சென்னையில் தி.நகர் ஆற்காட் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் 37 வயதான மஞ்சு.இவர் ஆடை வடிவமைப்பு தொழில் செய்து வருகிறார். இவருக்கு 2 பெண் குழந்தைகள் .
இவர், சின்னத்திரை நடிகைகள், தொகுப்பாளர்களுக்கு ஆடை வடிவமைத்து கொடுத்து வருகிறார்.இதனால் திரை பிரபலங்களுடன் தொடர்பில் இருக்கிறார். இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சுவிற்கு ‘சென்னை28 பாகம்2’ உட்பட பல படங்களில் நடித்துள்ள நடிகரும், பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் பேரனுமான அபிநயின் மனைவி அபர்ணா அறிமுகமானார். பின்னர் அபர்ணா வாடிக்கையாளர் என்ற முறையில் மஞ்சுவிடம் பழகி வந்துள்ளார்.
கடந்த ஆண்டு மஞ்சுவின் மகள் லாவண்யாஸ்ரீ 12-ம் வகுப்பு முடித்துவிட்டு நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்தார். பின்னர் லாவண்யா விரும்பிய கல்லூரியில் மருத்துவ சீட் கிடைக்காததால் மஞ்சு தனக்கு தெரிந்த நபர்களிடம் கல்லூரி சீட் குறித்து கேட்டுள்ளார்.
இதை கேள்விப்பட்ட அபர்ணா அபிநய், மஞ்சுவிடம் தனக்கு ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் தெரிந்த நண்பர் இருப்பதாகவும், 20 லட்ச ரூபாய் கொடுத்தால் லாவண்யாவுக்கு மருத்துவ சீட் வாங்கி விடலாம் என்றும் முதற்கட்டமாக 5 லட்ச ரூபாய் கொடுத்து மருத்துவ சீட்டை புக் செய்து ரசீது பெற்றுக் கொள்ளலாம் என்றும் மீதி பணத்தை கல்லூரியில் சேர்ந்த பின்பு செலுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பி மஞ்சு கடந்த ஜனவரி மாதம் அபர்ணா கூறியதன் பேரில் அவரது நண்பர் அஜய் வங்கிக் கணக்கில் 5 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார். பணத்தை பெற்று பின்பு அபர்ணா அபிநய், மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கியது போன்று ஒரு சான்றிதழை மஞ்சு வாட்ஸ்அப்பிற்கு அனுப்பியுள்ளார்.
பின்னர் மஞ்சு அந்த சான்றிதழுடன் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரிக்கு மகளை சேர்ப்பதற்காக சென்றுள்ளார். அங்கு சான்றிதழை ஆய்வு செய்த கல்லூரி நிர்வாகம் இது போலி சான்றிதழ் என கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் மஞ்சு அபர்ணாவிடம் சென்று இது குறித்து கேட்டதுடன் தான் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டுள்ளார். பணத்தை திருப்பி கொடுக்காமல் அலைக்கழித்து வந்த அபர்ணா ஒரு கட்டத்தில், 5 லட்சம் பணத்தை தனது நண்பரின் வங்கிக் கணக்கிற்கு தானே அனுப்பினாய், அவரிடம் சென்று வாங்கிக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
இருப்பினும் மஞ்சு தொடர்ந்து பணத்தை கேட்டு்வந்ததால் தான் நடத்தி வந்த ஆடை விற்பனை செய்யும் கடையை மூடிவிட்டு அபர்ணா தலைமறைவானார். இதனால் பாதிக்கப்பட்ட மஞ்சு மாம்பலம் காவல் நிலையத்தில் அர்பணா மீது புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் அபர்ணா மற்றும் அவரது நண்பர் அஜய் ஆகியோர் மீது மோசடி, போலியான ஆவணம் தயாரித்தல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து போலீசார் தலைமறைவான அபர்ணா, அஜய் ஆகியோரை தேடிவருகின்றனர்.
பெண் வேடமிட்டு விநோத திருவிழாவில் கலந்துக்கொண்ட ஆண்கள், வைரலாகும் புகைப்படங்கள். இந்தியாவை பொறுத்தவரை பல மதங்கள் உள்ளது, இங்கு பல வித்யாசமான சடங்குகள் பூஜை முறைகள் உள்ளது.
அந்த வகையில் கேரளாவில் ஆண்கள் பெண்களை போல அலங்காரம் செய்து கொண்டு கடவுளை வழிபாடு செய்யும் விநோத வழக்கம் உள்ளது. கேரளாவின் கொல்லம் மாவட்டத்திலுள்ள சாவரா என்ற கிராமத்தில் உள்ள கொட்டங்குளங்கரா பகவதி அம்மன் கோயில்.
இது சுயம்புவாக தோன்றிய கடவுளாக கருதப்படுகின்றது . இந்த கோயிலில் ஒரு விநோத சடங்கு ஒன்று பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த சடங்கில், ஆண் பக்தர்கள் பெண்களை போல வேடமிட்டு கடவுளை வழிபடுகின்றனர்.
