வவுனியா மாமடு பகுதியிலுள்ள காட்டுப்பகுதியில் இன்று (18.09.2022) மாலை 5.00 மணியளவில் ஏற்பட்ட தீப்பரவல் பலமணிநேர போராட்டத்திற்கு மத்தியில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
மாமடு சூரிய மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகேயுள்ள காட்டுப்பகுதியில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து சூரிய மின் உற்பத்தி நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் நகரசபை தீயணைப்பு பிரிவினர் மற்றும்,
பொலிஸாருக்கும் தகவல் வழங்கியமையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த குழுவினர் பல மணிநேர போராட்டத்திற்குப் பின்னர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்து திட்டமிட்டவகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதா அல்லது காற்றின் காரணமாக ஏற்பட்டுள்ளதா என பல்வேறு கோணங்களில் மாமடு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்ககோரிய ஊர்திவழி கையழுத்து போராட்டம் இன்றையதினம் (18.09) வவுனியாவை வந்தடைந்தது. இலங்கை தழிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மற்றும், சர்வஜன நீதி அமைப்பு இணைந்து முன்னெடுத்துவரும் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிரான காங்கேசன்துறை முதல் அம்பாந்தோட்டை வரையான ஊர்திவழி கையெழுத்து போராட்டம் வவுனியாவிலும் முன்னெடுக்கப்பட்டது.
காலை 10 மணியளவில் வவுனியா தமிழரசுகட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் ஆரம்பிக்கப்பட்டகுறித்தகையெழுத்து போராட்டம், நகரின் பல்வேறு இடங்களில் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதி்ராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், தமிழரசுக்கட்சியின் வவுனியா கிளையின் முக்கியஸ்தர்கள், பொது மக்கள் என பலர் கலந்துகொண்டு தமது ஆதரவினை வழங்கியிருந்தனர்.
கிளிநொச்சி மகாதேவா சிறுவர் இல்லத்தில் 29 பிள்ளை செல்வங்களுக்கு ஒரே நேரத்தில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. உலகப் பரப்பில் இது ஓர் உன்னத நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
தமிழர் பண்பாட்டைப் பேணும் வகையில் பூப்புனித நன்நீராட்டுவிழா (மஞ்சள் நீராட்டு )மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது.
29 மங்கையருக்கு பருவ மஞ்சள் நீராட்டு விழா
இதன்போது சிறுவர் இல்லத்தில் விசேடமான பந்தல் அமைப்பில் சகல சம்பிரதாயங்கள் எதுவும் தவறவிடாது இருபத்தொன்பது(29) மங்கையருக்கு மங்கைப் பருவ மஞ்சள் நீராட்டு நிகழ்வு நடைபெற்றது.
இந்நிலையில் இந்த நிகழ்வினை முன்னின்று நடாத்தியவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.
இறக்குமதி செய்யப்படும் தோடம் பழம் ஒன்றின் விலையானது 600 ரூபாவுக்கும் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். பிரபல சிறப்பு அங்காடி நிறுவனம் ஒன்றின் கிளைகளில் இறக்குமதி செய்யப்பட்ட தோடம் பழம் ஒன்று அதன் எடைக்கு ஏற்ப 621 ரூபா விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் தோடம்பழம் 3 ஆயிரத்து 75 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதுடன் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ திராட்சை பழம் 5 ஆயிரம் ரூபாவுக்கும் மேற்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இறக்குமதிக்கு வரையறைகள் விதிக்கப்பட்டுள்ளமை, இறக்குமதிக்கான வரிகள் அதிகரிக்கப்பட்டமை மற்றும் அந்திய செலாவணி நெருக்கடி என்பன காரணமாக இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.
இந்தியாவிலுள்ள ஜார்க்கண்ட் மாநிலம் ஹசரிபாத் மாவட்டம் பரியநாத் கிராமத்தை சேர்ந்த விவசாயி மிதிலேஷ் மேதா(Mithilesh Medha). மாற்று திறனாளியான மிதிலேஷ்(Mithilesh Medha) தனியார் நிதி நிறுவனத்தில் 3 லட்ச ரூபாய் கடன்பெற்று டிராக்டர் வாங்கியுள்ளார்.
கடன் தொகையை செலுத்தி வந்த நிலையில் இன்னும் 1.30 லட்சம் பாக்கி இருந்துள்ளது. இதனிடையே, பாக்கி தொகையை உடனடியாக செலுத்தும்படி நிதி நிறுவன ஊழியர்கள் மிதிலேஷூக்கு(Mithilesh Medha) தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.
இந்நிலையில், பாக்கி 1.30 லட்ச ரூபாயை உடனடியாக செலுத்தும்படியும், இல்லையென்றால் டிராக்டரை திருப்பி எடுத்துக்கொள்வோம் என்றும் மிதிலேஷூக்கு(Mithilesh Medha) நேற்று முன் தினம் பணம் வசூல் செய்யும் நிதி நிறுவனத்தில் இருந்து மெசேஜ் வந்துள்ளது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மிதிலேஷ் தனது கிராமத்தில் பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தி இருந்த தனது டிராக்டரை பார்க்க சென்றார். அவருக்கு உதவியாக மிதிலேஷின்(Mithilesh Medha) 27 வயது மகளும் உடன் சென்றார்.
மிதிலேஷின்(Mithilesh Medha)மகள் 3 மாதம் கர்ப்பிணி ஆகும். மிதிலேஷ்(Mithilesh Medha) பெட்ரோல் பங்க் அருகே செல்ல அங்கு ஏற்கனவே வந்திருந்த நிதி நிறுவன ஊழியர்கள் டிராக்டரை எடுத்து செல்ல முற்பட்டனர்.
அவர்களை தடுக்க மிதிலேஷின்(Mithilesh Medha) மகள் முயற்சித்தார். ஆனால், நிதி நிறுவன ஊழியர்கள் டிராக்டரை வேகமாக இயக்கி மிதிலேஷின் மகள் மீது மோதி அவர் மீது ஏற்றியுள்ளனர்.
டிராக்டர் மோதியதில் அதன் டயரில் சிக்கிய கர்ப்பிணியான மிதிலேஷின்(Mithilesh Medha) மகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். கர்ப்பிணியை டிராக்டர் ஏற்றி கொலை செய்த நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர் பின்னர் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
இந்த கொலை குறித்து தகவலறிந்த பொலிசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேதபரிசதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கர்ப்பிணி பெண்ணை டிராக்டர் ஏற்றி கொலை செய்துவிட்டு தப்பியோடிய நிதி நிறுவன ஊழியர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கரூரில் அரசு வேலை வாங்கித் தருவதாக அமைச்சர் பெயரை பயன்படுத்தி பல லட்சம் மோசடி செய்த இளம் பெண்ணை கையும் களவுமாக பிடித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கரூர் மாவட்டம், காந்திகிராமம் பகுதியில் வசித்து வருபவர் சௌமியா (28). இவர் மின்துறை அமைச்சர் தனது உறவினர் என்று பொய் சொல்லி கரூர், திருச்சி மாவட்டங்களை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட நபர்களை ஏமாற்றி பல லட்ச ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் எனக்கு தெரியும் என்றும் என்னால் அரசு வேலை வாங்கிக்கொடுக்க முடியும் என்றும் ஏமாற்றி பலரிடம் பல லட்ச ரூபாயை ஏமாற்றியதாக பாதிக்கப்பட்டவர்களில் சிவகுமார் என்பவர் கரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
மேலும், வீட்டில் இருந்த சௌமியா வை குண்டுக்கட்டாக தூக்கிக்கொண்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
திருச்சியை சேர்ந்த சவுமியா கணவன் இறந்துவிட்டதாக கூறியும், மறுமணம் செய்துகொள்ள நினைக்கிறன் எனக்கூறியும் கரூரில் வீடெடுத்து தங்கி வந்தார். அப்போது, அக்கம்பக்கத்தை சேர்ந்த பெண் ஓருவர் தனது உறவினரான ஆட்டோ ஓட்டுநர் சிவகுமாரை சௌமியாக்கு கட்டிக்கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார். சௌமியாவும் அதற்கு சம்மதித்துள்ளார்.
