நாட்டில் ஏற்ற்பட்ட சீரற்ற காலநிலையால் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 25,000 ரூபா உதவி வழங்கப்படவுள்ளது.
அதன்படி பாதிக்கபப்ட்ட மாணவர்கள் ஒவ்வொருவருக்கும், அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து 25,000 ரூபாவை வழங்க ஜனாதிபதி அனுர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் சில நாட்களில் நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக நிலைபெறும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, நாளை மறுதினம் வியாழக்கிழமை முதல் நாட்டில், குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருக்கார்த்திகை தீபம் என்பது இறைவனை ஒளி வடிவமாக வழிபடும் திருநாளாகும். இந்த நாளில் வீடு முழுவதும் விளக்கேற்றி வழிபடுவதால் நன்மைகள் அதிகரிக்கும். இது இறை அருளையும், செல்வ நலன்களையும் பெறுவதற்கான நாளாகும்.
திருக்கார்த்திகை தீபத் திருநாள் சிவ வழிபாட்டிற்கு மட்டுமின்றி, மகாலட்சுமியை வழிபட்டு, அவரின் அருளை முழுவதுமாக பெறுவதற்குரிய சக்தி வாய்ந்த நாளாகும். இதனால் இந்த நாளில் மறந்தும் கூட சில தவறுகளை செய்து விடக் கூடாது.
திருக்கார்த்திகை தீபம் அன்று செய்யக் கூடாத 3 தவறுகள்
திருக்கார்த்திகை தீபத் திருநாள் அன்று எந்த காரணத்திற்காகவும் வீட்டில் விளக்கேற்றாமல் இருளாக இருக்கும் படி செய்யக் கூடாது.
திருக்கார்த்திகை அன்று நீங்கள் வெளியூர் செல்வதாக இருந்தாலோ அல்லது ஆன்மீக பயணம் செல்வதாக இருந்தாலோ கூட பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் அல்லது உங்களின் உறவினர் யாரையாவது வீட்டில் இருக்கச் செய்து விளக்கேற்றி வைக்க செய்யலாம்.
அவர்களால் உங்கள் வீட்டில் இருக்க முடியா விட்டாலும், வீட்டு வாசலில் மட்டுமாவது விளக்கேற்றி வைக்கச் சொல்லலாம். பூஜை அறையில் விளக்கேற்றி வழிபடா விட்டாலும், வீட்டு நிலைவாசலில் மட்டுமாவது இரண்டு அகல் விளக்குகள் எரியும் படி செய்ய வேண்டும்.
திருக்கார்த்திகை தீபம் அன்று விரதம் இருப்பது சிறப்பு. அப்படி விரதம் இருக்க முடியவில்லை என்றால் சைவமாக சாப்பிட்டு, இறை வழிபாட்டினை மேற்கொள்ளலாம். மறந்தும் கூட இந்த நாளில் அசைவம் சாப்பிடக் கூடாது. அது மிகப் பெரிய பாவமாகும்.
திருக்கார்த்திகை தீபம் அன்று யாரிடமும் கடன் வாங்கக் கூடாது. மளிகைக் கடையிலோ அல்லது வேறு ஏதாவது பொருட்கள் வாங்கினால் கூட பணம் கொடுத்து தான் அந்த பொருளை வாங்க வேண்டுமே தவிர, கடனாக ஒரு போதும் வாங்கக் கூடாது.
திருக்கார்த்திகை திருநாள் என்பது மகாலட்சுமியை வீட்டில் எழுந்தருளச் செய்து, அவளின் அருட்கடாட்சத்தை பெறுவதற்கான நாளாகும். இதனால் மகாலட்சுமி மனம் மகிழும் படியான விஷயங்களை மட்டுமே இந்த நாளில் செய்ய வேண்டும்.