ஆண்கள் பெண்களை போல மாறி நேர்த்திக்கடன் செலுத்துவது இங்குதான் என்று கூறப்படுகின்றது . இதன்போது ஆண்கள் ஏதேனும் பாவங்கள் செய்திருந்தால் இவ்வாறு பரிகாரம் செய்தால் பாவமெல்லாம் போகும் எனபது இங்கு உள்ள மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
முதலில் உள்ளூர் திருவிழாக இருந்தது தற்போது உலகமெங்கும் உள்ள பல ஆண்கள் பங்கேற்று இந்த சடங்கில் கலந்துகொள்கின்றனர் குறிப்பாக லண்டனில் இருந்தும் ஆண் பக்தர்கள் வருவதாக கூறப்படுகின்றது.
இந்த விநோத சடங்கில் பங்கேற்கும் ஆண்களுக்கு ரூ.500 முதல் ரூ.2000 ஆயிரம் வரை ஒப்பனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. யாரும் பெண் வேடம் தரிக்கும் ஆண்களை கேலி செய்வதில்லை.
இது கேரளாவின் மிக முக்கிய பாரம்பரியமாக பார்க்கப்படுகிறது. பெண் வேடத்தில் ஆண்கள் வலம் வந்த காட்சியைப்பார்த்து இளைஞர்கள் ஜொள்ளு விட்ட விநோத திருவிழா இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வாட்ஸ் அப் காதலுக்குள்ளான 15 வயது சிறுமியை விடுதிக்கு அழைத்துச் சென்ற இளைஞன், சி.று.மி.யை து.ஷ்.பி.ர.யோ.க.ம் செ.ய்.துவிட்டுத் த.லை.ம.றை.வாகியுள்ளார். இச்சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சி.று.மி.யுடன், அம்பலாந்தோட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் வட்ஸ்அப் மூலமாக கா.த.ல் தொ.டர்பை ஏற்படுத்தியுள்ளார்.
சிறிது காலம் நீடித்த இவர்களது வாட்ஸ் அப் காதல் தொடர்ந்தது. இந்நிலை நிலையில் சிறுமியை நேரடியாக சந்திக்க வந்த காதலன், சிறுமியுடன் பேசிக், கதைத்து ஏ.மா.ற்.றி கண்டி கெட்டம்பே பகுதியிலுள்ள வி.டுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு சி.று.மி.யை து.ஷ்.பி.ர.யோ.க.ம் செய்த பின்னர் இ.ளைஞர் த.லை.ம.றை.வா.கி.யுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏ.மா.ற்.றமடைந்த சி.று.மி, கண்டி பொலிஸ் நிலையத்தில் செய்த மு.றைப்பாடு செய்ததால், இளைஞர் தே.ட.ப்பட்டு வருகிறார். பா.தி.க்.கப்பட்ட சி.று.மி வை.த்திய ப.ரிசோதனைக்காக கண்டி தேசிய வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பெரிய குப்பம் பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ண மூர்த்தி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கற்பகம் என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமானது.
இவர்களுக்கு தற்போது 9 வயதில் பிரதிக்ஷா என்ற மகள் உள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சூழலில் தற்போது குழந்தைகள் கைகளில் மொபைல் போன்கள் உலாவி வருவதுபோல் பிரதிக்ஷாவும் ஸ்மார்ட் போனை பயன்படுத்தி வந்துள்ளார்.
அதில் தனக்கென இன்ஸ்டா ஐடி ஒன்றை உருவாக்கி பயன்படுத்தி வந்துள்ளார். மேலும் தற்போது அனைவரையும் ஈர்த்த ரீல்ஸ் என்ற விஷயம் அவரையும் ஈரத்தால் தினமும் ரீல்ஸ் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனாலே இவர் அந்த பகுதியில் இன்ஸ்டா பிரபலமாக அறியப்பட்டார். இதனால் சிறுமிக்கு படிப்பில் இருந்த கவனம் சிதறியிருக்கிறது. மேலும் படிக்காமல் விளையாடி வந்துள்ளார்.
அதே போல் சம்பவத்தன்றும் சிறுமி படிக்காமல் தனது பாட்டி வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்துள்ளார். இதனை கண்ட அவரது தந்தை, சிறுமியை படிக்கும்படி கண்டித்துள்ளார்.
இதையடுத்து வீட்டின் சாவியை சிறுமியிடம் கொடுத்துவிட்டு பெற்றோர் இருவரும் கடைக்கு வெளியே சென்றனர். சென்றுவிட்டு வீடு திரும்பிய பெற்றோர்கள் பூட்டியிருந்த கதவை தட்டினர்.
