பிரித்தானியாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் நபர் ஒருவரினால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
லண்டனிலுள்ள உணவகம் ஒன்றில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் படுகாயம் அடைந்த 32 வயதான ஜெயந்தன் இராமச்சந்திரன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 3ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் 25 வயதான Dequarn Williams என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 29ஆம் திகதி இந்த தாக்குதல் சம்பவம் நடந்த நிலையில், சில மணித்தியாலங்களில் சந்தேக நபரை லண்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட இளைஞன் யாழ்ப்பாணம் கரவெட்டி பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. கடந்த வருடம் திருமணம் செய்த நிலையில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அருகாக புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வு கூறியுள்ளார்.
07.12.2025 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00 மணி வானிலை எதிர்வுகூறலொன்றை விடுத்து, அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அருகாக புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது.
இது மிக வலுவான ஈரப்பதன் கொண்ட கீழைக் காற்றுக்களுடன் இணைந்துள்ளது. ஏற்கனவே இலங்கையின் தென்மேற்கு பகுதியில் வளிமண்டல தளம்பல் நிலை ஒன்று காணப்படுகிறது.
இந்தக் காற்றுச் சுழற்சி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்காக நகர்ந்து இலங்கைக்கு தெற்காக தெற்கு வங்காள விரிகுடா பகுதியை அண்மிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் ஏற்கனவே குறிப்பிட்டபடி எதிர்வரும் 09.12.2025 முதல் 13.12.2025 வரை இலங்கையின் பல பகுதிகளுக்கும் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
குறிப்பாக, இலங்கையின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, தென், ஊவா, வட மேல், சப்ரகமுவ, மேல் மாகாணங்கள் கன மழையைப் பெறும் வாய்ப்புள்ளது.
ஏற்கனவே இலங்கையின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைத்து நிலம் தன்னுடைய நிரம்பல் நிலையை எட்டியுள்ளது.
எனவே அந்த பிரதேசங்களில் தொடர்ச்சியாக 50 மில்லிமீற்றருக்கு மேற்பட்ட மழை கிடைத்தால் அப்பகுதிகளில் வெள்ள நிலைமைகள் ஏற்படும் வாய்ப்புண்டு.
எனவே மேற்குறிப்பிட்ட (09.12.2025 முதல் 13.12.2025) தாழ் நிலப்பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ள அனர்த்தம் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம்.
அத்தோடு மலையகத்தின் சில பகுதிகளில் இக் கனமழை நிலச்சரிவு நிகழ்வுகளைத் தூண்டலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே அன்புக்குரிய இலங்கை மக்கள் அனைவரும் எதிர்வரும் 09.12.2025 முதல் 13.12.2025 வரை கனமழை மற்றும் அதனோடு இணைந்த மண்சரிவு போன்ற நிகழ்வுகள் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம்.
துறைசார் அதிகாரிகள் இது தொடர்பாக ஆராய்ந்து உரிய திணைக்களங்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் மக்களை விழிப்பூட்டுவது சிறந்தது.
குறிப்பாக மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாண மக்கள் அனைவருக்கும் இந்த தகவல் சென்றடையும் வகையில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் மத்திய மாகாணங்களின் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டத்தை சற்று குறைவாகப் பேணுவது சிறந்தது.
அத்தோடு எதிர்வரும் 15.12.2025 அன்று மீளவும் ஒரு காற்றுச் சுழற்சி தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகும் வாய்ப்புள்ளமையும் குறிப்பிடத்தக்கது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அனுராதப்புர மாவட்டத்தில் உள்ள மிஹிந்தலை பிரதேசத்தில் திருமணமான பெண் ஒருவர் தனது 67 வயதான கணவரை தலையில் உலக்கையால் அடித்து கொலை செய்ததாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறந்தவர் ஆனந்த சிசிரகுமார (67), இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். இவர், ரஜரட்ட ரட அபிவிருத்தி வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்று மிஹிந்தலை கிரிந்தேகமவில் வசித்து வந்தார்.
