மூளையை உண்ணும் அமீபா : ஆறு, ஏரி, குளங்களில் காத்திருக்கும் ஆபத்து!!

மூளையை உண்ணும் அமீபா என்று அழைக்கப்படும் நெய்க்லீரியா போலெரி, ஒரு செல் உயிரி ஆகும். இவை பொதுவாக ஆறு, ஏரி, குளங்கள் மற்றும் பராமரிக்கப்படாத நீச்சல் குளம் போன்ற இடங்களில் வாழும்.

அங்கு மூழ்கிக் குளிக்கும்போது, அரிதாக சிலருக்கு மூக்கு வழியாக இந்த அமீபா உடலுக்குள் நுழைந்து விடும். அதாவது மூக்கிலிருந்து மூளைக்கு பயணித்து, மூளை திசுக்களை அழித்து வீக்கத்தை ஏற்படுத்தும்.

மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், போதுமான குளோரின் கலக்கப்படாத பொழுதுபோக்கு பூங்காக்களிலும் இந்த அமீபா தொற்று காணப்படுகிறது.

மூளையை உண்ணும் அமீபாவின் ஆரம்ப அறிகுறிகளில் தலைவலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை முக்கியமானவை.

அமீபா வேகமாக வளரக்கூடியது என்பதால், இந்த அறிகுறி தொடங்கிய ஒன்று முதல் 18 நாட்களுக்குள் கடும் பாதிப்பை ஏற்படுத்தி மரணத்துக்கும் வழிவகுக்கும் அபாயம் கொண்டது.

உடலில் இந்த அமீபா வளரும்போது, கழுத்து இறுக்கமாவது, கவனமின்மை, சமநிலை இழப்பு மற்றும் மாயத்தோற்றங்கள் ஆகியவையும் ஏற்படக்கூடும்.

தொற்று மிகவும் அரிதானது என்பதால், சோதனை மூலம் இதனைக் கண்டறிவது கடினமான ஒன்றாக உள்ளது.

இலங்கையில் இன்று தங்கம் விலை நிலவரம்!!

இலங்கையில், தங்கத்தின் விலை இன்றைய தினமும் (03) மாற்றமின்றி, உள்ளதாக அகில இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேவேளை கடந்த வாரத்திலிருந்தே தங்கச் சந்தையில் அமைதி நிலவுகின்றது. இதற்கமைய, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 318,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 294,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை 24 கரட் தங்கம் ஒரு கிராம் 39,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராம் 36,750 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

யாழில் கடைக்கு வந்த நபரின் செயலால் அதிர்ந்துபோன பெண்கள்!!

யாழ்ப்பாணம் நல்லூர் கோயில் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் பணியாற்றும் பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்த சென்ற நபர் நாவற்குழியில் நேற்று (02) பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

நல்லூர் கோவில் வீதியிலுள்ள வர்த்தக நிலையத்திற்கு பொருட்களை கொள்வனவு செய்து போல் வருகை தந்த நபர் அங்கு பணியாற்றிய பெண்ணின் தங்கச சங்கிலியை கடந்த 01 ஆம் திகதி அறுத்துச் சென்றுள்ளார்.

சம்பவம் இடம்பெற்றபோது கடையில் இருந்த இரு பெண்களிடம் நட்ப்பாக அந்நபர் உயைராடிய நிலையில் திடீரென பெண்ணி சங்கிலியை அறுத்து சென்ற சம்பவம் அவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

அத்தோடு,மோட்டார் சைக்கிள் ஒன்றையும் ஆசிரியர் ஒருவரிடமிருந்து பறித்துக்கொண்டு தப்பிச் சென்றிருந்தார்.

இதனையடுத்து வர்த்தக நிலையத்திலிருந்த CCTV கமரா ஊடாக குறித்த நபரை இனங்கண்ட நாவற்குழி மக்கள் சந்தேகநபரை பிடித்து சாவகச்சேரி பொலிஸாரிடம் நேற்று ஒப்படைத்தனர்.

இதன்போது, சந்தேக நபரிடமிருந்த 3 இலட்சம் ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளது. குறித்த குற்றச் செயல்கள் யாழ். பொலிஸ் நிலைய பகுதிக்குள் இடத்பெற்றறிருந்ததால், சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, சந்தேக நபர் பல்வேறு குற்றச் செயல்களோடு தொடர்புடையவர் எனவும், சிறைத் தண்டனை பெற்று ஒருவாரத்துக்கு முன்னரே விடுதலையானவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பல்கலைக்கழக மாணவன் மரணம் : கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்!!

