கின்னஸ் சாதனை படைத்த இரட்டை சகோதரிகள்.. உலகையே திரும்பி பாக்க வைத்த அதிசயம்!!

ஜப்பானில்..

இரட்டையர்களாக இருந்து வரும் இரண்டு சகோதரிகள் தற்போது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற செய்தியும் அதன் பின்னால் உள்ள காரணமும் அதிகம் வைரலாக வருகிறது.

பொதுவாக இரட்டையர்கள் என்றாலே அவர்கள் இருவருக்கும் ஏறக்குறைய ஒரே மாதிரியான உடல் அமைப்பு, அடையாளங்கள் உள்ளிட்ட விஷயங்கள் இருக்கும். ஆனால் ஜப்பான் நாட்டை சேர்ந்த இரட்டை சகோதரிகளுக்கு சில விஷயங்கள் வித்தியாசமாக இருப்பது தான் தற்போது பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.

ஜப்பான் நாட்டின் ஒகாயாமா என்னும் நகரத்தைச் சேர்ந்தவர் யோஷி மற்றும் மிச்சி கிகுச்சி. இரட்டை சகோதரிகளான இவர்கள், கடந்த 1989 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி பிறந்துள்ளனர்.

இரட்டையர்களாக இருந்த போதிலும் இவர்கள் இருவருக்கிடையே உயர வித்தியாசங்கள் உள்ளன. அதன்படி அவர்கள் இருவருக்கும் இடையே இரண்டு அடி மற்றும் 5.5 அங்குலம் வரை உயர வித்தியாசத்தைக் கொண்டுள்ளனர்.

இதில் யோஷி என்பவர் சுமார் 162.5 சென்டிமீட்டர் உயரமும் (5 அடி 4 அங்குலம்), மிச்சி என்பவர் 87.5 சென்டிமீட்டர் உயரமும் (2 அடி 10.5 அங்குலமும்) கொண்டுள்ளனர். இதன் காரணமாக உலகிலேயே அதிக உயர வித்தியாசம் கொண்ட மகளிர் இரட்டையர்கள் என்ற சாதனையை இவர்கள் படைத்துள்ளனர்.

யோஷி மற்றும் மிச்சி ஆகிய இருவரின் உயரம், தகுதி வாய்ந்த மருத்துவர்கள் குழுவைக் கொண்டு காலை, மதியம், மாலை என உணவுக்குப் பிறகு அளக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் பின்னர் தான் அவர்கள் கின்னஸுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், யோஷி மற்றும் மிச்சி ஆகியோரின் சாதனை அதிகாரப்பூர்வமாகவும் கின்னஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

மிச்சி தற்போது பெற்றோர்களுடன் வசிக்கும் சூழலில் யோஷி திருமணம் ஆகி தனது கணவருடனும் வசித்து வருகிறார். தான் உயரம் குறைவாக இருப்பது பற்றி கருத்து தெரிவித்துள்ள மிச்சி, “கடந்த 2012 ஆம் ஆண்டு உலகின் மிகவும் குட்டையான மனிதர் ஒருவர் வரலாற்றைப் படித்தேன். அது மனதைக் கலங்கச் செய்தது.

ஆனால் அதே நேரத்தில் அவரது குணம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. இது ஒரு புறம் என்றாலும், நான் என் உயரம் குறித்து கவலைப்படுகிறேன்” என்றும் கூறினார். உள்ளார்.

காணாமல் போன கணவன்.. சுறா மீன் வயிற்றுக்குள் கிடைத்த கை.. நிலைகுலைந்து போன மனைவி!!

அர்ஜென்டினாவில்..

அர்ஜென்டினாவில் மர்மமான முறையில் நபர் ஒருவர் மாயமான சூழலில் தற்போது அவரை பற்றி கிடைத்துள்ள தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அர்ஜென்டினாவை சேர்ந்த வர்ஜினியா ப்ரக்கர் என்ற பெண், தனது கணவரான Diego Alejandro கடற்கரை ஒன்றிற்கு சென்றிருந்த போது காணமால் போனதாக போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, மர்மமான முறையில் காணாமல் போன டியாகோவை போலீசாரும் தீவிர விசாரணை மேற்கொண்டு தேடி வந்துள்ளனர். அப்படி இருக்கையில், அவர் காணாமல் போனதாக சொன்ன கடற்கரை அருகே டியாகோவின் வாகனம் மற்றும் ஹெல்மெட் உள்ளிட்டவற்றை போலீசார் இரண்டு நாட்களுக்கு பிறகு கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.

மறுபக்கம் தொடர்ந்து டியாகோவை போலீசார் தேடி வந்த சூழலிலும் அவர் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. சுமார் எட்டு நாட்களாகியும் காணாமல் போன தனது கணவர் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் மனைவி வர்ஜீனியாவும் கடும் கவலையில் இருந்து உள்ளார்.

அப்படி இருக்கையில் தான், அவரை நிலைகுலைய வைக்கும் வகையிலான தகவல் ஒன்றும் வந்து சேர்ந்துள்ளது. அதன்படி மீனவர்கள் தாங்கள் பிடித்த சுறா மீன் ஒன்றை சுத்தம் செய்த சமயத்தில் அதன் வயிற்றுக்குள் மனித உடல் பாகங்கள் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

உடனடியாக இது பற்றி அவர்கள் போலீசாருக்கும் தகவல் தெரிவித்த சூழலில் அவர்களுடன் வர்ஜீனியாவும் அங்கே வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அப்போது அந்த மீனின் வயிற்றில் இருந்து மீட்கப்பட்ட மனிதர் கை ஒன்றில் குத்தப்பட்டிருந்த வித்தியாசமான டாட்டூவை வைத்து அது காணாமல் போன தனது கணவருடைய உடல் தான் என்பதையும் வர்ஜீனியா உறுதி செய்தார்.

காணாமல் போன தனது கணவரின் உடல் பாகங்கள், சுமார் எட்டு நாட்கள் கழித்து மீனின் வயிற்றுக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட நிலை ஏற்பட்டதால் ஒரு நிமிடம் அதிர்ந்து போய் உள்ளார் அவரது மனைவி வர்ஜீனியா. இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

காதல் விவகாரம் : நண்பனின் இதயத்தை வெளியே எடுத்த இளைஞன்.. அதிர்ச்சி சம்பவம்!!

தெலுங்கானாவில்..

இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தில் முன்னாள் காதலிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த நண்பனின் தலையை துண்டித்து, உடலில் இருந்து இதயத்தை வெளியே எடுத்த இளைஞன் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

தெலுங்கானா – நலகொண்டா மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வந்த 22 வயதான மாணவர் நவீனும் அதே கல்லூரில் அதே வகுப்பில் பயின்று வந்த 21 வயதான ஹரி ஹர கிருஷ்ணாவும் நண்பர்கள்.

இவ்வாறான நிலையில், அதே கல்லூரியில் படிக்கும் மாணவியை நவீன் அவரது நண்பன் கிருஷ்ணா என இருவரும் காதலித்து வந்துள்ளனர். முதலில் நவீன் தனது காதலை அந்த மாணவியிடம் கூறியுள்ளார்.

அந்த மாணவியும் நவீனின் காதலை ஏற்றுக்கொண்டுள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுக்கு முன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு, பிரச்சினை காரணமாக நவீனும் அவரது காதலியான மாணவியும் பிரிந்துள்ளனர்.

இதன் பின்னர் வெகுநாட்கள் கழித்து ஹரிஹர கிருஷ்ணா அந்த மாணவியுடம் காதலை வெளிப்படுத்தியுள்ளார். நவீனின் காதலை விட்டு பிரிந்து பல மாதங்கள் ஆனதையடுத்து, ஹரிஹர கிருஷ்ணனின் காதலுக்கு அந்த மாணவி சம்மதம் தெரிவித்துள்ளார்.

ஹரிஹர கிருஷ்ணனும் அந்த மாணவியும் காதலித்து வந்துள்ளனர். பிரிந்து சென்றபோதும் தனது முன்னாள் காதலியான மாணவிக்கு நவீன் தொடர்ந்து கைபேசியில் அழைப்பை எடுத்தும், மெசேஜ் அனுப்பியும் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

தன்னை விட்டு பிரிந்தபோதும் நவீன் தனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துவருவது குறித்து அந்த மாணவி தனது காதலனான ஹரிஹர கிருஷ்ணனிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஹரிஹர கிருஷ்ணன் தனது காதலிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துவந்த தனது நண்பன் நவீனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதற்காக கடந்த 3 மாதங்கள் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த 17-ம் திகதி இரவு தனது நண்பன் நவீனை தில்ஷுக்நகரில் உள்ள தனது வீட்டிற்கு ஹரிஹர கிருஷ்ணன் அழைத்து சென்றுள்ளார். பின்னர், இரவு கல்லூரி விடுதியில் விட்டுவிடுவதாக ஹரிஹர கிருஷ்ணன் தனது பைக்கில் நவீனை அழைத்து சென்றுள்ளார்.

செல்லும் வழியில் பேடா அமெர்பெட் பகுதியில் உள்ள ஆள்நடமாட்டமற்ற பகுதிக்கு நவீனை அழைத்து சென்றார். அங்கு நவீனும் ஹரிஹர கிருஷ்ணனும் மது குடித்துள்ளனர். மது போதையில் காதலி விவகாரத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் ஹரிஹர கிருஷ்ணன் தான் மறைத்துவைத்திருந்த கத்தியை கொண்டு நவீனை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார். இதன்போது, நவீனின் தலையை துண்டித்து, உடலை இரண்டாக வெட்டி இதயத்தை வெளியே எடுத்துள்ளார்.

மேலும், நவீனின் விரல்களையும் துண்டித்துள்ளார். ஆயினும் ஆத்திரமடங்காத ஹரிஹர கிருஷ்ணன் தனது நண்பன் நவீனின் பிறப்புறுப்பையும் துண்டித்துள்ளார். நவீனை கொடூரமாக கொலை செய்த ஹரிஹர கிருஷ்ணன் அந்த கொடூரத்தை புகைப்படம் எடுத்து தனது காதலிக்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர் அங்கிருந்து பைக்கில் புறப்பட்டு சென்றார்.

இந்த கொலை நடந்து 9 நாட்கள் ஆன நிலையில் ஹரிஹர கிருஷ்ணன் நேற்று பொலிஸில் சரணடைந்தார். இதையடுத்து, ஹரிஹர கிருஷ்ணனை கைது செய்த பொலிஸார் அவரை சிறையில் அடைத்தனர்.

பின்னர், கொடூர கொலை செய்யப்பட்ட நவீனின் உடலை மீட்ட பொலிஸார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம், சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் காதலரிடம் பேசிவந்த காதலி.. நண்பன் என்று கூட பார்க்காமல் கொலை செய்து இதயத்தை எடுத்த காதலன்!!

தெலுங்கானாவில்..

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஹரிஹர கிருஷ்ணா (வயது 20). இவரும் அதே பகுதியை சேர்ந்த நவீன் என்பவரும் பள்ளி காலத்திலேயே ஒரு வகுப்பில் படித்து நண்பர்களாக இருந்து வந்தனர். மேலும், ஒன்றாக தனியார் பொறியியல் கல்லூரியில் பிடெக் இறுதியாண்டு படித்து வந்தனர்.

இவர்கள் இருவருக்கும் அதே வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவர் மீது காதல் ஏற்பட்டுள்ளது. முதலில் நவீன் அந்த பெண்ணிடம் காதலை கூறிய நிலையில், அவரும் அதை ஏற்றுக்கொள்ள இருவரும் காதலித்து வந்தனர். இரண்டு ஆண்டுகள் நீடித்த இந்த காதல் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக முடிவுக்கு வந்துள்ளது.

அதன்பின்னர் ஹரிஹர கிருஷ்ணா அந்த பெண்ணிடம் காதலை கூற இருவரும் காதலித்து வந்துள்ளனர். முன்னாள் காதலர் நவீனுடன் காதல் முறிந்தாலும் அந்த பெண் தொடர்ந்து அவரிடம் பேசி வந்துள்ளார். ஒருமுறை ஹரிஹர கிருஷ்ணாவும் அந்த பெண்ணும் ஒன்றாக இருந்தபோது நவீன் அந்த பெண்ணுக்கு அழைத்து பேசியுள்ளார்.

காதலி முன்னாள் காதலரிடம் பேசி வருவது ஹரிஹர கிருஷ்ணாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவரை நேரில் அழைத்து பேச முடிவெடுத்துள்ளார். அதன்படி இருவரும் நேரில் சந்தித்து பேசிய போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அந்த வாக்குவாதம் அடிதடி நிலைக்கு சென்றநிலையில், ஹரிஹர கிருஷ்ணா முன்னாள் காதலன் நவீனை கொலை செய்துள்ளார். அதோடு ஆத்திரம் அடங்காமல் நவீனின் அந்தரங்க உறுப்பு, இதயம் போன்றவற்றை வெட்டி அதை காதலிக்கு புகைப்படம் எடுத்தும் அனுப்பியுள்ளார்.

பின்னர் நவீனின் உடலை ஐதராபாத்-விஜயவாடா நெடுஞ்சாலையின் அருகே புதைத்துவிட்டு ஆந்திராவுக்கு தப்பிஓடியுள்ளார். மகன் திடீரென காணாமல் போனதை அறிந்த நவீனின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்து காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் இந்த கொடூர கொலை சம்பவம் வெளியே தெரியவந்தது.

அதனை தொடர்ந்து தலைமறைவாக இருந்த நவீனை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெஞ்சை உலுக்கிய கல்லூரி மாணவியின் மரணம்.. தொடர்ந்து 3 மாதங்கள் ராகிங் கொடுமை!!

இந்தியாவில்..

ராகிங் கொடுமைகளுக்கு என்னதான் கடுமையான தண்டணை வழங்கப்பட்டாலும் ஆங்காங்கே அசம்பாவிதங்கள் தொடர்கதையாகித் தான் வருகின்றன. குறிப்பாக மருத்துவ கல்லூரிகளில் நடைபெறும் ராகிங்களுக்கு எல்லையே இல்லை என்ற அளவுக்கு மாணவர்கள் அத்து மீறி வருகின்றனர்.

கல்லூரி நிர்வாகங்கள், மத்திய மாநில அரசுகள் தண்டணைகளை கடுமையாக்கியும், கட்டுப்பாடுகளை அதிகரித்தும் வருகின்றன. மாணவர்களுக்கு விழிப்புணர்வு வகுப்புக்கள் செயல்பாடுகள் தொடர்ந்து படிப்பிக்கப்பட்டு வருகின்றன. இருந்த போதிலும் சில விபரீதங்களை கட்டுப்படுத்த முடிவதில்லை.

தெலங்கானா மாநிலம் வராங்கல் மாவட்டத்தில் காக்கத்தீயா மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அந்த கல்லூரியில், ப்ரீத்தி என்ற மாணவி முதுகலை மருத்துவ பட்டப்படிப்பு படித்து வந்தார்.

அதே மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவம் 2-ம் ஆண்டு படிக்கும் மருத்துவ மாணவர் ஆசிப் என்பவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆசிப் தன்னை ராகிங் செய்வதாக ப்ரீத்தி பெற்றோரிடம் பலமுறை புகார் கூறியிருக்கிறார். இது தொடர்பாக ப்ரீத்தியின் பெற்றோர் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர். இரண்டு பேரையும் வரவழைத்து கவுன்சிலிங் செய்த கல்லூரி நிர்வாகம் பின்னர் இரண்டு பேரையும் அனுப்பி வைத்துவிட்டது.

மேலும் ப்ரீத்தி பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆசிப்பை காவல் நிலையத்திற்கு வரவழைத்த போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது ஆசிப், தான் ப்ரீத்தியை ராகிங் செய்யவில்லை.

பணி தொடர்பாக அவரை சில விஷயங்களில் கண்டித்தேன் என்று கூறியிருக்கிறார். எனவே அவருக்கு கவுன்சிலிங் செய்த போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் நான்கு நாட்களுக்கு முன் ப்ரீத்தி, அறுவை சிகிச்சையின் போது நோயாளிகளை மயக்கமடையச் செய்யும் அனஸ்தீசியாவை அதிகளவில் தன்னுடைய உடலில் ஊசி மூலம் செலுத்தி தற்கொலைக்கு முயன்றார்.

இதனைக் கவனித்த சக மாணவிகள் அவரை உடனடியாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் உயர் சிகிச்சைக்காக ஐதராபாத்தில் உள்ள நிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த வராங்கல் போலீசார் முதுநிலை மருத்துவ மாணவர் ஆசிப்பை பிடித்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர். அப்போது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மாணவியை ராகிங் செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.

இதன் அடிப்படையில் அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவருடைய உடல் மீண்டும் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவிற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்க்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பலரை வேன்களில் ஏற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இது பற்றி அறிந்த அரசு அதிகாரிகள் ப்ரித்தீ குடும்ப உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ப்ரீத்தி மரணத்திற்கு இழப்பீடாக 30 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் உறுதிமொழி அளிக்கப்பட்டது.

இது தவிர ப்ரீத்தி மரணம் பற்றி விசாரணை நடத்தப்படும் என்றும் அரசு சார்பில் உறுதிமொழி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ப்ரித்தீ குடும்பத்தினர் போராட்டத்தைக் கைவிட்டனர்.

எனவே ப்ரீத்தி உடல் உடற்கூராய்வுக்காக காந்தி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர், உடல் சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டது.

காரில் துணை நடிகையிடம் எல்லை மீறிய ஆண் நண்பர்.. நடுரோட்டில் நடந்த தகராறு!!

மதுரையில்..

மதுரை பழங்காநத்தம் பைபாஸ் சாலையில் வாகனங்கள் பரபரப்பாக சென்றுக்கொண்டிருந்த நிலையில், நின்றுக்கொண்டிருந்த சொகுசு காரின் உள்ளே இளம்ஜோடி சண்டை போட்டுள்ளனர்.

இதனை அப்பகுதியினர் பார்த்தபோதும் யாரும் சென்று கேட்கவில்லை. சிறிது நேரத்தில் காரில் இருந்து இறங்கிய அவர்கள் நடுரோட்டில் ஆக்ரோஷமாக சண்டையிட்டனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்துசென்ற போலீசார், சண்டையிட்ட இளைஞர், இளம்பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அப்பெண் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த துணை நடிகை அங்கீதா விஸ்வநாத் என்பது தெரியவந்தது.

இவருடைய ஆண் நண்பர் பீகாரை சேர்ந்த நிதிஷ்குமார் என்பவருடன் மும்பையில் இருந்து கோவையில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டுள்ளார். இதையடுத்து கோவையில் வாடகைக்கு கார் எடுத்து கொண்டு இருவரும் தமிழகத்தை சுற்றிபார்க்க சென்றனர்.

மதுரையில் நேற்றைய தினம் விடுதி ஒன்றில் தங்கிய இருவரும் ராமேஸ்வரம் செல்ல தயார் நிலையில் இருந்தனர். தன்னிடம் நிதிஷ்குமார் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தார் என்றும் தனது பணத்தை எடுத்துக் கொண்டதாகவும் குற்றச்சாட்டி பெண் தகராறு செய்தார். ஆனால் இளைஞர் இந்த குற்றச்சாட்டை மறுத்தார்.

இதையடுத்து இருவரையும் எச்சரித்த போலீசார் மீடும் அவரவர் சொந்த ஊருக்கு உடனே செல்லவேண்டும் என கூறினார். அவர்களுடைய ஆதார் ஆவணங்களை போலீசார் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

மேலும் அவர்களின் போன் எண்ணையும் வாங்கிக் கொண்டனர். கஞ்சா, மது உபயோகித்திருந்தனரா என்பதையும் போலீசார் சோதனையிட்டனர். துணை நடிகை மோதலால் பரபரப்பு நிலவியது.

கேள்வி கேட்ட மனைவி.. ஆசிட் வீசி கொடூரமாக கொலை செய்த காதல் கணவன்!!

ஒடிசாவில்..

ஒடிசா மாநிலம் பாலாசோரின் கடலோர மாவட்டத்தைச் சேர்ந்த பனிதா சிங் என்ற பெண், கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஆசிட் தீக்காயங்களுக்கு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோதும் அப்பெண் உயிரிழந்துவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பான போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. பனிதா சிங் என்பவர் கவரிங் நகை வியாபாரம் செய்துவந்துள்ளார். இவரது கணவர் தான் சந்தன் ராணா (32).

இருவரும் சில காலம் காதலித்து பின்னர் திருமணம் செய்துக்கொண்டனர். இந்த தம்பதி மகிழ்ச்சியாக வசித்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு பிறகு தான் கணவர் குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்று தெரியவந்துள்ளது பனிதா சிங்குக்கு.

அதாவது, இருவரும் திருமணம் செய்துக்கொள்வதற்கு முன்பே, சந்தன் ராணா வேறொரு பெண்ணை திருமணம் செய்து அவர்களுக்கு குழந்தைகள் இருப்பதை அறிந்துகொண்டார். இதனால் பனிதா சிங் வீட்டை விட்டு வெளியேறினார்.

கடந்த பிப்ரவரி 20 அன்று, சந்தன் ராணா ஒரு ஆசிட் பாட்டிலுடன் தனது மனைவி இருக்கும் பீம்புரா கிராமத்தை அடைந்தார். அங்குசென்று குடும்பம்நடத்த மனைவியை அழைத்துள்ளார். அவர் திரும்பி வர மறுத்ததால் சந்தன் ராணா அவரது மனைவி பனிதா சிங் மீது ஆசிட் வீசினார்.

இதனை தடுக்க வந்த பனிதா சிங்கின் மூத்த சகோதரி மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் மீதும் ஆசிட் வீசினார். .பனிதா சிங் முதலில் பாலசோர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவரது காயங்களின் மோசமான தன்மையைக் கருத்தில் கொண்டு கட்டாக்கில் உள்ள SCB மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்துவிட்டார்.

காயமடைந்த பனிதா சிங்கின் சகோதரரி, அவரது மகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து விசாரணை நடத்தும் போலீசார் சந்தன் ராணாவை தேடி வருகின்றனர்.

7 நாட்களாகியும் அவரை பிடிக்க முடியவில்லை. எனினும் சந்தன் ராணாவின் முதல் மனைவியை போலீசார் கைது செய்தனர். இவரது தூண்டுதல்பேரில் தான் ஆசிட் வீசியதாக கூறி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு : நோயாளர்கள் அவதி!!

வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு..

நியாயமற்ற வரிக் கொள்கை உள்ளிட்ட பல விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (01.03.2023) காலை 8.00 மணி தொடக்கம் 24 மணித்தியாலய பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் நோயாளர்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

நாடளவிய ரீதியில் வரி திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் வாழ்க்கைச் செலவினை குறைக்க வேண்டும் எனவும் கோரி துறைமுகம், ரயில்வே, பெட்ரோலியவளம், வங்கித்துறை உள்ளிடட 40 தொழிற்சங்களினால் எதிர்ப்பு போராட்டங்கள் , பணிப்புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு வழிகளில் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நிலையிலேயே வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும் அவசர நோயாளர் பிரிவு, நோயாளர் விடுதி, விபத்துப்பிரிவு, சத்திர சிகிச்சை பிரிவு உட்பட்ட சில சேவைகளில் மட்டுப்படுப்பட்ட வைத்தியர்கள் சேவைகள் ஈடுபடுவதுடன், வெளிநோயாளர் பிரிவு, கிளினிக் பிரிவு போன்ற ஏனைய சேவைகளிலிருந்து வைத்தியர்கள் முற்றாக 24மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக கிளினிக், வெளிநோயாளர் பிரிவு ஆகியவற்றிக்கு வருகை நோயாளிகள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.

யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இளம் தாயின் மரணம்!!

யாழில்..

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் வடமராட்சி கிழக்கு தாளையடிப் பகுதியைச் சேர்ந்த 24 வயதான ஒரு பிள்ளையின் தாயாரே உயிரிழந்துள்ளார்.

புற்று நோய் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளம் பெண் வடமராட்சி கிழக்கு தாளையடிப் பகுதியில் திருமணம் செய்து வாழ்ந்து வந்ததுடன் , இவருக்கு நான்கு மாதங்களேயான பெண் குழந்தையொன்றும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மகள் கொலை.. தந்தை தற்கொலை.. தாய் புற்றுநோயால் இறப்பு : 5 மாதத்தில் சிதைந்த குடும்பம்!

சென்னையில்..

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட சத்யாவின் தாய் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். சென்னையை அடுத்த ஆலந்தூர் ராஜா தெரு காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் மாணிக்கம் – ராமலட்சுமி தம்பதியினர்.

ஆதம்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவில் காவலராக பணிபுரிந்து வந்த மாணிக்கத்திற்கு சத்தியப்பிரியா (20) என்ற மகள் இருந்தார். இவர் தி நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3ம் ஆண்டு படித்து வந்தார்.

சத்தியப்பிரியாவை அதே பகுதியைச் சேர்ந்த ஒய்வு பெற்ற போலிஸ் அதிகாரியின் மகனான சதீஷ் காதலித்து வந்ததாகவும், அவரிடம் தனது காதலை சொல்லியும், சத்தியா புறக்கணித்து வந்ததாகவும் கூறப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், கடந்த அக்டோபர் 13-ம் தேதி பரங்கிமலை ரயில் நிலையத்தில் தனது தோழிகளுடன் வந்த சத்தியாவை பின்தொடர்ந்துள்ளார். அப்போது அவரை தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரயில் வரும்போது தள்ளி விட்டுள்ளார்.

இதில் ரயிலில் சிக்கிய சத்தியா தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வந்தனர். பின்னர் குற்றவாளி சதீஷயும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனிடையே தனது மகளின் இறப்பு தாங்கமுடியாத சத்தியாவின் தந்தையும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது மேலும் சத்தியாவின் குடும்பத்தை கடுமையாக பாதித்தது.

இதையடுத்து சத்தியாவின் தாய் ராமலட்சுமி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஐந்தே மாதத்தில் மகள், தந்தை, தாய் உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் தமிழ் இளைஞன் பரிதாபமாக மரணம்!!

அவுஸ்திரேலியாவில்..

மட்டக்களப்பினை சேர்ந்த இளைஞரொருவர் அவுஸ்திரேலியாவில் திடீரென உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பினை சேர்ந்த 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான,

ஸ்ரீராஜ் சந்திரநாதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் தனது வீட்டில் வழுக்கி விழுந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இவரின் மறைவுக்கு நண்பர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாய் தந்தை விவாகரத்து : 13 வயது சிறுவன் மாயம்!!

அம்பாறை..

அம்பாறை சவளக்கடை பொலிஸ் பிரிவிலுள்ள சொறிக்கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றையதினம் சிறுவன் காணாமல்போயுள்ளதாக தந்தையார் இன்று (27) முறைப்பாடு செய்துள்ளதாக சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.

வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுவனின் தாயாரும் சொறிகல்முனையைச் சேர்ந்த தந்தையாரும் விவாகரத்து செய்துள்ள நிலையில், தீபன் சயான் என்ற 13 வயது சிறுவன் தந்தையாருடன் இருந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவதினமான நேற்று (26.02) வீரமுனை பகுதியில் மரணவீடு ஒன்றிற்கு தந்தையார் சிறுவனை அழைத்துச் சென்ற நிலையில், சிறுவன் காணாமல் போயுள்ளார்.

சிறுவனை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் தொடர்பான மேலதிக விசாரணைகளை சவளக்கடை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

வெளிநாட்டில் பாத்ரூம் கழுவினேன்… நடிகர் அப்பாஸ்க்கு இப்படி ஒரு நிலைமை!!

நியூஸிலாந்தில்..

90 களில் பெண்களின் கனவுக்கண்ணனாக வலம் வந்தவர் தான் அப்பாஸ். இவர் நடிப்பில் 19996 -ம் ஆண்டு வெளியான “காதல் தேசம்” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

முதல் படத்திலேயே புகழ் உச்சிக்கு சென்ற அப்பாஸ், இதன் பின்னர் பல வெற்றி படங்களை கொடுத்தார்.

தமிழ் சினிமாவில் பெரிய நடிகராக வலம் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் சினிமாவில் இருந்த காணாமலே போய்விட்டார். தற்போது நியூஸிலாந்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் அப்பாஸ்.

இந்நிலையில் பேட்டி இவர் பல விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர், ‘ சென்னையில் இருந்து என்னுடைய சொத்துக்களை விற்று நியூஸிலாந்தில் செட்டில் ஆனேன்.

நியூஸிலாந்து வந்த புதிதில் பெட்ரோல் பங்கில் வேலை செய்தேன். அங்கு உள்ள கழிவறைகளையும் சுத்தம் செய்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு : யாழில் இடம்பெற்ற சோக சம்பவம்!!

யாழில்..

மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 4 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் யாழ்.புத்துார் கிழக்கு – ஊறணி பகுதியை சேர்ந்த அஜிந்தன் லக்ஸ்மிதா (வயது4) என்ற சிறுமி கடந்த சிவராத்திரி தினத்தன்று திடீரென வாந்தி எடுத்து சுகயீனமடைந்துள்ளார்.

இதனையடுத்து சிறுமி அச்சுவேலி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் சிறுமி சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார்.

காதலால் கண்ணை மறைத்த கோபம் : பேத்தியை கொலை செய்த தாத்தா : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

ரத்கம..

காதல் உறவால் ரத்கம, ஓவகந்த பகுதியில் 20 வயதுடைய ஒரு குழந்தையின் தாயாரான் இளம்பெண் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன், அவரின் 42 வயதான தாய்மீதும் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் படுகாயமடைந்த பெண்ணின் தாயார் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.

சம்பவத்தில் ரத்கம, ஓவகந்தவை வசிப்பிடமாகக் கொண்ட லக்‌ஷானி (வயது 20) என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணுக்கு இரண்டு வயதில் குழந்தையொன்றும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரத்கம பிரதேச சபையில் சிற்றுழியராக பணியாற்றும் 55 வயதுடைய ஒருவரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளார் எனவும், அவர் உயிரிழந்த பெண்ணின் தாத்தா எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரின் 17 வயதுடைய மகன் கொலையுண்ட பெண்ணின் கணவனின் சகோதரியுடன் காதல் தொடர்பு வைத்திருந்த நிலையில் குறித்த காதல் தொடர்பு காரணமாகவே இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வரவேற்பு நிகழ்ச்சியில் நடமாடிய இளைஞன்.. திடீரென கீழே விழுந்ததில் நேர்ந்த சோகம்!!

தெலங்கானாவில்..

தெலங்கானா மாநிலம் நிர்மல் என்ற மாவட்டத்தில் அமைந்துள்ளது குபீர் மண்டல். இங்கே சித்தையா என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் வீட்டு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக சித்தையா குடும்பத்தினர் ரிசெப்ஷன் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த திருமண நிகழ்ச்சிக்காக வெளியூர்களில் இருந்தெல்லாம் விருந்தினர்கள் வருகை தந்தார்கள். அப்போது இவர்களது உறவினரான முத்யம் என்ற 19 வயது இளைஞர் ஒருவர் திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

இதில் ரிசெப்ஷன் நிகழ்ச்சியில் அவர் அனைவர் முன்பும் தெலுங்கு பாடல் ஒன்றுக்கு நடனமாடிக்கொண்டிருந்தார். மகிழ்ச்சியாக நடமாடிக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே பொத்தென்று விழுந்தார்.

விழுந்ததில் அவர் எழுந்திருக்கவே இல்லை. கீழே விழுந்து துடித்துக்கொண்டிருந்த அவரை, உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுபோன்ற சம்பவங்கள் அண்மைக்காலமாக அடிக்கடி நிகழ்கிறது. கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் ஜம்மு காஷ்மீரில் மேடையிலேயே நடனமாடிக்கொண்டிருந்த நடன கலைஞர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பள்ளி பேருந்தில் சென்று கொண்டியிருந்தபோது 12 வயது சிறுவனுக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். கடந்த மாதம் கூட மத்தியப் பிரதேசத்தில் 11ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.