சீசெல்ஸ் கிரிக்கெட் அணி, கானாவில் நடைபெறும் ICC ஆடவர் T20 உலகக் கோப்பை ஆப்பிரிக்கா துணைப் பிராந்தியத் தகுதிச் சுற்று B (2026)இல் பங்கேற்கிறது.
இந்தத் தொடர் மார்ச் 24 தொடக்கம் 29 வரை நடைபெறுகிறது. இதில் திவாங்க ராஜபக்ச தலைமையிலான அணி விளையாடுகிறது. சீசெல்ஸ் கிரிக்கெட் அணியில் சண்முகம் தர்மேந்திரன் பயிற்சியாளராக உள்ளார். இவர் கொழும்பை பிறப்பிடமாகக் கொண்டவர்.
இவர் 2011 முதல் 2022 வரை சீசெல்ஸ் நாட்டிற்காக விளையாடியுள்ளார். மேலும், 2024இல் ஐசிசி உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிகளின் கென்யா சுற்றுப்பயணத்தின் போது அணி மேலாளராகப் பணியாற்றியுள்ளதுடன், கானாவில் அணி நிர்வாகப் பொறுப்புகளை ஆதரிப்பதோடு, ஒரு பயிற்சியாளராகவும் உள்ளார்.
2022 முதல், சீசெல்ஸ் கிரிக்கெட் சபையின் பொருளாளராகப் பணியாற்றியுள்ளார். மேலும் குறித்த அணியில் திவங்க ராஜபக்ச – அணித்தலைவர், ருக்மல் சமரத்துங்க, திலினா மதுஷன், முகமது ஷதம், ரஷேன் டி சில்வா ஆகியோர் இலங்கை வீரர்களாக உள்ளனர்.
மொரட்டுவை, லக்ஷபதிய பகுதியில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலத்திலிருந்த நகைகளை திருடும் நோக்கில், மர்ம நபர்கள் மயானத்திலுள்ள சவப்பெட்டியைத் தோண்டியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக லக்ஷபதிய பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்த தனது தாயாருக்கு ‘இமிடேஷன்’ ரக மாலை, காதணி மற்றும் வளையல்களை அணிவித்து உடல் அடக்கம் செய்யப்பட்டது என்று மகள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
தாயார் உயிரிழந்து ஏழாம் நாள் நினைவாக மயானத்தில் மெழுகுவர்த்தி ஏந்துவதற்காகச் சென்றபோது, இருவர் சவப்பெட்டியைத் தோண்டிக்கொண்டிருந்த நிலையில், அவரை கண்டதும் அங்கிருந்த இருவர் தப்பியோடியுள்ளனர்.
இதேவேளை, உயிரிழந்த பெண்ணின் உடல் மிகவும் விலையுயர்ந்த சவப்பெட்டியிலேயே அடக்கம் செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
சம்பவம் தொடர்பாக மயானத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தரைப் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
தப்பியோடிய இரு சந்தேக நபர்களும் மொரட்டுவை மாநகர சபையின் ஊழியர்களாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன், மொரட்டுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று (24) முதல் ஏப்ரல் 24ஆம் திகதி வரை இணையவழி (Online) ஊடாகக் கோரப்படுவதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, விண்ணப்பதாரர்கள் அனைவரும் www.doenets.lk மற்றும் www.onlineexams.gov.lk/eic ஆகிய உத்தியோகபூர்வ இணையதளங்களுக்குச் சென்று, வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றி சரியான முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரச மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலை மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களைப் பாடசாலை அதிபர் மூலமாகச் சமர்ப்பிக்க வேண்டும்.
அதேசமயம் தனியார் விண்ணப்பதாரர்கள் தங்களது தேசிய அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி தனிப்பட்ட முறையில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
பாடசாலை அதிபர்கள் தமக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (Username) மற்றும் கடவுச்சொற்களைப் (Password) பயன்படுத்தி விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்பதுடன், விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு அதன் அச்சிடப்பட்ட பிரதியை பாதுகாப்பாக வைத்திருப்பது கட்டாயமாகும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதித் திகதி நீடிக்கப்பட மாட்டாது என்பதால், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு , 1911 அல்லது 0112785922, 0112784537, 0112786616, 0112784208 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது gcealexam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகின்றார்கள்
உள்நாட்டில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையில் மரக்கறிகளுக்கான கேள்வி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக மெனிங் சந்தை வர்த்தகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
எரிபொருள் விலை உயர்வால் வீதிகளில் ஓடும் பேருந்துகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதால், பொதுப் போக்குவரத்துச் சேவை ஸ்தம்பிதமடைந்துள்ளது.
