யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம்(23.10.2025) உயிரிழந்துள்ளார். காரைநகர் – பண்டித்தாழ்வு பகுதியைச் சேர்ந்த கோணலிங்கம் சுந்தரலிங்கம் (வயது 47) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், இன்று காலை 3-4 தடவைகள் மூக்காலும் வாயாலும் இரத்தம் வெளிவந்துள்ளது.
பின்னர் வலந்தலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை 10 மணியளவில் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி, இந்தியாவிற்கு தப்பிச்செல்ல உதவிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
தற்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து ஆனந்தனின் மாமா நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். தொடரும் விசாரணைகளில் இன்னும் சிலர் யாழ்ப்பாணத்தில் கைதாகும் சந்தர்ப்பம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இஷாரா செவ்வந்தியை இந்தியாவிற்கு கொண்டு சேர்ப்பித்த படகு யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட குறித்த படகு, யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட படகின் இயந்திரத்தை காணவில்லை என்றும், குறித்த படகை ஓட்டிச் சென்ற இரு இளைஞர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்கள் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், இஷாரா கிளிநொச்சியில் தலைமறைவாகியிருக்க, உதவியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒருவர் இன்று வரை விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு புதுக்கடை நீதவான் முன்னிலையில் அவர் பிரசன்னப்படுத்தப்பட்ட போது, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இஷாரா செவ்வந்தியின் தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருதாக, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
2025 ஆம் ஆண்டு முடியும் தருவாயில் இருப்பதால் அடுத்த வருடம் பல முக்கியமான கிரக மாற்றங்கள் நடைபெறப்போகின்றன. அதில் ராகு பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாகும். ராகு ஒருவரின் ஜாதகத்தில் சரியான இடத்தில் அமர்ந்தால் அது அவர்களின் வாழ்க்கையில் பல அற்புதமான நன்மைகளை வழங்கக்கூடும்.
2026-ல் நடக்கும் ராகுபெயர்ச்சியால் கோடீஸ்வரராகப் போகிற ராசிக்காரர்கள் யாரென்று நாம் இங்கு பார்ப்போம்.
2026-ல் நடக்கப்போகும் ராகு பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களை தரப்போகிறது. இந்த நேரத்தில் அவர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள், மேலும் இதனால் சிறந்த பலன்களை எதிர்பார்க்கலாம்.
2026-ல் அவர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யலாம். கடந்த ஆண்டுகளில் நிலுவையில் உள்ள பணிகள் இப்போது முடிக்கப்படலாம் மற்றும் அலுவலகத்தில் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம்.
மிதுனம்
ராகு பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பான ஆண்டாக இருக்கப்போகிறது. அவர்கள் புதிய நல்ல வேலை வாய்ப்புகளையும் தேர்வுகளில் வெற்றியையும் எதிர்பார்க்கலாம்.
இந்த காலகட்டத்தில் உங்கள் அறிவுசார் திறன்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காணலாம், நம்பிக்கையுடனும் தெளிவுடனும் சவால்களை அணுக கிரகங்கள் உங்களுக்கு உதவும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு ராகுவின் சஞ்சாரத்தால் எதிர்பாராத நன்மைகள் கிடைக்கப்போகிறது. இந்த ராகு பெயர்ச்சி வேலையில் இருப்பவர்களுக்கு குறிப்பிடத்தக்க வளர்ச்சி மற்றும் லாபத்தைக் கொடுக்கப்போகிறது மற்றும் பதவி உயர்வுகள் மற்றும் வெகுமதிகளை நீங்கள் எதிர்பார்க்கலாம்.
ராகுவின் இந்த ராசி மாற்றம் நிதி முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும், இது செல்வத்தைப் பெறவும், நிதிரீதியாக உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் உங்களுக்கு வாய்ப்புகளை வழங்குகிறது.
மீனம்
சனிப்பெயர்ச்சி இருந்தபோதிலும், மீன ராசிக்காரர்களுக்கு ராகுவின் சஞ்சாரம் சிறப்பாக இருக்கும். இந்த காலகட்டத்தில் வருமானம் உயரும் வாய்ப்புகள் உள்ளன, மேலும் வேலையில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
அலுவலகத்தில் மரியாதை அதிகரிக்கும், மேலும் அவர்களின் சிறந்த முயற்சியால் வளமான வாழ்க்கையை அடைய முடியும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும், மேலும் அவர்கள் மகிழ்ச்சியான நேரத்தை பெற முடியும்.
பஹ்ரைனில் நடைபெற்று வரும் ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் இன்று (23) நடைபெற்ற பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் நெத்மி கிம்ஹானி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இப் போட்டித் தொடரில் இலங்கை வென்ற முதல் பதக்கம் இதுவாகும். போட்டியை நிறைவு செய்ய அவர் 4 நிமிடங்கள் 52.32 வினாடிகளை எடுத்துக் கொண்டார்.
இதேவேளை, ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் இன்று (23) நடைபெற்ற ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் லஹிரு அச்சின்த தங்கப் பதக்கத்தை வென்றார்.
போட்டியை நிறைவு செய்ய அவர் 3 நிமிடங்கள் 57.42 வினாடிகளை எடுத்துக் கொண்டார். ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றில் ஓர் இலங்கையர் வென்ற முதல் தங்கப் பதக்கமாக இது பதிவானது.
இப் பதக்கத்துடன், இப் போட்டித் தொடரில் இலங்கை வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 02 ஆக உயர்ந்தது.
உலகில் உள்ள பல தீர்க்கதரிசிகளில் பாபா வங்காவும் ஒருவர். ஏனென்றால், பாபா வாங்காவின் பல்வேறு கணிப்புகள் மிகவும் பிரபலமானவை.
ஆண்டுதோறும் உலகில் நடக்கும் நிகழ்வுகளை பாபா வங்கா முன்பே கணித்துள்ளார். அதன்படி, இதுவரை அவருடைய பல கணிப்புகள் நிகழ்ந்துள்ளன.
பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா, 12 வயதில் தனது பார்வையை இழந்தார். ஆனால், பார்வை இழந்த பிறகு,
அவருக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தி கிடைத்ததாக கூறப்படுகிறது. அவர் இறப்பதற்கு முன்பு, ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் நிகழ்வுகளை கணித்து, அவற்றை குறிப்புகளில் எழுதியதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் 2026ஆம் ஆண்டிற்கான பாபா வாங்காவின் மிகவும் குறிப்பிடத்தக்க கணிப்புகளில் ஒன்று தீவிர இயற்கை நிகழ்வுகள் தொடர்புடையது.
அந்த வகையில், பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள் மற்றும் தீவிர வானிலை பிரச்சனைகள் ஆகியவை கிரகத்தின் நிலப்பரப்பில் 7 முதல் 8% பாதிப்பை ஏற்படுத்தும் என்று கணித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், பாபா வாங்காவின் கணிப்பின்படி, 2026ஆம் ஆண்டில் காலநிலை மாற்றம் உலகையே பேரழிவிற்கு உட்படுத்தும் என்று தெரிவித்துள்ளார். அதேபோல், நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள் ஆகியவையும் ஏற்படுமாம்.
இதன் காரணமாக, 2026ஆம் ஆண்டில் இயற்கை பேரழிவுகள் பூமியின் நிலப்பரப்பில் 7% முதல் 8% வரை மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. மேலும், இது சுற்றுச்சூழல் அமைப்புகளை அழித்து உலகையே உலுக்குமாம்.
2026ல் சுற்றுச்சூழல் அமைப்புகள் அழிக்கப்பட்டால், அது அழிவின் தொடக்கத்தைப் போன்றது என்று தெரிவித்துள்ளார்.
இந்த உலகத்துல எனக்கு வாழவே பிடிக்கல” என்று உருக்கமாக கடிதம் எழுதி வைத்து விட்டு கல்லூரி மாணவி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வேப்பங்குளம் காலனி தெருவில் வசித்து வருபவர் அருள்ராஜ். இவர் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் காவ்யா(18) என 2 மகள்கள் இருந்தனர்.
இதில் காவ்யா, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
உடனடியாக அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். இது தகவல் அறிந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை விசாரணை நடத்தினர்.
தற்கொலை குறித்து மாணவி எழுதிய கடிதத்தில், “எனக்கு இந்த உலகில் வாழ பிடிக்கவில்லை. என்னை மன்னித்து விடுங்கள் அப்பா, என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை” என உருக்கமாக கடிதம் எழுதி வைத்துள்ளார்.
கர்நாடகா மாநிலம், மாரத்தஹள்ளி பகுதியில் வசிக்கும் டாக்டர் மகேந்திர ரெட்டி தனது மனைவி கிருத்திகா ரெட்டியை மயக்க ஊசி செலுத்தி கொன்றதாக போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்து அதிர வைத்திருக்கிறார்.
கடந்த ஏப்ரல் 23ம் தேதி கிருத்திகா உயிரிழந்தார். போலீசாரின் ஆரம்ப விசாரணையில் அவர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்ததாகத் தெரிவித்திருந்தார்.
பின்னர் தடய அறிவியல் அறிக்கையில், கிருத்திகாவுக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டதினால் உயிரிழந்தது தெரிய வந்தது. இதனால் போலீசார் மகேந்திர ரெட்டியை கைது செய்து தீவிரமாக விசாரித்தனர்.
போலீசாரின் விசாரணையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பாகவே டாக்டர் மகேந்திர ரெட்டி, தனது நண்பருக்கு “கிருத்திகாவை கொன்றேன்” என குறுந்தகவல் அனுப்பி இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
முதன்முறையாக 5 நாட்கள் காவலில் விசாரித்த போது, மகேந்திர ரெட்டி எந்த தகவலையும் கூறாமல் போலீசாரிடம் இருந்து மறைத்திருந்தார். இரண்டாவது முறையில் விசாரணை நடத்தும் போது அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
தனது மனைவியின் உடல் நிலை பாதிப்புகளை முன்னதாக தெரிந்திருந்தாலும், அதிகளவில் மயக்க மருந்தை ஊசி மூலம் செலுத்தி கொலை செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அதன் பின்னர் பெங்களூரு மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அதன் பின்னர் மகேந்திர ரெட்டி 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, தற்போது வேகமாக சரிந்து வருகிறது.
அதற்கமைய, ஒரு வாரத்தில் தங்கத்தின் விலை 77,000 ரூபாய் குறைந்துள்ளது. உள்ளூர் சந்தையில் கடந்த வாரம் சாதனையாக 24 கரட் தங்கத்தின் விலை 410,000 ரூபாயாக உயர்ந்தது.
எனினும் நேற்று, செட்டியார் தெரு தங்க சந்தையில் 24 கரட் தங்கத்தின் விலை 330,000 ரூபாயாகவும் 22 கரட் தங்கத்தின் விலை 302,300 ரூபாயாகவும் பதிவானது.
அதற்கமைய, நேற்றைய தினம் மட்டும் தங்கத்தின் விலை மேலும் 10,000 ரூபாயாக குறைந்துள்ளது.
என்னை கொலை செய்தால் பேயாக வந்து பழிவாங்குவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நீங்கள் எங்களை கொலை செய்யத்தான் முயற்சிக்கிறீர்கள். பாதுகாப்பும் பறிக்கப்பட்டுள்ளது. நாங்கள் அதற்கு பயமில்லை. கொலை செய்த பின்னர் பேயாக பின் தொடர்வேன்.
நீங்களும் பயங்கரவாதிகள் தான் உங்களின் பெயரையும் பயங்கரவாத பட்டியலில்தான் சேர்க்க வேண்டும். மறைக்கப்பட்ட விடயங்கள் எங்களிடம் அதிகம் இருக்கிறது. எமக்கும் அதிகமாக கதைக்க முடியும்.
அப்படி நாங்கள் செய்ய மாட்டோம்.வெலிகம பிரதேச சபைத் தலைவர் மக்களின் வாக்குகளில் வெற்றி பெற்றவர்.அவரை பாதாள குழுவில் சேர்க்க வேண்டாம்.நான் உங்களுக்கு ஒரு சவால் விடுக்கிறேன்.
முடிந்தால் துப்பாக்கிச் சூடு நடத்தியவரை கைது செய்து எந்த பாதாள குழு செய்தது என்று கூறுங்கள். அப்போது நாம் ஒத்துக் கொள்கிறோம். கொலை செய்தவர் யார் என்று கண்டுபிடிக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கின்றது.
அதனால் பாதாள குழுவில் அவரின் பெயரை சேர்த்து அவரின் குடும்பத்தை அவமாத்திற்கு உள்ளாக்க வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.
ஹொரணை நோக்கிச் சென்ற பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாணந்துறை – ஹொரண வீதியில் கொத்தலாவல சந்திக்கு அருகில் உள்ள துணை வீதியிலிருந்து பிரதான வீதிக்குள் நுழைந்த மோட்டார் சைக்கிள், ஹொரணை நோக்கிச் சென்ற பேருந்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பண்டாரகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் பண்டாரகம, யட்டியான பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஹொரணை மருத்துவமனை பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது. பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் இன்ப்ளூயன்ஸா ஏ மற்றும் பி தொற்றுகள் வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதில் சிறுவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மழைக்காலங்களிலும், ஆண்டு இறுதியிலும் பருவகால தொற்றுநோய் மிகவும் தீவிரமாக இருக்கும்.
பகல்நேர பராமரிப்பு மையங்கள், பாலர் பாடசாலைகள் மற்றும் பாடசாலை சிறுவர்கள் பாதிக்கப்படக்கூடியவர்களாக உள்ளனர் என குழந்தை மருத்துவ ஆலோசகர் மருத்துவர் மகேஷக விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
பல சிறுவர்களுக்கு திடீர் காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல் மற்றும் சோர்வு ஏற்படுவதால் இந்த நோய் பல வடிவங்களில் தோன்றும்.
அதே நேரத்தில் சிலருக்கு சளி போன்ற அறிகுறிகள், காது தொற்று, சைனசிடிஸ் அல்லது மூச்சுத்திணறல், குறிப்பாக ஆஸ்துமா உள்ளவர்களுக்கு ஏற்படலாம்.
சிறுவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். சில சமயங்களில் நீரிழப்பு ஏற்படலாம்.
மேலும் அரிதான சந்தர்ப்பங்களில், இன்ப்ளூயன்ஸா நரம்பு மண்டலத்தை பாதிக்கலாம். 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ள குழந்தைகள் நிமோனியா மற்றும் கடுமையான சுவாச சிக்கல்களுக்கு அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர்.
எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் அறிகுறிகளை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்.
விரைவான அல்லது கடினமான சுவாசம், தொடர்ச்சியான வாந்தி, பசியின்மை அல்லது அசாதாரண மயக்கம் உள்ளிட்ட கடுமையான நோயின் அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.
அடிக்கடி கை கழுவுதல், இருமல் வரும்போது கைகளை வைத்து மறைத்தல், நோய்வாய்ப்பட்ட குழந்தைகளை முழுமையாக குணமடையும் வரை வீட்டிலேயே வைத்திருத்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகள் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு மிக முக்கியமானவையாகும்.
அதிக ஆபத்துள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசிகள் கிடைக்கின்றன மற்றும் பரிந்துரைக்கப்படுகின்றன. பெரும்பாலான சிறுவர்கள் வீட்டிலேயே எளிய கவனிப்புடன் குணமடைகிறார்கள்.
ஆனால் எச்சரிக்கை அறிகுறிகள் அல்லது அடிப்படை நிலைமைகள் உள்ளவர்களுக்கு ஆரம்பகால மருத்துவ கவனிப்பு அவசியம்.
இந்த தொற்றுநோயின் போது ஏற்படும் சிக்கல்களுக்கு எதிராக விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடைமுறைகள் சிறந்த பாதுகாப்பாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடன் அட்டைகளை வைத்திருப்பவர்கள், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் செலவினங்களை அதிகரித்ததாக தரவுகள் கூறுகின்றன. இது வளர்ந்து வரும் நுகர்வோர் நம்பிக்கை மற்றும் மேம்பட்ட வருமானத்தை பிரதிபலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் கடன் அட்டைகளின் கடன் தொகை ரூ.2.89 பில்லியனாக உயர்ந்துள்ளது, இது ஜூலையில் பதிவான ரூ.373 மில்லியனிலிருந்து கூர்மையான அதிகரிப்பாகும்.
இந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில், கடன் அட்டைகள் மூலமான கடனில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்புடன், மாத இறுதிக்குள் மொத்த நிலுவையில் உள்ள கடன் அட்டை கடன் மொத்தமாக ரூ.164.17 பில்லியனாக அதிகரித்துள்ளது.
கடன் அட்டைகளுக்கான வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு சுமார் 26 சதவீதமாக இருந்தாலும், அவற்றின் கடனில் ஏற்பட்ட சமீபத்திய உயர்வு, நுகர்வோர் அத்தியாவசியப் பொருட்களுக்கு அதிகமாகச் செலவிடுவதை காட்டுகிறது.
அத்துடன், படிப்படியாக பொழுதுபோக்கு, உணவு மற்றும் ஓய்வு நடவடிக்கைகள் போன்ற விருப்பமான வகைகளுக்குத் திரும்புவதையும் பிரதிபலிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
நைஜீரியாவின் மத்திய நைஜர் மாநிலத்தில் பெட்ரோல் லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில், குறைந்தது 42 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செயதி வெளியிட்டுள்ளன.
பல்வேறு அளவிலான காயங்களுடன் மேலும் 52 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக நைஜர் மாநில அவசர சேவைத் தலைவர் அப்துல்லாஹி பாபா அரா தெரிவித்துள்ளார்.
நைஜர் மாகாணத்தின் கட்சா பகுதியில் உள்ள வீதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி வீதியில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
இதனால் டேங்கர் லொறியில் இருந்த பெட்ரோல் கசிந்து வெளியேறியது. அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் லொறி வெடித்துச் சிதறியுள்ளது.
இந்த சம்பவத்தில் வீதியின் அருகே நின்றுகொண்டிருந்தவர்கள், வாகனங்களில் பயணித்தவர்கள் என 42 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபரில், வடமேற்கு நைஜீரியாவின் ஜிகாவா மாநிலத்தில் எரிபொருள் லொறி வெடித்ததில் 153 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
யாழில் ஒருநாள் காய்ச்சல் காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று முன்தினம் (21.10) இடம்பெற்றுள்ளது.
கைதடியைச் சேர்ந்த சிவபாலசிங்கம் காந்தரூபன் (வயது 42) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நேற்றையதினம் தனது தாயாரின் வீட்டில் இருந்தவேளை திடீரென காய்ச்சலும் வயிற்றோட்டமும் ஏற்பட்டது.
இந்நிலையில் புத்தூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதனையடுத்து, வீட்டுக்கு வந்த அவர் கதிரையில் இருந்தவாறே உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். நிமோனியா தொற்றினால் மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மந்துவில் பகுதியில் தோட்டக்காணியில் வெங்கணாந்தி பாம்பு ஒன்று நேற்றையதினம் பிடிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது
தோட்டக்காணியை உரிமையாளர் துப்பரவு செய்து கொண்டிருந்தபோது, பாம்பு ஒன்று எதனையோ விழுங்கிய நிலையில் அசைய முடியாது தடுமாறிக் கிடந்துள்ளது.
இதனை அவதானித்த உரிமையாளர் உடனடியாக முல்லைத்தீவு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியதையடுத்து, அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பாம்பினை பாதுகாப்பாக மீட்டு வேறு பகுதியில் விடுவித்துள்ளனர்.
தற்போது மழைக்காலம் நிலவி வருவதால் பாம்புகள் அடிக்கடி வெளிப்புற பகுதிகளுக்கு வரக்கூடிய வாய்ப்பு உள்ளதால், மக்கள் தங்கள் வீடுகளிலும் தோட்டங்களிலும் அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.