்கைகளை நிறைவுசெய் போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
குறித்த பேரணியில் அரச தாதிய உத்தியோகத்தர்கள், சுகாதார ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
கொழும்பில் ,ஐபில் மேட்ச் பார்க்கவேண்டும் என்பதற்காக துவிச்சக்கர வணடியில் அதிவேகமாக பயணித்த இளைஞர் மின்கம்பத்தில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் கொழும்பு கல்கிசையை சேர்ந்த 17 வயது இளைஞரே உயிரிழந்துள்ளார். கடந்த முறை இடம்பெற்ற கா.பொ.த உயர்தர பரீட்சை எழுதிய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந் நிலையில், கிரிகெட் போட்டி மீதான மோகம் இளைஞரின் உயிரை பறித்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை அதீத சில ஈர்ப்புக்கள் இளையோரிடையே , அவர்களின் உயிருக்கு கூட ஆபத்தாகும் நிலமை தற்போது தோன்றியுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் சமூகத்தில் இடம்பெறுகின்றமை பெரும் வேதனைக்குரியதொன்றாகும்.
முகநூல் மற்றும் சமூக ஊடகங்களில் 06 யுவதிகள் பாலியல் முறையில் தவறாக உட்படுத்தப்பட்டமை தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் நேற்று (01) நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான யுவதிகள் தனித்தனியாக முன்வைத்த 06 முறைப்பாடுகளை பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் சாமந்தி ரேணுகா கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றததின் கவனத்துக்கு சமர்ப்பித்துள்ளார்.
மாத்தறை, தெனிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய பெண் ஒருவர் பேஸ்புக்கில் போலி கணக்கை உருவாக்கி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
நவகமுவ பிரதேசத்தில் வசிக்கும் 20 வயதுடைய பெண் ஒருவர் தனது புகைப்படங்கள் மற்றும் தொலைபேசி இலக்கங்களை முகநூல் கணக்கில் வெளியிட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக மற்றுமொரு முறைப்பாட்டை பலபோவ பிரதேசத்தைச் சேர்ந்த யுவதியொருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
இதேவேளை அடையாளம் தெரியாதநபர் ஒருவர் தன்னை அவமதிக்கும் வகையில் தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை விடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக தந்துரே பகுதியைச் சேர்ந்த யுவதியொருவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு விரிவான அறிக்கையொன்றை நீதிமன்றத்துக்குச் சமர்ப்பிக்குமாறு பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வட மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் நாளை முதல் வெப்பநிலை மேலும் உயர்வடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் வட மாகாணத்தின் உள்நிலப்பகுதிகளின் பல இடங்களில் வெப்ப அலை வீசுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த தகவல்களை யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, நாளை முதல் (03) வடக்கு மாகாணத்தின் வவுனியா,மாங்குளம், முறிகண்டி, நட்டாங்கண்டல், துணுக்காய், ஓமந்தை, கரிப்பட்ட முறிப்பு, சின்னத்தம்பனை, பாலைப் பாணி, மூன்றுமுறிப்பு,
ஐயன் குளம், மடு,கீரி சுட்டான், தட்டாங்குளம், பகுதிகளில் பகல் காலை 10.00 மணி முதல் மாலை 3.30 மணி வரை பகல் பொழுது வெப்பநிலை 41 பாகை செல்சியஸ் இனை அண்மிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வடக்கு மாகாணத்தின் உள்நிலப்பகுதிகளின் பல இடங்களில் வெப்ப அலை (Heat Waves) வீசுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
வெப்பசலனம் காரணமாக ஆங்காங்கே ஒரு சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னரும் காலை 7.00 மணிக்கு முன்னரும் மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆனாலும் இம்மழை அதிகரிக்கும்.
வெப்பநிலையின் பாதிப்புக்களை தற்காலிகமாக தணித்து குறுகிய காலத்திற்கு மட்டுமே சௌகரியமான வானிலையை உருவாக்கும். முன்னைய பதிவொன்றில் குறிப்பிட்டது போன்று, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை வெப்பநிலை உயர்வாகவே இருக்கும்.
எனவே, அதிகரிக்கும் வெப்பநிலை, வெப்ப அலை தொடர்பிலும் எச்சரிக்கையாக இருப்பது சிறந்தது. அதிகரித்த வெப்பநிலையை கருத்தில் கொண்டு எமது அன்றாட செயற்பாடுகளை மேற்கொள்வது உசிதமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.