இதனால் நுகர்வோர் சந்தைகளுக்கு வந்து மரக்கறிகளை கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மெனிங் சந்தை வர்த்தகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் எஸ்.எம். உபசேன தெரிவித்துள்ளார்.
அன்றாட வருமானம் ஈட்டும் தரப்பினர் போக்குவரத்து முடக்கத்தால் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
இது மக்களிடையே மரக்கறிகளை வாங்கும் திறனைக் குறைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். மத்திய கிழக்கு நெருக்கடி தொடருமானால், விதைகள் மற்றும் உரங்களைப் பெற்றுக்கொள்வதில் தட்டுப்பாடு ஏற்படும் என வர்த்தகர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும் விவசாயிகள் மரக்கறி பயிர்ச்செய்கையை நிறுத்தினால், எதிர்காலத்தில் விற்பனை செய்வதற்கு சந்தையில் மரக்கறிகளே இல்லாத நிலை உருவாகலாம்” என அவர் மேலும் தெரிவித்தார்.
புதிய இணைப்பு : இன்று(23.03.2026) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.
இதன்படி, 450 கிராம் பாணின் விலை 10 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதற்கமைய 450 கிராம் பாணின் புதிய விலை 130 ரூபாவாகும்.
ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளும் இதேபோல 10 ரூபாவால் உயர்த்தப்படும் என்று பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சமீபத்திய எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், எரிபொருள் விலை அதிகரிப்பு உற்பத்தி மற்றும் விநியோகச் செலவுகளை அதிகரித்துள்ளதாகவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, நாடு முழுவது பாண் பிரதான உணவுப் பொருளாக இருப்பதன் காரணமாக, தற்போதைய விலை அதிகரிப்பு மக்களை நேரடியாக பாதிக்கும் என்று குறிப்பிடப்படுகின்றது.
பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை உயர்த்துவதா இல்லையா என்பது தொடர்பில் இன்று(23/03/2026) முடிவு எடுக்கப்படும் என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
எரிபொருள் விலை உயர்வால் தமது துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
பாண் உட்பட அனைத்து பேக்கரி பொருட்களின் உற்பத்தி முதல் விநியோகம் வரை எரிபொருள் ஒரு அத்தியாவசிய காரணி என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று (23) முதல், முச்சக்கரவண்டி கட்டணம் முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் ரூ. 10 இனால் அதிகரிக்கப்பட்டு, புதிய கட்டணமாக ரூ. 100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் முதல் 1 கி.மீ.க்கு ரூ. 110 மற்றும் இரண்டாவது கிலோமீட்டரிலிருந்து ஒவ்வொரு கூடுதல் கிலோமீட்டருக்கும் ரூ. 90 அதிகரிக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
2ஆவது கிலோமீட்டருக்கான கட்டணமும் ரூ. 10 இனால் அதிகரிக்கப்பட்டு, புதிய கட்டணமாக ரூ. 90 வசூலிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பினால் முச்சக்கரவண்டியின் முச்சக்கரவண்டி கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தங்கத்தின் விலை இன்று இலங்கையில் (23.03.2026) இரண்டாவது தடவையாக பாரிய சரிவைக் கண்டுள்ளது. அதன்படி இலங்கையில் இன்று காலை 24 கரட் தங்கம் ஒரு பவுண் 370,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 5000 ரூபாயால் குறைக்கப்பட்டு 365,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இன்று காலை 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 340,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 4600 ரூபாயால் குறைக்கப்பட்டு 335,800 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
முதலாம் இணைப்பு : சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4371 டொலராக பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சர்வதேச சந்தையில் ஐயாயிரம் டொலர்களை தாண்டியிருந்த தங்கத்தின் விலையானது இன்று (23.03.2026) பாரிய சரிவை கண்டுள்ளது.
இந்த நிலையில் இலங்கையிலும் தங்கத்தின் விலை இன்றைய தினம் 8000 ரூபாவால் குறைந்துள்ளது. அதன்படி இலங்கையில் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 370,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 340,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேவேளை 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,550 ரூபாயாகவும் காணப்படுகிறது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்திற்கு மத்தியில் இவ்வாறு தங்கத்தின் விலையானது பாரிய சரிவை கண்டுள்ள நிலையில் இது மேலும் வீழ்ச்சி பாதையை நோக்கி நகரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், புதிய எரிவாயு கையிருப்பு நாட்டிற்கு வந்தடைந்த நிலையில் மார்ச் இறுதி வரை விலையில் மாற்றம் இருக்காது என்று லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன அறிவித்துள்ளார்.
சமீபத்தில் ரூ.300 மட்டுமே விலை உயர்த்தப்பட்டதால், இந்த மாத இறுதி வரை எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் கூறியுள்ளார்.
இருப்பினும், விலை உயர்த்தப்பட்டாலும், அது குறிப்பிடத்தக்க உயர்வாக இருக்காது என்றும், புத்தாண்டை கருத்தில் கொண்டு ஏப்ரல் நடுப்பகுதி வரை தற்போதைய விலைகள் நீடிக்கக்கூடும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
33,000 மெட்ரிக் டொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு ஒரு கப்பல் மார்ச் 20 அன்று மாலைத்தீவை வந்தடைந்ததாகவும், அங்கிருந்து கொழும்பு வரும் சிறிய கப்பல்களில் மீண்டும் ஏற்றப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இதேவேளை, தற்போதைய நிலைமை கணிக்க முடியாததாகவும், நிலையற்றதாகவும் இருப்பதால், முன்னறிவிப்பை வழங்குவது சாத்தியமற்றது என்று லாஃப்ஸ் எரிவாயு (LAUGFS Gas) நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பீதியால் நுகர்வோர் கூடுதலாக சிலிண்டர்களை வாங்கி வைப்பதனால் நெருக்கடி எற்படுவதாகவும், பொதுமக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு அரசாங்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஐதராபாத்தில் பூனை வளர்க்கப் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், 23 வயது இளம் பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் அருகே உள்ள அல்வால் பகுதியில், செல்லப் பிராணி வளர்ப்பது தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறில் இளம் பெண் மருத்துவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.
செகந்திராபாத் ரிசாலா பஜார் பகுதியைச் சேர்ந்த 23 வயதானவர் பிரின்சி. இவர் சமீபத்தில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு, உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராகி வந்தார்.
பிரின்சிக்குச் செல்லப் பிராணிகள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் இருந்தது. கடந்த மூன்று மாதங்களாகத் தனது வீட்டில் ஒரு பூனையை வளர்த்து வந்துள்ளார்.
வீட்டில் பூனை வளர்ப்பதற்குப் பிரின்சியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவருக்கும் அவரது தாயாருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளன.
இந்நிலையில் நேற்று (மார்ச் 21) மீண்டும் இதே விவகாரத்தில் வீட்டில் பெரிய அளவில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பிரின்சி, தனது அறையைப் பூட்டிக்கொண்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார்.
நீண்ட நேரம் கதவு திறக்கப்படாததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், கதவை உடைத்துப் பார்த்தபோது பிரின்சி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அல்வால் போலீசார், பிரின்சியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பிரின்சியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் முதற்கட்டமாக “மன உளைச்சல் காரணமாகத் தற்கொலை” என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், தற்கொலைக்கு வேறு ஏதேனும் அழுத்தங்கள் காரணமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை எண்ணங்கள் மேலோங்கும்போது அல்லது கடும் மன அழுத்தத்தில் இருக்கும்போது கீழ்க்கண்ட உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன்: 104 சினேகா தற்கொலை தடுப்பு
நாட்டில் எரிபொருள் இல்லை என சமூக வலைதளங்கள் ஊடாகப் போலித் தகவல்களைப் பரப்பிய நபர் ஒருவரை மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
நாட்டில் எரிபொருள் இல்லை எனக் கூறி வெளிநாட்டவர்கள் வருகையைத் தடுத்தும், சுற்றுலாத் துறைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் பொதுமக்களைத் தூண்டும் வகையில் போலிப் பிரசாரங்களை முன்னெடுத்தமைக்காகவே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் வத்தேகம பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதுடன், மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவின் கணினி குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் பெண் ஒருவரை வீசிச்சென்ற சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் சந்தேகநபர்கள் குற்றச்செயல்களுக்காக பயன்படுத்திய இரண்டு முச்சக்கர வண்டிகள், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர். கைதானவர்கள் மட்டக்களப்பில் நடைபெற்ற பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடனும் தொடர்புபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வவுணதீவிலிருந்து மட்டக்களப்பு நகருக்கு மூன்று வயது குழந்தையுடன் இளம் தாய் ஒருவர் சென்றிருந்த நிலையில் காணாமல் போனார்.
மறுநாள் வெள்ளிக்கிழமை குறித்த தாய் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டதுடன், அவரது குழந்தை வயல் பகுதி ஒன்றில் தனித்துவிடப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த தாய் மீட்கப்பட்ட கிணற்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் மற்றுமொரு பெண்ணின் சடலமும் இதன்போது மீட்கப்பட்டிருந்தது.
