யாழ்ப்பாணத்தை சேர்ந்த வருணிகா தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார்.காக்கா முட்டை படத்தில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்த விக்னேஷ், ரமேஷ் இருவரும் கதை நாயகர்களாக நடிக்கும் படம் புது வேதம்.
புது வேதம் ராசா விக்ரம் இயக்குகிறார். இந்த படத்தில் விக்னேஷ் ஜோடியாக நடிக்கிறார் வருணிகா.யாழ்பாணத்தை சேர்ந்த வருணிகா , உள்நாட்டு போர் நடந்தபோது அங்கிருந்து குடும்பத்துடன் சென்னை சென்று செட்டிலானார்.
நடிப்பு மீது ஆசை கொண்ட வருணிகா சினிமா ஆடிசன்களில் கலந்து கொண்டு சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார்.இப்போது புதுவேதம் படத்தின் மூலம் ஹீரோயின் ஆகியிருக்கிறார்.
சென்னையில் உள்ள குப்பை மேடுகளில் வாழும் மக்களை பற்றிய கதை இது. இதில் அவர் அந்த பகுதியில் வாழும் ஏழைப் பெண்ணாக நடித்துள்ளார். படம் அடுத்த மாதம் வெளிவருகிறது.
திருமணத்திற்கு பெண் பார்க்க சென்ற இளைஞனை நூதன முறையில் ஏமாற்றி 18 இலட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கிளிநொச்சி பளையை சேர்ந்த இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதற்கு பெண் பார்க்க சென்றுள்ளார்.
இளைஞன் பெண் பார்த்து சென்ற சில நாட்களில், இளைஞனின் தொலைபேசிக்கு அழைப்பு ஏற்படுத்திய நபர் ஒருவர், தான் அவுஸ்ரேலியாவில் இருந்து கதைப்பதாகவும், தன்னை இப்பெண்ணின் சகோதரர் என அறிமுகப்படுத்திக்கொண்டு, தனது தங்கை வெளிநாட்டு மாப்பிள்ளையை எதிர்பார்ப்பதாகவும், அதனால் உங்களை நான் வெளிநாட்டுக்கு எடுத்து விட முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார்.
இதற்காக 18 இலட்ச ரூபாய் பணத்தினை இந்த கணக்கு இலக்கத்திற்கு வங்கியில் வைப்பிலிடுங்கள் என ஒரு கணக்கிலக்கத்தை வழங்கியுள்ளார். இளைஞனும் அவரின் பேச்சை நம்பி பணத்தினை வைப்பிலிட்டுள்ளார்.
சில மாதங்கள் கடந்த நிலையிலும் தனது வெளிநாட்டு அலுவல்கள் எதுவும் முன்னெடுக்கப்படாத நிலையில் சுதாகரித்துக்கொண்ட இளைஞன், அவுஸ்ரேலிய நபருடன் தொடர்பு கொண்டுள்ளார். இந்நிலையில் இருவருக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக சந்தேகநபர் தொடர்பை துண்டித்துள்ளார்.
அதன் பின்னர் அந்த தொலைபேசி இலக்கமும் செயலிழந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட இளைஞன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகராம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், இளைஞன் தனது பணத்தை வைப்பிலிட்ட கணக்கிலக்க உரிமையாளரான கிளிநொச்சியை சேர்ந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
குறித்த கணக்கு இலக்கத்திற்கு பல தடவைகள் இலட்சங்களில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளமை தெரியவந்துள்ளது. அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போது இவ்வாறாக வடமராட்சி பகுதியில் உள்ள இளைஞனையும் ஏமாற்றி வருவது தெரிய வந்துள்ளது.
