“அவன் தான் எனக்கு உலகமே”.. விபத்தில் உயிரிழந்த மகன்.. தாய் எடுத்த விபரீத முடிவு!!

வேலூரில்..

வேலூர் மாநகரட்ச்சிக்கு உட்பட்ட சைதாப்பேட்டை பழைய காலணி என்னும் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மனைவி பெயர் காஞ்சனா. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக செந்தில்குமார் இறந்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றது.

கணவர் செந்தில்குமார் இறப்பிற்கு பிறகு தனது ஒரே மகனான ஆனந்தனை சிறுவயதிலிருந்தே மிக சிறப்பாக கவனித்தும் வந்துள்ளார் தாயார் காஞ்சனா. ஒரே ஒரு மகன் என்பதால் ஆனந்தன் மீது தாய் காஞ்சனா அதீத பாசம் செலுத்தியும் அவரை கவனித்து வந்துள்ளார்.

மேலும் காஞ்சனா தனியார் காலனி தொழிற்சாலை ஒன்றிலும் வேலை செய்து வந்ததாக தகவல்கள் கூறுகின்றது. கணவனை இழந்த காஞ்சனா தனது மகனுடன் ஒரே வீட்டில் வசித்து வந்த சூழலில், கார் ஓட்டுனராகவும் ஆனந்தன் வேலை செய்து வந்துள்ளார்.

அதே போல இந்த காலத்தில் இளைஞர்களில் ஏராளமானோருக்கு பைக் ஓட்டுவதில் தீராத பிரியம் உண்டு. அந்த வகையில் பல கிலோமீட்டர் தூரம் மிகுந்த ஈடுபாடுடன் பைக் பயணம் மேற்கொள்ளும் இளைஞர்களில் ஒருவர் தான் ஆனந்தனும்.

இதனை வழக்கமாகக் கொண்டுள்ள ஆனந்தன், பல்வேறு இடங்களிலும் பைக் பயணம் மேற்கொண்டு வந்ததாக தகவல்கள் கூறுகின்றது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிலர் குழுவாக இணைந்து திருச்சிக்கு பைக் பயணம் மேற்கொண்டுள்ளனர். அதில் ஆனந்தனும் ஒருவர்.

இந்த பயணத்தில் யாரும் எதிர்பாராத விதமாக ஒரு அசம்பாவித சம்பவம் அரங்கேறி உள்ளது. திருச்சி அருகே வைத்து விபத்து ஒன்றில் சிக்கிய ஆனந்தன் பரிதாபமாக உயிரிழந்து போனதாக சொல்லப்படுகிறது.

கணவரின் மறைவுக்குப் பிறகு ஒரே ஒரு மகன் என செல்லம் கொடுத்து வளர்த்து வந்த காஞ்சனாவிற்கு மகனின் மரணம் கடும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பக்கம் கணவரும் இல்லை, மறுபக்கம் தான் செல்லமாக வளர்த்த மகனும் இல்லை என்ற சூழலில், துக்கமும் கடுமையாக காஞ்சனாவை அடைத்துள்ளது.

இந்த நிலையில் விபரீத முடிவு ஒன்றையும் எடுத்துள்ளார் காஞ்சனா. இதற்காக காட்பாடி ரயில் நிலையத்துக்கு சென்ற காஞ்சனா, அங்கே பிளாட்ஃபாரத்தை கடந்து சென்று அந்த ரயில் நிலையத்திலிருந்து கிளம்பிய எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றின் முன்பு நின்று கொண்டதாக கூறப்படுகிறது.

தண்டவாளத்துக்கு நடுவே பெண் நிற்பதை பார்த்ததும் ரயிலை நிறுத்தவும் ஓட்டுனர்கள் முயற்சி செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனாலும் ரயில் நிற்காமல் காஞ்சனா மீது மோதியதாக சொல்லப்படும் நிலையில் இதில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே காஞ்சனா உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த சம்பவம் அங்கிருந்த பயணிகள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து காவல்துறையினருக்கு இது பற்றி தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் காஞ்சனாவின் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியிலும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இரு தொடர்பாக விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். கணவன் மற்றும் மகன் ஆகிய இருவரும் இல்லாத சூழலில் தனியாக வசித்து வந்த காஞ்சனா, விபரீத முடிவு எடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தற்போது பலரையும் கண்கலங்க வைத்து வருகிறது.

இரவு நேர பணியில் திடீரென மயங்கி விழுந்த மருத்துவ மாணவி.. விசாரணையில் தெரியவந்த உண்மை!!

தெலுங்கானாவில்..

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி சீனியர்களின் Ragging தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

26 வயதான டி ப்ரீத்தி, காகடியா மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு முதுகலை பட்டதாரியாகப் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் திடீரென அந்த மாணவி தற்கொலை செய்துள்ளார்.

கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ப்ரீத்தியின் தந்தை ஹைதராபாத் காவல் நிலையத்தில் முகமது செரீப் என்பவரின் மீது புகார் அளித்துள்ளார்.

