அடித்து கொல்லப்பட்ட பள்ளி மாணவன்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

திருச்சியில்..

திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்துள்ள தோளூர்ப்பட்டியை சேர்ந்தவர் கோபி, இவருக்கு திருமணமாகி பெரியக்காள் என்ற மனைவியும் மூன்று மகன்களும் உள்ளனர். இவர்களது இரண்டாவது மகன் மெளலீஷ்வரன் தொட்டியம் அடுத்துள்ள பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவன் மெளலீஷ்வரன் சக மாணவர்களுடன் விளையாடி கொண்டிருந்த போது மெளலீஸ்வரனுக்கும் சக மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மாணவன் மௌலீஸ்வரன் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து பள்ளி ஆசிரியர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு மாணவன் மௌலீஸ்வரன் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த மௌலீஸ்வரனின் பெற்றோர்கள், உறவினர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு மாணவனின் இறப்புக்கு நியாயம் கேட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து முசிறி எம்.எல்.ஏ காடுவெட்டி தியாகராஜன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவத்தில் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர் மற்றும் பள்ளி மாணவர்கள் என மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டு தொட்டியம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சூழலில், மாணவனின் உடல் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் மாணவனின் உடல் பிரேத பரிசோதனையின் போது வீடியோ பதிவு செய்ய வேண்டும் என மாணவனின் பெற்றோர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

பிரேத பரிசோதனை செய்யும் அறையில் சிசிடிவி கேமரா வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் பிரேத பரிசோதனை செய்ய பெற்றோர்கள் சம்மதத்தினர். இதனையடுத்து மாணவனின் உடல் பிரேத பரிசோதனை துவங்கி நடைபெற்று வருகிறது.

பள்ளி வளாகத்தில் மாணவன் உயிரிழந்த நிலையில் முசிறி எம்.எல்.ஏ காடுவெட்டி தியாகராஜன் மாணவனின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். மேலும் பாதுகாப்பு பணிக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பாதுகாப்பிற்காக 20க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சேற்றில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் வெளிவந்த உண்மைகள்!!

தனுகா மதுவந்தி..

தனது வீட்டில் தனிமையில் இருந்த 26 வயதுடைய யுவதியொருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு வீட்டின் அருகில் உள்ள வயல்வெளியில் சேற்றுக்குள் புதைக்கப்பட்ட நிலையில் பொலிஸார் மற்றும் அயலவர்கள் சடலத்தைக் கண்டெடுத்துள்ளனர்.

அத்தோடு திருமணமாகி பிள்ளைகள் இல்லாத நிலையில் கணவருடன் வீட்டில் வசித்து வருகின்றார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 10ஆம் திகதி இரவு கிராமத்தில் உள்ள மரண வீடொன்றுக்கு கணவர் சென்றிருந்ததுடன் மீண்டும் கணவர் வீட்டுக்கு வந்த பின் மனைவியைக் காணவில்லை என்று அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் அனைவரும் இந்த இளம் பெண்ணை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடிய நிலையில் அவரது சடலம் வீட்டில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள வயலில் சேற்றில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவம் நடந்த அன்று இரவு 9.30 மணியளவில் அலறல் சத்தம் ஒன்று கேட்டதாகவும் கதவைத் திறந்து பார்த்தபோது சத்தம் கேட்கவில்லை என்றும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

அலவத்துகொட விலான பல்லேகம எல்லேகடே பிரதேசத்தில் வசித்து வந்த தனுகா மதுவந்தி என்ற 26 வயதுடைய யுவதியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சடலம் இருந்த இடத்திலிருந்து மோப்ப நாய்ப் பிரிவின் நாய் ஒன்று விடுவிக்கப்பட்டதையடுத்து அந்த நாய் சுமார் மூன்று கிலோமீற்றர் தூரம் சுற்றி வீடொன்றுக்கு சென்றுள்ளதுடன் அவ் வீட்டில் வசிக்கும் திருமணமான ஒருவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற அசம்பாவிதம் : பரிதாபமாக உயிரிழந்த சாரதி!!

மட்டக்களப்பில்..

