மீண்டும் முகக்கவசம் அணியுங்கள் : பொதுமக்களிடம் சுகாதார அமைச்சர் கோரிக்கை!!

இலங்கையில்..

நாட்டுமக்களை மீண்டும் முகக்கவசம் அணிந்து கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் நாட்டில் கொவிட் பரவல் தொடர்பில் அதிகாரிகள் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மீண்டும் ஜே.என்.01 (JN 1 OMICRON) உப பிறழ்வான புதிய கொவிட் வைரஸ் திரிபு பரவி வரும் நிலையிலேயே அமைச்சர் இக் கோரிக்கையை விடுத்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது நாட்டில் மீண்டும் கொவிட் – 19 தொற்று பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் புதிய திரிபான ஜே.என்.01 கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் 41 நாடுகளில் பரவியுள்ளது. இலங்கையில் பரவும் அபாயம் இருக்கின்றதா என்பது தொடர்பில் அதிகாரிகள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர். இலங்கையை பொருத்தவரை அந்த தொற்று பரவும் அபாயம் குறைவாக இருந்த போதிலும் பொதுமக்கள் அவதானமாக செயற்படுவது பாதுகாப்பானதாகும்.

நாட்டில் கொவிட் கட்டுப்பாட்டுக்கான பரந்த தடுப்பூசி திட்டம் நடைமுறையில் இருந்தாலும், நாட்டு மக்கள் கொவிட்டில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கு முகக்கவசம் அணிந்து கொள்வது உகந்தது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொவிட் காலத்தில் போன்று மீண்டும் முகக்கவசம் அணியுமாறு ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடணம் உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

கொழும்பில் அழகிய இளம் பெண்களை பணத்திற்கு விற்பனை செய்யும் கும்பல்!!

கொழும்பில்..

கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளை எடுத்துச் சென்ற மாமா என்ற பெயருடைய கடத்தல்காரர் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தங்கியுள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பை சுற்றிவளைத்த பொலிஸார், நான்கு அழகான யுவதிகளையும் மேலும் நான்கு இளைஞர்களையும் கைது செய்துள்ளனர். ஐஸ் போதைப்பொருள்கள் மற்றும் அவற்றைக் குடிக்கப் பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதன்படி அழகான யுவதிகளுக்கு போதைப்பொருள் கொடுத்து அவர்களை பணத்திற்கு விற்பனை செய்யும் மோசடி ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும், பொலிஸார் வீட்டை மேலும் சோதனையிட்ட போது, ​​போதைப்பொருள் ஐஸ் பொதி செய்ய பயன்படுத்தப்பட்ட சிறிய மெழுகு குச்சிகள் பெருமளவில் கண்டுபிடித்துள்ளனர்.

நாட்டில் பதிவாகியுள்ள இரண்டாவது கொவிட் மரணம் : மீண்டும் அதிகரிக்கும் தொற்று!!

கம்பஹாவில்..

கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் கொவிட்-19 நிமோனியா தொற்றால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இதனை கம்பஹா மரண விசாரணை அதிகாரி வைத்தியர் பி.பி.ஆர்.பி.ராஜபக்ச உறுதிப்படுத்தியுள்ளார்.இவ்வாறு உயிரிழந்தவர் யக்கல பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடைய பெண் என தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சுகயீனம் காரணமாக கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த பெண் உயிரிழந்ததையடுத்து, மரணத்துக்கான காரணம் கொவிட்-19 நிமோனியா என தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனையின் போது கொவிட் -19 நிமோனியாவால் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.உயிரிழந்தவரின் சடலத்தை பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தகனம் செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா மாநகர சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, கடந்த (23) திகதி கம்பளை ஹேத்கல பிரதேசத்தை சேர்ந்த 65 வயதான நபரின் மரணம் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரபல நடிகரும் தே.மு.தி.க நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் திடீர் மறைவு: சோகத்தில் ரசிகர்கள்!!

விஜயகாந்த்..

சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி தமிழகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் காலை காட்சி ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று (டிச.28) காலை காலமானார். அவருக்கு வயது (71). அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விஜயகாந்த் இல்லத்தில் உள்ள தேமுதிக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.

அவரது மறைவு தொடர்பாக மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “நிமோனியா (நுரையீரல் அழற்சி) காரணமாக அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்துக்கு மருத்துவப் பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் காலமானார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விஜயகாந்த் மறைவையொட்டி தமிழகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் காலை காட்சி ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

தனியார் சேனலுக்கு பேட்டியளித்துள்ள அவர் கூறியதாவது: விஜயகாந்த் மறைவு சினிமா உலகத்துக்கு பேரிழப்பு. ஹீரோவுக்கும் லைட்மேனுக்கும் அதே உணவு என்ற முறையை கொண்டு வந்தவர்.

அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று (டிச.28) தமிழ்நாடு முழுவதுமுள்ள திரையரங்குகளில் காலை காட்சி ரத்து செய்யப்படுகிறது” என்று தெரிவித்தார்.

ஹீட்டரில் இருந்து வெளியான வாயு : இளம்பெண் மூச்சுத் திணறி பலி!!

பெங்களூருவில்..

பெங்களூருவில் ஹீட்டரில் இருந்து வெளியான கியாஸ் காரணமாக மூச்சுத் திணறி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரு காமாக்‌ஷிபாளையம் பகுதியை சேர்ந்தவர் இளம்பெண் ராஜேஸ்வரி. இவர் தனது குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வந்தார்.

கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, மீனாட்சி நகர்ப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்றுக் காலை குளிக்கச் சென்ற அவர் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனையடுத்து, குடும்பத்தார் நீண்ட நேரமாகக் கதவைத் தட்டியுள்ளனர். ஆனால், ராஜேஸ்வரியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

இதனால், பதற்றமடைந்த அவர்கள், குளியலறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ராஜேஸ்வரி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.உள்ளே, கியாஸ் சிலிண்டர் மூலம் பயன்படுத்தப்படும், ஹீட்டரில் இருந்து கியாஸ் லீக்கானதும் தெரியவந்தது. இதையடுத்து, ராஜேஸ்வரியை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். மேலும், அவர் ஹீட்டரில் இருந்து வெளியான கார்பன் மோனாக்ஸைட் காரணமாக மூச்சுத் திணறி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த தனது சகோதரருக்கு இன்னும் சில தினங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், ராஜேஸ்வரி இப்படி பரிதாபமாக பலியானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உன் சகோதரியை பெட்ரோல் ஊற்றி எரிச்சுட்டேன் : சகோதரனுக்கு வந்த அழைப்பு, மாமியார் வீட்டில் அரங்கேறிய கொடூரம்!!

மத்திய பிரதேசத்தில்..

மத்திய பிரதேசத்தில், சகோதரர் ஒருவருக்கு அவரது சகோதரியை கொன்றுவிட்டதாக வந்த அழைப்பு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக ஒருவர் தனது, மைத்துனி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு குழந்தைகளுக்கு தாயான நிர்மலா என்ற அந்த பெண் பலத்த தீக்காயங்களுடன் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.

இறந்த நிர்மலா என்ற அந்த பெண்ணின் கணவர் பிரகாஷ், ஆறு மாதங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது. பிரகாஷின் மூத்த சகோதரர் சுரேஷ், தனது தம்பியை தற்கொலைக்கு தூண்டியதே அவரது மனைவி நிர்மலா தான் என்று தனது மைத்துனி மீது பல நாட்களாக குற்றம் சாட்டி வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

கணவர் 6 மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து இறந்ததால், நிர்மலா தனது இரண்டு குழந்தைகளுடன் மாமியார் வீட்டில் தான் வசித்து வந்துள்ளார். இருப்பினும், இறந்த நிர்மலாவின் மைத்துனர் அந்த பெண் தொடர் வெறுப்பு கொண்டிருந்தார், அவர் தனது இளைய சகோதரனின் மரணத்திற்கு அவர் தான் காரணம் என்பதை அடிக்கடி கூறிவந்ததே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று சனிக்கிழமையன்று, சுரேஷ் அந்தப் பெண்ணைத் தாக்கி வீட்டை விட்டு வெளியே இழுத்துச் சென்று, பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அந்த பெண் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர். உடனே “உன் தங்கையை எரித்துவிட்டோம்” என்று நிர்மலாவின் சகோதரருக்கு போன் வந்துள்ளது.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் போலீசில் புகார் அளித்துள்ளார், தனது சகோதிரியை அன்று தான் தனது வீட்டுக்கு கூட்டி வர அவர் நினைத்ததாகவும், ஆனால் அதற்குள் அவர் கொல்லப்பட்டுள்ளார் என்றும் அவர் கூறினார். புகாரை அடுத்து போலீசார் இப்பொது சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐயோ என் பொண்ண வரதட்சணை கேட்டே கொன்னுட்டாங்களே: நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறும் தாய்!!

