புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் கீழக்காசாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அருணா வயது 33. திருமணமாண இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தனது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக துபாய்க்கு நடனம் ஆடுவதற்காக கடந்த ஆண்டு சென்று உள்ளார்.
ஒப்பந்த அடிப்படையில் அங்குள்ள ஹோட்டல்களில் நடனம் ஆடுவதற்காக சென்ற இவர் கடந்த 24-ஆம் தேதி இரவு வரை தனது குழந்தைகளுடனும் தொலைபேசி நலமாக இருப்பதாக கூறி இருக்கிறார். ஆனால் நேற்று காலை அவர் இறந்து விட்டதாக அவரது உடன் சென்ற தோழிகள் அருணாவின் கணவருக்கு தொலைபேசியில் கூறியுள்ளனர்.
இதன் பிறகு அந்த ஹோட்டல் உரிமையாளர் இவரது குடும்பத்தாரிடம் தொடர்பு கொண்டு அருணா இறந்து விட்டதாக கூறியிருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அருணாவின் உடலை எப்படியாவது மீட்டுத் தர வேண்டும் என்று காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் பாஸ்கரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாங்கள் எங்களது வறுமைக்காக திரைப்பட நடனங்களை ஆடி வருகிறோம். அருணா துபாய் சென்று அங்கு ஹோட்டல்களில் நடனம் ஆடி வருகிறார்.
24-ஆம் தேதி கூட எங்களோடு பேசியவர் இப்போது இறந்து விட்டதாக தகவல் வந்ததும் அதிர்ச்சி அடைகிறோம். அவர் மாறி மாறி ஹோட்டல்களில் நடனம் ஆட வைக்கப்பட்டு இருக்கிறார் என்ற செய்தியும் நாங்கள் அறிந்தோம்.
இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதாவது நிகழ்ந்ததா என்பது மர்மமாகவே உள்ளது. எனவே இந்திய அரசாங்கம் அருணாவின் உடலை எங்களுக்கு விரைவாக மீட்டு தந்தும், அவரது இறப்பு குறித்து சரியான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
தெலுங்கு பட நடிகை ஹம்சா நந்தினி புற்றுநோயில் இருந்து மீண்டு வந்ததை வெளிக்காட்டும் வகையில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். தெலுங்கு திரையுலகில் நான் ஈ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஹம்சா நந்தினி.
கன்னடம், இந்தி மொழிப்படங்களிலும் நடித்துள்ள இவர், சில ஆண்டுகளுக்கு முன்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.
அதற்காக கீமோ சிகிச்சை மேற்கொண்ட ஹம்சா, தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.
இப்போது தான் மிகவும் நலமாக இருப்பதாக குறிப்பிட்டு வீடியோ ஒன்றை அவர் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் ஒரு வருடத்திற்கு முன்பு சிகிச்சையின்போது மொட்டை தலையுடன் இருந்து தற்போது முடியுடன் இருப்பதை காட்டியிருக்கிறார்.
ராசிபுரம் அருகே சிறுமியை காதலித்த இளைஞர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அதற்கு முன்பு அவர் கத்தியை வைத்து தற்கொலைக்கும் முயன்றுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கே. கே. வலசு ஆதிதிராவிடர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி (26). இவர் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் வீரமணி அவரது வீட்டின் அருகே வசித்து வந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த காதல் விவகாரம் குறித்து சிறுமியின் வீட்டிற்கு தெரிய வரவே அவர்கள் இளைஞர் வீரமணியை அழைத்து கண்டித்துள்ளனர். அதனால் விரக்தியில் இருந்த வீரமணி நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள மணியனூர் என்ற பகுதிக்கு பேருந்தில் நேற்று இரவு சென்றுள்ளார்.
அந்தப் பகுதியில் அங்காளம்மன் கோயில் உள்ளது. அந்தக் கோயிலுக்குள் நுழைந்த வீரமணி அங்கிருந்த கத்தியால் தன்னைத்தானே கழுத்து மற்றும் கைகளில் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அதனை அந்த கிராம மக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்து நல்லூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்தனர்.
பின்னர் கிராம மக்கள் மற்றும் நல்லூர் காவல் துறையினர் கோவிலுக்குள் படுகாயங்களுடன் இருந்த வீரமணியை சாதுரியமாக பேசி வெளியே வரவழைத்தனர். தொடர்ந்து அவரை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இருப்பினும் ஆம்புலன்சில் சென்று கொண்டிருந்த இளைஞர் வீரமணி திடீரென ஆம்புலன்ஸ் கண்ணாடியை உடைத்துள்ளார். அந்த சத்தத்தை கேட்டதும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டார்.
வாகனம் நின்ற மறுகணமே வீரமணி அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். தப்பி ஓடிய வீரமணியை காவல் துறையினர் சுற்றுவட்டார பகுதிகளில் தேடி திரிந்தனர். அப்போது அவர் மணியனூரில் இருக்கும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்துள்ளார்.
அவரது உடலை காவல் துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் தலைமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மருத்துவமனையில் உயிரிழந்த வீரமணியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குவிந்தனர்.
அவர்கள் சிறுமியின் உறவினர்கள் தாக்கியதால் தான் இளைஞர் வீரமணி கோயிலுக்குள் புகுந்து கத்தியால் தற்கொலைக்கு முயன்றதாகவும் வீரமணி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள் வீரமணியை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதுவரை அவரது உடலை வாங்க மாட்டோம் எனவும் கூறி நாமக்கல் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து அங்கிருந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட வீரமணியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
அதனை அடுத்து மருத்துவமனையில் போராட்டம் கைவிடப்பட்டது. தொடர்ந்து வீரமணி உயிரிழந்த சம்பவம் குறித்து நல்லூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த சிறுமி ஒருவர் பொம்மைகளை உருவாக்கி அதன்மூலம் மாதம் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதித்து வருகிறார். இந்நிலையில் தற்போது தனது தொழிலில் இருந்து தற்காலிக ஓய்வெடுக்க முடிவெடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார் அவர்.
பொதுவாக 11 வயது குழந்தைகள் என்ன செய்வார்கள்? தங்களுக்கு பிடித்த பொம்மைகளை வாங்க வேண்டும் என தங்களது பெற்றோரிடம் கேட்பார்கள். ஆனால் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிக்சி கர்டிஸ் (Pixie Curtis) எனும் சிறுமி சொந்தமாக தொழில் செய்து வருகிறார்.
அதுவும் பொம்மைகளை உருவாக்கி அதனை திறம்பட விற்பனையும் செய்து வருகிறார். கொரோனா சமயத்தில் உலகமே ஸ்தம்பித்து இருந்த நிலையில் தனது வீட்டில் முடங்கியிருந்த பிக்சிக்கு சொந்தமாக தொழில் செய்யவேண்டும் என தோன்றியிருக்கிறது.
பொம்மைகள் செய்வதில் பிக்சி கில்லாடி. ஆகவே, அதையே தனது தொழிலாக எடுத்துக்கொண்டார் அவர். பிக்சியின் தாய் ராக்சி ஜேசன்கோ (Roxy Jacenko) பிரபல மக்கள் தொடர்பு ஆலோசகர் வேறு.
இதன்மூலம், தனது பொருட்களை எப்படி சந்தைப்படுத்துவது? வியாபாரத்தை எவ்வாறு லாபகரமானதாக மாற்றுவது? என ஆலோசனை வழங்கியுள்ளார் ராக்சி. அதன் பலனாக பிக்சியின் வியாபாரம் சூடு பிடித்திருக்கிறது.
எந்த அளவுக்கு என்றால் மாதம் 1.1 கோடி ரூபாய் (110,000 யூரோ) அளவுக்கு பொம்மைகளை விற்பனை செய்து வருகிறார் பிக்சி. கூடவே சிறுவர்களுக்கான பிற மேக்கப் பொருட்களும் விற்பனையாகின்றன. சமீபத்தில் தன்னுடைய 11 வது பிறந்தநாளை பிக்சி கொண்டாடினார்.
அதற்கு அவர் செலவிட்ட தொகை மட்டும் சுமார் 23 லட்சம் என சொல்லப்படுகிறது. சிறுவயதிலேயே வியாபாரத்தில் உச்சம் தொட்ட பிக்சி ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பில் தனக்கென ஒரு சொகுசு காரையும் வாங்கியுள்ளார்.
இந்நிலையில் தனது தொழிலில் இருந்து சற்றே விலகி இருக்க முடிவெடுத்திருப்பதாகவும் தனது கல்வியில் கவனத்தை திருப்ப உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார் அவர்.
இதுபற்றி அவரது தாய் ராக்சி பேசுகையில்,”பிக்சி தனது உயர்நிலை கல்வியை பெற இருப்பதால் தொழிலில் இருந்து தற்காலிகமாக ஓய்வெடுக்க இருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே இதைப்பற்றி நாங்கள் விவாதித்து வந்தோம்.
அவள் பள்ளி படிப்பில் ஆர்வம் செலுத்தவேண்டிய நேரம் இது. இருப்பினும் அவளுடைய தொழில் தொடர்ந்து நடைபெறும். ஓய்வு கிடைக்கும் நேரங்களில் அதிலும் ஈடுபடுவார்” என தெரிவித்திருக்கிறார்.
புதுக்கோட்டையை சேர்ந்த தனது ஊழியரின் திருமணத்தில் கலந்துகொள்ள வந்திருக்கிறார் சிங்கப்பூர் தொழிலதிபர் ஒருவர். இதனால் மொத்த கிராமமே ஆச்சர்யத்தில் ஆழ்ந்திருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் திருக்கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் கடந்த 17 வருடங்களாக சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் அவருக்கு திருமணம் நடத்த அவரது பெற்றோர் முடிவெடுத்து இருக்கின்றனர். அதன்படி அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் மாரிமுத்துவிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.
இந்த திருமணத்தில் கலந்து கொள்ளுமாறு தான் பணிபுரிந்து வந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஹெல்வின் யாவ் என்பவருக்கு அழைப்பு விடுத்திருந்தார் மாப்பிள்ளை மாரிமுத்து.
அதற்கு தான் நிச்சயம் வருவதாக அவர் தெரிவித்து இருந்திருக்கின்றார். இந்நிலையில் நேற்று புதுக்கோட்டையில் மாரிமுத்துவிற்கு திருமணம் நடைபெற்று இருக்கிறது. இந்த திருமணத்திற்கு ஹெல்வின் யாவ் தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் வந்திறங்கியுள்ளார்.
தனது திருமணத்திற்கு வருகை தரும் தனது முதலாளியை கௌரவிக்க நினைத்த மாரிமுத்து ஊர் எல்லையில் இருந்து கெண்டை மேளம் முழங்க சாரட் குதிரை வண்டியில் உறவினர்கள் சூழ அவரை அழைத்து வந்தார்.
திருமணத்தில் கலந்து கொண்ட அவர் பின்பு பந்தியில் அமர்ந்து உணவு அருந்தி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து திருக்கட்டளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களோடு சேர்ந்து மரக்கன்றுகளையும் அவர் நட்டிக்கிறார்.
அந்த பள்ளியில் நன்றாக படிக்கக்கூடிய மாணவ மாணவியர்களுக்கு காமராஜரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை அவர் பரிசாக வழங்கியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் அந்தப் பள்ளிக்கு வளர்ச்சி நிதியாக ரூபாய் 50 லட்சத்தை நன்கொடையாகவும் வழங்கியுள்ளார் தாராள மனம் படைத்த ஹெல்வின்.
இறுதியாக தனது பயணத்தை முடித்துக் கொண்டு கிளம்பிய அவர் தான் நட்டு வைத்த மரக்கன்றுகள் மற்றும் மாணவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.
தனது திருமணத்திற்காக சிங்கப்பூரிலிருந்து வந்திருந்த தனது முதலாளி தான் படித்த பள்ளிக்கும் நிதி உதவி செய்தது மாரிமுத்துவை பெரும் மகிழ்ச்சிகொள்ள செய்தது. மேலும் இந்த சம்பவம் பகுதி மக்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற்ற திருமண விழாவில், மணமகனுக்கு திருமண சடங்கு செய்வதற்கு குடும்பத்தினர் ஆயத்தமான தருணத்தில், நபர் ஒருவரும் நலங்கு வைப்பதற்கு வந்துள்ளார்.
இந்த சடங்கு திருமண நிகழ்வின் முக்கிய சடங்காக நடைபெறும். அப்போது மணமகனுக்கு அருகே அவர் அமர்ந்து மஞ்சள் பூசும்போதே திடீரென அவர் சரிந்து கீழே விழுந்திருக்கிறார்.
இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை எழுப்ப முயற்சித்தும் பலன் அளிக்கவில்லை. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார்.
இதனிடையே உயிரிழந்தவர் பெயர் ரப்பானி எனவும், அவர் குல்சார் ஹவுசில் உள்ள நகைக்கடை வேலை பார்த்து வந்தவர் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கரூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளி தம்பதி இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்திருக்கும் நிலையில் பலரும் இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களது திருமணம் தொடர்பான வீடியோ சமூக வலை தளங்களில் பரவி பலரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.
கரூர் மாவட்டம் வெங்கமேடு புதுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் என்ற சசிகுமார். மாற்றுத் திறனாளியான இவர் பி.காம் முடித்துவிட்டு சொந்தமாக சிறிய மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
தற்போது அவருக்கு 40 வயதாகிறது. உயரம் குறைவானவர் என்பதால் பெண் கிடைக்காமல் பல வருடங்கள் திருமணத்திற்காக காத்திருந்தனர் இவரது குடும்பத்தினர்.
இதற்கு மத்தியில் இவருடைய தாய் சற்று உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். அவரை தனது மாமாவின் உதவியுடன் கவனித்தும் வந்திருக்கிறார் சசிகுமார். இந்த சூழ்நிலையில் சசிகுமாரின் மாமா சுப்பிரமணியன் கரூர் வணிக வரித்துறை அலுவலகத்திற்கு பணி நிமித்தமாக சென்று இருக்கிறார்.
அப்போது அங்கு உதவியாளராக பணியாற்றும் மாற்றுத் திறனாளி சாந்தியை பார்த்திருக்கிறார். சாந்திக்கும் அவருடைய பெற்றோர் மாப்பிள்ளை தேடி வருவதை அறிந்து கொண்ட சுப்பிரமணியன் சசிகுமார் குறித்து அவர்களிடம் பேசி இருக்கிறார்.
அதன் பின்னர், சசிகுமார் சாந்தி வீட்டிற்கு சென்று பேசியிருக்கிறார். அப்போது இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப்போக திருமணம் செய்ய இருவரும் முடிவெடுத்திருக்கின்றனர்.
அதன்படி இருவீட்டாரின் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து சசிகுமார் வீடு அமைந்துள்ள பகுதியில் இருக்கும் சித்தி விநாயகர் ஆலயத்தில் இருவருக்கும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்று இருக்கிறது.