மட்டக்களப்பு ஆயித்தியமலையில் வயில் உழவில் ஈடுபட்ட உழவு இயந்திரம் தலைகீழாக பிரண்டதில் அதன் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (11.03.2023) சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆயித்தியமலை வயல் பகுதியில் உழவு இயந்திரத்தால் வயல் உழுது கொண்ட போது உழவு இயந்திரம் தலைகீழாக பிரண்டதில் அதனை செலுத்திய சாரதி உயிரிழந்துள்ளார்.

மேலும் இச்சம்பவத்தில் ஆயித்தியமலை நெல்லூரைச் சேர்ந்த 34 வயதுடைய தர்மதாசா சதீஸ்வரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த வயலில் சம்பவதினமான இன்று பிற்பகல் உழவு இயந்திரத்தால் உழும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது வயலில் உழவு இயந்திரத்தின் பின்பக்க சக்கரங்கள் புதைந்ததையடுத்து,

உழவு இயந்திர முன்பகுதி மேல் எழுந்து தலைகீழக பிரண்டுடதையடுத்து அவர் கீழ் விழுந்ததில் கலப்பையில் தலை அடிபட்டு படுகாயமடைந்ததையடுத்து சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

மெசேஜ் அனுப்பி தொல்லை… காதலை ஏற்காத 48 வயது பெண்ணுக்கு இளைஞர் செய்த கொடூரம்!!

பெங்களூருவில்..

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்கராக பணிபுரிந்தவர் 48 வயதான தீபா. திருமணமாக தீபா இந்திரா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வருகிறார். இவர்களது உறவினர்கள் அருகே உள்ள பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் தீபாவுக்கு பீமா ராவ் என்ற 27 வயது வாலிபர் அறிமுகமாகியுள்ளார். கேப் டிரைவரான இவர், தீபாவை அலுவலகத்திற்கு அழைத்து சென்று வீட்டுக்கு கொண்டுவந்து விடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இருக்கும் இடையேயான அறிமுகம் நட்பாக மாற, பீமா ராவ் தீபாவின் உறவினர்களுக்கும் அறிமுகமாகியுள்ளார். இப்படி இருக்க, தீபாவிடம் டிரைவர் பீமா ராவ் தன்னை காதலனாக ஏற்கும்படி சமீப நாள்களாக வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த தீபா டிரைவர் பீமா ராவை தவிர்க்க தொடங்கியுள்ளார்.

அவரது மெசேஜ்கள் மற்றும் அழைப்புகளுக்கு ரிப்ளை செய்வதை தவிர்த்துள்ளார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி கடைக்கு செல்வதற்கு டிராப் செய்ய பீமா ராவ்வை தீபா அழைத்துள்ளார். அப்போது காரில் பயணித்த போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தன்னிடம் முன்பு போல ஏன் பேசவில்லை என்று ஆத்திரத்துடன் பீமா ராவ் கேட்கவே, இந்த தகராறில் தீபாவை பீமா ராவ் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், நள்ளிரவு நேரத்தில் சடலத்தை பாகலூர் அருகே உள்ள வாய்காலில் வீசியுள்ளார்.

தீபா திடீரென மாயமானதை தொடர்ந்து அவரது உறவினர்கள் போலீசாரிடம் புகார் தந்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் டிரைவர் பீமா ராவை விசாரித்த போது தான் உண்மை அம்பலமாகியுள்ளது. தொடர்ந்து டிரைவர் பீமா ராவ் மீது வழக்கு பதிந்து கைது செய்த காவல்துறை சிறையில் அடைத்துள்ளனர்.

தூக்கில் தொங்கிய தம்பதி.. அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு… நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

கோவையில்..

கோவை தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையத்தை சேர்ந்த அய்யாசாமி (35) ஜெராக்ஸ் கடை மற்றும் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் விற்பனை தரகராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி வெண்ணிலா (30). 7 ஆண்டுகளுக்கு முன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன் சொந்தமாக வீடு கட்டி வசித்து வந்ததனர். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக அய்யாசாமியின் வீடு திறக்காமலேயே இருந்த நிலையில், வீட்டில் இருந்து நுர்நாற்றம் வீசியதாக தெரிகிறது.  இதையடுத்து அக்கம்பக்கத்தினர் தொண்டாமுத்தூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள அறையில் இருவரும் தூக்கில் தொங்கியவாறு சடலமாக கிடந்துள்ளனர். இதையடுத்து இருவரின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், அய்யாச்சாமிக்கு ரூ.2.5 கோடி கடன் இருந்ததாகவும், அன்மையில் கட்டிய வீடும் கடன் வாங்கி கட்டியதால் சிரம்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

அம்பலமான கணவனின் ரகசியம்… 2 வாரத்தில் புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு!!

கரூரில்..

கரூரில் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் உறவு இருப்பதாக கூறி புதுப்பெண் உருக்கமாக வீடியோ வெளியிட்டு தூக்கிட்டு தற்கொலை. ”எனக்கு பிப்ரவரி 23 ஆம் தேதிதான் திருமணம் நடந்தது…

எனக்கு திருமணமாகி என் புருஷனுடன் இல்லற வாழ்வில் இரண்டு நாட்கள் மட்டும்தான் மகிழ்ச்சியாக இருந்தேன்” என்று தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கரூர், தாந்தோணிமலை பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் ராகபிரியா (27). இவர் பொரணியில் உள்ள அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

ராகப்பிரியாவிற்கும், சுதர்சன் என்பவருக்கும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. இந்நிலையில் சுதர்சனுக்கும் மற்றொரு பெண்ணிற்கும் இடையே தகாத உறவு இருந்ததாக ராகபிரியாவிற்கு தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மணமுடைந்து காணப்பட்ட ராகப் பிரியா வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு இறந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த தாந்தோணிமலை போலீசார் சம்பவ இடத்தற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காந்திகிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

திருமணம் ஆன இரண்டு வாரங்களில் புதுப்பெண் தூக்கு மாட்டி இறந்ததால் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும், தனது தற்கொலைக்கு கணவர்தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு, ராகபிரியா உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. மேலும் அந்த கடிதத்தில், எனக்கு பிப்ரவரி 23 ஆம் தேதிதான் திருமணம் நடந்தது… எனக்கு திருமணமாகி என் புருஷனுடன் இல்லற வாழ்வில் இரண்டு நாட்கள் மட்டும்தான் மகிழ்ச்சியாக இருந்தேன்.

சுதர்சனுக்கு என் மேல் துளிகூட விருப்பம் இல்லை என்று 13 தினங்களில் புரிந்துகொண்டேன். என்னை மனதளவில் மிகவும் பாதிப்படைய செய்தான் சுதர்சன். என் குடும்பத்துக்காக அனைத்தையும் பொறுத்துக்கொண்டேன்..

என் மரணத்துக்கு ரம்யாவும், சுதர்சனும் தான்” என்று அதில் எழுதியுள்ளார் ராக்பிரியா.இந்த சம்பவம் குறித்து கரூர் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

திருமணத்துக்கு முன்பு மாப்பிள்ளை/மணமகள் குறித்து தீர விசாரிக்காமல் வரன் அமைந்தால் போதும் என்று நினைத்தால் சில நேரங்களில் என்ன மாதிரியான அசம்பாவிதங்கள் நடக்கும் என்பதற்கு இந்த சம்பவமே உதாரணமாக அமைந்துள்ளது.

27 வயது இளம்பெண்ணுக்கு திருமணமாகி இல்லற வாழ்க்கையில் பல கனவுகளோடு இணைந்த நேரத்தில் கணவனுக்கு திருமணத்துக்கு முன்பே தகாத உறவு இருந்த விவகாரம் தெரிந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிறந்த நாளே இறந்த நாளான சோகம்.. கதறும் குடும்பம்!!

சேலத்தில்..

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவர் தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இவருக்கு நேற்று பிறந்தநாள். இதனால் அவரது கல்லூரி நன்பவர்கள் சேர்ந்து பிறந்தநாளைக் கொண்டாட முடிவு செய்துள்ளனர். அன்படி ரஞ்சித் வீட்டு அருகே இருக்கும் நண்பர்கள் சுந்தர் மற்றும் கவுதம் ஆகிய இருவர் அவரை கல்லூரியிலிருந்து அழைத்து வருவதற்காக சென்றனர்.

பின்னர் ரஞ்சித்தை அழைத்துக் கொண்டு மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட விபத்தில் மூன்று பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கிருந்த மக்கள் மூன்று பேரையும் மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிகிச்சை பலனின்றி ரஞ்சித் குமார் மற்றும் கவுதம் இருவரும் உயிரிழந்துள்ளனர். மேலும் சுந்தர் கவலைக்கிடமான நிலையில் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்த நாள் அன்றே ரஞ்சித் குமாரும் அவரது நண்பர் கவுதமும் உயிரிழந்த சம்பவம் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட பெண்… அடுத்த 24 மணிநேரத்தில் எடுத்த முடிவு!!

அர்ஜென்டினாவில்..

அர்ஜென்டினாவில் தன்னைத் தானே திருமண செய்துகொண்ட பெண் ஒருவர், அடுத்த 24 மணிநேரத்தில் அதனை வெறுத்து விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார்.

அர்ஜென்டினாவைச் சேர்ந்த 25 வயது சோஃபி மயூரே (Sofi Maure), பிப்ரவரியில் Sologamy சொல்லப்படும் தன்னைத் தானே திருமணம் செய்வதாக சமூக ஊடகங்களில் அறிவித்தார்.

அப்போது ஒரு வெள்ளை நிற திருமண ஆடை மற்றும் தங்கத் தலைப்பாகை அணிந்திருக்கும் படங்களையும் அவர் வெளியிட்டார். மேலும், திருமண கேக்கை தானே தயார் செய்ததாகவும் கூறினார்.

சிலர் அவரது முடிவிற்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்தனர். ஆனால். ஒரு சிலர், இது வெறும் கவன ஈர்ப்புக்கான செயல் என விமர்சித்தனர். ஆனால், சோஃபியின் எண்ணம் நீண்ட காலம் நீடிக்கவில்லை.

பலர் ஆதரவாக இருந்தபோதிலும், தன்னைத்தானே விரும்பி திருமணம் செய்துகொண்ட அவர் தனது உறுதிப்பாட்டிலிருந்து வெறும் 24 மணிநேரத்திலேயே மீறினார்.

ஏனெனில், திருமணம் செய்த ஒரு நாளுக்கு பிறகு பிப்ரவரி 20-ஆம் திகதி அன்று தனது தான் விவாகரத்து செய்யவுள்ளதாக அறிவித்தார். அவர் தனது சமூக வலைதளபக்கத்தில் “அப்டேட்: ஒரு நாள் நான் என்னை திருமணம் செய்து கொண்டேன், இனியும் என்னால் அதை தாங்க முடியாது.

இப்படி ஒரு சூழலில் எவ்வாறு விவாகரத்து செய்வது என்பதை நான் பார்க்கிறேன்,” என்று அவர் பதிவிட்டார். இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் விறுவிறுப்பான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஒரு பயனர், “திருமணமான முதல் 3 மாதங்களில் எக்ஸ்பிரஸ் விவாகரத்து உள்ளது, எனவே கவலைப்பட வேண்டாம்.” என்று கூறியுள்ளார். மற்றோருவர் “ஒரு நல்ல வழக்கறிஞரைப் பாருங்கள்’ என்று கேலி செய்தார். மூன்றாவதாக ஒருவர், “உங்களால் உங்கள் முடிவில் நிலைத்திருக்க முடியவில்லை” என்று கருத்து தெரிவித்தார்.

திருமணமான 14 நாட்களில் உருக்கமான வீடியோவை வெளியிட்டு பெண் எடுத்த விபரீத முடிவு!!

கரூரில்..

