அமெரிக்காவின் அதிரடி தாக்குதல் : சர்வதேசத்தில் திடீர் போர்ப்பதற்றம்!!

கரீபியன் மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடல்களில் அமெரிக்கப் படைகள் நடத்திய தொடர் தாக்குதல்களில் 62க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கைகள் வெனிசுலாவிலிருந்து போதைப்பொருள் கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் 15க்கும் மேற்பட்ட கப்பல்களை அழித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் எந்த பொது ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ட்ரென் டி அரகுவா போன்ற வெனிசுலா குற்றக் கும்பல்களை குறிவைத்து நடத்தப்படும் பரந்த போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக விவரிக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, சட்டவிரோதமானது என ஐக்கிய நாடுகள் சபை கடுமையாகக் கண்டித்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் இந்த கொலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், அவற்றை “ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும் கூறியுள்ளார்.

அதேவேளை, வெனிசுலாவை தாக்குவது குறித்து இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என அறிவித்துள்ள போதிலும் இந்தத் தொடர் தாக்குதல்களுக்கு மத்தியில் வெனிசுலா கடற்கரைக்கு அருகே ஒரு பெரிய அமெரிக்க இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கடுகின்றது.

இது அமெரிக்கா வெனிசுலா மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல்களை மேற்கொள்ள தயாராக இருப்பதை காட்டுகின்றது.

அதேநேரம், வெனிசுலாவின் அரச தரப்பில் இருந்தும் தாங்கள் தாக்குதலுக்கு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை போர் பதற்றத்தை அதிகரிப்பதை காட்டுவசதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தங்கம் அணிந்தால் 50000 அபராதம் விதிக்கும் அதிசய கிராமம்!!

வெளிநாட்டவரைவிட தங்கத்திற்கு இந்தியர்கள் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதற்கு காரணம், தங்க நகைகளை இங்கிருக்கும் அனைவருமே ஒரு பெரிய முதலீடாக பார்க்கின்றனர்.

குறிப்பாக, பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் வீட்டில் தங்க நகைகளை பெற்றோர்கள் ஆரம்பம் முதலே சேமிக்க ஆரம்பித்து விடுகின்றனர். சமீப காலமாக, தங்கத்தின் விலை கூடுதலாக இருக்கின்ற நிலையில், நகை வாங்க முடியாத சிரமத்தில் பல பேர் இருக்கின்றனர்.

இந்நிலையில், உத்தரகாண்டில் சக்ராதா என்கிற கிராமத்தில் பெண்கள் அதிகம் தங்கம் அணிந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று உத்தரவு உள்ளது.

இந்த கிராமத்தில் நடந்த உள்ளூர் பஞ்சாயத்தில்தான் வித்தியாசமான இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது. நகை வாங்க முடியாமல் இருப்பவர்களின் சங்கடத்தை தீர்க்கதான், இந்த உத்தரவை கிராமத்தின் பெரியவர்கள் வழங்கி இருக்கின்றனர்.

இதன்படி, பெண்கள் வெளியில் வரும் போது தாலி, மூக்குத்தி, கம்மல் தவிர வேறு எதையும் அணியக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை தவிர்த்த வேறு நகைகள் எதையாவது வெளியில் வரும் போது அணிந்தால், அவர்களுக்கு ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரகாண்ட் கிராமத்தில், கடந்த 15-20 வருடங்களாக அதிக நகை போட்டுக்கொள்வது புது வழக்கமாக இருந்து வந்துள்ளது. ஆனால், நகை இல்லாத குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு இவ்வழக்கம் சமூக அழுத்தத்தை கொடுத்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், அதிக தங்க நகைகளை அணிந்தால் அபராதம் என்கிற உத்தரவு, கிராம மக்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.

விடிந்தால் திருமணம் : புதுமணப்பெண் மர்ம மரணம் : கதறும் பெற்றோர்!!

