தென்னிந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து அதன்பின் 13 வயதில் கதாநாயகியாகவும் நடித்து பிரபலமானவர் நடிகை மீனா. தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த மீனா வித்யாசகர் என்பவரை திருமணம் செய்தும் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.
அவரது மகளை தெறி படத்தில் குட்டி நட்சத்திரமாகவும் அறிமுகம் செய்த மீனா, கதாநாயகியாக மலையாள படங்களிலும் நடித்து வந்தார். கடந்த ஆண்டு அவரது கணவர் நுரையீரல் பிரச்சனை காரணமாக சிகிச்சை பலனின்றி மரணமடைந்தது சினிமாத்துறையினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
இந்த துக்கத்தில் இருந்து நடிகை மீனா மீண்டு வந்து படங்களில் நடித்தும் வருகிறார். சமீபத்தில் சினிமாவில் அறிமுகமாகி 40 ஆண்டுகளாகியதை ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
கணவரை இழந்த மீனாவின் குடும்பத்தினர் தொழிலதிபர் ஒருவரை இரண்டாம் திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் கசிந்து வைரலானது. ஆனால் இது அதிகாரபூர்வ அறிவிப்பில்லை என்றும் வதந்திதான் என்று கூறப்பட்டது.
சமீபத்தில் நடிகர் தனுஷுடன் மீனா இரண்டாம் திருமணம் செய்யவுள்ளார் என்றும் அதுகுறித்து பயில்வான் பேசிய விசயமும் இணையத்தில் வைரலாகியது. இதுகுறித்து நடிகை மீனா வருத்தத்துடன் பேட்டியொன்றில் கூறியிருக்கிறாராம்.
அதில், என் கணவர் இறந்த விசயமே என்னால் இன்னும் நம்பமுடியவில்லை. அதற்குள் இப்படியொரு வதந்திகள் வெளியாவதை என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை.
இப்போதைக்கு நல்ல கதைகள் அமைந்தால் படங்களில் நடிக்க கவனம் செலுத்துவதாகவும் என் மகளின் எதிர்காலத்தை அமைத்து தருவேன். இதுதான் எனக்கு முக்கியமானது என்று கூறி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நடிகை மீனா.
மாயமான ஆசிரியை மர்மமான முறையில் வீட்டிலேயே சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் கேரளாவை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனையைச் சேர்ந்தவர் விஜேஷ்.
இவருடைய மனைவி அனுமோள் (27), அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கடந்த 17ம் தேதி வழக்கம் போல பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய அவர், மறுநாள் பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
இது பற்றி அனுமோளின் பெற்றோருக்கு தெரிய வரவே, அவர்கள் விஜேஷை தொடர்பு கொண்டு, ‘என்னாச்சு.. அனுமோள் எங்கே..?’ என்று கேட்டுள்ளனர். இதற்கு, அனுமோள் வழக்கம் போல பள்ளிக்கு சென்றுவிட்டதாக விஜேஷும் கூறியுள்ளார்.
விஜேஷின் பேச்சால் சந்தேகம் அடைந்த பெற்றோர், மகளை காணவில்லை என்று போலீஸில் புகார் அளித்தனர். அதன்பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதனிடையே, தனது சகோதரியை பல இடங்களில் தேடி அலைந்து அனுமோளின் தம்பி அலெக்ஸ், அக்காவின் வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது, கதவு பூட்டப்பட்டு இருந்த நிலையில், வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.
அங்கு படுக்கை அறையில் உள்ள கட்டிலுக்கு அடியில் ஒரு கம்பளி போர்வையில் அனு மோளின் உடல் சுற்றி வைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அலெக்ஸ் அதிர்ச்சியடைந்தார்.
இதனால், கதறி அழுத அவர், இது தொடர்பாக உடனடியாக கட்டப்பனை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அனுமோளின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர்.