இந்நிலையில், நான் தனியார் வங்கியில் மேனேஜராக உள்ளேன் தனக்கு அமைச்சரை தெரியும் எனக்கூறி சிவகுமாருக்கு அரசு வேலை வாங்கி கொடுப்பதாக சௌமியா ஆசையை கிளப்பியுள்ளார்.
மேலும், அதற்கு முன்பணமாக 10 ஆயிரத்தையும் சௌமியா பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து சிவகுமாருக்கு தெரிந்தவர்கள், உறவினர்கள் என பலரும் அரசு வேலைக்காக சௌமியாவிடம் 10 லட்சம் ரூபாய் வரைக்கும் முன்பணமாக கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று சௌமியாக்கும் சிவகுமாருக்கு திருமணம் நடத்தி முடிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே சிவகுமாரை கரூருக்கு அழைத்து சென்ற சவுமியா அங்குள்ள ஒரு பெரிய பங்களா வீட்டை காட்டி அதுதான் தனது தாய் வீடும் என்றும், நான் காதல் திருமணம் செய்துகொண்டதால் என்னை வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டனர் என்றும் கூறியுள்ளார்.
அதன் பின்னர் சிவகுமார் கரூரில் உள்ள உறவினருக்கு சௌமியாவின் புகைப்படத்தை அனுப்பி அவரை குறித்து விசாரிக்க சொல்லியுள்ளார். அப்போது, சௌமியாவுக்கும் அந்த பங்களா வீட்டுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது தெரிய வந்தது.
மேலும், அந்த வீட்டு உரிமையாளரையும் சௌமியா ஏமாற்றியிருப்பது தெரிய வந்தது. இதனால் ஆத்திரமடைந்து பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சௌமியாவை தூக்கி வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
அது மட்டுமின்றி, சௌமியா ஏற்கனவே போலீஸ்காரர் உட்பட 5 பேரை திருமணம் செய்து ஏமாற்றியதோடு அடுத்த வாரம் சிவகுமாரையும் அதுக்கு அடுத்தபடியாக கோவையை சேர்ந்த ஒருவரையும் திருமணம் செய்ய ஸ்கெட்ச் போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது சௌமியா மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கரூர் குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சுகுமார், நகர காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ், ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் சௌமியாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமூக வலைத்தளம் மூலம் பழகி இரண்டுபேரை திருமணம் செய்த பெண்ணால், ஆட்டோ டிரைவர் வெட்டி கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவரான சக்திவேல் (32).
இவர் கடந்த சிலநாட்களுக்கு முன்பு அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கொலை வழக்கு தொடர்பாக அதே ஊரை சேர்ந்த சுமன் (25) என்பவரை சந்தேகத்தின்பேரில் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சுமனும் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தட்டான்சாவடி பகுதியை சேர்ந்தவர் பூமிகா.
இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. செல்போனில் அதிகநேரம் செலவிட்டு வந்த பூமிகா சமூக வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்தி வந்துள்ளார். வாட்ஸ் அப் மற்றும் பேஸ் புக் உள்ளிட்டவைகளில் தன்னுடைய போட்டோக்களை வெளியிடுவது இவரது வழக்கமாக இருந்துள்ளது.
இதனால் இவரது சமூக வலைத்தளங்களை பலரும் பின்பற்ற தொடங்கியுள்ளனர். எந்த நேரமும் மனைவி செல்போனில் நேரத்தை செலவிட்டு வந்ததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பூமிகா தன் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்தார். இதனிடையே, அவரது சமூக வலைத்தளத்தை பின்தொடர்ந்து நட்பாக பழகி வந்த சுமனுக்கும், பூமிகாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டு இருவரும் நேரில் சந்தித்து பழகி வந்தனர்.