இதேவேளை மானிப்பாயில் இளைஞன் பெண் பார்க்க சென்ற பெண் , வேறு ஒரு நபரை திருமணம் செய்துள்ள நிலையில் அவரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது , பளை இளைஞன் தன்னை பெண் பார்த்து சென்ற உடனேயே இளைஞனை பிடிக்கவில்லை என கூறி விட்டதாகவும், அதன் பின்னர் தனது சகோதரன் அவரை ஏமாற்றிய விடயம் தனக்கு தெரியாது எனவும் கூறியுள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கனடாவின் டொரண்டோவில் தமிழ் சிறுமி ஒருவர் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இவ்வாறு 12 வயதுடைய தமிழ் என்ற பெயருடைய சிறுமியே காணாமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 31ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில், லோரன்ஸ் அவென்யூ கிழக்கு மற்றும் ஓர்டன் பார்க் வீதி பகுதியில் கடைசியாக காணப்பட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 12 வயதுடைய 5 அடி 4 அங்குலம் உயரமுடைய மெல்லிய தேகமுடைய காணாமல்போன சிறுமி, கடைசியாக கறுப்பு நிற ரி சேட் மற்றும் கறுப்பு நிற பான்ட் அணிந்திருந்தார் எனவும் டொரண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமி தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் 416-808-4300, Crime Stoppers anonymously at 416-222-TIPS (8477), or at www.222tips.com.அறிவிக்குமாறு ரொறன்ரோ பொலிஸார் பொது மக்களிடம் உதவிகோரியுள்ளார்.
லிட்ரோ எரிவாயு நிறுவனம் நாளைய தினம் (04.08.2023) விலை அதிகரிப்பு அறிவிப்பை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.சர்வதேச அளவில் எரிவாயுவின் விலை அதிகரிப்பிற்கு ஏற்றவாறு இலங்கையிலும் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித்த பிரீஸ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.ஒரு மெட்ரிக் தொன் எடையுடைய சமையல் எரிவாயுவின் உலக சந்தை விலை 85 டொலர்களால் உயர்வடைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.உலக சந்தையில் ஏற்படும் விலை மாற்றம் உள்நாட்டு சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே நாளைய தினம் சமையல் எரிவாயு விலை தொடர்பிலான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஒவ்வொரு மாதத்திலும் லிட்ரோ நிறுவனம் விலை மாற்றம் தொடர்பில் அறிவிப்புக்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை ஒன்றில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான மாணவன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர் தலைமறைவாகியுள்ளார்.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் உள்ள பிரபல அரச பாடசாலை ஒன்றில் கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி உடற்கல்வி ஆசிரியரால் விளையாட்டு அறையில் வைத்து பாலியல் ரீதியாக மாணவன் வன்புணர்வு முயற்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அதிபரிடம் முறையிடப்பட்டிருந்தது.
சம்பவம் இடம்பெற்று மறுநாள் பாதிக்கப்பட்ட குறித்த மாணவன் அதிபரிடம் முறையிட்டுள்ளதுடன், இதுவரை இரு வாரங்கள் கழிந்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் மூடி மறைப்பதற்கான முழு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நிந்தவூர் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் தரம் 9இல் கல்வி கற்கும் தனது மகனிடம் வாக்குமூலம் ஒன்றை இரு தடவை பெற்றுச் சென்றுள்ளதுடன், மகனை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சி செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபரான ஆசிரியர் தொடர்ந்தும் தலைமறைவாகி உள்ளதாகத் தாயார் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பாலியல் வன்புணர்வு முயற்சிக்கு உட்படுத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படும் தனது மகன் நேற்று (02.08.2023) மாலை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் வாக்குமூலங்களைப் பெற்றுச்சென்றுள்ளதாகத் தாய் மேலும் குறிப்பிட்டுள்ளார்.இந்த விடயம் தொடர்பில் எந்த தரப்பினரும் எமக்கு உதவவில்லை என கண்ணீர் மல்கப் பாதிக்கப்பட்ட மாணவனின் தாயார் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
குவைத்தில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு தூக்கிலிடப்பட்ட இலங்கையர் ஒருவரின் மரண விசாரணை நேற்று நீர்கொழும்பு மாநகரசபை மற்றும் நீர்கொழும்பு வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி சிறி ஜயந்த விக்கிரமரத்ன முன்னிலையில் ஆரம்பமானது.