அனுராதபுரத்தில் உயிரை மாய்த்துக்கொள்வதற்காக மல்வத்து ஓயாவில் குதித்த ஒரு தாயையும் இரண்டு குழந்தைகளையும் கண்டுபிடிக்க அனுராதபுரம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
உள்ளூர்வாசிகள் மற்றும் உயிர் காப்பாளர் குழுவின் உதவியுடன் தாய் மீட்கப்பட்ட நிலையில் இரண்டு குழந்தைகளையும் கண்டுபிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மொரட்டுவையைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தாயான 40 வயதுடைய ஒரு பெண் தனது 4 வயது மற்றும் 8 வயதுடைய குழந்தைகளுடன் செவ்வாய்க்கிழமை (02) காலை அனுராதபுரம் நகரத்திற்கு அருகிலுள்ள மல்வத்து ஓயாவில் குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருப்பதாகவும், குடும்ப தகராறு காரணமாக இவ்வாறு உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
மலத்து ஓயா அருகே நின்ற ஒருவர், குறித்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதையடுத்து உள்ளூர்வாசிகளின் உதவியுடன், பெண்ணை மீட்டு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் உயிர்காப்பாளர் பிரிவு இரண்டு குழந்தைகளையும் தேடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
குருந்துவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி, பரகல கீழ் பிரிவு தோட்டப் பகுதியில் கடந்த மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட மண்சரிவு மற்றும் கற்பாறைகள் சரிந்து விழுந்த அனர்த்தத்தில், கற்பாறைகள் மற்றும் மண்மேடு சரிந்து விழுந்த பகுதியில் இருந்து இதுவரையிலும் 08 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இன்றைய தினமும் (02) ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளதோடு, மேலும் 05 பேரைக் காணவில்லை எனவும், இவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குருந்துவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோட்டத்தைச் சேர்ந்த 65 குடும்பங்களைச் சேர்ந்த 250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் லயன் குடியிருப்பைச் சேர்ந்த 13 வீடுகள் முழுமையாக மண்ணில் புதையுண்டுள்ளன.
மீட்கப்பட்ட சடலங்கள் மண்சரிவு ஏற்பட்ட பகுதியின் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்த விபத்தின் காரணமாகத் தமது உடமைகள் அனைத்தும் மண்ணில் புதையுண்டுள்ளதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை, மண்ணில் புதையுண்டவர்களை மீட்பதற்கு இராணுவத்தினரோ அல்லது பொலிஸாரோ குறித்த பகுதிக்கு வரவில்லை எனவும், கடந்த இரண்டு நாட்களாக மக்களே தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பிரதேச செயலகத்தின் ஊடாகச் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உயிரை மாய்த்துக்கொள்வதற்காக மல்வத்து ஓயாவில் குதித்த ஒரு தாயையும் இரண்டு குழந்தைகளையும் கண்டுபிடிக்க அனுராதபுரம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
உள்ளூர்வாசிகள் மற்றும் உயிர் காப்பாளர் குழுவின் உதவியுடன் தாய் மீட்கப்பட்ட நிலையில் இரண்டு குழந்தைகளையும் கண்டுபிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மொரட்டுவையைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தாயான 40 வயதுடைய ஒரு பெண் தனது 4 வயது மற்றும் 8 வயதுடைய குழந்தைகளுடன் இன்று (02) காலை அனுராதபுரம் நகரத்திற்கு அருகிலுள்ள மல்வத்து ஓயாவில் குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருப்பதாகவும், குடும்ப தகராறு காரணமாக இவ்வாறு உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
மல்வத்து ஓயா அருகே நின்ற ஒருவர், குறித்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதையடுத்து உள்ளூர்வாசிகளின் உதவியுடன், பெண்ணை மீட்டு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் உயிர்காப்பாளர் பிரிவு இரண்டு குழந்தைகளையும் தேடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
நாடு சீரடைந்துவரும் நிலையில் தேவையற்ற செயற்கை தட்டுபாடுகளை ஏற்படுத்தவேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அருள்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேவையற்ற வகையில் பெற்றோலை சேகரிக்கும்போது அது அத்தியாவசிய தேவையாகவுள்ளவர்களின் செயற்பாடுகளை பாதிக்கும் நிலையேற்படும் எனவும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் போலியாக பரவிவரும் செய்திகளைக் கொண்டு மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளில் நிற்பதை காணமுடிகின்றது.
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுத்துவதாக சிலர் போலியாக தெரிவித்துவரும் கருத்துகளைக்கொண்டு மட்டக்களப்பில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளை காணமுடிகின்றது.
முச்சக்கர வண்டிகளும் மோட்டார் சைக்கிள்களும் அதிகளவில் வரிசையில் நின்று எரிபொருளை பெறுவதன் காரணமாக அவசரத்தேவைக்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வருவோர் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதை காணமுடிகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தேவையான எரிபொருட்கள் கையிருப்பில் உள்ள நிலையில் பொதுமக்கள் எந்த அச்சமும் கொள்ளத்தேவையில்லையென மாவட்ட அரசாங்க அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
இலங்கையின் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பல மாவட்டங்கள் நிர்மூலமாகி உள்ளன. இதில் பதுளை மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்புகளும் அதிரித்துள்ளன.
இந்நிலையில் பதுளை மாவட்டத்தை மீள கட்டியெழுப்பும் நோக்கில் மாத்தறையில் இருந்து குழுவொன்று வருகை தந்துள்ளது. சுமார் 826 பொது மக்கள் ஒன்றுகூடிய பதுளையை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
புனரமைப்பு பணிகளுக்கு தேவையான இயந்திரங்களும் உபகரணங்களும் மக்களால் கொண்டு வரப்பட்டுள்ளன.
அகழ்வாராய்ச்சியாளர்கள் குழுவுடன் பேக்கோ லோடர்கள், செயின்சாக்கள், தண்ணீர் பவுசர்கள், சுத்தப்படுத்தும் உபகரணங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன.
ஏற்கனவே சிவனொலிபாதமலையை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் அரச ஊழியர் குழுவொன்று ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கண்டி, உடத்தல, நெலும்மல பகுதியில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 13 குடும்பங்களை சேர்ந்த 31 பேரின் இறுதிச்சடங்குகள் நடைபெற்றுள்ளன.
கண்டி, உடத்தல, நெலும்மல பகுதியில் கடந்த 27 ஆம் திகதி பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த 31 பேர் உயிரிழந்திருந்தனர்.
எதிர்பாராத தருணத்தில், சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு மலை உச்சியில் இருந்து ஒரு பெரிய மண் மேடு சரிந்து சிறிய கிராமத்தை முழுமையாக மூடியிருந்தது.
அழகான நெல் வயலின் நடுவில் அமைந்திருந்த இந்த கிராமத்திற்கு மேலே அமைந்திருந்த யஹங்கல மலைத்தொடரும், நக்கிள்ஸ் மலைத்தொடரின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்துள்ளது.
இதனையடுத்து குறித்த பகுதியில் தொடர்ச்சியாக மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் 31 பேர் சடலங்களாக மீட்கப்பட்டு பலரை தேடும் பணி தொடர்ந்து வருகின்றது.
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பரீட்சைகள் 2026 ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். எனினும், திகதிகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
அதேநேரம், பேரிடர்களால் பாதிக்கப்படாத மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களின் பாடசாலைகள் டிசம்பர் 16 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பேரிடர்களால் பாதிக்கப்படாத பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வியியற் கல்லூரிகள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்கள் டிசம்பர் 8 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.
இலங்கை விமானப்படையின் பெல் 212 ஹெலிகொப்டரின் தலைமை விமானியான விங் கொமாண்டர் நிர்மல சியம்பலாபிட்டிய லுனுவில பகுதியில் விமானத்தை அவசரமாக தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளார்.
அவரது சிறப்பான சேவையை அங்கீகரிக்கும் விதமாக, 2025 நவம்பர் 30 முதல் விங் கொமாண்டர் பதவிநிலையிலிருந்து குரூப் கேப்டன் பதவி நிலைக்கு பதவி உயர்த்தப்பட்டார்.
அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 2025 டிசம்பர் 02, மாலையில் இரத்மலானை இல்லத்திற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அவரது இறுதிச் சடங்குகள் விமானப்படையின் முழு மரியாதையுடன் எதிர்வரும் 2025 டிசம்பர் 04ஆம் திகதி நடைபெறும்.