புகாரில் இரண்டாம் ஆண்டு முதுகலை பட்டதாரியான செரீப் மற்றும் அவரது நண்பர்கள் மாணவியை Ragging செய்திருக்கிறார்கள் எனத் தெரிய வந்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ப்ரீத்தி தற்கொலை முயற்சி எடுத்துள்ளார்.

காவல் துறை ப்ரீத்தியின் தொலைப்பேசியில் அவர் சக மாணவியுடன் தனக்கு நடக்கும் Ragging கொடுமைகளைப் பற்றிய சாட்கள் ஆதாரமாகக் கிடைத்துள்ளன.  மாணவி ப்ரீத்தியின் இறப்பிற்கு மருத்துவ கல்லூரி மாணவர்கள் அனைவரும் காகடியா மருத்துவ கல்லூரியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இறந்த மாணவியின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடாக 10 லட்சம் ரூபாய் அறிவித்துள்ளார். இந்த சம்பவத்தைப் பற்றி தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

வவுனியா வைத்தியசாலையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஊழியர்கள் போராட்டம்!!

வவுனியா வைத்தியசாலையில்..

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூளியர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்று (03.03.2023) மதியம் 12.30 மணியளவில் வைத்தியசாலை நுழைவாயில் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முறையற்ற வரி அதிகரிப்பை நிறுத்து, முறையற்ற நியமனத்தினை வழங்குவதை நிறுத்து, வாழ்வாதாரத்தினை அதிகரி,

வங்கியில் அதிகரித்த வட்டி வீதத்தினை குறை, ஊழியர் பற்றாக்குறையினை உடன் நிவர்த்தி செய் போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வைத்தியசாலை சிற்றூளியர்கள் மதியம் 12.00 மணி தொடக்கம் 1.00 மணி வரை கடமையிலிருந்து விலகி குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

23 வயதில் மகளை வைத்துக்கொண்டு 47 வயதில் குழந்தை பெற்றெடுத்த நடிகை!!

கேரளாவில்..

கேரளாவில் நடிகை ஒருவரின் 47 வயது தாய் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். மலையாள சின்னத்திரை நடிகை ஆர்யா பார்வதி(23). ‘செம்பட்டு’, ‘இளையவாள் காயத்ரி’ ஆகிய தொடர்கள் இவரை பிரபலமாக்கியது.

சமீபத்தில் இவரது 47 வயது தாய் கர்ப்பமாக இருப்பதாக ஆர்யா பார்வதி புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். இது பலரையும் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது. இதன்மூலம் நேர்மறை, எதிர்மறை விமர்சனங்களை அவர்கள் சமூக வலைத்தளங்களில் எதிர்கொண்டனர்.

இந்த நிலையில் ஆர்யா பார்வதியின் தாய் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பார்வதி பகிர்ந்துள்ளார். அத்துடன் என்னை அம்மாவை பத்திரமாக திரும்ப கொண்டு வந்தவர்களுக்கு நன்றி என மருத்துவர்களை குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் வெளியான ”வீட்ல விஷேசம்” படத்தில் கதாநாயகனின் தாய் கர்ப்பமாகி, இறுதியில் குழந்தையை பெற்றெடுப்பார். அதனைப் போலவே தற்போது ஆர்யா பார்வதி வீட்டில் தற்போது நடந்துள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

பகல் எது இரவு எது தெரியாது… 11 ஆண்டுகள் மனைவியை வீட்டுக்குள் பூட்டி வைத்து சித்ரவதை செய்த கணவன்!!

ஆந்திராவில்..

ஆந்திராவில் பெற்றோர்கள் பேச்சை கேட்டு 11 ஆண்டுகள் மனைவியை வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்திருந்த வக்கீலின் கோர செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டம் புட்டபர்த்தியை சேர்ந்த சாய் சுப்ரியா என்பவரை ஆந்திர மாநிலம் விஜயநகரத்தை சேர்ந்த மதுசூதனன் என்பவர் கடந்த 2008ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இரண்டு குழந்தைகள் பிறந்த பின் மதுசூதனன் அவரது தாய் உமா மகேஸ்வரி மற்றும் உடன்பிறப்புகள் ஆகியோரின் பேச்சை கேட்டு மனைவியை துன்புறுத்த துவங்கினார். தன்னுடைய துன்புறுத்தல் வெளியில் தெரிந்துவிட கூடாது என்பதற்காக கடந்த 11 ஆண்டுகளாக மனைவியை வீட்டுக்குள்ளேயே ஒரு இருட்டு அறையில் அடைத்து முடக்கி வைத்திருந்தார்.