எனினும் உயிரிழந்தவரின் மனைவிகள் என கூறி மூன்று பெண்கள் முன்னிலையாகியதால் விசாரணை இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.அநுராதபுரம், கல்கடவல, சூர இசுருகம பகுதியைச் சேர்ந்த வீரசிங்க ஆராச்சிலாகே ஜூட் ரவீந்திர பெரேரா என்ற 46 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் மனைவி எனக் கூறப்படும் குறித்த முகவரியில் வசிக்கும் எஸ்.திஸாநாயக்க முதியன்சேலாகே என்பவர் சாட்சியமளித்துள்ளார்.“உயிரிழந்தவர் நான் திருமணம் செய்துக் கொண்ட எனது கணவராகும். எங்களுக்கு திருமணமாகி 17 வருடங்கள் ஆகிறது. நான் ஓமானில் வேலை செய்கிறேன்.
கடற்படையில் சிப்பாயாக பணியாற்றி வந்த அவர், பின்னர் வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றார்.தனது தந்தை குவைத்தில் தூக்கிலிடப்பட்டதை யூடியூப்பில் பார்த்ததாக எனது மகன் என்னிடம் தெரிவித்தார். எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
அவரது உடல் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. அவர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் தண்டனை பெற்று தூக்கிலிடப்பட்டார் என்பதை அறிந்தேன். இறந்த எனது கணவருக்கு வேறு இரண்டு பெண்களுடன் திருமணம் நடந்தது பின்னரே தெரிய வந்தது.
நான் கணவனின் உடலை ஏற்க விரும்பவில்லை. ஆனால், இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள எனக்கு வாய்ப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்” என அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.இறந்தவரின் சகோதரர் ஒருவர் சாட்சியம் அளித்ததுடன், சடலத்தை ஏற்றுக்கொள்ள தாய் விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இறந்தவரின் மனைவிகள் என கூறப்படும் பெண்களின் அடையாளத்தை சரிபார்த்து, அவர்களை பிள்ளைகளின் தகவல், திருமண சான்றிதழ் மற்றும் பிறப்பு சான்றிதழ்களுடன் இன்று பரிசோதனைக்கு முன்னிலைப்படுத்துமாறு மரண விசாரணை அதிகாரி சிறி ஜயந்த விக்கிரமரத்ன கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்தார்.
வவுனியா – தோணிக்கல் பகுதியில் வீடு புகுந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட ஐவரை கைது செய்த பொலிஸார் நீதிமன்ற உத்தரவினை பெற்று நடத்திய விசாரணையின் பின்னர் கூமாங்குளத்தை சேர்ந்தவரும் சம்பவத்தில் மரணமடைந்த சுகந்தனின் நண்பராக இருந்து பெண் விவகாரத்தால் பின்னர் பிரிந்தவருமான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரை இன்று (03.08.2023) குற்ற புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை விசாரணை பிரிவினர் நீதவான் முன்னிலையில் மன்றுக்கு முன்னிலைப்படுத்தி பொலிஸ் விசாரணைக்குட்டபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறித்த தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று(02.03.2023) நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறும், மீண்டும் 11ஆம் திகதி ஆள் அடையாள அணி வகுப்பிற்காக 2ஆம் 3ஆம் 4ஆம் 5ஆம் சாட்சிகளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும் எனவும் நீதிபதியால் உத்தரவிடப்பட்டது.
இதன்போது, மன்றில் 4ஆம் சாட்சி தனது கருத்தினை தெரிவிக்க முற்பட்ட போது நீதிபதி 02.08.2023 உங்கள் கருத்தை தெரிவித்தால் உங்களுக்கு அனுகூலம் ஏற்படுத்த சந்தர்ப்பமாக அமையும்,
அதனால் 11ஆம் திகதி நீங்கள் விரும்பினால் யோசித்து உங்கள் கருத்தை தெரிவிக்கலாம் என வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் அகமட் ரசீம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகத்தில் சேவைகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
தற்போதுள்ள பொதுமக்களின் நெருக்கடியை குறைக்கும் வகையில் இன்று (03) முதல் வட மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் அநுராதபுரம் மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு மாத்திரம் வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகத்தில் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வருகைதருவதால் அங்கு நெருக்கடி நிலை ஏற்ப்பட்டுவருவதுடன், பொதுமக்களுக்கிடையில் குழப்பநிலையும் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா குருமன்காடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பெண் ஒருவர் அணிந்திருந்த சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
நேற்று (02.08.2023) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா,குருமன்காடு காளிகோவிலுக்கு அருகாமையில் பெண் ஒருவர் சென்றுள்ளார்.
