பல கோடிகளுக்கு அதிபதி தெருநாய்களால் உயிரிழந்த சோகம்..!

இந்தியாவில்..

இந்தியாவின் வாக் பக்ரி நிறுவன இயக்குனர் பராக் தேசாய், தெருநாய்கள் தாக்குதலின்போது படுகாயமடைந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வாக் பக்ரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பராக் தேசாய் (49).குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபரான இவர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில்முனைவோர் அனுபவம் உடைவர்.

இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) போன்ற முன்னணி தொழில் தளங்களில் தீவிரமாக களமாடிய பராக், இந்திய தொழில்துறையின் மரியாதைக்குரிய குரலாகவும் இருந்தார்.

இந்த நிலையில் கடந்த 15ஆம் திகதி, தனது வீட்டு வாசலில் தன்னைத் தாக்கிய தெரு நாய்களை விரட்ட முயன்றுள்ளார். அப்போது அவர் கீழே விழுந்து படுகாயமுற்றார்.இதனைக் கண்ட தேசாயின் குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாக நேற்றைய தினம் பராக் தேசாய் உயிரிழந்தார்.பராக் தேசாயின் இறப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

62 வயது தந்தைக்கு மறுமணம் செய்து வைத்த பாச மகள்!!

இந்தியாவில்..

இந்தியாவின் கேரள மாநிலத்தில் மகளே தந்தைக்கு மறுமணம் செய்து வைத்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.கேரள மாநிலம் பத்தினம்திட்டாவின் திருஏறங்காவு பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ண குருப் (62).இவரது மனைவி கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் ராதாகிருஷ்ண குருப் விரக்தியில் இருந்துள்ளார்.

தந்தையின் நிலையை கண்டு கவலையுற்ற குருப்பின் மகள் ரெஞ்சு, அவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என முடிவெடுத்தார்.

இதற்காக அவர் திருமண வரன் பார்க்கக்கூடிய இணையதளங்களில் தந்தைக்கு துணையை தேடினார். அப்போது கணவரை இழந்து தனிமையில் வாழ்ந்து வந்த மல்லிகா குமாரி (60) என்பவரை பற்றிய விவரம் தெரிய வந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து அவர் தனது தந்தைக்கு சரியான பொருத்தமாக இருப்பார் என நினைத்த மகள் ரெஞ்சு, அவரது குடும்பத்தினரை தொடர்புகொண்டு பேசி, பின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இருவரது குடும்பத்தினரும் ஒன்றுகூடி ராதாகிருஷ்ண குருப்புக்கும், மல்லிகா குமாரிக்கும் திருமணம் செய்து வைத்தனர். இந்த திருமணத்தில் இருவரது உறவினர்களும் சேர்த்து 50 பேர் கலந்து கொண்டனர்

காதல் மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த கணவன்!!

பீகாரில்..

பீகார் மாநிலம் ஜெகனாபாத் மாவட்டத்தில் வசித்து வருபவர் கஜேந்திர யாதவ். இவர், தலைநகர் பாட்னாவில் அக்டோபர் 19ம் தேதி வியாழக்கிழமை ஹோட்டலில் அறை முன்பதிவு தங்கியிருந்தார். அவரை சந்திக்க அவரது மனைவி ஷோபா குமாரி காலையில் அறைக்கு தேடி வந்தார்.

மனைவி வந்த சில நிமிடங்களிலேயே கஜேந்திர யாதவ் வெளியே சென்றிருக்கிறார். அப்போது ஹோட்டல் ஊழியரிடம் காலை உணவு வாங்கிவரப் போவதாகவும் சிறிது நேரத்தில் திரும்பி வந்துவிடுவதாகவும் சொல்லிவிட்டுச் சென்றார்.

நீண்ட நேரம் ஆகியும் அறைக்குத் திரும்பவில்லை. இதனையடுத்து ஹோட்டல் ஊழியர் அவரது அறைக்குச் சென்று பார்த்தபோது, ​​அங்கு அவரது மனைவி ஷோபா உடலில் ஆடையின்றி ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார்.

இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர் நிர்வாகிக்கு தகவல் கொடுத்தார். அவர் உடனடியாக காவல்துறைக்கு அளித்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்தனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த ஷோபா குமாரி மாநில காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்தவர் என்பதுகுறிப்பிடத்தக்கது. இக்கொலைச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாயமாகியுள்ள கஜேந்திர யாதவையும் போலீசார் தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், அந்தப் பெண்ணின் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டதாகத் தெரிகிறது .

ஹோட்டல் அறையில் இருந்து ஆயுதங்களையும் போலீசார் மீட்டுள்ளனர். அவர் ஹோட்டல் அறையில் தனது கணவரை எந்தச் சூழ்நிலையில் சந்தித்தார் என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். . இந்த வழக்கை மேலும் முறையாக விசாரிக்க சிறப்பு தொழில்நுட்ப குழுக்களையும் காவல்துறை அமைத்துள்ளது.

கை,கால்கள் கட்டப்பட்டு காவலாளி கொலை : பெண்னுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

பெலிகவில்..

கலேவல – குருணாகல் பிரதான வீதியின் பெலிகம பிரதேசத்தில் உள்ள பண்ணை ஒன்றில் காவலாளியின் கை, கால்களையும் வாயையும் கட்டி படுகொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவத்தில் கொல்லப்பட்டவர் 52 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை எனத் தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் ,

நேற்றையதினம் புதன்கிழமை (25) இரவு பால் விற்பனை நிலையத்துக்குள் புகுந்த குழுவினர் அங்கிருந்த பொருட்கள் சிலவற்றையும் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.இன்று வியாழக்கிழமை (26) காலை குறித்த காவலாளிக்கு உணவு கொண்டு சென்ற பெண் ஒருவர் சடலத்தைக் கண்டு அதிச்சியடைந்து, அது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

குறித்த பால் விற்பனை நிலையம் இதற்கு முன்னரும் மூன்று தடவைகள் உடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கலேவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இரவுநேர காவலாளி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருகோணமலையில் விபத்துக்குள்ளாகி இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!!

திருகோணமலையில்..

திருகோணமலை – பூநகர் பகுதியில் இன்று (26.10.2023) பிற்பகல் வேளையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் சிக்கியவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் விழாவெட்டுவான் -நாகக்காடு பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை நோக்கி தனியாக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த கம்பம் ஒன்றில் மோதுண்டதில் சம்பவம் இடத்தில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபரின் சடலம் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

20,000 சம்பள உயர்வு கோரும் அரசாங்க ஊழியர்கள்!!

அரசாங்கம்..

அரசாங்க ஊழியர்களுக்கு இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் 20,000 ரூபா சம்பள அதிகரிப்பு தேவையென தேசிய தொழிற்சங்க நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அதன் அழைப்பாளர் வசந்த சமரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து பாரிய போராட்டம்
அகில இலங்கை அரச முகாமைத்துவ உதவி அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உதேனி திஸாநாயக்க ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, வாழ்க்கைச் செலவுக்கு ஏற்றவாறு சம்பள அதிகரிப்பு தேவைப்படுவதாக குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் டி.எம்.பி.அபேரத்ன, சம்பள உயர்வு வழங்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து பாரிய போராட்டமொன்றை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, நேற்றைய தினம் ஆசிரியர்களின் போராட்டத்தின் மீது நீர் மற்றும் கண்ணீர் புகை வீச்சுக்கு கண்டனம் தெரிவிப்பதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மின்கட்டண உயர்வைக் கண்டித்து தீப்பந்தம் ஏந்தி போராட்டம்!!

