செயற்கை நுண்ணறிவு மூலம் தனது உருவத்தையும் குரலையும் தவறாகப் பயன்படுத்துவது தொடர்பான மோசடி குறித்து இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான குமார் சங்கக்கார சமூக ஊடகங்களில் ஒரு பதிவில், மோசடி செய்பவர்கள் தனது அனுமதியின்றி தனது சாயலைக் கொண்ட போலி விளம்பரங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்க AI ஐப் பயன்படுத்துவதாக சங்கக்கார கூறினார்.
இந்த மோசடி விளம்பரங்களில் விளம்பரப்படுத்தப்படும் தயாரிப்புகளுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அவர் வலியுறுத்தினார்.
அதேநேரம், முன்னாள் தேசிய கிரிக்கெட் அணியின் தலைவர், தனது ரசிகர்களை இந்த AI-உருவாக்கப்பட்ட வீடியோக்களை நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் இணையவழி குற்றங்கள் தொடர்பில் 5,400க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவின் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல இது தொடர்பில் தெரிவிக்கையில்,
முகநூல் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் ஊடாக இடம்பெறும் மோசடி மற்றும் வன்முறைச் செயல்கள் தொடர்பான முறைப்பாடுகளில் கணிசமான உயர்வு காணப்படுகிறது.
பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.
சமூக ஊடகங்களில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்படும் விளம்பரங்கள் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வவுனியா ஈரப்பெரியகுளம் வேரகம பகுதியில் பரவிய திடீர் தீ இன்று (25.07.2025) காலையுடன் முற்றிலுமாக அணைக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை ஏற்பட்ட இந்த தீ, தற்சமயம் அப்பகுதியில் நிலவும் கடுமையான வறண்ட வானிலை காரணமாக குறுகிய காலத்தில் பரவியது.
இந்த தீயினால் ஒரு பெரிய நிலப்பரப்பின் காடுகள் மற்றும் இயற்கை சூழல் சேதமடைந்துள்ளது. வவுனியா பகுதியில் பல மாதங்களாக கடுமையான வறண்ட வானிலை நிலவி வருகிறது.
எனவே, பொறுப்பற்ற முறையில் தீ வைக்க வேண்டாம் என்று பேரிடர் மேலாண்மை மையம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.
வவுனியா ஒமந்தை கிராம அலுவலகர் பிரிவுக்குட்பட்ட அரசமுறிப்பு கிராமத்தில் நேற்றையதினம் (24.07.2025) இளைஞன் ஒருவர் நஞ்சருந்தி மரணமடைந்துள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த கிராமத்தில் வசிக்கும் 18வயதுடைய கெ.சிவரஞ்சன் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவர். சடலம் பிரதேச பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இளைஞனின் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஒமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியாவடக்கு கரப்புக்குத்தி பகுதியில் இரண்டு யானைகள் கிணற்றில் வீழ்ந்தநிலையில் ஒரு யானை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன் மற்றய யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
குறித்த பகுதியில் அமைந்துள்ள விவசாய கிணறு ஒன்றில் யானைகள் தவறி வீழ்ந்துள்ளதாக அந்த பகுதியை சேர்ந்த கிராமசேவகருக்கு இன்று காலை தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கிராமசேவகரால் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும் பொலிசாருக்கும் உடனடியாக தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற வனஜீவராசிகள் திணைக்களத்தினர் பெரும் சிரமத்திற்கு மத்தியில் ஒரு யானையினை மீட்டுள்ளனர். மற்றய யானை நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அதன் சடலம் மீட்கப்பட்டது.