பின்னர் பூமிகா சுமனை திருமணம் செய்துகொண்டார். இதன்பின்னரும் சமூக வலைத்தளம் மூலம் பலரிடம் நட்பாக பேசி பழகி வந்துள்ளார். இரண்டாவது கணவர் சுமனுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அவர் விசாரித்த போது, சுமனின் சொந்த ஊரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான சக்திவேலையும் பூமிகா திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. இதனால் சக்திவேல் மீது சுமனுக்கு கோபம் ஏற்பட்டது.
சக்திவேலை நேரில் சந்தித்து, உனக்கு முன்பாக நான்தான் பூமிகாவை திருமணம் செய்துகொண்டேன். எனவே அவரை விட்டு பிரிந்து செல்வதோடு பூமிகா விவகாரத்தில் இனி தலையிடக்கூடாது என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
பூமிகாவை விட்டு பிரிய முடியாது எனவும், முடிந்தால் அவரை அழைத்து செல் என சக்திவேல் சுமனிடம் தெரிவித்துள்ளார். இதில் தகராறு முற்றியதால், பேச்சு வார்த்தைக்கு வந்த சக்திவேலை, சுமன் தனது நண்பர்களோடு சேர்த்து வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
பின்னர் கொலையில் தொடர்புடைய பண்ருட்டியை சேர்ந்த படிஸ்டா குணா, வசந்தகுமார், மற்றொரு குணா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதிதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா, ஓமந்தையில் புகையிரதம் மோதி குடும்பஸ்தர் ஒருவர் மரமடைத்துள்ளார். நேற்று (17.09.2022) இரவு 10 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதம் இரவு 10 மணியளவில் ஓமந்தை, விளக்குவைத்தகுளம் பகுதியில் பயணித்த போது புகையிரத பாதையில் இருந்த குடும்பஸ்தர் ஒருவரை மோதித் தள்ளியது.
குறித்த விபத்தில் சம்பவ இடத்திலேயே குடும்பஸ்தர் மரணமடைந்த நிலையில், சடலம் புகையிரத திணைக்கள உத்தியோகத்தர்களால் மீட்கப்பட்டு, வவுனியா புகையிரத நிலையத்தில் வைத்து பொலிசாரிடம் கையளிக்கப்பட்டது.
பொலிசாரால் சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சம்பவத்தில் ஓமந்தை விளக்குவைத்த குளம் பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான எஸ்.நகுலன் என்பவரே மரணமடைந்தவராவார்.
ஈரானில் பெண்களுக்கான உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் அனைத்துப் பெண்களும் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற கட்டாய ஆடைக் குறியீட்டை ஈரான் கடுமையாக நடைமுறைப்படுத்தி வருகின்றது.
ஈரானில் 9 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் முதல் பெண்கள் அனைவரும் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை பொதுவெளியில் பெண்கள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.
அந்த வகையில், ஹிஜாப் கட்டுப்பாடுகளை மீறும் பெண்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் கூட நடக்கிறது.
