திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கம் காணிக்கையாக கொடுத்த பக்தர்!!

உலக புகழ் பெற்ற திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர் ஒருவர் 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்தியதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

ஆந்திராவின் திருப்பதியில் புகழ்பெற்ற ஏழுமலையான் கோவில் உள்ளது. உலகம் முழுதும் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் இங்கு வருகின்றனர்.

பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறும் பட்சத்தில் காணிக்கையாக உண்டியலில் பணமும், ஏழுமலையானுக்கு தங்க நகைகளையும் பக்தர்கள் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தொழிலதிபர் ஒருவர் திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க நகைகளை காணிக்கையாக வழங்கியதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

திருப்பதியைச் சேர்ந்த பக்தர் ஒருவர், ஏழுமலையானை நம்பி தொழில் துவங்கினார். அவர் நிறுவனத்தின் பங்குகள் 60 சதவீதம் விற்கப்பட்டதை அடுத்து, 7,000 கோடி ரூபாய் அவர் வருமானம் பெற்றுள்ளார்.

ஏழுமலையானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், 121 கிலோ தங்கம் அளித்துள்ளார். அவர், தன் பெயரை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டதாகவும் முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

தேரேறி அருட்காட்சி அளித்த அழகன் நல்லூரான் : கடலென குவிந்த பக்தர்கள்!!

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழாவானது பெருந்திரளான மக்களுக்கு மத்தியில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், காலை 6.15 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து ஆறுமுக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேதரராய் தேரில் வெளிவீதி உலா வரும் காட்சி இடம்பெற்று வருகின்றது. இன்றைய தேர்த்திருவிழாவை காண நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அதேவேளை ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும், நூற்றுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகள் ஏந்தியும் முருகப் பெருமானை வழிபட்டனர்.

நாளைய தினம் காலை தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளதுடன், மாலை கொடியிறக்கம் நடைபெறவுள்ளது. நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் கடந்த 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இதன்படி தொடர்ந்து 25 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்று சப்பரம், தேர் மற்றும் தீர்த்த திருவிழாக்களுடன்நல்லூர் கந்தனின் உற்சவம் இனிதே நிறைவுறும்.

வவுனியா நெடுங்கேணி வீதிக்கரையில் இருந்து சடலம் மீட்பு!!

வவுனியா நெடுங்கேணி பகுதியில் முல்லைத்தீவு பிரதான வீதியில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் காயங்களுடன் நேற்று முன்தினம் இரவு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் அந்தபகுதியில் உள்ள மில் ஒன்றில் பணிபுரிந்து வருகின்றார். நேற்றுமுன்தினம் இரவு அவர் பணிமுடிந்து வெளியில் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் முல்லைத்தீவு பிரதானவீதியில் அமைந்துள்ள பாலத்தின் கரையில் அவரது சடலம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.

அவரது சடலதிற்கு அண்மையில் வாகனம் ஒன்றின் உதிரிப்பாகங்கள் உடைந்த நிலையில் காணப்படுகின்றது. அவரை வாகனம் ஒன்று மோதித்தள்ளிவிட்டு நிறுத்தாமல் சென்றுள்ளதாக பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவத்தில் கனகராயன்குளம் பெரியகுளத்தைச் சேர்ந்த ச.ரவிக்குமார் என்ற 45 வயதான குடும்பஸ்தரே சாவடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் நெடுங்கேணி பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வயலுக்கு சென்ற தாயும் மகளும் பரிதாபமாக மரணம்!!

குருணாகல் பிரதேசத்தில் பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கச் சென்ற தாயும் மகளும் யானையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் மஹாவ, நிகவலயாய மதியாவ பகுதியை சேர்ந்த 28 வயதான தக்ஷிலா சுபாஷினி என்ற இளம் பெண் மற்றும் 53 வயதுடைய அவரது தாயார் இனோகா குமாரி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யானை தாக்கியதில் தாயும் மகளும் அம்பன்பொல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மகள் ஏற்கனவே இறந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலத்த காயமடைந்த தாய், மேலதிக சிகிச்சைக்காக குருணாகல் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு வைத்து அவர் உயிரிழந்தார்.

