திடீரென குறைந்த ரூபாவின் பெறுமதி.. விதிக்கப்பட்ட 15 நிபந்தனைகள்!!

ரூபாவின் பெறுமதி..

திருட்டு, ஊழல், வீண் விரயத்தை ஒழிக்காமல் சர்வதேச நாணய நிதியத்தின் மாயாஜாலத்தைக் காட்டினாலும் நாட்டைக் காப்பாற்ற முடியாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நடந்த மக்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியம் பதினைந்து நிபந்தனைகளை விதித்துள்ளது, எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பது, ரூபாவின் பெறுமதி குறைப்பு, அரச நிறுவனங்களை விற்பனை செய்தல் உள்ளிட்ட 15 நிபந்தனைகளை பூர்த்தி செய்ததன் பின்னரே பணம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை இலங்கை பெற்றிருந்த போதிலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொருளாதாரம் வலுவாக இருக்கவில்லை.

திருட்டு, ஊழல், வீண் விரயத்தை ஒழிக்காமல் சர்வதேச நாணய நிதியத்தின் மாயாஜாலத்தைக் காட்டினாலும் நாட்டைக் காப்பாற்ற முடியாது.

நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு உற்பத்திப் பொருளாதாரம் உருவாக்கப்பட வேண்டும், அரசியல் கலாசாரத்தை மாற்றி குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா மேல் நீதிமன்ற உத்தரவையடுத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா கைது!!

ஸ்ரீ ரங்கா கைது..

வவுனியா மேல் நீதிமன்ற உத்தரவையடுத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு, களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (17.03) மாலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி வாகன விபத்து ஒன்றில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணை இடம்பெற்று வந்தது.

இந்நிலையில், குறித்த வழக்குடன் தொடர்புடைய சாட்சியாளரை அச்சுறுத்தியதாக தெரிவித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு வவுனியா மேல் நீதிமன்றம் இன்று (17.03) உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனையடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

8 வயது மகன் மற்றும் மனைவியை கொன்றுவிட்டு விபரீத முடிவெடுத்த தந்தை!!

புனைவில்..

புனைவில் மனைவி மற்றும் மகனை கொன்று விட்டு ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனைவிலுள்ள அயுந்த் எனும் பகுதியில் சுடிப்டோ கங்குலி(44) என்றவர் தனது மனைவி மற்றும் மகனை பாலித்தீன் பைகள் மூலம் அடைத்துக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதில் அவரது மனைவி பிரியங்கா மற்றும் மகன் தனிஷ்கா ஆகிய இருவரோடு சுதிப்தோ கங்குலியும் உயிரழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர். சுதிப்தோ மற்றும் பிரியங்கா ஆகிய இருவருக்கும் போன் போட்டு எடுக்காததால் சந்தேகத்தின் பேரில் சுகிப்தோவின் சகோதரர் ஒரு நண்பரை வீட்டிற்குச் செல்ல சொல்லியிருக்கிறார்.

வீடு பூட்டியிருப்பதைக் கண்டு, குடும்பத்தினரை காணவில்லை என புனேவின் சதுஷ்ரிங்கி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் இருவரது போன் நெட்வொர்க்கை கண்காணித்து அவர்கள் வீட்டிற்குள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

அதன் பின் மாதிரி சாவியைப் பயன்படுத்தி வீட்டிற்குச் சென்றிருக்கின்றனர். வீட்டில் சுகிப்தோ தூக்கில் தொங்கிய நிலையிலும், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோரது முகத்தில் பாலித்தீன் பை சுற்றப்பட்டு இறந்த நிலையில் கிடந்திருப்பதையும் பார்த்திருக்கின்றனர்.

அவர்களது தற்கொலைக்கான காரணத்தைப் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை எனத் தெரிய வந்துள்ளது. மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த சுதிப்தோ அந்த பணியிலிருந்து விலகி புதிதாக தொழில் தொடங்கியுள்ளார். மேலும் விசாரணையில் உண்மைகள் தெரியவரும் என புனைவின் சதுஷ்ரிங்கி காவல்துறை தெரிவித்துள்ளது.

காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு.. தந்தையை குத்திக்கொன்ற மகன்!!

அரியலூரில்..

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே கருப்பிலாக்கட்டளை கிராமத்தில் அர்ச்சுனன் (48) என்பவர் வசித்து வந்தார். விவசாயியான இவரது மனைவி இறந்து விட்டதால், 2 மகன்கள், 3 மகள்களுடன் வசித்து வந்தார்.

இதில் இளைய மகன் அருண் (24) திருப்பூரில் வேலை பார்த்தபோது கடந்த ஆண்டு அங்கு வேலை பார்த்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். பின்னர் குடும்பத்துக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அருண் தனது காதல் மனைவியை வீட்டுக்கு அழைத்து வந்தார்.

இவர்களது காதல் திருமணம் அர்ச்சுனனுக்கு பிடிக்கவில்லை. ஒரு அக்கா, அண்ணன் திருமணம் ஆகாமல் இருக்கும் நிலையில் நீ எப்படி திருமணம் செய்து கொண்டாய் என கேட்டு மகனிடம் கேட்டு தகராறு செய்தார்.

பின்னர் நேற்று முன்தினம் இரவு போதையில் வந்து மகனிடம் காதல் திருமணத்தை தட்டிக்கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது கோபமடைந்த அருண் வீட்டில் இருந்த கத்தியால் தந்தையை சரமாரி குத்தினார்.

இதில் அர்ச்சுணனின் கழுத்து, தலையின் பின்புறம் மற்றும் முகத்தில் சரமாரி கத்திக்குத்து விழுந்தது. இதனால் அதிக ரத்தம் வெளியேறி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து கீழப்பழுவூர் போலீசார் விசாரணை நடத்தி அருணை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குளியலறையில் நி.ர்.வா.ண கோலத்தில் இறந்து கிடந்த இளம் தம்பதி!!

வடஇந்தியாவில்..

வடஇந்தியாவில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான ஹோலி பண்டிகை சில நாட்களுக்கு முன்பு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. வண்ணங்களின் திருவிழாவான ஹோலியை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கொண்டாடித் தீர்த்தனர்.

இதனிடையே ஹோலி கொண்டாடித் திரும்பிய தம்பதி மர்மமான முறையில் வீட்டில் உயிரிழந்த கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை காட்கோபர் கிழக்குப் பகுதியிலுள்ள பந்த் நகரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீபக் ஷா, தீனா தம்பதி வசித்து வந்தனர்.

ஹோலி கொண்டாடிவிட்டு இரவில் வீடு திரும்பினார். காலையில் பணிப் பெண் வந்து பார்த்த போது வீட்டின் கதவு திறக்கவில்லை. வீட்டு வேலைக்காரப் பெண் வந்து பார்த்த போது கதவு பூட்டப்பட்டிருந்தது.

உடனே அந்தப் பெண் தீனாவுக்கு போன் செய்து பார்த்தார். ஆனால், போன் எடுக்கப்படவில்லை. அதே சமயம் போன் சத்தம் வீட்டுக்குள்ளிருந்து வந்தது. உடனே சந்தேகமடைந்த வேலைக்காரப் பெண், தீபக்கின் தாயாருக்கு போன் செய்து தகவல் கொடுத்தார்.

தீபக்கின் தாயார் அதே கட்டடத்தில் வசிக்கும் தன்னுடைய உறவினருக்கு இது குறித்து தகவல் கொடுத்தார். உடனே அந்த உறவினர் தன்னிடமிருந்த மாற்றுச் சாவியை எடுத்து வந்து கதவைத் திறந்து வீட்டில் தேடினர்.

அப்போது பாத்ரூமில் கணவன், மனைவி இருவரும் நிர்வாணமான நிலையில் மயங்கி கிடந்தனர். உடனே குடும்ப டாக்டர் வரவழைக்கப்பட்டு, அவர்களைப் பரிசோதித்து பார்த்து போது, இருவரும் இறந்து விட்டது தெரிய வந்தது.

இதையடுத்து இருவரின் உடல்களும் ராஜாவாடி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. ஆனால் என்ன காரணத்தால் இருவரும் இறந்தனர் என்பது குறித்து டாக்டர்கள் அறிக்கையில் குறிப்பிடவில்லை.