இவ்வாறு இருக்க, அண்மையில் ஈரானில் சரியாக ஹிஜாப் அணியாததால் 22 வயது இளம்பெண்ணை கைது செய்த பொலிஸார் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் கோமா நிலைக்கு சென்ற இளம் பெண் உயிரிழந்த சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குர்திஸ்தானை சேர்ந்த மாஷா அமினி (வயது 22) குடும்பத்துடன் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். இதன்போது ஈரானில் பொதுவெளியில் பெண்கள் ஹிஜாப் அணிவதை கண்காணிக்கும் வகையிலான நீதிநெறியை கடைப்பிடிக்க செய்யும் கலாச்சார பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
தெஹ்ரான் செல்லும் வழியில் மாஷா அமினி மற்றும் குடும்பத்தினரை கலாச்சார பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். மாஷா அமினி ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக்கூறி கலாச்சார பொலிஸார் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
மேலும் அவரை கைது செய்து பொலிஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றதுடன், அங்கு வைத்தும் பொலிஸார் அவரை தலையில் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அவர் மயங்கியுள்ளார். இதனால் பொலிஸார் நோயாளர் காவு வண்டி மூலம் மாஷா அமினியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அப்போது அவர் கோமா நிலைக்கு சென்றது தெரியவந்தது. மேலும் தொடர்ந்து அவருக்கு வைத்தியர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இந்நிலையில் தான் மாஷா அமினி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் ஈரானில் மட்டுமன்றி உலக நாடுகள் மத்தியிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. உலகின் பிற மனித உரிமை அமைப்புகள் இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
2022ஆம் ஆண்டுக்கான ஆசியக்கிண்ண வலைப்பந்தாட்ட தொடரில் இலங்கை மகளிர் அணி வெற்றி பெற்று இலங்கைக்கு பெருமை சேர்த்தது. கடந்த வாரம் துபாயில் இடம்பெற்ற 2022ஆம் ஆண்டுக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியிலும் இலங்கை அணி வெற்றி பெற்றிருந்தது.
நாடு பொருளாதார நெருக்கடி நிலைக்கு உள்ளாகியுள்ள நிலையில் இந்த இரண்டு வெற்றிகளும் இலங்கை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தின. இதன்படி, இரண்டு அணிகளும் நாடு திரும்பியபோது மகத்தான வரவேற்பு கிடைத்து.
இருப்பினும், வலைப்பந்தாட்ட அணி இலங்கை திரும்பிய போது அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்கை வகித்திருந்த தர்ஜினி சிவலிங்கம் (Tharjini Sivalingam) வீராங்கனைகள் மத்தியில் இல்லாமை பலரையும் கேள்விக்குள்ளாக்கியது.
இந்த நிலையில, தர்ஜினி சிவலிங்கம் நாடு திரும்பாமைக்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. தர்ஜினி சிவலிங்கம் தற்போது அவுஸ்திரேலியாவில் பிராந்திய அணியொன்றில் விளையாடி வருகிறார்.
இதற்கிடையில், ஆசியக்கிண்ண வலைப்பந்தாட்ட தொடரில் தர்ஜினி சிவலிங்கம் பற்கேற்பதற்காக அவரை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு வலைப்பந்தாட்ட பயிற்றுநர் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
அதில், அவரின் உடல் அமைப்பை கருத்தில் கொண்டு விசேட வாகனத்தை ஏற்பாடு செய்வதற்காக 50 ஆயிரம் ரூபாவை அவர் கோரியிருந்தார். இருப்பினும், விளையாட்டுத்துறை அமைச்சு அதற்கு மறுப்பு தெரிவித்தது.
இதனையடுத்து, ஆசியக்கிண்ண போட்டிக்கு சிங்கப்பூர் சென்ற அணி இலங்கையில் பயிற்சிகளை பெற்ற போது தர்ஜினி அவுஸ்திரேலியாவில் பயிற்சிகளில் ஈடுபட்டார்.
அத்துடன், சிங்கப்பூரில் இடம்பெற்ற ஆசியக்கிண்ணத்துக்காக அவர் அவுஸ்திரேலியாவில் இருந்து அங்கு சென்றிருந்தார். மேலும், போட்டிகள் முடிவடைந்த பின்னர் தர்ஜினி சிவலிங்கம் மீண்டும் அவுஸ்திரேலியாவுக்கே திரும்பி சென்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தற்போது பெரிதளவில் மீன்களை கொள்வனவு செய்வதில்லை என தெரிவிக்கப்படுகின்றது. சந்தையில் மீன்களின் விலை குறைந்துள்ள போதிலும், நுகர்வோர் கொள்வனவு செய்யாத நிலை காணப்படுவதாக வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பேலியகொடை மீன் வர்த்தக நிலையத்தில் லின்னா, பலாயா, சாலயா, அரிசி ஈக்கள் போன்ற சில வகை மீன்களின் விலை குறைவடைந்துள்ளது. எனினும், மீன்களை கொள்வனவு செய்வதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கோழி இறைச்சியின் விலை மேலும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர். தற்போது ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1,600 ரூபாவாக உள்ளது.
குஜராத்தில் திருமணமான 8 ஆண்டுகளுக்கு பிறகு தனது கணவன் ஒரே ஆணே அல்ல; அவர் ஒரு பெண் என்பதை மனைவி கண்டுபிடித்துள்ளார். ஆயிரம் பொய்களை கூறி திருமணம் செய்யலாம் என பெரியவர்கள் கூற கேட்டிருப்போம்.
மாப்பிள்ளைக்கு விரைவில் அரசுப் பணி கிடைத்துவிடும்; கல்யாணம் ஆனதும் பெண் நல்ல சம்பளத்துக்கு வேலைக்கு சென்றுவிடுவார் என்பன போன்ற சிறு சிறு பொய்களை கூறி திருமணம் நடத்தியதையும் பார்த்திருப்போம்.
ஆனால், முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல, ஒரு பெண் தன்னை ஒரு ஆண் எனக் கூறி வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது. அதுவும் ஒரு ஆண்டு, இரண்டு ஆண்டு அல்ல. மொத்தமாக 8 ஆண்டுகளாக அவர் தன்னை ஆண் எனக் கூறி ஏமாற்றியுள்ளார்.
குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டம் கோத்ரி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவனை 2011-இல் நிகழ்ந்த ஒரு விபத்தில் இழந்துவிட்டார். கணவர் இறந்த பிறகு, தனது ஒரே மகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக அங்குள்ள தனியார் நிறுவனத்தில் அவர் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
இந்நிலையில், தங்கள் மகள் தனியாக இருப்பதை பார்த்த அவரது பெற்றோர், அவருக்கு திருணமம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி, மேட்ரிமோனியில் அவருக்கு வரன் தேடியுள்ளனர். இதில் விராஜ் வர்தன் என்பவர் அவருக்கு அறிமுகமானார்.
இருவரும் தொலைபேசியில் பேசிய பிறகு, திருமணம் செய்துகொள்ள சம்மதித்தனர். இதையடுத்து, அவர்களுக்கு கடந்த 2014-ம் ஆண்டு விமரிசையாக திருமணம் நடைபெற்றது. அப்போது அப்பெண்ணுக்கு வயது 32. இருவரும் திருமணம் முடித்த கையோடு காஷ்மீருக்கு தேனிலவுக்கும் சென்றனர்.
கணவர் இறந்ததோடு தனது வாழ்க்கை முடிந்துவிட்டதாக எண்ணிய அப்பெண், புது வாழ்க்கையை தொடங்கப் போகிறோம் என மகிழ்ச்சியாக இருந்தார். ஆனால், அவரது மகிழ்ச்சி நீண்டநாட்களுக்கு நிலைக்கவில்லை. காஷ்மீருக்கு 10 நாள் தேனிலவு சென்ற அவர்கள் ஒருமுறை கூட உடலுறவு வைத்துக் கொள்ளவில்லை.
இதுகுறித்து கேட்ட போது, உடல்நிலை சரியில்லை என ஏதேதோ சாக்குபோக்குகளை விராஜ் வர்தன் கூறியுள்ளார். அப்பெண்ணும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பின்னர் தேனிலவு சென்று வந்து 6 மாதங்களாகியும் தனது மனைவியிடம் விராஜ் தாம்பத்தியம் வைத்துக் கொள்ளவில்லை.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண், ஏன் தாம்பத்திய உறவில் ஈடுபட மறுக்கிறீர்கள் எனக் கேட்டுள்ளார். அதற்கு விரா்ஜ வர்தன், ரஷ்யாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றும் போது ஒரு விபத்தில் சிக்கியதாகவும், அதனால் உடலுறவு வைத்துக் கொள்ளும் திறனை தான் இழந்துவிட்டதாகவும் கூறினார். மேலும், ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்துகொண்டால் இது சரியாகிவிடும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இதனால் இருவரும் பல வருடங்களாக உடலுறவு இல்லாமலேயே வாழ்க்கை நடத்தி இருக்கின்றனர். தனது வீட்டில் இது தெரிந்தால் கணவருக்கு அவமானமாகிவிடுமே என அப்பெண்ணும் யாரிடமும் இதை தெரிவிக்கவில்லை. வெளிச்சத்துக்கு வந்த உண்மை இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, கொல்கத்தாவுக்கு சென்று குறிப்பிட்ட அறுவை சிகிச்சையை செய்துவிட்டு வருவதாக தனது மனைவியிடம் கூறி விராஜ் வர்தன் சென்றுள்ளார்.