அந்த பெண்ணுக்கு யாருடனும் பேச அனுமதி இல்லை. சாய் சுப்ரியாவின் பெற்றோரும் பலமுறை முயன்றும் மகளுடன் பேச அனுமதிக்கவில்லை. மகளை சந்திக்க அவர்கள் நேரடியாக பலமுறை வீட்டுக்கு வந்தனர். ஆனால் அவர்களை விட்டு உள்ளே அனுமதி அளிக்கவில்லை மதுசூதனன் குடும்பத்தினர் .

11 ஆண்டுகள் பொறுத்து பொறுத்து பார்த்த சாய் சுப்ரியாவின் பெற்றோர் கடந்த 28ஆம் தேதி தங்கள் மகளை, மருமகன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் 11 ஆண்டுகளாக அடைத்து வைத்திருப்பது பற்றி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சாய் சுப்ரியாவின் பெற்றோருடன் கடந்த 28ஆம் தேதி மதுசூதனன் வீட்டுக்கு வந்தனர்.

ஆனால் வக்கீல் மதுசூதனன் என்னுடைய வீட்டுக்குள் நுழைய உங்களுக்கு அனுமதி உள்ளதா, என் வீட்டுக்கு நீங்கள் எப்படி வரலாம் என்று அவர்களுடன் நியாயவாதியாக பேசி விரட்டி அடித்தார்.

ஆனால் போலீசார் மற்றும் சாய் சுப்ரியாவின் பெற்றோர் ஆகியோர் நீதிமன்றத்தில் சர்ச் வாரண்ட் பெற்று நேற்று மதுசூதனன் வீட்டுக்கு வந்தனர். அப்போதும் மதுசூதரன் தாய் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் போலீசாரை வீட்டுக்குள் விட மறுத்தனர்.

ஒரு வழியாக நீதிமன்ற அனுமதியை காட்டி வீட்டுக்குள் புகுந்த போலீசார், தனி அறையில் அடைபட்டு கிடந்த சாய் சுப்ரியாவை மீட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர்.

மிகவும் மெலிந்த தேகத்துடன் காணப்பட்ட சாய் சுப்ரியாவை பார்த்த நீதிபதி அவரை உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க உத்தரவு பிறப்பித்தார். 11 ஆண்டுகள் மனைவியை தனியாக அடைத்து முடக்கி வைத்திருந்த வக்கீல் மதுசூதனன் மனித உரிமை ஆணையத்தின் மாவட்ட துணைத் தலைவர் என்று கூறப்படுகிறது.

அதற்கான ஆதாரங்களையும் திரட்டும் பணியில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து வக்கீலை கைது செய்யும் முனைப்பில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மணப்பெண்ணின் எடைக்கு நிகரான தங்கம்.. ஆடம்பரமாக நடந்த திருமணம்.!!

துபாயில்..

துபாயில் நடைபெற்ற ஆடம்பரமான பாகிஸ்தானிய திருமண விழாவில் மணப்பெண்ணின் எடைக்கு இணையான தங்கம் காட்சிப்படுத்தப்பட்ட காட்சி வைரலாகி வருகிறது.

துபாயில் நடத்தப்பட்ட ஆடம்பரமான பாகிஸ்தான் திருமணத்தில் காட்டப்பட்ட தங்கத்தின் அளவு சமீபத்தில் ஆன்லைனில் பிரபலமடைந்தது, பல பயனர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. காட்சிப்படுத்தப்பட்ட தங்கத்தின் அளவு மணமகளின் எடைக்கு சமமாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், தங்கம் போலியானது என்றும் திருமணத்தின் ஒட்டுமொத்த கருப்பொருளின் ஒரு பகுதி மட்டுமே என்றும் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. தங்கம் அலங்காரமாக மட்டுமே பயன்படுத்தப்பட்டது.

மேலும் இந்த திருமண நடவடிக்கை நன்கு அறியப்பட்ட பாலிவுட் படமான ஜோதா அக்பரில் இடம்பெற்ற காட்சியை பிரதிபலித்தது. திருமண கொண்டாட்டத்தை பிரமாண்டமாக நடத்த மாப்பிள்ளை இப்படி ஒரு நிகழ்வை செய்தாக கூறப்படுகிறது.

இதுபோன்று திருமணத்தில் ஆடம்பரமான தங்கத்தைப் பயன்படுத்துவது தெற்காசிய நாடுகளில் ஆடம்பரமான திருமணச் செலவுகளின் பாரம்பரியம் குறித்து சமூக ஊடகங்களில் விவாதத்தைத் தூண்டியுள்ளது.

ஆடம்பரமான திருமணச் செலவுகளின் போக்கு குடும்பங்களுக்கு தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும், திருமணங்கள் விலையுயர்ந்த விழாக்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வலுப்படுத்துவதாகவும் கூறும் பலரிடமிருந்து விமர்சனத்தை ஈர்த்துள்ளது.

திருமண அமைப்பு சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், அதன் படைப்பாற்றல் மற்றும் விவரங்களுக்கு கவனத்தை ஈர்த்தது. திருமண திட்டமிடுபவர்கள் மிகவும் கடினமாக உழைத்து ஜோதா அக்பர் கருத்தை மறுஉருவாக்கம் செய்வதில் அற்புதமான வேலையைச் செய்ததாக நெட்டிசன்கள் தெரிவித்தனர்.

சமீபத்திய நாட்களில், தனித்துவம் மற்றும் வேடிக்கைக்காக திருமணங்களில் கொஞ்சம் படைப்பாற்றலையும் வேடிக்கையையும் சேர்ப்பது நாகரீகமாக உள்ளது.

மக்கள் தங்களுக்குப் பிடித்த திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அல்லது புத்தகங்களின் அடிப்படையில் தங்கள் கனவு திருமணத்தை மீண்டும் உருவாக்க முயற்சிக்கின்றனர்.

கொலையில் முடிந்த பெண்களின் குழாயடி சண்டை.. ஒருவர் மருத்துவமனையில் அனுமதி..!!

கரூரில்..

கரூரில் பெண்களின் குழாயடி சண்டையில் தலையில் வெட்டுக் காயம் ஏற்பட்டு பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து எதிர் வீட்டு நபரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காம்புலியூர் பகுதியில் இளங்கோ, பத்மாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். நேற்று வீட்டிற்கு அருகில் உள்ள பொது குடிநீர் குழாயில் பத்மாவதி தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார்.

அதேபோல் பத்மாவதி வீட்டிற்கு எதிரே வசித்து வரும் கார்த்தி என்பவரின் மனைவியும், பொது குழாயில் தண்ணீர் பிடிக்க வந்துள்ளார். அப்பொழுது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் ஒருமையில் பேசி வாய் சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சண்டை குறித்து கார்த்தியின் மனைவி, கார்த்தியிடம் அழுது கொண்டே புகார் சொல்லியுள்ளார். இதனைக் கேட்டு கோபம் அடைந்த கார்த்தி, இளங்கோவனின் வீட்டிற்கு சென்று தான் கொண்டு வந்திருந்த கசாப்பு கடை அரிவாளால் இளங்கோனையும், அவரது மனைவி பத்மாவதியையும் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இளங்கோவனுக்கு கையிலும், பத்மாவதிக்கு தலையிலும் பலமாக அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் பத்மாவதி பரிதாபமாக உயிரிழந்தார். இளங்கோவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கரூர் காவல் துறையினர் கொலை நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். மேலும், தப்பி ஓடிய கசாப்பு கடை உரிமையாளர் கார்த்தியை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

5 வருடங்களாக உருகி காதலித்த இளம் பெண்ணை பட்டபகலில் கொலை செய்த இளைஞர்!!

கர்நாடகாவில்..

கர்நாடக மாநிலம், முருகேஷ்பால்யா என்னும் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் லீலா என்ற பட்டதாரி பெண் பணிபுரிந்து வந்தார். அதே போல், டோம்லூரில் உள்ள மற்றொரு தனியார் நிறுவனத்தில் தினகர் என்ற இளைஞரும் பணிபுரிந்து வந்தார்.

அப்படி இருக்கையில், தினகர் மற்றும் லீலா இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தங்களின் திருமணம் குறித்து வீட்டில் பேசும் தினகர், லீலாவிடம் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.

இந்நிலையில், தனது பெற்றோரிடம் தினகரை திருமணம் செய்வது குறித்து லீலா தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போல சமுதாயத்தை காரணம் காட்டி அவர்கள் திருமணத்தை மறுத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இது பற்றி தனது காதலனான தினகரிடம் பெற்றோர் கூறிய விஷயத்தை லீலா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அவர் ஆவேசம் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

அதே போல, கோபத்தில் இருந்த தினகர், லீலா வேலை பார்க்கும் நிறுவனத்தின் வாசலிலும் காத்திருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. இதனைத் தொடர்ந்து, வழக்கம் போல் வேலை முடிந்து லீலா திரும்பி உள்ள சூழலில், யாரும் எதிர்பாராத ஒரு சம்பவத்தை அவரது காதலர் தினகர் செய்துள்ளார்.

தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஐந்து ஆண்டுகளாக காதலித்த காதலி என்றும் பாராமல், லீலாவின் உடலில் குத்தியதாக தகவல்கள் கூறுகின்றன. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த லீலாவை குத்தி விட்டு அங்கிருந்து தினகரும் தப்பி ஓடி உள்ளார்.

இந்த சம்பவத்தால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்த சூழலில், அவர்கள் உடனடியாக லீலாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், லீலா கொலை செய்யப்பட்டது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து தினகரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வரும் சூழலில், இந்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்வலைகளை உண்டு பண்ணி உள்ளது.

படுக்கையிலே உயிரிழந்த தாய்.. உறங்குவதாக நினைத்து 2 நாட்கள் அருகிலே உறங்கிய சிறுவன்!!

கர்நாடகாவில்..