விடிஞ்சா கல்யாணம் சொந்த பந்தம், உற்றார், உறவினர்களுக்கு எல்லாம் பத்திரிக்கை கொடுத்து, அவர்களும் மண்டபத்தில் திரண்டிருந்த நிலையில், புதுமணப்பெண் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சித்தூரை சேர்ந்த பாண்டுரங்கன் – வனிதா தம்பதியின் மகள் சந்தியா (21), பி.காம். படிப்பு முடித்தவர். இவர்கள் தற்போது திருவள்ளூர் அருகே மணவாளநகரில் வசித்து வந்தனர்.

சந்தியாவின் திருமணம், பள்ளிப்பட்டு அருகே அத்திமாஞ்சேரி பேட்டை பாரதிநகரைச் சேர்ந்த மணி என்ற இளைஞருடன் பெரியோர்கள் சம்மதத்துடன் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

திருமணம் இன்று (வெள்ளிக்கிழமை) பலிஜகண்டிகை கிராமத்தில் நடைபெறவிருந்தது. இதற்காக மணமகள் குடும்பம் இரண்டு நாட்களுக்கு முன் மணமகன் வீட்டிற்கு வந்திருந்தனர்.

நேற்று காலை சந்தியா குளிக்கச் சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆன பின்னும் அவர் வெளியே வராததால், உறவினர்கள் கவலைப்பட்டனர். பலமுறை சத்தம் போட்டும் பதில் வராத நிலையில் கதவை உடைத்து பார்த்தபோது, சந்தியா மயக்க நிலையில் விழுந்து கிடந்தார்.

உடனடியாக அவரை அத்திமாஞ்சேரி பேட்டை அரசு சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவர்கள் பரிசோதித்த போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

திருமணத்துக்கு முந்தைய நாள் மணப்பெண் மரணம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியது. பொதட்டூர்பேட்டை போலீசார் மர்மச்சாவாக வழக்குப் பதிவு செய்து,

சந்தியா விஷம் குடித்தாரா அல்லது வேறு காரணமா என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் துயர அலைவையும் ஏற்படுத்தியுள்ளது.

காதலுக்காக தாயைக் கொலை செய்த பள்ளி மாணவி : காதலனுடன் சேர்ந்து திட்டம் தீட்டியது அம்பலம்!!

காதலுக்காக பள்ளி மாணவி தன்னுடைய தாயை கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் பெங்களூரின் சுப்பிரமண்யபுரா பகுதியில் நடந்துள்ளது. சுப்பிரமண்யபுரா பகுதியில் வசித்து வந்த நேத்ராவதி என்ற பெண், கணவரை பிரிந்து தனது மகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார்.

கடுமையான உழைப்பில் மகளை வளர்த்த நேத்ராவதி, தன் மகளின் நலனுக்காக அனைத்தையும் தாங்கி வந்தார். ஆனால், மகள் அடிக்கடி தாயுடன் வாக்குவாதம் செய்து வந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுவனுடன் மாணவிக்கு காதல் ஏற்பட்டது. இச்சிறுவன் அடிக்கடி வீட்டிற்கு வரத் தொடங்கியதும், நேத்ராவதி சந்தேகப்பட்டார்.

பின்னர், இருவரும் காதலிப்பது தெரியவந்ததால் தாய் கடுமையாக கண்டித்தார். “பள்ளியில் கவனம் செலுத்து; இவன் இங்கே வரக்கூடாது” என எச்சரித்தார்.

இதனால் கோபமடைந்த மாணவி, தாயை அகற்றிவிட்டால் தடை இருக்காது என்று எண்ணியுள்ளார். கடந்த அக்டோபர் 25ம் தேதி இரவு தாய் மது அருந்தி தூங்குவார் என்று காதலனுக்கு தகவல் அளித்துள்ளார். அதன்படி சிறுவனும், அவனது நண்பர்களும் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

அப்போது நேத்ராவதி எழுந்து அவர்களைப் பார்த்து கடிந்துக்கொண்டார். சிறுவனின் செல்போனை பிடித்து போலீசில் புகார் அளிப்பேன் என கூறியதும், அவர்கள் மூவரும் சேர்ந்து நேத்ராவதியின் கழுத்தில் துணியை சுற்றி நெரித்துள்ளனர்.

