மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக பட்டதாரி மாணவி.. விசாரணையில் வெளியான தகவல்!!

இரத்தினபுரியில்..

இரத்தினபுரி பகுதியில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட இளம் யுவதியின் மரணம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இரத்தினபுரி, நிரியெல்ல பகுதியைச் சேர்ந்த சச்சினி ஜினாதாரி என்ற 25 வயதுடைய இளம் யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றும் குறித்த யுவதி பணி நிமித்தமாக இரத்தினபுரிக்கு பேருந்தில் செல்வதற்காக காலை 06.30 க்கு வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த யுவதியின் காதலன் வழமைப்போன்று காலை அழைப்பினை மேற்கொண்ட போது தொலைப்பேசி இயங்காத காரணத்தினால் உடனடியாக யுவதியின் தாயாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து நீண்ட நேர தேடுதலின் பின்னர் சச்சினி குறித்த தகவல் கிடைக்காததால், குடும்பத்தினர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் பின்னர் யுவதி வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த யுவதி ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பட்டதாரி என்பதுடன் மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் மூத்த மகளாவார். இரத்தினபுரி பதில் நீதவான் சுமித் ஆனந்தவினால் மரணம் தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக சடலம் சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது கொலையாக இருக்கலாம் எனவும் கொலைக்கு முன்னர் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் யுவதியின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி மற்றும் அலபாத்த பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

14 ஆண்டுகளாக சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்படும் இளம்பெண்!!

இங்கிலாந்தில்..

இங்கிலாந்தில் லண்டனில் வசித்து வருபவர் 30 வயது இளம்பெண் எல்லே ஆடம்ஸ் . இவர், தனது வாழ்க்கை அனுபவத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். 2020வரை ஆரோக்கியமாக வாழ்ந்த இவர் அதன் பிறகு திடீரென ஒரு நாள் இரவு வழக்கம் போல தூங்கி மறுநாள் எழுந்து கழிவறைக்கு சென்றுள்ளார்.

ஆனால், அவருக்கு சிறுநீர் வரவில்லை. சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தோன்றினாலும் அவருக்கு சிறுநீர் வெளியேறவில்லை. பதட்டத்தில் உடல் சூடாகி விட்டது. நிறைய தண்ணீர், பழச்சாறு அருந்தலாம் என நினைத்து நிறைய நீராகாரங்களாக பருகி வந்தார்.

எதுவும் சரிப்பட்டு வரவில்லை. மருத்துவர்களிடம் காட்டி பரிசோதித்த போது அவரது சிறுநீர் பையில் சுமார் ஒரு லிட்டர் சிறுநீர் தேங்கி இருப்பதாக மருத்துவர்கள் பரிசோதித்து கூறியுள்ளனர்.

சராசரியாக ஒரு பெண்ணால் 500 மிலி சிறுநீர், ஆண்ணால் 700 மிலி சிறுநீரை அடக்கி வைக்கலாம். ஆனால் இவருடைய சிறுநீரகத்தில் ஒரு லிட்டர் சிறுநீர் இருந்தும் அது வெளியேறவில்லை.

உடனடியாக மருத்துவர்கள் டியூப் செலுத்தி செயற்கை முறையில் சிறுநீரை வெளியேற்றினர். ஏதோ பதற்றம் காரணமாக தான் இந்த பிரச்சனை வந்துள்ளது. தினசரி உடற்பயிற்சி, யோகா , சரியான உணவு, சரியான அளவில் தூக்கம் இருந்தால் சரியாகி விடும் என மருத்துவர்கள் ஆலோசனை கூறினர்.

ஆனால் இதுவரை பெண் எல்லேவுக்கு இந்த பிரச்சனை தீரவில்லை. அதன் பிறகு ஒவ்வொரு முறையும் டியூப் கருவி மூலம் செயற்கை முறையில் தான் சிறுநீர் வெளியேற்றப்பட்டுவருகிறது.

தற்போது இயற்கையாக சிறுநீர் கழித்து 14 மாதங்கள் கடந்த நிலையில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது தான் மருத்துவ பரிசோதனையில் இவருக்கு Fowler’s syndrome என்ற அரிய வகை நோய் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த அரிய நோய் கொண்டவர்களால் சிறுநீர் பை நிரம்பினாலும் இயற்கையாக சிறுநீர் கழிக்க முடியாது, குறிப்பாக இளம் பெண்களுக்கு தான் இந்த அரிய நோய் வருவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதனால் பாதிக்கப்பட்ட எல்லே ஆடம்ஸ் கடந்த 14 மாதங்களாக சிறுநீர் கழிக்கமுடியாமல் அவதிபட்டு வந்துள்ளார். பின்னர் இவருக்கு சிறுநீர் நீக்கக் குழாய் சிகிச்சை வழங்கப்பட்டு அதன் மூலமாக சிறுநீர் கழிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

நன்றாக சென்றுகொண்டிருந்த வாழ்க்கை திடீரென மாறிப்போனதாக கூறும் எல்லே, இந்த பிரச்சனையை தவிர மற்ற எந்த உடல் நல பிரச்சனையும் தனக்கு இல்லை என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

இவர் சிறுநீர் நீக்கக் குழாய் மருத்துவ முறைப்படி தனது சிறுநீரை வெளியேற்றி வருகிறார். இவருக்கு Sacral Nerve Stimulation என்ற சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இந்த பிரச்சனையை கட்டுக்குள் வைக்கலாம். இதன் தீவிரத்தை குறைக்க முடியுமே தவிர சரிசெய்ய முடியாது.

ஆரம்ப காலத்தை விட சிகிச்சைக்குப் பின் தற்போது பரவாயில்லை என்று மனம் தளராமல் நம்பிக்கை கொண்டுள்ளார்.இவரது பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கணவரை ஆள் வைத்து தாக்கிய துணை நடிகை.. உதவியாக இருந்த ஆண் நண்பர்!!

துணை நடிகை..

நடிக்க அனுமதி வழங்க மறுத்த கணவரை, நண்பரின் உதவியோடு ஆள் வைத்து அடித்துள்ள துணை நடிகையை காவல்துறை கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நல்லிக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் (42).

தனியார் நிறுவன ஊழியராக பணிபுரிந்து வரும் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரம்யா (36) என்ற பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் என 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த சூழலில் ரமேஷ் அடிக்கடி ராம்யாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததால் கணவரை விட்டு பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது அவருக்கு சினிமாவில் நடிக்க ஆசை வந்துள்ளது.

எனவே அவர் இதற்காக வாய்ப்பு தேடி அழைத்துள்ளார். அப்போது கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த டேனியல் சந்திரசேகர் என்பவரது உதவியை கேட்டுள்ளார்.

பின்னர் அவரும் ரம்யாவுக்கு வாய்ப்புகள் வாங்கி கொடுத்துள்ளார். அதன்படி சென்னை சென்ற அவர் தற்போது ஒரு சில சீரியல்களில் துணை நடிகையாக இருந்து வருகிறார்.

இந்த சூழலில் ரம்யாவின் தாய் அறிவுறுத்தலின் பேரில் மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளார் ரம்யா. எனவே மீண்டும் கோவை வந்த ரம்யா அவருடன் வாழ தயாரானார். ஆனால் இனி நீ நடிக்க கூடாது என்று கூறி ரம்யாவுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளார் அவரது கணவர் ரமேஷ்.

இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த ரம்யா இதுகுறித்து தனது நண்பர் டேனியலிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது உதவியோடு தனது கணவரை மிரட்ட எண்ணியுள்ளார்.

அதன்படி சம்பவத்தன்று ரமேஷ், ரம்யா இருவரும் இரு சக்கர வாகனத்தில் ஜமீன்முத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் அவர்களை வழிமறித்தனர்.

பின்னர் ரமேஷை மட்டும் கடுமையாக தாக்கினர். அதோடு ரமேஷின் மேல் பிளேடால் கீறலும் போட்டுவிட்டு அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டனர் மர்ம கும்பல். இதையடுத்து மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொண்ட ரமேஷ், இதுகுறித்து காவல்துறையிலும் புகார் அளித்தார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ரமேஷின் மனைவி ரம்யாதான் இந்த சம்பவத்துக்கு காரணம் என்று தெரியவந்தது.

இதையடுத்து ரம்யா, அவரது நண்பர் டேனியல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இருவரையும் கைது செய்தனர். நடிக்க அனுமதி வழங்க மறுத்த கணவரை, நண்பரின் உதவியோடு ஆள் வைத்து அடித்துள்ள துணை நடிகையின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திடீரென காணாமல் போன குழந்தைகள்.. காதலுக்காக தாய் செய்த கொடூரம்!!

உத்தர பிரதேசத்தில்..

காதலுக்காக தனது 2 குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்து கால்வாயில் தூக்கி வீசிய கொடூர தாயின் செயல் உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் மீரட் பகுதியில் அருகே கிராமம் ஒன்று உள்ளது. இங்கு நிஷா – சாஹித் தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மிராப் என்ற 10 வயது மகனும், கைனன் என்ற 6 வயது மகளும் உள்ளனர்.

இவர்கள் இருவரும் அங்கிருக்கும் தொடக்கப்பள்ளி ஒன்றில் படித்து வருகின்றனர். இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாலை நேரத்தில் வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்த இரன்டு குழந்தைகளையும் திடீரென காணவில்லை.

இதனால் பதறிப்போன தந்தை குழந்தைகளை அங்கும் இங்கும் தேடினார். ஆனால் அவர்கள் எங்கும் கிடைக்கவில்லை. இதனால் சாஹித், இதுகுறித்து உள்ளூரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். அப்போது அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். ஆனால் குழந்தைகள் அந்த பகுதியில் விளையாடியதாக எதுவும் அதில் பதிவாகவில்லை. இதனால் குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனரா என்ற கோணத்தில் விசாரித்தனர்.

தொடர்ந்து பெற்றோர்களின் செல்போன்களை வாங்கி பறிமுதல் செய்தனர். அவர்கள் அழைப்புகள் எல்லாவற்றையும் சோதனை செய்தபோது தாய் நிஷாவுக்கு, அந்த ஊர் கவுன்சிலர் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது. இதையடுத்து தாயிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல உண்மைகள் தெரியவந்தது.

அதாவது நிஷாவுக்கும், உள்ளூர் கவுன்சிலரான சவுத் பவுஜி என்பவருக்கும் இடையே காதல் இருந்துள்ளது. இந்த காதலால் இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர்.

மேலும் நிஷா, தான் தனது கணவனை விட்டு வந்துவிடுவதாகவும் கூறியுள்ளார். ஆனால் சவுத் பவுஜி, நிஷாவை மட்டும் ஏற்றுக்கொள்வதாகவும், குழந்தைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார்.

இதனால் வேறு வழியின்றி தனது குழந்தைகளை கொலை செய்ய எண்ணியுள்ளார் தாய் நிஷா. அதன்படி சம்பவத்தன்று குழந்தைகளை பக்கத்து வீட்டுக்காரர்கள் 4 பேர் உதவியோடு கடத்தியுள்ளார் நிஷா. முதலில் அவர்களுக்கு மயக்க ஊசி போட்டு, பின்னர் அவர்களது கழுத்தை அறுத்துக்கொலை செய்துள்ளார்.

மேலும் சடலங்களை மறைப்பதற்காக ஒரு பெட்டியில் வைத்து, காரில் கொண்டு சென்று சிறிது தூரத்தில் உள்ள கால்வாய் ஒன்றில் வீசியுள்ளார். இதையடுத்து வீட்டுக்கு வந்த நிஷா, வெளியே விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் காணவில்லை என்று கணவரிடம் தெரிவிக்க அவர் போலீசில் புகார் அளித்தார்.

இவை அனைத்தும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கொலை செய்த தாய் நிஷா, இந்த சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த காதலன் சவுத் பவுஜி, பக்கத்து வீட்டக்காரர்கள் 4 பேர் என மொத்தம் 6 பேரை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். காதலனுடன் வாழ்வாதற்காக பெற்ற குழந்தைகளை கொடூரமாக கொலை செய்துள்ள தாயில் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு குன்றத்தூரில் உள்ள அபிராமி என்ற பெண், பிரியாணி கடைக்காரரை காதலித்ததால் தனது இரண்டு குழந்தைகளை கொடூரமாக கொன்றதோடு, போலீஸ் வாக்குக்கமூலத்தில் தனக்கு பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும் என்று கூறியது தமிழ்நாட்டில் அப்போது பெரிய அதிரவலையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

தொழிலதிபருக்கு காதல் வலை வீசி கார், பணம் கொள்ளை : கில்லாடி ஆசிரியைக்கு நேர்ந்த பரிதாபம்!!

கோவையில்..

திருமணம் செய்ததை மறைத்து மும்பை தொழில் அதிபரை ஏமாற்றி பணம் பறித்த கோவை பள்ளி ஆசிரியை மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் ராஜன் என்பவரின் மகன் ராஜேஷ் (வயது 44). இவர் செம்பூர் ரயில் நிலையத்தில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

கடந்த 2020ம் ஆண்டு லோரேன் என்ற பெண்ணுடன் அவரது உறவினர் மூலமாக நட்பு ஏற்பட்டுள்ளது. அதன் பின்பு லோரேனின் மூலமாக அவரது சகோதரி கோவை போத்தனூர் சத்ய சாய் நகர் பகுதியில் வசித்து வரும் ஹேசல் ஜேம்ஸ் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம், பேஸ்புக் புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மாடர்னாக ஆடை அணிந்து வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை ஹேசல் ஜேம்ஸ் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்ததும் ராஜேஷ்க்கு அவரை பிடித்துள்ளது.

இதை தொடர்ந்து அவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் ஹேசல் ஜேம்ஸ் தான் திருமணம் ஆகாத பெண் என்று கூறி ராஜேசுடன் பழகி வந்துள்ளார்.

சிறிது நாட்கள் கழித்து தனக்கு திருமணமாகிவிட்டது என்றும் கணவர் இறந்து விட்டதாகவும் கூறியிருக்கிறார். இருந்த போதும் ராஜேஷ், அப்பெண்ணுடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார்.

அந்த சமயத்தில் திடீரென ஒரு நாள் ஹேசல் ஜேம்ஸ் தனது கணவர் இறக்கவில்லை என்றும் விவாகரத்து வழக்கு கோவை நீதிமன்றத்தில் இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.

ஆனாலும் அப்பெண்ணை விட்டு விலக மனமில்லாத ராஜேஷ், ஹேசல் ஜேம்ஸின் பேச்சில் மயங்கி அது ஒரு விஷயமே இல்லை என்று கூறி இருக்கிறார். மேலும் தனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

தந்தையுடன் வசித்து வருவதால் தனக்கு நிறைய கஷ்டங்கள் இருப்பதாக கூறி இருக்கிறார். இதை நம்பிய ராஜேஷ் 90 ஆயிரம் ரூபாயை கடனாக கொடுத்துள்ளார். தொடர்ந்து ஹேசல் ஜேம்ஸ் தான் சொந்தமாக தொழில் செய்வதாகவும் அதற்கு உதவி செய்யுமாறு கூறியிருக்கிறார்.

இதனால் ராஜேஷ் 20 லட்சம் ரொக்கம், அழகு சாதன பொருட்கள், விலை உயர்ந்த செல்போன், ஸ்கோடா கார் ஆகியவற்றை வாங்கி கொடுத்துள்ளார். பொருட்கள், பணத்தை வாங்குவதில் மிகவும் கவனமாக செயல்பட்டு ஒவ்வொரு பொருளையும் தனது ஒவ்வொரு உறவினர் பெயர்களில் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் ஹேசல் ஜேம்ஸ்க்கு ராணுவ வீரர் ஜஸ்டின் என்பவரிடம் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. மேலும் இதே போல பல ஆண்களிடம் ஹேசல் ஜேம்ஸ் பழகி வந்தது ராஜேஷ்க்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் இது குறித்து அப்பெண்ணிடம் கேட்டுள்ளார்.

அப்போது தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுவது நல்லது இல்லை என்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடக்கூடாது என்றும் ஹேசல் ஜேம்சிடம் கூறியிருக்கிறார்.

இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஹேசல் ஜேம்ஸ் தொழிலதிபர் ராஜேஷ் உடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் தன்னுடைய பணத்தை திருப்பித் தருமாறு ராஜேஷ் கேட்டுள்ளார்.

அப்போது அப்பெண் பணத்தை திருப்பி தர முடியாது என்றும், பணத்தை திருப்பி கேட்டால் தான் இரண்டு குழந்தைகளை கொன்று விட்டு தற்கொலை செய்து கொள்வேன் என கூறி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஷ் மீண்டும் சில நாட்கள் கழித்து தனது பணத்தை கேட்டுள்ளார். அப்போது ஹேசல் ஜேம்ஸ் 20 லட்சம் ரூபாய் பணத்தை உனக்கு கொடுப்பதற்கு பதில் 2 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்தால் உன்னை கொல்வதற்கு ஆள் இருக்கிறது என கூறி மிரட்டி இருக்கிறார்.

இதனால் ராஜேஷ் அச்சடைந்து கோவைக்கு வந்து மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனிடம் இது குறித்து புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போத்தனூர் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மும்பை தொழிலதிபர் ராஜேஷிடம் பழகி மோசடி செய்த ஹேசல் ஜேம்ஸ் குறித்து பல்வேறு தகவல்கள் கிடைத்தன. ஹேசல் ஜேம்சின் தந்தை ஜேம்ஸ் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராவார்.

தாய் கோவையில் உள்ள பிரபல பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். ஹேசல் ஜேம்ஸ் கல்லூரியில் படிக்கும் பொழுது கோவையைச் சேர்ந்த காவல் அதிகாரி ஒருவரின் மகனுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளது. தொடர்ந்து ஹேசல் ஜேம்ஸ் குடும்பத்தார் காவல் அதிகாரியின் மகனை மதம் மாறக் கூறியுள்ளனர்.

இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வசித்து வருகின்றனர். மேலும் இவர்களுடைய விவாகரத்து வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஹேசல் ஜேம்ஸ் கோவையில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிந்து அங்கிருந்து இவரது நடவடிக்கை காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு காவல் அதிகாரியின் மகன் தனது குழந்தையை பார்ப்பதற்காக போத்தனூரில் உள்ள ஹேசல் ஜேம்ஸ் வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில் அங்கிருந்தவர்கள் காவல் ஆதிகாரியின் அதிகாரியின் மகன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி அவரிடம் இருந்து செல்போன் மற்றும் தங்க நகைகளை பறித்துக் கொண்ட வழக்கு கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் மும்பை தொழிலதிபருடன் பேசி பழகி 20 லட்சம் ரூபாய் வரை பணம், கார் உள்ளிட்ட பொருட்களை வாங்கி ஹேசல் ஜேம்ஸ் ஏமாற்றியுள்ளார். மேலும் கோவையைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜஸ்டின் என்பவருடன் பழகி அவரை திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் ஹேசல் ஜேம்ஸ் தனது முதல் கணவரை கொலை செய்ய திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து போத்தனூர் காவல் துறையினர் மும்பை தொழிலதிபர் ராஜேசை ஏமாற்றியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட காரணங்களுக்காக பள்ளி ஆசிரியை ஹேசல் ஜேம்ஸ் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹோட்டலில் சடலமாக கிடந்த இளம் நடிகை : மரணத்திற்கு முன் போட்ட வீடியோவால் குழப்பம்!!

அகன்ஷா துபே..

பிரபல இளம்நடிகை அகன்ஷா துபே தனது அறையில் தூக்கிட்ட நிலையில் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1997-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி அன்று உத்தப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில் பிறந்த நடிகை அகன்ஷா துபே டிக் டாக் மூலம் சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர்.

அதனைத் தொடர்ந்து இன்ஸ்டாவின் வீடியோகளை பதிவிட்டு வந்த அவரை இன்ஸ்டாகிராமில் சுமார் 1.7 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள்.

16 வயதிலேயே மாடலாக அறிமுகமான இவர், 17 வயதில் ‘மேரி ஜங் மேரா ஃபைஸ்லா’ என்ற போஜ்புரி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ‘முஜ்சே ஷாதி கரோகி’, ‘வீரோன் கே வீர்’, ‘ஃபைட்டர் கிங்’ உள்பட பல போஜ்புரி படங்களில் நடத்தி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இவர் தற்போது மற்றொரு போஜ்புரி படத்தில் நடித்துவந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற படப்பிடிப்புக்கு சென்றுள்ளார்.

அங்கு ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த இவர் படப்பிடிப்பு முடிந்ததும் தனது அறைக்கு சென்றுள்ளார். நேற்று இரவு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அகன்ஷா போஜ்புரி பாடலுக்கு ஆடி ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து காலை நெருநேரம் ஆகியும் அவர் அறையில் இருந்து வெளியே வராததால் ஓட்டல் ஊழியர்கள் கதவைத் தட்டியுள்ளனர். ஆனால் பதில் வராததால் மாற்றுச்சாவி மூலம் கதவை திறந்து பார்த்தபோது தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இது குறித்து போலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அவர்கள் வந்து சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இறப்பதற்கு சில நிமிட நேரங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் நேரலையில் வந்த அகன்ஷா,

கதறி அழுதுள்ள வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலிஸார் தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகளை பார்க்க வந்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. போலீஸ் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்!!

கேரளாவில்..

கேரளாவில் பெண் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் தலைமறைவான அவரது கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இது அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழக கேரள எல்லை பகுதியான கம்பம் மெட்டு அருகே காஞ்சியார் பகுதியைச் சேர்ந்தவர் பிஜேஸ். இவருடைய வயது 32. விவசாயம் செய்து வரும் பிஜேஸ், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அனுமோல் என்பவரை திருமணம் செய்திருக்கிறார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.

அனுமோல் அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி பள்ளியிலிருந்து வீட்டிற்கு திரும்பிய அனுமோல் காணாமல் போனதாக கணவர் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் பாம்பனார் பகுதியில் வசித்து வந்த அனுமோலின் தந்தை ஜான் தனது மகளுக்கு போன் செய்திருக்கிறார். அப்போது போன் ரிங் ஆகி பின்னர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருக்கிறது.

இதனால் சந்தேகம் அடைந்த ஜான் மற்றும் அவரது மனைவி பிலோமினா அனுமோலின் வீட்டிற்கு வந்திருக்கின்றனர். அப்போது படுக்கை அறையில் துர்நாற்றம் பேசியதால் அதிர்ச்சி அடைந்த இருவரும் உள்ளே சென்று பார்த்திருக்கின்றனர்.

அப்போது அழுகிய நிலையில் கட்டிலுக்கு கீழே அனுமோலின் உடல் கிடந்து இருக்கிறது. இதனால் கதறி அழுத ஜான் மற்றும் அவரது மனைவி உடனடியாக இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்து இருக்கின்றனர்.

இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் உடல் அழுகி இருப்பதால் அனுமோல் இறந்து மூன்று நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் குழந்தையுடன் பிஜேஸ் அங்கிருந்து தலைமுறைவாகியுள்ளார். இதனால் காவல்துறையினர் அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

இந்நிலையில், கணவன் மனைவி இடையே தகராறு காரணமாக அனுமோல் மரணமடைந்திருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போனை எடுக்காததால் வீட்டுக்கு போன அப்பா.. இளம் பெண் மருத்துவரின் விபரீத முடிவு!!

பெரம்பலூரில்..

பெரம்பலூரில் பெண் மருத்துவர் ஒருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கல்பகனூரைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவருடைய மகள் பிரியங்கா.

28 வயதான பிரியங்கா மருத்துவ படிப்பை முடித்துவிட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்திருக்கிறார். இதனால் பெரம்பலூர் கல்யாண் நகரில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்திருக்கிறார் பிரியங்கா. விடுமுறை நாட்களில் தனது பெற்றோரை காண பிரியங்கா செல்வது வாடிக்கை.

இந்த சூழ்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் பிரியங்கா மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். பின்னர் வீடு திரும்பிய அவர் தனது தந்தையிடம் போன் பேசியிருக்கிறார்.

அதன் பிறகு அவரது சகோதரர் அழைத்தபோது ப்ரியங்கா போனை எடுக்கவில்லை. மீண்டும் அழைத்தபோதும் அவர் போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்த தந்தை ராஜசேகர் மற்றும் பிரியங்காவின் சகோதரர் உடனடியாக கிளம்பி அவரை காண சென்றிருக்கின்றனர்.

அப்போது, பிரியங்கா தங்கியிருந்த வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்திருக்கிறது. இதனையடுத்து கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றிருக்கின்றனர்.

அப்போது பிரியங்கா தனது உயிரை மாய்த்துக்கொண்டது தெரிய வந்திருக்கிறது. இதனால் அவரது குடும்பத்தினர் கதறி அழுதிருக்கின்றனர். இதனை தொடர்ந்து இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது.

உடனடியக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பிரியங்காவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கின்றனர். கடந்த வாரம் பிரியங்கா தனது பெற்றோரை காண சென்றிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

இந்நிலையில், இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

உலகைவிட்டு பிரியும் நேரத்திலும் ஏழு பேரை வாழவைத்த மாணவி : துயரத்திலும் நெகிழ்ச்சி!!

இலங்கையில்..

குருநாகல் பகுதியில் மூளை புற்று நோய் காரணமாக மூளைச்சாவடைந்த மாணவியொருவர் தனது உடல் உறுப்புகளை வழங்கி 7 பேரின் உயிரை காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இலங்கையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்திய நிபுணர்கள் குழுவொன்று அண்மையில் இதயம் மற்றும் நுரையீரல் இரண்டையும் ஒரே நோயாளிக்கு மாற்றுவதற்கான முதல் சத்திரசிகிச்சையை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளது. குருநாகல் பகுதியில் மகளிர் கல்லூரியில் உயர்தரம் கல்வி பயின்ற 19 வயதுடைய மாணவியொருவர் மூளைச்சாவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

சகோதரி பல்கலைக்கழகத்தில் படித்து வரும் நிலையில் விஹாகன பொதுப் பரீட்சையில் சித்தியடைந்ததன் பின்னர், ஆங்கில மொழியில் உயர்தர வர்த்தகப் பாடத்தில் கல்வி கற்க குருநாகல் பிரபல பெண்கள் கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த உயர்தரப் பரீட்சையில் அவர் தோற்றியுள்ளதுடன், திடீரென ஏற்பட்ட தலைவலி மற்றும் வாந்தி காரணமாக கடந்த 17ஆம் திகதி கல்கமுவ மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலை மோசமானமையினால், அன்றைய தினம் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, ​​ஆபத்தான நிலையில் இருந்த அவர், அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சுயநினைவின்றி உயிரிழந்துள்ளார்.

மூளை புற்று நோய் காரணமாக மூளைச் சாவு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக மருத்துவப்பரிசோதனையில் தெரியவந்துள்ளது. வெளியில் எந்த அறிகுறியும் காட்டாமல் தொடங்கிய புற்று நோயால் அவரது மரணம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் பின்னர் குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்திற்கிணங்க விஹகனாவின் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தானம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவி இறந்த பிறகு தனது உடல் உறுப்புகளை தானம் செய்யும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளுடன் தற்கொலை செய்த இளம் தம்பதி.. விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

தெலுங்கானாவில்..

இந்தியாவின் தெலுங்கானாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இரண்டு குழந்தைகளும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என கூறப்படுகின்றது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் சதீஷ். இவர் அங்குள்ள குஷிகுடா பகுதியில் வசித்து வந்தார். இவருக்கு வேதா என்ற மனைவியும், நிஷிகேத் (வயது 9), நிஹல் (5) ஆகிய இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இந்த நிலையில் சதீஷ் தனது குடும்பத்தோடு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் பொலிஸார் அங்கு சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் குழந்தைகளுக்கு , சிகிச்சை அளித்தும் குணமாகாததால் சதீஷ் தனது குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகின்றது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்திற்கு ‘வட்டமான பர்வத விகாரை’ என பெயர் மாற்றம்!!

வெடுக்குநாறி..

வவுனியா வடக்கு, நெடுங்கேண வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்திற்கு ‘வட்டமான பர்வத விகாரை’ என கூகுளில் பெயர் மாற்றப்பட்டு புராதன பௌத்த ஆலயமாக காட்டப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு, ஓலுமடு பகுதியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயம் அப் பகுதி மக்கள் பல் நெடுங்காலமாக வழிபடப்பட்டு வந்த நிலையில் தொல்பொருட் திணைக்களம் அது தமக்குரிய இடம் எனத் தெரிவித்து வழிபாட்டு நடவடிக்கைகளுக்கு இடையூறை ஏற்படுத்தி வந்தனர்.

பொலிசார் மற்றும் படைத்தரப்பின் ஆதரவுடன் வழிபாட்டு நடவடிக்கைகள் தொடர்பில் கட்டுப்பாடுகளை தொல்பொருட் திணைக்களம் விதித்திருந்ததுடன், நெடுஙகேணி பொலிசார் ஊடாக ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக வழக்கு தாக்கலும் செய்திருந்தது.

இவ்வாறு தொல்பொருட் திணைக்களம் மற்றும் பொலிசார், பாதுகாப்பு தரப்பினரின் முழுமையான கண்காணிப்பில் இருந்த வெடுக்குநாறி மலையில் இருந்த ஆதி சிவன் விக்கிரகம், அதனை சூழ இருந்த அம்மன், பிள்ளையார், வேல், சூலம் என்பனவும் இருந்த இடத்தில் இருந்து உடைத்து அகற்றப்பட்டு வழிபாட்டு ஆலயம் முழுமையாக சேதமாக்கப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக கூகுளில் குறித்த ஆலயம் இருந்த வெடுக்குநாறிப் பகுதி ‘வட்டமான பர்வத விகாரை’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு புராதன பௌத்த ஆலயமாக காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு திட்டமிட்ட ரீதியில் மேற்கொள்ளப்படும் குறித்த செயற்பாடுகள் குறித்து சைவ மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

 

யாழில் பரிதாபமாக உயிரிழந்த 7 மாத குழந்தை!!

யாழ்ப்பாணத்தில்..

யாழ்ப்பாண பகுதி ஒன்றின் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. யாழ். பண்ணாகத்தை சேர்ந்த 7 மாத குழந்தை நேற்று முன்தினம் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,

மேலதிக சிகிச்சைகளுக்காக தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு மாற்றபட்ட நிலையில் குழந்தை நேற்று (26.03.2023) உயிரிழந்துள்ளது. குழந்தையின் இறப்பு விசாரணையினை,

தெல்லிப்பழை மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டிருந்தார். குறித்த குழந்தை நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது.

இறக்கும் தருவாயில் ஏழு பேரை வாழவைத்த மாணவியின்செயல்.. பலரை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!!

குருநாகலில்..

குருநாகல் பகுதியில் மூளை புற்று நோய் காரணமாக மூளைச்சாவடைந்த மாணவியொருவர் தனது உடல் உறுப்புகளை வழங்கி 7 பேரின் உயிரை காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இலங்கையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்திய நிபுணர்கள் குழுவொன்று அண்மையில் இதயம் மற்றும் நுரையீரல் இரண்டையும் ஒரே நோயாளிக்கு மாற்றுவதற்கான முதல் சத்திரசிகிச்சையை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளது.

குருநாகல் பகுதியில் மகளிர் கல்லூரியில் உயர்தரம் கல்வி பயின்ற 19 வயதுடைய மாணவியொருவர் மூளைச்சாவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

இதன்போது உறவினர்களின் அனுமதியுடன் மூளைச்சாவடைந்த மாணவியின் இதயம் மற்றும் நுரையீரல்கள் என்பன இதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்து ஆபத்தான நிலையில் சிகிச்சைப்பெற்று வந்த மருந்துவ நிபுணருக்கு இவ்விரு உறுப்புகளும் பொருத்தப்பட்டுள்ளன.

இலங்கையில் இதற்கு முன்னர் தனித்தனியாக உறுப்புகள் பொருத்தப்பட்டிருந்தாலும், ஒரே நேரத்தில் இரு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தமை இதுவே முதல் முறை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவியிடமிருந்து எடுக்கப்பட்ட இரண்டு சிறுநீரகங்களும் குருநாகல் போதனா வைத்தியசாலையின் சிறுநீரகப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவருக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டதாக அதன் பணிப்பாளர் டாக்டர் சந்தன கஞ்சங்கமுவ தெரிவித்துள்ளார்.

மேலும், கல்லீரல் மற்றும் கண் சவ்வுகள் என்பன மூன்று பேருக்கு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவும் வகையில் வழங்கப்பட்டுள்ளதுடன், , விஹகனாவின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட 5 உறுப்புகள் மூலம் ஏழு பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

அம்பன்பொலவில் வசிக்கும் மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இளைய பிள்ளையான விஹகனாக்கு ஒரு மூத்த சகோதரி மற்றும் ஒரு சகோதரர் உள்ளனர். சகோதரி பல்கலைக்கழகத்தில் படித்து வரும் நிலையில் விஹாகன பொதுப் பரீட்சையில் சித்தியடைந்ததன் பின்னர், ஆங்கில மொழியில் உயர்தர வர்த்தகப் பாடத்தில் கல்வி கற்க குருநாகல் பிரபல பெண்கள் கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த உயர்தரப் பரீட்சையில் அவர் தோற்றியுள்ளதுடன், திடீரென ஏற்பட்ட தலைவலி மற்றும் வாந்தி காரணமாக கடந்த 17ஆம் திகதி கல்கமுவ மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலை மோசமானமையினால், அன்றைய தினம் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, ​​ஆபத்தான நிலையில் இருந்த அவர், அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சுயநினைவின்றி உயிரிழந்துள்ளார்.

மூளை புற்று நோய் காரணமாக மூளைச் சாவு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக மருத்துவப்பரிசோதனையில் தெரியவந்துள்ளது. வெளியில் எந்த அறிகுறியும் காட்டாமல் தொடங்கிய புற்று நோயால் அவரது மரணம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் பின்னர் குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்திற்கிணங்க விஹகனாவின் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தானம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவி இறந்த பிறகு தனது உடல் உறுப்புகளை தானம் செய்யும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் சிறைச்சாலை காவலரிடமிருந்து தப்பி ஓடிய சிறைக் கைதி விரட்டிப் பிடிப்பு!!

சிறைக் கைதி..

வவுனியா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்ட சிறைச்சாலை கைதி ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்ற விதம் அடங்கிய காணொளி ஒன்று நேற்று (25) வெளியாகியுள்ளது.

சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் கொண்டுவரப்பட்ட கைதி ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பித்து வவுனியா வைத்தியசாலையை அண்மித்துள்ள வயல்வெளியில் ஓடிச்செல்கின்றார்.

அப்போது குறித்த கைதியை சிறை அதிகாரிகள் பின்தொடர்ந்து சென்று கைது செய்வதை கைத்தொலைபேசியில் நபர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதில் சிறை அதிகாரிகள் கைதியை துரத்திச் சென்று கைது செய்யும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.

 

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் பெயர்த்து எறியப்பட்ட ஆதிலிங்கேஸ்வரர்!!

வெடுக்குநாறி..

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் பி்ரதிஸ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் கழற்றி வீசப்பட்டுள்ளதுடன், ஏனைய விக்கிரகங்களும் மாயமாகியுள்ளமை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருட் திணைக்களமும், நெடுங்கேணி பொலிசாரும் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வந்ததுடன் தொல்பொருள்கள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் கடந்த 2021 ஆம் ஆண்டு வவுனியா நீதவான் நீதிமன்றில் வழக்கினையும் தாக்கல் செய்திருந்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணைகள் வவுனியா நீதிமன்றில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த நிலையில் தொல்பொருட்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஆலயத்தின் நிர்வாகத்தினர் விளக்கமறியலிலும் வைக்கப்பட்டனர்.

எனினும் கடந்தவருடம் குறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆலயத்தின் பூசகர் மற்றும் நிர்வாகத்தினர்கள் வழக்கிலிருந்து தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டதுடன்,

குறித்த சம்பத்துடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை ஆதாரங்களுடன் கண்டறிந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு பொலிஸாருக்கு நீதவானால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை ஆலயத்திற்கு சென்ற கிராமமக்கள் மற்றும் பூசகர் ஆலய விக்கிரகங்கள் திருடப்பட்டு அழித்தெறியப்பட்டமையை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

குறிப்பாக ஆலயத்தின் பிரதான விக்கிரகமான ஆதிலிங்கம் அகழ்ந்து எடுக்கப்பட்டு அருகில் இருந்த புதருக்குள் வீசப்பட்டிருந்தது. அத்துடன் பிள்ளையார், அம்மன், வைரவர் விக்கிரங்களும் பெயர்த்தெடுக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தமிழ் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் மதுபோதையில் சிவில் உடையில் வந்த விசேட அதிரடிப் படையினர் தாக்கியதாக இருவர் வைத்தியசாலையில் அனுமதி!!

மரையடித்தகுளம்..

மதுபோதையில் சிவில் உடையில் வந்த விசேட அதிரடிப் படையினர் தாக்கியதாக இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (25.03) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது,

வவுனியா, மரையடித்தகுளம், செங்கராத்திமோட்டை பகுதியில் பற்றைக்காடாக இருந்த தமது காணியினை துப்பரவு செய்து கொண்டிருந்த போது அங்கு சென்ற விசேட அதிரடிப்படையினர் குறித்த காணி வனஇலாகாவிற்கு சொந்தமானது எனவும் அதனை துப்பரவு செய்ய வேண்டாம் எனவும் தடுத்தனர்.

இதனையடுத்து, குறித்த காணியினை துப்பரவு செய்தவர்கள் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் அவர்களின் கவனத்திற்கு குறித்த விடயத்தை கொண்டு வந்ததையடுத்து,

வனஇலாகாவுடன் பேசிய அவர் குறித்த காணி விடுவிக்கப்பட்ட காணி எனத் தெரிவித்தார். விசேட அதிரடிப்படையினருக்கு அதனை தெரியப்படுத்தியதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றிருந்தனர்.

எமது வீட்டு வளவில் இருந்த புற்றை அகற்றி அதனையும் சுத்தம் செய்தோம். காணி துப்பரவு பணி முடிந்து எமது வீட்டில் நிற்கும் போது மாலை வேளை மதுபோதையில் சிவில் உடையில் வந்த 4 விசேட அதிரடிப்படையினர் எமது வீட்டு வளவில் வைத்து எம்மை தாக்கினர்.

ஊர்மக்கள் திரண்டதையடுத்து அங்கிருந்து சென்று விட்டனர். நாம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் இது குறித்து வைத்தியசாலை பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இச் சம்பவத்தில் காயமடைந்து கனகராயன்குளம், விஞ்ஞானகுளம் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய சச்சிதானந்தன் சதாநந்தன், மரையடித்தகுளம், செங்கராத்திமோட்டைப் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய சிற்றம்பலம் கேதீஸ்வரன் ஆகிய இருவரே வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் கருத்து தெரிவிக்கையில், அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய மக்கள் தமது காணிகளை துப்பரவு செய்து வருகின்றனர்.

இன்று காலை சென்ற விசேட அதிரடிப்படையினர் காணி துப்பரவு பணியை தடுத்து நிறுத்தினர். நாம் வனஇலாகாவுடன் பேசி மக்களது காணி என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்தியதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.

மாலை மது போதையில் சென்ற அதிரடிப்படையினர் தாக்கியதாக எனக்கு பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்ததையடுத்து நான் அங்கு சென்றேன். இதன்போது விசேட அதிடிப்படையினர் சென்று விட்டனர்.

நான் எனது வாகனத்தில் காயமடைந்த இருவரையும் அழைத்து வந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளேன். இது தொடர்பகில் விசேட அதிரடிப்படையின் பிரதிபொலிஸ் மா அதிபர் ஜெயசுந்தர அவர்களிடம் முறைப்பாடு செய்துள்ளேன் எனவும் தெரிவித்தார்.