அம்மா உறங்குகிறார் என நினைத்து இறந்த தாயின் அருகில் இரண்டு நாட்கள் உறங்கிய சிறுவனின் நிலை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரின் ஆர்.டி.நகர் என்ற பகுதியில், அன்னம்மா (வயது 45) எனும் பெண்மணி தனது 11 வயது மகனுடன் வசித்து வருகிறார்.

இவரின் கணவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். இதனால் சொந்த வீட்டில் வசித்து வந்த அன்னம்மா வருமானம் ஏதும் இல்லாத நிலையில் வீட்டை விற்று விட்டு வாடகை வீட்டுக்கு இடம் பெயர்ந்துள்ளார்.

வீட்டை விற்று வருமானம் வாங்கிய கடனை அடைக்கவே சரியாக இருந்த நிலையில் கிடைத்த வேலைக்கு சென்று வந்துள்ளார். மேலும் தனது மகனையும் தொடர்ந்து படிக்க வைத்துள்ளார். இதில் அன்னம்மாவுக்கு பேச்சு திறன் குறைவாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அன்னம்மா கடந்த ஒரு வாரமாக உடல்நல குறைவு காரணமாக வெளியே எங்கும் செல்லாமல் இருந்துள்ளார். இதற்காக அவர் மருத்துவமனைக்கும் சென்று வந்துள்ளார். ஆனாலும் உடல்நலன் தொடர்ந்து மோசமாகவே இருந்துள்ளது.

தொடர்ந்து படுக்கையிலே இருந்த அன்னம்மா படுக்கையிலேயே உயிரிழந்துள்ளார். ஆனால் இதனை அறியாத அவரின் 11 வயது மகன் தாய் உறங்குகிறார் என நினைத்து வழக்கம் போல பள்ளிக்கு சென்று மாலையில் வீடு திரும்பியுள்ளார்.

தாய் உடல்நிலை காரணமாக பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் சிறுவனுக்கு உணவு கொடுத்த நிலையில், அன்னம்மா இறந்ததை யாரும் அறியவில்லை. அதேபோல இரண்டாவது நாளும் சிறுவன் வழக்கம்போல பள்ளிக்கு சென்றுள்ளார்.

மூன்றாம் நாளில் அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்த நிலையில், பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் இது குறித்து சிறுவனிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அம்மா உறங்கிக்கொண்டிருக்கிறார் என்றும், அவரின் காது மற்றும் மூக்கில் இருந்து திரவம் கசிவதாகவும் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டினர் சிறுவனின் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அன்னம்மா இறந்த நிலையில் இருந்துள்ளார். இதனால் பக்கத்து வீட்டினர் இதுகுறித்து காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அவர்கள் வந்து பார்த்து இதனை சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அன்னம்மாவின் மகன் அன்னம்மாவின் சகோதரர் வீட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா வீரபுரம் மணிவாசகர் மகா வித்தியாலய வருடார்ந்த இல்ல விளையாட்டுப் போட்டி 2023!!

வருடார்ந்த இல்ல விளையாட்டு போட்டி..

செட்டிகுளம்- வீரபுரம் மணிவாசகர் மகா வித்தியாலயத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டுப்போட்டியின் இறுதி நிகழ்வுகள் பாடசாலை மைதானத்தில் பாடசாலையின் அதிபர் தங்கதுரை மதிவண்ணன் தலைமையில் இடம் பெற்றது.

நிகழ்விற்கு பிரதம விருந்தினராக விரிவுரையாளர் வி.அனோஜன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வவுனியா தெற்கு கல்வி வலயபிரதி கல்விப் பணிப்பாளர் வீரசிங்கம், வவுனியா தெற்கு கல்வி வலய உதவி கல்வி பணிப்பாளர் செந்தில்குமரன்,

மற்றும் கௌரவ விருந்தினர்களாக விளையாட்டு உத்தியோகத்தர் பாருக் பாசில், ஆசிரிய ஆலோசகர் யூட் பரதாமாறன், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஜோசப் ஜெயகெனடி,

மற்றும் கிராம சேவகர், அபிவிருத்தி உத்தியோகத்தர், பழைய மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது இறுதிமட்ட விளையாட்டுப்போட்டிகள் இடம்பெற்றமையுடன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றிக் கேடயங்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

வவுனியா நகரில் 20க்கு மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் : 100 இடங்களில் டெங்கு நுளம்புகள் பெருகும் அபாயநிலை!!

வவுனியா நகரில் 20க்கு மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 100 இடங்களில் டெங்கு நுளம்பு பெருகும் அபாயநிலமையும் காணப்படுவதாக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணினையினர் தெரிவித்துள்ளனர்.

மாவட்டத்தில் அதிகரித்துள்ள டெங்கு நுளம்பின் தாக்கம் தொடர்பில் வினவிய போதே அவர்கள் இவ்விடயத்தினை தெரிவித்தனர்.

வவுனியா நகரப்பகுதியில் உள்ள கடைகள், கடைகளைச் சூழவுள்ள பகுதிகள், கடைகளிற்கு முன்புற்கு வடிகான்கள், கடைகள் அமைந்துள்ள காணி, கடையின் மேற்தளம்,

மேல்மாடிக்குடியிருப்பு, குளிர்சாதனப்பெட்டியைச் சூழவுள்ள பகுதிகள் போன்ற இடங்களை நீர்தேங்கி டெங்கு நுளம்பு பெருக்கமடையக் கூடிய சூழல் காணப்படாதவாறு தொடர்ச்சியாக சுத்தமாக பேணிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதுடன்

வவுனியா நகரப்பகுதியில் 20இற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். பெரும்பாலானவர்கள் வெளி மாவட்டங்களில் தொற்றுக்கு உட்பட்டவர்களாக இளங்காணப்பட்டபோதிலும் 3-5 வரையான நோயாளர்கள் வவுனியா நகரப்பகுதியில் தொற்றுக்குள்ளானவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

மேலும் பார்வீதி, மில் வீதி, இறம்பைக்குளம் பகுதி, ஹொரவப்பொத்தான வீதி போன்ற பகுதிகளில் ஏறத்தாழ 4- 6 வரையான வர்த்தக நிலையங்களில் டெங்குநோய்க்கான பிரதான குடம்பி அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஒரு வர்த்தக நிலையத்தில் நோயாளி ஒருவரும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

டெங்கு நுளம்பு பெரும் இடங்களை வைத்திருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த நோய் பரம்பலைக் கட்டுப்படுத்த பொது மக்களினுடைய ஒத்துழைப்பு அவசியமானது.

பொது மக்களினுடைய அக்கறையின்மை தான் இந்த நுளம்பு பெருக்கத்திற்கு காரணமாக இருக்கிறது. பல தடவை அறிவுறுத்தல் வழங்கியிருந்தும் அவர்களது கவலையீனம் இந்த நுளம்பு உற்பத்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் நோயாளர்கள் உருவாகியுள்ளார்கள். எனவே தினமும் ஒவ்வொரு குடும்பமும் தமது வீடு , கடை என்பவற்றை சுத்தம் செய்து டெங்கு நுளம்புகளை அழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். என தெரிவித்தனர்.

 

கொரோனாவால் முடங்கிய தொழில்.. ஏமாற்றிய ஊழியர்கள்.. மனைவி, மகன்களை கொலை செய்த நபர் எடுத்த விபரீத முடிவு!!

டெல்லியில்..

டெல்லியின் மோகன் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (38). இவருக்கு சுனிதா என்ற மனைவியும் 5 வயது, 4 மாத குழந்தை என இரு மகன்கள் இருந்தனர். ராஜேஷ் ஐஎஸ்ஓ தரச் சான்று வழங்கு நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்தி வந்துள்ளார்.

இந்த நிறுவனம் கொரோனா ஊரடங்கு காலத்தில் நெருக்கடியை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. தொழில் மோசமடையவே கடன் நெருக்கடிக்கு ஆளான ராஜேஷ், தொழிலை நிறுத்திவிட்டு கடை தொடங்கி நடத்திவந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நேரத்தில் தனது மனைவி சுனிதா, 5 வயது மகன், 4 மாத குழந்தை ஆகிய மூவரையும் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தனது கை மணிக்கட்டையும் அறுத்துக்கொண்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

இந்த சம்பவம் நடைபெறும் முன்பாக நீண்ட பதிவு ஒன்றை தனது வாட்ஸ் ஆப் நண்பர்கள் குழுவில் போஸ்ட் செய்துள்ளார். அதில், “நான் கடும் கடன் சுமையில் இருக்கிறேன். கோவிட் லாக்டவுன் காலத்தில் எனது தொழில் பெரும் பாதிப்பு கண்டது.

எனது ஊழியர்கள் என்னை ஏமாற்றி வாடிக்கையாளர்களை போட்டி நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்தனர். பல பேரின் மோசடியால் கடும் பண நெருக்கடிக்கு ஆளாகியுள்ளேன்” என நீண்ட பதிவை எழுதியுள்ளார்.

இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ராஜேஷின் நண்பர்கள், அவரது சகோதரருக்கு தகவல் தரவே அவர் உடனடியாக ராஜேஷின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு ராஜேஷ், மனைவி, இரு குழந்தைகள் நால்வரும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர்.

மனைவி, மகன்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ராஜேஷ் மட்டும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குழந்தையுடன் கடலில் குதித்த இளம்பெண்.. பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்!!

கன்னியாகுமரியில்..

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே உள்ள வெட்டுமடை கடலில் நேற்று இளம்பெண்ணின் உடல் மிதந்துள்ளது. இதை பார்த்த இளைஞர் ஒருவர் அதிர்ச்சி அடைந்து பின்னர், அந்த உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார்.

