மாணவியின் கழுத்தை அறுத்துக்கொன்ற காதலன் எடுத்த விபரீத முடிவு!!

தாம்பரத்தில்..

தாம்பரம் ரயில் நிலையம் அருகே கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்துக்கொன்ற காதலன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள ஆதமங்கலம் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் ராமச்சந்திரன்(வயது 27). என்ஜினீயரிங் பட்டதாரி.

சென்னை குரோம்பேட்டை ராதா நகரை சேர்ந்த மதியழகன் மகள் சுவேதா(21) லேப் டெக்னீசியன். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 23-ந் தேதி சென்னை தாம்பரம் ரயில் நிலையம் அருகே ராமச்சந்திரனும், சுவேதாவும் பேசிக்கொண்டு இருத்தனர்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராமச்சந்திரன், தனது காதலியின் கழுத்தை அறுத்து கொன்று விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றார்.

இதில் சம்பவ இடத்திலேயே சுவேதா பரிதாபமாக உயிரிழந்தார். கழுத்து அறுபட்ட நிலையில் ராமச்சந்திரன், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் ராமச்சந்திரனை கைது செய்தனர். குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட ராமச்சந்திரன் 1 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்து ஜாமீனில் வெளிவந்தார்.

மேலும் இது தொடர்பான வழக்கு செங்கல்பட்டு மாவட்ட கோர்ட்டில் நிலுவையில் இருந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று கோர்ட்டில் ஆஜராக வேண்டிய நிலையில் தனது சொந்த ஊரில் இருந்த ராமச்சந்திரன் தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள புளியமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்த அவரது உறவினர்கள் இதுகுறித்து வலிவலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து வலிவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் தனது காதலியை கொன்று விட்டு சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த நாகை என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு.. இலங்கை வரலாற்றில் நடந்திராத ஒன்று : வருட இறுதியில் காத்திருக்கும் மோசமான விளைவுகள்!!

இலங்கையில்..

இலங்கை வரலாற்றில் இவ்வாறு ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றதில்லை. அதிக அளவில் அந்நிய செலாவணி நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் ரூபாய் இந்த வகையில் வலுப்பெற்றதில்லை என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளர்.

ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பு தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ரூபாவின் மதிப்பு திடீரென்று எவ்வாறு வலுவடைந்தது? நான் இதை ஒரு செயற்கையான செயலாகவே பார்க்கிறேன்.

நாம் விரும்பியபடி சந்தையில் இருந்து டொலரை வாங்க முடியாது. சுற்றுலாத் துறை மற்றும் வெளிநாட்டுப் பணம் மூலம் டொலர் வரத்து அதிகரித்துள்ளது. டொலர் வாங்குவது முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டு டொலர்கள் வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

பொருளாதார ரீதியாகப் பார்த்தால், இவ்வாறு ரூபாவின் மதிப்பை வலுப்படுத்த விநியோக அதிகரிப்புக்கு எந்தக் காரணமும் இல்லை. இந்த நிலையில், மத்திய வங்கி மூலோபாய ரீதியாக டொலர் விநியோகத்தை அதிகரித்து, ரூபாயை வலுப்படுத்த தேவையை கட்டுப்படுத்தியது.

அது வேண்டுமென்றே செய்யப்பட்டது. இதில் ரூபாயின் மதிப்பு 362ல் இருந்து 307 ஆக சரிந்தது. இதன் மோசமான விளைவுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏற்படலாம். இந்த கட்டத்தில் ஏற்றுமதியாளர்கள் அதைரியமடையலாம். இறக்குமதியாளர்கள் தைரியமாக இருக்கலாம்.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் அளவு அதிகரித்து, வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பொருட்களின் அளவு குறையலாம். இதன் காரணமாக, நிலுவைத் தொகை பற்றாக்குறையை நோக்கி நகரும்.

இது நிச்சயமற்ற தன்மை. ரூபாவின் பெறுமதி இலங்கையின் பொருளாதாரம் வலுவாக மாறியமையால் ஏற்படவில்லை. இதன் காரணமாக இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் நின்றுவிடுகிறது. அப்போது நாட்டுக்குள் வரும் வெளிநாட்டுப் பணத்தின் அளவு குறையலாம்.

ரூபாயின் பெறுமதி குறைவினால் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறுகிய காலத்திற்கு அதிகரிக்கும், ஆனால் எதிர்காலத்தில் ரூபாயின் பெறுமதி வலுவடைவதால் நீண்ட கால அடிப்படையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறையலாம்.

பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்கும்போது, பொருளாதார மாறுபாடுகள் முறையாக கையாளப்பட வேண்டும். இதனால் குறுகிய காலத்தில் டொலர் மதிப்பு குறைவதும், ரூபாய் வலுவடைவதும் செயற்கையாக நடக்கும் ஒன்றாகும். இந்த மாற்றம் படிப்படியாக நடந்தால், பொருளாதாரத்திற்கு நல்லது என குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

சிறுமிக்கு எமனான தலைமுடி. .திருவிழாவுக்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்!!

காஞ்சிபுரத்தில்..

காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஊராட்சியில் விச்சந்தாங்கல் என்ற கிராமம் உள்ளது. இங்கு காண்டீபன் – லதா தம்பதியர் உள்ளனர். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ள நிலையில், அதில் கடைசி மகள் காஞ்சனாவை சென்னையில் உள்ள சரவணன் என்பவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

திருமணம் முடிந்து இவர்களுக்கு 13 வயதில் லாவண்யா என்ற சிறுமியும், 9 வயதில் புவனேஷ் என்ற மகனும் இருக்கும் நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சரவணன் – காஞ்சனாவுக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது.

இதனால் மனமுடைந்த காஞ்சனா தற்கொலை செய்துகொண்டார். பின்னர் குழந்தைகளை தனியாக பார்த்துக்கொள்ள முடியவில்லை என்று கூறி, அவரது தாத்தா-பாட்டி (காண்டீபன் – லதா) வீட்டில் விட்டுள்ளார் சரவணன்.

இந்த நிலையில் விச்சந்தாங்கலிலுள்ள அங்காளம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழைமை திருவிழாவின் கடைசி நாள் விழா நடைபெற்றது.

அப்போது இரவு சாமி உற்சவ ஊர்வலத்திற்கென மாட்டு வண்டியில் சாமி அலங்கரிக்கப்பட்டு வண்ண, வண்ண மின்விளக்குகள் பொருத்தப்பட்டு அவை ஒளிர்வதற்கென மினி ஜென்ரேட்டர் வைக்கப்பட்டு சாமி புறப்பாடானது மேள தாளங்கள் முழங்க நடைபெற்றது.

அப்போது சிறுமி லாவண்யாவை அவரது தாத்தா வீட்டுக்கு போக சொல்லியுள்ளார். இருப்பினும் சிறுமி வீட்டுக்கு செல்லாமல் அந்த மாட்டு வண்டியின் பின்புறத்தில் ரகசியமாக அமர்ந்துள்ளார்.

தொடர்ந்து திருவிழாவை வேடிக்கை பார்த்து வந்த சிறுமியின் தலைமுடி அருகிலிருந்த ஜெனெரட்டரில் சிக்கியுள்ளது. தொடர்ந்து பலமாக அவரது முடி அதில் சிக்கி பலத்த காயமடைந்தார் சிறுமி.

இதையடுத்து அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து மாகரல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுமியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி, பின்னர் உடலை உரியவர்களிடம் ஒப்படைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோயில் திருவிழாவின்போது 13 வயது சிறுமியின் தலைமுடி ஜெனரேட்டரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தேர்வு எழுதிவிட்டு சகோதரனுடன் வீடு திரும்பிய மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் நேற்று 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு துவங்கிய நிலையில், தேர்வு எழுதி விட்டு, சகோதரனுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவி விஷாலி, விபத்தில் பலியானாது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் விஷாலியின் சகோதரனும் பலியானார்.

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே தாழக்குடி மேலத்தெருவில் வசித்து வருபவர் ரவி. அய்யம்பேட்டை அருகே உள்ள பள்ளி ஒன்றில் இவரது மகள் விஷாலி (17) 12ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று 12ம் வகுப்பு தமிழ் தாள் தேர்வு எழுத பள்ளிக்குச் சென்ற மாணவி விஷாலி, தேர்வு முடிந்த பின்னர், பள்ளியிலேயே தனது தோழிகளுடன் அடுத்த தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தார்.

மாணவிகள் அனைவரும் மாலையில் வீடு திரும்பிய நிலையில், தனது தங்கையை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக அதே ஊரைச் சேர்ந்த விஷாலியின் சித்தப்பா மகன் பிரதீப் (23), மோட்டார் சைக்கிளில் விஷாலியின் பள்ளிக்குச் சென்றிருந்தார்.

பின்னர் இருவரும் மோட்டார் சைக்கிளில் பள்ளியில் இருந்து வீட்டிற்குப் புறப்பட்டனர். இவர்களது மோட்டார் சைக்கிள், தஞ்சை – கும்பகோணம் நெடுஞ்சாலையில் நல்லிச்சேரி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து விஷாலி, பிரதீப் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார் ஆகியோர் விபத்து நடந்த இடத்துக்கு சென்றனர்.