அம்பன்பொல பிரதேச செயலகத்தின் மேலாண்மை சேவைகள் அதிகாரியான இனோகா குமாரி செயற்பட்டுள்ளார். காட்டு யானைகள் தொடர்ந்து அந்தப் பகுதிகளில் சுற்றித் திரிவதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

காட்டு யானைகள் வழக்கம் போல் வந்திருக்கலாம் எனவும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். நேற்று காலை 9.00 மணியளவில், வயலில் தாயையும் மகளையும் காட்டு யானை தாக்கியது.

தாக்குதலுக்குள்ளான மகளையும் தாயையும் மருத்துவமனையில் சேர்க்க குடியிருப்பாளர்கள் நடவடிக்கை எடுத்தனர். எனினும் அவர்களை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.

 

யாழ். பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை!!

யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையதினம் (21.08.2025) விசேட விடுமுறையினை அறிவிக்குமாறு பிரதமர் பணித்துள்ளார். வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு இவ்வாறு விடுமுறை வழங்க பணிக்கப்பட்டுள்ளது.

வழமையாக பாடசாலை விடுமுறை நாட்களில் தேர்த்திருவிழா இடம்பெறும் எனவும், எவ்வாறாயினும் இம்முறை பாடசாலை நாளொன்றில் திருவிழா இடம்பெறுகின்றது.

இதன் காரணமாக யாழ். பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சத்தியலிங்கம் மற்றும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஆகியோர் பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவை இன்று (20) சந்தித்து நாளைய தினம் விடுமுறை வழங்குமாறு கோரியுள்ளனர்.

இதனை ஏற்ற பிரதமர் நாளையதினம் யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

எனினும், விடுமுறை வேண்டும் என அதிபர்கள் கோரும் பாடசாலைகளுக்கு மாத்திரம் விடுமுறையை வழங்க வடக்கு கல்வித் திணைக்களங்கள் ஏற்பாடு செய்து வருவதாகவும்,

எவ்வாறாயினும் இது சிக்கல் நிலையை ஏற்படுத்தும் என்பதால் மீண்டும் ஒரு முறை கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவை சந்தித்து விடயத்தை வலியுறுத்தவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் எமது செய்திப் பிரிவுக்கு அறிவித்தார்.

யாழ். இளைஞன் உருவாக்கிய Royal Enfield மோட்டார் சைக்கிள்!!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் தனது மகனுக்காக 100 வருடங்கள் பழமையான Royal Enfield மோட்டார் சைக்கிளை உருவாக்கியுள்ளார். இது பலர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

குறித்த இளைஞன் எதிர்காலத்தில் தனது மகனின் பயன்பாட்டிற்காக அந்த மோட்டார் சைக்கிளை உருவாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக அதிகளவு பணம் செலவிட்டதாகவும் பல முறை தோல்வி கண்ட பின்னே மோட்டார் சைக்கிளை உருவாக்கியுள்ளதாகவும் அந்த இளைஞன் தெரிவித்துள்ளார்.

குறைந்த நேரத்தில் பல்லாயிரம் ரூபா சம்பாதிக்கும் வாய்ப்பு : இலங்கைப் பெண்களே அவதானம்!!

வீட்டிலிருக்கும் பெண்கள் மற்றும் தாய்மார்களை குறிவைத்து இலங்கையில் நடக்கும் மோசடி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்து வேலை செய்ய விரும்பும் பெண்கள், தாய்மார்கள், தங்களுடைய ஓய்வு நேரங்களில் பணம் சம்பாதிக்க விரும்புவோரை இலக்கு வைத்து ஒரு குழுவினர் மோசடி நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

இவ்வாறு வேலை தேடுவோருக்கு கவர்ச்சிகரமான சம்பளத் தொகையுடன், வேலை காத்திருப்பதாகவும், இரண்டு – மூன்று மணித்தியாலங்கள் உழைத்தாலே பல்லாயிரக் கணக்கான ரூபாவினை ஈட்டிக் கொள்ள முடியும் என்று சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தப்படுகின்றது.

