தங்கை முறை உள்ள பெண்ணை காதல் திருமணம் செய்த இளைஞர் கொலை செய்யப்பட்ட பரிதாபம்!!

கரூரில்..

தங்கை முறை பெண்ணை காதலித்து திருமணம் செய்ததால் இளைஞர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் கருப்பம்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார்.

இவர் அதே ஊரை சேர்ந்த கோபிகா என்ற உறவுக்காரப் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் கடந்த மாதம் 9 ஆம் தேதி திருமணம் செய்துக்கொண்டனர்.

கிருஷ்ணமூர்த்திக்கு கோபிகா தங்கை உறவு முறை வருவதால் இந்த திருமணத்திற்கு கோபிகாவின் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் எதிர்ப்பையும் மீறி இருவரும் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

இந்தநிலையில், கடந்த ஜூலை 21 ஆம் தேதி வழக்கு தொடர்பாக கிருஷ்ணமூர்த்தி, தொட்டியம் நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். இதையறிந்த கோபிகாவின் உறவினர்கள் நீதிமன்றத்தின் இருந்து செல்லும் வழியில் கிருஷ்ணமூர்த்தியை வழிமறித்து காரில் கடத்தி சென்றுள்ளனர்.

இந்தநிலையில் நீண்ட நேரம் ஆகியும் கிருஷ்ணமூர்த்தி வீடு திரும்பாததால், அவரது மனைவி கோபிகா தொட்டியம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் ஸ்ரீநாத், கார்த்திக், சரவணன், கோபால கிருஷ்ணன் ஆகிய 4 பேர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கோபிகாவின் அண்ணன் ரவிவர்மன், அவரது நண்பர் தினேஷ், கோபிகாவின் தாயார் ஹேமலதா, பாட்டி பாப்பாத்தி ஆகியோர் கிருஷ்ணமூர்த்தியை காரில் கடத்திச் சென்று கழுத்தை நெறித்து கொலை செய்து ஆற்றில் வீசிய அதிர்ச்சி தகவல்களை வாக்குமூலம் அளித்தனர்.

இதையடுத்து கடத்தல் வழக்கை கொலை வழக்காக பதிவுச் செய்த போலீசார், கோபிகாவின் தாய் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மனைவி மற்றும் மகளை கழுத்தை நெரித்து கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்த இராணுவவீரர்!!

நேபாளத்தில்..

சிக்கிமில் வசித்து வரும் ராணுவவீரர் ராம்பிரசாத் சர்மா. இவர் 2020ல் நேபாளத்தில் வசித்து வரும் ருக்மீனாவை திருமணம் செய்து கொண்டார். ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் ராணுவத்தில் ராம்பிரசாத் சர்மா பணிபுரிந்து வந்தார். ராம்பிரசாத்- ருக்மீனா தம்பதிக்கு ரித்திமா என்ற 2வயது மகளும் உண்டு.

குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பிடித்து தனது மனைவி, மகள் இறந்து விட்டதாக ராம்பிரசாத் காவல்துறையில் சில நாட்களுக்கு முன் புகார் அளித்தார். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அதில் தாய், மகள் இருவரும் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதன் பின் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டது.

இதன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ராணுவவீரர் ராம்பிரசாத்திடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்களை ராம்பிரசாத் வாக்குமூலமாக அளித்துள்ளார். அதன்படி கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

அவர்களுடன் ஒத்து போக முடியவில்லை. இதனால் மனைவி, மகளை கொலை செய்ய முடிவு செய்தார். அதிகாலை 4 மணியளவில் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

தனது 2 வயது மகளையும் கழுத்தை நெரித்து ராம்பிரசாத் கொலை செய்துள்ளார். இதன் பின் பெட்ரோலை மீது ஊற்றி தீவைத்து எரித்துவிட்டார். இந்த வாக்குமூலத்தின் பேரில் அவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடும்பச்சண்டையில் மனைவி, மகளை கொன்று நாடகமாடியதும், ராணுவவீரர் கைது செய்யப்பட்டதும் ஜோத்பூரில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நான்தான் என் கணவனை கொன்று புதைத்தேன்… மனைவி அதிர்ச்சி வாக்குமூலம்!!

கேரளாவில்..

கணவரை கொலை செய்து உடலை எரித்து விட்டதாக மனைவி கூறிய நிலையில், கணவன் உயிரோடு வந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் அடூர் என்ற பகுதியில் வசித்து வருபவர்கள் அஃப்சானா – நௌஷாத் தம்பதியினர்.