மேலும் இது குறித்து குளச்சல் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கு சென்ற போலீசார், பெண்ணின் உடலை மீட்டு, இறந்தவர் யார்? எப்படி இறந்தார்? என விசாரணையை தொடங்கினர்.

போலீசார் மேற்கொண்ட தொடர் விசாரணையில், மார்த்தாண்டம் அருகே உள்ள மாமூட்டுக்கடையை சேர்ந்த மெல்பின் (37), வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சசிகலா (32) என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு மெர்ஜித் என்ற மகன் இருந்தான்.

இந்தநிலையில் நேற்று சசிகலா தனது குழந்தை மற்றும் தாயாருடன் ஒரு ஆட்டோவில் காப்புக்காட்டில் உள்ள ஒரு இடத்தில் ஜோதிடம் பார்க்க சென்றார். பின்னர் தாயாரை வீட்டுக்கு அனுப்பி விட்டு அவர் தனது குழந்தையுடன் அதே ஆட்டோவில் மண்டைக்காடு பகுதிக்கு வந்தார்.

அப்போது ஆட்டோவில் இருந்தப் படியே மதிய உணவு அருந்திய சசிகலா, ஆட்டோ ஓட்டுநரிடம் கையை கழுவி விட்டு வருவதாக கூறி விட்டு குழந்தையுடன் கடலை நோக்கி சென்றார்.

அதன் பின்பு நீண்ட நேரமாகியும் அவர்கள் திரும்ப வரவில்லை. இதனால் ஆட்டோ டிரைவர் பதற்றத்திற்குள்ளானார். டிரைவர் மாற்றுத்திறனாளி என்பதால் ஆட்டோவில் இருந்து இறங்கி அவர்களை தேட முடியவில்லை.

இதனால் அங்கு வந்த ஒரு இளைஞரிடம் நடந்ததை கூறி இருவரையும் தேட சொல்லியுள்ளார். அதன் பின்னரே அந்த இளைஞர் அப்பெண்ணை சடலமாக மீட்டுள்ளார். அதே நேரத்தில் குழந்தையை காணவில்லை. இதனால் குழந்தையும் கடலில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதனால் கடலோர காவல் குழும போலீசார் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்களின் உதவியுடன் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குழந்தையுடன் கடலில் குதித்து சசிகலா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

குழந்தையுடன் கடலில் குதித்து சசிகலா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலிக்காக நண்பனின் இதயத்தை வெட்டியது ஏன்? இளைஞரின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

இந்தியாவில்..

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் சமீபத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இளைஞர் ஒருவரின் கொலை வழக்கில், காதலிக்காக நண்பனின் இதயத்தை வெட்டி எடுத்தது ஏன்? என இளைஞர் அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலத்தை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியை சேர்ந்த ஹரி ஹர கிருஷ்ணா(21) மற்றும் நவீன்(22) ஆகிய இருவரும் 12ம் வகுப்பு முதல் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.

இருவரும் தங்கள் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை காதலித்த நிலையில், அந்த பெண் நவீன் காதலை முதலில் ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால் இரண்டு ஆண்டுகளில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்ததால் இருவரும் காதலை முறித்துக் கொண்டுள்ளனர்.

அப்போது ஹரி ஹர கிருஷ்ணா அந்த பெண்ணிடம் காதலை வெளிப்படுத்தவே, அந்த பெண்ணும் ஹரி ஹர கிருஷ்ணா-வின் காதலை ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால் காதல் முறிவு ஏற்பட்ட பிறகும், நவீன் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த நிலையில், இது குறித்து காதலன் ஹரி ஹர கிருஷ்ணா-விடம் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஹரி ஹர கிருஷ்ணா தனது நண்பனை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு தனியாக அழைத்து சென்று கத்தியால் குத்தி கிழித்து கொன்றுள்ளார். நண்பனை கொலை செய்து விட்டு சில நாட்கள் தலைமறைவாக சுற்றிக் கொண்டு இருந்த ஹரி ஹர கிருஷ்ணா, இறுதியில் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இந்நிலையில் பொலிஸ் விசாரணையில் கொலை சம்பவம் குறித்து இளைஞர் அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலத்தை தெரிவித்துள்ளார், அதில் கடந்த 18ஆம் திகதி நள்ளிரவு 12 மணியளவில், நான் நவீனை ரமாதேவி பப்ளிக் பள்ளிக்குச் செல்லும் சாலையில் வெறிச்சோடி இருந்த ஓர் இடத்திற்கு அழைத்துச் சென்றேன்.

அங்கு ‘நான் அந்தப் பெண்ணை காதலிக்கிறேன். உங்களுக்கு காதல் முறிவு ஏற்பட்டு விட்டது மீண்டும் ஏன் அவளை தொந்தரவு செய்கிறாய்?’ எனக் கேட்டேன்.” அப்போது நவீன் என்னை அடிக்க தொடங்கினான், உடனடியாக அவனை கொலை செய்யும் நோக்கத்தில் நானும் அவனை அடிக்க தொடங்கினேன்.