மேலும் தங்கள் மகளையும் கத்தி அழைத்தனர். இருப்பினும் அந்த கதவு திறக்கப்படாததால் பதறிப்போன பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது சிறுமி பிரதிக்ஷா அங்குள்ள ஜன்னல் கம்பியில் தூக்கிட்ட நிலையில் இருந்துள்ளார். இதனை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறிக்கொண்டே தங்கள் மகளை மீட்டு பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சுமார் சிறுமி பிரதிக்ஷாவுக்கு 1 மணி நேரமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் பிரதிக்ஷாவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தை படிக்க சொன்னதால் கோபப்பட்ட 4-ம் வகுப்பு படிக்கும் சிறுமி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் திருவள்ளூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இந்திராபுரம் பகுதியில் இரு தரப்புக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியைனை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை 5 மணியளவில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. இரு தரப்புக்களுக்கிடையில் ஏற்பட்ட புறா தகராறு கைகலப்பாக உருப்பெற்று சிறிய ரக வாகனத்தினால் மோதி குடும்பஸ்தரை கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் பளை பகுதியைச் சேர்ந்த உதயபாஸ்கரன் நிருபராஜ் (வயது -28) என்ற ஒரு பிள்ளையின் தந்தையை கொல்லப்பட்டுள்ளார். பளை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த குடும்பஸ்தர் மீது பின்னால் சென்ற வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே குடும்பஸ்தர் பலியாகியுள்ளார்.
சடலம் உடல் கூற்று சோதனைக்காக கிளிநொச்சி வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
க.ழு.த்.து நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட தி.ரு.ம.ண.மான இளம் பெண்ணின் கொ.லை தொ.டர்பில் மரபணு பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு பொலிஸாருக்கு நீதிமன்றம் நேற்று (28) அனுமதி அளித்துள்ளது.
பல்லேகம, எல்லேகட பிரதேசத்தில் பா.லி.ய.ல் து.ஷ்.பி.ர.யோ.க.த்.து.க்.கு உ.ட்படுத்தப்பட்டு குறித்த பெ.ண் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டி.ரு.ந்.தா.ர். இந்த வழக்கு கண்டி நீதவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது அலவத்துகொட பொலிஸாரினால் மரபணு பரிசோதனைக்கான கோரிக்கை விடுக்கப்பட்டது.
கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் அதற்கு அனுமதியளித்துள்ளது. உ.யிரிழந்த இளம் சிங்கள குடும்பப் பெண்ணை பா.லி.ய.ல் வ.ல்.லு.ற.வு.க்.கு.ள்.ளா.க்.கி கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்.த சந்தேகநபரான இராணுவச் சிப்பாயின் விந்தணுவே மரபணு பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விக்கிரகங்கள் உடைத்து அழிக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும், நீதி கோரியும் வவுனியாவில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்றது.
ஆலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இன்று (30.03) காலை 10 மணிக்கு வவுனியா கந்தசாமி ஆலயத்தில் தேங்காய் உடைத்து வழிபட்ட பின் ஆரம்பமாகிய பேரணி மணிக்கூட்டு கோபுர சந்தியை அடைந்து, அங்கிருந்து பசார் வீதி ஊடாக ஹொரவப்பொத்தானை வீதியை அடைந்து, வைத்தியசாலை சுற்றுவட்ட வீதி ஊடாக மாவட்ட செயலகத்தை சென்றடைந்தது.
வவுனியா, நெடுங்கேணி, வெடுக்குநாறி மலையில் பி்ரதிஸ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் உட்பட ஏனைய விக்கிரகங்களும் கடந்தவாரம் உடைத்தழிக்கப்பட்டிருந்தமை பெரும் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியிருந்தது.
குறித்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிப்பதுடன், இந்த விசமச் செயலை செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி குறித்த பேரணி இடம்பெற்றது.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘வெடுக்குநாறிமலை மீதான தாக்குதல் கௌதம புத்தரின் ஆன்மீகத் தோல்வி, ஈழத்தமிழனை வேரறுக்க நினைக்காதே, வெடுக்குநாறி எங்களின் இடம், மத சுதந்திரத்தை தடுக்காதே, தொல்பொருள் திணைக்களமே வெளியேறு’ போன்ற கோசங்களை எழுப்பியிருந்ததுடன், பதாதைளையும் ஏந்தியிருந்தனர்.
ஆர்ப்பாட்ட பேரணியாக சென்ற மக்கள் வைத்தியசாலை சுற்றுவட்ட பகுதியில் அமைந்திருந்த தொல்பொருள் திணைக்கள அலுவலக வளாகத்திற்குள் சென்று வாயிலை மறித்து தொல்பொருள் திணைக்களமே வெளியேறு என கோசமிட்டனர். சுமார் 15 நிமிடங்கள் வரை குறித்த வாயிலை முற்றுகையிட்ட மக்கள் பின்னர் அங்கிருந்து வெளியேறி மாவட்ட செயலகம் சென்றிருந்தனர்.
மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர அவர்களிடமும், ஜனாதிபதிக்கான மகஜர் ஜனாதிபதியின் வடக்கிற்கான இணைப்பாளரும், மேலதிக செயலாளருமான ஈ.இளங்கோவன் அவர்களிடமும் மகஜர் கையளிக்கப்பட்டதுடன் பாராளுமன்ற உறுப்பினர்களும் மகஜர் வழங்கப்பட்டது.
இதனையடுத்து இது குறித்து ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் மற்றும் அரச அதிபர் ஆகியோர் இணைந்து வாக்குறுதி வழங்கியதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து சென்றனர்.
குறித்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், சாள்ஸ் நிர்மலநாதன், சி.சிறீதரன், செ.கஜேந்திரன், தமிழரசுகட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன்,
சிவசக்தி ஆனந்தன், சி.சிவமோகன், பொதுஅமைப்புக்கள், அரசியல் கட்சிகள், சமயப் பெரியோர்கள், சமூக ஆர்வலர்கள், பல்கலைகழக மாணவர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், காணாமல்போன உறவுகளின் சங்கத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
கல்வி ராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திற்கு இன்று (29.03) திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தேசியப் பாடசாலையான வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு, பாடசாலை மாணவர்கள் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் பாடசாலை வளாகத்தை சுற்றி பார்வையிட்டார்.
தொடர்ந்து பாடசாலையின் தேவைகள் தொடர்பாக அதிபர் ஆ.லோகேஸ்வரன் மற்றும் பிரதி அதிபர்களுடன் கலந்துரையாடியதுடன், அதிபரிடம் இருந்து பாடசாலையின் தேவைகள் பற்றிய மகஜரை பெற்று மாணவர்களுடனும் கலந்துரையாடியிருந்தார்.
இதன்போது வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரனும் கலந்து கொண்டிருந்தார்.
கடலூர் மாவட்டம் மயிலாடுதுறையில் காதல் கணவர், வேறொரு பெண்ணை திருமணம் செய்ய இருந்த நிலையில், தாலிகட்டும் நேரத்தில் திருமணத்தை, மனைவி தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் 30 வயதான ராம்குமார். திருவாரூர் மாவட்டம் பேரளம் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த சபிதா என்பவரைக் காதலித்து திருமணம் செய்தார்.
கருத்து வேறுபாடு காரணமாகக் கணவன் மனைவி இருவரும் தனித்தனியாக வாழ்ந்தனர். இதனிடையே சபிதாவுக்கு தெரியாமல், மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ராம்குமார் மோசடியாக விவகாரத்து பெற்றதாகக் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து திருவெண்காடு கோயிலில் ராம்குமார் தன்னுடன் பணியாற்றும் சக பெண் காவலரை, உறவினர்களின் முன்னிலையில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார். இதுபற்றி தகவலறிந்த சபிதா, தனது குடும்பத்தினருடன் கோயிலுக்குச் சென்று திருமணத்தைத் தடுத்து நிறுத்தினார்.
அம்பத்தூர் லெனின் நகரில் வசித்து வருபவர் பகத்சிங். இவர் எஸ்ஐ.ஆக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் 45 வ் வயது முருகேசன்.இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இவருடைய மனைவி 30வயது ஜெயந்தி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களுடன் முருகேசன் தம்பி ராம்குமார், தங்கை பவானி. இவர்கள் கூட்டுகுடும்பமாக வசித்து வந்தனர்.
முருகேசன், ஆன்லைன் வர்த்தகம் மற்றும் ஷேர் மார்க்கெட்டில் பணி செய்து வந்தார். கடந்த ஒரு மாதத்துக்கும் இதில் தொடர் நஷ்டம் ஏற்பட்டு வந்தது. இவரின் செலவுகளுக்காக தம்பி ராம்குமார், தங்கை பவானி அனைவரிடமும் கடன் பெற்று சமாளித்து வந்தார்.
கடந்த 2 வாரத்துக்கு முன்பு ஆன்லைன் வர்த்தகத்தில் மீண்டும் நஷ்டம் ஏற்பட்டதால், முருகேசனுக்கு மீண்டும் கடன் ஏற்பட்டது.இதனை ஈடுகட்ட தம்பியிடம் 3 சவரனும், தங்கையிடம் 5 சவரனும், நண்பர்களிடமும் கடன் வாங்கினார்.
அடுத்தடுத்த தொடர் நஷ்டம் மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்கியது இவைகளால் முருகேசன் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். அத்துடன் கடன் கொடுத்தவர்கள், பணத்தை தரும்படி நெருக்க தொடங்கினர்.
மனைவியிடம் கூறி அவ்வப்போது வருத்தப்பட்டு கொண்டிருந்தார். இருவரும் அடிக்கடி தனியே ஏதோ ரகசியம் பேசினர். அவர்களின் வீடு அமைந்துள்ள செங்குன்றம் அடுத்த எல்லையம்மன் பேட்டைக்கு சென்று வருவதாக கூறி கணவன் மனைவி இருவரும் கிளம்பினர்.
வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பகத்சிங் முருகேசனுக்கு போன் செய்தார். போனை எடுக்காததால் அவரின் வீட்டிற்கு அருகில் இருப்பவருக்கு போன் செய்து விசாரித்தார். பக்கத்து வீட்டுக்காரர் வரும் போது பார்த்தது தான்.
அதன் பிறகு கதவு திறக்கப்படவே இல்லை எனக் கூறியதும் முருகேசன் அதிர்ச்சியடைந்தார். பகத்சிங், உடனடியாக செங்குன்றத்துக்கு சென்று நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார்.
அப்போது, கணவன், மனைவி தனித்தனியாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளுக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறைந்தபட்ச கட்டணம் 30 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் 31 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் மற்றும் பிற கட்டண திருத்தம் தொடர்பில் நாளை அறிவிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அனைத்து விதமான எரிபொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
எரிபொருள் விலை குறைப்பின் எதிரொலியாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் முச்சக்கர வண்டிக் கட்டணத்தைக் குறைக்க முடிவு செய்துள்ளது.
இந்த விடயத்தை அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்க தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
அதன்படி முதல் மற்றும் இரண்டாவது கிலோமீட்டர்களுக்கு கட்டணத்தைக் குறைக்க அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இன்று முதல் முதலாவது கிலோமீட்டருக்கு 100 ரூபாவும், இரண்டாவது கிலோமீற்றருக்கு 80 ரூபாவும் என கட்டணம் அறவிடப்படவுள்ளது.
இதற்கு முன்னதாக முச்சக்கரவண்டி கட்டணமானது முதலாவது கிலோமீட்டருக்கு 120 ரூபாவாகவும், இரண்டாவது கிலோமீற்றருக்கு 100 ரூபாவாகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
தலைமன்னாருக்கு நியமனம் பெற்று சென்ற சிங்களப் பெண்ணான மருத்துவர் பாக்யா வீரவர்தன அவர்கள் கடந்துச் சென்ற பாதை மற்றும் தமிழ் மக்கள் அவர் மீது வைத்த மதிப்பை பற்றி அவரே தெரிவித்த ஒரு கதை.
மருத்துவர் பாக்யா வீரவர்தன நியமனம் பெற்று தனது சொந்த ஊரை விட்டு 328 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தலைமன்னாருக்கு அப்பா மற்றும் அப்பாவுடன் சென்றார்.
நடப்பட்ட இடத்தில் பூக்கும் (Bloom where you are planted) கோட்பாட்டுடன் வாழும் தலைமன்னார் என்றதும் ஒன்றும் பெரிதாகத் தோன்றவில்லை; மொழித் தடை மாத்திரமே அவருக்கு இருந்துள்ளது.
தலைமனனாருக்கு செல்வதற்கு முன் எல்லாவற்றையும் ஏற்பாடு செய்ய எனக்கு இருந்தது இரண்டே நாட்கள் மட்டுமே அவருக்கு இருந்துள்ளது. அப்பாவுடன் முழு நகரத்தையும் ஒரு சுற்று சுற்றி சமைக்கும் பாத்திரங்கள், கரண்டி, முட்கரண்டி, வாளி, தட்டு முட்டு சாமான்கள் என அனைத்தையும் வாங்கியது தலைமன்னார் என்றதும் எத்தியோபியாக்கு போவதுபோல் இருந்ததால்தான்.
ஒரு லாரி கொள்ளக்கூடிய சாமான்களை காரில் நிறைத்துக் கொண்டு விடியற்காலை 3:00 மணிக்கு புறப்படும் பொழுது ‘ பேசாம ஜேபுரவில் (ஜயவர்தனபுர வைத்தியசாலை) சேர்ந்து கொள்ளாமல், என்ன மண்ணாங்கட்டிக்கு தலைமன்னாருக்கு போகணும்’ என்று தோன்றாமல் இல்லை.
ஆனால் இதுதான் எனக்கு உரிய இடம், எனக்கு விதிக்கப்பட்ட இடம் என்று மனதைத் தேற்றிக் கொண்டு, ஒருவித போராட்ட மனதுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்த எனக்கு பாதையின் இருபுறமும் தெரிந்த பனைமரங்கள் ஒரு விசித்திரமான உணர்வைத் தந்தன.
வேலையில் சேர்ந்த முதல்நாள் ஒரு வித்தியாசமான உணர்வு என்னை ஆட்கொண்டது. எல்லோரும் என்னை வேற்றுகிரகவாசி போல் பார்த்தார்கள். தொடர்ந்து பெற்றோரை அங்கு வைத்துக் கொள்ள முடியாததால் மூன்று நாட்கள் ஓட்டலில் தங்கியிருந்துவிட்டு மருத்துவமனை விடுதிக்கு இடம் பெயர்ந்தேன்.
அம்மாவை ஊரில் கொண்டுபோய் விட்டுவிட்டு திரும்பிவந்து என்னுடன் தங்கிவிட விரும்பினார் அப்பா; முடிந்தால் என்னை திரும்ப கூட்டிக்கொண்டு போக. பணியாளர்கள் உடைந்த சிங்களத்தில் தட்டுத்தடுமாறி என்னுடன் பேசத் தொடங்கினார்கள்.