திருவள்ளூரில்..

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சிறுவாக்கம் சானார் பாளையம் கிராமத்தில் வசிப்பவர் பழனி. இவரது மகன் முரளிகிருஷ்ணன்(24). இவருக்கும் சோழவரம் ஜெகநாதபுரத்தை சேர்ந்த சேகர் மகள் தனலட்சுமி(20) என்பவருக்கும் கடந்த ஜனவரி 27ம் தேதி இரு வீட்டார் சம்மத்துடன் திருமணம் நடைபெற்றது.பொன்னேரி அருகே இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் பெண்ணின் மரணத்திற்கு காரணமான கணவர் குடும்பத்தினரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தால் ஈடுபட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சிறுவாக்கம் சானார் பாளையம் கிராமத்தில் வசிப்பவர் பழனி. இவரது மகன் முரளிகிருஷ்ணன்(24). இவருக்கும் சோழவரம் ஜெகநாதபுரத்தை சேர்ந்த சேகர் மகள் தனலட்சுமி(20) என்பவருக்கும் கடந்த ஜனவரி 27ம் தேதி இரு வீட்டார் சம்மத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், தனலட்சுமியை கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், தன்னை வீட்டிற்கு அழைத்து சென்றுவிடுமாறு பெற்றோரிடம் தனலட்சுமி கூறியுள்ளார். பின்னர் பெற்றோர் அவரை சமாதானம் செய்து வைத்துள்ளனர்.

இந்நிலையில், கடும் மன உளைச்சலுக்கு ஆளான தனலட்சுமி நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக தனலட்சுமியின் பெற்றோருக்கு தெரிவித்துள்ளனர். தகவலறிந்து தாய் முத்துலட்சுமி மகளின் உடலை பார்த்து நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறி அழுதனர். பின்னர் தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும், முரளிகிருஷ்ணன், சிவகாமி, ரவிக்குமார் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாகவும் பொன்னேரி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

இந்த புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் தனலட்சுமி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வரதட்சணை கொடுமை புகாரின் பேரில், பொன்னேரி ஆர்டிஓவான விசாரணை நடத்தி வருகிறார். இதனிடையே தனலட்சுமி தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

காதலித்து ஏமாற்றிய காதலி : கொடூரமாக கொலை செய்த காதலன்!!

சென்னையில்..

என்னை காதலித்து விட்டு, ஏமாற்றி விட்டு, இன்னொருத்தனைக் காதலித்து வந்ததால், ஆத்திரத்தில் நந்தினியைக் கொடூரமாக கொலைச் செய்ததாக முன்னாள் காதலன் போலீசாரிடம் வாக்குமூலம் தந்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.சென்னையில் ஐடி நிறுவன ஊழியர் இளம்பெண் நந்தினி, கொடூரமான முறையில் சங்கிலியால் கட்டப்பட்டு, எரித்து கொலை செய்யபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இந்த கொலை விவகாரத்தில் தேடப்பட்டு வந்த முன்னாள் காதலனை போலீசார் கைது செய்துள்ள நிலையில், தன்னை காதலித்து விட்டு, பின்னர் நிராகரித்து, வேறு ஒருவனைக் காதலித்ததால் காதலி நந்தினியைக் கொலை செய்ததாக போலீசாரிடம் கூறியுள்ளார்.சென்னை பொன்மார் அடுத்த தாழம்பூர் பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் பெண் ஒருவர் சங்கிலியால் கை கால்கள் கட்டபட்டு எரித்து கொல்லபட்ட நிலையில், அதனை போலீஸார் மீட்டு விசாரணை நடத்தினர்.