குடும்ப தகராறு அதிகரித்தபோது, மனைவி வீட்டிற்குள் இருந்த உலக்கையால் தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர், அவரது குடும்பத்தினரால் மிஹிந்தலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவர் இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக இறந்தவரின் மனைவி, 67 வயது ஓய்வு பெற்ற பெண், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கையானது இன்று (08) பிற்பகல் 11.00 மணி முதல் நடைமுறையில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி,சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும், கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழையுடன் அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, மின்னல் மற்றும் காற்றினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
2026ஆம் ஆண் டுஜனவரி 1 ஆம் திகதி முதல், அரச ஊழியர்களுக்கு வேறு இடங்களில் வேலை செய்ய சம்பளமில்லா விடுப்பு வழங்கப்படாது என்று ஒரு புதிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு அமைச்சரவை முடிவின் கீழ் இந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், உள்ளூர் அல்லது வெளிநாடுகளில் மாற்று வேலை தேடுவதற்காக பலர் பயன்படுத்தி வந்த ஐந்து ஆண்டு விடுப்பு விருப்பத்தை ரத்து செய்வதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சக செயலாளர் எஸ். ஆலோக பண்டாரவை கோடிட்டு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த சிறப்பு விடுப்பை முடிவுக்குக் கொண்டுவரும் சுற்றறிக்கை இந்த வாரம் வெளியிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஏற்கனவே அத்தகைய விடுப்பைப் பெற்றவர்களுக்கு விடுப்பு நீடிப்பு இருக்காது என்றும், புதிய விண்ணப்பங்களும் இனி பரிசீலிக்கப்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் 2022 ஆம் ஆண்டில் ஐந்து ஆண்டு சம்பளமில்லா விடுப்பு வழங்க அமைச்சரவை முடிவு எடுக்கப்பட்டது. ஓய்வூதியம் பெறும் அதிகாரிகளுக்கு அவர்களின் மூப்புக்கு எந்தவித பாரபட்சமும் இல்லாமல் விடுப்பு வழங்கப்பட்டது.
இந்த வசதியைப் பயன்படுத்தி சென்ற மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்கள் போன்ற நிபுணர்கள் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளனர். இதன் காரணமாக, இப்போது அரசுத் துறையில் குறித்த நிபுணர்களுக்கான பாரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக, இந்த முடிவு எடுக்கப்பட்டபோது, அரசாங்கத்தின் சம்பள செலவைக் குறைக்க வேண்டிய அவசியம் இருந்தது, ஆனால் இப்போது பொருளாதாரம் நிலையாகிவிட்டதால், அவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்புவது முக்கியம் என்று ஆலோக பண்டார குறிப்பிட்டுள்ளார்.
மிஹிந்தலை பொலிஸ் பிரிவின் மஹாகிரிந்தேகம பகுதியில் ஒருவர் நேற்று காலை தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்டவர் மிஹிந்தலை மஹாகிரிந்தேகம பகுதியைச் சேர்ந்த 61 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு குறித்த நபருக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
அதன் பின்னர், நேற்றையதினம் காலை உயிரிழந்தவரின், மனைவி அவரை ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் கணவனை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்படும் 53 வயதான மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றிரவு (08) முதல் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
அவதானமாக இருக்க வலியுறுத்து
மேலும், பிற்பகல் 1:00 மணிக்குப் பிறகு தீவின் பிற பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை நேரங்களில் பனிமூட்டமான நிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் திணைக்களம் பொதுமக்களை கோரியுள்ளது.
வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக கண்டி மாவட்டத்தில் 35 பாடசாலை மாணவர்களும் 10 ஆசிரியர்களும் உயிரிழந்துள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் நிஹால் அலஹகோன் தெரிவித்துள்ளார்.