பின்னர் பலியான இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து பற்றி தகவல் அறிந்தவுடன் இருவரின் உறவினர்கள், விஷாலி படித்த பள்ளியின் ஆசிரியைகள், சக மாணவிகள் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடல்களையும் பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. இந்த விபத்து காரணமாக தஞ்சை – கும்பகோணம் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கனேடிய சட்டத்துறையில் சாதனை படைத்த இலங்கைத் தமிழன்!!

கனடா..

வருடாந்திர கனேடிய சட்ட விருதுகளில் எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைப்பதற்கான லிங்கன் அலெக்சாண்டர் சட்டக்கல்லூரி விருது பெற்றவராக சுரேஷ் ஸ்ரீஸ்கந்தராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த விருது கனடா முழுவதிலும் உள்ள முன்னணி சட்ட நிறுவனங்களில் இருந்து குறைவான பிரதிநிதித்துவ சமூகங்களுக்கான நீதிக்கான அணுகலை வலுப்படுத்துகின்ற, புதுமையின் மூலம் சட்ட சேவைகளை மேம்படுத்துகின்ற, மேலும் மாணவர்களை வழிகாட்டுவது மட்டுமின்றி அதற்கும் அப்பால் சட்டக் கல்வியில் முதலீடு செய்கின்ற சட்ட நிறுவனத்துக்கு வழங்கப்படும் விருதாகும்.

இந்நிலையில் சுரேஷ் ஸ்ரீஸ்கந்தராஜா ஒரு பொறியியலாளர் மற்றும் சட்டத்தரணி ஆவார், அவர் கடந்த காலங்களில் பல விருதுகளை வென்றுள்ளார் மற்றும் பல பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு வழிகாட்டியாக உள்ளார்.

இதன்போது சுனாமியின் போது விடுதலை புலிகளுக்கு உதவியதற்காக கனடாவிலும் அமெரிக்காவிலும் ஒருமுறை சிறையில் அடைக்கப்பட்டு சிறையில் இருந்து சட்டம் பயின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மடகஸ்காரில் உயிரிழந்த இலங்கை நபர் : மேலும் இருவருக்கு நேர்ந்த சோகம்!!

மடகஸ்காரில்..

மடகஸ்காரில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் பலியானதோடு இன்னும் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்தில் பேருவளையைச் சேர்ந்த இரத்தினக்கல் வர்த்தகர் முஹம்மது ரிலா என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவர் 50 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர் என தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த இருவரும் தற்போது அந்நாட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பில் மடகஸ்கார் நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மீண்டும் கடும் வீழ்ச்சியை சந்தித்த இலங்கை ரூபா : மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்!!

டொலர்..

நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த இரு வாரங்களில் சடுதியாக அதிகரித்திருந்தது. எனினும், நேற்றையதினம் சிறு வீழ்ச்சி பதிவானதுடன், இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன்படி, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 344.66 ரூபாவாகவும், கொள்வனவு விலை 327.59 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

எவ்வாறாயினும், கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாவின் மதிப்பிலும் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது, அதே நேரத்தில் யூரோவுக்கு எதிராக ரூபாவின் பெறுமதியிலும் வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு தளம்பல் நிலையில் உள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 371.78 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 351.66 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 420.68 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 398.26 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

யாழில் உயிரிழந்த கோடீஸ்வர வர்த்தகர் தொடர்பில் வெளியான புதிய தகவல்!!

யாழ்ப்பாணத்தில்..

யாழ்ப்பாணத்தில் பிரபல கோடீஸ்வர தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ் நகரில் உள்ள பிரபல முதலாளியும் அவரது நகை கடையில் பணிபுரிந்த இளம் யுவதியும் நேற்றியதினம் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

உயிர்ழந்த இருவரும் சுமார் ஓரிரு மணித்தியால இடைவெளியில் தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் நகைக்கடையில் பணிபுரிந்த நாவாந்துறையை சேர்ந்த 22 வயதான யுவதியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்தார்.

இந்நிலையில் அவர் தற்கொலை செய்த தகவல் நகைக்கடையில் இருந்தவர்களிற்கு தெரிய வந்ததையடுத்து, மதியம் வர்த்தகர் தனது வீட்டிற்கு மதிய உணவு அருந்த சென்றபோது வீட்டிலேயே தற்கொலை செய்துள்ளார்.

நாவலர் வீதி, ஆனைப்பந்தியில் உள்ள தனது வீட்டில் வர்த்தகர் தற்கொலை செய்து கொண்டுள நிலையில் அவரது மனைவி, பிள்ளைகள் தற்போது கொழும்பில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

அதே வேளை யுவதி தற்கொலை செய்தவுடன் நகைக்கடை முதலாளியை யுவதியின் உறவுகள் கடுமையான முறையில் அணுக முற்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

நான்கு பிள்ளைகளின் தந்தையான வர்த்தகரின் தற்கொலை யாழ் நகர வர்த்தகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இரண்டு மரணங்களிற்கும் தொடர்புள்ளதா அல்லது தனித்தனி சம்பவங்களா என பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இருவரது சடலங்களும் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் உடற்கூற்று பரிசோதனையின் பின்னே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

-தமிழ்வின்-

வவுனியாவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்பாட்டப் பேரணி!!

ஆர்பாட்டப் பேரணி..

சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் தொழிற்சங்கங்களால் ஆர்பாட்டப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் இன்று (15.03.2023) ஆரம்பமான குறித்த பேரணி மணிக்கூட்டு சந்தியை அடைந்து அங்கிருந்து வலயக்கல்வி அலுவலகம் வரை சென்று மீண்டும் பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள், பொருளாதார நெருக்கடி காரணமாக ஆசியர்கள் அதிபர்கள் உட்பட அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றோம். சுபோதினி ஆணைக்குழுவின் படி மூன்றில் ஒருபகுதி சம்பள உயர்வு வழங்கப்பட்டது.

மீதி அதிகரிப்பு உடனடியாக வழங்கப்பட வேண்டும். அத்துடன் விலையேற்றத்தை கட்டுப்படுத்தி வரிச்சுமையை குறைத்து, மக்கள் இயல்பு வாழ்க்கையை முன்னெடுப்பதற்கான நடவடிக்கையினை எடுக்க வேண்டும். என்றனர்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், மருத்துவ சேவை சங்கம், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, பெண் விடுதலை சிந்தனை அமைப்பு ஆகியவை ஆதரவு வழங்கியதுடன் பேரணியில் பலர் கலந்து கொண்டனர்.

திருமணமான ஆறு மாதத்தில் புது தம்பதிக்கு நேர்ந்த பரிதாபம்!!

திருச்சியில்..

திருச்சி மாவட்டம் சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகள் ராகினி. இவருக்குப் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவருடன் கடந்த ஆகஸ்ட் மாதம் பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், இந்த தம்பதி பெரம்பலூரில் இருந்து திருச்சிக்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அங்க ராகினியின் கிராமத்தில் நடைபெற்ற கிடா வெட்டு திருவிழாவில் கலந்து கொண்டனர்.

பிறகு விருந்து முடித்து விட்டு இருவரும் பெரம்பலூர் நோக்கிச் சென்றுள்ளனர். இவர்கள் திருச்சி நெம்பர் 1 டோல்கேட் அருகே சென்றபோது, திருச்சியில் இருந்து அரியலுர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி ஒன்று இவர்கள் வாகனத்தின் மீது மோதியுள்ளது.

இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் இருவரது உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் பிரபாகரனை போலிஸார் கைது செய்தனர். சாலை விபத்தில் புதிய தம்பதி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உன் வயிற்றில் என் சாதி பிள்ளையா? வளைகாப்பில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

கள்ளக்குறிச்சியில்..

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகள் கல்பனா எம். பி எட் ஆசிரியர் பட்டய படிப்பு முடித்துள்ளார். இந்நிலையில் இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்தனர்.

இவர்கள் இருவருக்கும் கடந்த 2022 ஆண்டு இரண்டு குடும்பத்தின் முழு சம்மதத்தோடு திருமணமும் நடந்துள்ளது. திருமணம் முடிந்து கணவன் – மனைவிக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. இருவரும் சந்தோஷமாகத்தான் குடும்பம் நடத்தி வருகின்றனர்.

ஆனால் கல்பனா மாற்று சமூகத்தைச் சார்ந்த பெண் என்பதால் கணவர் வெங்கடேசனின் உறவினர் செல்வம் என்பவர் தொடர்ந்து சாதியை காரணம் காட்டி கல்பனாவை துன்புறுத்தி வந்துள்ளார்.

சுப நிகழ்ச்சிகளுக்கு சென்றால் அங்கே சாதிப் பெயரைச் சொல்லி கல்பனாவை அசிங்கப்படுத்துவது, சாதியை சொல்லி கல்பனாவை தள்ளி வைப்பது, குடிதண்ணி பிடிக்க போனால் ”நீ இங்கு வந்து தண்ணீர் பிடிக்கக்கூடாது நீ தண்ணீர் பிடித்தால் நாங்கள் தீட்டாகி விடுவோம்” என செல்வம் அடிக்கடி கல்பனாவை கலங்கடித்து வந்துள்ளார் செல்வம்.

இதனால், செல்வத்திற்கும் கல்பனாவின் கணவர் வேங்கடசுவுக்கும் என் மனைவியை ஏன் இப்படி சாதி பெயரைச் சொல்லி அசிங்கப்படுத்துகிறாய் என அடிக்கடி தகராறும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஏழு மாத கர்ப்பிணியான கல்பனாவிற்கு அதே கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

வளைகாப்பு நிகழ்ச்சி முடித்துவிட்டு வீட்டிற்கு வரும்போது செல்வம் என்பவர் கல்பனா வீட்டிற்கு செல்லும் வழியில் செல்ல விடாமல் பெரிய பள்ளம் தோண்டியுள்ளார். அப்போது கல்பனா செல்வத்திடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

அதற்கு செல்வம், ”நீ இங்கு வந்தால் உன்னை கடப்பாரையால் கொன்று புதைத்து விடுவேன் எனவும் அதற்காகத்தான் குழி தோண்டி வைத்துள்ளேன்” எனவும் ஆக்ரோசமாக கூறியுள்ளார்.

மேலும், ”உன் குழந்தை எங்கள் சாதியில் பிறந்தால் நாங்கள் எல்லோரும் தீட்டாகி விடுவோம் ஒழுங்காக உன் அம்மா வீட்டிற்கு ஓடிவிடு.. இல்லையென்றால் உன் வயிற்றில் இருக்கும் குழந்தையை நீயே கொன்றுவிடு.. அப்படி செய்யவில்லை என்றால் உன்னை கடப்பாரையால் அடித்து கொலை செய்து விடுவேன் எனவும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்நிலையில், என்ன செய்வது என்று தெரியாமல் நிறைமாத கர்ப்பிணியான கல்பனாவும் அவரது கணவர் வெங்கடேசனும் வளைகாப்பு நிகழ்ச்சி முடித்துவிட்டு வீட்டுக்கு கூட செல்லாமல் நேராக சங்கராபுரம் காவல் நிலையத்திற்கு வந்து செல்வம் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் புகார் அளித்தனர்.

நிறைமாத கர்ப்பிணி ஒருவர் வளைகாப்பு நிகழ்ச்சி முடித்துவிட்டு நேராக காவல் நிலையத்திற்கு வந்து புகார் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண் கொடுக்காததால் ஆத்திரம்.. இளம்பெண்ணை கொன்று துண்டு துண்டாக்கிய கொடூரன்!!

காஷ்மீரில்..

பெண் கொடுக்காததால் ஆத்திரமடைந்த இளைஞர், இளம்பெண்ணை கடத்தி கொடூரமாக கொலை செய்து, உடல் பாகங்களை வெட்டி பல்வேறு பகுதிகளில் தூக்கி எறிந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ளது புட்காம் (Budgam) என்ற இடம். இங்கு சோய்பக் பகுதி என்ற பகுதி இருக்கிறது. இந்த பகுதியில் 30 வயது இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் கடந்த 7-ம் தேதி அந்த பெண் வழக்கம்போல் கோச்சிங் சென்டர் போயுள்ளார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது சகோதரி அதிகமான இடங்களில் தீவிரமாக தேடியுள்ளார்.

இருப்பினும் அவர் காணவில்லை என்பதால் பதறிப்போன சகோதரி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் அவரை தீவிரமாக தேடியுள்ளனர். தொடர்ந்து அவரது நண்பர், உடன் படித்தவர்கள் என அனைவரையும் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அந்த பெண்ணுக்கு தெரிந்த தச்சு வேலை செய்யும் ஷபீர் அகமது வானி (45) என்ற நபரிடம் விசாரித்தனர். அவரது பதில் சற்று சந்தேகத்தை ஏற்படுத்தியதால் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் அந்த பெண்ணின் போன் கால்களை ஆய்வு செய்தபோது, ஷபீர் கடைசியாக பேசியது தெரியவந்தது. அதன்பேரில் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அந்த பெண்ணை கொலை செய்துவிட்டதாக தெரிவித்தார். மேலும் அவரை துண்டு துண்டாக வெட்டி வீசியதாக அதிர்ச்சி தகவலை கூறினார்.

இதுகுறித்து அவர் அளித்த வாக்குமூலத்தில், ஷபீருக்கு ஒரு அழகான பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என எண்ணியுள்ளார். எனவே அவர் இந்த பெண்ணை பார்த்து பிடித்து போகவே, உடனே அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று பெண் கேட்டுள்ளார்.

ஆனால் பெண்ணின் குடும்பத்தாரோ இவருக்கு பெண் தர முடியாது என்று சில காரணங்களை கூறி மறுத்துள்ளனர். இதனால் கோபத்தில் இருந்த ஷபீர், தனக்கு கிடைக்காத பெண் வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்று எண்ணி அவரை கொலை செய்ய எண்ணியுள்ளார்.

அதன்படி சம்பவத்தன்று அந்த பெண்ணை சந்தித்துள்ளார். பின்னர் அவரை கடத்தி தான் கொண்டு வந்த கூர்மையான ஆயுதத்தால் அவரை கொலை செய்துள்ளார். மேலும் சடலத்தை மறைக்க அவரது உடல் பாகங்களை துண்டு துண்டுகளாக வெட்டி ஓம்பூரா என்ற இடத்தில் பல்வேறு பகுதிகளில் தூக்கி வீசியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ந்து போன அதிகாரிகள் ஷபீரை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் தூக்கி வீசி எறிய பட்ட பெண்ணின் உடல் பாகங்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பெண் கொடுக்காததால் ஆத்திரமடைந்த இளைஞர், இளம்பெண்ணை கடத்தி கொடூரமாக கொலை செய்து, உடல் பாகங்களை வெட்டி பல்வேறு பகுதிகளில் தூக்கி எறிந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 காதலிகளும் குழந்தை பெற்ற பின் இருவரையும் ஒரே மேடையில் திருமணம் செய்த இளைஞர்!!

தெலுங்கானாவில்..

இந்தியாவின் தெலுங்கானாவில் மூன்று வருடங்களாக காதலித்து வந்த இரண்டு பெண்களை ஒரே மேடையில் சதிபாபு என்ற இளைஞர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தின் கொத்தகுடெம் மாவட்டம், எர்ரபோரு கிராமத்தை சேர்ந்த மதிவி சதிபாபு (Madivi Sathibabu) என்ற வாலிபர், இடைநிலை படிக்கும் போது தோசிலப்பள்ளியை சேர்ந்த சோடி ஸ்வப்னா குமாரி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

அதே சமயம் மண்டல் பகுதியில் (mandal) உள்ள குர்னாபள்ளியை சேர்ந்த தனது மைத்துனர் இர்பா சுனிதா என்ற பெண்ணையும் சதிபாபு காதலித்து வந்துள்ளார். இதற்கிடையில் கடந்த மூன்று ஆண்டுகளாக தனது இரண்டு காதலிகளுடனும் சதிபாபு வாழ்ந்த வந்த நிலையில், ஸ்வப்னாவுக்கு ஒரு மகளும், சுனிதாவுக்கு ஒரு மகனும் பிறந்துள்ளனர்.

இதையடுத்து பெண்களின் பெற்றோர் தங்கள் மகள்களை திருமணம் செய்து கொள்ளுமாறு சதிபாபுவை வற்புறுத்தியுள்ளனர், சதிபாபு-வும் இறுதியாக திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற பஞ்சாயத்தில், மூன்று ஊர் பெரியவர்கள் முன்னிலையில் இரு பெண்களையும் அவரை திருமணம் செய்து கொள்ள சதிபாபு சம்மதித்தார். இதையடுத்து அவர்களுக்கு வியாழக்கிழமை (மார்ச் 9) காலை 7 மணிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

ஆனால் இந்த திருமணம் தேவையற்ற கவனத்தை ஈர்த்ததால் ஊர் பெரியவர்கள் திருமண விழாவை புதன்கிழமை இரவே நடத்தி முடித்துள்ளனர். கிராமத்திற்குள் ஊடகங்கள் அனுமதிக்கப்படாத நிலையில், திருமணம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

இலங்கைக்கு கிடைக்கவுள்ள 300 கோடி அமெரிக்க டொலர்கள்.. அமைச்சர் வெளியிட்ட தகவல்!!

அமெரிக்க டொலர்கள்..

நான்கு வருடங்களுக்குள் எட்டுத் தடவைகளில் 300 கோடி டொலர் நிதி சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பொருளாதார உத்தரவாதம் மாத்திரமே கிடைக்கப் பெறவுள்ளதாக பொருளியல்த்துறை பேராசிரியர் ஒருவர் வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் ருவன்வெல்லவில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது ராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். மத்திய வங்கியும் அரசாங்கமும் செயற்கையற்ற ரீதியாக ரூபாவின் பெறுமானத்தை பலப்படுத்தியிருப்பதாக முன்வைக்கப்படும் கூற்றை ராஜாங்க அமைச்சர் மறுத்துள்ளார்.

டொலரின் பெறுமதி குறைந்து ரூபாவின் பெறுமதி பலமடைந்திருப்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவடைவதாகவும் டொலரின் பெறுமதி குறைவதால் வெளிநாட்டு ஊழியர்கள் அனுப்பும் பணத்தின் தொகை குறைவடைவதாகவும் முன்வைக்கப்படும் கூற்றுக்களில் எதுவித உண்மையும் இல்லையென அவர் வலியுறுத்தியுள்ளார்.

பச்சை துரோகத்தில் சிக்கிய அப்பாவி… தொழிலதிபருக்கு இளம் பெண்ணால் நேர்ந்த சோகம்!!

சென்னையில்..

சென்னை முகலிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராம்பாலாஜி. 42 வயதாகிறது. இவர் ஒரு பிசினஸ்மேன். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். திருமணமாகிவிட்டது. ஒரு மகன் இருக்கிறார்.

ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக, மனைவியை டைவர்ஸ் செய்துவிட்டார். எனவே, மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது நண்பருக்கு மதுரையில் திருமணம் நடந்துள்ளது.

அந்த கல்யாணத்துக்காக ராம்பாலாஜி சென்றிருக்கிறார். அப்போது அந்த கல்யாணத்தில் வித்யாஸ்ரீ என்ற பெண்ணை சந்தித்துள்ளார். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அடுத்த சிக்கந்தர்சாவடி பகுதியை சேர்ந்தவர்தான் வித்யா. இந்த பெண்ணுக்கு 31 வயதாகிறது.

இவருக்கும் கல்யாணமாகிவிட்டது. 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். ஆனால், இந்த பெண்ணும், கணவரைவிட்டு பிரிந்து டைவர்ஸ் வாங்கிக்கொண்டு, தனியாக வசித்து வருகிறார். 2 பேருமே டைவர்ஸ் என்பதால், அறிமுகமான கொஞ்ச நேரத்திற்கெல்லாம் நட்பாக பேசியுள்ளனர்.

ஒருகட்டத்தில், ராம்பாலாஜியுடன் நெருங்கி பேசிய வித்யா, நாம் 2 பேரும் 2-வது கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று ராம்பாலாஜியுடன் சொல்லி உள்ளர். அதற்கு ராம்பாலாஜியும் சம்மதம் தெரிவித்தார்.

எப்போது திருமணம் செய்து கொள்வது என்று இருவருமே முடிவெடுக்கவில்லை என்றாலும் தொடர்ந்து இவர்கள் பழகி வந்துள்ளனர்.. ராம்பாலாஜியிடம் அவ்வப்போது தன்னுடைய தேவைக்காக வித்யா பணம் கேட்டுள்ளார். கல்யாணம் செய்து கொள்ள போகும் பெண்தானே என்பதால், அவர் கேட்கும்போதெல்லாம் ராம்பாலாஜியும் பணம் தந்துள்ளார்.

வித்யா செலவுக்கு பணம் கேட்கும்போதெல்லாம் மறுக்காமல், அவரது அக்கவுண்ட்டில் பணத்தை அனுப்பிவிடுவாராம் ராம்பாலாஜி. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக வித்யாவின் வங்கி கணக்கில் ரூ.50 லட்சம் வரை பணம் அனுப்பியதாக தெரிகிறது. இதனிடையே இவர்கள் 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து கொள்வார்களாம்.

அப்படி நேரில் சந்திக்கும்போதெல்லா வித்யாவுக்கு நகைகளை தந்து அழகுபார்த்துள்ளார் ராம்பாலாஜி. ஒருகட்டத்தில், கல்யாண பேச்சை எடுத்துள்ளார் ராம்பாலாஜி. கல்யாணம் என்று சொன்னதுமே வித்யாவின் முகம் மாறிவிடுமாம். இப்போதைக்கு டைம் சரியில்ல. இன்னும் கொஞ்சம் நாள் போகட்டுமே என்று ஏதாவது சாக்கு சொல்லியே வந்திருக்கிறார்.

ஆரம்பத்தில் இதை பெரிதாக ராம்பாலாஜி கண்டுகொள்ளவில்லை என்றாலும், கல்யாண பேச்சையே வித்யா தவிர்த்து வருவது, திடீரென சந்தேகத்தை உண்டுபண்ணியது. அதுமட்டுமல்ல, கடந்த சில வாரங்களாகவே வித்யாவை காணோமாம்.

அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப்பிலேயே உள்ளதாம். இதற்கு பிறகுதான், தான் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்று ராம்பாலாஜி உணர்ந்துள்ளார். எனவே, பணம், நகைகளுடன் மா.ய.மா.ன வித்யாஸ்ரீ மீது மோ.ச.டி புகாரை மதுரை எஸ்பி அலுவலகத்தில் தந்தார்.

இதையடுத்து போலீசார் வித்யாவுக்கு தே.டுதல் வ.லையை வீ.சி, இ.றுதியாக அவரை பி.டித்தனர். வி.சாரணையும் நடத்தினர். அப்போது பணம், நகை பெற்றுக்கொண்டது உறுதியானது.

இதையடுத்து, தன்னுடைய அப்பாவின் நிலத்தை விற்று, அந்த பணத்தை திரும்ப கொடுத்து விடுவதாக உறுதிதந்தார் வித்யா. இதற்காக 5 மாதகாலம் டைம் கேட்டார். ஆனால் மறுபடியும் ஏ.மாற்றி உள்ளார். இந்த பணத்தை கடைசிவரை திருப்பி தரவே இல்லையாம்.

இதனால் அ.திர்ந்துபோன ராம்பாலாஜி, வித்யா விஷயத்தில் தானே நேரடியாக இறங்கினார். அப்போதுதான் இன்னொரு இடி ராம்பாலாஜி தலையில் வந்து விழுந்தது. வித்யாவுக்கு இன்னொரு காதலன் இருக்கிறாராம்.

அவர் பெயர் அஜித். 2 பேருமே ஒரு வீட்டில் லிவிங் டூ கெதராக வாழ்ந்து வந்து கொண்டிருப்பதை பார்த்து உறைந்து போனார் ராம்பாலாஜி. இவர்கள் 2 பேரும் சேர்ந்துதான், இத்தனை மாதமாக தன்னை மோ.ச.டி செய்திருக்கிறார்கள் என்பதை அறிந்து, கோர்ட்டுக்கு ஓடினார்.

அவர்கள் இருவரும் சேர்ந்து தன்னை மோ.ச.டி செய்துள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரியும், வாடிப்பட்டி கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.

இது தொடர்பான வி.சாரணை முடிவில், சம்பந்தப்பட்ட 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து வி.சாரணை நடத்த அலங்காநல்லூர் போலீசாருக்கு கோர்ட் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து வித்யாஸ்ரீ, அஜித் மீது போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்கள் 2 பேரையும் நேற்றுதான் கைது செய்தனர்.

மோசடி குறித்த வி.சாரணையும் நடந்து கொண்டிருக்கிறது. தானாகவே வலிய வந்து 2வது கல்யாணம் செய்து கொள்ளலாமா? என்ற ஆசைவார்த்தை கூறிய பெண்ணுக்கு சம்மதத்தை சொல்லி, ரூ.50 லட்சம் வரை பணத்தையும் தந்து, டிசைன் டிசைனாக நகைகளையும் வாங்கி போட்டு அழகு பார்த்த ராம்பாலாஜி, ஏமாந்துபோன அ.திர்ச்சியில் உறைந்து உள்ளார்.

காதலனை சந்திக்க துபாயிலிருந்து வந்த விமான பணிப்பெண்ணுக்கு நள்ளிரவில் நடந்த பரிதாபம்!!

பெங்களூருவில்..

பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியிலிருந்து குதித்து விமான பணிப்பெண் உயிரிழந்தார். உயிரிழந்தவர் ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான விமானப் பணிப்பெண் அர்ச்சனா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியிலிருந்து குதித்துள்ளார். தனது காதலனைச் சந்திப்பதற்காக துபாயிலிருந்து பெங்களூரு வந்த அர்ச்சனா, வெள்ளி மற்றும் சனிக்கிழமை இடைப்பட்ட இரவில் குதித்து இறந்ததாகக் கூறப்படுகிறது.

கோரமங்களா வட்டாரத்தில் உள்ள ரேணுகா ரெசிடென்சி அடுக்குமாடி குடியிருப்பில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. முதற்கட்ட விசாரணையில், அர்ச்சனா ஒரு புகழ்பெற்ற விமான நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

மென்பொருள் நிபுணரான தனது காதலனான ஆதேஷை சந்திக்க துபாயிலிருந்து வந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. கேரளாவை சேர்ந்த ஆதேஷ் பெங்களூருவில் வேலை பார்த்து வருகிறார். இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அர்ச்சனாவின் உடல் செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. அவரது மரணம் சந்தேகத்துக்குரியதாக இருப்பதாக கூறப்படுகிறது. பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.