நானும் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் பழகி, மொழித் தடை நீங்கிய போது, நான் அந்த ஊரை நேசிக்க தொடங்கினேன். அந்த அப்பாவி மக்கள் மீது எனக்கு மேலும் மேலும் இரக்கமே தோன்றியது.
கடலுக்குச் சென்று எதையாவது பிடித்துக்கொண்டு வந்து ஒவ்வொரு நாளையும் ஓட்டுவதைத் தவிர அவர்களுக்கு பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இருக்கவில்லை. வாழ்க்கை விசித்திரமானது. அது நம்மை நாம் நினைக்காத இடங்களில் கொண்டு போய் நிறுத்திவிடும்.
அந்த மக்களைப் பார்த்து நான் கொஞ்சம் கொஞ்சமாக என் மனதை தேற்றிக்கொண்டேன். பல்லாண்டு காலம் போரில் அடிபட்ட அவர்கள், சிங்களவர்களை வினோதமாக நோக்கினார்கள். எங்களை நேசிக்கா விட்டாலும், எங்கள் மீது அவர்களுக்கு வெறுப்பு இருக்கவில்லை.
தினம் தினம் வெயிலில் காய்ந்து, மழையில் நனையும் அவர்களின் அவல வாழ்க்கையின் சோகத்தை மேலும் மேலும் அறிந்து கொண்டபோது நான் அவர்களுடன் இன்னும் நெருக்கமாக விரும்பினேன்.
மண்ணெண்ணெய் விளக்கெரியும் பனையோலை குடிசையின் கூரையின் ஓட்டை வழியாக தெரியும் வானத்தைப் பார்த்து சிரிப்பதன்றி அழுவதற்கு அவர்களிடம் கண்ணீர் இருக்கவில்லை.
நான் வாழ்க்கையில் கற்றிருந்த பெரிய பாடம் எப்போதும் பயம் இருந்தால் அதனைக் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பது. எவ்வளவு துயர் வந்தாலும் அதன் மத்தியில் தளராமல் இருப்பது எப்படி என்பதை நான் அங்கு கற்றுக் கொண்டேன்.
நாம் எல்லோரும் மனிதர்கள். நம் மனங்களில் ஏன் இந்த இன வேற்றுமை. நானும் அவர்களில் ஒருத்தி என்று எண்ண முயன்றேன். வெசாக் மாதத்தின் ஆரம்பத்திலேயே வீடு சென்று திரும்பும்போது வெசாக் கூடு செய்வதற்கு சிறு மூங்கில் கிளைகளை வெட்டி எடுத்து வந்தேன்.
எல்லோரும் சேர்ந்து தாமரை வடிவில் மூன்றும், சாய்சதுர வடிவில் பத்தும், பெரிய வெசாக் கூடு ஆறு என மருத்துவமனைக்கு முற்றத்தில் இருந்த வேப்ப மரத்தில் தொங்க விட்ட போது எல்லோருடைய முகங்களிலும் அத்தனை மகிழ்ச்சி.
வெசாக் தினத்தன்று வண்ண வண்ண மின் விளக்குகளை தொங்கவிட்டு அதை பார்க்க முழு ஊரும் சேர்ந்து வந்தபோது எனக்கு ஏற்பட்டது விவரிக்க முடியாத ஒரு உணர்வு.
அங்கு இருந்த இரண்டு வருடங்களும் அதை தொடர்ந்து செய்தேன். வெசாக் தினத்தன்று பணியாளர்கள் அனைவருக்கும் உணவு பொதி கிடைத்ததால் மருத்துவமனை உணவை பார்சல் செய்து ஊரில் உள்ள ஏழை மக்களுக்கு வினியோகிக்க தீர்மானித்ததை இன்று நினைத்தாலும் மகிழ்ச்சி பொங்குகிறது.
அதன் பிறகு என்னையும் முந்திக்கொண்டு எஞ்சிய உணவை ஏழைகளுக்குக் கொடுக்க பார்சல் செய்வதில் பணியாளர்கள் முனைப்பாக இருந்தார்கள். வேசாக், பொசொன் காலங்களில் நடத்தப்படும் தான கூடங்கள் (தன்சல்) பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் அவர்கள் கற்றுக் கொண்டார்கள்.
வெசாக், பொசொன் மற்றும் பேரிடர் காலங்களில் உலர் உணவு பொதிகள் செய்ய முனைப்புடன் எனக்கு உதவினார்கள். அனைத்து சமூக சேவைகளுக்கும் தங்களால் இயன்றளவு உதவினார்கள், பங்குபற்றினார்கள்.
நத்தார் பண்டிகையின்போது முழு மருத்துவமனையும் ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே அலங்கரித்து, கிறிஸ்மஸ் தின விருந்துக்கும், பொங்கல் பண்டிகையின் போது கோலமிட்டு பூஜை செய்து எல்லோரும் சேர்ந்து பொங்கல் உண்ணவும், சரஸ்வதி பூஜை, மடு தேவாலய புனித யாத்திரை என அனைத்துக்குமென நாங்கள் எல்லோரும் ஒன்றுபட்டோம்.
ஜனவரி முதல் நாளன்று பால் பொங்கி, மேசை நிறைந்த பாற்சோறை கட்டசம்பலுடன் எல்லோரும் சேர்ந்து உண்டோம். அன்று என்னுடன் சேர்ந்து சிங்கள சடங்குகளை செய்ய அவர்கள் தயங்கவில்லை. வந்திருந்த நோயாளிகளுக்கும் பாற்சோறு பரிமாற நாங்கள் மறக்கவில்லை. மருத்துவமனை எனது வீடானது. பணியாளர்கள் எனது உறவினர்கள் ஆனார்கள்.
கோவில் மற்றும் தேவாலயத்திற்கு யார் வந்தாலும் அவர்களை சாதி, மத, இன பேதமின்றி குருமார்கள் ஆசீர்வதித்தார்கள். எங்கிருந்தாலும் ஓடி வந்து எனது பூஜையை முதலில் செய்யுமளவுக்கு அந்த இதயங்கள் எனக்கு நெருக்கமாயின.
எந்த வேறுபாடுமின்றி மடு மாதவினுடைய, அம்மனுடைய அருள் எனக்குக் கிட்டியது. அதுபோல்தான் அங்கு உருவான சில சகோதர உறவுகள். என்னை தங்களது சொந்த சகோதரியைப் போல், மகளைப் போல் அன்பு செலுத்திய, நான் ஊருக்கு புறப்படும்போது எப்படி செல்கிறேன் என்று கவனித்துப் பார்த்துக் கொண்ட, ஊருக்கு செல்ல முடியாமல் போகும்போது மனநிலை சரியில்லாமல், முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டு மன அழுத்தம் ஆகியிருக்கும் என்னை அந்த தீவு வாழ்க்கையில் நான் சலிப்புறாமல் இருக்க அனைத்தையும் செய்த அந்த இனிமையான பந்தங்கள் என்றென்றும் என் நினைவேடுகளில் நிறைந்திருக்கும்.
அந்த உறவுகள், நட்புகள் என்றும் தொடரும். என்னையறியாமல் இரண்டு வருடங்களும் 7 மாதங்களும் ஓடி விட்டன. எனது இடமாற்றம் குறித்து அறிந்ததும் எனது பணியிடமாற்றத்தை நிறுத்தக் கோரி ஊர் மக்கள் ஒன்று திரண்டு மனுவில் கையெழுத்திட்டதன் மூலம் எனது கடமையை சரிவர செய்திருக்கிறேன் என்பது எனக்கு நிரூபணமானது.
சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், இறுதியாக மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள், கண்ணீர் நிறைந்த விழிகளுடன் இரு கைகளையும் கூப்பி என்னை ஆசீர்வதித்தபோது உடைந்து போனேன்.
சிங்களப் பெண்ணான என்னை இந்த தமிழ், முஸ்லிம் மக்கள் இவ்வளவு நேசித்திருக்கிறார்கள் என்று நான் அறிந்திருக்கவில்லை. இந்த ஊரில் வைத்தியரின் பணிகளையும் தாண்டி சில தொண்டுகளை செய்யவும், இந்த மக்களுக்கு சிறிதளவாவது நிவாரணம் அளிக்கவும் முடிந்ததையிட்டு நான் என்றும் மகிழ்ச்சியடைவேன்.
அதற்கிடையில் யோகச்சந்திரனுடைய பிள்ளைகளின் மற்றும் வனிதாவின் தலை விதிகளை மாற்ற முடிந்தது விசேடமான விடயங்கள். அந்த முகங்களில் நான் கண்ட எதிர்பார்ப்பு என்றும் என் நினைவில் அழியாது இருக்கும்.
அன்பான வடக்கிலும் தெற்கிலும் வாழும் நாம் அனைவரும் மனிதர்களே என்று எனக்கு சொல்லித்தந்த அந்தப் பனையோலை வேலிகளின் விளிம்பில் உருவான அந்த பந்தம் என்றென்றும் என் இதயத்தில் உயிர்த்திருக்கும். என சிங்கள பெண் மருத்துவர் பாக்யா வீரவர்தன தலைமன்னாரில் உள்ள தமிழ் மக்களின் குணங்கள் பற்றி பதிவிட்டுள்ளார்.
அக்கரைப்பற்று சுவாட் (SWOAD) அமைப்பின் தலைவரும் அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற இணையத்தின் (NGOs Consortium) தவிசாளரும், பிரபல சமூக செயற்பாட்டாளருமான வடிவேல் பரமசிங்கம் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருக்கோவில் தம்பட்டையைச் சேர்ந்த வடிவேல் பரமசிங்கம் கொழும்பு செல்லும் வழியில் செவனப்பிட்டியில் நள்ளிரவு (29 ) இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தார்.