மின் கட்டண உயர்வைக் கண்டித்து வவுனியாவில் தீப் பந்தப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் வவுனியா, இலுப்பையடி முன்பாக குறித்த போராட்டம் இன்று (26.10) மாலை முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ” ரணில் – ராஜபக்ஸ அரசே மின்கட்டணத்தை குறை, மின் கட்டணத்தை கூட்டி வறிய மக்களை கொல்லாதே, மின் கண்டண உயர்வால் தற்கொலையை தூண்டாதே, ஜனாதிபதி ரணிலே வீட்டுக்கு போ” என கோசங்களை எழுப்பியதுடன், தீப் பந்தங்களையும் ஏந்தியிருந்தனர்.

குறித்த போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவாட்ட அமைப்பாளரும், எதிர்கட்சித் தலைவரின் பிரதான ஒருங்கிணைப்புச் செயலாளருமான ரசிக்கா பிரியதர்சினி மற்றும் கட்சி ஆதரவாளர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொணடனர்.

யாழில் கழிவறைக்குள் இருந்து போதைப்பொருள் பாவித்த இளைஞன் சடலமாக மீட்பு!!

யாழில்..

யாழில் அதிக போதைவஸ்து பாவனையால் ஆணொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிகப்படுகின்றது. சம்பவத்தில் யாழ் – சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியைச் சேர்ந்த 34 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரின் சகோதரர்கள் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் இவர் தனது தாயாருடன் உடுவில் பகுதியில் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் அவர் இன்று (26.10.2023) காலை கழிப்பறைக்கு சென்று விட்டு நீண்ட நேரம் திரும்பி வரவில்லை.

இந்நிலையில் தாயார் கதவை திறக்க முற்பட்டபோது அது திறபடவில்லை. இதனையடுத்து தாயார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தவேளை மகன் இறந்த நிலையில் காணப்பட்டார்.

அவரது சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளின்படி அதிக போதைப்பொருள் பாவனை காரணமாக குறித்த மரணம் சம்பவித்துள்ளதாக தெரியவருகிறது. அத்துடன் அவரது வீட்டிலும் போதைப்பொருள் ஏற்றும் ஊசி உள்ளிட்ட பொருட்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது

குழந்தையை பணயக் கைதியாக வைத்து இளம் தாயை வன்புணர்வுக்கு உட்படுத்திய கும்பல்!!

கம்பஹாவில்..

கம்பஹா பூகொட, அம்கஹவத்த பிரதேசத்தில் இளம் தாய் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த இளம் தாயின் குழந்தையைப் பணய கைதியாக வைத்து, தாயை வன்புணர்வுககு உட்படுத்தியதாக பூகொட பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது.

குழந்தையை தரையில் அடிக்கப் போவதாக மிரட்டியே இந்த குற்ற செயல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சந்தேகத்தின் பேரில் 21 மற்றும் 23 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாய் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மேலும் ஒருவரை கைது செய்ய பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை!!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை முதல்(27) விடுமுறை வழங்கப்படுகின்றது. இந்த நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 1ஆம் திகதி மீண்டும் பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2023ஆம் ஆண்டுக்கான இரண்டாம் பாடசாலை தவணை காலத்தை நிறைவு செய்வது தொடர்பான அறிவிப்பு கல்வி அமைச்சினால் இன்று வெளியிடப்பட்டது.

இதன்படி, சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான இரண்டாம் பாடசாலை தவணை நாளையுடன்(27.10.2023) நிறைவடைகின்றது. இந்த நிலையில், மூன்றாவது தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி புதன்கிழமை ஆரம்பிக்கப்படும்.

முதலையுடன் புகைப்படம் எடுத்த குடும்பம்… நூலிழையில் உயிர் தப்பிய அதிர்ச்சிக் காட்சி!!

முதலை..

முதலை ஒன்றிடம் விளையாட்டு காட்டிய நபர்களுக்கு முதலை பயங்கர கோபத்துடன் பாடம் கற்பித்துள்ளது. பொதுவாக விலங்குகளின் வேட்டை என்பது பயங்கரமாகவும், எதிர்பார்ப்புடனும் இருக்கும். அதிலும் காட்டு விலங்குகளின் வேட்டை தான் நிமிடத்திற்கு நிமிடம் திக் திக் என்ற நிகழ்வினை ஏற்படுத்தும்.