இதில் இறந்தவர் நாவலூர் மப்பேடு பகுதியை சேர்ந்த மென்பொறியாளர் நந்தினி (25) என்பது தெரிய வந்ததது,இந்த கொலை தொடர்பாக நந்தினியின் முன்னாள் காதலரான வெற்றி (28)என்பவரை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் விசாரணையில் வெற்றி, “மதுரையில் கல்லூரியில் படிக்கும் போதிருந்தே நந்தினியை ஐந்து வருடமாக காதலித்து வந்தேன். எனக்கு தன்பாலின ஈர்ப்பில் ஆர்வம் இருந்ததை அறிந்த நந்தினி என்னை திருநங்கை என்று கூறி நிராகரித்து விட்டார்.

ஆனால் நண்பர்களாக இருப்போம் என்ற அடிப்படையில் நந்தினியுடன் அதன் பிறகு பழகி வந்தேன்.என்னை வெறுத்த நந்தினி, ராகுல் என்பவரைக் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார். ராகுல் உடனான காதலை துண்டித்துக் கொள்ளுமாறு நந்தினியை தொடர்ந்து வற்புறுத்தி வந்தேன். அதனை நந்தினி பொருட்படுத்தவில்லை.

இதனால் அவரை கொலை செய்வதென்று முடிவெடுத்தேன். நேற்று நந்தினியின் பிறந்தநாள் என்பதால் கோயிலுக்கு நந்தினியுடன் சென்று விட்டு, ஆதரவற்ற இல்லத்தில் உணவு வழங்கினோம். பின்னர் பிறந்தநாள் சர்ப்ரைஸ் தருவதாக கூறி தாழம்பூர் பாழடைந்த கட்டிடத்திற்கு அழைத்து சென்றேன்.

அங்கு சென்றதும், நந்தினியின் கைகால்களை சங்கிலியால் கட்டிய பின்னர், மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தில் சரமாரியாக குத்தினேன். வலி தாங்க முடியாது நந்தினி கத்தியதால், கையோடு எடுத்து சென்றிருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தேன்” என்று வாக்கு மூலம் தந்துள்ளார்.

நண்பர் மற்றும் அவரின் குடும்பத்தையே கொடூரமாக கொலை செய்த கொடூரன்.. வெளிவந்த அதிர்ச்சிக் காரணம்!!

தெலங்கானாவில்..

ஒருவர் நண்பர் மற்றும் அவரின் குடும்பத்தையே கொடூரமாக கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் தெலங்கானாவில் நடைபெற்றுள்ளது. தெலங்கானா மையம் நிஜாமாபாத் மாவட்டம் மக்லூரைச் சேர்ந்த பிரசாத் (வயது 39) மற்றும் பிரசாந்த் ( வயது 25) ஆகியோர் நண்பர்களாக இருந்துள்ளனர்.

இதில் 2018ம் ஆண்டு இளம்பெண் தற்கொலை குறித்து பிரசாத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் துபாய் என்று அங்கிருந்து வழக்கு குறித்து தனது நண்பர் பிரசாந்திடம் கேட்டு வந்துள்ளார்.

அந்த காலகட்டத்தில் பிரசாத் 3.5 லட்சம் ரூபாய் வரை பிரசாந்த்க்கு கடன் கொடுத்துள்ளார். இதனிடையே கடந்த ஆண்ட நாடு திருப்பிய பிரசாத்தை போலிஸார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டாலும், கொலை குற்றம் காரணமாக அவரை கிராமமக்கள் ஊரை விட்டு விலக்கி வைத்துள்ளனர்.

இதனால் குடும்பத்துடன் காமரெட்டி மாவட்டத்தில் உள்ள பல்வஞ்சா பகுதிக்கு இடம்பெயர்ந்தார் பிரசாத் தனது நண்பர் பிரசாந்திடம் கொடுத்த கடனை திரும்ப கொடுத்துள்ளார்.

