விபத்தில் சிக்கி இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!!

மித்தெனிய – வலஸ்முல்ல வீதியில் கரமெட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளும் பஸ்ஸும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 24 வயதுடைய இளைஞன் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகைள மேற்கொண்டு வருகின்றனர்.

காட்டு யானை தாக்கி மூன்று பிள்ளைகளின் தந்தை பலி!!

புத்தளம் – கல்லடி பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (04.11.2025) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இவர் தனிப்பட்ட தேவைக்காக வீட்டிலிருந்து வெளியே சென்றுக்கொண்டிருந்த போது காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முச்சக்கர வண்டி விபத்தில் இருவர் காயம்!!

தலவாக்கலை நகரத்திலிருந்து தலவாக்கலை தோட்டப்பகுதியை நோக்கி அதிவேகமாக பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றின் முன் சில்லு திடீரென கழன்று விழுந்ததில், முச்சக்கரவண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இருவர் காயமடைந்ததாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு காயமடைந்தவர்கள் தற்போது லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து ஹட்டன்–நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலைப் பகுதியில் உள்ள புத்த சிலைக்கு அருகில், நேற்று (03) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றது.

அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டியின் முன் சில்லில் ஏற்பட்ட திடீர் இயந்திர கோளாறே விபத்திற்குக் காரணமாக இருந்ததாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் தலவாக்கலை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வட்ஸ்அப்பில் இடம்பெறும் பாரிய மோசடிகள் : நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை!!

WhatsApp வழியாக பணம் கோரும் மோசடி தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இதுபோன்ற முறைப்பாடுகள் அதிக அளவில் கிடைத்துள்ளதாக அதன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.ஜி. ஜெயனெத்சிறி தெரிவித்தார்.

வட்ஸ்அப் குழுக்களைப் பயன்படுத்தும் போது இந்த மோசடிகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை மக்களுக்கு அவசர அறிவுறுத்தல் : உடனடியாக வைத்தியரை நாடவும்!!

டெங்கு நோயார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டின் 11 மாவட்டங்களில் இவ்வாறு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் பதிவான கனமழையுடனான காலநிலை காரணமாக ஏற்பட்ட நுளம்புகளின் பெருக்கம் காரணமாகவே இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டுள்ளதாக சமூக மருத்துவ நிபுணர் டாக்டர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

அதன்படி கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி மற்றும் குருநாகல் மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

இவ்வாறான சூழலில் காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் காணப்படுமாயின் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவது பொருத்தமானதென வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் சுவாச நோய்கள் ஏற்பட்டுள்ள எந்தவொரு தரப்பினரும் மூச்சு விடுவதில் சிரமம் காணப்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெற வேண்டுமெனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மன்னாரில் காற்றாலை விவகாரம் : ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு!!

மன்னாரில் வசிக்கும் மக்களின் அனுமதியின்றி காற்றாலை மின் திட்டங்களை செயல்படுத்த வேண்டாம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

மன்னார் தீவிற்கான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வள திட்டத் திட்டத்தின்படி, காற்றாலை மின் உற்பத்தி அதிகமுள்ள பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ள மன்னார் தீவில் மூன்று காற்றாலை மின் திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த திட்டங்களில், தம்பபவனி காற்றாலை மின் நிலையத்தின் செயல்பாட்டு நடவடிக்கைகள் 2021 இல் தொடங்கப்பட்டன. மேலும் இரண்டு காற்றாலை திட்டங்கள் முறையே டிசம்பர் 2025 மற்றும் டிசம்பர் 2026 இல் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும், திட்டங்கள் காரணமாக எழுந்துள்ள சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் எழுப்பிய விடயங்களைக் கருத்தில் கொண்டு,

குடியிருப்பாளர்களின் சம்மதத்தைப் பெறாமல் அவற்றை செயல்படுத்த வேண்டாம் என்று ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

அதன்படி, அதற்கேற்ப நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சரவையின் ஒப்புதலை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

இலங்கையில் மீண்டும் தங்கத்தின் விலை அதிகரிப்பு!!

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால் இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து வருகின்றன. நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது இன்று தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 344,300 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை, 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 315,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஆண்டில் தங்கத்தின் விலை வரலாறு காணாத ரீதியில் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தேசிய இரத்தினக்கற்கள் மற்றும் நகைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, உலக தங்க சந்தையில் 5000 டொலர் வரை தங்கத்தின் விலை பதிவாகக்கூடும் என்றும் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாகன விலைகளில் ஏற்படப் போகும் பாரிய மாற்றம்!!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வாகனங்களுக்கான வரி அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உப தலைவர் அரோஷ ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு துறையிலும் ஏற்படப்போகும் மாற்றங்கள் தொடர்பில் ஊடகங்கள் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் உரையாற்றிய அவர்,

வாகன இறக்குமதிக்கான வரி கட்டமைப்பை மாற்றப்போவதாக தெரியவந்துள்ளது. வாகன இறக்குமதியாளர்களாக நாம் முக்கியமாக கேட்க வேண்டிய விடயம் என்னவென்றால், வாகன இறக்குமதிக்கான வரி அதிகரிக்கப்பட்டால் வாகனங்களின் விலை மேலும் அதிகரிக்க கூடும்.

அவ்வாறு வரி அதிகரிக்கப்பட்டால் சிறிய எல்டோ வாகனத்தில் இருந்து அனைத்தின் விலையும் அதிக்கும். குறிப்பாக நுற்றுக்கு 15 வீதத்திலிருந்து 25 வீதம் வரை அதிகரிக்க கூடும். அப்போது வாகன கொள்வனவு குறைவடைந்து, எமது தொழில் பெரு பாதிப்படைய கூடும் என்றார்.

சோகத்தில் முடிந்த திருமண மகிழ்ச்சி பேருந்து விபத்தில் 3 சகோதரிகள் பலி!!

தெலுங்கானா மாநிலம் ரங்கார ரெட்டி மாவட்டம் சேவல்லா அருகே நேற்று காலை டிப்பர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்துடன் மோதியதில் 20 பேர் உயிரிழந்தனர்.

இதில், திருமண நிகழ்ச்சியிலிருந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்த மூன்று சகோதரிகளும் பலியானது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விகாராபாத் மாவட்டம் பேர்க்கம்பள்ளியைச் சேர்ந்த எல்லையா கௌடுவின் நான்கு மகள்களில் மூத்த மகளின் திருமணம் ஹைதராபாத் அருகே தாண்டூரில் நடைபெற்றது.

திருமண விழாவை முடித்துவிட்டு, இளைய மூன்று சகோதரிகள் — இளங்கலை முதலாம் ஆண்டு மாணவி நந்தினி, மூன்றாம் ஆண்டு மாணவி சாய்பிரியா மற்றும் பிளஸ் டூ மாணவி தனுஷா — ஹைதராபாத் நோக்கி பேருந்தில் பயணம் செய்தனர்.

அப்போது ஏற்பட்ட விபத்தில் மூவரும் ஒரே இருக்கையில் அமர்ந்திருந்த நிலையில் உயிரிழந்தனர். “அதிகாலை அவர்களை பஸ்சில் ஏற்றி விட்டு வீட்டுக்கு திரும்பினேன். சில மணி நேரத்தில் டி.வியில் விபத்து செய்தி பார்த்தேன்.

என் மூன்று மகள்களையும் இவ்வாறு பிணங்களாகப் பார்ப்பேன் என்று நினைத்ததே இல்லை,” என்று தந்தை எல்லையா வேதனையுடன் கூறியுள்ளார்.

மூன்று சகோதரிகளின் உடல்களும் நேற்று மாலை சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இதனால் முழு கிராமமே துயரத்தில் மூழ்கியது.

காதலன் திருமணத்திற்கு மறுத்ததால் மாணவி எடுத்த விபரீத முடிவு!!

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே காதலன் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால், 19 வயது நர்சிங் பயிற்சி பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சுமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வத்தின் மகள் ஹரிதா, திருத்தணியில் உள்ள தனியார் நர்சிங் டிப்ளமா பயிற்சி பள்ளியில் படித்து வந்தார்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த திலீப் என்பவருடன் அவர் ஒன்றரை வருடமாக காதலில் இருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த ஒரு மாதமாக தன்னை திருமணம் செய்யுமாறு ஹரிதா கேட்டபோது, திலீப் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஹரிதா, வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அவர் எழுதிய கடிதத்தில் “என் மரணத்திற்கு திலீப் தான் காரணம்” என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, ஹரிதாவின் பெற்றோர் கனகம்மாசத்திரம் போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனை முடிந்தும், உறவினர்கள் உடலை பெற மறுத்து,

“திலீப்பை கைது செய்தால் தான் உடலை வாங்குவோம்” என மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் நடத்தினர். பின்னர் டி.எஸ்.பி கந்தன் தலைமையில் போலீசார் சமரசம் பேசினர்

காதலனுடன் இரண்டு நாட்களில் திருமணம் : இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

உயிருக்கு உயிராய் காதலித்தவனையே அடுத்த 2 நாளில் கரம் பிடிக்க இருந்த நிலையில், திருமணத்திற்கு முன்பாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் ஈரோடு மாவட்டம் பவானி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பவானி அருகே எலவமலை ஊராட்சிக்கு உட்பட்ட விருமாண்டம் பாளையம் பகுதியைச் சேர்ந்த முனியப்பன் – மாரியம்மாள் தம்பதியரின் இளைய மகள் நிர்மலா (23) கடந்த நான்கு ஆண்டுகளாக அந்தியூர் அருகே மாரிகவுண்டன்புதூரைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்பவருடன் காதலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இருவரின் காதல் தொடர்பை இரு குடும்பத்தாரும் ஏற்று, இன்று எல்லப்பாளையம் ஸ்ரீ வீரனார் கோவிலில் திருமணம் நடைபெறவும், ஜம்பை பகுதியில் வரவேற்பு விழா நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் நேற்று முன் தினம் திருமண வேலைகளுக்காக நிர்மலாவின் பெற்றோர் அந்தியூருக்கு சென்றனர். மாலை 5 மணியளவில் வீடு திரும்பியபோது, நிர்மலா அறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்து சித்தோடு போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.