ஆனால் இங்கு தண்ணீரில் வாழும் விலங்குகளின் வேட்டையும் பார்வையாளர்களை திக் திக் என்று உறைய வைத்துள்ளது. இங்கு தண்ணீரிலிருந்து கரையில் படுத்திருந்த முதலையிடம் சிலர் விளையாட்டு காண்பித்து புகைப்படம் எடுத்துள்ளனர்.

சில நொடிகள் பொம்மை போன்று படுத்திருந்த முதலை கடைசி சில நொடியில் ஆக்ரோஷமாக தாக்க முற்பட்டு பாடம் கற்பித்துள்ளது.

 

நவராத்திரி விழாவில் நடனமாடிய 10 பேர் அடுத்தடுத்து மாரடைப்பால் மரணம்!!

குஜராத்தில்..

இந்த வருட நவராத்திரி விழா கொண்டாட்டங்கள் சோகத்தில் துவங்கியுள்ளது. நவராத்திரி திருவிழாவில் கர்பா வகையான நடனம் புகழ்பெற்றது. இந்நிலையில், குஜராத் மாவட்டத்தில் கர்பா நடனத்தின் போது 13 வயது சிறுவன் உட்பட 10 பேர் மாரடைப்பால் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நவராத்திரி விழா என்றாலே அதிகம் களைகட்டுவது வடமாநிலங்கள் தான். நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் வடமாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதிலும் குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் வெகு விமர்சையாக நவராத்திரி விழாக்கள் நடைபெற்று வருகிறது. இந்த நவராத்திரி விழாக்களில் முக்கியமாக இடம் பெறுவது ‘கார்பா’ நடனம்.

அந்த வகையில், குஜராத் மாநிலத்தில் நவராத்திரியின் 9 நாட்களும் அம்மாநில நாட்டுப்புற நடனமான கர்பா நடனமாடி மக்கள் கொண்டாடுவது வழக்கம். இதற்காக பொது இடங்களில் கர்பா பாடல், நடனங்கள் நடத்தப்படும்.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் கர்பா நடனமாடிய 10 பேர் மாரடைப்பால் இறந்ததாக வெளியாகி இருக்கும் தகவல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அகமதாபாத்தில் நேற்று முன்தினம் 24 வயது இளைஞரும், கபட்வன்ச் பகுதியில் 17 வயது சிறுவனும் கர்பா நடனத்தின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். இதை விட அதிர்ச்சிகரமாக வதோதராவின் தபோய் பகுதியில் 13 வயது சிறுவன் மாரடைப்பால் இறந்துள்ளான்.

நவராத்திரியின் முதல் 6 நாட்களில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு இதய பாதிப்பு தொடர்பாக 521 அழைப்புகள் வந்துள்ளன. மூச்சுத் திணறல் தொடர்பாக 609 அழைப்புகள் வந்துள்ளன. இவை அனைத்து மாலை 6 மணி முதல் அதிகாலை 2 மணி வரையில் வந்துள்ளன.

இந்த நேரத்தில் தான் கர்பா நடன நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். எனவே, கர்பா நடன நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அருகில் உள்ள பொது மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் விழிப்புடன் இருக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கர்பா நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள், விழா நடக்கும் இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனம் வருவதற்கு உள்ளிட்ட அவசரகால ஏற்பாடுகளை செய்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நவராத்திரிக்கு முன்பாக, கர்பா நடன ஒத்திகையின் போது குஜராத்தில் 3 பேர் மாரடைப்பால் பலியானது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கடல் எல்லையில் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர்கள் உட்பட 12 பேர் கைது!!

இலங்கை..