மஹவ – நாகொல்லாகம வீதியில் விஹேனேகம சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (02.12.2025) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதிக வேகத்தில் பயணித்த வேன் ஒன்று, சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் வேனின் சாரதியும், சைக்கிளில் பயணித்த இருவரும் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சைக்கிளில் பயணித்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டில் ஏற்பட்ட கடும் மழை காரணமான கந்தப்பளை – சந்திரிகாமம் பகுதியில் காணாமல் போன குடும்பங்களைத் தேடி தற்போது இராணுவம் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
தாய், இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு குழந்தைகளின் பாட்டி ஆகியோரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
மண்ணுக்குள் வீடு
நுவரெலியா சிங்கப் படையணியைச் சேர்ந்த படையினர் நேற்று (01) முதல் தேடுதல் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த 27ஆம் திகதி மதியம் குறித்த பகுதியில் பெய்த பலத்த மழையினால் இந்த வீடு மண்ணுக்குள் புதையுண்டதாகவும், அந்த நேரத்தில் அவர்கள் அனைவரும் வீட்டினுள் இருந்ததாகவும் பிரதேசமக்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் ஏற்பட்ட கடும் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் அப்பாவி பொதுமக்கள் பெரும் உயிர் மற்றும் சொத்து இழப்பை சந்தித்துள்ளனர் என சமூக ஊடகவலைத்தள பதிவொன்றில் தகவல் வெளியாகியுள்ளது.
உலக புகழ்பெற்ற வானிலை நிறுவங்கள், அதாவது AccuWeather, BBC Weather மற்றும் Al Jazeera, முறையான முன்கூட்டிய எச்சரிக்கைகளை 10, 12 மற்றும் 14 நவம்பர் ஆகிய நாட்களில் வெளியிட்டன.
இதற்கு இணையாக, இலங்கை வானிலை அவதானிப்பு மைய பணிப்பாளர் மற்றும் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா உட்பட பல துறை சார்ந்த நிபுணர்கள் தொடர்ச்சியான எச்சரிக்கைகளை வழங்கி, அவசரகால தயார்நிலை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவையை வலியுறுத்தினர்.
ஆனாலும், நாட்டின் நிர்வாகம் முறையான முன்னேற்பாடுகளை எடுக்கவில்லை. 26 நவம்பருக்குள் மழை உக்கிரமடைந்த போதும், ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்க நேரலைக்கு தலைமை தாங்க தயாராக இல்லாமல், திரைப்பட துறை சார்ந்த செயற்பாடுகளில் நேரத்தை செலவழித்தார்.
தேசிய பேரிடர் முகாமைத்துவ சபை (NCDM) செயலாற்றாமையால், பேரிடர் சம்பவத்திற்கு பிறகு மூன்று நாட்கள் வரை மாவட்ட அரசும், அங்கு சார்ந்த நிறுவனங்களும் உடனடி நிதி உதவிகளை விடுவிக்க முடியாமல் தடுமாறினர்.
இதனால் பாதிக்கப்பட்டோர் 48 மணி நேரத்திற்கு மேல் உணவுத் தங்குமிடம், மருத்துவ உதவி போன்ற அடிப்படை தேவைகள் கூட பெற முடியாமல் தடுமாறினர்.
நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் வெளியேற்ற நடவடிக்கைகள் திட்டமிடப்படாததால், மழை பெருக்கம் பல இடங்களில் உயிர் மற்றும் சொத்து இழப்புகளை அதிகரித்தது.
இதுபோன்ற நிர்வாக மந்தத்திற்கும், அதனால் ஏற்படும் பேரழிவிற்கும் காரணமாக, சமூக வலைத்தளங்களில் மற்றும் நாடாளுமன்ற விவாதங்களில் அரசின் செயல்திறன் குறித்து கேள்விகள் எழுகின்றன.
Disaster Management Centre (DMC) கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தாலும், ஆண்டுதோறும் நிகழும் இயற்கை பேரிடர்களில் மாற்றம் ஏற்படவில்லை என சமூக வலைத்தளங்கள் குறிப்பிட்டுள்ளன.