இறுதியில் நவீனை கொலை செய்வதற்காக மறைத்து வைத்து இருந்த கத்தியால் அவனது தலையை வெட்டினேன். பிறகு மார்பின் குறுக்கே வெட்டி இதயத்தை வெளியே எடுத்தேன். அவனது உடலை வெட்டினேன். இரண்டு விரல்களை துண்டித்தேன். அதற்குப் பிறகு நவீனின் உடலை யாரும் பார்க்காதவாறு மரங்களுக்குள் இழுத்துச் சென்று விட்டேன்.

பிறகு உடல் உறுப்புகளை அகற்றி விட்டு அங்கிருந்து விஜயவாடா, கம்மம், விசாகப்பட்டினம் எனப் பல இடங்களுக்குச் சென்று விட்டு, இறுதியில் 23ம் திகதி அன்று தனது அப்பாவிடம் சம்பவத்தை கூறினேன், அவர் உடனடியாக எண்ணை பொலிஸில் சரணடைய சொன்னார் என்று ஹரி ஹர கிருஷ்ணா பொலிஸார் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் ஹரிஹர கிருஷ்ணா அளித்த வாக்குமூலத்தில், தான் காதலித்த பெண்ணுடன் தகாத உறவில் நவீன் ஈடுபட்டதாலும் கொலை செய்ய தீர்மானித்ததாக தெரிவித்துள்ளார், அத்துடன் நவீன் கொல்லப்பட்டதை அவரது காதலி மற்றும் இன்னொரு நண்பர் ஹசன் ஆகிய இருவரிடம் வெளிப்படுத்தினேன்.

ஆனால் இருவரும் மிகவும் பயந்து விட்டனர், என்னை உடனடியாக பொலிஸில் சரணடைய சொன்னார்கள் என குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் ஹரிஹர கிருஷ்ணா மீது ஐபிசி பிரிவு 302, 201 மற்றும் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 3(2) ஆகியவற்றின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அப்துல்லாபூர்மேட் காவல் ஆய்வாளர் வி.சுவாமி தெரிவித்தார்.

வவுனியாவில் மருமகன் தாக்கி மாமியார் பலி.. மனைவி கவலைக்கிடம்!!

இன்று காலை..

வவுனியா பெரியஉலுக்குளம் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்குள்ளாகி மாமியார் சம்பவ இடத்திலேயே பலியாகியதுடன், மனைவி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (02) காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்றையதினம் காலை கணவனிற்கும் , மனைவிக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

அது முற்றிய நிலையில் வீட்டில் இருந்த கோடாலி மற்றும் கத்தியை கொண்டு கணவன் மனைவிமீது தாக்குதலை முன்னெடுத்துள்ளார்.
இதனை தடுக்க சென்ற மனைவியின் தாயார் மீதும் கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

இதனால் தலையில் பலத்த காயமடைந்த மனைவியின் தாயார் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த மனைவி கவலைக்கிடமான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் பெரியஉலுக்குளம் பகுதியை சேர்ந்த டிபி அமராவதி (வயது60), என்ற பெண் பலியானதுடன் அவரது மகளான துலிகா ரத்தினசிறி (வயது 37) படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.

தாக்குதலை முன்னெடுத்த நபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பாக உலுக்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

70 வயது காதலிக்கு தாலி கட்டிய 75 வயது காதலன்.. இளமை-முதுமை வேறுபாடுகளை கடந்த காதல்!!

மகாராஷ்டிராவில்..

”காதல்” என்ற ஆழமான அன்பின் பிணைப்பில் வயது வித்தியாசம் எது? யாருக்கும் எந்த வயதிலும் காதல் வரலாம், இளமை- முதுமை என்ற வேறுபாடுகள் கிடையாது. தன்னுடைய தனிமையை போக்க, தன்னுடைய கஷ்டங்களை பகிர்ந்துகொள்ள ஒரு துணை கிடைத்துவிட்டாலே போதும், அப்படியொரு அழகான உறவுக்கு ஈடுஇணை ஏதும் உண்டா?

இதை நிரூபிக்கும்விதமாக சமீபத்தில் வீடியோவொன்று வைரலாகி வருகிறது. அதில் 75 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் 70 வயதான காதலிக்கு தாலிகட்டுகிறார். இருவரும் முதியோர் காப்பகத்தில் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ள காதல் மலர்ந்துள்ளது.

ந்தியாவின் மகாராஷ்டிராவில் உள்ள முதியோர் காப்பகத்தில் பாபுராவ் பாட்டீல் மற்றும் அனுசுயா ஷிண்டே இருவரும் சந்தித்துக் கொண்டனர். நாளடைவில் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்த காதலாக மலர்ந்தது, இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

இதற்கு அனைவரும் சம்மதம் தெரிவிக்க கோலாகலமாக திருமணமும் நடந்து முடிந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி, பலரும் தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.