குறித்த இரு யானைகளும் ஒன்றன்பின் ஒன்றாக கிணற்றுக்கள் வீழ்ந்தமையால் ஒரு யானை சேற்றில் புதையுண்டு உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
அம்பாறை, பதியதலாவ காதலியின் கழுத்தை அறுத்து கொல்லப்பட்டமை தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
மரங்கல பகுதியில் நேற்று அதிகாலை வீட்டிற்குள் நுழைந்த இளைஞன் வீட்டில் இருந்த தனது 22 வயது காதலியின் கழுத்தை அறுத்து, அவரது தாயையும் தந்தையையும் பலத்த காயப்படுத்தி, பின்னர் தனது கழுத்தை அறுத்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
பெண் தனது மூன்று வருட உறவை முறித்துக் கொண்டதால் கோபமடைந்த காதலன் இந்தக் குற்றத்தைச் செய்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
காதலனால் கத்தியால் குத்தப்பட்டவர் 22 வயதுடைய டி.எம். சரோஜா உதயங்கனி என தெரியவந்துள்ளது. மேலும் தாக்குதலுக்குள்ளான 62 வயதுடைய தந்தை மற்றும் 60 வயதுடைய தாயார், மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணான சரோஜா, மொனராகலையை சேர்ந்த இளைஞனுடன் சுமார் மூன்று ஆண்டுகளாக காதல் உறவில் இருந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த இளைஞன் சரோஜாவுக்கு பணம் மற்றும் பல்வேறு வழிகளில் உதவி செய்து, அவரை திருமணம் செய்து கொள்ள எதிர்பார்த்திருந்ததாக தெரியவந்துள்ளது.
எனினும் சில காலத்திற்கு முன்பு, சரோஜா அந்த இளைஞனுடன் கொண்டிருந்த காதல் உறவை நிறுத்தியுள்ளார். அவருடைய பெற்றோரும் அந்த இளைஞனை எதிர்த்தனர். இதன் காரணமாக, அந்த இளைஞன் சரோஜா மீதும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீதும் கடும் வெறுப்பைக் கொண்டிருந்தார்.
இளைஞனின் மிரட்டல் காரணமாக சரோஜாவுக்கு கொழும்பில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் வேலைக்குச் சென்றிருந்தார். இந்த நிலையில் சரோஜா வேறொரு இளைஞனுடன் புதிய காதல் உறவைத் ஏற்படுத்தியதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சரோஜா 3 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் பதியதலாவாவில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பியிருந்தார். தனது காதலி வீடு திரும்பியதை அறிந்த இளைஞன், நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.
சரோஜா அதிகாலை 2.30 மணியளவில் கொழும்புக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில், கூர்மையான ஆயுதத்துடன் இளைஞன், முதலில் வீட்டிற்குள் நுழைந்து சரோஜாவின் கழுத்தை அறுத்துள்ளார். பின்னர் வீட்டில் இருந்த அவரது பெற்றோரை கத்தியால் குத்தி காயப்படுத்திவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
இளைஞனால் கத்தியால் குத்தப்பட்ட இளம் பெண், வீட்டை விட்டு வெளியே ஓடி உறவினர் வீட்டிற்குச் சென்று அங்கு உயிரிழந்துள்ளார். வீட்டை விட்டு தப்பிச் சென்ற இளைஞன், கூர்மையான ஆயுதத்தால் தனது கழுத்தை அறுத்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
மொனராகலையில் இருந்து தனது காதலியின் வீட்டிற்கு அந்த இளைஞன் வந்த மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டின் கல்வி கட்டமைப்பு முழுமையாக சீர்த்திருத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்திற்கு வருகை தந்து கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், பாடசாலை கட்டமைப்பில் பல சிக்கல்கள் காணப்படுகின்றது. ஒரு ஆசிரியருக்கு 18 மாணவர்கள் இருக்கின்றார்கள் . இது ஒரு நல்ல நிலையாக இருந்தாலும் அதை ஏற்க முடியாத நிலை தற்போது எழுந்துள்ளது.
எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் கல்வி முறைமை பற்றி கவனம் செலுத்தியுள்ளோம். பொருளாதார, கல்வி மறுசீரமைப்பு தேவைப்படுகின்றது.
அதிகமானவர்கள் கலந்துரையாடுகின்றார்கள் கேள்வியெழுப்பியுள்ளீர்கள் இதற்கு பதிலளிக்க நான் கடமைபட்டுள்ளேன். இது வெறுமனே பாடவிதான மாற்றம் அல்ல ,மொத்த சமூகத்தையும் பொருளாதார கட்டமைப்பை நோக்கிய மாற்றம் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
சனத்தொகை பெறுமானத்தில் 38ஆவது இடத்தில் இலங்கை இருக்கின்றது. இது சீனாவை விட அதிகம். எமது நாட்டில் இயற்கை வளம் இருந்தாலும் வணிக ரீதியாக எதுவும் பெரிதாக இல்லை.
