வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்தவருக்கு அதிர்ச்சி : இளைஞன் ஒருவரின் நெகிழ்ச்சி செயல்!!

வீதியில் கண்டெடுக்கப்பட்ட பணப்பையை, அதன் உரிமையாளரை கண்டுபிடிக்க முடியாத நிலையில், 4 நாட்கள் தேடிய பின்னர் உரிமையாளரை கண்டுபிடித்து ஒப்படைக்கப்பட்ட நபர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 4 நாட்களுக்கு முன்பு, தம்புள்ளையில் போக்குவரத்து சபை ஓட்டுநராக பணிபுரியும் நிஹால் அனுருத்த அமுனுகம, தம்புள்ள நகரத்திற்கு அருகிலுள்ள வீதியில் ஒரு பணப்பையை கண்டெடுத்துள்ளார்.

அந்தப் பணப்பையில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான ரூபாய் ரொக்கமும், இலங்கை மற்றும் கொரிய நாடுகளின் லொத்தர் சீட்டுகளும் பெறுமதியான தங்க சங்கிலி ஒன்றும் காணப்பட்டுள்ளது.

அந்தப் பணப்பையில் உரிமையாளரை பற்றிய எந்த தகவலும் இல்லை என அனுருத்த அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், பணப்பையில் ஒரு கடையிலிருந்து ஒரு சிறிய ரசீதைக் கண்டெடுத்தபோது, ​​நாயக்கும்புர என்ற கிராமத்தில் பையின் உரிமையாளர் வசிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர், தனது மோட்டார் சைக்கிளில் மீண்டும் கடைக்குச் சென்று பொருட்களை வாங்கிய நபர் பற்றிய தகவல்களை தேடியுள்ளார்.

பின்னர், கடை உரிமையாளரின் ஒத்துழைப்புடன், கடையின் பாதுகாப்பு கமரா காணொளிகள் சரிபார்க்கப்பட்டன, சில நாட்களுக்கு முன்னர் பொருட்களை வாங்கிய நபர் கண்டுபிடிக்கப்பட்டார்.

அதற்கமைய, உரிமையாளர் கண்டுபிடிக்கப்பட்டு பை அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கொரியாவில் வேலை செய்த நிலையில் இலங்கைக்கு வந்துள்ளார்.

இலங்கையில் இது போன்ற இளைஞர்கள் இருக்கின்றமை நாட்டுக்கு பெருமைக என பணப்பையை தவறவிட்ட உரிமையாளர் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

இருளில் மூழ்கப்போகும் உலகம் : இலங்கையருக்கு காத்திருக்கும் பெரும் அதிசயம்!!

எதிர்வரும் செப்டம்பர் 7 ஆம் திகதி வானில் அரிய வகை முழு சந்திர கிரணம் தென்படவுள்ளது. இரத்த நிலவு என்று அழைக்கப்படும் இது, இந்த ஆண்டின் கடைசி முழு சந்திர கிரகணமாகும்.

குறித்த முழு சந்திர கிரகணம் 82 நிமிடங்கள் நிகழும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், நிலவு அடர் சிவப்பு நிறத்தில் காணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 77% பேருக்கு இந்த சந்திர கிரகணத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே ஏற்படும் பல கிரகணங்களைப் போல் அல்லாமல், ஆசியா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த கிரகணத்தை தௌிவாக அவதானிக்க முடியும்.

செப்டம்பர் 7 ஆம் திகதி இரவு வானத்தில் முழு சந்திர கிரகணம் தோன்றுவதால், இலங்கையர்கள் மற்றும் வானியல் ஆர்வலர்களுக்கு பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

இந்த அற்புதமான நிகழ்வு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் முழுமையாகத் தெரியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் தலைவரும்,

வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளரும் ஆர்தர் சி கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவருமான பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

பூமி சூரியனை சுற்றி வரும் பாதையிலும், சந்திரன் பூமியை சுற்றி வரும் பாதையிலும் சில நேரங்களில் சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும். அப்போது, சூரிய ஒளி பூமியில் விழுந்தாலும் சந்திரன் மீது விழாது. இதனால் சந்திர கிரகணம் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிறந்தநாள் பரிசு : மனைவி, மாமியாரை கொடூரமாக கொன்ற கணவன்!!