குறித்த சம்பம் தொடர்பில் சிசிரிவி காட்சிகளைக் கொண்டு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி அடையாளப்படுத்தப்பட்டு அதன் உரிமையாளர் இனங்காணப்பட்டு விசாரணைகள்
முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடா, வேர்க்கண்டசேனை பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து கணவன் மனைவி, கணவனின் சகோதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட கணவன், மனைவி சம்பவ தினமான வியாழக்கிழமை வவுணதீவு பகுதியில் குழந்தையுடன் பேருந்துக்காக காத்திருந்த இளம் தாயைக் கண்டு, முச்சக்கர வண்டியை நிறுத்தி மட்டக்களப்பு நகருக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது தாம் அடகு வைத்த குழந்தையின் தங்க ஆபரணத்தை மீட்கப் போவதாகத் குறித்த தாயிடம் இருந்து சந்தேகநபர்கள் தகவல்களை பெற்றுக் கொண்டுள்ளனர்.
பின்னர் மட்டக்களப்பு நகருக்கு சென்று தாம் மீண்டும் இதே வழியில் வருவதாகவும், அதற்கு குறைந்தளவான கட்டணத்தை தருமாறும் கோரியுள்ளனர்.
இதற்கு குறித்த தாயும் இணக்கம் வெளியிட்டுள்ள நிலையில், சந்தேகநபரான பெண் ஒருவர் நகை அடகு நிலையத்திற்கும் அந்த தாயுடன் சென்று திரும்பியுள்ளதாக கூறப்படுகின்றது.
மீண்டும் அவர்களை தமது முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்ற நிலையில், வலையிறவு பாலத்தை அண்மித்த போது, அவருக்கு மயக்க மருந்து கலந்த பழச்சாறு போத்தலைக் அருந்தக் கொடுத்துள்ளனர். அவர் அதனை வாங்கி அருந்திய பின்னர் மயக்கமடைந்துள்ளார்.
இதன்போது கொத்தியாபுலை பகுதியில் உள்ள வயல்பகுதியில் குழந்தையினை எரிந்துவிட்டு குறித்த முச்சரக்கவண்டி காஞ்சிரங்குடா சென்று அங்கு மயக்கமடைந்த பெண்ணின் சுமார் நான்கரை பவுன் தாலிக்கொடியை கழட்டியுள்ளனர்.
பின்னர் அதனை சந்தேகநபரின் மனைவி எடுத்துக் கொண்டு முச்சக்கரவண்டியில் இருந்து வீட்டில் இறங்கியுள்ளார்.
இதனையடுத்து வீட்டிலிருந்த தனது காரில் மயக்கமுற்ற பெண்ணை ஏற்றிக்கொண்டு தமது சகோதரனையும் அழைத்து சென்ற சந்தேகநபர் நெல்லிக்காடு பகுதியில் உள்ள கிணற்றில் வீசிச் சென்றுள்ளனர்.
சந்தேகநபர்கள் இதேபோன்ற கொள்ளைச் சம்பவங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் மேற்கொண்டுள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை விற்று பெற்றுக் கொண்ட பணத்தில் காரை கொள்வனவு செய்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
கொள்ளையிடப்பட்ட நகைகள் விற்பனை செய்த மற்றும் அடகுவைக்கப்பட்ட நகைக்கடை உரிமையாளர்கள் இருவரும் இது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் கிழக்கு மாகாண விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற விபத்தில் டாக்ஸி விபத்தில் உயிரிழந்தவர்களில் இருவர், தாயகத்தில் நவாலியைச் சேர்ந்தவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் சுவிற்சர்லாந்தின் ஆர்கவ் மாநிலத்தில் வசித்து வந்த தாயும் மகனுமே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
தாயாரின் 60வது பிறந்தநாளை துருக்கியில் கொண்டாடிய பின்னர், சுவிற்சர்லாந்திற்கு திரும்ப வானூர்தி நிலையத்துக்கு பயணம் செய்துகொண்டிருந்தபோதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
எரிபொருள் விநியோகத்தில் எந்த இடையூறும் இல்லாததால் மின்வெட்டுகளை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தலைவர் டி. ஜெ. ராஜகருண தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
“எதிர்வரும் மார்ச் 24, 25 திகதிகளில் வரவிருந்த கச்சா எண்ணெய் கப்பல் வராததால், இம்மாதம் 25ஆம் திகதி வரை மாத்திரமே சுத்திகரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.
இதனால் மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் எண்ணெய் மற்றும் நெப்தா ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்படும். இது பாரிய பிரச்சினையாகும்.