உடல் மாதிரிகள் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றன. பாத்ரூமிலிருந்த தண்ணீரைச் சுடவைக்கப் பயன்படும் கைஸரிலிருந்து வெளியான வாயு காரணமாக இறந்தார்களா அல்லது இருவரும் வயாகரா அல்லது ஹோலி பண்டிகைக்காகத் தயாரிக்கப்படும் பாங் எனப்படும் ஒரு வகை பானம் குடித்ததால் இறந்தார்களா என்ற குழப்பம் இருந்து வருகிறது.

போலீசார் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் விசாரணையில், கைஸரில் இருந்து வெளியான வாயு காரணமாக இறந்திருக்கவே அதிக வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

தூங்கிக்கொண்டிருந்த மருமகள் மீது ஆசிட்டை ஊற்றிய மாமியார்.. நெஞ்சு பதைபதைக்கும் சம்பவம்!!

கடலூரில்..

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பகுதியில் மருமகள் மீது ஆசிட் ஊற்றி கொலை செய்ய முயற்சித்த மாமியாரை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பகுதியில் வசித்து வருபவர் முகேஷ்ராஜ். இவருக்கு கடந்த 7 வருடங்களுக்கு முன்பு கிருத்திகா (23) என்ற பெண்ணுடன் திருமணமாகியுள்ளது. இவர்கள் இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். முகேஷ் அவிநாசி பகுதியில் வேலை செய்து வருகிறார் .

மேலும் முகேஷுடன் அவரது தயார் ஆண்டாள் (55) ஒரே வீட்டில் தங்கியுள்ளார். ஆண்டாளுக்கும் முகேஷின் மனைவி கிருத்திகா இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வருவதாகவும், மருமகள் கிருத்திகா மீது சந்தேகப்பட்டு ஆண்டாள் கொடுமைப்படுத்தி வந்ததாகவும் அக்கம் பக்கத்தினர் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இன்று அதிகாலை கிருத்திகா தனது அறையில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, வீட்டின் கழிவறைக்கு பயன்படுத்தும் ஆசிட்டை எடுத்து வந்த மாமியார் ஆண்டாள், கிருத்திகா முகத்தில் ஊற்றியுள்ளார்.

ஆசிட் பட்டத்தில் வலியால் துடித்தக்கொண்டிருந்த போது, கிருத்திகா வாயில் கொசு விரட்டி மருத்தையும் ஊற்றி கொலை செய்ய முயன்றுள்ளார். கிருத்திகாவின் அலறல் சத்தம் கேட்டு, குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கிருத்திகாவை மீட்டுள்ளனர்.

இதில், முகம், கண், காது மற்றும் உடல் மீது ஆசிட் பட்டத்தில் பலத்தக் காயமடைந்த கிருத்திகாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் அப்பகுதி மக்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே சம்பவம் அறிந்து வந்த கடலூர் போலிஸார் மாமியார் ஆண்டாளை கைது செய்தனர்.

மேலும் மருத்துவமனைக்குச் சென்ற கிருத்திகாவை பரிசோதித்த மருத்துவர்கள், ஆசிட் ஊற்றப்பட்டதால் கண் பார்வை கிருத்திகா இழந்ததாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து கிருத்திகாவின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாமியார் ஆண்டாள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்து, அவரது மகன் உட்பட குடும்பத்தினரை விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட ஆண்டாளை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய பின்னர் போலிஸார் சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவ அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

தன்னைத் தானே திருமணம் செய்த பெண்.. 24 மணி நேரத்தில் எடுத்த அதிரடி முடிவு!!

பிரேசிலில்..

தன்னைத் தானே ஒருவர் அதிகமாக நேசிக்கும் போது, சிலர் அவர்களையே சுய திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் உண்டு. கடந்த 2020 ஆம் ஆண்டு, பிரேசிலை சேர்ந்த மாடல் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டிருந்தார்.

அதே ஆண்டில் பட்ரிசியா கிறிஸ்டின் என்ற பெண்ணும் தன்னை தானே திருமணம் செய்து கொண்டு பரவலாக அறியப்பட்டிருந்தார். இதனிடையே, கடந்த ஆண்டு இந்தியாவின் குஜராத்தில் உள்ள வதோதரா பகுதியை சேர்ந்த ஷமா பிந்து என்ற பெண், கடந்த 2022 ஆம் ஆண்டு தன்னை திருமணம் செய்து கொண்டதுடன் மட்டுமில்லாமல், தனியாக தேனிலவுக்கும் சென்று பெரிய அளவில் இணையத்தில் வைரல் ஆகவும் அறியப்பட்டிருந்தார்.

அதே போல, ஷமா பிந்து தனியாக திருமணம் செய்து கொண்ட போது குடும்பத்தினர் முன்னிலையில் படுஜோராகவும் இந்த திருமண நிகழ்வுகள் நடைபெற்றது. இந்த நிலையில், தற்போது அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ள சூழலில், ஒரே நாளில் மற்றொரு ட்விஸ்ட்டும் நடந்துள்ளது. அர்ஜென்டினாவை சேர்ந்தவர் சோஃபி மௌரே.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக தன்னை தானே திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார். மேலும் தனது பதிவில், தன்னை தானே திருமணம் செய்து கொள்வதற்காக திருமண ஆடை மற்றும் கேக் உள்ளிட்டவற்றை தானே தயார் செய்வதாகவும் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

அந்த திருமண உடையில் அவர் புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட பலரும் பல விதமான கருத்துக்களையும் கமெண்ட் செய்து வந்தனர். இதற்கிடையில், தன்னைத் தானே திருமணம் செய்த 24 மணி நேரத்தில் மற்றொரு பதிவையும் சோஃபியா மௌரே பதிவிட்டுள்ளார்.

அதில், தன்னால் இந்த திருமணத்தை தொடர முடியாது என்றும் விவாகரத்து செய்ய போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமில்லாமல், திருமணமான ஒரே நாளில் எப்படி விவாகரத்து செய்ய வேண்டும் என்றும் இணையத்தில் அவர் கருத்து கேட்டுள்ளார்.

தன்னை தானே திருமணம் செய்து கொள்வது நிறைய இடங்களில் நடந்தாலும் 24 மணி நேரம் கழித்து அவர் எடுத்த முடிவு தொடர்பான செய்தி, தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.

2023ல் ஏற்படபோகும் பேராபத்து.. உலகமே முடங்கும்.. பாபா வங்காவின் கணிப்பு!!

பாபா வங்கா..

பால்கன் நாஸ்ட்ராடாமஸ் என்று அழைக்கப்படும் பாபா வங்கா பல்கேரியா நாட்டை சேர்ந்த மூலிகை மருத்துவர் ஆவார். 1911 ஆம் ஆண்டில் கிழக்கு ஐரோப்பாவில் பிறந்த இந்த பெண் 1996 ஆம் ஆண்டில் தனது 84 வது வயதில் இறந்து போனார்.

வரும் காலத்தில் பூமியில் என்ன நடக்கும் என்பது குறித்த இவரது கணிப்புகள் அப்படியே துல்லியமாக நடந்துள்ளன. குறிப்பாக இரட்டை கோபு தாக்குதல், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடங்கி பல்வேறு சர்வதேச விஷயங்கள் அப்படியே நடந்துள்ளது.

இவரது கணிப்புகளில் சுமார் 85% அப்படியே துல்லியமாக நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 5079ஆம் ஆண்டு வரை இவர் கணிப்புகளைச் செய்துள்ளார். அந்தவகையில் 2023 என்ன நடக்கும் என்பதை கணித்தார்.

அதில் ஒரு சூரிய புயல் ஒன்று பூமியை தாக்கும் என்று கணித்திருந்தார். பாபா வாங்கா 2023இல் சூரிய புயல் ஏற்படும் என்று கணித்திருக்கின்றார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்படும் இந்த மெகா சூரிய புயலால் பூமியிலும் பிரச்சினை ஏற்படலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சூரியன் மீது இருந்து வரும் மின்காந்த ஆற்றல் பூமியைப் பாதிக்கும் ஆபத்து இருக்கிறது. அவை பூமியில் உள்ள மின் கட்டமைப்பு மற்றும் ஜிபிஎஸ் சிக்னல்கள் உட்பட பல்வேறு அமைப்புகளைப் பாதிக்கும் என்று கூறப்படுகின்றது.

2023ஆம் ஆண்டில் சூரிய புயல் பூமியைத் தாக்கும் பட்சத்தில், அது உலகெங்கும் மிகப் பெரிய மின்சாரத் தடையை ஏற்படுத்தலாம்.. நமது தகவல் தொடர்பு முற்றிலும் முடங்க வாய்ப்பிருக்கிறது.

போக்குவரத்து அமைப்புகளை முடங்கும்.. இதன் காரணமாக சமூக குழப்பங்களும் நிதி நெருக்கடிகளும் கூட ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதில் ஏற்படும் பாதிப்புகள் அடுத்த சில ஆண்டுகள் வரையிலும் தொடரும் ஆபத்தும் உள்ளது என்றே வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சூரியனின் பூமத்திய ரேகைக்கு உள்ள காந்த இழை மிகப்பெரிய அளவிலான காந்தப்புலக் கோடுகளைக் கொண்டுள்ளது. அதாவது இது வெடித்து சூரிய புயல் உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.

இதுபோன்ற சக்தி வாய்ந்த ஸ்ட்ரீமர்கள் இருப்பது அதீத சூரிய செயல்பாட்டின் அறிகுறியாகும். இந்த ஸ்ட்ரீமர் வெளியேறினால், இது ஒரு பெரிய அளவிலான கதிர்வீச்சு மற்றும் காந்த ஆற்றலை வெளியிடும்.

இது பூமியிலும் தொலைத் தொடர்புகளைப் பாதிக்கும். இருப்பினும், இது பூமியை நோக்கி வெடித்துச் சிதறுமா என்பது துல்லியமாகத் தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

விவசாயியா இருந்து யூடியூபரா மாறி சாதித்த 62 வயது மூதாட்டி.. விமானத்தில் முதல் தடவை பயணித்த ட்ரெண்டிங் வீடியோ!!

தெலுங்கானாவில்..

அவ்வப்போது இணையத்தில் நாம் வலம் வரும் போது நம்மை சுற்றி நடக்கும் ஏராளமான விஷயங்கள் குறித்து நம்மால் தெரிந்து கொள்ள முடியும். அதிலும் இயல்பாக நடக்கும் விஷயத்தில் இருந்து சற்று மாறுபட்டு வினோதமாக அல்லது எமோஷனல் கலந்து என வித விதமாக நடக்கும் போது அவை வைரல் ஆகி, பலர் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியும் கடந்து செல்லும்.

அந்த வகையில் சுமார் 62 வயதாகும் பெண்மணி ஒருவர் முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்ததும் அதற்கு பின்னால் உள்ள காரணமும் தற்போது பலர் மத்தியில் பாராட்டுகளை பெற்றுக் கொடுத்து வருகிறது. தெலுங்கானா மாநிலத்தில் விவசாயியாக இருந்து பிரபல யூடியூபராக மாறி கலக்கி வருபவர் மில்குரி கங்கவ்வா என்ற பெண்மணி.

முன்னதாக விவசாய தொழிலாளியாக இருந்த இவர், யூடியூபில் கிராம பாங்கான வீடியோக்களை கலகலப்பாக வெளியிட்டு மக்கள் மனதில் பிரபலமாகவும் செய்திருந்தார். மேலும் தனக்கு கிடைத்த பிரபலம் காரணமாக தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கடந்த 2020 ஆம் ஆண்டு போட்டியாளராக களமிறங்கி இருந்தார்.

62 வயதாகும் மில்குரி கங்கவ்வா, தனது youtube பக்கத்தில் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் தொடர்ந்து புகழ் பெற்று வரும் நிலையில், தனது நீண்ட நாள் கனவு ஒன்றை சமீபத்தில் நிறைவேற்றியது தொடர்பான வீடியோ தான் இணையத்தை ஒரு கலக்கு கலக்கி வருகிறது.

நீண்ட நாளாக விமானத்தில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என மில்குரி கங்கவ்வாவிற்கு ஆசை இருந்துள்ளது. அப்படி ஒரு சூழலில், சமீபத்தில் தனது கனவையும் நிறைவேற்றியுள்ளார். 62 வயதில் விமான பயணம் மேற்கொண்டுள்ள மில்குரி கங்கவ்வாவின் வீடியோ, தற்போது ட்ரெண்டிங் லிஸ்ட்டிலும் இடம் பிடித்துள்ளது.

விமான பயணத்தின் போது சில இடங்களில் பயப்படவும், தயக்கம் காட்டியும் இருந்த மில்குரி கங்கவ்வா, மிகவும் இயல்பாக முதல் முறை விமான பயணம் செய்யும் ஒருவர் எப்படி இயங்குவாரோ அதை அப்படியே பிரதிபலிக்கவும் செய்கிறார். டேக்-ஆஃப் செய்த போது சற்று பயம் ஏற்பட்டதாகவும் குறிப்பிடும் மில்குரி கங்கவ்வா தனது முதல் விமான அனுபவம் பற்றியும் பகிர்ந்துள்ளார்.

எந்நேரமும் தூங்கும் மனைவி…வேதனையுடன் காவல் நிலையம் சென்ற கணவர்!!

பெங்களூருவில்..

மனைவி எந்நேரமும் தூங்கிக் கொண்டே இருப்பதாக கணவர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பெங்களூருவில் கணவர் ஒருவர், தனது மனைவி எந்நேரமும் உறங்கி கொண்டே இருந்து, தன்னை துன்புறுத்துவதாக பொலிஸில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக கணவர் கம்ரான் கான், கௌசர் பசவனகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து மனைவி ஆயிஷா ஃபர்ஹின் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மாமனார் அரிபுல்லா மற்றும் மாமியார் ஹீனா மீது கம்ரான் கான் புகார் அளித்துள்ளார். மாலை 5.30 மணியில் இருந்து இரவு 9.30 மணி வரை மனைவி ஆயிஷா தூங்குவதாகவும், பிறகு இரவு உணவுக்கு பின் மீண்டும் தூங்கும் மனைவி ஆயிஷா அடுத்த நாள் மதியம் 12.30 மணிக்கு தான் எழும்புவதாக கணவர் கம்ரான் கான் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

அத்துடன் வீட்டில் எந்த வேலையும் அவள் செய்வது இல்லை என்றும், தன்னுடைய அம்மா தான் சமைப்பது முதல் சுத்தம் செய்வது வரை பார்க்கிறார் என்று தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக இதையே மனைவி ஆயிஷா செய்து வருவதாக கம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார்.

பேருந்துக்காக காத்திருந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நெஞ்சு பதைபதைக்கும் சம்பவம்!!

பொல்பித்திகமவில்..

பேருந்துக்காக காத்திருந்த இளம் பெண்ணை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் பொல்பித்திகம பேருந்து நிலையத்தில் இடம் பெற்றுள்ளது.

அத்தோடு துஷ்பிரயோகம் செய்தவர்கள் பிரதேசவாசிகளால் தாக்கப்பட்டு காவல்துறையின் பாதுகாப்பில் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொல்பித்திகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கணனி வகுப்பில் கலந்து கொண்ட பின்னர் வீட்டுக்கு செல்வதற்காக பேருந்து தரிப்பிடத்தில் இந்த யுவதி காத்திருந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் குறித்த யுவதியை அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகவும் தன்னுடன் வருமாறும் அழைப்பு விடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இரவு வெகுநேரமாகியும் பேருந்து வராத காரணத்தினால் குறித்த யுவதி மோட்டார் சைக்கிளில் ஏறிய போது குறித்த நபர் யுவதியை வலுக்கட்டாயமாக தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவரிடமிருந்து தப்பிக்க முற்பட்ட போது, ​​குறித்த நபர் யுவதியை தாக்கி வன்கொடுமை செய்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். யுவதியின் அலறல் சத்தம் காரணமாக அக்கம்பக்கத்தினர் வந்து அந்த நபரை பிடித்து அடித்து, பொல்பித்திகம காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான அவர் முதலில் பொல்பித்திகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொல்பித்திகம காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

இலங்கையில் மீண்டும் வாகன இறக்குமதி குறித்து வெளியான தகவல்.!!