 

தனது மகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பர்த்டே கிஃப்ட் தருவது குறித்து ஏற்பட்ட வாக்குவாதத்தில், தனது பேச்சைக் கேட்காமல் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரத்தில் மனைவியையும்,

மாமியாரையும் கத்திரிக்கோலால் குத்திக் கொடூரமாக கொலைச் செய்த சம்பவம் டெல்லி, ரோஹிணி பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ரோஹணி பகுதியை சேர்ந்தவர் யோகேஷ். இவரின் மனைவி பிரியா (34). நேற்று இவர்களின் மகனுக்கு பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துக் கொள்ள பிரியாவின் தாய் குசும் சின்ஹா (63) கடந்த ஆகஸ்ட் 28ம் தேதியன்று அங்கு சென்றுள்ளார்.

நேற்று முன்தினம் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பெறப்பட்ட பரிசுப்பொருட்கள் பற்றி காணவர் யோகேஷ் மனைவி பிரியாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இருவரிடையேயும் வாக்குவாதத்தை தீர்க்க குசும் முயன்றுள்ளார். பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்ற தாய் வீடு திரும்பாததால் குசும் உடைய மகனும் பிரியாவின் சகோதரனுமான மேக் சின்ஹா போன் செய்துள்ளார்.

அப்போது இந்த வாக்குவதம் குறித்து மகனுக்கு குசும் தெரிவித்துள்ளார். இருப்பினும் அதன் பின் வெகு நேரம் ஆகியும் தாய் வீடுதிரும்பாததாலும், போன் செய்தும் எடுக்காததாலும் மேக் சின்ஹா அங்கு சென்றுள்ளார்.

அங்கு பூட்டிக்கிடந்த வீட்டின் வெளியே ரத்தகரை இருந்துள்ளது. இதை தொடர்ந்து மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது குசும் மற்றும் பிரியா ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளனர்.

இதுதொடர்பாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் இருந்து ரத்தம் தோய்ந்த ஆடைகளையும், கத்திரிகோலயும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

மனைவி மற்றும் மாமியாரை கொலை செய்து குழந்தைகளுடன் தப்பிச் சென்ற யோகேஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பிரபல பாலிவுட் நடிகை திடீர் மரணம் திரையுலகினர் இரங்கல்!!

பிரபல பாலிவுட் நடிகை பிரியா மராத்தே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சைப் பலனளிக்காமல் காலமானார். அவருக்கு வயது 38

‘பவித்ர ரிஷ்டா’ படத்தில் நடித்ததற்காக ரசிகர்களிடையே பரவலாக அறியப்பட்ட நடிகை பிரியா மராத்தே, அதன் பின்னர் மராத்தி மற்றும் இந்தி திரைப்படங்களிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் நடித்து வந்தார்.

கடந்த ஒரு வருடமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பிரியா மராத்தே அதற்கான சிகிச்சைகளையும் எடுத்து வந்ஹார். பல இந்தி மற்றும் மராத்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

ஏப்ரல் 23,1987 அன்று மும்பையில் பிறந்த பிரியா மராத்தே, தனது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை மும்பையில் முடித்தார்.

படிப்பை முடித்த பிறகு, அவர் திரையுலகில் அறிமுகமானார். ‘யா சுகனோயா’ மற்றும் ‘சார் திவாஸ் சசுச்சே’ என்ற மராத்தி சீரியல் மூலமாக அறிமுகமானார்.

மராத்தே, பாலாஜி டெலிஃபிலிம்ஸின் ‘கசம் சே’ படத்தில் வித்யா பாலி வேடத்திலும் நடித்தார், பின்னர் ‘காமெடி சர்க்கஸ்’ தொடரின் முதல் சீசனில் கலந்துக் கொண்டார். நடிகர் ஜோதி மல்ஹோத்ராவின் கதாபாத்திரத்தில் நடித்தார்.

​​’படே அச்சே லக்தே ஹைன்’, ‘து தித்தே மே’, ‘பாகே ரே மன்’, ‘ஜெயஸ்துதே’ மற்றும் ‘பாரத் கா வீர் புத்ரா – மஹாராணா பிரதாப்’ போன்ற நிகழ்ச்சிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.