எதிர்வரும் ஏப்ரல் 12, 13 திகதிகளில் எரிபொருள் கப்பல் ஒன்று வரவுள்ளது, ஆனால் நெப்தா வராது. அதற்குப் பதிலாக டீசலைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
இந்த நெருக்கடி காரணமாக இரவு நேரங்களில் டீசல் மூலமே மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். எனவே, தேவையற்ற விளக்கையாவது அணைத்து, வீதி விளக்குகளையும் அணைத்து இற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலால் உலகளாவிய எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் இலங்கையின் எரிபொருள் விநியோகத்திலும்
சவால்களை ஏற்படுத்தியுள்ளன இதனை எதிர்கொள்ள பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (22) வேண்டுகோள் விடுத்தார்.
நிலவும் விநியோகக் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, மின்சாரம் மற்றும் எரிபொருளை மிகவும் பொறுப்புடனும், அவசியமான தேவைகளுக்காகவும் மட்டுமே பயன்படுத்துமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
எரிசக்தி நுகர்வை குறைந்தபட்ச அளவில் வைத்திருப்பது நாட்டின் தற்போதைய நிலையைச் சமாளிக்க உதவும் என அவர் குறிப்பிட்டார். எரிபொருளைப் பதுக்குபவர்கள் மற்றும் சட்டவிரோத விற்பனையில் ஈடுபடுபவர்கள் உடனடியாக அத்தகைய செயல்களை நிறுத்த வேண்டும்.
இவ்வாறான மோசடிகளில் ஈடுபடுவோருக்கு எதிராக அரசாங்கம் மிகக் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் என அமைச்சர் எச்சரித்தார்.
கள்ளச்சந்தையில் எரிபொருள் வாங்குவதைத் தவிர்க்குமாறும், இவ்வாறான சட்டவிரோதச் செயல்கள் குறித்துத் தெரிந்தால் உடனடியாக அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும் அவர் பொதுமக்களை வலியுறுத்தினார்.
நேற்று இரவு அறிவிக்கப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, இலங்கையில் எரிபொருள் விலைகள் கடந்த 2022 பொருளாதார நெருக்கடியின் போது இருந்த நிலையை மீண்டும் எட்டியுள்ளன.
தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்கள் நீரிழப்புக்கு (Dehydration) உள்ளாவதைத் தடுக்க விசேட கவனம் செலுத்த வேண்டும் என சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.
கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா இது குறித்து முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். சிறுவர்களுக்கு முடிந்தவரை அதிகளவு நீர் மற்றும் இயற்கை பானங்களை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அதிக வெயிலில் விளையாடுவதையோ அல்லது வெளியில் செல்வதையோ தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
அதிகப்படியான தூக்க உணர்வு, உணவில் விருப்பமின்மை (பசியின்மை), உடல் வலி போன்ற அறிகுறிகள் காணப்பட்டால், உடனடியாக அதிக நீர் மற்றும் திரவ உணவுகளை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
வெப்பம் காரணமாக படர் தாமரை, சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ளார்.
சிறுவர்களை ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குளிப்பாட்ட வேண்டும் எனுவும் சுமார் 20 நிமிடங்கள் வரை அவர்களை நீரில் இருக்க அனுமதிப்பது தோல் நோய்களிலிருந்து பாதுகாக்க உதவும் எனவும் தெரிவித்துள்ளார்.
பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஓட்டப்பந்தயங்களில் ஈடுபடும் மாணவர்கள் போதியளவு நீர் பருகாவிட்டால், அவர்களுக்கு நீரிழப்பு மாத்திரமன்றி ‘வெப்ப அதிர்ச்சி’ ஏற்படக்கூடும் என விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆசிய பிராந்தியத்தில் எதிர்வரும் மாதங்களில் பெட்ரோல், டீசல் என்பவற்றின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நிறுவனமான சவூதி அரம்கோ, ஏப்ரல் மாதத்திற்கான கச்சா எண்ணெய் விநியோகத்தை ஆசிய நாடுகளுக்குக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அமெரிக்க – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல்களால் ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இரண்டாவது மாதமாக சவூதி அரம்கோ இந்த விநியோகக் கட்டுப்பாட்டை விதித்துள்ளதாக தெரியவருகிறது. இந்த முடிவினால் ஆசிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்குக் கிடைக்கும் கச்சா எண்ணெயின் அளவு குறையும்.
இதன் விளைவாக, சந்தைக்கு விநியோகிக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களின் (பெட்ரோல், டீசல் போன்றவை) அளவும் குறையக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த விநியோகக் குறைப்பு, எதிர்வரும் மாதங்களில் ஆசிய பிராந்தியத்தில் எரிபொருள் விலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.