மேலும், அவசர உதவிக்கு பணம் தேவைப்பட்டதால் தனது சொத்துக்களை அடகுவைத்து பணம் தருமாறு பிரசாந்த் பெயரில் தனது சொத்துக்களை மாற்றியுள்ளார்.

இதனிடையே பிரசாத்தை கொலை செய்தால் அவர் சொத்து அனைத்தும் தனக்கு சொந்தமாகி விடும் என கருதிய பிரசாந்த் பிரசாத்தை தனியே ஒரு இடத்துக்கு வரவைத்து பானோத் வம்சி மற்றும் குகுலோத் விஷ்ணு மற்றும் மைனர் வயதுடைய தனது சகோதரரை கூட்டு சேர்த்து தனது நண்பர் பிரசாத்தை கொலை செய்துள்ளார்.

அதோடு நிற்காமல் தனது நண்பரின் குடும்ப உறுப்பினர்களான பிரசாத்தின் மனைவி சான்விகா மற்றும் சகோதரி ஸ்ரவாணி,ஸ்வப்னா, இரட்டை குழந்தைகள் சைத்ரிகா ஆகியோரையும் தனி தனியே வரவழைத்து கொலை செய்துள்ளார்.

மேலும் இந்த கொலைகளுக்கு தனது தாயாரையும் கூட்டு சேர்ந்துள்ளது. எனினும் அவர்களிடமிருந்து பிரசாத்தின் தாயார் சுசிலா மட்டுமே தப்பியுள்ளார். இதில் பிரசாத்தின் சகோதரி ஸ்ரவாணியின் உடலை கைப்பற்றிய போலிஸார் அது குறித்து விசாரணை நடத்தியபோதுதான் பிரசாந்த் தனது நன்பர் குடும்பத்தையே கொடூரமாக கொலை செய்த அதிர்ச்சி உண்மை தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து பிரசாந்த் மற்றும் அவருக்கு உதவியவர்களான குகுலோத் விஷ்ணு, பனோத் வம்சி, வட்டம்மா மற்றும் ஒரு சிறார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த போலிஸார் அவர்களை கைது செய்தனர்.

வரதட்சணை கொடுமை.. மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவர்..!!

உத்தரபிரதேசத்தில்..

அதிக வரதட்சணை கொடுக்குமாறு கேட்டு தகராறில் ஈடுபட்ட கணவன், ஒருகட்டத்தில் மனைவியின் மூக்கை கடித்து துப்பிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரதட்சணை கேட்பதே சட்டப்படி குற்றம் என்று இருக்கும் போது, மூக்கையும் கடித்து காயப்படுத்திய அந்தக் கொடூரனுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்தியாவை முன்னேறிய நாடு என நாம் கூறிக்கொண்டாலும் இன்னமும் மிகவும் பிற்போக்கான, அவமானகரமான செயல்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. சாதி ரீதியிலான கொடுமைகள், தீண்டாமை, வரதட்சணை என அவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இவற்றில் வரதட்சணை கொடுமை என்பது இந்த 21-ம் நூற்றாண்டிலும் தொடர்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. நன்றாக படித்த, நல்ல பணிகளில் இருப்பவர்கள் கூட வரதட்சணை கேட்பதையும், வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொள்வதையும் பார்க்க முடிகிறது.

அந்த வகையில், உத்தரபிரதேசத்தில் நடந்த சம்பவமானது, இந்தியாவில் வரதட்சணை கொடுமை எந்த அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை காட்டுவதாக உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்தவர் நஜீம். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அஜ்மி (22) என்ற பெண்ணுக்கும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 6 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

இதனிடையே, திருமணத்திற்கு முன்பு உறுதி செய்யப்பட்ட வரதட்சணையை காட்டிலும் சிறிதளவு குறைவான தொகையை பெண் வீட்டார் வழங்கியதாக தெரிகிறது. இதனால் திருமணம் ஆன நாள் முதலாகவே அஜ்மியை கணவன் நஜீமும், அவரது குடும்பத்தினரும் துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது.

ஒவ்வொரு முறை இப்படி பிரச்சினை நடக்கும் போதும், போலீஸாரிடம் கூறுவதற்காக அஜ்மி புறப்பட்டு செல்வாராம். ஆனால், அந்த ஊர் பெரியவர்கள் அவரை மடக்கிப் பிடித்து பஞ்சாயத்து நடத்தியே பிரச்சினையை தீர்த்து வைத்து வந்துள்ளனர்.