இலங்கை – இந்திய சர்வதேச கடல் எல்லையில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட இலங்கையர்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ராமநாதபுரம் மாவட்ட சுங்கத்துறை அதிகாரிகளுக்கு இலங்கையிலிருந்து தங்கம் படகில் கடத்தி வரப்பட்ட இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்றுமுன்தினம் (23.10.2023) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களிடமிருந்து 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச கடல் எல்லையில் தூரத்தில் இந்திய கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த இலங்கை புத்தளம் பகுதியை சேர்ந்த 4 கடற்றொழில் படகுகளையும் அதிலிருந்த 8 இலங்கை நபர்களிடம் இந்திய கடலோர காவல் படையினர் விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் சந்தேகத்திற்கிடமாக பதில் அளித்ததால் அவர்களை கைது செய்த இந்திய கடலோர காவல் படை வீரர்கள் மண்டபம் அழைத்து வந்து கொண்டிருந்த போது நடுக்கடலில் மண்டபம் மரைக்காயர் பட்டணத்தைச் சேர்ந்த நாட்டு படகை பிடித்து சோதனை செய்த போது படகில் 35 மூட்டைகளில் 594 கிலோ சமையல் மஞ்சள் மற்றும் 300 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் இருந்துள்ளன.

படகையும் அதிலிருந்த நால்வர் என மொத்தமாக 12 பேரை கைது செய்து மண்டபம் தெற்கு மீன்பிடி துறைமுகம் அழைத்து சென்று அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடல் அட்டைகள் மற்றும் சமையல் மஞ்சள் மூட்டைகளை புத்தளம் மற்றும் கல்பிட்டிக்கு கடத்திச் சென்ற போது பிடிபட்டதாக ஒப்புக்கொண்டனர்.

தமிழகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட கடத்தல் பொருட்களை பெற்று செல்வதற்காக 4 படகுகளில் இலங்கை நபர்கள் காத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து தமிழகத்தை சேர்ந்த நால்வரையும் கடத்தல் பொருட்களுடன் ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கபட்டனர்.மேலும் இலங்கை சேர்ந்த நான்கு படகையும் அதிலிருந்து எட்டு நபர்களையும் மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் அவர்கள் மீது சட்டவிரோதமாக கடவுச்சீட்டு இன்றி இந்தியாவுக்குள் நுழைந்தாக வழக்கு பதிவு செய்து ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் நடைமுறைப்படுத்தி புழல் சிறையில் அடைப்பதற்கு நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. இதேவேளை தனுஷ்கோடி கடல் வழியாக நடைபெற்று வரும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழிலிருந்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு சென்று திரும்பியவர் மாயம்!!

யாழில்..

யாழ்ப்பாணத்திலிருந்து, விசா தொடர்பான அலுவல்கள் நிமித்தம், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்குச் சென்று அலுவல்களை நிறைவு செய்து விட்டு வீடு திரும்பிய முதியவர் காணாமல் போயுள்ளார்.

குறித்த முதியவர் நேற்று முன் தினம் (23.10.2023) கொழும்பில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு சென்று திரும்பிய நிலையில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு சென்று அங்கு விசா தொடர்பான அலுவல்களை நிறைவு செய்து விட்டு ஆட்டுப்பட்டித் தெருவில் உள்ள விடுதி ஒன்றிற்கு உறவினர்களுடன் முதியவர் திரும்பியுள்ளார்.

அன்றைய தினம் பிற்பகல் 3 மணியளவில் கடைக்குச் செல்வதாக தெரிவித்து விடுதியிலிருந்து புறப்பட்டவர் இன்று வரை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

விடுதியிலிருந்து புறப்பட்டுச் செல்லும் போது வெள்ளை நிற சட்டை மற்றும் வேட்டி அணிந்திருந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.எனவே இவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0774354409 எனும் தொலைபேசி இலக்கத்திறகு அறிவிக்குமாறும் உறவினர்களால் கோரப்பட்டுள்ளது.

கணிதப் போட்டியில் 11 நாடுகளுடன் போட்டியிட்டு வெற்றியீட்டிய மாணவி!!

மகேஷ்வரன் விவிஷனா..

கொழும்பு – சைவ மங்கையர் வித்தியாலயத்தில் தரம் இரண்டில் கல்வி கற்கும் மாணவி மகேஷ்வரன் விவிஷனா தனியார் கல்வி நிறுவனமொன்று ஏற்பாடு செய்திருந்த 11 நாடுகள் பங்கேற்ற கணிதப் போட்டியில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுஞக்கிழமை கொழும்பு – சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்ற இந்தக் கணித போட்டியில் இலங்கை, இந்தியா, பிலிப்பைன்ஸ், ஐக்கிய அரபு இராச்சியம், தன்சானியா, பஹரைன், பங்களாதேஷ், நியூசிலாந்து, கிரேஸ், சைப்ரஸ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

இதில் கூட்டல், கழித்தலை உள்ளடக்கிய 80 கணக்குகளை 5 நிமிடங்களுக்குள் செய்து முடிக்கும் போட்டியில் ஏனைய நாட்டு மாணவர்களுடன் ம.விவிஷனாவும் பங்கேற்றிருந்தார்.குறித்த 5 நிமிடங்களுக்குள் சுமார் 55 கணக்குகளை மனக்கணிதத்தில் செய்து அவர் சாதனையை பதிவு செய்துள்ளார்.

அது மாத்திரமின்றி இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து பல மாணவர்கள் பங்குபற்றிய கணிதப் போட்டியிலும் பங்குபற்றிய அவர் அதில் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளார்.மகேஷ்வரன், தர்ஷினி தம்பதிகளின் புதல்வியான விவிஷனா கணிதத்தில் மாத்திரமின்றி ஏனைய பாடவிதான செயற்பாடுகளிலும், வரைதல் மற்றும் நடனமாடுதல் என்பவற்றிலும் திறமையானவராவார்.

தனது மகளின் சாதனை குறித்து கருத்து வெளியிட்ட விவிஷனாவின் தாயான தர்ஷினி மகேஷ்வரன், ‘எனது மூத்த மகன் ஒட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரால் கல்வி செயற்பாடுகளில் ஈடுபட முடியாது.இது எனக்கு ஒரு பாரிய மனக்குறையாகக் காணப்பட்டது.

எனினும், எங்களின் கவலைகளை போக்கும் வகையில் எனது மகள் இந்த சாதனையை படைத்திருக்கின்றார். இதே போன்று அவர் கல்வியில் தொடர்ந்தும் சாதனைகளைப் படைக்க வேண்டும் என்பதே பெற்றோராக எமது விருப்பமும், வேண்டுதலுமாகும்.’ என்றார்.

நோர்வே நாட்டில் ஈழத்து பெண் விமானியாக சாதனை!!

பெண் விமானி..

யாழ். குருநகரில் இருந்து புலம்பெயர்ந்து நோர்வே சென்ற ஈழத்துப் பெண்ணான ஷெர்லி செபஸ்தியாம்பிள்ளை அந் நாட்டின் தமிழ் பெண் விமானியாக பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

கடந்த இரண்டு வருடங்ளுக்கு முன் தனது விமான கல்வியை ஆரம்பித்து தனது ஆரம்ப பயிற்சியை Taxas அமெரிக்காவில் நிறைவு செய்து பின் மீண்டும் நோர்வேயில் கல்வியை தொடர்ந்து  விமானத்தை ஓட்டும் பரீட்சையில் சித்தியடைந்து விமானியாக பட்டம் பெற்றுள்ளார்.

இவர் விமானத்தை பழுதுபார்க்கும் படிப்பை நோர்வேயில் நிறைவுசெய்து 12 ஆண்டுகள் விமானங்களை பழுதுபார்பவராக பணிபுரிந்துள்ளார்.

தனது தந்தையின் 50 வருட கனவிற்காக பல கஷ்டங்கள்,சிரமங்கள், தடைகளையும் தாண்டி சாதித்து காட்டியுள்ளார்.