இதன்போது பல்சர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அந்தப்பெண் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். குறித்த நபர்களை சிலர் விரட்டிச் சென்றபோதும் அவர்களை பிடிக்க முயலவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நேற்றயதினம் நெளுக்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் பெண் ஒருவர் அணிந்திருந்த 5 பவுண் தங்கச்சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் நேற்று (02.08.2023) இரவு 10 மணியளவில் துவிச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கி முன்பாகவிருந்து வீதிக்கு ஏற முற்பட்ட துவிச்சக்கரவண்டி மீது வைத்தியசாலையிலிருந்து ஹொரவப்பொத்தானை வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் இரு வாகனங்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளமையுடன் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தமையுடன் இரு வாகனங்களையும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றனர்.
வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் தம்பதிகள் மரணம் தொடர்பில் சந்தேகநபர்களை எதிர்வரும் 11 திகதி வரை அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்க வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வவுனியா, தோணிக்கல் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களையும் 11 திகதி வரை அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கவும், மீண்டும் 11 திகதி ஆள் அடையாள அணி வகுப்பிற்காக 2ம் 3ம் 4ம் 5ம் சாட்சிகள் நீதிமன்றில் முன்னிலைபடுத்த வேண்டும் எனவும் நீதிபதியால் உத்தரவிடப்பட்டது.
இதன்போது, மன்றில் 4ம் சாட்சி தனது கருத்தினை தெரிவிக்கமுற்பட்ட போது நீதிபதி இன்று (02.08) உங்கள் கருத்தை தெரிவித்தால் உங்களை அனுகூலம் ஏற்படுத்த சந்தர்ப்பமாக அமையும் அதனால் 11ஆம் திகதி நீங்கள் விரும்பினால் யோசித்து உங்கள் கருத்தை தெரிவிக்கலாம் என வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் அகமட் ரசீம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தாக்குதலுக்காக பயன்படுத்தப்பட்ட வாள்கள் மற்றும் கோடாரி, கத்தி, இரும்புகம்பி என்பன நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகிந்த குணரத்ன, பிரதி பொலிஸ் மா அதிபர் பி.அம்பாவில ஆகியோரின் அறிவுறுத்தல்கள் மற்றும் மேற்பார்வையின் கீழ் வவுனியா குற்றப் புலனாய்வுப் பிரிவினர், வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் உள்ளிட்ட பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களையும் நேற்று (02.08) வவுனியா சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்படுதிய பின்னர் வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் நேற்று (02.08) மாலை ஆஜர்படுத்தினர்.
இதன்போதே சந்தேக நபர்களை எதிர்வரும் 11 வரை அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அத்துடன், சந்தேகநபர்கள் சிறு நோய்களுக்கு உட்பட்டவர்கள் என்பதனால் சிறைச்சலை வைத்திய அதிகாரியிடம் சிகிச்சை பெற்றுக் கொடுக்க பணித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் சட்டத்தரணி அருள்மொழிவர்மன் கொன்சியஸ் ஆஜராகி சந்தேகநபர்களை எவ்வித துன்புறுத்தலுக்கும் உள்ளாக்காமல் சந்தேகநபர்களின் நலனுரித்துக்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் சந்தேகநபர்கள் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட ஐந்து சந்தேகநபர்களையும் குற்ற புலனாய்வுத் திணைக்களத்தின் கொலைவிசாரனை பிரிவினரான பொலிஸ் பரிசோதகர் இக்பால், பொலிஸ் பரிசோதகர் பொல்வத்த, பொலிஸ் சார்ஜன்ட் சங்கர்ரூவான், பொலிஸ்காஸ்டபிள் விஜரட்ண மதுசங்க பண்டார ஆகியோர் இணைந்து அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சந்தேக நபர்களை அனுப்பி வைத்தனர்.