அதன் பின்னர் தனியார் திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த திருமணத்தில் உறவினர்கள் நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டு இரு தம்பதியை வாழ்த்தியிருக்கின்றனர்.
இந்நிலையில் மற்றவர்களை போல தாங்களும் நன்றாக வாழ்ந்துகாட்டுவோம் என தன்னம்பிக்கையுடன் கூறியுள்ளனர் இந்த தம்பதி. இந்த சூழ்நிலையில் இவர்களது திருமண காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், பலரும் இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இன்றைய காலகட்டத்திலும், ஒரு பெண் தான் எதிர்கொள்ளும் பல தடைகளை மீறி சமூகத்தில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்குவது கடினம். ஆனால், வயது அல்லது பாலினத்தைப் பொருட்படுத்தாமல் மக்களை எப்போதும் ஊக்குவிக்கும் பல ஊக்கமளிக்கும் கதைகள் உள்ளன.
அப்படிப்பட்ட ஒன்று தான் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீ லெக்ஷ்மி அனிலின் கதை. ஸ்ரீ லெக்ஷ்மி அனில் தனது செய்முறைத் தேர்வுக்காக தேர்வு மையத்தில் இருக்கும் வீடியோ ஒன்று சமீபத்தில் இணையத்தில் வைரலானது.
அந்த வீடியோவில் அவர் மணப்பெண் அலங்காரத்தில் வெள்ளை லேப் கோட் மற்றும் ஸ்டெதாஸ்கோப் அணிந்திருந்தார். இந்த வீடியோ வைரலானது மற்றும் இணைய பயனர்களிடமிருந்து பாராட்டுக்கள் குவிந்தன. அனைவரும் அவரது முயற்சியையும் மன உறுதியையும் பாராட்டினர்.
இது குறித்து, இன்ஸ்டாகிராமில் Humans Of Bombay பக்கத்தில் ஸ்ரீ லெக்ஷ்மி அனில் தெரிவித்ததாவது: “எனக்கு 8 வயதிலிருந்தே நான் மருத்துவராக வேண்டும் என்று கனவு கண்டேன் – ஒரு நாள், அம்மா மிகவும் நோய்வாய்ப்பட்டார், நாங்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது.
அங்கே நாட்களைக் கழித்தேன். தாழ்வாரங்களில் அந்த பெஞ்சுகளில் உட்கார்ந்து, கழுத்தில் ஏதோ தொங்கவிட்ட வெள்ளைக் கோட் அணிந்திருந்த நபர்கள் இருப்பதைக் கவனித்தேன்.
அவர்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஓடுவார்கள் மற்றும் அவர்களின் ஒரு தொடுதல் மக்களை குணப்படுத்தும். அவர்கள் அம்மாவையும் குணப்படுத்தினார்கள். அன்று தான் எனக்கு தெரிந்தது!
அதனால், நான் அம்மாவிடம் சொன்னேன், ‘நானும் மக்களைக் குணப்படுத்துவேன்.’ அடுத்த 10 வருடங்கள், நான் இரவும் பகலும் உழைத்து, வகுப்புகளுக்குச் சேர்ந்தேன், எல்லாவற்றையும் கொடுத்தேன்.
நான் பள்ளியை சிறப்பாகக் கடந்து சென்றேன். கல்லூரி கடினமாக இருந்தது ஆனால் என்னை நான் தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ளவேண்டும் என்று எனக்குத் தெரியும். மிக விரைவில், நான் ஒரு வழக்கத்திற்கு என்னைப் பொருத்திக் கொண்டேன்.
நான் கல்வியில் நன்றாக இருந்தேன் & எனது தனிப்பட்ட வாழ்க்கை கூட செழிப்பாக இருந்தது. கடந்த ஆண்டு, அம்மா மூலம் நான் அகிலை சந்தித்தேன். எங்களிடம் ஒரே மாதிரியான மதிப்புகள் இருப்பதை உணர்ந்தபோது, நாங்கள் ‘ஆம்’ என்று சொன்னோம்.
அவர் எனது வாழ்க்கையை ஆதரித்தார் & என்னை முன்னோக்கி மட்டுமே தள்ளினார். விரைவில், எங்கள் திருமணத் தேதி நிச்சயிக்கப்பட்டது, ஆனால் என் திருமணம் மற்றும் இறுதித் தேர்வு ஒரே நாளில் வரும் என்று நான் எனது கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை…
பெருநாளுக்கு முந்தைய இரவு மோசமாக இருந்தது. ஆனால் அம்மா என்னை ஆதரித்தார். என் பெயருக்கு முன்னால் ‘𝗗𝗿.’ என்ற பட்டத்தைப் பார்க்க வேண்டும் என்று அவர் பல ஆண்டுகளாக கனவு கண்டார்.
அன்று இரவு நான் பரீட்சைக்குத் தயாராகும் போது அவர் என்னுடன் அமர்ந்திருந்தார். நான் இடைவேளையில் ஓய்வு எடுப்பேன், அந்த இடைவேளையின் போது, திருமண ஏற்பாடுகளைச் சரிபார்ப்போம்.
ஆனால் நான் மிகவும் பதட்டமாக இருந்தேன்…எனது தேர்வு மறுநாள் காலை 8:45 மணிக்கு திட்டமிடப்பட்டது, என் திருமணம் 11:00 மணிக்கு! எனது தேர்வை என்னால் தவறவிட முடியவில்லை, அதனால் நான் முதல்வரிடம் செய்முறைத் தேர்வை நடத்த அனுமதிக்க முடியுமா என்று முதல்வரிடம் கேட்டேன்.
அதிர்ஷ்டவசமாக, அவர் ஒப்புக்கொண்டார். நான் என் கல்லூரியை அடைந்ததும், என் வகுப்பு தோழர்கள் எனக்காக கைதட்டினர். ஒரு மணி நேரத்தில் என் தேர்வை முடித்துவிட்டு ஓடினேன். நான் திரும்பி வந்ததும், என் லேப் கோட் & ஸ்டெதாஸ்கோப்பைக் கழற்றி, மண்டபத்தில் அமர்ந்தேன்…அது அழகாக இருந்தது.
ஒரே நாளில் மருத்துவராகவும் மனைவியாகவும் மாறினேன்
எனக்கு திருமணமாகி ஒரு மாதம் ஆகிறது. நான் இப்போது ஓய்வில் இருக்கிறேன்-எனது இன்டர்ன்ஷிப்பைத் தொடங்க எனது முடிவுகள் வெளிவரும் வரை காத்திருக்கிறேன்.
ஆனால் எனக்குத் தெரிந்த வாழ்க்கை மாறிவிட்டது! ஏனென்றால், அந்த நேரத்தில், நான் பெண்களாக உணர்ந்தேன், எங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையே தேர்வு செய்ய நாங்கள் எப்போதும் கேட்கப்படுகிறோம்.
ஆனால் என்னைப் பாருங்கள், லேப் கோட் மற்றும் ஸ்டெதாஸ்கோப்களை பிரமிப்புடன் பார்த்த 8 வயது சிறுமி, தனது ஆடையின் மேல் அதை அணிந்து, ஒரே நாளில் மருத்துவராகவும் மனைவியாகவும் மாறினேன்!” என்று கூறினார். இந்த பதிவு 145,000-க்கும் மேற்பட்ட லைக்குகளையும் நூற்றுக்கணக்கான கமெண்டுகளையும் பெற்றுள்ளது.
கருத்துக்களில் பலர் அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்தாலும், பரீட்சை திகதிகள் முன்கூட்டியே அறிவிக்கப்படுவதால், ஸ்ரீ லெக்ஷ்மி தனது திருமணத்தை ஒத்திவைத்திருக்க வேண்டும் என்று இணையத்தின் பெரும் பகுதியினர் சுட்டிக்காட்டினர்.
அதுமட்டுமின்றி, கல்லூரிகள் பொதுவாக மாணவர்கள் தேர்வுக்கு இதுபோன்ற உடைகளை அணிய அனுமதிப்பதில்லை என்பதால் நிலைமை சற்று உண்மைக்கு மாறானது என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
விருதுநகா் மாவட்டம் சிவகாசி பாரதி நகரில் பட்டாசுத் தொழிலாளி பன்னீா்செல்வம் (40), அவரது மனைவி முத்துமாரி(31) தம்பதி வசித்து வந்தனர். இவருக்கு ஏற்கெனவே ஒரு ஆண் குழந்தை பிறந்து இறந்தது.
இதனால் குழந்தை இல்லாத சோகத்தில் இருந்த இந்த முத்துமாரி, நீண்ட காலத்துக்குப் பிறகு மீண்டும் கருவுற்றார். அவா் பிரசவத்துக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் முத்துமாரிக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை இறந்து பிறந்துள்ளது. இறந்த குழந்தையின் உடலை உறவினர்களுக்கு காட்டிய மருத்துவமனை நிர்வாகம், தாய் முத்துமாரியை பார்க்க நீண்ட நேரமாக மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
ஆனால், அதன்பிறகு முத்துமாரியும், அவரது குழந்தையும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர். மருத்துவ மாணவா்களைக் கொண்டு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால், தாயும், குழந்தையும் இறந்து விட்டதாக உறவினா்கள் குற்றம்சாட்டினர். மேலும் மருத்துவமனை நிர்வாகிகளிடம் தகராறில் ஈடுபட்டதுடன் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.
பாதிக்கப்பட்ட பன்னீா்செல்வத்தின் குடும்பத்துக்கு இழப்பீடு, அரசுப் பணி வழங்கக் கோரி மருத்துவமனை எதிரே உள்ள சாலையில் அமா்ந்து 2ஆவது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அங்கு வந்த துணை காவல் கண்காணிப்பாளா் அா்ச்சனா, மருத்துவமனை நிலைய அலுவலா் முருகேசன், உதவி மருத்துவ நிலைய அலுவலா் முரளிதரன் ஆகியோா் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினா்.
அதில் முத்துமாரிக்கு முறையான சிகிச்சை அளித்த நிலையில், அதிகளவு ரத்தம் வெளியேறியதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால் பன்னீா்செல்வத்தின் உறவினா்கள் வாக்குவாதம் செய்தனா். பிறகு முத்துமாரி உடல் கூறாய்வு செய்யப்பட்டு, உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக உடல் கூறாய்வு விடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது.
மேலும் பன்னீா்செல்வம் அளித்த புகாரின் பேரில் தாய், சேய் இறப்பு குறித்து விருதுநகா் கிழக்கு போலீசார் சந்தேக மரணமாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
நாட்டில் எதிர்காலத்தில் QR முறை ஒழிக்கப்படும் அதேவேளை, பெற்றோலின் விலையில் சிறிதளவு அதிகரிப்பு செய்ய எதிர்பார்க்கப்படுவதாகவும், எனினும் தற்போது அவ்வாறான திட்டம் எதுவும் இல்லை எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை தற்போதைக்கு எரிபொருளின் விலையை அதிகரிப்பதற்கு எந்த தீர்மானமும் இல்லை. எரிபொருள் விலை அதிகரித்தால் 10 – 15 ரூபா வரையில் மாற்றம் ஏற்படலாம்.
இருப்பினும், உக்ரைன் – ரஷ்யா யுத்தம் போன்ற உலக நிலைமைகளை தன்னால் கட்டுப்படுத்த முடியாது எனவும், இவ்வாறான நிலையில் விலை எவ்வளவு குறையும் எனவும் கூற முடியாது.
அடுத்த மூன்று மாதங்களில் QR முறை முற்றாக இல்லாதொழிக்கப்படும் எனவும் அதன் பின்னர் வழமை போன்று மக்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வவுனியா ஏ9 வீதி, மூன்று முறிப்பு பகுதியில் இன்று (26.02) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
வவுனியா, ஏ9 வீதி, மூன்றுமுறிப்பு பகுதியில் துவிச்சக்கர வண்டியில் குடும்பஸ்தர் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்த போது கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற தனியார் பேருந்து ஒன்று மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக துவிச்சக்கரவண்டியில் பயணித்த 40 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பில் வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை, இ.போ.சபை மற்றும் தனியார் பேரூந்து என்பன போட்டிக்கு ஓடியதால் குறித்த விபத்து இடம்பெற்றதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கும்பகோணம் அருகே கணவர் உயிரிழந்த கொஞ்ச நேரத்தில் மனைவியும் மரணம் அடைந்த சம்பவம் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கும்பகோணம் அருகே உள்ள இன்னம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவருடைய வயது 85.
விவசாய வேலைகளை பார்த்து வந்த இவருக்கு இந்த கிராமத்தில் உள்ள தோப்புதெருவில் சொந்த வீடு இருக்கிறது. இவருடைய மனைவி சரோஜா. 75 வயதான இவர் தனது கணவருக்கு வாழ்க்கை முழுவதும் பக்கபலமாக இருந்து வந்திருக்கிறார். இந்த தம்பதிக்கு கிரிஜா, உமா மற்றும் புவனேஸ்வரி என மூன்று மகள்கள் உள்ளனர்.
மூவருக்கும் திருமணம் ஆன நிலையில் தங்களது கணவர்களுடன் தனித்தனியாக மூவரும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கலியமூர்த்தி மற்றும் அவரது மனைவி சரோஜா மட்டும் இன்னம்பூர் கிராமத்தில் வசித்து வந்திருக்கின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வயது மூப்பு காரணமாக கலியமூர்த்தியின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனிடைய நேற்று கலியமூர்த்தி மரணம் அடைந்திருக்கிறார். வாழ்க்கையின் பல்வேறு அங்கங்களில் தனக்கு துணையாக இருந்த தனது கணவர் மறைந்து விட்டதை அறிந்த சரோஜா பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்.
தனது கணவர் தன்னை விட்டு பிரிந்து சென்றதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்த அவர் மயங்கி விழுந்திருக்கிறார். உடனடியாக அங்கிருந்த அனைவரும் அவரை எழுப்பி இருக்கின்றனர்.
ஆனால் இந்த பலனும் இல்லை. சரோஜா மரணம் அடைந்ததை அறிந்த அக்கம் பக்கத்தினர் பேரதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். கணவர் இறந்த கொஞ்ச நேரத்தில் மனைவியும் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இதனை அடுத்து அந்த கிராம மக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டுள்ளனர். அப்போது மரணத்திலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காத கலியமூர்த்தி சரோஜா தம்பதியின் அன்யோன்யத்தை அனைவரும் அறிந்து நெகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர். ஒரே நாளில் அடுத்தடுத்து கணவன் மற்றும் மனைவி உயிரிழந்த சம்பவம் கும்பகோணம் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த முதியவர் ஒருவர் 100 பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என்பதையே இலட்சியமாக கொண்டிருக்கிறார். பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்தவர் தான். 60 வயதான சர்தார் ஜன் முகமது கான் கில்ஜி. இவர் ஒரு வைத்தியராவார்.
இவர் தற்போமு 26 முறை திருமணம் செய்துக் கொண்டு 22 மனைவிகளை விவாகரத்து செய்தவர். மேலும், இவர் தற்போது 4 மனைவிகளுடன் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவரின் வழக்கம் என்னவென்றால் குழந்தைகள் பெறுவதற்காக திருமணம் செய்வதாகும். குழந்தைகள் பிறந்ததும் அவர்களை விவாகரத்து செய்து விடுவாராம். விவாகரத்திற்குப் பிறகும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு இவர் தான் பொறுப்பேற்றுக் கொள்வாராம்.
இது தொடர்பில் அவரிடம் கேட்ட போது, ‘இது எனது பொழுதுபோக்கு, இன்னும் 100 திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்’ என்று கூறியிருக்கிறேன், இது இஸ்லாமிய விதிகளின்படி கூட தவறில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.
மேலும், எனது வாழ்நாளின் எஞ்சிய பகுதியில், 100 திருமணங்கள் மற்றும் 100 விவாகரத்துகளை செய்துவிட வேண்டும் என்பது எனது ஆசை. இது தான் எனது லட்சியம்’’ என்று தெரிவித்திருக்கிறார். இந்த செய்தியானது பாகிஸ்தானில் மட்டுமல்ல உலகதத்தில் இருக்கும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
பெர்த் குழந்தைகள் மருத்துவமனையில் விரைவில் சிகிச்சையால் சிறுமியின் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் என விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஐஸ்வர்யா அஸ்வத் என்ற 7 வயது சிறுமி கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி அவுஸ்திரேலியாவிலுள்ள பெர்த் குழந்தைகள் மருத்துவமனையில் பல உறுப்புகள் செயலிழப்பால் உயிரிழந்திருக்கிறார்.
“நிபுணத்துவ சான்றுகளின் அடிப்படையில், ஐஸ்வர்யா முதலில் பிசிஎச்-க்கு வந்த சிறிது நேரத்திலேயே அவருக்கு அவசர மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் அவரது மரணம் தடுக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது” என்று WA துணை பிரேதப் பரிசோதனை அதிகாரி சாரா லிண்டனின் அறிக்கை கூறுகிறது.
ஐஸ்வர்யா அஸ்வத்தின் பெற்றோர்களான அஸ்வத் சவிட்டுபரா மற்றும் பிரசிதா சசிதரன் ஆகியோர் தங்கள் மகளுக்கு வைரஸ் நோய் தான் வந்துள்ளது என்பதை உறுதி செய்த பின்பு அச்சிறுமியை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆனால் அங்கிருந்த மருத்துவர்கள் சிறுமி 90 நிமிடங்கள் காத்திருப்பு அறையில் எந்த வித சிகிச்சையும் அளிக்காது காத்திருக்க வைத்துள்ளனர். சிறுமியின் பெற்றோர் எத்தனையோ முறை வற்புறுத்தியபோதிலும் இவர்கள் கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறார்கள்.
செவிலியர்கள் முதலுதவி செய்கையில் மருத்துவரிடம் கூறியும் அவர் சிகிச்சை அளிக்கவில்லை என அறிக்கை கூறுகிறது. ஐஸ்வர்யா அஸ்வத் மருத்துவமனைக்கு வந்த மூன்றரை மணி நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
“இந்த வகை செப்சிஸைக் கண்டறிவது கடினம், குறிப்பாக குழந்தைகளுக்கு ஆரம்பக்கால ஆண்டிபயாடிக் சிகிச்சை இல்லாமல் அது பெரும்பாலும் ஆபத்தானது” என்று அறிக்கை கண்டறிந்துள்ளது.
ஐஸ்வர்யாவின் இறப்பிற்குப் பின்பு குழந்தைகள் இரைப்பை குடல் அறிகுறிகளுடன் இருக்கும்போது, காத்திருப்பு அறை செவிலியர் மூலம் அரை மணி நேரத்திற்குள் அல்லது அதற்கு மாற்றாக ஒரு புதிய செயல்முறையைப் பரிசீலிக்க CAHS பரிசீலிக்க வேண்டும் என்றும் பிரேதப் பரிசோதனை அதிகாரி சாரா லிண்டனின் பரிந்துரைத்துள்ளார்.
காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் ( 29 ). இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் வசிக்கும் தனது தாய் பார்வதியை பார்க்க சென்று உள்ளார்.
அங்கு அவர் அருகில் உள்ள கடையில் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி கொண்டு இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த நண்பர்களான முகமது முஷீத் (24), நசருல்லா (27) ஆகியோர் மது போதையில் அங்கு வந்தனர்.
அவர்கள் பிரவீனிடம் ஓசியில் சிகரெட் வழங்குமாறு கேட்டு உள்ளனர். அவர் அதற்கு தன்னிடம் சிகரெட் இல்லை என கூறினார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலானது.
இதில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அது மட்டுமில்லாமல் அருகில் இருந்த கத்தியால் குத்திக் கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த முஷீத், நசருல்லா தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரவீனின் மார்பில் குத்திவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.
இதில் பலத்த காயம் அடைந்த பிரவீனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பிரவீன் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து எண்ணூர் காவல் துறையினர் கொலை வழக்குப்பதிவு தலைமறைவாக இருந்த முகமது முஷீத், நசருல்லா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவர் மீதும் அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் எண்ணூர் காவல் நிலையத்தில் உள்ளது. கொலைக்கு வேறு ஏதும் காரணமா ? என்ற கோணத்திலும் கைதான 2 பேரிடமும் எண்ணூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த டிசம்பர் மாதம் லண்டனில் விமானம் ஒன்று தரையிறங்கிய நிலையில் அதிலிருந்த பணிப்பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணையில் அப்பெண்ணுக்கு அரிய வகை நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்கு பின்னர் உலகம் முழுவதும் பல்வேறு வகையான புதிய நோய்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. இந்நோய்கள் திடீர் உயிரிழப்பையும் ஏற்படுத்துகின்றன. சரியாக சொல்வதெனில் உயிரிழப்புகள் ஏற்பட்ட பின்னர்தான் இப்படி ஒரு நோய் இருக்கிறது என்பதையே கண்டுபிடிக்க முடிகிறது.
அப்படி ஒரு சம்பவம்தான் தற்போது அடையாளம் காணப்பட்டிருக்கிறது. அதாவது, கடந்த டிசம்பர் மாதம் லண்டனின் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் ஏர் அல்பேனியாவுக்கு சொந்தமான விமானம் ஒன்று தரையிறங்கியது.
இந்த விமானத்தில் கிரேட்டா டைர்மிஷி என்ற 24 வயதான இளம்பெண் கேபின் க்ரூவாக பணியாற்றி வந்துள்ளார். விமானம் தரையிறங்கிய சில நிமிடங்களிலேயே அப்பெண் கீழே சுருண்டு விழுந்திருக்கிறார்.
சக பயணிகள் அவரை எழுப்பி அமரவைக்க முயன்றுள்ளனர். ஆனால் கிரேட்டாவை எழுப்ப முடியவில்லை. உடனடியாக விமான நிலையத்தில் இருந்த அவசர உதவி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து முதலுதவி செய்தனர்.
அப்படியும் இப்பெண்ணை காப்பாற்ற முடியவில்லை. இதனையடுத்து இது குறித்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது இந்த உயிரிழப்புக்கான காரணத்தை நீதிமன்றம் விளக்கியுள்ளது.
அதாவது கிரேட்டா உயிரிழந்ததற்கு மாரடைப்பு காரணமில்லை என்பதை உடற்கூறாய்வு அறிக்கைகள் தெளிவுப்படுத்தியுள்ளன. மேலும் கிரேட்டாவுக்கு ‘ வயது வந்தோருக்கான திடீர் இறப்பு நோய்'(sudden adult death syndrome) பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார்.
இது குறித்து விரிவாக கூறிய விசாரணை அதிகாரி மைக்கேல் பிரவுன், “கிரேட்டா முதலில் மயக்கமடைந்துள்ளார். பின்னர் விமான முனையத்திலிருந்த ஊழியர்கள் சிபிஆர் முதலுதவி அளித்துள்ளனர். சரியாக 10 நிமிடங்களுக்கு பின்னர் அவருடைய இதய துடிப்பு நின்றுவிட்டது.
அவருக்கு சிகிச்சையளித்த ஊழியர்கள் உயிரிழப்பை உறுதி செய்தனர். அவர் திடீர் இறப்பு நோயால் உயிரிழந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் பாதிப்பு மிகவும் அரிதானதாகும். ஒவ்வொரு ஆண்டும் இங்கிலாந்தில் மட்டும் இந்நோயால் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் சோகம் என்னவெனில் திடீரென உயிரிழப்பு ஏற்பட்ட பின்னர்தான் இந்த நோயால் அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே கண்டுபிடிக்கப்படுகிறது. இந்த நோயிலேயே 6 வகைகள் இருக்கின்றன. இந்த 6 வகைகளில் சில நோய்கள் 2000 பேரில் ஒருவருக்கு இருக்கிறது.
ஆனால் வேறு சில நோய்கள் 10 ஆயிரம் பேரில் ஒருவருக்கு ஏற்படுகிறது. அமெரிக்காவை பொறுத்த அளவில் ஒவ்வொரு ஆண்டும் திடீர் மாரடைப்பால் 2 பேர் உயிரிழக்கின்றனர். அதேபோல இந்த திடீர் இறப்பு நோய் காரணமாக சுமார் 4,000 பேர் உயிரிழக்கின்றனர்” என்று கூறியுள்ளார்.
கிரேட்டாவின் மரணம் எங்களுக்கு பெரிய இழப்பு என கிரேட்டாவின் சக ஊழியர்கள் கூறியுள்ளனர். அதேபோல ஏர் அல்பேனியாவும் கிரேட்டாவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளது. இந்த மரணம் இயற்கையானது என்று நீதிபதிகள் கூறியுள்ள நிலையில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.