மேலும், நிர்மலா தன்னுடைய மரணத்துக்கு யாரும் காரணமில்லை என எழுதிய கடிதம் ஒன்றை வீட்டில் விட்டுச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருமணத்திற்கு வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் நடந்த இந்த துயரச்சம்பவம் குடும்பத்தாரும் உறவினர்களும் பெரும் அதிர்ச்சியில் ஆழ வைத்துள்ளது. சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வவுனியாவில் மரணித்த பல்கலைக்கழக மாணவனின் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைப்பு!!

வவுனியா பல்கலைக்கழகத்தில் மரணமடைந்த மாணவனின் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திடீர் மரண விசாரணை அதிகாரி லா.சுரேந்திரசேகரன் இன்று (03.11) தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா பல்கலைக்கழத்தில் மாணவர்களின் மது விருந்து நீண்ட நேரம் இடம்பெற்ற நிலையில் சனிக்கிழமை காலை வவுனியாப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் மரணமடைந்த நிலையில் பூவரசன்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர், அநுராதபுரம் ஜயசிறிபுர பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய மாணவர் ஆவார். குறித்த மாணவனுக்கு பகிடிவதையின் போது வலுக்கட்டாயமாக மதுபானம் பருக்கியதால் மரணமடைந்துள்ளதாக மாணவனின் உறவினர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

குறித்த விடயம் தொடர்பில் = பூவரசன்குளம் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து இருந்ததுடன், திடீர் மரண விசாரணை அதிகாரி லா.சுரேந்திரசேகரன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.

அதன் பின் குறித்த இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. வவுனியா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற்கூற்று பரிசோதனைகள் இடம்பெற்றிருந்த நிலையில்,

இளைஞனின் மரணத்திற்கான காரணம் முழுமையாக கண்டறியப்படாத நிலையில் அவரது இரத்த மற்றும் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசேதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாணவன் உயிரிழந்த போது, ​​அவரது உடலில் கணிசமான அளவு மதுபான செறிவு இருந்திருக்கலாம் எனச் சந்தேகிப்பதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன் விசாரணையின் போது, உயிரிழந்த மாணவரின் சகோதரி, கடந்த 31ஆம் திகதி இரவு பல்கலைக்கழக மாணவர்களின் விருந்தொன்றில் சிரேஷ்ட மாணவர்கள் தனது சகோதரருக்கு பலவந்தமாக மதுபானம் வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தனது சகோதரனுக்கு வேறு எந்த நோயும் இருந்திருக்கவில்லை என்றும், பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பகிடிவதை குறித்து பல தடவைகள் குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரயிலுடன் மோதி முச்சக்கரவண்டி விபத்து : ஒருவர் பலி : இருவர் படுகாயம்!!

கம்பஹாவில் வல்பொல ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள ரயில் பாதையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பெண்கள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (03) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கவனக்குறைவாக செலுத்தப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்று மட்டக்களப்பிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது முச்சக்கரவண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் பின்புறத்தில் அமர்ந்திருந்த இரண்டு பெண்கள் படுகாயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகைள மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சியில் கோர விபத்து : காரும் டிப்பரும் மோதியதில் நால்வர் காயம்!!

கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் நேற்று (02.11.2025மாலை 5.00 மணியளவில் கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி சென்ற காரும், கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த டிப்பர் ரக வானமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் டிப்பர் ரக வாகனத்தின் சாரதி உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

காதலனுடன் சென்ற இளம் காதலி களனி ஆற்றில் விழுந்து பரிதாபமாக பலி!!

கொழும்பு, கோஹிலவத்தை பகுதியில் களனி ஆற்றில் விழுந்து ஒரு பெண் உயிரிழந்துள்ளார். கோஹிலவத்தை பகுதியில் களனி ஆற்றின் அருகே தனது காதலன் மற்றும் மூன்று பேருடன் முச்சக்கர வண்டியை கழுவச் சென்ற பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தண்ணீர் எடுக்க சென்ற காதலனும் காதலியும் திடீரென ஆற்றில் விழுந்து உயிரிழந்துள்ளனர். காதலி நீரில் மூழ்கியபோது காதலன் அங்கு மீட்கப்பட்டார்.

இன்று மதியம் நீரில் மூழ்கிய பெண்ணின் உடலை மீட்பு குழுக்கள் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பொகவந்தலாவை பகுதியை சேர்ந்தவர் எனவும் அவருடன் வந்த மற்றொரு குழுவும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் காணமல் போன சிறுவன் : பொதுமக்களின் உதவியை நாடும் பெற்றோர்!!

யாழ். தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் 17 வயதுடையவரை காணவில்லை என அவரது தந்தை முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

யாழ்ப்பாணம் – மல்லாகம், நரியிட்டான் பகுதியில் வசித்துவந்த குறித்த இளைஞன் வெள்ளிக்கிழமை (31) வீட்டைவிட்டு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.

இவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் பெற்றோர் அல்லது தெல்லிப்பழை பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.