கரூரில் திருமணமாகி இரண்டு வாரத்துக்குள் இளம்பெண் ஒருவர் உருக்கமான வீடியோவை வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர், தாந்தோணிமலை பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் ராகபிரியா (27). இவர் பொரணியில் உள்ள அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

ராகப்பிரியாவிற்கும், சுதர்சன் என்பவருக்கும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. இந்நிலையில், சுதர்சனுக்கும், மற்றொரு பெண்ணிற்கும் இடையே தகாத உறவு இருந்ததாக ராகபிரியாவிற்கு தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட ராகப் பிரியா வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு மாட்டி இறந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த தாந்தோணிமலை போலீசார் சம்பவ இடத்தற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, காந்திகிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

திருமணம் ஆன இரண்டு வாரங்களில் புதுப்பெண் தூக்கு மாட்டி இறந்ததால் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும், தனது தற்கொலைக்கு கணவர்தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு, ராகபிரியா உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. சம்பவம் குறித்து கரூர் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். மேலும், தற்கொலை செய்து கொண்ட ராகபிரியாவின் கணவர் சுதர்சன் தாந்தோணிமலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சீனாவில் புழு மழை.. அச்சத்தில் பொதுமக்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

சீனாவில்..

பொதுவாக கனமழை, பருவமழை, ஆலங்கட்டி மழை, புயல் மழை தான் இது வரை நாம் எல்லோரும் பார்த்துள்ளோம். பெரும் பணக்காரர்கள் நடத்தும் விழாக்களில் பணமழை கூட சினிமாக்களில் பார்த்துள்ளோம் .

ஆனால் சீனாவில் தலைநகர் பீஜிங்கில் முக்கிய சாலையில் வாகனங்கள் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் மீது புழுக்கள் மழையாக பொழிந்துள்ளன. செல்லும் பாதையெங்கும் புழுக்கள் நெளிவதை பார்த்து பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் வரிசையாக நிற்கும் கார்களின் மீது பெரிய, தடிமனான அளவுள்ள, பழுப்பு நிறத்தில் வளைந்தும், நெளிந்தும் போர்வை போன்று புழுக்கள் குவிந்துள்ளன.

வானில் இருந்து புழுக்கள் ஏதும் மேலே பட்டுவிடக் கூடாது என்பதற்காக சிலர் குடை பிடித்தபடியே செல்வதையும் காணமுடிகிறது. இதற்கான காரணம் இதுவரை என்னவென்றே தெரியவில்லை.

பலத்த காற்றில் அடித்து வரப்பட்டு போடப்பட்டு இருக்கும் என மதர் நேச்சர் என்ற அறிவியல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சூறாவளியில் இந்த பூச்சிகள் சிக்கும்போது இதுபோன்று நடக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இது குறித்து சீன பத்திரிகையாளரான ஷென் ஷிவெய் இந்த , வீடியோவில் உண்மை இல்லை. முற்றிலும் போலியானது. நான் பீஜிங்கில் தான் வசித்து வருகிறேன். கடந்த சில நாட்களாக மழையே இல்லை. மரங்களில் இருந்து புழுக்கள் கீழே விழுவது இயல்பானது தான்.

வசந்த காலத்தின்போது இதுபோன்று ஏற்படும் எனவும் சிலர் தெரிவித்துள்ளனர். ஒரு சிலர், அவை புழுக்கள் அல்ல என்றும் அவை கம்பளிப்பூச்சிகள் என பதிவிட்டு வருகின்றனர். எது எப்படியாக இருந்தாலும் என்ன தான் அறிவியல் வளர்ச்சி அடைந்திருந்தாலும் இது போன்ற கேள்விகளுக்கும், விளைவுகளுக்கும் பதிலோ, காரணங்களோ கிடையாது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவன் பகிடைவதை காரணமாக எடுத்த தவறான முடிவு : கதறும் பெற்றோர்!!

மாணவன்..

மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த மாணவன் ஒருவன், சிரேஷ்ட மாணவர்களின் பகிடிவதையைத் தாங்காது தவறான முடிவு எடுத்து உயிர்மாய்க்க முயன்றுள்ள நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார்.

வறுமையான குடும்பப் பின்னணியிலிருந்து மொரட்டுவ பல்கலைக்கழகத்துக்குத் தெரிவான 23 வயதான மாணவனே பகிடிவதைக் கொடுமையால் இவ்வாறான ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

சிரேஷ்ட மாணவர்கள் தினமும் மாலை 6 மணி தொடக்கம் இரவு 10 மணி வரையில் தொலைபேசியில் தங்களுடன் கதைக்க வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளனர். அத்துடன் சிரேஷ்ட மாணவர்களுக்கு மரியாதை செலுத்துவேன் என்று ஆயிரம் தடவை எழுதித் தருமாறும் பணித்துள்ளனர்.

இவ்வாறான பகிடிவதைக் கொடுமைகளுக்கு மேலதிகமாக விடுமுறையில் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த சிரேஷ்ட மாணவர்கள் இருவர் இந்த மாணவனை அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர்.

இதையடுத்து பல்கலைக்கழகத்துக்குச் செல்லமாட்டேன் என்று வீட்டிலிருந்தவர்களிடம் மாணவன் தெரிவித்துள்ளார். வீட்டார் பல்கலைக்கழகத்துக்குச் செல்லுமாறு கட்டாயப்படுத்தியதையடுத்து யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்து மாணவன் வெளியேறிச் சென்றுள்ளார்.

காங்கேசன்துறை கடற்கரைப் பகுதியில் 2 நாள்களும், அதன் பின்னர் தெல்லிப்பழை பகுதியிலுள்ள பாழடைந்த வீட்டில் 2 நாள்களும் குறித்த மாணவன் தனித்திருந்துள்ளார்.

பாழடைந்த வீட்டுக்கு அருகிலிருப்பவர்கள், மாணவன் தனித்து அங்கு தங்கியிருந்தமையைக் கண்டு பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். அதற்கிடையில் வீட்டார், மாணவனைக் காணவில்லை என்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதையடுத்து கோப்பாய் பொலிஸாரால் மீட்கப்பட்ட மாணவன் மருத்துவப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மாணவனது கழுத்திலும், கைகளிலும் வெட்டுக் காயங்கள் காணப்படுகின்றன.விரக்தியில் அவ்வாறு செய்ததாக விசாரணைகளின்போது மாணவன் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் உடனடியாகவே மொரட்டுவ பல்கலைக்கழகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

“பகிடிவதைக்கு உள்ளான மாணவன் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவில் தனித்திருந்த நிலையில் மீட்கப்பட்டான்” என்பதை உறுதிப்படுத்திய கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மாணவன் தவறான முடிவு எடுத்து உயிர்மாய்க்க முயற்சிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

ஆனால் மருத்துவச் சோதனைகளில் மாணவன் அவ்வாறு முயற்சித்தமை கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பேராதனைப் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்ட யாழ்.

மாணவன் பகிடிவதை கொடுமை காரணமாக 1996ஆம் ஆண்டு உயிரிழந்தமையையடுத்து கல்வி நிறுவனங்களில் பகிடிவதை மற்றும் பிற வன்முறைகளைத் தடை செய்யும் 1998ஆம் வருட, 20ஆம் இலக்கச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் அடிப்படையில் பகிடிவதை தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுகின்றது.

இலங்கையில் அதிகரித்துள்ள விவாகரத்துக்கள் மற்றும் குடும்ப வன்முறை வழக்குகள்!!

இலங்கையில்..

பெரும்பாலான இலங்கையர்கள் விவாகரத்து மற்றும் பராமரிப்பு வழக்குகளுக்கு சட்ட உதவி கோரியுள்ளதாக இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டில் மாத்திரம் 8431 விவாகரத்து வழக்குகளுக்கு சட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது.

பராமரிப்பு வழக்குகள் மற்றும் குடும்ப வன்முறை வழக்குகளில் குழந்தைகள், பெண்கள் மற்றும் பெரியவர்களுக்கு அவர்களின் வருமான பதிவுகளை அழைக்காமலேயே சட்ட உதவி வழங்கப்படுகிறது.

சனத்தொகையை பொறுத்தமட்டில் கிழக்கு மாகாணத்தில் இருந்து அதிகளவான பராமரிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன என இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளர் கௌசல்யா ஹப்புஆராச்சி தெரிவித்தார்.

“2011 முதல் 2021 வரையான 10 ஆண்டுகளில் 9916,540 பேருக்கு சட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு மாத்திரம் 169,215 பேருக்கு சட்ட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதுடன் 49,479 பேர் சட்ட நடவடிக்கைகளில் ஆஜராகியுள்ளதாக பிரதிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

கடன் அட்டை பயன்பாடு குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்கள்!!

மத்திய வங்கி..

2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2022ஆம் ஆண்டில் கடன் அட்டைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், 19,027,195 அட்டைகள் செயற்பாட்டில் இருந்ததாகவும், 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 19,052,991 ஆக இருந்ததாகவும் மத்திய வங்கியின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அவற்றில், 13,445 உள்ளூர் கடன் அட்டைகளும் 19,040,720 உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடன் அட்டைகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2021 ஆம் ஆண்டில் 133,285 கடன் அட்டைகள் நிலுவையில் உள்ளதாகவும் இது 2022 ஆம் ஆண்டில் 143,098 ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய வங்கியின் அறிக்கைகள் மேலும் சுட்டிக்காட்டுகின்றன.

பாடசாலை மாணவன் உயிரைப் பறித்த விபத்து : மற்றொருவர் படுகாமடைந்த நிலையில் வைத்தியசாலையில்!!

விபத்தில்..

நிவித்திகலை பொலிஸ் பிரிவில் நேற்று முன்தினம் (10) இடம் பெற்ற வீதி விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிழந்துள்ளார். சம்பவத்தில் தொளஸ்வலை தோட்டத்தைச் சேர்ந்தவரும் தேல தமிழ் மகா வித்தியாலத்தில் தரம் 09 இல் கல்வி கற்பவருமான மேர்வின் சொலமன் (வயது 14) என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் மற்றொருவர் படுகாமடைந்த நிலையில் இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுசிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ தினம் மாலை 5.30 மணியளவில் நிவித்திகலை பகுதியிலிருந்து இரத்தினபுரி நோக்கி அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலுள்ள மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே கடந்த வெள்ளிக்கிழமை இரவு மேற்படி மாணவன் உயிழந்துள்ளார்.

காயமடைந்த மற்ற நபர் ஆபத்தான நிலையில் இரத்தினபுரி பொது வைத்தியசாலை அவசரப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். விபத்து குறித்து நிவித்திகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்த மாணவனின் தாயார் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் சென்ற நிலையில் அவரது தந்தை குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றதால் தனது சகோதரனின் அரவணைப்பில் வளர்ந்து வந்தவர் எனவும் தெரிவிகப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நேருக்கு நேர் கார் மீது பஸ் மோதி பயங்கர விபத்து… பதற வைக்கும் வைரல் வீடியோ!!

கேரளாவில்..

கேரளாவில் நேருக்கு நேராக கார் மீது பஸ் மோதி விபத்து நடந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், கேரளா, பத்தனம்திட்டா மாவட்டம், கிழவல்லூர் அருகே கார் மீது கேரள மாநில சாலை போக்குவரத்து கழக பஸ் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது, இந்த விபத்தில் பஸ் தேவாலயத்தின் சுவர் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் தேவாலயத்தின் பெரிய சுவர் இடிந்து பஸ் மீது விழுந்தது.

இந்த விபத்தில் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் மருத்துவர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

புகையிரத்தில் கைவிடப்பட்ட சிசு.. கைது செய்யப்பட்ட தாய் கூறிய காரணம்!!

பண்டாரவளையில்..

கொழும்பு – கோட்டை தொடருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தொடருந்தின் கழிவறையில் கைக்குழந்தையை விட்டுச் சென்றமை குறித்து கைது செய்யப்பட்ட குழந்தையின் தாயார் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

குழந்தையை யாராவது எடுத்துச் சென்று பத்திரமாக வளர்ப்பார்கள் என்று நினைத்து அப்படி விட்டுச் சென்றதாக குறித்த பெண் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று இரவு கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த தொடருந்தின் கழிவறையில் கூடையொன்றில் இருந்து குறித்த குழந்தை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குழந்தையின் பெற்றோரான தம்பதியினர் 26 வயதுடைய திருமணமாகாதர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. பண்டாரவளை மற்றும் கொஸ்லந்த பொலிஸ் நிலையங்களால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு 7 மணியளவில் மட்டக்களப்புக்கு புறப்படவிருந்த மீனகயா தொடருந்தில் இருந்து கைவிடப்பட்ட இந்த குழந்தையை பயணிகளும் தொடருந்து அதிகாரிகளும் கண்டுபிடித்தமை குறிப்பிடத்தக்கது.