இந்த சூழலில், நேற்று முன்தினம் இரவு மது போதையில் வந்த நஜீம், தான் கேட்ட வரதட்சணையை இப்போதே கொண்டு வருமாறு அஜ்மியிடம் கூறி அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர், கூறிய வரதட்சணையை கொடுக்க முடியாத உனக்கு மூக்கு எதற்கு எனக் கேட்டு, பாய்ந்து சென்று அஜ்மியின் மூக்கை கடித்தார்.

இதில் மூக்கின் சிறு துண்டை அவர் கடித்து துப்பினார். இதனால் வலி தாங்க முடியாமல் அலறிய அஜ்மி, அப்படியே ஓடிச்சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், கணவன் நஜீம் மற்றும் அவரது குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.

15 மாதக் குழந்தையை நீரில் தூக்கிவீசிக் கொலை : கொடூர தாய் கைது!!

கர்நாடகாவில்..

கர்நாடகா மாநிலம், ராமநகர் மாவட்டம், பனஹல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியம்மா (21). இவர் இன்று காலை துணி துவைக்க செல்வதாக கூறி அருகில் உள்ள கனவா நீர்த்தேக்கத்துக்கு தனது 15 மாத ஆண் குழந்தை தேவராஜூடன் சென்றார்.

இந்நிலையில், மாலையில், குழந்தை தேவராஜ், நீரில் தவறி விழுந்து விட்டதாக பாக்கியம்மா அழுது கொண்டே வீட்டுக்கு வந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார். அந்த பெண்ணை சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, பாக்கியம்மா முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தார்.

இதனால் சந்தேகமடைந்த போலீஸார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பாக்கியம்மா தனது குழந்தையை நீரில் தூக்கி வீசி கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அவர் குழந்தையை ஏன் கொலை செய்தார் என்பதற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை.

ஆனால், தகாத தொடர்பில் இந்த குழந்தை பிறந்ததால் நீரில் வீசி கொலை செய்திருக்கலாம் என போலீஸார் தரப்பி்ல் தெரிவித்துள்ளனர். பெற்ற குழந்தையை நீரில் வீசி தாயே கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10 ஆண்டுகளாக தாயை தேடும் சுவிஸ்லாந்து பெண்.. மனதை உருக்கும் அன்பு!!

இந்தியாவில்..

இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள மும்பையில் 1996 பிப்ரவரி 8 -ம் திகதி பிறந்தவர் வித்யா ஃபிலிப்பன். இவரை, அவரது தாய் விலி பார்லேவில் உள்ள அன்னை தெரசா மிஷனரி கருணை இல்லத்தில் விட்டுச் சென்றார்.

பின்னர், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த தம்பதியினர் வித்யா ஃபிலிப்பனை அவர்களது நாட்டுக்கு அழைத்துச் சென்றனர். தற்போது, 27 வயதான வித்யா ஃபிலிப்பனுக்கு திருமணமாகிவிட்டது.

தனது தாய் வசித்ததாக கூறப்படும் தஹிசார் பகுதிக்குச் சென்று வித்யா ஃபிலிப்பன் விசாரித்துள்ளார். ஆனால், அங்கு அவரது குடும்ப பெயரான ‘காம்ப்ளி’ என்ற அடைமொழியுடன் யாரும் இல்லை. தற்போது, குடும்ப பெயரும், அடைமொழியும் மட்டுமே உள்ள நிலையில் தனது கணவருடன் வித்யா ஃபிலிப்பன் மனம் தளராது தேடி வருகிறார்.

இது தொடர்பாக வித்யா ஃபிலிப்பன் கூறுகையில், “எனது தாயைக் கண்டறிவதற்கு தத்து உரிமை கவுன்சில் இயக்குநரும், வழக்கறிஞருமான அஞ்சலி பவார் உதவி வருகிறார். எனது தாய் என்னை 20 வயதில் பெற்றெடுத்துள்ளார்.