இலங்கையில்..

இலங்கையில் வாகன மீள் இறக்குமதிக்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி ஆளுநருடன் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இந்த விடயத்தை இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சாந்த கமகே ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வாகன இறக்குமதி தொடர்பில் எதிர்காலத்தில் நிதி அமைச்சுடன் கலந்துரையாடவுள்ளோம். வாகன இறக்குமதி தொடர்பான தீர்மானங்களை தம்மால் மேற்கொள்ள முடியாது என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்தார்.

எனவே குறித்த செயற்பாடுகள் நிதியமைச்சின் ஊடாகவே நடைமுறைப்படுத்தப்படும் என்பதால் எதிர்காலத்தில் நிதியமைச்சுடன் கலந்துரையாடவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டொலரின் பெறுமதி 1000 ரூபாவை தாண்டும்.. நாட்டு மக்களுக்கு மத்திய வங்கி ஆளுநரின் அறிவுறுத்தல்!!

டொலரின் பெறுமதி..

ரூபாவை மிதக்க அனுமதித்தால் இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் மதிப்பு 1000 ரூபாவை தாண்டும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.

நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், பொருளாதார நடவடிக்கைகளோ அல்லது முடிவுகளோ பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தவில்லை.

இது பல தசாப்தங்களாக நடந்து வரும் விவகாரம். வெளிநாட்டுப் பணப்பரிவர்த்தனையில் ஏற்பட்ட வீழ்ச்சியும் இந்நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு காரணமாகும்.

இங்கு அடிப்படை தவறு அரசாங்கமோ, அமைச்சரவையோ, நிதிக் கொள்கையோ அல்ல என குறிப்பிட்டுள்ளார். இதேவேளை மக்கள் நிவாரணம் கேட்கின்றனர். அதனால்தான் நான் கூறுகிறேன், என்ன கேட்கிறீர்கள் என்பதை மக்களாகிய நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் கேட்பதை அரசாங்கம் கொடுத்தால், அது பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுக்கும். பிறகு உங்களுக்கு நல்லது எதுவும் நடக்காது. அத்துடன் நாட்டிற்கும் நன்மை எதுவும் நடக்காது என நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன் இறக்குமதி சுமை நாளுக்கு நாள் அதிகரிப்பு மற்றும் பணத்தைக் கண்டுபிடிக்க மாற்று வழியின்மை என்பனவற்றின் அடிப்படையில் இலங்கை மத்திய வங்கி ரூபாயை மிதக்க அனுமதித்தது. இதன்போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை 203 ரூபாவாக குறைக்கும் சந்தர்ப்பம் மத்திய வங்கிக்கு கிடைத்தது.

என்ற போதும் கடன் முகாமைத்துவம் இன்றி ரூபாவை மிதக்க அனுமதித்தால் இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் மதிப்பு 1000 ரூபாவிற்கு சென்றே நிற்கும். இறுதியில் எடுக்க வேண்டிய முடிவுகளை முதலிலேயே எடுப்பது சரியில்லை. அதன் மூலம் ஒரு நாட்டின் பொருளாதாரம் அழிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

யாழ் இளைஞரின் உயிரைப்பறித்த கொடியநோய்.. பெரும் துயரத்தை ஏற்படுத்திய சோகம்!!

யாழ்ப்பாணத்தில்..

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் கொழும்பில் நேற்று உயிரிழந்துள்ளார். கொழும்பு மகரகம புற்று நோய் வைத்தியசாலையில் புற்றுநோய்க்கு,

சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் அக்சன் எனும் வயது 28 என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார் .

இந்நிலையில் இளம் இளைஞன் புற்றுநோயால் உயிரிழந்த சம்பவம் அப் பகுதி மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரான்சில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை காணவில்லை : கதறும் தாய்!!

பிரான்ஸில்..

பிரான்ஸில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை காணவில்லை என தாயார் கண்னீர் விட்டு கதறியழும் காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு போர் காரணமாக தனது மகன் பிரான்ஸ் சென்று 10 வருடங்களான நிலையில் மகன் காணாமல்போயுள்ளதாக கூறப்படுகின்றது. கணவரை இழந்த குறித்த பெண்ணுக்கு மகன் ஒருவர் மட்டுமே அவர் வாழ்வின் ஆதாரமாக இருந்துள்ளார்.

குறித்த தாயார் இந்தியாவில் தனித்து வசித்து வரும் நிலையில் மகன் பிரான்ஸிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் காணாமல்போன தனது மகனை கண்டுபிடித்து தருமாறு பிரான்ஸ் வாழ் தமிழ் உறவுகளிடம் அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

28 ஆண்டுகளாக தேங்காயை மட்டுமே உண்டு வாழும் மனிதன்.. அதிர்ச்சிப் பின்னணி!!

கேரளாவில்..

கேரளாவில் 28 ஆண்டுகளாக ஒருவர் தேங்காயை மட்டுமே உணவாக உட்கொண்டுவருகிறார் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? ஒரு சில நாட்களுக்கு ஒரே உணவை மீண்டும் மீண்டும் சாப்பிடுவது சலிப்பை ஏற்படுத்தும்.

ஆனால் 28 வருடங்கள் ஒரே உணவை சாப்பிடுவதை கற்பனை செய்து பாருங்கள். இது கிட்டத்தட்ட சாத்தியமற்றது போல் தெரிகிறது. ஆனால், இந்தியர் ஒருவர் தனது இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய்க்கு (GERD) சிகிச்சை அளிக்க கடந்த 28 ஆண்டுகளாக தேங்காயைத் தவிர வேறு எதையும் சாப்பிடவில்லை என கூறுகிறார்.

கேரளாவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் பாலாயி (Balakrishnan Palayi) தனது உடல் வலிமையை இழந்து, அசைய முடியாத நிலையில் இருந்துள்ளார். ஆனால், அவர் தேங்காயை உண்ணத் தொடங்கினார், அது அவருக்கு நன்றாக இருப்பதாக உணர்ந்துள்ளார. அதிலிருந்து இனி தேங்காயை மட்டுமே உணவாக சாப்பிடுவது என்று முடிவு செய்தார்.

தேங்காயில் கால்சியம், மெக்னீசியம், சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற கனிமங்கள் உள்ளன. இது அவர் தனது வலிமையை மீட்டெடுக்க உதவியது, இப்போது அவர் ஆரோக்கியமாகவும் நன்றாகவும் இருக்கிறார். தொடந்து தேங்காய் மட்டுமே உணவாக எடுப்பதாக, அவரிடம் கேட்பவர்களிடம் அவர் கூறியுள்ளார்.

பாலாயிக்கு 35 வயதில் இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அவர் ஒவ்வொரு முறையும் ஏதாவது சாப்பிடும் போது, ​​அவர் தனது உணவை வாந்தி எடுப்பார்.

அவர் தனது நோயைக் குணப்படுத்த பல உணவுமுறைகளை முயற்சித்தார், ஆனால், அவரை நன்றாக உணரவைத்த இரண்டு விடயங்கள் ஒன்று தேங்காய், மற்றொன்று தேங்காய் தண்ணீர்.

“நான் தினமும் தேங்காய் சாப்பிடுவேன். என் குடும்பமும் தென்னை சாகுபடிக்கு மாறியது”, கடந்த 28 வருடங்களாக இப்படித்தான் வாழ்ந்து வருவதாக பாலாயி கூறுகிறார். தற்போது 64 வயதாகும் பாலாயி, தனது வயதுடைய பலரை விட ஆரோக்கியமாக உள்ளார்.

அவர் தனது குடும்ப பண்ணையை நிர்வகித்து வருகிறார், உடற்பயிற்சிகள் மற்றும் நீச்சல் பயிற்சி செய்கிறார், அவருக்கு உடல்நலப் பிரச்சினைகள் எதுவும் இல்லை. அவரது தேங்காய் உணவு முறை முதலில் 2019-ல் வெளியுலகிற்கு தெரியவந்தது, ஆனால் அன்றிலிருந்து இணையத்தில் அவரைப் பற்றிய செய்தி உலாவருகிறது.