இந்த தகவல் அறிந்ததும் கணவர் விஜேஷ் தலைமறைவானார். எனவே, அனுமோளை விஜேஷ் தான் கொலை செய்திருக்க வேண்டும் என்று கோணத்தில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
அனுராதபுரத்தில் உயிரிழந்த கணவனின் சடலத்தை பெறுவதற்காக இரண்டு பெண்கள் போராடிய சம்பவம் வைத்திசாலையில் பதிவாகி உள்ளது. தம்புத்தேகம பிரதேசத்தில் இரண்டு மாவட்டங்களில் வசிக்கும் இரண்டு பெண்கள் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாயின் சடலத்தை பெறுவதற்காக போராடியுள்ளனர்.
கடந்த 18ஆம் திகதி 54 வயதான ஓய்வுபெற்ற இராணுவ வீரர் தம்புத்தேகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். மரண விசாரணை அதிகாரியிடம் முதலில் திருமணம் செய்த மனைவி சாட்சி வழங்கும் போது இரண்டாவது மனைவி விஷம் கொடுத்தமையினால் கணவன் சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும் மரணத்தில் ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து, விசாரணை மேற்கொள்ளுமாறு அதிகாரி குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, தம்புத்தேகம பொலிஸார் தம்புத்தேகம நீதவானிடம் அறிக்கை செய்துள்ளனர்.
மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரிக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இரண்டாவது மனைவி திருமணப் பதிவாளர் ஊடாக தனது திருமணத்தை நடத்தி வைத்ததாக தம்புத்தேகம ஆதார வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரியிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
தம்புத்தேகம நீதவான் உத்தரவிற்கமைய, உயிரிழந்தவருக்கு பிரேத பரிசோதனை செய்து உடல் உறுப்புகளை மரண விசாரணை அதிகாரிக்கு அனுப்பி வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ் அரசியல் கைதியொருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த திருமணம் நேற்று முன்தினம் (22.03.2023) இடம்பெற்றுள்ளது.
22 ஆண்டுகள் தமிழ் அரசியல் கைதியாக இருந்து கடந்த வருடம் விடுதலை செய்யப்பட்ட சக்திவேல் இலங்கேஸ்வரன் என்பவரே இவ்வாறு திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.
இவரின் திருமணம் தொடர்பான தகவலை அவரது நண்பர் கொட்டடி கோமகன் என்பவர் முகநூலில் பதிவிட்ட நிலையில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
வவுனியாவில் இன்று மாலை பெய்த மினிசூறாவளியுடன் கூடிய மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளன.
வவுனியாவில் கடந்த இருதினங்களாக மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்துவருகின்றது. இன்றுமாலை மினிசூறாவளியுடன் கூடிய கடும் மழை பெய்தமையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளன.
குறிப்பாக காற்றின் வேகம் அதிகரித்தமையால் நகரின் முக்கிய வீதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்தது. இதனால் வீதிகளுடனான போக்குவரத்து தடைப்பட்டது. மேலும் நகரின் பல கடைகளின் மேற்கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டதால் பல கடைகள் சேதமடைந்துள்ளதுடன் கடைகளுக்குள்ளும் மழை நீரும் புகுந்துள்ளது.
இதேவேளை பல இடங்களில் மரக்கிளைகள் வீடுகளுக்கு மேல் முறிந்து வீழ்ந்ததில் வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், வீட்டின் மதில்களும் சரிந்து வீழ்ந்துள்ளது.
புத்தளம், பட்டுலு ஓய பிரதேசத்தில் பெண் ஒருவர் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார். இளம் வைத்தியர் ஒருவரே ரயிலில் மோதுண்டு தன்னுயிரை மாய்த்துள்ளதாக தெரிய வருகிறது.
அவர் இறப்பதற்கு முன் தன் பெற்றோருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளதாக தெரியவந்தது. அந்தக் கடிதத்தில் “அம்மா, அப்பா, என்னை மன்னித்து விடுங்கள். இந்த வாழ்க்கை மிகவும் கடினமாக உள்ளது.
நான் இங்கிருந்து செல்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். குறித்த இளம் பெண்ணின் மரணம் அந்தப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகத்தின் திருப்பத்தூர் மாவட்டத்தில் நபர் ஒருவர் தனது மனைவிக்கு கோயில் கட்டிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் மான்கானூர் தக்டி வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி.
அவரது மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு திருமணமாகி 35 ஆண்டுகள் ஆன நிலையில், மனைவி ஈஸ்வரி கடந்த ஆண்டு காலமானார். மனைவி இறந்த துக்கத்தில் இருந்த சுப்பிரமணி, அவரின் நினைவாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்துள்ளார்.
அதன் பின்னர் ஆச்சரியமான விடயம் ஒன்றை செய்தார். அதாவது தனது 15 சென்ட் இடத்தில் மனைவிக்காக அவர் கோயில் கட்டியுள்ளார். அதில் 6 அடியில் மனைவிக்கு சிலை வைத்துள்ளார். இதற்காக அவர் 15 லட்சம் செலவு செய்துள்ளார்.
இம்மாதம் 31ஆம் திகதி மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வருவதால், 500 பெண்களுக்கு இலவச சேலை மற்றும் அன்னதானம் வழங்க உள்ளார் சுப்பிரமணி. மனைவிக்காக கோயில் கட்டி தினமும் வழிபட்டு வருவது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த மகளின் கணவனை பெண் வீட்டார் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டியை சேர்ந்தவர் ஜெகன்.
டைல்ஸ் வேலை செய்து வரும் இவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு புளுக்கான்கொட்டாயை சேர்ந்த சங்கர் என்பவரது மகள் சரண்யாவை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் சரண்யாவின் குடும்பத்தை விடப் பொருளாதார நிலையில் பின் தங்கியுள்ளார் என கூறப்படுகிறது. இதனால் சரண்யாவின் வீட்டார் இவர்களது காதல் திருமணத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
ஜெகன், சந்தியா இருவரும் பெற்றோர் சம்மதிக்காததால் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். தங்களின் சம்மதம் இல்லாமல் இந்த திருமணம் நடைபெற்றதால், சரண்யாவின் பெற்றோர் ஆத்திரமடைந்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து நேற்று ஜெகன் கிட்டம்பட்டியில் வேலை செய்துவிட்டு காவேரிப்பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சரண்யாவின் தந்தை சங்கர் மற்றும் உறவினர்கள் இரண்டு பேர் சேர்ந்து ஜெகனை வழிமறித்து கையில் வைத்திருந்த ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
அவர்கள் வைத்திருந்த அரிவாளால் ஜெகனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இதில் ஜெகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள், கொலையாளிகளை நெருங்கும்போது, சங்கர் மற்றும் அவரது உறவினர்கள் அனைவரும் தப்பித்து ஓடி விட்டனர்.
பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவத்தால் சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு அதிர்ச்சியுடன் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.
சம்பவம் அறிந்து வந்த கிருஷ்ணகிரி காவல்துறை கொலை நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். அதேபோல தகவல் கிடைத்து வந்த ஜெகனின் குடும்பத்தார் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜெகனின் உடலைப் பார்த்து கதறி அழுதனர்.
இதனிடையே, ஜெகனை கொலை செய்த சரண்யாவின் குடும்பத்தாரை கைது செய்யக்கோரி ஜெகனின் வீட்டார் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். பொலிஸார் அவர்களை சமாதானப்படுத்தி குற்றவாளிகளை கைது செய்வோம் என உறுதி அளித்தனர். அதன் பிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.
கொல்லப்பட்ட ஜெகனின் மாமனார் சங்கர் கிருஷ்ணகிரி கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். மகள் காதல் திருமணம் செய்ததால் விரக்தியில் மருமகனை கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மாங்காடு பகுதியில் வசித்து வருபவர் சின்னத்திரை நடிகை சாந்தி. இவரது கணவரையும், மகளையும் சொந்த மகனே கொலைச் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலை சொத்து பிரச்சனைக்காக செய்யப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலைச் செய்த பிரகாஷ், திரைத்துறையில் டப்பிங் ஆர்டிஸ்டாக பணிபுரிந்து வருகிறார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு ராகவேந்திரா தெருவில் வசித்து வந்தவர் செல்வராஜ். இவர் இசைப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சாந்தி, சினிமாவில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.
ராஜா ராணி சீரியல் தொடரிலும் சாந்தி நடித்து இருக்கிறார். இந்த தம்பதிக்கு ராஜேஷ் பிராங்கோ, பிரியா, பிரகாஷ் என்ற 3 பிள்ளைகள் உள்ளனர். முதல் இரண்டு பிள்ளைகளுக்கும் திருமணமாகி தனித்தனியே குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், கடைசி மகன் பிரகாஷ் மட்டும் பெற்றோருடன் வசித்து வந்தார். மகள் பிரியா தனது பெற்றோரின் வீட்டருகிலேயே கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். கடைசி மகன் பிரகாஷ் சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்டாக பணி புரிந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை காலை பிரியாவின் வீட்டிற்கு சென்ற பிரகாஷ் அங்கு தனது அக்காவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த பிரகாஷ், தான் கையோடு கொண்டு சென்று மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரியாவின் கழுத்தில் சரமாரியாக குத்தினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் பிரியா மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை கண்டதும் அவரது வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து சத்தம் போட்டனர். இதையடுத்து பிரகாஷ் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.
அவரது தாய் மற்றும் அண்ணனுக்கு தகவல் தெரிவித்த நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கதறி அழுதனர். தந்தையை காணவில்லையே என வீட்டிற்கு சென்று பார்த்த போது செல்வராஜ் படுக்கையறையில் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த தந்தையை கழுத்தறுத்து கொலைச் செய்து விட்டு, அதே கத்தியுடன் சென்று அக்காவையும் பிரகாஷ் கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாங்காடு போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதே பகுதியில் சுற்றி திரிந்த பிரகாசை கைது செய்த போலீசார், காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் பிரகாஷ் குறித்த பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் போலீசாருக்கு தெரிய வந்தன.
சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக பணிபுரிந்து வந்த பிரகாஷ் கஞ்சா மற்றும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடந்து கொண்டதாகவும் அருகே இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
தனியார் மருத்துவமனையில் பிரகாஷூக்கு சிகிச்சை அளித்து வந்ததும், அதிக பணம் செலவானதால் அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்துள்ளனர். பின்னர் பிரகாஷை அரசு மருத்துவமனையில் சேர்ப்பதற்கான முயற்சிகளில் குடும்பத்தினர் ஈடுபட்டு வந்துள்ளனர்.
சனிக்கிழமையன்று காலையில் பிரகாசிற்கு மாத்திரைகள் வாங்குவதற்காக அவரது தாய் சாந்தி மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். இந்நிலையில் தான் தந்தையும், அக்காவையும் பிரகாஷ் கொலைச் செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாய் சாந்தி வீட்டில் இல்லாததால் அவர் உயிர் பிழைத்து இருக்கிறார். கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? சொத்து பிரச்சனை ஏதாவது உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை மற்றும் அக்காவின் கழுத்தை மகனே அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னட மாவட்டம் புத்தூர் பகுதியை அடுத்துள்ளது கெய்யூரு பகுதியை சேர்ந்தவர் சதீஷ் ராய் – மம்தா தம்பதியினர். இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி தற்போது ஷ்ரம்யா என்ற மகள் உள்ளார்.
ஷ்ரம்யா கல்லூரியில் பிசிஏ 2-ம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் இவர் அங்கு ஸ்கவுட்டில் வழிகாட்டி ரேஞ்சராகவும் இருந்து வருகிறார். சதீஷ் ராய் – மம்தாவுக்கு தோட்டம் ஒன்று உள்ளது. தினமும் அதற்கு மம்தாதான் தண்ணீர் பாய்ச்சுவார்.
அந்த வகையில் சம்பவத்தன்றும் மம்தா சுமார் மாலை 5 மணியளவில் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். அப்போது அங்கே மறைந்திருந்த பாம்பு ஒன்று மம்தாவின் காலில் கொத்தியது.
இதனை கண்டு அலறிக்கொண்டே வீட்டுக்குள் வந்துள்ளார் மம்தா. அந்த சமயத்தில் அவரது மகள் மட்டும் இருக்கவே, அவரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இதையடுத்து சற்றும் தாமதிக்காமல், விஷம் தனது தாயின் தலைக்கு ஏறிவிடாமல் இருக்க, சினிமா பாணியில் கடித்த இடத்தில் கத்தியை கொண்டு அறுத்து, தனது வாயை வைத்து விஷம் கலந்த ரத்தத்தை உறிந்து வெளியே எடுத்துள்ளார் ஷரம்யா.
