மலேசிய பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்.. திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலன் செய்த மோசமான செயல்!!

புதுக்கோட்டையில்..

மலேசிய பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி 40 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த காதலன் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூரைச் சேர்ந்த பொன் மணிகண்டன் என்பவர், மலேசியாவில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது, மலேசியா சிட்டிசனான மகேஸ்வரி என்ற பெண்ணிடம் நெருங்கி பழகி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரிடம் 40 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளார்.

ஆனால், கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் நேரத்தில் இந்தியா வந்தவர் மீண்டும் மலேசியா செல்லாமல் பரம்பூரிலேயே இருந்துள்ளார். மகேஸ்வரி போன் மூலம் தொடர்பு கொண்ட போதும், பிஸியாக இருப்பதாக கூறி அலைக்கழித்து வந்துள்ளார்.

இதையடுத்து தனது காதலன் மீது சந்தேகமடைந்த மகேஸ்வரி, இந்தியா வந்து பொன் மணிகண்டனிடம் திருமணம் குறித்து கேட்டபோது, அவரும் குடும்பத்தாரும் சேர்ந்து மகேஸ்வரியை மிரட்டியுள்ளனர்.

அஅதுமட்டுமல்லாமல், மணிகண்டனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதையும் கண்டுபிடித்துள்ளார். தன்பிறகு, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மகேஸ்வரி அன்னவாசல் காவல் நிலையத்தில்,

தன்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக்கூறி ஏமாற்றிய காதலன் மீது புகாரி அளித்தார். புகாரின்பேரில், மணிகண்டன் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மாமியாரால் உயிரைவிட்ட புதுமணப்பெண் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

திருப்பத்தூரில்..

திருப்பத்தூர் அருகே மற்றபள்ளி கிராமத்தை சேர்ந்த சூர்யா (27) என்பவர் உளுந்தூர் பேட்டையை சேர்ந்த ஆதிலட்சுமியை (22) கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்து காதலித்து வந்துள்ளார்.

கோவை மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் நூல் மில்லில் வேலை செய்து கொண்டிருந்த போது இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெற்றது.

காதலுக்கு தொடக்கத்தில் எதிர்த்த ஆதிலட்சுமியின் பெற்றோர், பின்னர் சமாதானம் அடைந்து 20 சவரன் நகை மற்றும் இரு சக்கர வாகனத்தை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

திருமணம் நடந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனை காரணம் காட்டி ஆதிலட்சுமியிடம் கணவர் குடும்பத்தினர் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆதிலட்சுமி சமையல் செய்வதற்கு தாமதபடுத்தியதாக கூறி மாமியார் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த ஆதிலட்சுமி, வீட்டில் தனது அறைக்கு சென்று துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

வெளியே வேலைக்கு சென்றிருந்த கணவர் மீண்டும் வீட்டுக்கு வந்து அறையை திறந்து பார்த்த போது தான் இது தெரிய வந்தது. இதனால் அப்பெண்ணின் காதல் கணவர் கதறி அழுதார்.

இதனையடுத்து தகவல் அறிந்து வந்த ஆதிலட்சுமியின் பெற்றோர் தங்கள் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக திருப்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தகவலின் பேரில் ஆதிலட்சுமி பிரேத உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறுக்கு ஆய்வுக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.

ஆதிலட்சுமி தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முன்பு அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டன.

பெண்ணின் உறவினர்கள், ஆதிலட்சுமியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி திருப்பத்தூர் அரசு மருத்துவமனை நுழைவாயில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்தை விரைந்து வந்த போலீசார் உரிய விசாரணை மேற்கொள்வதாக கூறியதன் அடிப்படையில் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.மேலும் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆவதால், இந்த விசாரணை திருப்பத்துார் சப் -கலெக்டருக்கு மாற்றப்பட்டுள்ளது.

ரூபாவின் பெறுமதியில் திடீர் வீழ்ச்சி – மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்!!

ரூபாவின் பெறுமதி..

நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் அமெரிக்க டொலரின் விலையில் சிறு அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த இரு வாரங்களில் சடுதியாக அதிகரித்திருந்தது. இதன்படி, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 335.68 ரூபாவாகவும், கொள்வனவு விலை 319.84 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

எவ்வாறாயினும், கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாவின் மதிப்பிலும் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது, அதே நேரத்தில் யூரோவுக்கு எதிராக ரூபாவின் பெறுமதியிலும் வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு தளம்பல் நிலையில் உள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 361.29 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 341.42 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 410.07 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 387.92 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

நாட்டின் பொருளாதார நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அண்மைய நாட்களாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமாக அதிகரித்து வருகின்றது.

எனினும், நேற்றுடன் ஒப்பிடும் போது பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பில் மீண்டும் சரிவு ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் களவாடப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான கையடக்க தொலைபேசிகள்!!

இலங்கையில்..

இலங்கையில் கடந்த இரண்டு மாத காலப் பகுதியில் 8422 கையடக்க தொலைபேசிகள் களவாடப்பட்டுள்ளன. இலங்கை தொலைதொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

காணாமல் போகும் தொலைபேசிகளை கண்டறியும் நோக்கில் 2018ஆம் ஆண்டு முதல் பொலிஸார் விசேட திட்டமொன்றை அறிமுகம் செய்திருந்தனர்.

இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுவரையில் ஆணைக்குழுவிற்கு தொலைபேசி காணாமல்போன சம்பவங்கள் தொடர்பில் 134,451 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2021ஆம் ஆண்டில் சுமார் 28,000 தொலைபேசிகள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வேலை நிறுத்தம் செய்வோரின் சொத்துக்கள் பறிமுதல்.. வேலையும் பறிபோகும் : கடும் எச்சரிக்கை!!

இலங்கையில்..

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், நாடு நெருக்கடியான தருணத்தில் இலங்கையில் வேலைநிறுத்தம் செய்வதால் இந்த வேலைத்திட்டத்தை சீர்குலைக்க இடமளிக்கப் போவதில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் வேலைநிறுத்தம் மற்றும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை சீர்குலைக்கும் அனைத்து வேலைநிறுத்தங்களிலும் ஈடுபடும் குற்றவாளிகளது அசையும் அல்லது அசையா சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என்றும்,

அந்தக் குற்றச்சாட்டுக்களின் கீழ் நடத்தப்படும் விசாரணையின் பின் குற்றவாளிகள் என நிரூபிக்கப்படுபவர்களுக்கு இரண்டு வருடங்கள் அல்லது அதற்கும் குறைவான சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இந்தக் குற்றத்தை செய்பவர் பணிபுரியும் உரிமையை இழக்க நேரிடும் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

ஒரே ஒரு பேப்பரில் 135 கோவில்களை வரைந்து சாதனை படைத்த மாணவி… குவியும் வாழ்த்துக்கள்!!

கல்லூரி மாணவி..

ஒரே ஒரு ஏ4 பேப்பரில் 135 தமிழக கோவில்களை வரைந்து சாதனைப் படைத்த மாணவிக்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில், தஞ்சாவூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி பென்சில், ரப்பர் உள்ளிட்ட எதையும் பயன்படுத்தாமல் ஒரே ஒரு ஏ4 பேப்பரில் 3 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 135 முக்கிய கோவில்களின் தோற்றத்தைப் படம் வரைந்து சாதனைப் படைத்திருக்கிறார்.

தற்போது இது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே ஆச்சரியமடைந்து, மாணவிக்கு வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

மரணத்திலும் பிரியாத தம்பதி… கணவர் இறந்த செய்தி கேட்டு உயிரைவிட்ட மனைவி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

காஞ்சிபுரத்தில்..

காஞ்சிபுரம் பாவாபேட்டை தெரு பகுதியை கணேஷ் இவர் பாஜக தமிழ்நாடு மாநில அமைப்பு சாரா தொழிலாளர் சங்க துணைத் தலைவராகவும் பிரபல பட்டு சேலை உற்பத்தி மற்றும் விற்பனை செய்து வருகிறார்.

இவருடன் இவரது தந்தை துரைசாமி(77) மற்றும் தாயார் மல்லிகாவுடன்(68) வசித்து வருகிறார். இந்நிலயில் அதிகாலை துரைசாமி தூங்கிக் கொண்டிருந்த போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவரது உடலை வீட்டுக்கு எடுத்து வந்தபோது அவரது மனைவி மல்லிகாவிடம் இது குறித்து தெரிவித்துள்ளனர்.

கணவர் துரைசாமி இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த மல்லிகா திடீரென மயங்கி விழுந்த நிலையில் அவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவரும் மாரடைப்பால் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

கணவர் இறந்த சில நிமிடங்களிலே அச்செய்தி கேட்ட மனைவியும் இருந்தது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 53 ஆண்டுகால திருமண வாழ்வில் இணைபிரியாது இருந்த நிலையில் மரணத்திலும் தங்களை ஒருவருக்கொருவர் இணைத்துக் கொண்டது பெரும் சோகத்தை அப்பகுதியில் ஏற்படுத்தி உள்ளது.

இந்த மரண செய்தியை கேட்ட அப்பகுதி மட்டுமல்லாமல் அரசியல் பிரமுகர்கள் நண்பர்கள் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பெண் மருத்துவர் கொலை.. காதலன் எடுத்த விபரீத முடிவு : நடந்தது என்ன?

ஜம்முவில்..

ஜம்முவை சார்ந்தவர் ஜோஹர் மெஹ்மூத் கனாய். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்த இளைஞரும், சுமேதா ஷர்மா என்ற இளம்பெண்ணும் ஜம்முவில் உள்ள பல் மருத்துவக் கல்லூரியில் BDS படித்தனர். அப்போது இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சுமேதா, மேற்படிப்புக்காக ஜம்முவை விட்டு வேறு பகுதிக்கு செல்லவே, ஜோஹர் ஜம்முவில் இருந்துள்ளார். தற்போது MDS படித்து வரும் சுமேதா, கடந்த மார்ச் 7-ம் தேதி ஹோலி பண்டிகையை கொண்டாட ஜம்முவுக்கு வந்துள்ளார்.

எனவே சம்பவத்தன்று தனது ஆண் நண்பரான ஜோஹரை சந்திக்க அவரது இல்லத்திற்கு சென்றுள்ளார். இருவரும் ஜோஹர் இல்லத்தில் இருந்து பேசிக்கொண்டிருக்கவே இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த ஜோஹர், தன் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து சுமேதாவை குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் அவர் மயங்கினார். தொடர்ந்து கதறி அழுத ஜோஹர், தானும் தற்கொலை செய்ய எண்ணியுள்ளார்.

அதன்படி தனது முகநூல் பக்கத்தில் தனக்கு அதிகமான சொந்த பிரச்னை இருப்பதால், தனது வாழ்க்கையை முடித்து கொள்ளப்போவதாக பதிவிட்டு தனது வயிற்றில் அதே கத்தியால் குத்தி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். ஜோஹரின் முகநூல் பதிவை கண்ட அவரது உறவினர் ஒருவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் ஜோஹர் வீட்டிற்கு விரைந்த போலீஸ், அவரது வீட்டின் கதவை தட்டியுள்ளனர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை என்பதால், அதனை உடைத்து உள்ளே சென்றனர்.

அங்கே பார்க்கையில் இருவரும் இரத்த வெள்ளத்தில் கீழே கிடந்தனர். தொடர்ந்து இருவரையும் மீட்ட அதிகாரிகள், மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே இவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், சுமேதா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து ஜோஹர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்.

அவருக்கு அங்கே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும் ஜோஹர் கண்விழித்த பிறகே அவர்களுக்குள் என்ன வாக்குவாதம் நடந்தது, எதனால் கொலை செய்தார் என்பது குறித்த விவரங்கள் வெளியாகும். பெண் மருத்துவரை அவரது நண்பரான ஆண் மருத்துவர் கத்தியால் கொலை செய்து, தானும் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் ஜம்முவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவி மீது கோபம்.. ஆத்திரத்தில் மாமியாரின் மூக்கை கடித்து துப்பிய மருமகன்!!