2008ல் இந்தி திரைப்படமான ‘ஹம்னே ஜீனா சீக் லியா’வில் நடித்தார். கோவிந்த் நிஹலானி இயக்கிய ‘டி அனி இடார்’ என்ற மராத்தி திரைப்படத்திலும் அவர் நடித்தார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இப்படி எல்லாமா மரணம் நிகழும் : விஷப்பூச்சி கடித்ததில் இளம்பெண் உயிரிழப்பு!!

விஷப்பூச்சி கடித்ததில் 19 வயதான இளம்பெண் சர்மிளா உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரையும், உறவினர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. சென்னை ஆவடி கண்ணப்பாளையம், பாரதி நகரில் வசித்து வருபவர் சங்கர்.

இவர் தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள். இவரது மூத்த மகள் 19 வயது சர்மிளா.

இவர் அயப்பாக்கம் பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சர்மிளா ஆகஸ்ட் 29ம் தேதி காலை தூங்கி எழுந்தபோது அவருக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து உடல் முழுவதும் அரிக்க தொடங்கியதால் அவர் சொரிந்து கொண்டே இருந்தார். சில நிமிடங்களில் அரிப்பு ஏற்பட்ட இடங்களில் எல்லாம் வீங்கத் தொடங்கியது.

வீட்டிலிருந்த மஞ்சளை எடுத்து உடல் முழுவதும் பூசிக்கொண்டு குளிப்பதற்காக சர்மிளா சென்றுள்ளார். அப்போது அவர் திடீரென வாயில் நுரை தள்ளி மயங்கி கீழே விழுந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த தந்தை சங்கர், சர்மிளாவை அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவேற்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சர்மிளாவை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சர்மிளா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஏற்கனவே சர்மிளாவின் தந்தை சங்கருக்கு இதை போன்று விஷப்பூச்சி கடித்து அரிப்பு ஏற்பட்டு உடலில் வீக்கம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவரது மகள் சர்மிளாவையும் விஷ பூச்சி ஏதாவது கடித்து உயிரிழந்திருக்கலாம் எனவும் போலீசார் முதல் கட்ட தகவலை வெளியிட்டனர்.

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலியின் குடும்பம்!!

இந்தியாவில் காதலியின் குடும்பத்தினரால் இளைஞர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியில் திருமண பேச்சுக்காக அழைக்கப்பட்ட 26 வயது ரமேஷ்வர் கெங்வாட் என்ற இளைஞர், அவரது காதலியின் குடும்பத்தினரால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் பெண்ணின் தந்தை உட்பட 9 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். மொத்தமாக இந்த சம்பவத்தில் தொடர்புடைய 11 பேர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண்ணின் உறவினர் வழங்கிய தகவலின் படி, ரமேஷ்வர் கெங்வாட் என்ற இளைஞருடன் தனது உறவுக்கார பெண் காதல் உறவில் இருந்துள்ளார்.

ஆனால், காதலன் ரமேஷ்வர் கெங்வாட் மீது பாலியல் கொடுமை மற்றும் போக்சோ(POCSO) குற்றச்சாட்டுகள் இருந்ததால் திருமணத்திற்கு பெண் வீட்டார்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இருவரும் ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்துள்ளனர். எனவே காதலன் ரமேஷ்வர் கெங்வாட் மற்றும் அவரது பெற்றோரை பெண் வீட்டார் பேச்சுவார்த்தைக்காக அழைத்துள்ளனர்.

பேச்சுவார்த்தை தொடங்கிய சிறிது நேரத்திலேயே இரு குடும்பத்தினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக ரமேஷ்வர் கெங்வாட்-ஐ பெண்ணின் வீட்டார் ஒரு அறைக்குள் அழைத்து சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த ரமேஷ்வர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

யாழில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை : ஜனாதிபதி அநுரவின் செயல்!!

யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் (1) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் திறந்துவைக்கப்பட்டுள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்கள பிராந்திய அலுவலகத்துக்கான திரைநீக்க பலகையில் தமிழ் மொழிக்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

“பொதுமக்களது நிதியை பயன்படுத்தி ” “மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது.” என குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அலுவலகத்துக்கான பலகையில் எழுதப்பட்டுள்ளது.

இலங்கையில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் அரச மொழிகளாக உள்ளபோதும், தமிழுக்கு இதுவரையும் முன்னுரிமை கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் இன்றையதினம் அது மாற்றம் பெற்றுள்ளது.

இந்நிலையில் யாழில் தமிழுக்கு முன்னுரிமை கொடுத்த ஜனாதிபதிக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றது.

யாழ்ப்பாண மாவட்டச்செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அலுவலகம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் இன்று (1) திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால

கடற்றொழில் நீரியல் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ,வடக்குமாகாண ஆளுனர் நாகலிங்கம் வேதநாயகன் ,பிரதியமைச்சர்களான சுனில் வட்டஹல. நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், க.இளங்குமரன்,

எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், மற்றும் சி்விகே சிவஞானம் அமைச்சின் செயலாளர்கள், பிரதம செயலாளர் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

அத்துடன் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.சமிந்த பத்திராஜ ,யாழ் மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் , பிரதியமைச்சர்கள் ,யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அதேவேளை யாழ் மாவட்டச் செயலகத்தின் 60 ஆவது ஆண்டு பூர்த்தயினை முன்னிட்டு இன்றையதினம் முத்திரையும் தபால் தலையும் வெளியிடப்பட்ட விசேட அம்சமாகும்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ளதுடன் பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

கச்சதீவு வேண்டும் : நடிகர் விஜய்க்கு பதிலடி கொடுத்த ஜனாதிபதி அனுரகுமார!!

இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை (Katchatheevu) மத்திய அரசு மீட்க வேண்டும் என மதுரை மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் கூறிய கருத்துக்கு ஜனாதிபதி அனுர குமார பதிலடி கொடுத்துள்ளார்.

கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்டுதருமாறு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் , அண்மையில் தெரிவித்திருந்த கருத்துக்கு , இலங்கையில் இருந்து பல்வேறு கண்டனங்கள் எழுந்திருந்தது.

மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநாட்டில் பேசிய அக்கட்சித் தலைவர் நடிகர் விஜய், “தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண, இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்திருந்தார்.

இலங்கை அரசியல்வாதிகள் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத், ஈழத் தமிழ் மீனவர் அமைப்பினர் உட்பட பலரும் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். சமூகவலைத்தளங்களிலும் கச்சதீவு விவகாரம் பேசுபொருளானது.

இந்நிலையில் இன்றயதினம் யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அனுர குமார , மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகளை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார். இதன்போது உறையாற்றிய ஜனாதிபதி,

கச்சத்தீவை மக்களுக்காகப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன் என்றும், எந்த செல்வாக்கிற்கும் அடிபணிய மாட்டேன் என தெரிவித்தார்.

50 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் சந்திர கிரகணம் : சனி பகவானால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்!!

ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் வருகிற செப்டம்பர் 07 ஆம் திகதி நிகழவுள்ளது. இந்த கிரகணத்தின் போது சந்திரன் கும்ப ராசியில் இருப்பார்.

இந்த கும்ப ராசியின் அதிபதி சனி பகவான். இப்படிப்பட்ட சனி பகவான் இந்த நிகழ்வின் போது வக்ர நிலையில் இருப்பார். அதுவும் மீன ராசியில் வக்ர நிலையில் இருப்பார்.

இப்போது 50 ஆண்டுகளுக்கு பின் சந்திர கிரகண நாளில் வக்ரமாக இருக்கும் சனி பகவானால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.

மிதுனம்

சந்திர கிரகணத்தின் போது சனி வக்ரமாக இருப்பதால் மிதுன ராசிக்காரர்கள் வேலை மற்றும் வணிகத்தில் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

படைப்பாற்றலும், தலைமைத்துவ திறன்களும் மேம்படும். பணியிடத்தில் செயல்திறன் பாராட்டப்படும். புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம் அல்லது முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம்.

புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், சிறப்பான பலனைப் பெற வாய்ப்புள்ளது. வணிகர்களின் நிதி நிலை சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்

சந்திர கிரகணத்தின் போது சனி வக்ரமாக இருப்பதால் விருச்சிக ராசிக்காரர்கள் குழந்தை தொடர்பான நல்ல செய்திகளைப் பெறலாம்.

குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். படைப்பாற்றலை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவித்து வாழ்வீர்கள்.

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். திடீரென்று நிதி நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

மீனம்

சந்திர கிரகணத்தின் போது சனி வக்ரமாக இருப்பதால் மீன ராசிக்காரர்கள் சமூகத்தில் பிரபலமாவார்கள்.

மேலும் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்கள் தங்கள் துணையை சந்திக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

காதலித்து வந்தால், அந்த காதல் ஆழமடையும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். இருப்பினும், ஏழரை சனி நடப்பதால், ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

 

இலங்கையில் வெவ்வேறு இடங்களில் காட்டு யானைகள் தாக்கி மூவர் உயிரிழப்பு!!

இலங்கையில் வெவ்வேறு இடங்களில் காட்டு யானைகள் தாக்கி பெண் ஒருவர் உட்பட மூவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். மொனராகலை – செவனகலை பகுதியில் காட்டு யானை தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

செவனகலை பகுதியைச் சேர்ந்த 24 நபரே உயிரிழந்துள்ளார். புத்தளம் – நவகத்தேகம பகுதியில் காட்டு யானை தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நவகத்தேகம பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். பொலனறுவை- மெதிரிகிரியை பகுதியில் காட்டு யானை தாக்கி இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மெதிரிகிரியை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.

பிரான்ஸிற்கு அனுப்புவதாக கூறி பல இலட்சம் ரூபா மோசடி!!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 10 இலட்சம் ரூபா நிதி மோசடி செய்யப்பட்ட நபருக்கு எதிராக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில், தெல்லிப்பழை – மாவிட்டபுரம் பகுதியைச் சேர்ந்த நபரே சங்கானையை சேர்ந்த ஒருவரை பிரான்ஸிற்கு அனுப்புவதாக கூறி 13 இலட்சம் ரூபாவை பெற்றுள்ளார்.

இந்நிலையில், அவரை பிரான்ஸிற்கு அனுப்பாத நிலையில் 3 இலட்சம் ரூபாவை திருப்பி கொடுத்ததுடன் 10 இலட்சம் ரூபா இன்னமும் கொடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட நபர் இதுகுறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். சந்தேகநபர் தலைமறைவாகிய நிலையில் பொலிஸார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழில் பாடசாலை மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!!

யாழில் மனவிரக்தியில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். இடைக்காடு – அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த கேதீஸ்வரன் சுபானு (வயது 16) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மாணவியின் தந்தை நீண்ட காலமாக மனைவியை பிரிந்திருந்த நிலையில் மாணவி தாயாருடனே வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 25ஆம் திகதி தவறான முடிவெடுத்து தனக்கு தானே மண்ணெண்ணெயை ஊற்றி தீ மூட்டியுள்ளார்.

இந்நிலையில் சிகிச்சைக்காக அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சாட்சிகளை அச்சுவேலி பொலிஸார் நெறிப்படுத்தினர்.

வவுனியாவில் புகையிரத்துடன் பட்டா மோதி விபத்து : குழந்தை உட்பட மூவர் காயம்!!

வவுனியாவில் இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் நான்கு வயதுக் குழந்தை உட்பட மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து இன்று (01.09.2025) மாலை இடம்பெற்றது.விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்….

கொழும்பில் இருந்து யாழ்நோக்கி பயணித்த தொடரூந்து இன்று மாலை வவுனியா பிரதான புகையிரத நிலையத்தை அடைந்ததுடன், அங்கிருந்து புறப்பட்டு யாழ்நோக்கி பயணித்தது.

இதன்போது வவுனியா மன்னார் பிரதான வீதியில் உள்ள பாதுகாப்பான தொடரூந்துகடவையில் சென்றுகொண்டிருந்த போது வீதியால் பயணித்த பட்டா வாகனத்தை மோதித்தள்ளியது.

விபத்தில் வாகனத்தில் பயணித்த கணவன், மனைவி மற்றும் அவர்களது நான்கு வயது குழந்தை ஆகியோர், காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்கள் பயணித்த வாகனம் கடும் சேதத்திற்குள்ளாகியது குறித்த விபத்து தொடரூந்து சமிஞ்சையில் ஏற்ப்பட்ட கோளாறு காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை விபத்து இடம்பெற்ற கடவையில் ஊழியர் ஒருவர் 24 மணிநேரங்களும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். வழமையாக அந்த கடவையூடாக தொடரூந்து செல்லும் போது மூடப்படுகின்ற பாதுகாப்புக்கதவு இன்று மூடப்படாமையினால் இவ் அசம்பாவிதம் ஏற்ப்பட்டுள்ளது.

இவ் விபத்தினால் அரைமணிநேர தாமதத்திற்கு பின்னரே தொடரூந்து தனது பயணத்தை ஆரம்பித்தது. சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவிலிருந்து அனுராதபுரத்திற்கு சென்ற லொறி விபத்து : மாணவி உட்பட இருவர் பலி!!

ஹொரவபொத்தானை – கஹடகஸ்திகிலிய பிரதான வீதியில் உள்ள அலப்பத்தாவ சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவி ஒருவரும், சாரதி ஒருவரும் உயிரிழந்துள்ளதாக ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹொரவ்பொத்தானை – மொரக்கேவ சிங்கள மஹா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 10 வயது சிறுமியும், 27 வயதுடைய சாரதியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவின் மொரக்கேவ சந்தியிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் அலப்பத்தாவ பாலத்திற்கு அருகில் நேற்று முன்தினம் (30.08.2025) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வவுனியாவிலிருந்து அனுராதபுரத்திற்கு கண்ணாடிகளை ஏற்றிச் சென்ற லொறியின் சாரதி உறங்கியமையினால் லொறி வீதியை விட்டு விலகி அருகிலுள்ள பாலத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

ரிதிகஹவெவ மொரக்கேவ வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 10 வயது மாணவி சதாசி விஹன்சா, பாடசாலை முடிவடைந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், லொறி அவரை மோதியுள்ளது.

லொறியில் மூன்று பேர் பயணம் செய்ததாகவும், சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துடன் மற்றொரு நபர் பலத்த காயங்களுடன் ஹொரவபொத்தானை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த மாணவி மற்றும் சாரதியின் சடலம், வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பிலான விசாரணைகளை ஹொரவபொத்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தை விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலி!!

விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்திருந்த ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்றையதினம் சாவடைந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்…

கடந்த 27ஆம் திகதி இரவு அனுராதபுரம் மாவட்டத்தின் கெப்பிற்றிக்கொல்லாவ பகுதியில் இருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த கப்ரக வாகனத்தை அந்த பகுதியில் கடமையில் இருந்த விசேட அதிரடிப்படையினர் வழிமறித்துள்ளனர்.

இதன்போது குறித்த வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து விசேட அதிரடிப்படையினரால் அந்த வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்டுள்ளது. இதன்போது அதில் பயணித்த இருவர் படுகாயமடைந்திருந்தனர்.

காயமடைந்த இருவரும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவரது நிலமை கவலைக்கிடமாக இருந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளிற்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் காலை சாவடைந்தார்.

வவுனியா கற்பகபுரம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (வயது 41) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே சாவடைந்துள்ளதுடன், பண்டிவிரிச்சான் பகுதியைச் சேர்ந்த நிக்சன் என்ற இளைஞர் காயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கணவனின் குற்றத்தால் நாடுகடத்தப்பட்ட மனைவி மற்றும் குழந்தை விமான நிலையத்தில் கைது!!

இந்தோனேசியாவில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் பெக்கோ சமனின் மனைவி மற்றும் குழந்தை, நாடு கடத்தப்பட்டு, நேற்று (29) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவு அவர்களைக் காவலில் எடுத்து, வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.

பெண் மீது குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை

அதன் பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்கள தலைமையகத்திற்கு அவர்களை ஒப்படைத்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து UL-365 விமானத்தில் நேற்று மாலை 5:50 மணியளவில் அவர்கள் இலங்கை வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

கெஹல்பத்தர பத்மே மற்றும் அவரது குற்றக் கும்பல் உறுப்பினர்கள் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட நிலையில், இந்தப் பெண்ணும் குழந்தையும் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

எனினும் பெண் மீது கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படாததால், இந்தோனேசிய அதிகாரிகள் அவரை இலங்கைக்கு நாடு கடத்தியதாகக் கூறப்படுகிறது.