மாத்தளை மாவட்டத்தில் பாடசாலை மாணவர் உயிரிழந்துள்ளதாகவும், நுவரெலியா மாவட்டத்தில் தற்போது தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
காணாமல் போன மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குறித்த தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கண்டி மாவட்டத்தில் 97,850 மாணவர்கள் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாத்தளை மாவட்டத்தில் 8,500 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நுவரெலியா மாவட்டத்திற்கான புள்ளிவிவரங்கள் தற்போது கணக்கிடப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டி மாவட்டத்தில் 130 பாடசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அதிக எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்கள் இடம்பெயர்வு முகாம்களில் உள்ளனர். மேலும் 16 ஆம் திகதி பாடசாலைகள் மீள திறக்கப்படுவதால், அவர்களுக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்கு சென்று கல்வி கற்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
காசாவில் இடிந்த கட்டிடங்களுக்கு நடுவில் இடம்பெற்ற திருமணம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இரண்டு வருட போருக்குப் பிறகு நம்பிக்கையின் ஒரு தருணத்தில் காசாவில் ஐம்பத்து நான்கு ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர்.
இணையங்களில் வைரல்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே காசாவில் 2 ஆண்டுகளாக நடந்து வந்த போரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய கொடூர தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாஸ்தீனர்கள் பலியானதுடன், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பட்டினிச்சாவும் துயரத்தை ஏற்படுத்தி இருந்தது.
2023ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் காசா மீதான இஸ்ரேலின் தொடுத்த போரில் 70,360 பேர் உயிரிழந்த நிலையில் 171,047 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலைய்ல் கடந்த ஒக்டோபர் மாதம் இஸ்ரேல் – ஹமாஸ் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டபோதும் 373 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் காசாவில் இடிந்த கட்டிடங்களுக்கு நடுவில் ஐம்பத்து நான்கு ஜோடிகளுக்கு இடம்பெற்ற திருமணம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மின்னல் தாக்கியதால் வீடொன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (07.12.2025) இரவு காலி, பலப்பிட்டி, பஹக்மனவத்த பிரதேசத்தில், இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீப்பற்றியதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பகுதியில் வெள்ளை நுரை கரையொதுங்கியதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பருத்தித்துறை இறங்குதுறையை அண்டிய கடற்பகுதியில் நேற்றைய தினம் (07.12.2025) காலை வெள்ளை நுரையில் ஒதுங்கியதால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
இலங்கையில் தொடரும் அனர்த்த நிலை நேரத்தில் யாழ்ப்பாண கடற்கரையில் திடீரென வெள்ளை நுரை கரை ஒதுங்கியது மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாடளாவிய ரீதியில் தற்போது முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பல கோழிகள் உயிரிழந்துள்ளதுடன் முட்டைகள் அழிவடைந்துள்ளன.
இதனால் சந்தையில் முட்டை ஒன்றின் விலை 40 முதல் 50 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு முன்னர் முட்டை ஒன்றின் விலை 25 முதல் 30 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டது.
எதிர்வரும் காலங்களில் முட்டை ஒன்றின் விலை 70 ரூபாவாக அதிகரிக்கலாம் என அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒட்டுசுட்டான் இடதுகரை, முத்தையன்கட்டு, பிரதேசத்தை சேர்ந்த அசோக்குமார் அரவிந்தன் 14 வயதுடைய சிறுவன் கடந்த 05.12.2025 வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அன்றைய தினம் வீட்டிலிருந்து வலதுகரையில் உள்ள கடை ஒன்றிற்கு பொருட்கள் வாங்கச் சென்றிருந்த நிலையில் அவர் இதுவரை வீடு திரும்பவில்லை.
சிறுவன் குறித்த கடையில் பொருட்கள் வாங்கிச் செல்வதாக உள்ள CCTV காட்சிகள் பதிவாகியுள்ளன. எனவே சிறுவனை கண்டு பிடித்துத்தருமாறு உறவுகளினால் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர்.
குறித்த சிறுவன் தொடர்பான எந்த தகவலையும் அறிந்தவர்கள் தயவுசெய்து கீழ்க்காணும் தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
காணாமல் போன சிறுவன் தொடர்பில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஒட்டுசுட்டான் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
தென்னிந்திய பிரபல தொலைக்காட்சி நடத்தும் Saregamapa Lil Champs Season 5 இசைப்போட்டிக்கு திருகோணமலை பிரதேசத்தை சேர்ந்த சிறுமி வர்ஜா தெரிவாகியுள்ளார்.