மலையக மக்களுக்கு மிகப்பெரும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த இயற்கை பேரிடர்களில், நிர்வாக மந்தத்தால் ஏற்படும் பேரழிவுகள் தொடர்ச்சியாக நிகழ்வதால் நாட்டின் இயற்கை மற்றும் சமூக பாதுகாப்பு குறித்து முக்கிய அச்சங்கள் எழுந்துள்ளன என இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் நிழவும் சீரற்ற காலநிலையையும் பொருட்படுத்தாமல் சுகாதார துறை சார்ந்தவர்கள் செய்யும் செய்யும் அர்பணிப்புகள் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.
தன் உயிரையும் பொருட்படுத்தாது கடும் வெள்ள பெருக்கிற்கு நடுவில் நடந்து சென்று சேவை செய்யும் இவ்வாறான பணியாளர்களை போற்ற வேண்டும்.
இலங்கையில் தாய்–சிசு மரண வீதம் உலகின் பெருவளர்ச்சியடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அளவில் குறைவாக இருப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று இவர்களின் அர்ப்பணிப்பு,
நெகிழ்வான சேவை மற்றும் தொடர்ச்சியான தாய்க் கவனிப்பே என சுகாதார துறை வலியுறுத்துகிறது.
மேலும், பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கைக் குழந்தைகள் ஆரோக்கியத்திலும், போசாக்குத்தன்மையிலும் முன்னிலை வகிப்பதற்கும் நடுவிளைப்பெண்கள் வழங்கும் மடிமுதல் பராமரிப்பு, வீட்டுக்குச் செல்லும் சுகாதார கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு செயல்பாடுகள் பெரும் பங்காற்றுகின்றன.
ஒரு தாய் கர்ப்பம் முதல் பிரசவம் வரை அனுபவிக்கும் சவாலான பயணத்தில், அவர்களின் பாதுகாப்பையும், குழந்தையின் நலத்தையும் உறுதி செய்யும் இவர்கள் சுகாதார அமைப்பின் அடித்தள வீராங்கனைகள் என்பதில் ஐயம் இல்லை.
நாடு முழுவதும் குடிநீா் போத்தல்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிகரித்துள்ள தேவை அளவிற்கு நீர் போத்தல்களை வழங்க முடியாததற்கான முக்கியக் காரணம் வெற்று பிளாஸ்டிக் போத்தல்களின் தட்டுப்பாடு என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சீரற்ற காலநிலை பாதிப்புகள் காரணமாக நாட்டில் குடிநீர் போத்தல்களை நிரப்பும் பெரும்பாலான தொழிற்சாலைகளின் செயற்பாடுகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும் வெற்று போத்தல்களை களஞ்சியப்படுத்துவதற்கு அதிக இடவசதி தேவைப்படுவதால், ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களுக்கு தேவையான போத்தல்கள் மட்டுமே கையிருப்பில் வைக்கப்படுகின்றன.
இலங்கையில் மல்வான,பியகம, யக்கல மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் உள்ள முக்கிய உற்பத்தி மையங்கள் அனைத்தும் செயலிழந்துள்ளன.
இவை மீண்டும் இயக்கப்படும்வரை, சிறிய அளவிலான உற்பத்தியாளர்களினால் சந்தை தேவையை பூர்த்தி செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுற்றுலா ஹோட்டல்கள் உள்ளிட்ட எப்போதும் நீர் பாட்டில் விநியோகம் பெறும் நிறுவனங்களுக்கு கூட இப்போதெல்லாம் விநியோகத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீரை வழங்கும் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் சில மீட்பு மையங்களுக்கு அணுகுதல் எளிதாக இருப்பதால் அந்த இடங்களுக்கு அதிக அளவில் போத்தல்கள் கிடைக்கின்றன என்றும்,
அணுகல் கடினமான பகுதிகளுக்கு நீர் விநியோகத்தை ஏற்பாடு செய்ய சிறப்பு முறைகள் தேவைப்படுகின்றன என்றும் உற்பத்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
அவர்கள் மேலும் கூறியதாவது, வெள்ள நிலைமை சீராகும் வரை இந்த தட்டுப்பாட்டை சமாளிக்க வேண்டியிருக்கும் எனவும், நிலைமைக்கு ஏற்ப நடவடிக்கைகள் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.