மத்திய பிரதேசத்தில்..

மத்திய பிரதேச மாநிலம் மோர்னியா பகுதியை அடுத்துள்ளது சந்தப்பூர் என்ற கிராமம். இங்கு ரஹ்மத் பகேல் – ராம் விலாசி (55) என்ற தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஷியாம் சுந்தரி என்ற மகள் உள்ளார். திருமண வயது வந்தவுடனே சுந்தரிக்கு திருமண வரன் பார்த்து வந்துள்ளனர்.

அப்போது பக்கத்து ஊரை சேர்ந்த ராஜூ பகேல் என்பவரது குடும்பத்தின் அறிமுகம் கிடைத்துள்ளது. எனவே தங்கள் மகளை ராஜூ பகேலுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தங்கள் மகள் சுந்தரியை திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

திருமணம் முடிந்து ஆரம்பத்தில் நன்றாக சென்றுகொண்டிருந்த குடும்ப வாழ்க்கையில் நாளுக்கு நாள் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. அதோடு ராஜு, அவரது மனைவி சுந்தரியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த சுந்தரி, தனது கணவர் தன்னை துன்புறுத்துவதாக காவல்துறையிலும் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவத்தால் குடும்பத்தில் மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இந்த தகவல் கிடைத்ததையடுத்து சுந்தரியின் தாய் ராம் விலாசி, தந்தை ரஹ்மத் பகேல் ஆகியோர் தங்கள் மகளை பார்க்க சென்றுள்ளனர். அங்கே சுந்தரியிடம் சமரசம் பேச முயற்சித்துள்ளனர்.

இருப்பினும் தனது கணவரோடு தனக்கு வாழ விருப்பமில்லை என்று கூறி வந்தார் சுந்தரி. தொடர்ந்து சிறிது நேரம் கழித்து தாய், தந்தை மீண்டும் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது மருமகன் ராஜு 5 பேர் கொண்ட கும்பலோடு அவர்களை இடைமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இது கைகலப்பாக மாறவே, மாமியார் என்றும் பாராமல், அவரது மூக்கை தனது பற்களாலே அறுத்தெறிந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சுந்தரியின் பெற்றோர் விரைந்து இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தனர்.

தொடர்ந்து ராம் விலாசியை மருத்துவமனையில் அனுமதித்து சிகிக்சை வழங்கப்பட்டு வருகிறது. மனைவி இப்படி செய்வதற்கு காரணம் மாமியார் என்று நினைத்து மருமகன் அவரை தாக்கியபோது, மூக்கை அறுத்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி மீது உள்ள கோபத்தால் மாமியாரின் மூக்கை தனது பற்களால் அறுத்துள்ள மருமகனின் செயல் மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டோவில் சென்ற தாயும் மகளும் துடிதுடித்து பலியான சோகம்!!

மகாராஷ்டிராவில்..

மகாராஷ்டிர மாநிலம் மும்பை பிரதாப் நகர் பகுதியை சேர்ந்த ஷமா ஆஷிப் சேக் ( 28), தனது மகள் அயத் ஆஷிப் சேக் (9) உடன் ஜோகேஸ்வரி மேற்கு விரைவு சாலையில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர்.

பரபரப்பான அந்த சாலையில் அதிகளவில் வாகனங்கள் சென்றுக்கொண்டிருந்தன. அப்போது சால்யக் மருத்துவமனை அருகே சென்றபோது அங்கு கட்டப்பட்டுவரும் 14 மாடி கட்டிடத்தில் இருந்து கனமான இரும்பு பைப் ஒன்று இந்த ஆட்டோ மீது விழுந்தது.

எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தில் ஆட்டோ கீழே அமுங்கி சேதமடைந்தது. இதில் பயணம் செய்த தாய் மற்றும் மகளின் தலையில் பலமாக தாக்கியது. படுகாயத்துடன் போராடிய அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதற்கிடையே, மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஷமா ஆஷிப் சேக் பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு போராடிய சிறுமி அயத் ஆஷிப் சேக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவத்துக்கு காரணமான, கட்டுமான நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து விழுந்த இரும்பு கம்பி தாக்கி தாய், மகள் பலியான சம்பவம் மும்பையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனையிறவில் 27 அடி உயரமான நடராஜரின் திருவுருவச்சிலை பிரதிஸ்டை!!

ஆனையிறவில்..

ஈழத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட 27 அடி உயரமான நடராஜரின் திருவுருவச்சிலை திறப்பு விழா நேற்றையதினம் (12.03) சிறப்பாக நடைபெற்றது.

கிளிநொச்சி – ஆனையிறவில் நடராஐர் பெருமானின் சிலை பக்தர்கள் புடைசூழ பிரதிஸ்டை செய்யபட்டார்.

அதேசமயம் முருகண்டி பிள்ளையாரில் இளைப்பாறிச்செல்வது போன்று இனி வரும் காலங்களில் சாரதிகள் இதிலும் ஓர் ஓய்வினை எடுத்து செல்வதும் சாலச்சிறந்தது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இலங்கையில் டொலர்களை பதுக்கியவர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!!

இலங்கையில்..

மத்திய வங்கி வழங்கிய பொதுமன்னிப்புக் காலத்தில் டொலர்களை தம்வசம் வைத்திருந்தவர்கள் நாணயத்தை மாற்றியிருந்தால் அதிக பெறுமதியை பெற்றுக்கொண்டிருக்க முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நேற்று ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“டொலர் பரிமாற்றத்தை மறைத்து வைத்திருந்தவர்கள் இப்போது கறுப்புச் சந்தையில் அவற்றை மாற்ற முயற்சிக்கின்றனர், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்கள் குறைந்த விலையைப் பெறுகிறார்கள்.

டொலரை சேகரிக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும், டொலர்களை சேகரிக்கும் இறக்குமதியாளர்களுக்கும், கறுப்பு சந்தையில் டொலர்களை சேகரிக்கும் மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கும் அந்த டொலர்களை ரூபாய்க்கு மாற்ற நாங்கள் ஒரு மாத அவகாசம் கொடுத்தோம்.

ஆனால் 30 மில்லியன் டொலர்கள் மட்டுமே வசூல் செய்யப்பட்டது. எங்கள் பேச்சைக் கேட்ட ஏற்றுமதியாளர்கள் அந்தக் காலகட்டத்தில் ஒரு டொலருக்கு சுமார் 365.00 முதல் 370.00 ரூபா வரை பெற்றனர்.

அதனால்தான் நாங்கள் சந்தையில் தலையிட்டோம். தற்போது டொலர்கள் அவசர அவசரமாக ரூபாவிற்கு மாற்றப்படுகிறதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் வீழ்ச்சியடைந்த வேகத்தில் அதிகரிக்கும் தங்கத்தின் விலை!!

தங்கத்தின் விலை..

இலங்கையில் தங்கப்பவுணொன்றின் விலையானது ஒரே வாரத்தில் சுமார் 39,000 ரூபாவினால் குறைந்திருந்த நிலையில் தற்போது வீழ்ச்சியடைந்த வேகத்தில் உயர்ந்து வருகிறது.

அதன்படி கடந்த 9ஆம் திகதியை விட, பத்தாம் திகதி 24 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 10,000 ரூபாவால் அதிகரித்திருந்ததாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் இராமன் பாலசுப்ரமணியம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி மீண்டும் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு பதிவாகியிருந்தது. குறித்த தினத்தில் 24 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 165,000 ரூபாவாக பதிவாகியிருந்ததுடன், 22 கரட் தங்கப்பவுணொன்றின் விலையானது 152,700 ரூபாவாக பதிவாகியிருந்தது.

இவ்வாறான நிலையில் கொழும்பு செட்டியார்தெருவில் இன்றைய தினம் 24 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 173,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 22 கரட் தங்கப்பவுணொன்றின் விலையானது 160,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றமே இந்த திடீர் அதிகரிப்புக்கு காரணமாகும் என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

சேற்றுக்குள் புதைந்திருந்த இளம் பெண்ணின் சடலம்.. பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்!!

அலவத்துகொடையில்..

கண்டி – அலவத்துகொடையில் இளம் பெண்ணொருவர் உ.யிரிழந்த சம்பவம் தொடர்பில் புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது. அதன்படி குறித்த பெ.ண் க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.ல்.ல.ப்.ப.ட்.டு.ள்.ள.தா.க பி.ரேத ப.ரிசோதனையிலிருந்து தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனுகா மதுவந்தி என்ற 26 வயது இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

அலவத்துகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லேகம பகுதியில் வயல் பகுதியில் புதைந்திருந்த நிலையில் குறித்த பெ.ண்ணின் ச.டலம் கடந்த சனிக்கிழமை (11.03.2023) மீட்கப்பட்டிருந்தது.

குறித்த சம்பவம் பெரும் ப.ரபரப்பை ஏ.ற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பில் அலவத்துகொடை பொலிஸார் மேலதிக வி.சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

15ம் திகதி நாடளாவிய ரீதியில் முடங்கும் பாடசாலைகள்.. வெளியான புதிய அறிவிப்பு!!

இலங்கையில்..

எதிர்வரும் 15ஆம் திகதி அதாவது நாளை மறு தினம் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தினத்தில் ஆசிரியர் – அதிபர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஆசிரியர் – அதிபர் சங்க சம்மேளம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளின் ஆசிரியர்கள், அதிபர்கள், அறநெறி ஆசிரியர்கள், ஆசிரிய உதவியாளர்கள் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்கள் ஆகியோர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரியவருகிறது.

இதனால் அன்றைய தினம் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் 15ஆம் திகதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

வரி அதிகரிப்பு, வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரச, தனியார் மற்றும் தனியார் உள்ளிட்ட தோட்டத் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்தின் அழுத்தத்திற்கு எதிராக உழைக்கும் மக்கள் போராட்டம் என்ற ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

8 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் அனைத்து ஆசிரியர்கள், அதிபர்கள், தனியார் ஆசிரியர்கள், துணைப் பாடசாலை ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் ஆகியோர் இந்தப் பணிப்புறக்கணிப்பில் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் பிரதேச கல்வி அலுவலகங்கள் மட்டத்தில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அகில இலங்கை ஆசிரியர் சங்க கூட்டமைப்பு மேலும் தெரிவிக்கின்றது.

இந்த நிலையில் எதிர்வரும் 15ஆம் திகதி நாடாளாவிய ரீதியில் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் முடங்கும் சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலய விளையாட்டுப் போட்டி 2023!!

அல் இக்பால் மகாவித்தியாலயம்..

வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

வவுனியா, சூடுவெந்தபுலவு பகுதியில் அமைந்துள்ள அல் இக்பால் மகாவித்தியாலய மைதானத்தில் முதல்வர் ஏ.கே.உபைத் தலைமையில் இவ் விளையாட்டுப் போட்டி இடம்பெற்றிருந்தது.

பாடசாலையின் பான்ட் அணியினரின் அணிவகுப்பு மரியாதையுடன் அதிதிகள் வரவழைக்கப்பட்டு தொடர்ந்து அணிவகுப்பு மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

இரண்டு வருடங்களுக்கு பின்னர் மிகவும் சிறப்பாக இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும், வெற்றிக் கேடயங்களும் வழங்கி வைக்கப்ட்டிருந்தன.

மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இவ் விளையாட்டுப் போட்டியில் நீண்ட காலத்திற்கு பின்னர் மஞ்சள் நிறத்தையுடைய ஹிலால் இல்லம் முதலாம் இடத்தையும், நீல நிறத்தையுடைய தாரீக் இல்லம் இரண்டாம் இடத்தையும், சிவப்பு நிறத்தையுடைய சிராஜ் இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டதுடன்,

இல்லங்களுக்கான வெற்றி கேடயங்களை பிரதம அதிதியாக கலந்து கொண்ட மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத் சந்திர மற்றும் விருந்தினர்கள் இணைந்து வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட அரச அதிபர், உலுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர், வலய மட்ட பிரதிநிகிகள், அயல் பாடசாலை அதிபர்கள்,

ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.