கோவை பீளமேடு சேரன் மாநகர், பாலாஜி நகர் பகுதியில் வசித்து வருபவர் சக்ரவர்த்தி. இவர், பெயிண்டிங் ஒப்பந்ததாரர். இவரது மனைவி ஜெகதீஸ்வரி (41). இந்த தம்பதிக்கு கார்த்திகா என்ற மகள் உள்ளார்.
இவர், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ப்ளஸ்-2 படித்து வருகிறார். சக்கரவர்த்தி அன்னூரில் பெயிண்டிங் ஒப்பந்தம் எடுத்து செய்து வருவதால், காலையில் பணிக்குச் சென்றுவிட்டார்.
வழக்கமாக ஜெகதீஷ்வரி, மகள் கார்த்திகாவை காலையில் பள்ளியில் விட்டுவிட்டு, மாலையில் பள்ளிச் சென்று வீட்டிற்கு அழைத்து வருவார். நேற்றும் அதே போல ஜெகதீஷ்வரி பள்ளிக்கு வருவார் என எண்ணி கார்த்திகா பள்ளியிலேயே காத்திருந்தார்.
ஆனால் மாலை நீண்ட நேரம் ஆகியும் ஜெகதீஷ்வரி வராததாலும், செல்போனை எடுக்காததாலும், கார்த்திகா நடந்தே வீட்டிற்கு சென்றுள்ளார்.வீட்டிற்குள் சென்று பார்த்த போது, ஜெகதீஷ்வரி இறந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கார்த்திகா சத்தம் போட்டதால் அங்கு வந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக கணவர் சக்கரவர்த்திக்கும், போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உதவி ஆணையர் பார்த்திபன் தலைமையிலான போலீசார், அங்கு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், ஜெகதீஷ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல் கட்ட விசாரணையில் ஜெகதீஷ்வரி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதும், அவர் அணிந்திருந்த 4 சவரன் செயின், 1 சவரன் கம்மலும் திருடப்பட்டதும் தெரியவந்தது.
மோப்பநாய் மற்றும் தடயவியல் துறையினர் உதவியுடன் போலீசார் வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பெண்ணை கொலை செய்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை பிடிக்க 3 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். பட்டப்பகலில் நகைக்காக பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணமாகி நான்கு வருடமாகியும் குழந்தை இல்லை என்ற காரணத்தால்… கணவன், மனைவியை தாக்கியதில் மனமுடைந்த மனைவி வீடியோ பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் புதுவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம், திருக்கனூர் அருகே உள்ள ரோஜா நகர் கே.மணவெளியைச் சேர்ந்தவர்கள் அரவிந்த் – மோனிகா தம்பதி. இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்திருக் கின்றனர்.
இவர்களுக்கு திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகும் நிலையில், குழந்தை இல்லை. இதனால் இருவருக்கும் இடையே அவ்வப்போது பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 25-ம் தேதி மாலை மோனிகா தன் தாய் உண்ணாமலையிடம், தன் கணவருக்கும் தனக்கும் இடையே நடக்கும் பிரச்னை பற்றிக் கூறியுள்ளார்.
அப்போது, மறுநாள் நேரில் வந்து பார்ப்பதாக உண்ணாமலை கூறியுள்ளார். கடந்த 26-ம் தேதி காலை, உண்ணாமலை தன் மகளுக்கு செல்போன் மூலமாக பலமுறை தொடர்புகொண்ட போதும், அவர் அழைப்பை ஏற்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த அவர், திருக்கனூர் பகுதியில் உள்ள தன் மூத்த மகளை அனுப்பி மோனிகாவை வீட்டில் சென்று பார்க்கச் சொல்லியுள்ளார். அவர் சென்று பார்த்தபோது கதவு மூடி இருந்திருக்கிறது.
இதனால் சந்தேகமடைந்தவர், ஜன்னல் வழியாகப் பார்த்தபோது மோனிகா புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது தொடர்பான தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த திருக்கனூர் போலீஸார், மோனிகாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே மோனிகாவின் செல்போனை உறவினர்கள் பார்த்தபோது, அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக இரண்டு வீடியோக்களை பதிவு செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
அந்த வீடியோவில் பேசும் மோனிகா, “என்னால இவன்கிட்ட இருக்க முடியலம்மா. என்னை அடிக்கிறான்மா… தலையில ஒரே வலி. ராத்திரி போட்டு அடிச்சிட்டான்மா. `உன் வீட்டுல இருந்து என்ன பண்ணுறாங்க…
உன்னால பிள்ளை பெத்துக் கொடுக்க முடியலனா நீ எதுக்கு இருக்க… நீ போ, நான் வேறொரு கல்யாணம் பண்ணி பிள்ளை பெத்து காண்பிக்கிறேன்’னு சொல்லி, என்னப் போட்டு அடிக்கிறான்மா.
`உன் ஜாமானை எல்லாம் தூக்கிக்கினு போ, இனி நான் உடன்கூட இருக்க மாட்டேன், செத்துரு போ’னு அடிக்கிறான்மா. நான் சாகப்போறேன்மா, என்னால இவன்கிட்ட இருக்க முடியலம்மா…
நான் செத்துட்டா, நீ யாரையும் சும்மா விடாதம்மா. நான் செத்துட்டாலும் உன் கூடவேதான் இருப்பேன்மா, நீ அழுவாத… அப்பாவை பாத்துக்க, அம்மா நான் போறேன்” என அழுதபடியே தன் தாய்க்கு அவர் அந்த வீடியோ பதிவை செய்துள்ளார்.
தற்போது இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மேலும், “என் இறப்புக்கு காரணம் என் கணவர், அவர் அம்மா, அப்பா, தம்பி. என்னை வரதட்சணை கேட்டு அடிக்குறாங்க. கல்யாணம் ஆகி 5 வருடம் ஆகப்போகுது, குழந்தை பிறக்கலனு என் கணவர் என்னை தினமும் அடிக்கிறாரு.
என்னால இதுக்கு மேல உயிரோடு இருக்க முடியல. இவங்க யாரையும் சும்மா விடாதீங்க” என்று மோனிகா எழுதி வைத்துள்ளதாகக் கூறப்படும் கடிதம் ஒன்று வெளியாகி மேலும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் திருக்கனூர் போலீஸார், கணவர் அரவிந்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுமட்டுமன்றி, மோனிகா தற்கொலை செய்துகொண்ட தகவலை அறிந்த அவரின் பாட்டி ரங்கம்மா அதிர்ச்சியில் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கணவன் திட்டி தாக்கியதில், மனமுடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் புதுவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பல்லாவரம் அருகே காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பல்லாவரம் வேம்புலி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த பாலமுருகன் – விமலா தம்பதியினரின் மூத்த மகள் ஹேமிதா.
இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் ஹேமிதா அதே பகுதியில் உள்ள டியூஷன் சென்டரில் சிறு வயதிலிருந்து படித்து வந்து உள்ளார்.
9-ஆம் வகுப்பு படிக்கும் போது டியூஷன் மாஸ்டர் அஜய் (வயது 26) என்பருக்கும் ஹேமிதாக்கும் நட்பு ஏற்பட்டு உள்ளது. நாளடைவில் அது காதலாக மாறியது.இந்த காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரியவர படிக்கும் வயதில் காதல் எதற்கு என ஹேமிதாவை கண்டித்தாதக தெரிகிறது.
அதன் பிறகு ஒரு சில மாதங்களாக இருவரும் பேசுவதை நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு சென்று கொண்டு இருக்கும் போது மீண்டும் அஜய், ஹேமிதாவும் நேரில் சந்தித்து தங்களது காதலை தொடர்ந்து கொண்டிருந்தனர்.
ஹேமிதா பயன்படுத்தி இருந்த செல்போனையும் அவரின் பெற்றோர் வாங்கிக் கொண்டதால் இருவரும் பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் தன் காதலிக்கு புதியதாக செல்போனை வாங்கி கொடுத்து இன்ஸ்டாகிராம் மூலமாக பேசி இருவரும் காதலை வளர்த்து வந்துள்ளனர்.
இந்தநிலையில், கடந்த 27-ஆம் தேதி ஹேமிதா வீட்டில் அனைவரும் தூங்கியப் பின் காலையில் எழுந்து ஹேமிதாவை பார்த்த போது அவரைக் காணவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஹேமிதாவை அக்கம்பத்தில் தேடி உள்ளனர். ஆனால் எங்கு தேடியும் மகள் கிடைக்காததால் அருகில் உள்ள பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த பல்லாவரம் போலீசார் ஹேமிதாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ரயில்வே போலீசாருக்கு, குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே ஒரு இளம்பெண்ணின் சடலம் கிடப்பதாக தெரிய வந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டதில் அவர் ஹேமிதா என்பது தெரிய வந்தது. அதன் பின் ஹேமிதாவின் உடல் உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் ஹேமிதா வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டிருந்த நேரத்தில் அதிகாலை நேரத்தில் குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே தற்கொலை செய்துக்கொண்டது தெரிய வந்தது.
இளம்பெண் ஹேமிதாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். குறிப்பாக இறப்பிற்கு அவரது காதலன் தான் காரணம் எனவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அண்மையில் கிளிநொச்சியில் நடைபெற்ற வடக்கு மாகாணம் முழுவதற்க்குமாக கராத்தே போட்டியில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான போட்டியாளர்கள் மத்தியில்,
வவுனியா வீரர்கள் 15 தங்கம், 12 வெள்ளி, 7 வெங்கலபதக்கங்களைப் பெற்றதுடன் முழுவதுமாக 34 பதக்கங்களைப் பெற்று தேசிய மட்டப் போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளமை வவுனியாவின் சாதனையாக நோக்கப்படுகிறது.
மேலும் போட்டியில் வெற்றி பெறுவதற்கான பயிற்சி நுணுக்கங்களை கற்பிக்கவும் மற்றும் மாணவர்களை வளப்படுத்தவும் பக்கபலமாக இருந்து வழிகாட்டிய போதானாசிரியர் சிகான் முகம்மத் இக்பால் செயற்பட்டிருந்தார்.
இம் மாணவர்களின் வெற்றிக்காக அரும்பாடுபட்ட வவுனியா மாவட்ட பயிற்றுவிப்பாளர்களான சென்சே பா.மிதுஷன் , சென்சே பா.ஆகாஸ் ஆகியோரை கராத்தே சமூகம் பாரட்டி நிற்கின்றது.
மஹரகம நிலம்மஹர பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை மிரட்டிய தனியார் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
“சீருடைக்கு மதிப்பளித்து அனுப்பி விடு. இல்லையேல் நான் உன்னை தூக்கி தரையில் அடிப்பேன்” என வெலிக்கடை பொலிஸ் போக்குவரத்து பிரிவின் உத்தியோகத்தரை குறித்த தனியார் பேருந்து சாரதி மிரட்டியுள்ளார்.
இராஜகிரிய தேவாலயத்திற்கு அருகில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த போது ஹெட்டியவத்தையிலிருந்து நுகேகொட நோக்கி பயணித்த தனியார் பேருந்து சோதனை நடவடிக்கைகளுக்காக நிறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது நிறுத்தபட்ட பேருந்தின் சாரதி ” நீ தண்டப்பணம் பிடிப்பது பெரிய விடயம் அல்ல, ஆனால் உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க நினைவில் கொள்ளுங்கள். என் பெயர் தில்ஷன், யாராக இருந்தாலும் எனக்கு பயமில்லை” என அச்சுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் சந்தேகத்திற்கிடமான சாரதியின் நடவடிக்கைகளை, பொலிஸ் உத்தியோகத்தர் தனது கையடக்கத் தொலைபேசி மூலம் காணொளியாக பதிவு செய்துள்ளார்.இதற்கமைய கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார் என வெலிக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.