ஆகவே, மனித வளத்தை அதிகரிக்க அதிக கவனம் செலுத்த வேண்டும். அறிவானர்கள் வறுமையாகவும் அறிவிலிகள் வசதியாகவும் இருக்கின்றார்கள். இந்த முறை மாற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
திஸ்ஸ – மாத்தறை பிரதான வீதியில் அம்பலாந்தோட்டை லுணம எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று புதன்கிழமை (23.07) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் முச்சக்கரவண்டி ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் முச்சக்கரவண்டி சாரதியும் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மயிலம்பாவெளி பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை (24.07.2025) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 28 வயதுடைய இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்றைய தினம் அதிகாலை 03 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு நகரில் இருந்து ஏறாவூர் நோக்கிப் பயணித்த கார் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த கொங்கிரிட் தூணில் மோதியதில் இந்தவிபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சமபவ இடத்திலேயே உயிரிழந்துள்ளாதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இளைஞன் ஏறாவூர் பகுதியில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு சென்று தனது நண்பனை வீட்டில் விட்டுவிட்டு , மீண்டும் ஏறாவூர் நோக்கி சென்றுகொண்டிருந்த வேளையிலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த இளைஞனின் சடலம் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் , மட்டக்களப்பு திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.நசீர் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை அயனாவரம் பகுதியில் வசித்து வருபவர் 38 வயது சதீஷ். அவரது மனைவி 32 வயது ரெபெகா. இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுடைய மகள் ஸ்டெபி ரோஸி. சதீஷுக்கும் அவரது மனைவி ரெபேகாவுக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்ட நிலையில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களுக்கான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் ஓராண்டிற்கு முன்பு மனைவியை தாக்கியதாக சதீஷை போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.
சிறையில் இருந்து வெளியே வந்த சதீஷ், மனைவி ரபேகாவிடம் தொடர்ந்து பிரச்சனை செய்து வந்தார். கடந்த 2 நாள்களுக்கு முன்பு மீண்டும் மனைவியுடன் சதீஷ் தகராறில் ஈடுபட்டது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் இருவரும் இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என போலீசார் அவர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில் தனது 7 வயது குழந்தை ஸ்டெபி ரோஸியை சதீஷ்குமார் அழைத்து சென்று ஆலந்தூரில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளார். புதன்கிழமை காலை சதீஷ் தங்கி இருந்த அறையில் இருந்து ஸ்டெபி கழுத்தறுத்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
சதீஷ் கழுத்தறுக்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து போலீசார் உயிரிழந்த குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சதீஷை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரின் மனைவி ரெபெகாவிடமும், அவரது குடும்பத்தாரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரேத பரிசோதனைக்கு பிறகு குழந்தையின் உடல் தாயிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் ஓட்டேரியில் சிறுமியின் உடல் வைக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் கொலைக்கு காரணமாக இருந்த குழந்தையின் தந்தை சதீஷ் மற்றும் அவருடைய தாயாரை போலீசார் இதுவரை கைது செய்யவில்லை எனக்கூறியும்,
உடனடியாக அவர்கள் இருவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி குழந்தையின் சடலத்தை வைத்து உறவினர்கள் ஓட்டேரியில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சதீஷ் தாய் ரெபேகாவை மிரட்டிய ஆடியோவும் வெளியாகி அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட்டில் எப்படியாவது பிரபலமாகி விட வேண்டும் என்பதற்காக படு கவர்ச்சியான உடைகளை அணிந்துக் கொண்டும் வித்தியாசமாக ஆடைகளை அணிந்து வலம் வருபவர் தான் உர்ஃபி ஜாவேத்.
இவர் புகைப்படங்களை வெளியிடுவது மட்டுமின்றி சினிமா நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொண்டு அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து நினைத்ததை போலவே சில வருடங்களில் பிரபலமாகி விட்டார்.
தற்போது அவரை 5.3 மில்லியன் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்து இன்ஸ்டாகிராம் செலிபிரிட்டியாகவே மாறிவிட்டார். அமேசான் பிரைமில் தனது வாழ்க்கை குறித்த டாக்குமெண்டரி ஷோவையும் வெளியிட்டு பிரபலமானார்.
இந்நிலையில், உதட்டில் ஊசிப்போட்டு தனது லிப் ஃபில்லரை நீக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் உறையவைத்து இருக்கிறார் உர்ஃபி ஜாவேத்.
மாடலிங் துறையில் கலக்க வேண்டும் என்பதற்காகவும், பாலிவுட்டில் கொடி கட்டிப் பறக்க வேண்டும் என்பதற்காக வீட்டை விட்டு மும்பைக்கு ஓடி வந்த உர்ஃபி ஜாவேத் தனது 18 வயதிலேயே உதட்டில் லிப் ஃபில்லரை போட்டுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், அது சரியாக இல்லை என்றும் 9 ஆண்டுகள் கழித்து அதனை நீக்க முடிவு செய்த நிலையில், உதட்டில் ஊசிப்போட்டு அதன் மூலம் தனது லிப் ஃபில்லரை நீக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் உர்ஃபி ஜாவேத். ஆரம்பத்தில், தெரியாத்தனமாக ஒரு டாக்டரிடம் வாயை கொடுத்த நிலையில், ஒழுங்காகவே லிப் ஃபில்லரை வைக்கவில்லை.
அதன் காரணமாகவே நல்ல டாக்டரை தேடிப் பிடித்து தற்போது ஒட்டுமொத்தமாக லிப் ஃபில்லரை நீக்கிவிட்டு இயற்கையான அழகுடன் இருக்கலாம் என முடிவு செய்துவிட்டேன் எனக் கூறியிருக்கிறார் உர்ஃபி ஜாவேத்.
லிப் ஃபில்லரை நீக்கிய உடனே இதுபோன்ற பக்க விளைவுகள் ஏற்படும் என்பதையும் அப்படியே வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார் உர்ஃபி ஜாவேத். அந்த வீடியோவில் அவரது உதடு எல்லாம் வீங்கிப்போய், முகமெல்லாம் வீக்கத்துடன் சிவந்து போய்விட்டது.
கூடிய சீக்கிரமே அனைத்தும் சரியாகி புதிய தோற்றத்துடன் சந்திக்கிறேன் எனக் கூறியுள்ளார். இதுபோன்ற வீடியோவை வெளியிட உண்மையாகவே உர்ஃபி ஜாவேத்துக்கு தைரியம் வேண்டும் என்றும் சீக்கிரமாகவே இயற்கை அழகுடன் திரும்பி வாங்க என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டுள்ளனர்.
லிப் ஃபில்லருக்கு தான் எதிரி கிடையாது என்றும் நல்ல மருத்துவர்களை தேடிப் பிடித்து செய்யவில்லை என்றால் ஏகப்பட்ட பின் விளைவுகளை ச்ந்திக்க நேரிடும் என்றும் உர்ஃபி தனது சொந்த அனுபவத்தை ஷேர் செய்துள்ளார்.
யாழ்ப்பாணம் , காங்கேசன்துறை வீதி, தாவடியில் அமைந்துள்ள மதுபானசாலை முன்பாக நேற்று (23) இடம்பெற்ற தாக்குதலில் படுகாயமடைந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சுதுமலை மத்தி, மானிப்பாயைச் சேர்ந்த 45 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், மதுபோதையில் இருந்த இருவருக்கிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது.
இந்நிலையில் கூரிய ஆயுதத்தால் குறித்த நபர் மீது தாக்குதல் நடாத்திவிட்டு சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் விசேட அதிரடிப் படையினர் இணைந்து குறித்த நபரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ரம்புட்டான் மரங்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக, வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ரம்புட்டான் மரங்களை விலங்குகளிடமிருந்து பாதுகாக்கச் சிலர் மின்சாரக் கம்பிகளை இடுவதால் இந்த விபத்துக்கள் ஏற்படுவதாக, கொழும்பு தேசிய மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் விசேட அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் விராஜ் ரோஹண அபேகோன் தெரிவித்தார்.
அதன்படி, கொழும்பு தேசிய மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் தற்போது பலர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிறுவர்களுக்கு ரம்புட்டானை ஊட்டும்போது பெற்றோர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்று அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யாவின் கபரோவ்ஸ்கிலிருந்து டைண்டா சென்ற An -24 வானூர்தி ஒன்று வீழ்ந்து நொறுங்கியுள்ளது. இதன்போது, வானூர்தியில் பயணித்த எவரும் உயிர் தப்பியிருக்க வாய்ப்பில்லை என்று ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அமூர் மாகாணம் அருகே திண்டா நகரத்தை நோக்கிச் ஒரு பயணிகள் விமானம் சென்றுகொண்டிருந்தது.இந்த விமானத்தில் 5 குழந்தைகள் உட்பட மொத்தம் 49 பேர் பயணம் செய்துகொண்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த விமானம் திண்டா விமான நிலையத்தை நெருங்கும் வேளையில், விமானக் கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது.
மேலும் திடீரென ரேடாரிலிருந்து அந்த விமானம் காணாமல்போனதால் விமான நிலைய ஊழியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குழப்பத்தில் இருந்தனர்.
இதையடுத்து, இந்த சம்பவம் உறுதியானதும், ரஷ்யாவின் அவசரநிலை சேவைத் துறை மற்றும் விமானப் பாதுகாப்புத் துறைகள் இணைந்து தீவிர தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
மேலும், Mi-8 ரக ஹெலிகாப்டர் காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
கடன் அட்டை அல்லது டெபிட் அட்டைகளை பயன்படுத்தி செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து 2.5 சதவீத கூடுதல் கட்டணத்தை வசூலிக்க சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படவில்லை என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அட்டை செலுத்தும் இயந்திரத்தை பெறும்போது வணிகர்களுக்கும் வங்கிகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் கீழ், கூடுதல் கட்டணத்தை வாடிக்கையாளரிடம் அறிவிட முடியாது என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
பட்டியலிடப்பட்ட விலையை விட அதிகமாக ஒரு வணிகர் வசூலித்தால், வாடிக்கையாளர்கள் உடனடியாக தங்கள் அட்டை வழங்கும் வங்கிக்கு தெரிவிக்க வேண்டும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.
சில கடைகள் மற்றும் சேவை வழங்குநர்கள் அட்டை செலுத்தும் கட்டணங்களுக்கு கூடுதல் கட்டணங்களை வசூலிப்பதாக வாடிக்கையாளர்களிடமிருந்து அதிகரித்து வரும் முறைப்பாடுகளை அடுத்து மத்திய வங்கி இதனை தெளிவுப்படுத்தியுள்ளது.
ஏர் இந்தியா விமான விபத்தின் பின்னர், விபத்து தொடர்பான அறிக்கை வெளியான போதும், அந்த விமான விபத்து தொடர்பில் தொடர்ந்தும் சர்ச்சைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
குறித்த விபத்தில் கொல்லப்பட்டவர்களின் உடலங்கள் சிதைந்து போயிருந்த நிலையில், அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எச்சங்கள் தொடர்பில் தற்போது சர்ச்சை எழுப்பப்பட்டுள்ளது.
அந்தவகையில் கொல்லப்பட்ட பெண் ஒருவர் எனக்கூறி அவருடைய மகனுக்கு அனுப்பப்பட்ட எச்சங்கள் வேறு ஒருவருடையது என்று லண்டனில் வசிக்கும் ஒருவர் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். இதற்கு இந்திய அரசாங்கம் பொறுப்புக்கூறவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
அகமதாபாத் விமான விபத்தில், தமது தந்தையும் தாயும் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்கள் என்று கூறப்படும் எச்சங்கள், குறித்த மகனுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
எனினும் அதில் தமது தாயின் சடல எச்சங்கள் வேறு ஒருவரின் எச்சங்கள் என்ற அவருடைய மகன் குற்றம் சுமத்தியுள்ளார்.
முன்னதாக உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட ஒருவரின் எச்சங்களில் பலரின் எச்சங்கள் உள்ளடக்கப்பட்டிருந்த முறைப்பாடு ஒன்றும் பதிவாகியுள்ளது.
இங்கிலாந்து அரசாங்கம் இது தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளது. எனினும் அனைத்து எச்சங்களும் மிகவும் தொழில்முறை கண்ணியத்துடன் கையாளப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது,