செத்துப் போனதாக நினைக்கப்பட்ட பிரபல நடிகை.. வாழ்க்கையில் பட்ட துயரம்!!

நடிகை சுமதி..

தமிழ் சினிமாவில் கொமடி நடிகையாக வலம் வரும் நடிகை சுமதி தனது வாழ்வில் ஏற்பட்ட துயரத்தினை கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் ஆக்ரோஷமாகவும், சில தருணங்களில் கொமடி கதாபாத்திரத்திலும் நடித்து அசத்துபவர் தான் நடிகை சுமதி.

இவர் சின்னத்திரை மட்டுமின்றி படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக, நடிகர் வடிவேலுவுடன் சுமதி இணைந்து நடித்துள்ள காமெடி காட்சிகள், இன்றளவிலும் ரசிகர்கள் மத்தியில் சிரிப்பலைகளை ஏற்படுத்த கூடியவை.

இந்நிலையில் பிரபல சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், தனது வாழ்க்கையின் சோகத்தினை பகிர்ந்துள்ளார். நடிகை சுமதி தனிப்பட்டா வாழ்வில் நிறைய பிரச்சினைகளை சந்தித்தாலும் தற்போது இந்த இடத்தில் வந்து நிற்பதாக கூறியுள்ளார்.

இவருக்கு திருமணம் நடைபெற்ற பின்பு கணவர் சந்தேகப்படுவதும், வேலைக்கு செல்லக்கூடாது என்றும் கூறி தொந்தரவு செய்துள்ளார். கணவரிடமிருந்து பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்றும், இவரை ஏற்றுக்கொள்ளவில்லையாம்.

தனது பிள்ளைகளை 10 ஆண்டுகளாக பிரிந்துள்ளதாக கண்கலங்கியபடி கூறியுள்ளார். தற்போது உறவினர்கள், பிள்ளைகள் என அனைவரும் தன்னிடம் பேசிக்கொள்கின்றனர் என்றும், தான் வீட்டை விட்டு வரும் தனது அப்பா இருந்தார் எனவும், திரும்பி போகும் போது அவர் இல்லை இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

ஆனால் சுமதியின் அப்பா இறப்பதற்கு முன்பு அவரை ரிவி சீரியலில் பார்த்துள்ளார். பின்பு சுமதியின் அம்மாவிடம் நம்ம பொண்ணு சாகவில்லை என்று கூறியுள்ளாராம்.

சுமதியின் குடும்பத்தினர் அனைவரும் அவர் இறந்துவிட்டதாகவே நினைத்துள்ள நிலையில், அவரது தந்தைக்கு மட்டும் தனது மகள் எங்கேயாவது உயிருடன் இருப்பாள் என்று நினைத்து வாழ்ந்ததாக கூறி கண்கலங்கியுள்ளார்.

சம்பாதிக்கும் கனவுடன் வேலைக்குப்போன இளம் பெண்ணுக்கு முதல்நாளே நேர்ந்த பரிதாபம்!!

சென்னையில்..

கேரள மாநிலம், கொல்லம் பகுதியை சேர்ந்தவர் நிகிதா (வயது 19). இவர் சென்னையின் கிழக்கு தாம்பரத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி அப்பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி சைக்காலஜி முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

ஒரு பக்கம் கல்லூரியில் படித்து வரும் நிகிதாவிற்கு மழலையர் பள்ளியில் பகுதி நேர ஆசிரியராக பணி கிடைத்துள்ளது. அப்படி இருக்கையில், முதல் நாளான இன்று காலை பணிக்காக இரும்புலியூர் அருகே செல்போன் பேசியபடி ரெயில்வே தண்டவாளத்தை நிகிதா கடக்க முயன்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.

நிகிதா ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற சமயத்தில் மற்றொரு அசம்பாவித சம்பவமும் அங்கே அரங்கேறி உள்ளது. அப்போது குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கே வந்துள்ள சூழலில் நிகிதா மீதும் மோதி உள்ளது.

இதனை நிகிதா சற்றும் எதிர்பாராத சூழலில், தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இது பற்றி தகவல் கிடைத்த போலீசார், சம்பவ இடம் வந்து இளம்பெண் நிகிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். கேரளாவை சேர்ந்த இளம்பெண், சென்னையில் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

அதே போல, தனக்கு கிடைத்த பார்ட் டைம் வேலையில் முதல் நாள் செல்லும் சமயத்தில் இளம்பெண்ணுக்கு இப்படி நடந்ததும் பலரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மணப்பெண்ணின் எடைக்கு நிகரான தங்கம்.. ஆடம்பரமான முறையில் வாய் பிளக்க வைத்த திருமணம்!!

துபாயில்..

துபாயில் நடைபெற்ற ஆடம்பரமான பாகிஸ்தானிய திருமண விழாவில் மணப்பெண்ணின் எடைக்கு இணையான தங்கம் காட்சிப்படுத்தப்பட்ட காட்சி வைரலாகி வருகிறது.

துபாயில் நடத்தப்பட்ட ஆடம்பரமான பாகிஸ்தான் திருமணத்தில் காட்டப்பட்ட தங்கத்தின் அளவு சமீபத்தில் ஆன்லைனில் பிரபலமடைந்தது, பல பயனர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. காட்சிப்படுத்தப்பட்ட தங்கத்தின் அளவு மணமக்களின் எடைக்கு சமமாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், தங்கம் போலியானது என்றும் திருமணத்தின் ஒட்டுமொத்த கருப்பொருளின் ஒரு பகுதி மட்டுமே பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. தங்கம் அலங்காரமாக மட்டுமே பயன்படுத்தப்பட்டது, மேலும் இந்த திருமண நடவடிக்கை நன்கு அறியப்பட்ட பாலிவுட் படமான ஜோதா அக்பரில் இடம்பெற்ற காட்சியை பிரதிபலித்தார்.

திருமண கொண்டாட்டத்தை பிரமாண்டமாக நடத்த மாப்பிள்ளை இப்படி ஒரு நிகழ்வை செய்ததாக கூறப்படுகிறது. நாடு திருமணத்தில் ஆடம்பரமான தங்கத்தைப் பயன்படுத்துவது தெற்காசிய நாடுகளில் ஆடம்பரமான திருமணச் செலவுகளின் பாரம்பரியம் குறித்து சமூக ஊடகங்களில் விவாதத்தைத் தூண்டியுள்ளது.

ஆடம்பரமான திருமணச் செலவுகளின் போக்கு குடும்பங்களுக்குத் தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும், திருமணங்கள் விலையுயர்ந்த விழாக்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வலுப்படுத்துவதாகவும் கூறும் பலரிடமிருந்து விமர்சனத்தை ஈர்த்துள்ளது.

திருமண அமைப்பு சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், அதன் படைப்பாற்றல் மற்றும் விவரங்களுக்கு கவனத்தை ஈர்த்தது. திருமண திட்டமிடுபவர்கள் மிகவும் கடினமாக உழைத்து ஜோதா அக்பர் கருத்தை மறுஉருவாக்கம் செய்வதில் அற்புதமான வேலையைச் செய்ததாக நெட்டிசன்கள் தெரிவித்தனர்.

சமீபத்திய நாட்களில், தனித்துவம் மற்றும் வேடிக்கைக்காக திருமணங்களில் கொஞ்சம் படைப்பாற்றலையும் வேடிக்கையையும் சேர்ப்பது நாகரீகமாக உள்ளது. மக்கள் தங்களுக்குப் பிடித்த திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அல்லது புத்தகங்களின் அடிப்படையில் தங்கள் கனவு திருமணத்தை மீண்டும் உருவாக்க முயற்சிக்கின்றனர்.

பியூட்டி பார்லர் சென்ற மணப்பெண்ணுக்கு நடந்த விபரீதம் : நின்றுபோன திருமணம்!!

கர்நாடகாவில்..

திருமணத்துக்கு மேக் அப் போட்ட இளம்பெண்ணின் முகம் கருமை நிறமாக மாறி, வாங்கியதால் திருமணமே நின்று போன சம்பவம் கர்நாடகாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக திருமணம் போன்ற நிகழ்வுகள் என்றாலே பெண்கள் தங்களை அலங்கார படுத்திக்கொள்ள எண்ணுவர். குறிப்பாக திருமணத்தின்போது பியூட்டி பார்லர் போய் மேக் அப் போட்டுக்கொள்வர்.

அவ்வாறு மேக் அப் போடுபவர்கள் தங்களை திருமண நிகழ்வில் அழகாக காட்டிக்கொள்ள எண்ணியே அதனை செய்வர். ஆனால் தற்போது அவ்வாறு மேக் அப் போட்ட இளம்பெண்ணின் திருமணம் நின்றுபோன சம்பவம் அரங்கேறியுள்ளது.

கர்நாடக மாநிலம் ஹசன் பகுதியில் உள்ள அரிசிகரே என்ற பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. திருமணம் கடந்த 2-ம் தேதி நடைபெற இருந்தது.

இதனால் திருமணம் நாளுக்கு நாள் நெருங்க, தன்னை அழகாக காட்டிக்கொள்ள வேண்டும் என்று நினைத்த அந்த பெண் பியூட்டி பார்லர் செல்ல முடிவு செய்துள்ளார். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரிசிகரே டவுனில் உள்ள கங்கா என்பவருக்கு சொந்தமான அழகு நிலையத்திற்கு மேக்-அப் போட்டுக்கொள்ள சென்றுள்ளார்.

அப்போது அங்கே தனக்கு இந்த பெண் மேக் அப் போட்டுவிட சொல்ல, அவரது முகத்தில் புது கிரீம் ஒன்றை பூசி, பவுன்டேஷன் மேக் அப் போட்டுவிட்டுள்ளார். பின்னர் ‘ஸ்டீம்’ என்று சொல்லப்படும் சுடுநீராவியில், அவரது முகத்தை காட்டும்படி கூறியுள்ளார். அந்த பெண்ணும் சூடு சுடுநீராவியில் தனது முகத்தை காட்டியுள்ளார்.

ஸ்டீம் எடுத்த சில நிமிடங்களில் மணப்பெண்ணின் முகம் வெந்து காணப்பட்டுள்ளது. மேலும் அவரது முகம் கருமை நிறத்தில் காணப்பட்டு கண்கள் அனைத்தும் தேனீ கடித்தது போல் வீக்கம் பெற்றது.

இதனால் அதிர்ச்சியைடந்த மணப்பெண், மற்றும் அவரது உறவினருக்கு செய்வதறியாது திகைத்தனர். மேலும் இது தற்போது வரை சரியாகாத நிலையில் இருந்ததால், பெண்ணை கண்டு மணமகன் வீட்டார் அதிர்ச்சியடைந்தனர்.

அதோடு தனக்கு இந்த திருமணம் வேண்டாம் என மாப்பிள்ளை தெரிவிக்கவே திருமணமும் நின்று போனது. இதனால் வேதனையில் இருக்கும் பெண்ணின் வீட்டார் இந்த சம்பவம் குறித்து அந்த அழகு நிலையத்தின் மேல் காவல்துறையில் புகார் அளித்தனர்.

அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணத்துக்காக மேக்கப் போட்ட இளம் பெண்ணின் முகம் வீக்கம் பெற்று, கருமை நிறமாக மாறியதால் திருமணமே நின்றுபோன சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக்காக தாய் மீது காரை ஏற்றிய பாசக்கார மகன்.. தாயின் பரிதாப நிலை!!

தென்காசியில்..

மனிதர்களிடையே மனிதம் மறைந்து போய் ரொம்ப காலம் ஆகிறது. ஐந்து வயதில் அண்ணன் தம்பி, பத்து வயதில் பங்காளி என்பார்கள். இப்போதெல்லாம் கணவன், மனைவி, தந்தை, தாய், மகன், மகள் என்று யாரையும் எதிர்பார்ப்பதில்லை.

மேலை நாடுகள் எல்லாம், இந்தியர்களின் பாரம்பரியமும், குடும்ப பிணைப்பையும் பார்த்து பிரமித்த காலங்கள் மலையேறி விட்டது. அவர்கள் மெல்ல மெல்ல குடும்பம், பாசம் என்று திரும்பி கொண்டிருக்கையில், நாம் பணத்தை நோக்கி பேராசையுடன் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

கூட்டுக் குடும்பங்கள் தனிக் குடும்பங்களாக உருமாறி, இப்போது சிங்கிள் பேரெண்ட் என்று பெருமையாக சொல்லிக் கொள்ளும் நிலையில் உள்ளது நம் சமூகம். பெற்ற தாய் மீதே காரை ஏற்றி, சொத்துக்காக மகனே கொலைச் செய்த சம்பவம் தென்காசியை அதிர செய்துள்ளது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள அச்சன்புதூர் பிள்ளையார் கோவில் தெருவில் சங்கரநாராயணன்- முருகம்மாள் (62) தம்பதி வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு சங்கர் என்ற மோகன் (45), ராம்குமார், உதயமூர்த்தி (38) என்று 3 மகன்கள் உள்ளனர். சங்கர நாராயணன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார்.

இந்த நிலையில் நேற்று காலையில் முருகம்மாள் தனது கடைசி மகன் உதயமூர்த்தியுடன் பைக்கில் தென்காசிக்கு சென்று கொண்டிருந்தார். அச்சன்புதூர்-சிவராம்பேட்டை சாலையில் சென்றபோது, பின்னால் வந்த கார் ஒன்று பைக் மீது பயங்கரமாக மோதியது.

இதில் முருகம்மாள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உதயமூர்த்தி பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

விபத்து ஏற்படுத்திய கார் நிற்காமல் அசுரவேகத்தில் சென்றுவிட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், காயத்துடன் போராடிய உதயமூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் இலத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முருகம்மாளின் உடலை மீட்டு விசாரணையை தொடங்கினர். அப்போது, அது விபத்து இல்லை என்பதும், சொத்து தகராறில் முருகம்மாளை அவரது மூத்த மகன் மோகன்தான் காரை ஏற்றி கொலை செய்தார் என்றும் திடுக்கிடும் தகவலும் தெரியவந்தது.

மோகனுக்கும், அவரது தாய் முருகம்மாளுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வருகிறது. குடும்ப சொத்து தொடர்பான வழக்கு செங்கோட்டை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

மேலும், சங்கரநாராயணன் விபத்தில் உயிரிழந்த நிலையில், அவை தொடர்பான வழக்கில் இன்சூரன்ஸ் தொகையை முருகம்மாள் மற்றும் அவரது 3 மகன்களும் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அந்த பணத்தை வழங்குவதிலும் மோகனுடன் பிரச்சினை இருந்து வருகிறது.

மோகனுக்கு சொத்தும் கிடையாது, பணமும் கிடையாது என்று அவரது தாயார் முருகம்மாள் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் மோகன் அடிக்கடி தனது தாயாருடன் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் ஆத்திரத்தில் இருந்த அவர் முருகம்மாள், உதயமூர்த்தி இருவரும் பைக்கில் சென்றபோது காரை ஏற்றி முருகம்மாளை கொலை செய்துள்ளார், என விசாரணை நடத்திய போலீசார் கூறுகின்றனர். மேலும் தலைமறைவான மோகனை வலைவீசி தேடி வருகின்றனர்.

திருமண மேடையில் கனவுகளோடு வாழ்க்கையை தொடங்க இருந்த மணமகனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

பீகாரில்..

இந்திய மாநிலம் பீகாரில் திருமண நிகழ்வில் அதீத இரைச்சல் ஒலித்ததால் மணமகன் மாரடைப்பு ஏற்பட்டு உயிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தில் உள்ள இந்தர்வா கிராமத்தில் திருமண நிகழ்வு நடந்தது.

குதிரை ஊர்வலம் என கோலாகலமாக நடந்த இந்த திருமணத்தில், இளைஞர்கள் சிலர் அதீத சத்தத்தில் இசையை ஒலிக்கவிட்டு நடனமாடிக் கொண்டிருந்தனர். ஆனால், மணமகன் சுரேந்திர குமார் இதனால் பாதிக்கப்பட்டார்.

அவர் சத்தத்தை குறைக்குமாறு கூறினார். எனினும் அங்கிருந்தவர்கள் அதனை செய்யவில்லை. அதன் பின்னர் மணமக்கள் மாலைமாற்றிக் கொண்டனர். அப்போது மணமகளின் கழுத்தில் சுரேந்திர குமார் மாலை அணிவித்தவுடன் மேடையில் மயங்கி விழுந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதீத இரைச்சலால் தான் மணமகன் இறந்ததாக கூறப்படும் நிலையில், இந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நேரத்தில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய தாய்-மகன் : சுவாரஸ்ய பின்னணி!!

மேற்கு வங்கத்தில்..

மேற்கு வங்கத்தில் தாய் – மகன் ஒரே நேரத்தில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள நிகழ்வு மேற்கு வங்கத்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் என்ற பகுதியில் காட்ஷில்லா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 41 வயதுடைய ஆயிஷா பேகம் என்பவர் வசித்து வருகிறார்.

இவரது கணவர் விவசாயத் தொழில் செய்து வரும் இவர்களுக்கு பர்வேஸ் ஆலம் என்ற மகனும், பிர்தௌசி என்ற மகளும் உள்ளனர். இதில் மகள் பிர்தௌசி படிப்பின் மீது ஆர்வம் கொண்டவராக இருக்கும் நிலையில், தற்போது எம்.ஏ. வரை படித்துள்ளார்.

ஆனால் மகன் பர்வேஸ் ஆலமுக்கோ படிப்பின் மீது ஆர்வம் இல்லாதவராக இருந்துள்ளார். இதனால் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் தனது 10-ம் வகுப்பை பாதியிலேயே நிறுத்தியுள்ளார். அதே போல் தாயும் பல ஆண்டுகளுக்கு முன்பு 10-ம் வகுப்பு படிக்காமல் தனது படிப்பை நிறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், மகள் பிர்தௌசி தனது தாய் மற்றும் சகோதரனை படிக்கும்படி கூறியுள்ளார். தொடர்ந்து பல ஆண்டுகளாக பிர்தௌசி கூறி வந்த நிலையில், தாய் மற்றும் சகோதரன் படிக்க தொடங்கியுள்ளனர்.

அதன்படி அங்குள்ள மதரஸா பள்ளியில் இருவரும் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக தற்போது அங்கு 10-ம் வகுப்பு தேர்வு நடைபெற்று வரும் நிலையில், தாய் – மகன் ஆகிய இருவரும் அருகருகே அமர்ந்து தேர்வு எழுதினர்.

இந்த நிகழ்வு அந்த பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தேர்வு எழுதிய தாய் ஆயிஷா கூறுகையில், “என்னால் படிக்க முடியவில்லை. ஆனால் என் மகள் படிக்கக் கற்றுக்கொண்டாள்.

அதனால் அவள் என்னையும் படிக்கும்படி அறிவுறுத்தினாள். நான் படித்தால் நன்றாக இருக்க முடியும் என்று கூறினார். அதனால் நான் உயர் மதரஸாவில் சேர்ந்தேன். தற்போது நான் என் மகனுடன் சேர்ந்து, படிக்க தொடங்கினேன். தற்போது இந்த தேர்வையும் நன்றாக எழுதி இருக்கிறேன்.

பல்வேறு இன்னல்களால் படிப்பை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ள என்னைப் போன்றவர்களை படிக்கத் தொடங்க அறிவுறுத்துகிறேன்.” என்றார். இது போன்ற பல்வேறு மாவட்டங்களில் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.

மகளின் முயற்சியால் தாய் மற்றும் மகன் பல ஆண்டுகளுக்கு பிறகு 10-,ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள நிகழ்வு மேற்கு வங்க பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு தாயை ஊக்குவித்த மகளுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்திய முறைப்படி திருமணம் செய்து கொண்ட லண்டன் பெண்… சுவாரஸ்ய காதல் கதை!!

தமிழகத்தில்..

இந்திய முறைப்படி லண்டன் பெண்ணை திருமணம் செய்த மாப்பிள்ளையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழகத்தின் அருப்புக்கோட்டை அருகே உள்ள கடம்பன் குளம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக்.

பொறியியல் பட்டதாரி படிப்பை முடித்து விட்டு வேலைக்காக லண்டனுக்கு சென்றுள்ளார். பணிபுரிந்த இடத்தில் பிரித்தானியாவை சேர்ந்த கேட்டியா ஒலி வேரா என்ற பெண் இருந்துள்ளார்.

இருவருக்கும் முதலில் பழக்கம் ஏற்பட்டுள்ளது, இது நாளடைவில் காதலாக மாற இருவரும் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டுள்ளனர். தற்போது வெளிநாட்டு பெண்கள் பலர் தமிழ் கலாச்சாரத்தில் திருமணம் செய்துக் கொள்வதால் இவர்களும் தமிழ் கலாச்சாரத்தில் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டுள்ளார்கள்.

இதற்காக கேட்டியா ஒலி வேரா என்ற பெயரை மீனாட்சி என மாற்றியுள்ளார். மேலும் மீனாட்சிக்கு பெற்றோர்கள் யாரும் இல்லாத நிலையில், மாப்பிள்ளையின் சொந்தபந்தங்கள் சூழ சொந்த ஊரில் திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளது. கடைசியாக இருவரின் ஆசைப்படி திருமணம் நடந்து முடிய, பலரும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

வவுனியா இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் போட்டி – 2023!!

இல்ல மெய்வல்லுனர் போட்டி..

வவுனியா இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலையின்(CCTMS) 2023ம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் இறுதிப் போட்டிகள் நேற்று முன்தினம் (02.03) பாடசாலை வளாகத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு பாடசாலையின் முதல்வர் அரிபூரணநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக ,பாடசாலையின் பழைய மாணவரும் சட்டத்தரணியுமான அருனகிரிநாதன் திலீப்காந்தன் கலந்து கொண்டிருந்தார்.

மேலும் சிறப்பு விருந்தினராக உதவிக்கல்வி பணிப்பாளர் (உடற்கல்வி) செந்தில்குமரன், கெளரவ விருந்தினர்களாக ஆசிரிய ஆலோசகர் (உடற்கல்வி) யூட் பரதமாறன், பாடசாலையின் அபிவிருத்திக்குழு செயலாளர் றொபேர்ட்,

உபசெயலாளர் டினேஷ் ரொஷின்டன், பாடசாலையின் பழைய மாணவர் சங்க செயலாளர் ப.கார்த்தீபன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்ததுடன் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந் நிகழ்வில் இலங்கையின் தேசிய கீதம் பாடசாலை மாணவிகளால் தமிழில் பாடப்பட்டமையுடனும் தேசிய கொடி மற்றும் பாடசாலை கொடி என்பன ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தது.

இறுதியாக மெய்வல்லுனர் இறுதிப் போட்டியில் பீஷ்மர் இல்லம் (மஞ்சள்) 3ம் இடத்தையும், துரோணர் இல்லம் (சிவப்பு) 2ம் இடத்தையும், விதுரர் இல்லம் (பச்சை) 1ம் இடத்தையும் பெற்றுக்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா ஓமந்தையில் காணியற்ற 219 அரச ஊழியர்களுக்கு காணிகள் : வெளியான பெயர்ப்பட்டியல்!!

வவுனியாவில் பணியாற்றும் காணியற்ற அரச ஊழியர்களுக்கு ஒமந்தை கிராம அலுவலக பிரிவில் உள்ள அரச ஊழியர் குடியேற்ற திட்டத்தில் அரச காணியினை வழங்குவதற்கு நேர்முக தேர்வின் மூலம் 219 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த தெரிவு செய்யப்பட்ட அரச ஊழியர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளதுடன் இவர்களுள் அரச காணியினை பெறுவதற்கு தகுதியற்றவர்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பின்,

அவர்கள் தொடர்பில் எதிர்வரும் 24.03.2023 ஆம் திகதிக்குள் பிரதேச செயலகத்திற்கு வருகை மேற்கொண்டு அல்லது பிரதேச செயலாளர், பிரதேச செயலகம் , வவுனியா எனும் முகவரிக்கு தபால் மூலம் தெரியப்படுத்துமாறு கேட்டுள்ளார்.

மேலும் 24.03.2023ம் திகதிக்கு பின்னர் கிடைக்கப்பெறும் எவ்வித முறைப்பாடுகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டாது என்பதுடன் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் தொடர்பில் முன்னரே தகவலை வழங்குமாறு பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.

காணாமல் போன பச்சிளம் குழந்தை.. புகாரளித்த மனைவி.. போலிஸார் விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி!!

சென்னையில்..

பச்சிளம் குழந்தையை தந்தையே கொலை செய்துவிட்டு நாடகமாடியுள்ள சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மீனம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. 20 வயதுடைய இவர், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மொபைல் போன் மூலம் இளைஞர் ஒருவர் அறிமுகமாகியுள்ளார்.

அவர் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த வருண் (20) ஆவார். இருவரும் முதலில் சாதாரணமாக பேசி வந்த நிலையில், இருவருக்குமிடையே நட்பு ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் அது காதலாக மாறவே, இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். இந்த பழக்கம் இவர்களுக்கிடையே அதிக நெருக்கத்தை கொண்டதால், விஜயலட்சுமி கற்பமுற்றார்.

தொடர்ந்து இவருக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த சம்பவம் எதுவும் விஜயலட்சமி குடும்பத்துக்கு தெரியாத நிலையில், வருண் அந்த குழந்தையை தனது தோழி வீட்டில் கொடுத்து வளர்த்து வருவதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு குழந்தை காணாமல் போனதாக விஜயலட்சுமி மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இதுகுறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

தொடர்ந்து குழந்தையின் தந்தை வருணிடமும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரது பதில் முன்னுக்கு பின் முரணாக இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரிடம் கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த குழந்தையை வருண் கொன்றது தெரியவந்தது.

மேலும் தனது குழந்தையை தானே கொலை செய்து கூடுவாஞ்சேரி அடுத்த காரணையில் இருக்கும் சுடுகாடு பகுதியில் வீசியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்துள்ளனர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கூடுவாஞ்சேரி உதவி ஆணையர் ஜெயராஜ் மற்றும் துணை ஆணையர் அதிவீரபாண்டியன், தடவியல் நிபுணர்கள் ஆகியோர் நேரில் சென்று தடயங்களை சேகரித்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து குழந்தையை கொலை செய்த காரணத்தை அதிகாரிகள் வருணிடம் விசாரித்து வருகின்றனர். பச்சிளம் குழந்தையை தந்தையே கொலை செய்துவிட்டு நாடகமாடியுள்ள சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு ஆண், இரண்டு பெண்கள், மூன்று வழி காதலால் அதிர்ஷ்டம்.. லொட்டரியில் 48 கோடி பரிசு!!

லொட்டரியில்..

ஒரு ஆணும் இரண்டு பெண்களும் ஒருவரை ஒருவர் காதலிக்கும் வித்தியாசமான காதலர்களுக்கு லாட்டரியில் ரூ.48 கோடி பரிசு விழுந்துள்ளது. பொதுவாக காதலர்கள் என்றால் ஜோடி (Couple) அல்லது இரண்டு பேருக்கு மத்தியில் இருக்கும் உறவு என்பது அனைவரும் அறிந்திருப்பார்கள்.

ஆனால், மூன்று பேருக்கு இடையில் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி காதலிக்கும் உறவை ஆங்கிலத்தில் த்ரபிள் (Throuple) என அழைக்கின்றனர். அப்படிப்பட்ட உறவில் இருப்பவர்கள் தான் இந்த கேட்டி (Katy), ஜஸ்டின் (Justin) மற்றும் கிளாரி (Claire) எனும் மூன்று வழி காதலர்கள்.

41 வயதான ரியல் எஸ்டேட் தொலழிலாளியான கேட்டி ரப்பிள் (Katy Rupple) மற்றும் வாஷிங்டனைச் சேர்ந்த 39 வயதான நகைச்சுவை நடிகர் ஜஸ்டின் ரப்பிள் (Justin Rupple) இருவரும் சியாட்டிலில் ஜஸ்டினின் நகைச்சுவை நிகழ்ச்சிக்கு வெளியே சந்தித்தபோது காதலித்தனர்.

கேட்டி ஜஸ்டினிடம் தான் இருபாலினம் என்று ஒப்புக்கொண்டபோது அவர்கள் ஒன்றாக சேர்ந்து பத்து வருடங்கள் மகிழ்ச்சியான உறவில் வாழ்ந்தனர். கேட்டி ஜஸ்டினிடம் கல்லூரியிலிருந்து ஜஸ்டினின் தோழியான கிளாரி தோர்ன்ஹில் மீதான ஈர்ப்பைப் பற்றி ஜஸ்டினிடம் கூறினார்.

ஜஸ்டினும் கிளாரும் 2003-ல் சந்தித்தபோது கல்லூரியிலிருந்து நல்ல நண்பர்கள். கிளாரை அணுகிய பிறகு, கேட்டி மற்றும் ஜஸ்டின் சிறிது நேரம் எடுத்து கேட்டியின் மீதுள்ள ஈர்ப்பை கூறியுள்ளனர்.

கிளாருக்கும் இருவரையும் பிடித்துப்போக இந்தஅரிய வகை உறவுக்கு ஒப்புக்கொண்டு, அன்று முதல் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக த்ரபிள் காதலர்களாக ஒன்றாக கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸில் வாழுகின்றனர்.

“நாங்கள் ஒரு குழுவாக செயல்படும் இந்த உறவில் மகிழ்ச்சியாகவும், ஒருவருக்கொருவர் அன்பினால் உருவாக்கப்பட்ட ஒரு ஆதரவு அமைப்பு எங்களிடம் உள்ளது. நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்று நாங்கள் கருதுகிறோம்” என்று கூருகின்றனர்.

அவர்கள் உணர்வதைப் போலவே, உண்மையிலேயே அவர்களுக்கு அதிர்ஷடம் அடித்தது. அவர்களுக்கு லொட்டரியில் 1.1 மில்லியன் பவுண்டுகள் (இலங்கை பணமதிப்பில் ரூ.48 கோடி) வென்றனர். அவர்கள் மூன்று பேரும் இணைந்திருப்பதால் கிடைத்த அதிர்ஷடம் தான் இந்த லாட்டரி பரிசு என ஆழமாக நம்புகின்றனர்.

கணவன் மீது உயிரையே வைத்த மனைவி இப்படி செய்யலாமா?

சேலத்தில்..

கணவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் ஏற்பாடு நடப்பதை அறிந்து தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற திருநங்கை சிகிச்சை பெற்று வருகிறார்.

சேலத்தைச் சேர்ந்தவர் திருநங்கை ஸ்ரேயா (28). இவர் கிச்சி பாளையத்தைச் சேர்ந்த ராம் (25) என்கிற ராம்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இருவரும் கடந்த சில ஆண்டுகளாக தாதகாப்பட்டி பகுதியில் தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு பிடித்து ஒன்றாக வசித்து வந்தனர்.

இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டு, ஸ்ரேயாவை விட்டு ராம் விலகிச் சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரேயா, ராம்குமாரை சந்தித்து செலவுக்கு கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார்.

அதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ராம்குமார் திருநங்கை ஸ்ரேயாவை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அவரும் அவரது குடும்பத்தினரும் ஸ்ரேயாவை ஆ.பா.ச.மா.க பேசி கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மனமுடைந்த ஸ்ரேயா நேற்று (பிப் 28) மதியம், அதிக அளவில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அவரை மீட்டு உடனிருந்த திருநங்கைகள் , அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு ஸ்ரேயாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பேட்டி அளித்த திருநங்கைகள், ‘ ராம் ஏற்கனவே குண்டாஸில் கைதாகி சிறைக்குச் சென்று வெளியே வந்தவர். அவருக்கு தேவையான பண உதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் ஸ்ரேயா தான் செய்தார். இந்த நிலையில் அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய ராமின் குடும்பத்தினர் முயற்சி செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. பணத்தையும் இழந்து தன்னை விட்டு நிரந்தரமாக ராம் பிரிந்து சென்றதால் மனமுடைந்த ஸ்ரேயா தற்கொலைக்கு முயற்சி செய்தார். ராம் மீது உரிய நடவடிக்கை எடுத்து நியாயம் வழங்க கிச்சிபாளையம் போலீசார் முன்வர வேண்டும் ‘ என்று தெரிவித்தனர்.

மனமுடைந்த திருநங்கை எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சியில் கணவன் செய்த செயல்!!

சேலத்தில்..

ஒரே வீட்டில் தம்பதி இருவருமே ஆளுக்கு ஒருபக்கம் விஷத்தை குடித்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. 2 பேருக்குமே தீவிர சிகிச்சையும் நடந்து வருகிறது.. என்ன நடந்தது?

சேலத்தைச் சேர்ந்தவர் திருநங்கை ஸ்ரேயா.. 28 வயதாகிறது.. இவர் கிச்சிபாளையத்தைச் சேர்ந்த ராம் என்ற ராம்குமாரை காதலித்தார்.. ராமுக்கு 25 வயதாகிறது.. அவரும் ஸ்ரேயாவை விரும்பியதையடுத்து, இருவருமே திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

கடந்த சில வருடங்களாக, தாதகாப்பட்டி பகுதியில் தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு பிடித்து வசித்து வந்தனர்.. இந்த நிலையில், இவர்களுக்குள் பணப்பிரச்சனை வெடித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டது. . இதுவரை செலவுக்கு கொடுத்த பணத்தை எல்லாம் திரும்ப கேட்டுள்ளார்.. அதில் மறுபடியும் 2 பேருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது…

அப்போது, ஆத்திரமடைந்த ராம்குமார் திருநங்கை ஸ்ரேயாவை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் ராம்குமாரின் குடும்பத்தினரும், அவருடன் சேர்ந்து, ஸ்ரேயாவை ஆபாசமாக திட்டி உள்ளதாக தெரிகிறது..

மேலும் ஸ்ரேயாவுக்கு கொலை மிரட்டலும் விடுத்ததாக தெரிகிறது. இதனால், அதிர்ச்சியும், மனவேதனையும், அவமானமும் அடைந்த ஸ்ரேயா அழுதுக்கொண்டே வீட்டுக்கு வந்துள்ளார்.. நேற்று மதியம், அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளையும் சாப்பிட்டுவிட்டு, அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.

அங்கு ஸ்ரேயாவுக்கு இப்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.. ஸ்ரேயாவுக்கு சீரியசாக இருக்கிறதாம்.. அவருடன் இருந்த திருநங்கைகள் இதை பற்றி சொல்லும்போது, “ராம்குமார் என்கிற ராம் ஒரு குற்றவாளி.. ஏற்கனவே குண்டாஸில் கைதாகி ஜெயிலுக்கு வெளியே வந்தவர்.

ஆனால், இப்போது அவருக்கு தேவையான பண உதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் ஸ்ரேயாதான் செய்தார். அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய அவர் குடும்பத்தினர் முயற்சி செய்து வருகின்றனர்..

இந்த திருமணத்துக்கு ராமும் தயாராகிவிட்டார்.. இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. பணத்தையும் இழந்து நிரந்தரமாக ராம் பிரிந்து சென்றதால் மனமுடைந்த ஸ்ரேயாவுக்கு முயற்சி செய்தார்…

ராம் மீது உரிய நடவடிக்கை எடுக்க நியாயம் வழங்க கிச்சிபாளையம் போலீசார் முன்வர வேண்டும்” என்றனர். திருமணம் செய்து வைப்பதாகவும், இதனால் திருநங்கையை விட்டு விலகுமாறு அவரது பெற்றோர் வற்புறுத்தி வந்துள்ளனர்.

அன்பு காட்டி, அளவுக்கு அதிகமாக காதலித்து திருமணமும் செய்த நிலையில், பணத்துக்காகத்தான் இத்தனை நாள் ஒன்றாக வாழ்ந்தாரா? என்று நொந்து போய் அழுதாராம் ஸ்ரேயா. இதனிடையே, மன உளைச்சலில் இருந்த ராம்குமார், பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார்..

அங்கு மதுஅருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.. பிறகு, அவர் திடீரென விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவங்கள் குறித்து கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டர் சட்டத்தில் கைதாகி ராம்குமார் ஜெயிலில் இருந்தபோது, அவரை வெளியே கொண்டு வருவதற்கு ஸ்ரேயாதான் அதிக முயற்சி எடுத்தாராம்..

கணவனுக்கு வேறு ஒரு பெண்ணுக்கு திருமணம் நடைபெறுவதை அறிந்த திருநங்கை தற்கொலைக்கு முயன்றதும், மறுபுறம் திருநங்கையின் கணவரும் விஷம் குடித்த சம்பவமும் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது… 2 பேருக்கு ஆளுக்கு ஒருபக்கம் தீவிரமாக நடந்து வருகிறது. .

வவுனியாவில் சீனிப்பாணியை காய்ச்சி தேன் என விற்பனை செய்தவர் கைது : 41 லீற்றர் சீனிப் பாணி கைப்பற்றல்!!

சீனிப்பாணி..

வவுனியாவில் சீனிப்பாணியினை காய்ச்சி தேன் என விற்பனை செய்த நபரை சுகாதார பிரிவினர் சுற்றிவளைத்துடன் அவரிடமிருந்து 41லீற்றர் சீனிப்பாணியினையும் கைப்பற்றியுள்ளனர்.

தேன் என சீனிப்பாணியினை விற்பனை செய்கின்றமை தொடர்பில் வவுனியா சுகாதார பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொது சுகாதார பரிசோதகர்களான வாகீசன், சிவரஞ்சன், ஞானப்பிரகாசம், ஜொய்போஸ்டர் ஆகியோர் காத்தார் கோட்டம் பகுதியிலுள்ள குறித்த வீட்டினை சுற்றிவளைத்தனர்.

இதன் போது குறித்த வீட்டில் விற்பனைக்கு தயாரான முறையில் காணப்பட்ட 55 போத்தல்களில் அடைக்கப்பட்ட சீனிப்பாணியினை சுகாதாரப் பிரிவினர் கைப்பற்றியதுடன் சீனிப்பாணி தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் கைப்பற்றினர்.

சந்தேகநபர் நெளுக்குளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதுடன் சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட 55 போத்தல்களில் அடைக்கப்பட்ட 41லீற்றர் சீனிப்பாணி பொருட்கள் என்பன வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தபடுத்தப்பட்ட சமயத்தில் எதிர்வரும் 10ம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

சீனிப்பாணியினை தேன் என ஏ9 வீதிகளில் தினசரி வியாபாரம் மேற்கொள்ளுவதுடன் யோகட் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் வழங்குவது சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காதலிக்காக காதலன் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. நெகிழ்ந்து கலங்கிய பெண்!!

லண்டனில்..

சமூக வலைதளங்களில் நாள் தோறும் எக்கச்சக்கமான விஷயங்கள் வைரல் ஆகி வரும் சூழலில் காதல் தொடர்பான வீடியோக்களுக்கும், செய்திகளுக்கும் கூட மிக முக்கியமான இடமுண்டு.

இந்த உலகில் அனைத்து இடங்களிலும் காதல் நிரம்பி இருக்கிறது. உன்னதமான காதல் என்று உணர்வுக்கு வயதோ, மதமோ, மொழியோ, இனமோ எந்த ஒரு விஷயமும் தடையாக இருக்காது. இவற்றையெல்லாம் கடந்து இரு மனதுக்கும் இடையே உருவாகும் உன்னதமான உணர்வு தான் ‘காதல்’.

கடந்த மாதம், பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு எக்கச்சக்கமான மனம் நெகிழ வைத்த காதல் தொடர்பான சம்பவங்கள் பெரிய அளவில் இணையத்தில் வைரல் ஆகி இருந்தது.

காதலர் தினம் சீசன் இல்லை என்றால் கூட அவ்வப்போது தங்கள் அன்பை பரிமாறிக் கொள்வது தொடர்பான ஏராளமான விஷயங்களையும் எமோஷனலாக இருக்கும் பல்வேறு சம்பவங்களையும் நாம் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பார்க்க முடியும்.

தன் மனதுக்கு மிக நெருக்கமான ஒருவருக்காக எந்த அளவுக்கு அசத்தலான ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்க முடியுமோ, அந்த அளவுக்கு அதனை மெல்ல மெல்ல யோசித்து மிக வித்தியாசமாக ஏதாவது ஒன்றை காதலில் இருப்பவர்கள் செய்து கொண்டே இருப்பார்கள்

அந்த வகையில் பல கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் இருக்கும் தனது காதலிக்காக, காதலன் ஒருவர் செய்த செயல் தான் தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது. அருகே இருக்கும் ஒரு நபருடன் காதலில் இருந்தாலே அந்த உணர்வு மிக உன்னதமாக இருக்கும்.

ஆனால் அதே வேளையில் தன்னிடமிருந்து மிக தொலைவில் காதலியோ, காதலனோ இருக்கும் போது அவரை அடிக்கடி சந்திக்க முடியாமலும் போனில் மூலமே குரலை கேட்டும், வீடியோ காலில் பார்த்தும் இருக்கும் சமயத்தில் மிக மிக வேதனை நிறைந்து அதே வேளையில், இருவருக்கும் இடையேயான காதலை இன்னும் அதிகரிக்க வைக்கும் வகையிலும் இருக்கும்.

இந்த நிலையில், அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக வைரலாகி வரும் வீடியோவின் படி, ஜிபின் என்ற கேரளாவில் உள்ள இளைஞர் ஒருவர் லண்டனில் இருக்கும் தனது காதலிக்காக அசத்தலான சர்ப்ரைஸ் ஒன்றைக் கொடுத்துள்ளார்.

இதற்காக தனது காதலியுடன் இருக்கும் அவரது தோழி ஒருவரை தொடர்பு கொண்டு தான் தேவையான பணத்தை அனுப்பி விடுவதாகவும் தனது சார்பாக கிரீட்டிங் கார்டு மற்றும் பொக்கே உள்ளிட்ட விஷயங்களை வாங்கி அவருக்கு சர்ப்ரைஸ் ஆக கொடுக்கும்படியும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜிபின் கூறியது போலவே, அந்த பெண்ணும் ஜிபின் காதலிக்கு கிரீட்டிங் கார்டு உள்ளிட்டவற்றை பரிசாக கொடுக்க இதனைக் கண்டு கண்கலங்கி போய் உள்ளார் அந்த காதலி.

காதலன் அருகே இல்லை என்ற போதிலும் இத்தனை மைல் தூரம் கடந்து அவர் சர்ப்ரைஸ் செய்ய வேண்டும் என நினைத்த விஷயத்தை செய்து அருகே இருப்பது போன்ற உணர்வை கொடுத்துள்ள விஷயம், தற்போது பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது.