சாரதிகளின் கண்களில் மிளகாய் பொடி தூவி முச்சக்கரவண்டிகள் கொள்ளை : பெண் உட்பட இருவர் கைது!!

பல்வேறு பிரதேசங்களில் சாரதிகளின் கண்களில் மிளகாய் பொடியை தூவி முச்சக்கரவண்டிகளை கொள்ளையிட்டு வந்த பெண் உட்பட மூவர் கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று திங்கட்கிழமை (21.07.2025) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் கஹடுதுவை – பொல்கஸ்ஸோவிட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேக நபர்கள் இருவரும் பல்வேறு பிரதேசங்களில் முச்சக்கரவண்டிகளை கொள்ளையிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவரது மனைவி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர்கள் கலவானை மற்றும் கஹதுடுவை ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 24 மற்றும் 27 வயதுடைய இரண்டு ஆண்களும் 29 வயதுடைய பெண்ணும் ஆவர்.

சந்தேக நபர்கள் மூவரும் கஹதுடுவை, பொரலஸ்கமுவ , மொரகஹஹேன ஆகிய பிரதேசங்களில் சாரதிகளின் கண்களில் மிளகாய் பொடியை தூவி முச்சக்கரவண்டிகளை கொள்ளையிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கொள்ளையிடப்பட்ட 4 முச்சக்கரவண்டிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

சந்திரனிலிருந்து எடுத்து வரப்பட்ட மண் : கொழும்பில் பார்வையிடலாம்!!

சந்திரனில் இருந்து எடுத்து வரப்பட்ட மண் மற்றும் பாறைகளின் மாதிரிகளை நேற்று (21.07.2025) தொடக்கம் கொழும்பில் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய சுவடிக்கூடத் திணைக்களத்தின் இயற்கை விஞ்ஞான நூதனசாலையில் அதற்கான பார்வைக் கூடம் திறக்கப்பட்டுள்ளது.

1969ஆம் ஆண்டு ஜுலை 21ஆம் திகதி நிலவில் முதல் மனிதராக நீல் ஆம்ஸ்ட்ரோங் காலடியெடுத்து வைத்த போது எடுத்து வரப்பட்ட மண் மற்றும் பாறைகளின் மாதிரிகளே இவ்வாறு காட்சிப்படுத்தப்படவுள்ளன.

தேசிய நூதனசாலையில் மிக விரைவில் சந்திரன் மற்றும் நிலவுக்கான மனிதர்களின் பயணம் குறித்த விபரங்கள் உள்ளடங்கிய காட்சிக் கூடம் ஒன்றும் இன்னும் ஓரிரு மாதங்களில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியும் நவீன தொழில்நுட்பம் சார்ந்த ஆர்தர் சி கிளார்க் நிலையத்தின் தலைவருமான பேராசிரியர் சந்தன ஜயரத்ன மற்றும் தேசிய நூதனசாலையின் பணிப்பாளர் சனோஜா கஸ்தூரிஆரச்சி ஆகியோர் இணைந்து இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

 

15 வயது மாணவியை தூக்கிச் சென்று உயிரோடு தீ வைத்து எரித்த இளைஞர்கள்!!

ஒடிஷா மாநிலத்தின் பூரி மாவட்டம் நிமபாடா தெஹ்ஸிலில் உள்ள பயாபர் பகுதியில், 15 வயது மாணவி ஒருவர் அடையாளம் தெரியாத 3 இளைஞர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை 8:30 மணிக்கு அந்த சிறுமி தனது தோழியிடம் புத்தகங்களை வழங்க சென்று கொண்டிருந்த போது இந்த கொடூரமான சம்பவம் நடந்தது.

பார்கவி நதி சாலையில் உள்ள வெறிச்சோடிய பகுதியில் 3 இளைஞர்கள் சிறுமியை கடத்திச் சென்று, தூக்கி வைத்து தீ மூட்டியதாக தெரிகிறது.

இந்த கொடூர தாக்குதலில் சிறுமியின் கைகள், கால்கள் மற்றும் உடலின் பல பகுதிகள் தீக்காயங்களால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தின் போது மாணவியின் அலறல் சத்தத்தை கேட்டு மக்கள் விரைந்து சென்று தீயை அணைத்து, முதலில் பிபிலி CHC மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தற்போது சிறுமி புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்துள்ளார். இவ்வளவு மோசமான தாக்குதல் நடந்தாலும் இது வரை ஒருவரும் கைது செய்யப்படவில்லை. இச்சம்பவம் பலங்கா காவல் நிலையத்திலிருந்து வெறும் 1.5 கி.மீ தூரத்தில் நடந்தது.

இது குறித்து சிறுமியின் குடும்பத்தினர் கூறுகையில், சிறுமிக்கு எவருடனும் எந்தவிதமான தனிப்பட்ட தகராறுகளும் இல்லை.

இது காதல் பழிவாங்கும் குற்றம் அல்ல என தெரிவித்துள்ளனர். இது போன்ற கொடூரமான தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், சிறுமியின் பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுந்து வருகின்றன.

இச்சம்பவம் குறித்து ஒடிஷா துணை முதல்வர் பரவதி பரிதா கடும் கண்டனமும் தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட சிறுமியின் சிகிச்சை செலவினங்களை மாநில அரசு முழுமையாக ஏற்கும் எனவும் அறிவித்துள்ளார்.

மாடியிலிருந்து விழுந்தால் காப்பாற்றுவாயா? விளையாட்டாக கேட்ட மனைவிக்கு நடந்த சோகம்!!

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் குருகிராம் பகுதியில் வசித்து வரும் தம்பதி துரியோதன ராவ், பார்வதி. இவர்கள் குருகிராம் பகுதியில் அமைந்துள்ள 4 மாடி கட்டிடத்தில் வசித்து வந்தனர். இதில் ராய் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் பார்வதி கால் சென்டரில் பணிபுரிந்து வந்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இருவரும் இரவு உணவு சமைத்து முடித்த பின் குளிர்ந்த காற்றை அனுபவிப்பதற்காக இரவு 10:30 மணிக்கு வீட்டின் மேல் மாடிக்கு சென்றுவிட்டனர்.

அப்போது அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, பார்வதி மொட்டை மாடி சுவரின் விளிம்பில் ஏறி இருபுறமும் கால் தொங்கியபடி அமர்ந்தபடி ராயிடம் “நான் கீழே விழுந்தால் நீ என்னை காப்பாற்றுவாயா? என விளையாட்டாக கேட்டார்.

அதற்கு ராய் “நீ கீழே இறங்குவாயா?” என சொல்லிக்கொண்டே அவரை பிடிக்க முற்பட்டார். ஆனால் பார்வதி நிலை தடுமாறியதால் ராய் அவரை தனது கையில் பிடித்து மேலே இழுக்க முயற்சித்தார்.

அவர்கள் இருவரும் சத்தமிட்ட போதும் யாரும் வரவில்லை. 2 நிமிடங்கள் பார்வதியை ராய் இழுக்க முயற்சித்தும் எதிர்பாராதவிதமாக கையில் இருந்து தவறிய பார்வதி கீழே விழுந்து விட்டார்.

உடனடியாக ராவ் பார்வதியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், பலத்த உள் காயங்கள் ஏற்பட்டதால் செல்லும் வழியிலேயே பார்வதி உயிரிழந்து விட்டார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை கணவரின் உடலில் காயங்கள் இருந்ததன்

மூலம் அவர் மனைவியை காப்பாற்ற முற்பட்டதை உறுதி செய்ததாக தெரிவித்துள்ளனர். அத்துடன் பார்வதியின் குடும்பத்தினரும் தங்களுக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை எனக் கூறியுள்ளனர்.

எட்டு வருடங்களாக காதலர்கள் : காதலியை கத்தியால் குத்தி கொலை செய்த காதலன்!!

நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த சௌந்தர்யா என்ற பெண் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். தான் வேலை செய்யும் நிறுவனத்திற்கு அருகிலேயே தாது நபர்களுடன் வீடு எடுத்து தங்கி வசித்து வந்துள்ளார்.

அதே சமயம் சௌந்தர்யாவின் வீட்டுற்கு அருகில் நாகபட்டினத்தை சேர்ந்த தினேஷ் வீடு எடுத்து தங்கி வசித்து வந்துள்ளார். தினேஷுக்கு சௌந்தர்யாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இருவரும் ஒருவருக்கு ஒருவர் கடந்த எட்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் அவரது காதலை பற்றி பெற்றோர்களிடம் தெரிவித்த நிலையில் இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

பின்னர் வழக்கம் போல் இருவரும் அவர்களது அறையில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் சௌந்தர்யா வேறு ஒரு ஆண் நண்பருடன் பழகி வந்தது தினேஷுக்கு தெரியவந்துள்ளது.

இதனால் சௌந்தர்யாவை தினேஷ் பலமுறை கண்டித்துள்ளார். இருப்பினும் சௌந்தர்யா தன்னை மாற்றிக் கொள்ளாததாக சொல்லப்படுகிறது. தினேஷ் இதை பற்றி சௌந்தர்யாவிடம் வாக்குவாதம் செய்ததால் சௌந்தர்யா தினேஷின் எண்ணை பிளாக் செய்துள்ளார்.

எனவே ஆத்திரம் அடைந்த தினேஷ் நேற்று இரவு சௌந்தர்யாவின் அறையில் யாரும் இல்லாததை தெரிந்து கொண்டு அவரிடம் நேரில் சென்று வாக்குவாதம் செய்துள்ளார். இருவருக்கு இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் தினேஷ் சௌந்தர்யாவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சௌந்தர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சௌந்தர்யாவை கொலை செய்து தப்பி சென்ற தினேஷை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

காதலித்து நிச்சயம் செய்து கொண்ட பெண்ணை காதலன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாடசாலையில் வகுப்பறையில் 30 பாம்புகுட்டிகள் : அச்சத்தில் உறைந்த மாணவர்கள்!!

குருநாகல் மாவட்டத்தில் போகமுவ மத்திய மகா வித்தியாலயத்தில், ஆரம்பப் பிரிவில் உள்ள வெளிப்புற வகுப்பறையில் இருந்து 30 பாம்புக்குட்டிகள், மூன்று பெரிய பாம்புகள் மற்றும் 55 பாம்பு முட்டைகள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாடசாலையில் பாம்புகள் தென்படுவதாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட அதிபருக்கு அறிவித்தனர்.

இதனை தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் 27 ஆம் திகதி அன்று கடமைகளைப் பொறுப்பேற்ற அதிபர் தலைமையில் சோதனை செய்யப்பட்டதில் 30 பாம்புக்குட்டிகள், மூன்று பெரிய பாம்புகள் மற்றும் 55 பாம்பு முட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.

அதேவேளை போகமுவ மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 1 முதல் 13 வரை சுமார் 2,000 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். அதில், 153 மாணவர்கள் ஆரம்ப பிரிவில் உள்ளனர்.

இந்நிலையில் பாடசாலை நிர்வாகம் விரைவாக நடவடிக்கை எடுத்தமையினால் பிள்ளைகள் மற்றும் ஊழியர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய அரபு இராட்சியத்தில் கணவனால் படுகொலை செய்யப்பட்ட பெண்!!

ஐக்கிய அரபு இராட்சியத்தில், கேரள பெண் ஒருவர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கேரளாவின், கொல்லம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண், திருமணத்திற்குப் பின்பு கணவருடன் ஐக்கிய அரபு இராட்சியத்தில் வசித்து வந்தார். இந்நிலையில், இரு நாட்களுக்கு முன்பு, குறித்த பெண் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது குறித்து உயிரிழந்த பெண்ணின் தாயார் பொலிஸில் முறைப்பாடு அளித்தார். அந்தப் முறைப்பாட்டில், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் வரதட்சணை கேட்டு என் மகளை அவரது கணவர் துன்புறுத்தி வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், 43 பவுண் தங்க நகைகளை நாங்கள் வரதட்சணையாகக் கொடுத்த போதிலும், கூடுதலாக வரதட்சணை கேட்டு என் மகளை அவரது கணவர் அடித்துக் கொடுமைப்படுத்தியுள்ளார். என் மகளின் குரல்வளையை நெரித்தும், வயிற்றில் எட்டி உதைத்தும் துன்புறுத்தியுள்ளார்.

அத்துடன், சாப்பிடும் தட்டால் தலையைத் தாக்கியதிலேயே எனது மகள் உயிரிழந்தார். இந்த சம்பவம் கடந்த 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் நடந்துள்ளது, எனக் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் தாயார் கொடுத்த முறைப்பாட்டின் பேரில், கேரள காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மாணவன் ஒருவரின் பேனையால் மாணவ, மாணவிகளுக்கு ஏற்பட்டுள்ள உடல் பாதிப்பு!!

கம்பஹா, பியகம ஆரம்ப பாடசாலையின் நான்காம் வகுப்பில் பயிலும் 14 மாணவர்களுக்கு நேற்று மதியம் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

குறித்த மாணவர்களுக்கு ஏற்பட்ட சொறிவு காரணமாக பியகம அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 08 ஆண் மாணவர்களும் 06 பெண் மாணவிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வகுப்பை சேர்ந்த மாணவன் ஒருவர் பாடசாலைக்கு கொண்டு வந்த கார்பன் பேனாவால் சிறுவர்களின் உடலில் கோடுகளை வரைந்துள்ளார்.

அவர்கள் கோடுகளை தண்ணீரில் கழுவிய பின்னர் இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பியகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உச்சம் தொடும் தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்!!

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில வாரங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (22) சற்று உயர்வடைந்துள்ளது.

இந்தநிலையில், இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,025,249 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 36,170 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 289,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 33,160 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 265,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை31,650 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 21 கரட் தங்கப் பவுணின் விலை 253,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் ஆண்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

இலங்கையில் ஆண்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைவடைந்து வருவதால், எதிர்காலத்தில் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பெரும் நெருக்கடிகள் உருவாகக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வயம்ப பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட பேராசிரியர் அமிந்த மெத்ஸில இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.

1995ஆம் ஆண்டு பெண்கள் 100 பேருக்கு ஆண்கள் 100.2 பேர் இருந்த நிலையில், தற்போது அந்த விகிதம் பெண்கள் 100 பேருக்கு ஆண்கள் 93.7 பேர் ஆகக் குறைந்துவிட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பெண்களின் ஆயுள் காலம் அதிகரித்தது  பெண்கள் பிறப்புக்களின் விகிதம் அதிகரித்தது. இளைய வயதுடைய ஆண்கள் வெளிநாடுகளுக்கு செல்வது பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் – சிறிய அளவிலான பொறியியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளைத் தவிர – பெண்களின் சதவீதம் அதிகரித்து வருகிறது.

இது, தொழில்துறையிலும், நாட்டின் உற்பத்தித்திறனிலும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆண்களுக்கு மட்டுமே உகந்த வேலைகளும் காணப்படுகின்றன.

ஆனால் அந்த வேலைகளைச் செய்ய ஆண்கள் கிடைக்கவில்லை என்றால், நாம் ஒரு பெரும் பணியிடப் பிரச்சனையை எதிர்கொள்வோம்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதை ஒரு சமத்துவத்தன்மை குறைவான நிலை என்றும், இது தொழிலாளர் சந்தையில் பெரும் மாற்றத்தையும், சமூக பிரச்சனைகளையும் உருவாக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதேவேளை, பெண்களுக்கு சமமாகத் தகுதியான ஆண்கள் இல்லாதால், அவர்கள் திருமண வாழ்க்கையில் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் போல், கல்வி மற்றும் செல்வத்துடன் கூடிய பெண்கள் தங்களுக்கு பொருத்தமான ஆண்கள் கண்டுபிடிக்க இயலும் என தெரிவித்துள்ளார்.

எனினும்,, கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை பெண்கள் திருமணத்திற்கான ஆண்களை தேடுவதில் சிரமங்கள் உருவாகலாம் எனவும் இது நாடு முழுவதும் சமூக அமைப்பை எனவும் பேராசிரியர் மெத்ஸில தெரிவித்துள்ளார்.

உலக சாதனையில் இடம்பிடிக்க காத்திருக்கும் இலங்கையின் மிகப்பெரிய படைப்பு!!

கொழும்பு துறைமுக நகரத்தில் புதிய க்ளோத்ஸ் பின் டவர்ஸ்(Clothes pin Towers) திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது.

உலகின் மிகப்பெரிய கட்டிடக் கலைப் படைப்பாக கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடிக்க இந்தத் திட்டம் தயாராக இருப்பதாக கூறப்படுகின்றது.

லண்டனில் உள்ள பிக் பென்னை விட பெரிய கடிகாரத்தை நிர்மாணிப்பதன் மூலம் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அங்கு 15 மீட்டர் உயரம் கொண்ட ஒரு பிரமாண்டமான கடிகாரம் கட்டப்பட உள்ளது. இந்த மேம்பாட்டுத் திட்டம் 24,324 சதுர மீட்டரில் மேற்கொள்ளப்படும்.

இதற்காக 280 ஊழியர்கள் பணியமர்த்தப்படுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

திங்கட்கிழமைகளில் அதிகம் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு : ஆய்வில் தகவல்!!

உலகம் முழுவதும் அச்சுறுத்தும் பிரச்சனையாக மாரடைப்பு பிரச்சனை உள்ள நிலையில் மற்ற நாட்களை விட திங்கட்கிழமைகளில்தான் மாரடைப்பு அதிக அளவில் ஏற்படுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான ஆய்வுகள் கடந்த 2023ம் ஆண்டு வெளியாகி இருந்த நிலையில் , தற்போது அந்த ஆய்வு மீண்டும் கவனம் பெற்று வருகிறது.

பெல்ஃபாஸ்ட் ஹெல்த் மற்றும் சோஷியல் கேர் டிரஸ்ட் மற்றும் ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ் இன் அயர்லாந்து ஆகியவற்றைச் சேர்ந்த மருத்துவர்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

STEMI எனப்படும் தீவிர மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 10,528 நோயாளிகளின் மருத்துவ பதிவுகளை அவர்கள் ஆய்வு செய்தனர்.

2013 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் அயர்லாந்து தீவு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் தரவுகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

STEMI என்பது இதயத்திற்கு இரத்தம் வழங்கும் முக்கிய கரோனரி தமனி முழுவதுமாக அடைக்கப்படும்போது ஏற்படுகிறது. இந்த சமயத்தில் அவசர சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உயிர் போய்விடும்.

அதேசமயம் இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் 30,000-க்கும் அதிகமானோர் STEMI காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டென்ட் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ப்ளூ மண்டே

இந்த சிகிச்சை மூலம் அடைபட்ட கரோனரி தமனியைத் திறந்து, இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை சீராக்க முடியும்.

பிரச்சனை என்னவெனில், வாரத்தின் தொடக்கத்தில் அதாவது திங்கட்கிழமைகளில் STEMI மாரடைப்பு விகிதம் அதிகரிப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

திங்கட்கிழமைகளில் இது மாரடைப்பால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 13% அதிகமாக இருந்தது.

அதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் STEMI சதவீதம் அதிகமாக இருந்தது. இப்படி திங்கட்கிழமைகளில் மாரடைப்பு ஏற்படுவதை ‘ப்ளூ மண்டே’ என்று அழைப்பார்கள். இந்த விளைவுகளுக்கு பின்னால் உள்ள காரணம் இன்னும் முழுயைமாக தெரியவில்லை.

மூட நம்பிக்கைக்கு ஒரு அளவே இல்லையா : போலி சாமியாரை நம்பி சிறுநீரை குடித்த மக்கள்!!

இந்தியாவில் அமானுஷ்ய சக்தி இருப்​ப​தாக கூறி, பக்​தர்​களை சித்​ர​வதை செய்த போலி சாமி​யார் மீது காவல்துறையினர் ​வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர்.

இந்திய மாநிலமான மகாராஷ்டிரா, சத்​ரபதி சம்​பாஜி நகர் மாவட்​டத்தில் உள்ள ஷியூர் கிராமத்தில் உள்ள கோயிலில் சஞ்​சய் பகாரே என்​பவர் சாமி​யா​ராக இருக்​கிறார். இவர் தனக்கு அமானுஷ்ய சக்தி இருப்​ப​தாக கூறி பக்தர்களை நம்ப வைத்துள்ளார்.

திருமணமாகாத பெண்களுக்கு திருமண ஏற்பாடு செய்ய முடியும் என்றும், குழந்தைப்பேறு இல்லாத தம்பதியினருக்கு அகோரி பூஜை மூலம் குழந்தை கிடைக்க வைக்க முடியும் என்றும், ஆவி​களை விரட்ட முடி​யும் என்றும் கூறியுள்ளார்.

போலி சாமியார் மூட நம்பிக்கைகளை 2 ஆண்டுகளாக பரப்பி வந்த நிலையில் தன்னை ‘பா​பா’ என்று அழைத்​துக் கொண்​டுள்​ளார். அதனை நம்பி ஏராளமான பக்தர்கள் இவரிடம் வந்துள்ளனர்.

தன்னிடம் வந்தவர்களை கம்பால் அடிப்பது, காலணி​களை வாயில் கவ்விக் கொண்டு கோயிலை சுற்றி வர சொல்வது போன்ற செயல்களை செய்துள்ளார்.

மேலும், இலை, தழைகளை உண்ண சொல்லி கட்டாயப்படுத்துவது, சிறுநீரை குடிக்க வைப்பது போன்ற இழிவான செயல்களை செய்துள்ளார்.

இந்நிலையில், மூட நம்​பிக்கை எதிர்ப்பு அமைப்பை சேர்ந்த சமூக ஆர்​வலர்​கள் சிலர், ரகசிய கமெ​ராக்​கள் மூலம் போலி சாமியார் செய்யும் செயல்களை சேகரித்து பொலிஸிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் போலி சாமியாரை கைது செய்த பொலிஸார் ​ வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​

விமானநிலைய அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த கனேடிய பெண்!!

கொழும்பு விமானநிலையத்திற்கு இன்று (22) அதிகாலை 2:50 மணியளவில், கனடாவிலிருந்து தோஹா வழியாக கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் வந்த 37 வயது கனேடிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கனேடிய பெண், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 18,123 கிராம் ஹஷீஷ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள், அந்தப் பெண்ணின் பயணப் பொதிகளை சோதனையிட்டபோது, சுமார் 181 மில்லியன் ரூபாய் மதிப்புடைய ஹஷீஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணைகளை இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை , சுங்க ஊடகப் பேச்சாளரும் மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகமுமான சீவலி அருகோட தெரிவித்தார்.

குருநாகலில் வயல் வெளியில் கண்டெடுக்கப்பட்ட சிசு : தாதியர்களுக்கு பாராட்டு!!

குருநாகல் பிரதேசத்தில் வயல்வெளியில் ஈவிரக்கமின்றி தாய் வீசி விட்டுச் சென்ற பிஞ்சு குழந்தை தற்போது மருத்துனமனையில் தாதியர்களின் அன்பான கவனிப்பில் உள்ளார்.

பெற்றெடுத்த பிஞ்சுக் குழந்தையை ஒட்டுத் துணி கூட இல்லாமல் பரகஹதெனிய சிங்கபுர வீதி வயல்வெளியில் கடந்த வாரம் வீசிவிட்டுச் சென்ற நிலையில் , பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கமைய குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குழந்தையை ததெடுக்கு உள்நாட்டில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் போட்டிப் போட்ட வண்ணம் இருக்கின்றார்கள். வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்தும் அழைப்புக்கள் வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாயால் தூக்கி எறிந்து விட்டுச் சென்ற இந்தப் பிஞ்சுக் குழந்தையைத் தற்போது தாதியர்கள் தாயைப் போல் பராமரித்து வருகிறார்கள்.

இந்நிலையில் குழந்தைன் அழகி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில் , குழந்தையை அன்பாக அரணைத்து கவனிக்கும் தாதியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.

வெளிநாடொன்றில் விமானியாகி சாதனை படைத்த மன்னாரைச் சேர்ந்த இளைஞன்!!

மன்னார் விடத்தல்தீவை பூரவீகமாக கொண்ட அனுஜன் ஐரோப்பாவில் விமானியாகியுள்ளார். 1998 ம் ஆண்டு பிறந்த அனுஜன் அவர்கள் தமது ஆரம்ப கல்வியை மன்னார் லூயிஸ் முன்பள்ளியிலும் தொடர்ந்து தரம் 1 தொடக்கம் 3 வரை புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியிலும் கற்றிருந்தார்.

தொடர்ந்து பின்லாந்து தேசத்தில் மின்னியல் மற்றும் தானியங்கி தொழில்நுட்பத்தில் தொழில் சார்ந்த உயர்நிலை இரண்டாம் நிலை தரத்தின் தகுதியையும் மின்னியல் பொறியியலாளர் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.

மேலும் ஸ்பெயினின் பர்கோஸ் நகரில் உள்ள FLYBY AVIATION ACADEMY யில் இணைந்து ATPL ஒருங்கிணைந்த பாடநெறியில் அனைத்து அதிகாரப்பூர்வ ATPL தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று,

ஐரோப்பிய ஒன்றிய விமானப் பாதுகாப்பு நிறுவனத்தின் (EASA) விமானங்களுக்கான வணிக விமானி உரிமம், (EASA CPL(A) MULTI-ENGINE PISTON (MEP) மற்றும் கருவிகளின் மதிப்பீடு (IR),

செயல்திறன் அடிப்படையிலான வழிநடத்துதல் (PBN) மற்றும் ADVANCED UPRT தடுப்புமுறை மற்றும் மீட்பு பயிற்சி அதாவது விமான கட்டுப்பாட்டு இழப்பிலிருந்து மீட்பு பயிற்சி ஆகியவற்றைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ATPL என்பது யாதெனில் ஏர்லைன் போக்குவரத்து விமானி ஒருவர் பெறக்கூடிய விமான உரிமமாகும். இது ஒரு விமானி பெறக்கூடிய அதிகமான தரமான உரிமமாக இருப்பதுடன் இவ் உரிமத்தை கொண்டு ஒருவர் வணிக விமானங்களில் தலைமை விமானியாக (Captain) பணியாற்ற முடிகிறது.