திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை கொலை… உயிர் நண்பனின் வெறிச்செயல்!!

சிவகாசியில்..

சிவகாசி அருகே ஆத்தூர் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (29) கூலி வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணமாகியுள்ளது. இந்த நிலையில்,

அதே ஊரை சேர்ந்த தனது நண்பரான முத்துராஜ் (38) என்பவருடன் மணிகண்டன் மது அருந்தியுள்ளார். அப்போது மாற்றுத்திறன் கொண்ட முத்துராஜின் உடல் குறைபாட்டை மணிகண்டன் கிண்டல் செய்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த முத்துராஜ் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிகண்டனின் கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளார். பலத்த காயமடைந்த மணிகண்டனை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற மாரனேரி காவல் நிலைய போலீசார் கொலை செய்த முத்துராஜை கைது செய்து நடத்திய விசாரணையில் தனது உடல் ஊனத்தை கிராமத்தில் பலரும் கிண்டல் செய்து வந்ததால் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் மணிகண்டனும் தன்னை கிண்டல் செய்ததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

ராட்சசன் திரைப்படத்தில் கிறிஸ்டோபர் கதாபாத்திரத்தில் வரும் நபர் தனது உடல் தோற்றத்தை கேளி செய்ததால் கொலை செய்ய தொடங்குவார். அதே போன்று அரங்கேறியுள்ள இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்… இளம்ஜோடி ஒன்றாக எடுத்த விபரீத முடிவு!!

மன்னார்குடியில்..

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பருத்திக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான பாரதிராஜா சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

வேதாரண்யம் அருகே உள்ள காடன்சேத்தி கிராமத்தை சேர்ந்த இவரது உறவினரான நிஷா (17) செவிலியர் படிப்பு படித்து வந்தார். உறவினர்களான இருவரும் கடந்த இரண்டு வருடமாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், நேற்று மன்னார்குடி அருகே பருத்திகோட்டை கிராமத்தில் உள்ள பாரதிராஜாவின் வீட்டிற்கு வந்த நிஷாவின் பெற்றோர் தங்கள் மகளை காணவில்லை என பாரதிராஜாவின் பெற்றோரிடம் விசாரித்துள்ளனர்.

மேலும் நிஷா காணவில்லை என வடுவூர் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளனர். இந்த நிலையில், மூவாநல்லுர் கிராமத்தில் காலை வயல்வெளிக்கு வேலைக்கு சென்றவர்கள் வயல் காட்டில் உள்ள மரத்தடி ஒன்றில் இரண்டு பேர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அவர்கள் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வடுவூர் போலீசார் உயிரிழந்த இருவரிடமும் இளையராஜா மற்றும் நிஷா என உறுதிப்படுத்தி உடல்களை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் கொலையா? அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே சமூகம் மற்றும் உறவினர்களான இளம் காதல் ஜோடி தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் மூவாநல்லுர் கிராமத்தில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பாணின் விலை குறைகின்றது.. சற்றுமுன் வெளியான அறிவிப்பு!!

பாணின் விலை..

450 கிராம் நிறையுடைய பாணின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விலை குறைப்பானது இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த காலங்களில் பாணின் விலை 200 ரூபாவை தொட்டிருந்தது.

மேலும், தற்போது 160, 170 மற்றும் 180 ரூபா ஆகிய வெவ்வேறு விலைகளில் பாண் விற்பனை செய்யப்படுவதாக அண்மையில் வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்திருந்தது.

வவுனியா வைத்தியசாலையில் சுகாதார தொழிற்சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பு!!

பணிப்பகிஷ்கரிப்பு..

சுகாதாரத் தொழிற்சங்கத்தின் ஒருநாள் அடையாள பணிபகிஸ்கரிப்பு வவுனியாவில் இன்று முன்னெடுக்கப்பட்டது. சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் இரத்து செய்யப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாக கொண்டு நாடளாவிய ரீதியில் குறித்த அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்திற்கு வவுனியாவிலும் ஆதரவு வழங்கப்பட்டதுடன், தொழிற்சங்கத்தினை சார்ந்த உறுப்பினர்கள் சுகவீன விடுப்பினை பெற்று பகிஸ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதனால் வவுனியா பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவுகளை தவிர்ந்த ஏனைய சேவைகளில் தொய்வு நிலை ஏற்பட்டிருந்தது.

வைத்தியர்கள் மற்றும் தாதியர் தொழிற்சங்கங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து சுகாதாரத் தொழிற்சங்கங்களாலும் முன்னெடுக்கப்பட்டுவரும் குறித்த போராட்டம் இன்று காலை 6.30 முதல் நாளை காலை 6.30 வரையான காலப்பகுதிவரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோவிலில் திருமணம் செய்துகொண்ட இஸ்லாமிய தம்பதிகள்… நெகிழ்ச்சி சம்பவம்!!

சிம்லாவில்..

இமாச்சல பிரதேசத்தில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக இந்து கோவிலில் இஸ்லாமிய தம்பதிகளின் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இதனை இந்து மக்கள் நடத்தி வைத்துள்ளனர். இது அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.

பொதுவாக இந்தியா என்றவுடன் உலக மக்களுக்கு முதலில் ஞாபகத்திற்கு வருவது இங்குள்ள பல வகையான மனிதர்களும் நிலங்களும் தான். ஏராளமான மொழி மற்றும் மதங்களை கொண்டிருந்தாலும் இங்குள்ள மக்கள் இந்தியர் எனும் ஒன்றை புள்ளியில் எப்போதும் இணைந்தே பயணிக்கின்றனர்.

இதுவே இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய ஊன்றுகோலாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தில் இஸ்லாமிய தம்பதிகளுக்கு திருமணம் செய்து வைத்திருக்கின்றனர் இந்து மக்கள். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இமாச்சல பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் உள்ளது ராம்பூர் பகுதி. இங்கு உள்ள தாக்கூர் சத்யநாராயணன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலை விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் அமைப்புகள் நிர்வகித்து வருகின்றன.

இந்த சூழ்நிலையில், இந்த கோவிலுக்கு சொந்தமான மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரு இஸ்லாமிய தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்றிருக்கிறது.

அதே பகுதியை சேர்ந்த பொறியாளர்களான தம்பதியர் கோவிலில் தங்களது இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்திருக்கின்றனர். அப்போது, இந்து மற்றும் இஸ்லாமிய மக்கள், வழக்கறிஞர் மற்றும் இஸ்லாமிய மதகுருமார்கள் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி இருக்கின்றனர்.

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக இந்த திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள மணமகளின் தந்தை மகேந்திர சிங் மாலிக், “ராம்பூரில் உள்ள சத்யநாராயண் கோவில் வளாகத்தில் எனது மகளின் திருமணம் நடந்தது.

நகர மக்கள், அது விஸ்வ ஹிந்து பரிஷத் ஆகட்டும் அல்லது கோவில் அறக்கட்டளையாகட்டும், அனைவரும் இந்த திருமணத்தை மிகுந்த பொறுப்புடன் நடத்தியிருக்கின்றனர்.

இதன்மூலம் சகோதரத்துவத்தை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஒருவரையொருவர் மதிப்புடன் நடத்தினால் அன்பு தழைத்தோங்கும்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.

இலங்கையில் தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி!!

தங்கத்தின் விலை..

அமெரிக்க டொலரின் விலை வீழ்ச்சி காரணமாக தங்கத்தின் விலை குறைவடைந்து வருகின்றது. இந்த நிலையில் இன்றையதினம் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று ரூ.153, 500 ஆகவும்,

24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை ரூ.166,000 ஆகவும் வீழ்ச்சி அடைந்து காணப்படுகின்றது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், ஒரு பவுண் தங்கத்தின் விலை 18,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக,

நகைக்கடை உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இச் செய்தி தங்க நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அலறல் சத்தத்தால் அதிர்ந்த கிராமம்… காதலியை தீ வைத்து எரித்த இளைஞன் : அதிர்ச்சி சம்பவம்!!

திருப்பூரில்..

திருப்பூா் மாவட்டம் காங்கயம் அருகே பாப்பினி- வரதப்பம்பாளையம் பகுதியில் செந்தில் – பிரேமா (30) தம்பதி வசித்து வந்தனர். இவா்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளன.

ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக பிரேமா தனது கணவரைப் பிரிந்து அதே ஊரில் தனி வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். மேலும் பிரேமா அப்பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், பிரேமாவுக்கும், காங்கயத்தை அடுத்த நத்தக்காடையூா் பகுதியைச் சோ்ந்த விஜய் (26) என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நெருக்கமாகி கள்ளக்காதலாக மாறியது.

இந்நிலையில், பிரேமாவை சந்திக்க அவரது வீட்டுக்கு விஜய் வந்துள்ளார். அப்போது திடீரென அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் சிறிது நேரத்தில் விஜய் அங்கிருந்து சென்றார்.

அடுத்த நிமிடமே வீட்டில் பிரேமாவின் அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் ஓடிவந்து பார்த்தனர். அப்போது, பிரேமா உடலில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக அவரை மீட்டு, காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

உடல் முழுவதும் தீவிர தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பிரேமா மேல் சிகிச்சைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

எனினும் அங்கு உயிரிழந்தார். இறப்பதற்கு முன் போலீசாரிடம் பிரேமா அளித்த மரண வாக்குமூலத்தில், விஜய்தான் தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்ததாகத் தெரிவித்துள்ளார்.

பின்னர் இளைஞர் விஜயை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினா். அப்போது, விஜய், பிரேமா ஆகியோர் பழகி வந்த நாள்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பிரேமா பரப்பியுள்ளார். இதனை வீட்டுக்கு சென்று கேட்டபோது தகராறு ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த விஜய் பிரேமாவை எரித்துக் கொல்ல முயற்சி செய்தது தெரியவந்தது.

ஆனால் விஜய், போலீசாரிடம், தான் மண்ணெண்ணெய் ஊற்றி பிரேமாவுக்கு தீ வைக்கவில்லை என்றும், பிரேமாவே தீக்குளித்து இறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து விஜய்யை சிறையில் அடைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.

குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து விபரீத முடிவெடுத்த தாய் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

கிருஷ்ணகிரியில்..

குடும்பத் தகராறில் இரு குழந்தைகளுடன் பெண் ஒருவர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கல்லாவி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (37).

இவர் மனைவி அம்மு (33). காதல் திருமணம் செய்த இவர்களுக்கு, சுஜி (16), ரேண்டி ஆர்டன் (12), மாரன் (10), சுவிக்‌ஷா (7), பீஸ்மர் (4) என ஐந்து குழந்தைகள்.

அம்மு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம், கூலி வேலை எனக் கிடைக்கின்ற கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தை நடத்திவந்திருக்கிறார்.

அடிக்கடி சமையல் வேலைகளுக்குச் சென்று வந்த சுரேஷுக்கு அதீத குடிப்பழக்கம் இருந்ததால், கணவன் மனைவிக்குள், அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுவந்தது. இந்த நிலையில், நேற்று இரவு இருவருக்குள்ளும் மீண்டும் தகராறு ஏற்பட்டதால், அம்மு கடும் மனவிரக்தியில் இருந்திருக்கிறார்.

இன்று காலை சுஜி, ரேண்டி ஆர்டின், மாரன் ஆகியோர் பள்ளிக்குச் சென்றிருந்தனர். வீட்டிலிருந்த அம்மு, மகள் சுவிக்‌ஷா, மகன் பீஸ்மரை அழைத்துக்கொண்டு, ஊத்தங்கரை அருகிலுள்ள கல்லாவி பகுதியில், ரயில் தண்டவாளம் அருகே சென்றிருக்கிறார்.

காலை 10:30 மணிக்கு அந்த வழியாக வந்த ஜோலார்பேட்டை – கோவை இன்டர்சிட்டி ரயில் முன் இரு குழந்தைகளுடன் பாய்ந்து அம்மு தற்கொலை செய்துகொண்டார்.

அதில் மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். துயரமான இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து கல்லாவி போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ பத்மாவதியிடம் பேசினோம். ‘‘கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்ததால்தான், அம்மு குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

வேறு எந்தக் காரணமும் இல்லை. சுரேஷின் குடிப்பழக்கம், மனவிரக்தியால், அம்மு இந்த விபரீத முடிவை எடுத்திருக்கிறார்’’ என்றார்.

வவுனியாவில் பிள்ளைகள் உட்பட குடும்பமே வீட்டில் சடலமாக மீட்பு : அதிர்ச்சியில் மக்கள் : பொலிசார் தீவிர விசாரணை!!

குட்செட்வீதி..

வவுனியா குட்செட்வீதி, உள்ளகவீதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் சடலங்கள் பொலிசாரால் இன்று மீட்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று (07) காலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்றையதினம் குறித்த வீட்டின் உரிமையாளருக்கு அவரது நண்பர் ஒருவர் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியுள்ளார்.

எனினும் அவர் பதிலளிக்கவில்லை. இதனையடுத்து அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இதன்போது குறித்த வீட்டினுள் குடும்பஸ்தர் அவரது சிறுவயதான இருபிள்ளைகள், மனைவி ஆகியோர் மர்மமான முறையில் மரணமடைந்திருந்தமையை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த சிவபாதசுந்தரம் கௌசிகன் (வயது 42) வீட்டின் முன்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதுடன், அவரது மனைவியான கௌ.வரதராயினி (வயது 36), இருபிள்ளைகளான கௌ.மைத்ரா (வயது9) , கௌ.கேசரா (வயது 3) ஆகியோர் உறங்கியபடியும் சடலமாக மீட்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவரும் வவுனியா பொலிசார் மீட்கப்பட்ட சடலங்களை சட்டவைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த சம்பவம் வவுனியாவில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வீட்டில் சடலமாக மீட்பு : அதிர்ச்சியில் மக்கள்!!

குட்செட் வீதி..

சிறுவர்களான பிள்ளைகள் இருவர் உட்பட கணவன், மனைவி என நால்வருள்ள குடும்பம் இன்று (07.03.2023) காலை வீட்டில் சடலமாக மீட்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா, குட்செட் வீதி , அம்மா பகவான் ஒழுங்கையில் பிள்ளைகளும், தாயும் படுக்கையிலும் தந்தை தூக்கில் தொங்கிய நிலையிலும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் சடலங்களை மீட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் இன்று இடம்பெற்ற அதிசயம் : பக்தர்கள் பரவசம்!!

நயினாதீவு நாகபூஷணி அம்மன்..

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் இன்று மாசி மக உற்சவம் வெகு சிறப்பாக இடம்பெற்றது. இதன்போது ஆலயவரலாற்றுடன் தொடர்புடைய கருடப்பறவை மாசி மக தீர்த்தத்தின் போது,

அம்மன் தீர்த்தமாட வானில் வட்டமிட்டு அம்மனை தரிசித்துச் சென்ற அதிசய காட்சி இடம்பெற்றது. இந்நிலையில் வானில் வட்டமிட்ட கருடன் அம்மனை தரிசித்துசென்ற காட்சி நயினை அம்பாள் அம்பாள் பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

அதேவேளை மாசிமகமான இன்றைய தினம் கடல், குளம், ஆறு ஆகியவற்றில் புண்ணிய நதியாக கருதப்படும் கங்கை கலந்திருக்கும் என்பது காலங்காலமாக வரும் நம்பப்பட்டு வரும் ஐதீகம் ஆகும்.

ஆன்லைன் சூதாட்டத்தால் பறிபோன இளைஞனின் உயிர் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

தமிழ்நாட்டில்..

இந்தியாவில் ஆன்லைன் சூதாட்டத்தால் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து பலரும் தற்கொலை செய்து வருகின்றனர். இதனால் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

குறிப்பாகத் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை மசோதாவையும் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் கால தாமதம் செய்ததால், அது காலாவதியும் ஆனது.

இந்த ஆன்லைன் சூதாட்டத்தில் ஏராளமான குடும்பங்கள் சீரழிந்து காணப்படுகிறது. இதற்காக பலரும் கடன் வாங்கி விளையாடி வருகின்றனர். இதில் பணத்தை இழந்தவர்கள் தங்கள் குடும்பத்தினரை எண்ணி பார்க்காமல் தற்கொலை செய்துகொள்கின்றனர்.

தொடர்ந்து இதுபோன்ற தற்கொலை நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், தற்போது ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். செங்கல்பட்டு தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் கோபால் தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (35).

மருத்துவ பிரதிநிதி வேலை பார்த்து வந்த இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். அவர் குடும்ப வறுமை காரணமாக, ஆன்லைன் சூதட்டத்தை தொடர்ந்து விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தன்னிடம் அதற்காக போதிய பணம் இல்லாத நிலையில் அதற்காக வேறு ஒரு விஷயத்தையும் செய்து வந்துள்ளார்.

அதாவது லோன் ஆப் என்று சொல்லப்படும் கடன் செயலியை பதிவிறக்கம் செய்து அதன்மூலம் கடன் பெற்று விளையாடி வந்துள்ளார். இவ்வாறு அவர் சில கடன் செயலிகள் மூலம் கடன் பெற்று விளையாடி வந்துள்ளார்.

இருப்பினும் அவர் விளையாட்டில் வெற்றி பெறவில்லை. இதனால் அவர் ரூ.20 லட்சம் வரை பணத்தை இழந்துள்ளார். ஒரு பக்கம் தொடர் தோல்வி, மறுபக்கம் கடன் செயலியில் இருந்து பணம் கேட்டு நெருக்கடி..

இதனால் கடுமயான மன உளைச்சலில் தள்ளப்பட்டார். தொடர்ந்து அவர் மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில், நேற்று மாலை அவரது மனைவி வெளியில் சென்ற நேரத்தில், மனைவியின் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சிறிது நேரத்தில் வீடு திரும்பிய மனைவி கதவை பலரும் முறை தட்டியுள்ளார். ஆனால் கதவு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தார்.

அப்போது வினோத் குமார் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தகவல் அறிந்து வந்த சேலையூர் அதிகாரிகள் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் ரம்மி, கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்ட வினோத்குமாரின் வீட்டுக்கு சென்ற தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா வினோத்குமார் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

18 ரூபாய் சம்பளத்திற்கு பாத்திரம் கழுவியவர் இன்று கோடீஸ்வரர் : சாதனை மனிதனின் கதை!!

கர்நாடகாவில்..

18 ரூபாய் சம்பளத்திற்கு பாத்திரம் கழுவுவதில் வாழ்க்கைகை தொடங்கி நபர் இன்று இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பிரபலமான ஹோட்டல் உரிமையாளர் ஜெயராம் பனனின் கதை இதோ.

புகழ்பெற்ற ஹோட்டல்களின் உரிமையாளர் மற்றும் தோசை கிங் என்று அழைக்கப்படும் ஜெயராம் பனன், தனது வெற்றியின் மூலம் தனக்கென ஒரு பெயரைப் பெற்றுள்ளார்.

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில், உடுப்பியின் கார்காலாவில் வறுமையில் பிறந்து வளர்ந்த பனன் தனது தேர்வில் தோல்வியடைந்து 13 வயதில் வீட்டை விட்டு ஓடி மும்பைக்கு சென்றார்.

ஒரு ஹோட்டலில் பாத்திரம் கழுவிப் பணியாளராகத் தொடங்கி, பனன் ஒரு வெயிட்டராகவும் பின்னர் மேலாளராகவும் உயர்ந்து, ஹோட்டல் வணிகத்தின் அனைத்து அம்சங்களிலும் தேர்ச்சி பெற்றார்.

பல வருட கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சிக்குப் பிறகு, பனன் இறுதியாக மும்பையில் உள்ள தென்னிந்திய கேட்டரிங் ஹோட்டலின் உரிமையாளராக ஆனார். டிசம்பர் 4, 1986-ல், பனன் 40 பேர் மட்டுமே அமரும் வசதி கொண்ட ஒரு சிறிய தென்னிந்திய உணவகத்தை தொடங்கினார்.

மெதுவாக தொடங்கினாலும், உணவகம் பிரபலமடைந்தது, பின்னர் அது சாகர் ரத்னா என மறுபெயரிடப்பட்டது. தனது முதல் உணவகத்தின் வெற்றியுடன், கனடா, சிங்கப்பூர், பாங்காக் மற்றும் உலகெங்கிலும் உள்ள மற்ற இடங்களில் சாகர் ரத்னா ஹோட்டல்களைத் தொடங்கி தனது வணிகத்தை விரிவுபடுத்தினார்.

இன்று, அவரது ஹோட்டல் குழு வட இந்தியாவில் சிறந்த தரமான சைவ உணவை வழங்குவதில் மிகவும் பிரபலமாக உள்ளது. அவரது ஹோட்டல் வணிகத்துடன், பனன் தி ஓஷன் பேர்ல் குரூப் ஆஃப் ஹோட்டல்களையும் வைத்திருக்கிறார். அவரது ஆண்டு வருமானம் ரூபாய் 300 கோடிக்கு மேல் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பனனின் வெற்றிக் கதை ஒரு உண்மையான உத்வேகம், மேலும் அவரது கனவுகளை அடைவதற்கான அவரது கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் அவரை பல ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கு முன்மாதிரியாக மாற்றியுள்ளது.

பெற்ற குழந்தையை கொன்று புதைத்த கொடூர தந்தை.. நெஞ்சு பதைபதைக்கும் சம்பவம்.!!

சென்னையில்..

சென்னை மீனம்பாக்கம் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி(19) என்ற இளம்பெண், துணி கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வருண்(20), என்பவருடன் காதல் ஏற்பட்டது. காதலர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக நெருங்கி பழகி வந்துள்ளனர்.

காதலிக்கும் போதே இருவரும் உல்லாசமாக இருந்ததால், விஜயலட்சுமி கடந்த ஓராண்டுக்கு முன்பு கர்ப்பமாகியுள்ளார். இதனை அறிந்த விஜயலட்சுமி பெற்றோர், வருணின் குடும்பத்தாருக்கு தெரியாமல் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர். பின்னர் கூடுவாஞ்சேரி பகுதியில் இருவரும் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில், இவர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் வருணுக்கு திருமணம் ஆன விவகாரம் அவரின் பெற்றோருக்கு தெரியவந்தது.

இதனால் விஜயலட்சு, குழந்தையுடன் வீட்டிற்கு செல்ல அச்சப்பட்டு, கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே உள்ள தனது நண்பன் வீட்டில் குழந்தையை கொடுத்துவிட்டு விஜயலட்சுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்‌.

அங்கு இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தனது பெற்றோரிடம் தருண் கூறினார். அப்போது, அதிர்ச்சி அடைந்த வருணின் பெற்றோர் பிறகு சமாதானமாகி இருவரையும் ஏற்றுக் கொண்டனர். பின்னர் வருணின் பெற்றோரிடம் குழந்தை இருப்பதை இருவரும் கூறாமல் இருந்துள்ளனர்.

விஜயலட்சுமியிடம் குழந்தை நண்பனின் வீட்டில் பாதுகாப்பாக வளரட்டும், விரைவில் தனது பெற்றோரிடம் கூறி அதன் பின் குழந்தையை எடுத்து வருவதாக வருண் கடந்த 3 மாதங்களாக கூறி வந்துள்ளார்.

இதனிடையே, உடனடியாக தன் குழந்தையை பார்க்க வேண்டும் என விஜயலட்சுமி வருணிடம் கேட்டு சண்டை போட்டுள்ளார். அப்போது தான் வருணின் பெற்றோருக்கு குழந்தை இருக்கும் விஷயம் தெரிய வந்துள்ளது.

அதன்படி குழந்தை குறித்து வருணிடம் பலமுறை கேட்டும் அவர் பதிலளிக்காததால் சந்தேகம் அடைந்த விஜயலட்சுமி போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வருணை அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டபோது குழந்தையை கொன்று கூடுவாஞ்சேரி பெருமாட்டு நல்லூர் சுடுகாடு அருகே புதைக்கப்பட்டதாக தெரிவித்தார். இதைக்கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

அதன் பிறகு 4 மாத ஆண் குழந்தை புதைத்த இடத்தை தோண்டி பார்த்த போது எலும்புக்கூடு மட்டுமே சிக்கியது. அதை கைப்பற்றி உடல் கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற குழந்தையை தந்தையே கொலை செய்து புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடு வீதியில் தீப்பிடித்த கார்… நிறைமாத கர்ப்பிணியும் மற்றும் கணவருக்கும் நேர்ந்த பரிதாபம்!!

கேரளாவில்..

மருத்துவ பரிசோதனைக்காக நிறைமாத கர்ப்பிணியை காரில் அழைத்துக் கொண்டு சென்று இருக்கிறார் கணவர். கூட அவரது மகள், தாய்,தந்தை, உறவுக்கார பெண் சென்று இருக்கிறார்கள்.

திடீரென்று நடுரோட்டில் காரில் தீப்பிடிக்க பின் சீட்டில் அமர்ந்திருந்த 4 பேரும் கதவை திறந்து கொண்டு வெளியேறிவிட முன் சீட்டில் அமர்ந்திருந்த கணவரும் நிறைமாத கர்ப்பிணியும் கதவு திறக்க முடியாததால் காருக்குள்ளேயே சிக்கிக்கொண்டு உட்கார்ந்த நிலையிலேயே தீயில் கருகி உயிரிழந்திருக்கிறார்கள்.

கேரளாவில் நடந்திருக்கிறது இந்த அதிர்ச்சி சம்பவம். கேரள மாநிலத்தில் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரஜித். இவரின் மனைவி ரிஷா . தம்பதிக்கு பார்வதி என்ற மகள் உள்ளார். ரிஷா மீண்டும் தற்போது கர்ப்பம் அடைந்து நிறை மாத கர்ப்பிணியாக இருந்திருக்கிறார்.

மருத்துவர் பரிசோதனைக்காக நிறைமாத கர்ப்பிணி ரிஷாவை காரில் அழைத்துக் கொண்டு சென்றிருக்கிறார் பிரஜித். கூடவே அவரது மகளும், தாய் ,தந்தையும் , உறவுக்கார பெண்ணும் சென்று இருக்கிறார்கள்.

மகள், தாய், தந்தை,உறவுக்கார பெண் நான்கு பேரும் பின் காரின் பின் சீட்டில் அமர்ந்து கொள்ள, முன் சீட்டில் மனைவியை அமரவைத்து காரை ஓட்டி இருக்கிறார் பிரஜித். கண்ணூர் அரசு மருத்துவமனை அருகே கார் சென்றபோது நடுரோட்டில் திடீரென்று தீப்பற்றி எரிந்து இருக்கிறது.

அதிர்ச்சி அடைந்த பிரஜித் உடனே காரை நிறுத்தி இருக்கிறார். ஆனால் முன்பக்கத்தில் இருந்த இரண்டு கதவும் திறக்க முடியவில்லை. இதனால் பிரஜீத், ரிஷா இரண்டு பக்கமும் கதவுகள் திறக்க முடியவில்லை. ஆனால் பின் சீட்டில் இருந்த கதவை திறந்து கொண்டு நான்கு பேரும் தப்பித்து வெளியேறி விட்டார்கள்.

நாலு பேரும் தப்பித்து வெளியேறி விட்டார்கள். முன் சீட்டில் அமர்ந்திருந்தபடியே தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள் பிரஜித்தும் ரிஷாவும். எப்படியாவது காப்பாற்றலாம் என்று முயற்சித்து இருக்கிறார்கள் . ஆனால் தீ வேகமாக பரவி விட்டதால் ரெண்டு பேரும் தீயில் கருகி விட்டனர்.

ஓடும் காரில் திடீரென்று தீப்பற்றியது எப்படி என்று விசாரணை நடந்த போது காருக்குள் ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல் வைக்கப்பட்டு இருந்திருக்கிறது. அந்த பாட்டிலில் தீ பற்றியதால் இந்த விபத்து ஏற்பட்டது தெரிய வந்திருக்கிறது.

மேலும், காரின் பின்பக்க கேமரா பொருத்தப்பட்ட போது டிரைவர் சீட்டில் உள்ள ஒயர்களின் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. அதில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது என்று மோட்டார் வாகனத் துறை தெரிவித்திருக்கிறது.

தண்டனைக்கு பயந்து 14 ஆண்டுகள் வனவாசம் : குகையில் வாழ்ந்த நபர் மனம்மாறி எடுத்த முடிவு!!

சீனாவில்..

குற்ற தண்டனைக்கு பயந்து 14 ஆண்டுகள் காட்டில் வாழ்ந்து வந்த நபரை கண்டு சீனாவில் அனைவரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். சீனாவில் லூயி என்ற நபர் கடந்த 2009ம் ஆண்டு ₹ 1859 ரூபாய் பணத்தை திருடியுள்ளார்.

இந்த திருட்டு சம்பவத்தால் பெரும் அச்சத்திற்கு உள்ளான லூயி, காவலர்களுக்கு பயந்து காட்டுக்குள் தப்பி ஓடியுள்ளார். லூயி-க்கு பயம் இறுதிவரை விலகாத காரணத்தினால், காட்டுக்குள் உள்ள குகையிலேயே 14 ஆண்டுகள் வாழ்ந்து வந்துள்ளார்.

கடந்த 2009ம் ஆண்டு செய்த சிறிய தவறுக்கு அஞ்சி, காட்டுக்குள் தப்பியோடி வாழ்ந்து வந்த லூயி அவரது வாழ்வின் முக்கியமான பல தருணங்களை இழந்துள்ளார். இதையடுத்து இறுதியாக மனம் மாறிய லூயி காட்டுக்குள் 14 ஆண்டுகள் வசித்து வந்த குகையை விட்டு வெளியேறி, நேரடியாக பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.