பின்னர் உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியோடு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை சோதித்த மருத்துவர்கள் அருகிலிருக்கும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளனர். பின்னர் அவரை அங்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது மம்தா பூரண குணமடைந்து நலமுடன் இருக்கிறார். பல நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில், பாம்புக்கடி ஒரு தீவிர பொது சுகாதார பிரச்சினை. நேச்சர் கம்யூனிகேஷன்ஸில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, உலகளவில் 78,600 பாம்புக்கடி இறப்புகளில் 64,100 பேர் இந்தியாவில் நிகழ்கின்றன.
நாடாளாவிய ரீதியில் முச்சக்கரவண்டி கட்டணங்கள் குறைக்கப்பட்டு மக்களுக்கு குறைந்த கட்டணங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. எனினும் வவுனியாவில் பல முச்சக்கரவண்டி தரிப்பிடங்களில் பல்வேறுபட்ட நிலையில் கட்டணங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றதாக பொதுமக்கள் முறையிட்டுள்ளனர்.
இது குறித்து வவுனியா மாவட்ட முச்சக்கரவண்டி சாதிகள் சங்கத் தலைவர் இ.ரவீந்திரனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது. முச்சக்கரவண்டி சேவைக் கட்டணங்கள் குறைப்பது தொடர்பில்,
அனைத்து சாரதிகளுடனும் கலந்துரையாடுவதற்கான கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்து அது குறித்து மிக விரைவில் கலந்துரையாடி அறிவிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம், மேற்கு பர்த்வான் மாவட்டத்தில் உள்ள தொழில்துறை நகரமான துர்காபூரைச் சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் அமித் மொந்தல் (37). இவரது மனைவி ரூபா (33). இந்த தம்பவதிக்கு நிமித் (7) என்ற மகனும், ஒன்றரை வயது மகளும் இருந்தனர்.
நேற்று முன்தினம் நீண்ட நேரமாகியும் அமித் குடும்பத்தை சேர்ந்த யாரும் வீட்டை விட்டு வெளியே யாரும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில், அமித் மொந்தல், அருகில் மெத்தையில் ரூபா, நிமித் மற்றும் பெண் குழந்தை உயிரிழந்து கிடந்தனர். இதனால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக நான்கு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனது மனைவி, குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு அமித் மொந்தல் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகப்பட்டனர்.
அத்துடன் அங்கிருந்த அமித் மொந்தலின் செல்போனை போலீஸார் கைப்பற்றினர். ஆனால், சொத்துக்காக அமித் மொந்தல் குடும்பத்தினர் கொலை செய்யப்பட்டதாக அவரது உறவினர்கள் பரபரப்பு புகார் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக அமித்தின் மனைவி ரூபாவின் உறவினர் சுதிப்தா கோஷ் கூறுகையில், “அமித் மொந்தலுக்கும், அவரது தாய் வழிக்குடும்பத்தினரைச் சேர்ந்தவர்களுக்கும் சொத்து தகராறு இருந்தது. திட்டமிட்டு அவர்களால் நடத்தப்பட்ட கொலைகள் தான் இவை.
அமித்தின் தாய் தனது மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளை விட தனது சகோதரருக்கு முன்னுரிமை அளித்தார். இதனால் எனது மைத்துனரின் (அமித் மொந்தல்) சொத்தை அடைய இக்கொலைகள் நடத்தப்பட்டுள்ளன. அமித் மொந்தல் வீட்டில் இருந்த சிசிடிவி கேமிரா பாலித்தீன் கவரால் மூடப்பட்டிருந்தது.
அத்துடன் வீட்டிற்கு வெளியே உள்ள கேமிராவும் செயல்படவில்லை. எனவே, திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலைகள் இவை” என்று குற்றம் சாட்டினார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அமித் மொந்தலின் தந்தை நரேஷ்குமார் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
அவர் பெரும் சொத்துக்களை தனது மகன், மனைவிக்கு விட்டுச் சென்றுள்ளார். ஆனால், அமித்தின் தாய் தனது சகோதரருக்கு சொத்து வேண்டும் என்று தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
எனவே, சொத்துக்காக நடந்த கொலைகளா அல்லது உறவினர்களின் நெருக்கடியில் நடந்த தற்கொலைகளா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் துர்காபூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாவனைக்கு பொருத்தமற்ற மற்றும் சுகாதாரமற்ற, எலி மொய்த்த உணவுகள் விற்பனைக்காக களஞ்சியப்படுத்தி வைத்திருந்த மன்னார் நகரிலுள்ள பிரபல உணவகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நேற்றைய தினம் (22.03.2023) மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணினையினால் மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த உணவகத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த உணவுகள் மீது எலிகள் பாய்ந்து ஓடும் காணொளியினை மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்கு நபரொருவர் அனுப்பியுள்ளார்.
இந்த காணொளிக்கு அமைய மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரிக்கு விடுக்கப்பட்ட பணிப்புரையின் அடிப்படையில் உணவகம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது பாவனைக்கு பொருத்தமற்ற மற்றும் சுகாதாரமற்ற உணவுகள் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நேற்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உணவகத்துக்கு எதிராக 5 குற்றச்சாட்டுகள் முறையிடப்பட்டதற்கு அமைவாக குறித்த உணவக உரிமையாளருக்கு 70,000 ரூபா தண்ட பணம் விதிக்கப்பட்டுள்ளது.
அதனை செலுத்த தவறும் பட்சத்தில் ஒவ்வொரு குற்றத்திற்காகவும் 3 மாத சிறைதண்டனையும், 29.03.2023 வரை வியாபாரத்தை தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட உணவுப் பொருட்களை அழிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கொண்டு வரப்படவுள்ள முக்கிய தடை தொடர்பில் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 5 பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் சில பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தடை செய்ய சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீர்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், சுற்றுச்சூழலுக்கு பிளாஸ்டிக் கழிவுகளை வெளியிடுவதை குறைக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஒருமுறை மாத்திரமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
அதன்படி, ஜூன் மாதம் முதல் பிளாஸ்டிக் கப், ஸ்பூன், தட்டுகள், முட்கரண்டி, மாலைகள் மற்றும் பாய்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளது. நாட்டில் தேவைக்கு அதிகமாக இருப்புக்கள் இருப்பதால், பிளாஸ்டிக் துகள்களின் இறக்குமதியை அமைச்சு கட்டுப்படுத்தும்.
பிளாஸ்டிக் தட்டுகளை இறக்குமதி செய்வதைக் கட்டுப்படுத்தவும், பசுமைப் பொருட்களை மேம்படுத்துவதற்கு ஊக்குவிப்பதற்காகவும் அமைச்சு எதிர்பார்த்துள்ளது.
மேற்கண்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதன் மூலம், சுற்றுச்சூழலை பாதிக்காத பொருட்களை பயன்படுத்தி இத்தொழிலை தொடங்க காத்திருப்போரை ஊக்குவிக்கும்.
இது மக்களின் வாழ்க்கைக்கு உதவும். சந்தை தேவை மற்றும் பிற காரணிகளை பொறுத்து ஏனைய நாடுகளில் இருந்து சில பிளாஸ்டிக் பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டும்.
இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு, அமைச்சு முடிந்தவரை பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத சூழலை உருவாக்க முயற்சித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளில் 2022ஆம் ஆண்டுக்கான இறுதித் தவணை நாளையுடன் நிறைவடையவுள்ளது.
இந்த விடயத்தை கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.மேலும்,2023ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை எதிர்வரும் திங்கட்கிழமை (27.03.2023) முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வவுனியா இறம்பைக்குளம் பகுதியில் நேற்று முன்தினம் (21.03.2023) இரவு 10 கிராம் 470 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இறம்பைக்குளம் பகுதியில் குறித்த நபரை பரிசோதனைக்குட்படுத்திய பொழுதில் அவரின் உடமையில் 10 கிராம் 470 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றுள்ளப்பட்டுள்ளதுடன் குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வவுனியா தேக்கவத்தை பகுதியினை சேர்ந்த 44 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவர். சந்தேகநபரை வவுனியா மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுள்துள்ளனர்