வடிவேல் பரமசிங்கம், சமூகங்களுக்கிடையிலான இன நல்லுறவைக் கட்டியெழுப்புவதில் பெரும் பங்காற்றியவர், நல்லுள்ளம் கொண்டவர் ஒரு நண்பனாய், உடன் பிறவா சகோதரனாய், பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களில் அமைப்புக்களில் சமூக பற்றுள்ள மக்கள் தொண்டனாய் செயற்பட்டவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு , மென் சுபாவம் நிறைந்த சிறந்த பண்பாளர், சமூகசிந்தனாவாதி. அமைதியாக அனைவருக்கும் மதிப்பளித்து பேசுபகின்ற நல்ல சுபாவம் கொண்டவர் எனவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் அவரது உயிரிழப்பு இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
தங்காலை, வெலியார, நெத்தோல்பிட்டிய பிரதேசத்தில் கொடூரமான முறையில் கூரிய ஆயுதத்தால் குத்தி படுகொலை செய்யப்பட்ட விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர் மரணம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
தங்காலை – நெடோல்பிட்டிய வெலியாரே பகுதியைச் சேர்ந்த 30 வயதான ஆர்.எம். தீபஷிகா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தங்காலை பிரதேச சபையின் வேட்பாளரான ‘டேனி பேபி’ என அழைக்கப்படும் ஜயவர்தன பத்திரனகே சரத் என்பவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் பணிபுரியும் சந்தேகநபரின் தோழி ஒருவருக்கு அரசாங்கத்திடம் இருந்து இலவச உரம் பெற்றுத்தருமாறு கடிதம் வழங்காத காரணத்தினால் குறித்த பெண்ணின் கழுத்தை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கொலையின் போது இறந்த பெண்ணின் சித்தி டி.ஜி.தயாவதியும் உடன் இருந்ததாகவும், கொலை தொடர்பில் பொலிஸாரிடம் நேரில் கண்டவற்றினை வாக்குமூலம் வழங்கியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்……,
நானும் எனது மகளும் பேருந்துக்காக சென்றபோது, ’டேனி பேபி’ என்பவர் பாதையில் அமர்ந்திருந்தார். அவர் எங்களைப் பார்த்துவிட்டு எங்கள் முன்னால் வந்து உடனடியாக இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து மகளின் கழுத்தில் குத்தினார்.
நான் அதை தடுக்க முயன்றபோது, என்னையும் குத்த முயற்சித்தார். மகள் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.’டேனி பேபி’ மகளின் கழுத்தையும், தலையையும் முன்னும் பின்னுமாக தள்ளி, வெட்டினார்.
தரையில் விழுந்த மகள் கழுத்தை அறுத்தவுடன் வலியால் துடித்தார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக்கூட யாரையும் அனுமதிக்காமல், கத்தியை கையில் ஏந்தியபடி டேனி பேபி, அருகில் வந்தவர்களை மிரட்டினார்.
இதனை தொடர்ந்து, தங்காலை பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் இருவர் அந்த இடத்திற்கு வருகை தந்து பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரியின் உதவியுடன் பல பிரயத்தனத்தின் பின்னர் டேனி பேபி என்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடற்றொழிலாளரான டேனி பேபி, உரத்தை இலவசமாக பெற்றுக்கொள்ளும் கடிதம் கேட்டு விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தரான தீபஷிகா லக்ருவானி விஜேதாசவை பல சந்தர்ப்பங்களில் சந்தித்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த நபர் (26) இரவு இரண்டு சந்தர்ப்பங்களில் பெண் வசிக்கும் நெதொல்பிட்டிய வெலி ஆரை வீட்டுக்குச் சென்று உரம் பெறுவதற்காக கடிதத்தை கோரியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மின்சாரம் தாக்கிய தாய் உயிரிழந்த நிலையில், காரியம் முடிந்த உடனே மகளுக்கு திருமணம் செய்துள்ள கண்கலங்க வைத்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வசித்து வரும் சண்முகவேல் மற்றும் சாந்தி தம்பதிகள்.
இவர்களுக்கு 3 மகள்கள் உள்ள நிலையில், மூத்த மகளுக்கு அதே பகுதியை சேர்ந்த இளைஞருக்கு திருமணம் நிச்சயம் செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலையில் மணப்பெண்ணின் தாயார் சாந்தி கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டிருந்த தருணத்தில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனால் மொத்த திருமண வீடும் சோகத்தில் ஆழ்ந்த நிலையில், சாந்தியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு பின்பு இறுதி காரியம் முடிந்துள்ளது. பின்பு மகளின் திருமணத்தினை எந்த தடங்களும் இல்லாமல் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. தாய் இறந்த துக்கம் தாங்காமல் மணமக்களுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், உறவினர்கள் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.