வவுனியா பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அனுராதபுரம், ஜெயசிறிபுராவைச் சேர்ந்த 23 வயதுடைய டி.எம்.எஸ். நிர்மல் விக்ரமதாச என்பவரே உயிரிழந்த மாணவன் ஆவார்.

வவுனியா பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் கடந்த 31ஆம் திகதி இரவு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், மாணவனின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்நிலையில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊடாக இந்த விசாரணை மேற்கொள்ளப்படும் என பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் அற்புதராஜா கூறியுள்ளார்.

அரச வேலைக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்!!

அரச வேலைக்காக 60,000 ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்ய எதிர்பார்த்துள்ளதாக பொது நிர்வாகம், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த ஆட்சேர்ப்பிற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், முதல் கட்டமாக, நாடு தழுவிய சேவைகளுக்கான பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.

பொது சேவைக்கான ஆட்சேர்ப்பு முறையான நடைமுறைகளின்படி மேற்கொள்ளப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாய்லாந்தில் இலங்கையை சேர்ந்த சமூக ஊடக ஆர்வலர் கைது!!

தாய்லாந்தில் இலங்கையை சேர்ந்த சமூக ஊடக ஆர்வலர் சலியா டி. ரணவக்க கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழுவால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு முன்னர் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய வீடியோக்களை வெளியிடுவதில் அவர் பெயர் பெற்றவராக இருந்த நிலையில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 

அனுராதபுரத்தைச் சேர்ந்த இரட்டை மாணவர்களுக்கு கிடைத்த அங்கீகாரம்!!

அனுராதபுரத்தில் உள்ள கட்டுகெலியாவ வித்யாதீப மகா வித்யாலயாவின் இரட்டை மாணவர்களான சசிரு நிம்னல் மற்றும் ராமிரு நிம்நாத் ஆகியோர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயங்கும் ரோபோவை உருவாக்கியதற்காக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேனவின் தலைமையில், அமைச்சகத்தில் இது தொடர்பான பாராட்டு விழா நடைபெற்றது.

நவீன தொழில்நுட்பங்களுக்கான ஆர்தர் சி. கிளார்க் நிறுவனம், கண்டுபிடிப்பாளர்கள் ஆணையகம் மற்றும் தேசிய கண்டுபிடிப்பு நிறுவனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் பங்கேற்று, மாணவர்களின் AI அடிப்படையிலான ரோபோவின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு தொழில்நுட்ப வழிகாட்டுதல் மற்றும் நிறுவன ஆதரவை உறுதியளித்தனர்.

அத்துடன் அமைச்சின் செயலாளர் முகமது நவவி, அதிகாரிகள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்தியாவில் கோர விபத்து குறைந்தது 15 பேர் பலி!!

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் பலோடி மாவட்டத்தின் மடோடா பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து கிட்டத்தட்ட 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிகானேர் மாவட்டத்தில் இருந்து திரும்பி வரும் வழியில் நிறுத்தப்பட்டிருந்த கனரக வாகனம் ஒன்றின் மீது மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்ததால் அங்கிருந்த பலர் உயிரிழந்தனர்.

மேலும், காயமடைந்தவர்கள், அப்பிரதேச மக்களுடன் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அத்துடன், பலத்த காயமடைந்தவர்கள் விமானம் மூலம் ஜோத்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பேருந்தில் அவசரகால வெளியேறும் கதவு இல்லாததே உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வழிவகுத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறிருக்க, சம்பவம் தொடர்பான விசாரணைகளை ராஜஸ்தான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிரித்தானியாவில் இடம்பெற்ற Cake competition இல் கலந்துகொண்ட முதல் ஈழத்தமிழர்!!

2025இற்கான Cake International competition நிகழ்வானது கடந்த 31ஆம் திகதி முதல் 02.11.2025 இன்று வரை பிரித்தானியாவிலுள்ள பேர்மிங்கம் நகரிலுள்ள National Exhibition centre (NEC)இல் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

Cake International competition (Cake and bake) இதில் 7000 இற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பல பிரிவுகளிலும் கலந்து கொண்டுள்ளனர்.

Cakes பிரிவில் 35 பிரிவுகளும், Bake பிரிவில் 23 பிரிவுகளுமாக இப்போட்டி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

1994ஆம் ஆண்டு International Craft & Hobby Fair Ltd என்ற நிறுவனம் Cake Established என்ற பெயரில் தொடங்கப்பட்டு 1996ஆம் ஆண்டு Cake International (CI) ஆக சர்வதேச அளவில் விரிவாக்கியது.

பின்னர் அது 2000 ஆண்டளவில் சர்வதேசப் புகழ் வாய்ந்த கேக் போட்டியாக இது மாறியது.

2017இல் இது மேலும் இரண்டு உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு “CAKE BIRMINGHAM”, “CAKE LONDON” என கேக் போட்டிகள் நடைபெறத் தொடங்கின. 2020, 2021 காலப்பகுதியில் COVID‑19 தொற்று காரணமாக “Virtual Edition” என்ற பெயரில் நடைபெற்றது.

2024 ஆண்டு Cake International competition தொடங்கப்பட்ட 30ஆவது ஆண்டு விழா (30 Years of CI) பெருந்திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது.

2025 ஆம் ஆண்டு இந்த Cake International competition நிகழ்வானது 31ஆவது வருடமாக நடப்பதுடன் அது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து “Cake International and Bake International Awards” என இரு பிரிவுகளாக முதல் முறையாக நடத்தப்படுகிறது.

இன்று பல பிரிவுகளாக பல பெயர்களில் ஜப்பான், டுபாய், அமெரிக்கா, இந்தியா, இத்தாலி ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் நிலையில் Head of Cake International Shows” என்று இந்த போட்டி அழைக்கப்படுகின்றது. சர்வதேச புகழ்வாய்ந்த Cake International competition நிகழ்வாக இந்நிகழ்வு திகழ்கிறது.

1996 இல் இந்த Cake International competition சர்வதேச மயப்பட்டதனால் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பல போட்டியாளர்கள் கலந்துகொண்டாலும் 1997ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து கலந்து கொண்ட Mr.R.Climent என்பவர் பல கோல்ட் மெடல்களை பெற்றுக்கொண்டார்.

இவரே பிரித்தானியா தவிர்ந்த வெளி நாடுகளிலிருந்து கலந்து கொண்டு கோல்ட் மெடல் பெற்ற முதலாவது போட்டியாளராவார்.

மதிவதனி மயூரன்

1997 இலிருந்து 2004 ஆம் ஆண்டுவரை தொடர்ச்சியாக கோல் பல மெடல்களை வென்று கேக் இன்ரநசனல் பதிவுப் புத்தகத்தில் உலகச் சாதனையாளராக பதியப்பட்டதுடன் அந்தக்கால பிரித்தானிய பிரதமராக இருந்த ரொனி பிளேயரிடம் பாராட்டும் நினைவுப் பரிசும் பெற்றவரென்பதும் குறிப்பிடத்தக்து.

சில காலங்கள் பிரித்தானிய பத்திரிகைகளை ஆக்கிரமித்த நபராக D.R.Climent இருந்தாரென்பதும். இவர் ஒரு சிங்கள இனத்தைச் சேர்ந்தவரென்பதும் மேலதிக தகவல்களாகும்.

இவரின் பின் பல சிங்கள, முஸ்லிம் போட்டியாளர்கள் இன்றுவரை பங்குபற்றி வருகின்றனர். இருந்தபோதிலும் ஈழத்தமிழர்கள் இதன் கடந்த 30 வருட வரலாற்றில் பங்குபற்றியிருக்கவில்லை.

31ஆவது வருடமாக நடைபெறும் Cake International competition show 2025இல் லண்டனைச் சேர்ந்த மதிவதனி மயூரன் பங்குபற்றி கோல்ட் உட்பட 5 மெடல்களையும் பெற்றுக்கொண்டார்.

31வது வருட Cake International போட்டியில் பங்குபற்றி போட்டியிட்ட முதலாவதாக ஈழத்தமிழர் இவராவார். இவர், கேக் வரலாற்றில் முதலாவது உலக சம்பியனான Mr.R.Climentஇன் மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

தங்கத்தின் விலை வரலாறு காணாத ரீதியில் அதிகரிக்கும் அபாயம் : நகை வாங்குபவர்கள் அவதானம்!!

எதிர்வரும் ஆண்டில் தங்கத்தின் விலை வரலாறு காணாத ரீதியில் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தேசிய இரத்தினக்கற்கள் மற்றும் நகைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, உலக தங்க சந்தையில் 5000 டொலர் வரை தங்கத்தின் விலை பதிவாகக்கூடும் என்றும் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளது.

நாட்டில் அண்மைய நாட்களாக திடீர் அதிகரிப்பை பதிவு செய்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாகக் குறைந்து வருவதாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கையில் தற்போது தங்கத்தின் விலை வீழ்ச்சியை பதிவு செய்து வருவதுடன், ஒரு பவுண் தங்கத்தின் விலை மூன்று இலட்சம் ரூபாயை விட குறைவடைந்துள்ளது.

மேலும், இவ்வாண்டில் தங்கத்தின் விலைகள் தொடர்ந்து குறைவடையும் என குறித்த ஆணைக்குழுவின் உதவி இயக்குநர் இந்திக்க பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த நாட்களில் தங்க நகைகளை வாங்குபவர்கள் அவதானமாக இருக்குமாறும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி, தங்கத்தின் தரம் தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், தேசிய இரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் ஆணைக்குழுவிற்கு தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், தங்கத்தின் விலைகள் எதிர்வரும் ஆண்டில் அதிகரிக்கும் அபாயம் உள்ளமையினால் மக்கள் தங்கத்தில் தங்களது முதலீகளை மேற்கொள்ள முடியும் என்றும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு!!

உயர்தர பரீட்சையை முன்னிட்டு 7ஆம் திகதியுடன் நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது. அதற்கமைய டிசம்பர் 8ஆம் திகதி பாடசாலைகளில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் மீள ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையை (G.C.E A/L Exam) முன்னிட்டு விடுமுறை வழங்கப்படவுள்ளது. எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பமாகும் பரீட்சைகள் டிசம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது

இந்நிலையில் டிசம்பர் 8 ஆம் திகதி பாடசாலைகளில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் மீள ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து 2026 ஜனவரி முதலாம் திகதி புதிய கல்வியாண்டுக்காக பாடசாலைகள் ஆரம்பமாகும்.

தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளில் 2026 ஜனவரி முதலாம் திகதி முதலாம் தவணையின் முதற்கட்ட கல்வி செயற்பாடுகள் ஆரம்பமாகி பெப்ரவரி 13ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

பெப்ரவரி 14 முதல் மார்ச் 2ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது. முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் மார்ச் 3ஆம் திகதி முதல் ஏப்ரல் 10 வரை இடம்பெறவுள்ளது.

ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 19 வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது. இரண்டாம் தவணை ஏப்ரல் 20ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை 24ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

மூன்றாம் தவணையின் முதற்கட்டம் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 7ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

ஆகஸ்ட் 8 முதல் செப்டெம்பர் 6ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது. மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் செப்டெம்பர் 7ஆம் திகதி முதல் டிசம்பர் 4ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

16 லட்சம் மதிப்புள்ள வீட்டை வென்ற 10 மாத குழந்தை : மகிழ்ச்சியில் பெற்றோர்!!

ரூ.500 மதிப்புள்ள கூப்பனை வாங்கி 10 மாத குழந்தை சொந்த வீடு வாங்கிய சம்பவம் ஆச்சயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா – தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் சங்கர் பேட்டையை சேர்ந்தவர் ராம பிரம்மம். இவர் ரூ.16 லட்சம் மதிப்புள்ள தனது பழைய வீடு மற்றும் நிலத்தை விற்க முடிவு செய்தார். எனினும் இவரது வீட்டை வாங்க யாரும் முன் வரவில்லை.

இதனால் தனது வீடு, நிலத்தை வாங்க விரும்புபவர்கள் ரூ.500 மதிப்புள்ள கூப்பனை வாங்கினால் குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என நெடுஞ்சாலை ஓரத்தில் ராம பிரம்மம் பேனர் வைத்தார்.

ஏராளமானவர்கள் போட்டி போட்டு ரூ.500 பரிசு சீட்டு வாங்கிச் சென்றனர். சங்கர் பள்ளியை சேர்ந்தவர் சங்கர். இவர் அங்குள்ள ஓட்டலில் வேலை செய்து வருகிறார்.

சங்கர் இவரது பெயரிலும் இவரது மனைவி பிரசாந்தி, மகள்கள் சாய் ரிஷிகா மற்றும் தனது 10 மாத குழந்தை ஹன்சிகா பெயரில் 4 சீட்டு வாங்கினார்.

இந்நிலையில் நேற்று அதிர்ஷ்டசாலியை தேர்ந்தெடுக்க குலுக்கல் நடத்தப்பட்டது. குலுக்களில் சங்கரின் 10 மாத குழந்தை ஹன்சிகா அதிர்ஷ்டசாலியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ரூ.500 பரிசு சீட்டுக்கு ரூ.16 லட்சம் மதிப்புள்ள வீடு வென்ற ஹன்சிகாவுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வெறும் 500 ரூபாவில் ரூ. 16 லட்சம் வீட்டை பெற்றதால் சங்கர் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

வவுனியா பல்கலைக்கழக மாணவன் திடீரென உயிரிழப்பு : பொலிஸார் விசாரணை!!

வவுனியா பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் கடந்த 31 ஆம் திகதி இரவு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

இருப்பினும், மாணவனின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அனுராதபுரம், ஜெயசிறிபுராவைச் சேர்ந்த 23 வயதுடைய டி.எம்.எஸ். நிர்மல் விக்ரமதாச என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விடுதியில் இருந்த போது ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், மாணவன் உயிரிழக்கும் போது அவரது உடலில் கணிசமான அளவு மது இருந்ததாக சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மாணவனின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தனது சகோதரனுக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை எனவும், 31 ஆம் திகதி இரவு பல்கலைக்கழக மாணவர் விருந்தில் மூத்த மாணவர்கள் தனது சகோதரனை மது அருந்த கட்டாயப்படுத்தியதாகவும் சகோதரர் குற்றம்சாட்டியுள்ளார்.

தனது சகோதரருக்கு வேறு எந்த மருத்துவ பிரச்சினைகளும் இல்லை என்றும், பல்கலைக்கழக பிரச்சினைகள் குறித்து அவர் பல சந்தர்ப்பங்களில் தனது குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

அர்ச்சுனாவின் காரில் இருக்கும் ஆபத்தான ஆயுதம் : பகிரங்கப்படுத்திய அர்ச்சுனா!!

தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், அரசாங்கம் தனக்கு பாதுகாப்பு வழங்காததால், தனது சொந்த பாதுகாப்பிற்காக வாளை ஏந்தி வருவதாக யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கூறியுள்ளார்.

இது குறித்து சபாநாயகர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு தான் அறிவித்துள்ளதாக அர்ச்சுனா குறிப்பிட்டதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால், இதற்கு முன்னர் இரண்டு முறை எழுத்துப்பூர்வமாக பாதுகாப்பு கோரிய போதிலும், அரசாங்கத்திடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் அர்ச்சுனா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தனது சொந்தப் பாதுகாப்பிற்காக ஒரு துப்பாக்கியைக் கோரிய போதிலும், அதற்கும் அரசாங்கத்திடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பின்னர் விலங்குகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு ஸ்ப்ரே துப்பாக்கியைக் கோரிய போதிலும், அதற்காக அரசாங்கத்திடமிருந்து எந்த பதிலும் தனக்குக் கிடைக்கவில்லை என்றும் அர்ச்சுனா சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, தனது சொந்த பாதுகாப்பிற்காக ஒரு வாளை தன்னுடன் வைத்திருப்பதாகவும், அதை எப்போதும் தனது காரில் வைத்திருப்பதாகவும்,

இது குறித்து சபாநாயகர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அர்ச்சுனா தெரிவித்ததாக குறித்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 12 பேர் பரிதாபமாக பலி!!

இந்தியா ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 12 பேர் பலியான சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா ஆந்திர பிரதேசம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் காசிபுக்கா என்ற பகுதியில் வெங்கடேஸ்வரா சுவாமி என்ற கோவில் உள்ளது. ஏகாதசியை முன்னிட்டு கோவிலுக்கு பக்தர்கள் திரளாக வந்து கலந்து கொண்டுள்ளனர்.

அப்போது, திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது. பெண்கள், குழந்தைகள் உள்பட 12 பேர் பலியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கூட்ட நெரிசலில் பலர் காயம் அடைந்துள்ளனர்.

அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகேயுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்று கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தனியார் வகுப்புக்கள், கருத்தரங்குகள் நடத்தத் தடை!!

இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திர (க.பொ.த) உயர்தரப் பரீட்சைக்கான தனியார் வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவது எதிர்வரும் நவம்பர் 04ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் தடை செய்யப்படுவதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை முடியும் வரை இந்தத் தடை அமுலில் இருக்கும் என்று பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சையானது நவம்பர் மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகி, டிசம்பர் மாதம் 05ஆம் திகதி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.