கார் ஓட்டுநராக வேலை செய்து வரும் நௌஷாத் தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த சூழலில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் சண்டையிட்டு வந்துள்ளனர்.

இந்த சூழலில் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்னர் நௌஷாத் திடீரென காணாமல் போயுள்ளார். இதனால் நௌஷாத்தின் குடும்பத்தார் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அவர்கள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் நௌஷாத்த்தின் குடும்பத்தார், அவரது மனைவி என அனைவரிடமும் விசாரித்தனர். அதோடு அவர் வேலை செய்யும் இடம், அந்த பகுதியில் அமைந்திருக்கும் சிசிடிவி காட்சிகள் என தொடர்ந்து விசாரித்து வந்தனர். செல்போன் எண்ணை வைத்தும் வழக்கை விசாரித்தனர்.

எனினும் அவர் குறித்த தகவல்கள் எதுவும் தெரியாமல் இருந்தது. இதையடுத்து நௌஷாத்தின் மனைவியிடம் கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான்தான் தனது கணவனை கொன்றதாக வாக்குமூலம் அளித்தார்.

மேலும் தனது கணவனை துண்டு துண்டாக வீட்டில் தனித்தனி இடங்களில் புதைத்து விட்டதாகவும், அவரது உடலை எரித்து ஆற்றில் சாம்பலை கரைத்து விட்டதாகவும், வீட்டுக்கு பின்புறம் அடக்கம் செய்திருப்பதாகவும் மாறி மாறி போலீசாரிடம் தெரிவித்தார்.

இதனால் அவர் கூறிய இடங்களில் எல்லாம் தோண்டி சடலத்தை தேடினர். எனினும் சடலம் கிடைக்கவில்லை. இதனால் அவரிடம் மேலும் விசாரிக்கையில், மாபெரும் ட்விஸ்ட்டாக கொலை செய்துவிட்டதாக கூறிய கணவர் நௌஷாத் திடீரென உயிருடன் முழு உருவமாக வந்து நின்றுள்ளார்.

இதனை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் நௌஷாத்திடம் விசாரிக்கையில், தனது நண்பர் ஒருவர் மூலம் இந்த விவகாரத்தை அறிந்துகொண்டதாகவும், தனது மனைவிக்கு பயந்து வீட்டை விட்டு தான் சென்றதாகவும், தன்னை யாரும் கொலை செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து விசாரிக்கையில், தனது மனைவி தன்னுடன் சண்டையிடுவது மட்டுமின்றி தன்னை தினமும் தாக்கியதாகவும், என்றாவது ஒருநாள் தன்னை கொலை செய்துவிடுவார் என்ற பயத்திலும் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு சென்றதாக கூறினார்.

மேலும் யாருடனும் உறவு வைத்துக்கொள்ள வேண்டாம் என்று மொபைல் போன் கூட வாங்கவில்லை என்றும் தெரிவித்தார். இதையடுத்து இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கணவரை கொலை செய்து உடலை எரித்து விட்டதாக மனைவி கூறிய நிலையில், கணவன் உயிரோடு வந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவிலுக்கு தீர்த்தம் எடுக்க சென்ற போது சோகம்.. ஆற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி!!

காவிரியில்..

ஆடிப்பெருக்கு தமிழகத்தின் அனைத்து நீர்நிலைகளிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி காசிபாளையத்தில் இன்று ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடும் வகையில் சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிப்பவர்கள் காவிரி ஆற்றங்கரைக்கு வந்து ஆற்றுக்கு படையலிட்டனர். சிறப்பு பூஜைகள் செய்து காவிரித்தாயை வழிபட்டனர்.

காசிபாளையத்தில் கொந்தாளம் புதூர் மதுரை வீரன் கோயிலுக்கு தீர்த்தம் எடுப்பதற்காக சிலர் காவிரி ஆற்றில் இறங்கினர். ஆற்றில் தண்ணீர் சுழித்துக் கொண்டு ஓடியது.

இந்த ஆற்று வெள்ளத்தில் கொந்தாளம்புதூரில் வசித்து வரும் 18 வயது ஜகதீஷ், 14 வயது சவுத்ரி, 17 வயது குப்புராஜ் ஆகியோர் நீரில் மூழ்கத்தொடங்கினர் . சுற்றி இருந்தவர்கள் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் பலனில்லை.

உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் சௌத்ரியின் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது.

மற்ற இருவரின் உடல்களையும் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோவிலுக்காக தண்ணீர் எடுக்க சென்றவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

முச்சக்கரவண்டிகளில் சாகசம் காட்டிய இளைஞர்களுக்கு நேர்ந்த கதி!!

ஹட்டனில்..

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் ஹட்டன் மல்லியப்பு பகுதியில் முச்சக்கரவண்டிகளை ஒற்றைச்சக்கரத்தில் செலுத்தி சாகசம் காட்டிய இரு இளைஞர்கள் ஹட்டன் பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளால் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹட்டன் மல்லியப்பு பகுதியில் இளைஞர்கள் குழுவொன்று ஆபத்தான முறையில் முச்சக்கர வண்டிகளை செலுத்தி அதனை காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

இந்த காணொளியின் அடிப்படையில் இரு முச்சக்கரவண்டிகளின் பதிவு எண்கள் மூலம் விசாரணை நடத்தி சந்தேகத்தின் பேரில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் 20-30 வயதுடைய ஹட்டன் பகுதியில் வசிப்பவர்கள் எனவும்,நீண்ட விசாரணைகளின் பின்னர் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கர வண்டிகளை ஆபத்தான முறையில் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர்களுக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருமணத்திற்கு சென்ற நிலையில் ஹோட்டலில் உயிருக்கு போராடிய பலர்!!

தலவத்துகொடையில்..

தலவத்துகொடையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் லிப்ட் திடீரென பழுதடைந்ததால், அதில் பயணம் செய்த சுமார் 10 பேர் சிக்கி உயிர் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.லிப்ட்க்குள் சிக்கியிருந்தவர்கள் கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் வெளியேற முடியாமல் போயுள்ளதுடன் தங்கள் உயிரை காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளனர்.

இறுதியில், காப்பாற்றும் முயற்சியின் நடுவில் லிப்ட் இடிந்து விழுந்தது, ஆனால் அதிர்ஷ்டவசமாக லிப்டில் இருந்தவர்கள் குலுங்கியதால் அதிர்ச்சிக்குள்ளாகிய போதிலும் காயமின்றி உயிர் தப்பியுள்ளனர்.

லிப்ட் பராமரிப்பு இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக லிப்டில் இருந்தவர்கள் கூறுகின்றனர். ஆனால், அங்கு அதிகமானோர் பயணம் செய்ததால் இது நடந்ததாக ஹோட்டல் நிர்வாகம் கூறுகிறது.மின்சார மணி அடித்ததாக ஹோட்டல் நிர்வாக அதிகாரிகள் கூறிய போதிலும் மணி அடிக்கவில்லை என லிப்டில் பயணம் செய்தவர்கள் தெரிவித்தனர்.

இனிமேலாவது இதுபோன்ற ஆபத்தான சூழ்நிலைகள் ஏற்படாமல் இருக்க ஹோட்டல் நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.இந்த ஹோட்டலில் நேற்று இரண்டு திருமண நிகழ்வுகள் நடந்தன. அந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்கள் லிப்ட்டில் சென்றதாக கூறப்படுகிறது.தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த லிப்ட் செயலிழந்ததாகவும், அது கீழே விழவில்லை எனவும் ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சகோதரிகளான இரு சிறுமிகள் துஸ்பிரயோகம் : தந்தை கைது!!

மொனராகலையில்..

சகோதரிகளான 12 மற்றும் 10 வயதுடைய சகோதரிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குறச்சாட்டில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ( 57) மொனராகலை பொலிஸாரால் வியாழக்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளார்.

மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரகெட்டிய பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர் மொனராகலை மதுரெகெட்டிய இறப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தில் கள அதிகாரியாக கடமையாற்றுகின்றார்.அகலவத்தை பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபர் , மதுருகெட்டிய பிரதேசத்தில் உள்ள வீட்டில் சில காலமாக அறையில் தங்கி வேலை செய்து வந்துள்ளார்.

இரண்டு சிறுமிகளின் தாயும் தந்தையும் கூலித்தொழிலாளர்கள் என்றும், அவர்கள் வீட்டில் இருந்து வெளியில் சென்ற போது இரண்டு சிறுமிகளும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.இதனையடுத்து சிறுமிகள் இருவரும் மருத்துவ பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கைதான சந்தேக நபரை மொனராகலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த சிறுவனின் அறிக்கையில் முரண்பாடு : விசாரணைக்கு உத்தரவு!!