நேத்ராவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், தற்கொலை போல காட்டுவதற்காக அவரது உடலை புடவையால் சுவரில் தொங்க விட்டனர்.

சம்பவத்திற்குப் பிறகு மாணவி காணாமல் போனதால் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை ஆரம்பித்தனர். ஐந்து நாட்கள் கழித்து மாணவி வீடு திரும்பிய போது, போலீசார் விசாரித்ததில் கொலை சம்பவத்தின் முழு பின்னணியும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதனையடுத்து 13 வயது சிறுவன் உட்பட மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டு சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தாயை கொலை செய்து, பெற்ற மகளே தற்கொலை போல நாடகமாடிய சம்பவம் பெங்களூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொதிக்கும் மீன் குழம்பை மனைவியின் முகத்தில் ஊற்றிய கணவன்!!

கேரள மாநிலம் கொள்ளத்தில், கொதித்துக் கொண்டிருந்த மீன் குழம்பை மனைவியின் முகத்தில் கணவன் ஊற்றிய நிலையில், இது குறித்த காரணம் கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

கொள்ளம் மாவட்டம் சடையமங்கலம் அருகே வைகல் பகுதியைச் சேர்ந்தவர் சஜீர். இவரது மனைவி ரஜிலா கஃபூர் (36). மனைவி. நேற்று காலை வீட்டில் இருந்த சஜீர், தனது மனைவியிடம் “முடியைத் தளர்த்திவிட்டு, தனது முன்னால் உட்காரச்சொல்லி,

மாந்திரீகர் ஒருவர் கொடுத்த ஆபரணத்தை அணிந்துக் கொள்ள வேண்டும் என்றும், சாம்பலை முகத்தில் பூச வேண்டும்” என்றும் கூறியுள்ளார். இதற்கு ரஜிலா மறுப்பு தெரிவித்துள்ளார். சமீப காலங்களாக தனது கணவர் மாந்திரீகத்தில் அதிக ஈடுபாடு காட்டி வருவதாக கூறப்படுகிறது.

தனது பேச்சுக்கு மனைவி மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த சஜீர், சமையலறையில் அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த மீன் குழம்பை சட்டியுடன் தூக்கி வந்து ரஜிலாவின் முகத்தில் ஊற்றி தாக்கியுள்ளார்.

ரஜிலாவின் அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று, அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், “சஜீர் பலமுறை தனது மனைவியை “பிசாசு பிடித்திருக்கிறாள்” என்ற நம்பிக்கையில் தாக்கி வந்ததாகவும், இது குறித்து ஏற்கெனவே ரஜிலா போலீசில் புகார் அளித்ததாகவும் கூறினர்.

அப்போது சஜீரை அழைத்து எச்சரித்த போதிலும், பின்னர் அவர் மாந்திரீகர்களை அணுகி, மனைவிக்கு சூனியம் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தற்போது பாரதிய நீதிச் சட்டம் பிரிவு 118(1) (அபாயகரமான பொருளை பயன்படுத்தி காயப்படுத்துதல்) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சஜீரை பிடிக்க போலீசார் தீவிரமாகத் தேடிவருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லண்டன் மாணவியின் திருமணம் “குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்காதீங்க..” : கண்ணீர்விட்டு கதறிய தந்தை!!

லண்டனில் படித்து வந்த இளம்பெண்ணை, நெல்லையைச் சேர்ந்த அவரது காதலன் கோவைக்கு வரவழைத்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இன்று நெல்லையில் திருமணத்தைப் பதிவு செய்ய முயன்றபோது தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலில் காதலனின் தந்தை, சித்தப்பா ஆகிய 2 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் இசக்கி பாண்டி. இவரும், வசதியான குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், பெண்ணின் வீட்டார் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. பெண்ணின் குடும்பத்தினர், அவரை மேல்படிப்பிற்காக லண்டனுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இருப்பினும், இசக்கி பாண்டியும் அந்தப் பெண்ணும் செல்போன் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்பில் இருந்துள்ளனர். இதனிடையே, பெண்ணுக்கு அவரது வீட்டில் வேறு திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளன.

இதை அடுத்து, காதலனின் திட்டப்படி அந்தப் பெண் லண்டனில் இருந்து விமானம் மூலம் மும்பை வந்து, அங்கிருந்து கொச்சின் விமான நிலையம் வந்துள்ளார்.

அங்கு காத்திருந்த இசக்கி பாண்டியின் உறவினர்கள், காதல் ஜோடியை காரில் கோவைக்கு அழைத்து வந்துள்ளனர்.

கோவையில் உள்ள சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கோவையில் திருமணத்தைப் பதிவு செய்ய முயன்றபோது, பெண்ணின் உறவினர்கள் அங்கு திரண்டு எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தது.

பெண்ணின் உறவினர்களிடமிருந்து அச்சுறுத்தல்கள் இருந்ததால், கோவை போலீசார் பலத்த பாதுகாப்புடன் காதல் ஜோடியை அவர்களது சொந்த ஊரான நெல்லைக்கு அனுப்பி வைத்தனர்.

கோவையில் ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்ட நிலையில், இன்று நெல்லையில் அந்தத் திருமணத்தைப் பதிவு செய்வதற்காக இசக்கி பாண்டி தனது உறவினர்களுடன் சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த பெண்ணின் வீட்டாருக்கும், இசக்கி பாண்டி தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த தகராறு மோதலாக மாறியது. இதில் காயமடைந்த இசக்கி பாண்டியின் தந்தை செல்வம் மற்றும் அவரது சித்தப்பா மணிகண்டன் ஆகிய இருவரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து நெல்லை மாநகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருந்தபோதும் இசக்கி பாண்டியன் தொடர்ந்து அந்த பெண்ணிடம் பேசி வந்த நிலையில் 18 வயது முடிந்த மூன்று நாட்களே ஆன நிலையில் அவரை இந்தியா வரவழைத்து திருமணம் செய்து கொண்டதாக அவரது பெற்றோர் கூறுகின்றனர்.

மேலும் குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்காதீர்கள் என அந்த பெண்ணின் தந்தை கண்ணீர் மல்க பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இரு இளைஞர்களின் வாழ்வை பறித்த லொறி : தமிழர் பகுதியில் சம்பவம்!!

வெலி ஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெலி ஓயா-சிங்கபுர வீதியில் உள்ள சிங்கபுர சந்தியில் மோட்டார் சைக்கிள் ஒன்று லொறியுடன் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இருவரும் வெலி ஓயா பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 30 வயதுடையவர்கள் ஆவர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

யாழில் அதிரடியாக கைதான பாண் வியாபாரி : அதிர்ச்சி கொடுக்கும் பின்னணி!!

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பாண் விற்பணையில் ஈடுபடும் நபர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதாகியுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நாவற்குழி பகுதியில் கைது செய்யப்பட்டதுடன் , போதைப்பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

சட்டவிரோதமாக ஐரோப்பா சென்ற இலங்கையர்கள் சுடப்பட்டு உயிரிழப்பு!!

சட்டவிரோதமாக ஐரோப்பா சென்ற இலங்கையர் இருவர், துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.

கிளிநொச்சி உருத்திரபுரத்தைச் சேர்ந்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஆட்கடத்தல் காரர்கள் மூலம் சட்டவிரோதமாக வெளிநாடு சென்ற நிலையில், நேற்றையதினம் (30.10.2025) பெலாரஸ் எல்லையில் அந்நாட்டு இராணுவத்தினரால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இதன்போது, அவருடன் இருந்த மற்றுமொரு இலங்கையரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந் நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.

குறித்த இருவரும் பெலாரஸ் நாட்டின் எல்லைப் பகுதியில் உள்ள அடர்காட்டுப் பகுதியில் விலங்குகள் நுழையும் பகுதிக்குள்ளால் மற்றுமொரு நாட்டுக்குள் நுழைய முயற்சித்துள்ளனர்.

இதன்போது, பெலாரஸ் இராணுவத்தினரால் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

வடமராட்சியில் யுவதி ஒருவரின் சடலம் மீட்பு!!

யாழ். வடமராட்சியில் வீடொன்றில் தவறான முடிவெடுத்த நிலையில் யுவதி ஒருவரின் சடலம் நேற்று (31.10.2025) காலை மீட்கப்பட்டுள்ளது. கரவெட்டி, துன்னாலை – அல்லையம்பதியைச் சேர்ந்த 27 வயது யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு சென்ற கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வேலுப்பிள்ளை பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

இதனையடுத்து, சாட்சிகளை நெல்லியடி பொலிஸார் நெறிப்படுத்தியுள்ளனர். பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பெண் ஒருவர் கல்லால் தாக்கப்பட்டு படுகொலை!!

காலி, அஹுங்கல்ல பொலிஸ் பிரிவின் பாத்தேகம பகுதியில் பெண் ஒருவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக நபர் ஒருவர் பெண்ணை கல்லால் தாக்கியுள்ளார்.

அதனால் பலத்த காயமடைந்த பெண், பலபிட்டிய மருத்துவமனையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் பாத்தேகம பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் உயிரிழந்த பெண்ணின் உறவினர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொலையின் பின்னர் சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல் : விலைகளில் மாற்றம்!!

இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, தங்கத்தின் விலையானது கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில்,

இன்று (01.11.2025) சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனடிப்படையில், கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின்படி,

அதேவேளை, 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 294,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

பொலித்தீன் பைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று முதல் அமுலில்!!

வர்த்தக நிலையங்களில் இலவசமாக பொலித்தீன் பைகள் வழங்கப்படாது என அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று சனிக்கிழமை (01) முதல் அமுல்படுத்தப்படுகிறது.

நவம்பர் 01ஆம் திகதி முதல் வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது இலவசமாக பொலித்தீன் பைகள் வழங்கப்படாது என அண்மையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

பொலித்தீன் பயன்பாட்டினால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்காகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பொலித்தீன் பைகளுக்கு கட்டாயம் அறவிடப்பட வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபையும் அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இலங்கை தொடர்பில் வெளியான தகவல்!!

இந்தியப் பெருங்கடலில் இன்று(01.10.2025) அதிகாலையில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) அறிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் மக்கள் வசிக்காத பகுதியில் ஏற்பட்டுள்ளதால், எந்தவொரு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

எனினும், இலங்கை மற்றும் இந்தியக் கடற்பிராந்தியங்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்பதை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் முழுமையாக உறுதி செய்துள்ளது.

மேலும் தரவுகளின்படி, நிலநடுக்கம் ஏற்பட்ட பிராந்தியம் முற்றிலும் மக்கள் வசிக்காத கடல் பகுதியாகும். எனவே, உயிர்சேதம் அல்லது சொத்து சேதம் குறித்த எந்தத் தகவலும் இதுவரை பதிவாகவில்லை.

இந்த நிலநடுக்கம் இந்தியப் பெருங்கடலின் டெக்டோனிக் தட்டு (Tectonic Plate) எல்லைகளுக்கு அருகில் நிகழும் வழக்கமான நில அதிர்வுகளில் ஒன்றாகும். இப்பகுதியில் அவ்வப்போது இதுபோன்ற நிகழ்வுகள் பதிவாகுவது இயல்பானது என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

17 வயது சிறுவனுக்கு எமனாக மாறிய மோட்டார் சைக்கிள் : தமிழர் பகுதியில் சோகம்!!

அம்பாறை – வீரகொட பகுதியில் நேற்று (30.10.2025) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மத்திய முகாம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீரகொடவிலிருந்து ருகுணுகம நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு விலகி கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் உஹன, திஸ்ஸபுரத்தைச் சேர்ந்த 17 வயதுடையவர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் அம்பாறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மத்திய முகாம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்கலைக்கழக படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்த இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!!

பலாங்கொட, பின்னவல பொலிஸ் பிரிவின் வளவே அத்தர பகுதியில் சுரங்கத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 26 வயதுடைய கே.ஜி. நதீக சாரதா குணதிலக என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் பல்கலைக்கழக படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனை பலாங்கொட ஆதார மருத்துவமனையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜயதிலக தெரிவித்தார்.

இளைஞனின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.