சரிகமப இசைப்போட்டியில் , யாழ்ப்பான கில்மிக்ஷா, மலையக குயில் அக்ஷானி மற்றும் அம்பாறை சபேசன் ஆகியோர் கலந்துகொண்டு மக்கள் மனங்களில் இடம் பெற்றிருந்தனர்.
இந்நிலையில் Saregamapa Lil Champs Season 5 டிசம்பர் 6 ஆம் திகதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் திருகோணமலையில் இருந்து மற்றுமொரு சிறுமியான வர்ஜா தெரிவாகியுள்ளமை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப்பில் தந்தையால் கால்வாயில் வீசப்பட்டதாக கூறப்பட்ட சிறுமி 2 மாதங்களுக்கு மீண்டும் திரும்பி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 29ம் திகதி பஞ்சாப் மாநிலத்தின் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுர்ஜித் சிங் என்ற தந்தை அவரது நான்கு மகள்களில் மூத்த மகளான 17 வயது சிறுமியை கயிற்றால் கைகளை கட்டி சீறி ஓடும் கால்வாய் நீரில் தள்ளி விட்டுள்ளார்.
இதையடுத்து சிறுமியை கண்டுபிடிக்க முடியாததை தொடர்ந்து, அவர் இறந்து விட்டதாக கருதப்பட்டது.
மகளின் ஒழுக்கத்தில் சந்தேகமடைந்து தந்தை சுர்ஜித் சிங் இந்த செயலை செய்ததாக கூறப்படும் நிலையில், 17 வயது சிறுமியை நீரில் தள்ளியதை அவரது தாய் மற்றும் சகோதரிகள் நேரில் பார்த்ததாக கூறப்படுகிறது.
சிறுமி காணாமல் போனதை அடுத்து அவரது உறவினர்கள் வழங்கிய புகாரின் பேரில், பெரோஸ்பூர் நகர காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து தந்தை சுர்ஜித் சிங்கை கைது செய்தனர்.
இந்நிலையில் காணாமல் போனதாக கருதப்படும் சிறுமி கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு பிறகு அதிர்ச்சியூட்டும் விதமாக ஊடகங்களின் முன்பு தோன்றியதோடு, அவரது தந்தையை சிறையில் இருந்து விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
உயிர் பிழைத்த சம்பவம் குறித்து பேசிய சிறுமி, கால்வாயில் இருந்த அதிகமான நீரோட்டம் காரணமாக கையில் கட்டப்பட்டு இருந்த கயிறு தளர்ந்ததாகவும், ஒரு இரும்பு தடியின் மீது தன்னுடைய தலையை இடித்து கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்பிற்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் அந்த இரும்பு கம்பி தான், தன்னுடைய உயிரை காப்பாற்றியதாகவும், அதை இறுக்கமாக பிடித்துக் கொண்டு கால்வாய் கரையை அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அதிர்ஷ்டவசமாக கால்வாய் கரையில் இருந்த மூன்று தன்னை மீட்டு உயிரை காப்பாற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் கடந்த இரண்டு மாதங்களாக தங்கியிருந்த இடம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.
அதே சமயம், தன்னுடைய இளைய சகோதரிகள் தற்போது காப்பாளர்கள் இல்லாமல் இருப்பதாகவும், அதனால் தன்னுடைய தந்தையை விடுவிக்க வேண்டும் என்றும் சிறுமி கோரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில், காதலித்துத் திருமணம் செய்து கொண்ட மூன்று மாதங்களிலேயே புதுப்பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு ஆந்திரஹள்ளியில் உள்ள காமிகன்யா நகரைச் சேர்ந்த அபிஷேக் என்பவரும், அமுல்யா (23) என்ற பெண்ணும் சில ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு வீடுகளிலும் எதிர்ப்பு இருந்ததால்,
பெற்றோர் எதிர்ப்பையும் மீறி இருவரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டு, காமிகன்யா நகரில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியிருந்தனர்.
இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அமுல்யா திடீரெனத் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து பேடரஹள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அமுல்யாவின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே, அமுல்யாவின் பெற்றோர் தனது மகள் சாவுக்கு அபிஷேக் தான் காரணம் என்று குற்றம் சாட்டி, பேடரஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.