குறித்த விளம்பரங்களுக்கு, இலங்கையில் இருக்கக் கூடிய மிகப்பெரிய வர்த்தக நிலையங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழில் மையங்களின் பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

எனவே, பிரபல நிறுவனங்களின் பெயர்களையும், கவர்ச்சிகரமான சம்பள விபரங்களையும் பார்த்தும் ஏமாற்றம் அடையும் சாத்தியம் அதிகளவில் காணப்படுகின்றது.

அந்த வேலைக்கு விண்ணப்பிக்க முயற்சித்தால், அந்த இணைப்பு வேறொரு தளத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும். அதில் உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் கோரப்படலாம். குறித்த வேலையைப் பெற பணத்தொகையை வைப்பிலிடுமாறும் கோரப்படலாம்.

எனவே இவ்வாறான போலியான விளம்பரங்களை நம்பி உங்களுடைய தனிப்பட்ட விபரங்களையோ அல்லது பணத்தையோ முதலீடு செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகின்றது.

அரைக்குறை ஆடையுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தபால் ஊழியர்!!

அதிகாரிகள், அமைச்சருடன் இணைந்து தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டு பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாக அரைகுறை ஆடையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட தபால் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்ட குறித்த ஊழியர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், எங்களுக்கு போதுமான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதில் அதிகாரிகள் தவறிவிட்டதாலேயே இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுகின்றது.

எங்களது சீருடைக்கான கொடுப்பனவை அதிகரிக்கக் கோரியுள்ளோம். சைக்கிள்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்குமாறு கோரியுள்ளோம்.

அத்துடன், ஊழியர்களின் ஒப்பந்தங்களை நிரந்தரமாக்குமாறு கோரியுள்ளோம். ஆனால், அதிகாரிகளும், அமைச்சரும் கைரேகை மற்றும் மேலதிக நேரம் பற்றி பேசுகிறார்கள்.

சீருடைகளைத் தைப்பதற்காக 600 ரூபாவும் சைக்கிள்களுக்கான கொடுப்பனவாக 250 ரூபாவும் வழங்கப்படுகின்றது. அஞ்சல் தொழிற்சங்கங்களால் நடத்தப்படும் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் குறித்து பொதுமக்களிடம் அதிகாரிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர்.

நாடளாவிய ரீதியில் ஞாயிற்றுக்கிழமை (17) முதல் ஆரம்பித்த தபால் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை, 19 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (19) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பின்னரும், வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என தபால் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தன் மாம்பழ திருவிழாவில் பக்தர்களை கவர்ந்த சிறுவன் முருகன்!!

நல்லூர் கந்தன் ஆலயத்தில் இன்று (19 )காலை மாம்பழ திருவிழாவிற்கு முருகன் வேடமணித்து தண்டபாணி தெய்வமாக வந்த சிறுவன் பக்தர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் வருடாந்த பெரும் திருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெற்று வருகின்றது.

நல்லூர் கந்தனின் அருளை பெற நாட்டில் பல பிரதேசங்களில் இருந்தும் மட்டுமன்றி பெரும் பெயர் தேசங்களில் இருந்தும் நல்லூரானை காண பக்தர்கள் யாழ்ப்பாணத்தில் குவிந்துள்ளனர்.

அதுமட்டுமன்றி வெளிநாட்டவர்கள் பலரும் நாலூராஇ தரிசிக்க புறப்பட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் இறு காலை இடம்பெற்ற தண்டாயுதபாணி திருவிழாவிற்கு வந்த சிறுவன் ஒருவர் ஆலயத்திற்கு வந்த பக்தர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் சிறுவனின் புகைப்படம் சமூக வலைத்தளங்களிலும் வெளியாகியுள்ளது.

இன்று காலை மாம்பழ திருவிழா இடம்பெற்ற நிலையில் மாலை நல்லூர் கந்த சுவாமியார் ஒரு முகமாக பக்தர்களுக்கு காட்சி கொடுக்கவுள்ளார்.

கொழும்பில் நண்பிக்கு அதிர்ச்சி கொடுத்த மற்றுமொரு பெண் : இப்படியும் மனிதர்கள்!!

கொழும்பில் அவசர தேவைக்காக தனது நண்பியிடம் சுமார் 50 பவுண் தங்க நகைகளை அடகு வைத்து, அதிலிருந்து 1.9 மில்லியன் ரூபாவுடன் காணாமல் போன பெண்ணைக் கைது செய்ய கிரிபத்கொட பொலிஸார் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இந்த மோசடியில் பாதிக்கப்பட்ட ஹுனுபிட்டியவைச் சேர்ந்த பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சந்தேக நபரை கைது செய்வதற்காக, சந்தேக நபரின் தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கை மற்றும் வங்கிக் கணக்கு பதிவுகளைப் பெறுமாறு மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2 பெண்களுக்கும் இடையிலான நட்பை பயன்படுத்திக் கொண்ட சந்தேக நபர், இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் தங்க நகைகளை அடகு வைத்து, பின்னர் அவற்றைத் திருப்பித் தந்து நம்பிக்கையை வளர்த்ததாக கூறப்படுகிறது.

கடைசியாக பெற்ற தங்க நகைகளை அடகு வைத்த பிறகு, அவர் தனது நண்பியை தவிர்த்து வந்ததாக சந்தேகத்தின் பேரில் முறைப்பாடு செய்யப்பட்டது. சந்தேக நபர் வத்தளையை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் முன்மாதியான செயலைச் செய்த வவுனியா நகர ரோட்டரி கழகம்!!

இன்றையதினம் (19.08.2025) வவுனியா நகர ரோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் வவுனியா மாநகரசபையில் சுகாதாரப் பிரிவில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு மதிப்பளித்து ஊக்குவிக்கும் வகையில் மாபெரும் நிகழ்வொன்று இடம்பெற்றது.

வவுனியா மாநகர சபையின் கலாச்சார மண்டபத்தில் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தூய்மைப் பணியாளர்களுக்கான சீருடைகள் மற்றும் அடிப்படை சுகாதார பொருட்கள் அடங்கிய தொகுதியும் வழங்கப்பட்டதுடன்,

மருத்துவ முகாம் நடாத்தப்பட்டு அனைத்து ஊழியர்களுக்கும் இலவச உடற்பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டதுடன் ரோட்டரி கழக உறுப்பினார்களால் மதிய உணவும் பரிமாறப்பட்டது.

வவுனியா நகர ரோட்டரி கழகத்தின் தலைவர் Rtn.நல்லையா ஸ்ரீஷ்கந்தராஜா தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் வவுனியா மாநகர சபையின் முதல்வர் சு.காண்டீபன் துணை முதல்வர் ப.கார்த்தீபன், மாநகரசபை ஆணையாளர் பொ.வாகீசன் செயலாளர் பாலகிருபன் உள்ளிட்ட மாநகரசபை உத்தியோகத்தர்களும் வவுனியா நகர ரோட்டரி கழக நிர்வாகிகள் அங்கத்தவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வில் தனியார் நிறுவனத்தின் அனுசரணையில் வவுனியா மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான சீருடைகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் சட்டவிரோதமாக வெட்டி கடத்தப்படும் மருத மரங்கள் : தடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை!!

வவுனியா குளத்தின் ஆற்றுப்பகுதியில் நிற்கும் பழமையான மருத மரங்கள் இனம்தெரியாத குழுக்களால் வெட்டிகடத்தப்படுவதாக கிராமமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா குளத்தில் இருந்து தாண்டிக்குளத்திற்கு செல்லும் ஆற்றின் கரைகளில் பழமையான மருத மரங்கள் அதிகளவில் நிற்கின்றது.

பூந்தோட்டம் வீதியூடாக குறுக்கறுத்துச்செல்லும் அந்த ஆற்றின் கரைகளில் நிற்கும் குறித்த மரங்கள் அண்மையநாட்களாக இனம் தெரியாத நபர்களால் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு கடத்திச்செல்லப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்திற்கு பின்புறமுள்ள பகுதியிலேயே இவ்வாறு மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. சொற்பநாட்களில்7 வரையான மரங்கள் அடியோடு அறுத்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே குறித்த சட்டவிரோத செயற்ப்பாட்டை உரியதிணைக்களங்கள் உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் ரஷ்யா விபத்தில் மரணம்!!

கல்யாணமாகி நாலு மாசம் தான் ஆகிறது. 30 வயசுல இதெல்லாம் ரொம்பவே சோகம். எத்தனைக் கனவுகளுடன் தன் வாழ்க்கையை செதுக்கத் தொடங்கியிருப்பார்.. அத்தனையும் கனவுக் கோட்டையாக இடிந்து நொறுங்கியது.

ரஷ்யாவின் ட்வெர் ஒப்லாஸ்ட் பகுதியில் நடைபெற்ற கார் விபத்து ஒன்றில், முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் ரஷ்யா போட்டியாளர் க்சேனியா அலெக்ஸாண்ட்ரோவா காலமானார்.

கார் விபத்திற்குள்ளானதில், அலெக்ஸாண்ட்ரோவாவின் மூளையில் படுகாயம் ஏற்பட்டதாகவும், விபத்து நேர்ந்ததும், காரின் பின்னால் பயணிகள் இருக்கையில் அமர்ந்திருந்த ரோவா,

அங்கிருந்து கீழே குதித்ததாகவும் தெரிகிறது. “ஒரு நொடி கடந்து விட்டது. எனக்கு எதுவும் செய்ய நேரமில்லை” என அவரது கணவரிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன்பின்னர் அலெக்ஸாண்ட்ரோவா விபத்தின் தாக்கத்தில் சுயநினைவை இழந்ததாகவும், கோமா நிலையை அடைந்ததாகவும் தெரிகிறது.

மாஸ்கோவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

மிஸ் ரஷ்யா அழகிப் போட்டியில் முதல் ரன்னர்-அப் ஆன பிறகு, கடந்த 2017 மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் அலெக்ஸாண்ட்ரோவா ரஷ்யாவை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

ஒரு உளவியலாளராகவும் பணிபுரிந்த ரோவா, மாஸ்கோ கல்வியியல் மாநில பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். அவரது மாடலிங் நிறுவனமான மோடஸ் விவேண்டிஸ், இன்ஸ்டாகிராமில், அவரை “அழகு, கருணை மற்றும் உள் வலிமையின் சின்னம்” என அழைத்து அவரது மரணத்தை உறுதிப்படுத்தி உள்ளது.

பங்குச்சந்தையில் லட்சக்கணக்கில் இழந்த இளம்பெண் கடிதம் எழுதி வைத்துவிட்டு விபரீத முடிவு!!

பங்குச்சந்தையில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த நிலையில், உருக்கமாக கடிதம் எழுதி வைத்து விட்டு இளம்பெண் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த அருணின் மனைவி வனஜா (32). இந்த தம்பதியர் மகன்களுடன் சொந்த வீட்டில் வசித்து வரும் நிலையில் மாற்றுத் திறனாளியான அருண், பெயிண்டிங் டிசைனர் ஆக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் அதிக வருமானத்திற்கு ஆசைப்பட்டு வனஜா, ‘யூடியூப்’ பார்த்து ஆன்லைனில் ஷேர் மார்க்கெட்டில் சிறிய அளவில் பணத்தை ஆரம்பத்தில் முதலீடு செய்தார்.

அதில் அவர் வாங்கிய ஷேர்கள் இரண்டு மடங்கு உயர்ந்து அதிக வருமானம் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிக பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என எண்ணிய வனஜா,

தனது கணவருக்கு தெரியாமல் கடன் செயலி மூலம் ரூ.2.5 லட்சம் கடன் வாங்கி, அந்த பணத்தை ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தார். ஆனால் அதில் லாபமும் கிடைக்காமல், முதலீடு செய்த பணத்தையும் இழந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் வாங்கிய கடனையையும் அடைக்க முடியாத நிலையில், கடனை கேட்டு தனியார் வங்கி ஊழியர்கள் நெருக்கடி கொடுத்ததாகவும் தெரிகிறது. இதில் மனமுடைந்த வனஜா,

தனது வீட்டில் யாரும் இ்ல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்,

வனஜா உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே தற்கொலை செய்த வனஜாவின் செல்போனை போலீசார் ஆய்வு செய்ததில், தற்கொலைக்கு முன்னதாக வனஜா பதிவு செய்து வைத்திருந்த 3 ஆடியோக்கள் இருந்தன.

அதில் ஒரு ஆடியோவில், “நான் தனியார் வங்கியில் ரூ.2.5 லட்சம் கடன் வாங்கியதால் கடனை கேட்டு நெருக்கடி கொடுத்தனர். இதனால் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

என்னை மன்னித்து விடுங்கள்” என்று கூறி தனது கணவருக்கு ‘வாட்ஸ்அப்’பில் அனுப்பிவிட்டு அவர் தற்கொலை செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

யாழில் நேர்ந்த சோகம் : நண்பர்களுடன் கடற்கரையில் நீராடிய இளைஞன் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் நண்பர்களுடன் கடலில் நீராடிய இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாழையடி பகுதியில் நண்பர்களுடன் நீராடிக் கொண்டிருந்த இளைஞர் கடலில் பல்டி அடித்தபோது தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

தன்னுடைய நண்பன் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஒன்பது நண்பர்கள் இணைந்து உழவு இயந்திரத்தில் பளை கரந்தாய் பகுதியில் இருந்து இன்று (18) மதியம் தாளையடி கடற்கரைக்கு வருகை தந்துள்ளனர்.

பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருந்த நண்பர்கள் கடல் விளையாட்டுகளிலும் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது தலையில் காயமுற்ற இளைஞரை உடனடியாக நண்பர்கள் மீட்டு உழவு இயந்திரத்தில் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவரை பரிசோதித்த வைத்தியர் இளைஞன் ஏற்கனவே உயிரிழந்திருப்பதாக தெரிவித்தார்.

உயிரிழந்த இளைஞரின் உடலம் பிரேதப் பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மருதங்கேணி பொலிஸார் சக நண்பர்களிடம் வாக்குமூலம் பெற்றுள்ளதோடு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

15 வயதில் உலகை சுற்றும் இளம் விமானி இலங்கைக்கு வருகை!!

உலகைச் சுற்றி வந்த இளைய துணை விமானியாக மாறுவதற்கான வரலாற்று முயற்சியில் 15 வயதான அவுஸ்திரேலிய இளம் விமானி இறங்கியுள்ளார்.

அவுஸ்திரேலிய இளம் விமானி 15 வயதான பிரிஸ்பேனைச் சேர்ந்த பைரல் வொல்லர் (Byron Waller) இலங்கை வந்தடைந்தார்.

இலங்கையை வந்தடைந்துள்ள இளம் விமானி, இலங்கை விமான நிலைய பணியாள்ர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இத்தனை சிறிய வயதில் உலகை சுற்றிவரும் இவரது முயற்றி பலருக்கும் வியப்பைனை ஏற்படுத்தியுள்ளது.