பொரளையில்..

பொரளை லேடிரிஜ்வே வைத்தியசாலையில் உயிரிழந்த மூன்று வயது சிறுவனின் மருத்துவ அறிக்கைகளுக்கும் பிரேதபரிசோதனை அறிக்கைகளுக்கும் முரண்பாடு காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி சிறுவனின் சிறுநீரகங்கள் குறித்து மருத்துவ அறிக்கைகளுக்கும் பிரேதபரிசோதனை அறிக்கைகளுக்கும் இடையில் காணப்படும் முரண்பாடு குறித்து உடனடி விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை பொரளை பொலிஸாருக்கு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜெயசூரிய பிறப்பித்துள்ளார்.மருத்துவபரிசோதனைகளில் சிறுவனிற்கு இரண்டு சிறுநீரகங்கள் என தெரிவிக்கப்பட்டதாகவும் எனினும் பிரேதபரிசோதனையில் ஒரு சிறுநீரகம் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணியின் வேண்டுகோளை தொடர்ந்தே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.மருத்துவபரிசோதனை அறிக்கை இரண்டுசிறுநீரகங்கள் என தெரிவிக்கும்போது பிரதேசபரிசோதனை அறிக்கையில் ஒரு சிறுநீரகம் என ஏன் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அது விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பிரபல இளம் சின்னத்திரை நடிகையின் கணவன் உயிரிழப்பு!!

ஸ்ருதி ஷண்முகப்பிரியா..

பிரபல தொலைக்காட்சியில் தமிழில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சிரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ஸ்ருதி ஷண்முகப்பிரியா. இவர் நாதஸ்வரம் சிரியலை தொடர்ந்து வாணி ராணி, கல்யாண பரிசு, பாரதி கண்ணம்மா போன்ற பல தொடர்களில் நடித்து வந்தார்.

மேலும், இவர் தொலைக்காட்சி தொடர் மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவ்வாறான நிலையில், ஸ்ருதி ஷண்முகப்பிரியா கடந்த ஆண்டு மிஸ்டர் தமிழ்நாடு 2022 போட்டியில் பங்கேற்று 2வது பரிசை வென்ற அரவிந்த் சேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு இவர் சின்னத்திரையில் இருந்து விலகி இருந்தார். இந்த நிலையில், ஸ்ருதியின் கணவர் அரவிந்த் சேகர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 30 வயதான அரவிந்த் சேகரின் உயிரிழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரின் மறைவிற்கு பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து, ஸ்ருதிக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

இலங்கையில் நடந்த பயங்கரம் : ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழந்த சோகம்!!

தம்புத்தேகமவில்..

தம்புத்தேகம – ஈரியகம பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்ததுடன் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.வான் ஒன்று லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருநாகலில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியோரத்தில் நிற்க தயாரான போது, ​​அதே திசையில் பயணித்த வான் ஒன்று லொறியின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெண்கள் 36 மற்றும் 43 வயதுடையவர்கள் எனவும் ஆண்கள் 36 மற்றும் 46 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் கஹட்டலஸ்திகிலிய பிரதேசத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் 55, 11, 06 மற்றும் 08 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.அதிக வேகத்துடன் வேனை ஓட்டி வந்த சாரதியினால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் லொரியுடன் மோதியதனால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

யாழ் காங்கேசன்துறை – இந்தியா நாகப்பட்டினம் கப்பல் சேவை விரைவில் : யாழ் இந்திய துணைத் தூதுவர்!!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் இந்தியா தமிழ்நாடு நாகபட்டினத்திற்கு இடையேயான கப்பல் சேவையினை விரைவில் ஆரம்பவுள்ளதாக யாழ் இந்திய துணைத்தூதுவர் ஸ்ரீமான் ராகேஷ் நடராஜ் தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

ஆரம்பத்தில் காங்கேசன்துறை மற்றும் காரைக்கால் இடையே கப்பல் சேவை ஆரம்பிக்க திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது கங்கேசன்துறை – நாகபட்டினம் இடையே குறித்த பயணப்பாதை மாற்றப்பட்டமையினாலேயே தாமதம் ஏற்பட்டது.

குறித்த கப்பல் சேவை தொடர்பில் விரைவில் ஆரம்பிப்பதற்காக தமிழ்நாடு நாகபட்டினத்தில் பயணிகள் இறங்குமிடம் , சுங்கம் போன்ற அமைக்கும் பணிகளை இடம்பெற்று வருகின்றன.