தற்போது, 10 ஆண்டுகளாக நான் அவரை தேடி வருகிறேன். எனது அம்மாவை கண்டுபிடிப்பதற்கு மும்பை மக்கள் வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

பள்ளிக்கு செல்லும் போது சாலையில் சுருண்டு விழுந்த 13 வயது சிறுமி : அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

கர்நாடகாவில்..

கர்நாடகாவில் பள்ளிக்கு சென்ற 13 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் முடிகெரே தாலுகாவில் உள்ள கேசவலு ஜோகண்ணனகெரே கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ருஸ்தி. 13 வயது சிறுமியான இவர் தராதஹள்ளி தொடக்கப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் சிறுமி வழக்கம் போல் இன்று வீட்டிலிருந்து பள்ளிக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது செல்லும் போது திடீரென சாலையில் சுருண்டு விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சிறுமியை எம்.ஜி.எம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்குச் சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றுக்குப் பிறகு சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிகமாக மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இது குறித்து மருத்துவ ரீதியான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பூங்காவில் தொங்கிய மாணவியின் சடலம்… கதறித் துடித்த பெற்றோர்!!

கிருஷ்ணகிரியில்..

பூங்காவில் உள்ள மரத்தில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானசந்திரம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகள் கோபிகா. அவருக்கு 19 வயது.

கிருஷ்ணகிரி தளியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் கோபிகா முதலாம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார். மாணவி யாரிடமாவது செல்போனில் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது.இதை கவனித்த பெற்றோர், மகள் கோபிகாவை செல்போனில் தொடர்ந்து பேச வேண்டாம் என கண்டித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த மாணவி நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியேறி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் மகளை தேடினர். ஆனால் மாணவியை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், ஓசூர் சந்திரா சுடேஸ்வரர் மலைக்கோயில் பின்புறமுள்ள பூங்காவில் உள்ள மரத்தில் மாணவி ஒருவர் செவ்வாய்க்கிழமை தூக்கில் தொங்கினார். அந்த வழியாக சென்றவர்கள் ஓசூர் காவல்துறையினருக்கும், மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தூக்கில் தொங்கியது மாணவி கோபிகா என்பது தெரியவந்ததும் மருத்துவமனைக்கு வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவியின் உடலை பார்த்து கதறி அழுதனர். மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து ஓசூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

இலங்கையில்..

இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவித்துள்ளன. அதன்படி, இன்று (27.12.2023) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் “22 கரட்” தங்கம் ஒரு பவுனின் விலை 2,000 ரூபாவால் அதிகரித்து 168,500 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த வாரம் புதன்கிழமை இதன் விலை 163,700 ரூபாயாக காணப்பட்டது. இதனிடையே கடந்த புதன்கிழமை 177,000 ரூபாயாக நிலவிய “24 கரட்” தங்கம் ஒரு பவுனின் விலை இன்று 182,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பாம்பு தீண்டிய விவகாரம் : வெளிவரும் உண்மைகள்!!

முல்லைத்தீவில்..

பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு – வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் திருட முற்பட்டவர்கள் பாம்புத் தீண்டலுக்கு இலக்கானதாக கூறப்படும் சம்பவம், உண்மைக்கு புறம்பானது என ஆலயத்தின் நிர்வாக செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆலயத்தில் உள்ள சிசிரீவி கருவியை சரிபார்க்க சென்ற நிர்வாக குழு உறுப்பினரையே பாம்பு தீண்டியதாகவும், சில ஊடகங்கள் உண்மைக்கு புறம்பான செய்தியினை வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,உதவி முகாமையாளரிடம் சிசிரீவி கருவியை இயக்குவதற்கான சுட்டியை எடுத்துக் கொடுங்கள் என்று நான் கூறினேன்.

சுட்டி தொழில்படாத காரணத்தினால் பிரதான பெட்டியை திறக்க வேண்டி ஏற்பட்டது. அதனுள் இருந்தே பாம்பு எமது உறுப்பினரை தீண்டியது. இதன்காரணமாக பாம்பு தீண்டியவரையும், பாம்பையும் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லவேண்டிய தேவை ஏற்பட்டது.” என்றார்.