அப்பணிகள் நிறைவடைந்தமையுடன் கப்பல் சேவையினை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம் . கப்பல் சேவை தொடர்பிலான நல்லதொரு செய்தியினை மக்களுக்கு விரைவில் அறிவிப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

காதல் திருமணம்.. 5 ஆண்டுகளாக எதிர் வீட்டில் தனி வாழ்க்கை.. இளம் பெண் விபரீத முடிவு!!

மயிலாடுதுறையில்..

மயிலாடுதுறை அருகே காதலித்து பதிவுத்திருமணம் செய்து கொண்டு எதிர் எதிர் வீட்டில் இருந்தும் சேர்ந்து வாழாத இளம்பெண் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் செல்லதுரை, இவர் மகள் 29 வயதான கனகலட்சுமி. எம்.இ., பொறியியல் முதுகலை பட்டதாரியான இவர் தனது எதிர்வீட்டில் வசிக்கும் பகுதிநேர வாகன ஓட்டுனரான 32 வயதான சக்திவேல் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

கனகலட்சுமியின் தாய் மாற்றுசமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவர்களது காதலுக்கு சக்திவேலின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், அவர்கள் கடந்த 2018-ஆம் ஆண்டு கடலூரில் பதிவுத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

ஆனாலும், இருவரையும் சேர்ந்த வாழ கணவர் வீட்டில் ஏற்றுக் கொள்ளாததால் கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் எதிர்எதிர் வீட்டில் வசித்தாலும், பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதுகுறித்து, கனகலட்சுமி குடும்பத்தார் சக்திவேல் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருவருக்கும் ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி (ஆவணி 3) முறைப்படி திருமணம் செய்ய முடிவு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், செல்லதுரை விவசாய வேலைக்காக வெளியில் சென்றுவிட்டதால் கனகலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மாலையில் வேலைமுடித்து விட்டு செல்லதுரை வீடுதிரும்பிய போது, வீட்டில் கனகலட்சுமி துப்பட்டாவால் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கியுள்ளார்.

அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த செல்லதுரை இது தொடர்பாக பொறையார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் சக்திவேல் மேலும் சிலருடன் வீட்டிற்கு வந்ததாகவும், கணவன் சக்திவேல் தன்மகளை அடித்து கொன்றுவிட்டதாகவும், தனது மகள் 2 முறை கருக்கலைப்பு செய்துள்ளதாகவும், கனகலட்சுமியின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.

அவர் அளித்த புகாரின் பேரில் பொறையார் காவல்துறையினர் இயற்கைக்கு மாறான மரணம் என 174 வழக்குப்பதிவு செய்து கனகலட்சுமியின் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.  பதிவுத் திருமணம் நடைபெற்று 7 ஆண்டுகள் நிறைவடையாததால் இச்சம்பவம் குறித்து சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா விசாரணை மேற்கொண்டுள்ளார்.

திருமணமாகி 5 ஆண்டுகளாக கணவரோடு சேர்ந்து வாழாத இளம்பெண்ணுக்கு விரைவில் முறைப்படி திருமணம் நடைபெற்று கணவருடன் சேர்ந்து வாழ இருந்த நிலையில், மர்மமான முறையில் தூக்கிட்டு திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜோசியர் பேச்சைக் கேட்டு கருக்கலைப்பு.. பரிதாபமாக பறிபோன பெண்ணின் உயிர்!!

திருச்சியில்..

திருச்சியில் ஜோசியர் பேச்சைக் கேட்டு கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார்.

இவரது மனைவி பிரியா (31). இவர்களுக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆன நிலையில், இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பிரியா நான்கு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

ஜோசியர் ஒருவரிடம் வயிற்றில் இருப்பது ஆண் குழந்தையா? இல்லை பெண் குழந்தையா என கேட்டுள்ளார். அப்போது அந்த ஜோசியர் வயிற்றில் இருப்பது பெண் குழந்தை எனக் கூறியதாக சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பிரியா தனது கணவர் சிவக்குமாருக்கு தெரியாமல் தனது தாயை அழைத்துகொண்டு கருக்கலைப்பு செய்வதற்காக துறையூர் பச்சமலை அருகே செங்காட்டுபட்டி கிராமத்தில் மருந்தகம் நடத்தி வரும் சித்ரா என்பவரிடம் சென்று கருக்கலைப்பு செய்துள்ளனர்.

abortion legal in India

இதில் ரத்தப்போக்கு அதிகமாக இருந்ததால் பாதிக்கப்பட்ட பிரியா சம்பவம் தொடர்பாக தனது கணவர் சிவகுமாருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

உடனடியாக துறையூருக்கு வந்த கணவர் சிவக்குமார், மனைவி பிரியாவை மீட்டு திருச்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், உரிய பாதுகாப்பின்றி அவருக்கு கருகலைப்பு செய்யப்பட்டதே உயிரிழப்புக்கு காரணம் எனத் தெரிவித்துள்ளனர்.

பின்னர் தனது மனைவி பிரியாவின் இறப்புக்கு காரணமாக இருந்த செங்காட்டுப்பட்டியில் இயங்கி வரும் மருந்தகத்தின் உரிமையாளர் சித்ரா மீது சிவகுமார் துறையூர் காலை நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த துறையூர் போலீசார் சிதராவை கைது செய்தனர்.

பிறந்தநாள் கொண்டாடச் சென்ற சகோதரர்களுக்கு நேர்ந்த சோகம்.. கதறும் பெற்றோர்!!

திருவள்ளூரில்..

தமிழக மாவட்டம் திருவள்ளூரில் பிறந்த நாளை கொண்டாட இருசக்கர வாகனத்தில் சென்ற சகோதரர்கள் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்கள் தூர்வாசன், சரத்குமார்.

இவர்கள் இருவரும் திருத்தணி அருகே மாம்பாக்கம் சத்திரத்தில் பிறந்தநாளை கொண்டாட இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அதிவேகமாக எதிரே வந்த கார் இவர்களது இருசக்கர வாகனத்தில் மீது மோதியுள்ளது.

இதில் சகோதரர்கள் இருவருமே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

வவுனியா இரட்டைக் கொலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரிக்க சிஐடிக்கு நீதிமன்றம் அனுமதி!!

வவுனியா, தோணிக்கல்லில் வீட்டுக்கு தீ வைத்து வாளால் வெட்டிய சம்பவத்தில் இருவர் மரணமடைந்திருந்தனர். இச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபராக கருதப்படும் நபரை 24 மணித்தியாலம் தடுத்து வைத்து விசாரணை செய்ய சிஐடிக்கு வவுனியா நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 23 ஆம் திகதி வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புகுந்த குழு வீட்டு உரிமையாளர் மீது வாளால் வெட்டிவிட்டு வீட்டுக்கு பெற்றோல் ஊற்றி தீ வைத்திருந்தனர்.

குறித்த சம்பவத்தில் இளம் குடும்பப் பெண் மூச்சுத் திணறல் காரணமாகவும் அவரது கணவன் தீயில் எரிந்தமை காரணமாகவும் மரணமடைந்திருந்ததுடன் மேலும் 9 பேர் காயமடைந்திருந்தனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்பில் பொலிசார் மற்றும் சிஐடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் ஐவரை கைது செய்த பொலிஸார் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய எதிர்வரும் 11 ஆம் திகதி வரை அனுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் குறித்த சம்பவத்தின் பிரதான சந்தே நபராக கருத்தப்படும் கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று (02.08) மாலை கைது செய்யப்பட்டிருந்தார்.

இன்று (03.08.2023) குறித்த நபரை வவுனியா நீதிமன்றில் முற்படுத்திய சிஐடியினர் அவரை தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி கோரினர். அதற்கு அமைய 24 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய மன்று அனுமதி வழங்கியுள்ளது.

 

யாழ் பல்கலைக்கழக மாணவி எடுத்த விபரீத முடிவு!!

யாழ்ப்பாணத்தில்..

யாழ்ப்பாணம் – கலட்டிப் பகுதியில் உள்ள தனியார் வீடொன்றில் தங்கியிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலாமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் வருட மாணவி ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவர். மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த மாணவி யாழ்ப்பாணம் – கலட்டிப் பகுதியில் உள்ள தனியான் வீடொன்றின் அறையில் வாடகைக்குக் குடியிருந்துள்ளார்.

இந்த மாணவி இன்று காலை விரிவுரைகளுக்குச் செல்லாமல் தனித்திருந்ததாகவும், சக மாணவிகள் நண்பகல் அளவில் அறைக்குத் திரும்பி வந்த வேளையில் மாணவியின் சடலத்தைக் கண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில், காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.