பின்னர் ஒரு வாரம் கழித்து வீடு திரும்பிய அவர், மனைவியுடன் உடலுறவில் ஈடுபட்டார். அப்போது அப்பெண்ணுக்கு நெருடலாக இருக்கவே சட்டென விளக்கை போட்டுள்ளார். இதில் தனது கணவர் விராஜ் வர்தன் ஆண் இல்லை; ஒரு பெண் என்பதும், செயற்கை ஆணுறுப்பு வைப்பதற்காக அவர் கொல்கத்தா சென்றதும் அவருக்கு தெரியவந்தது.
தான் 8 ஆண்டுளாக ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண், உடனடியாக கோத்ரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், இயற்கைக்கு மாறாக தன்னுடன் உறவு வைக்க விராஜ் முயற்சிப்பதாகவும், வெளியே கூறினால் கொலை செய்வேன் என மிரட்டியாகவும் அவர் போலீஸில் கூறினார்.
இதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், விராஜ் வர்தனை கைது செய்தனர். விசாரணையில், தான் ஒரு பெண்ணாக இருந்த போதிலும் ஆண்கள் மீது ஈர்ப்பு வரவில்லை என்றும், பெண்கள் மீதே ஈர்ப்பு இருப்பதால் தான் ஆண் எனக் கூறி திருமணம் செய்ததாக போலீஸாரிடம் விராஜ் வாக்குமூலம் அளித்தார்.
ரயில் பயணியிடமிருந்து ஜன்னல் வழியாக மொபைல் போனைப் பறிக்க முயன்ற ஒரு நபர், கனவிலும் நினைத்துப்பார்க்காத ஒரு பயனைத்தை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டது. வெளியில் தொங்கிக்கொண்டு, மன்னிப்புக் கேட்டுகொண்டு, யாரிடம் செல்போனை பறிக்க முயன்றாரோ அவரிடமே உயிர்ப்பிச்சை கேட்டுக்கொண்டு அவர் பயணித்துள்ளார்.
பயணிகள் ஒருவகையில் அந்தத் திருடனை தண்டிக்க நினைத்தாலும், அவருக்கு படம் புகட்டி, அவரது உயிரையும் கைப்பறியுள்ளனர். செப்டம்பர் 14 அன்று வெளியான வீடியோ இந்தியாவின் பீகார் மாநிலத்தில் எடுக்கப்பட்டது, அங்கு ரயில் ஜன்னல்கள் வழியாக பணம் அல்லது செல்போன் போன்ற பொருட்கள் பறிக்கப்படுவது வாடிக்கையாக நடக்கும்.
பெகுசராயிலிருந்து ககாரியா வரை சென்றுகொண்டிருந்த ரயில், அதன் பயணம் முடிவடையும் தருவாயில் இருந்தபோது, சாஹேப்பூர் கமால் ஸ்டேஷன் அருகே அந்த நபர் பயணி ஒருவரிடமிருந்து செல்போனை பறிக்க முயற்சித்துள்ளார்.
ஆனால் எச்சரித்துக்கொண்ட பயணி அதற்கு அவரது கையை பிடித்தார். ரயில் நகர்ந்தது, திருடன் தன்னை விடுமாறு கெஞ்சினார், ஆனால் அதற்கு பதிலாக மற்றோரு பயணி அவரது இன்னொரு கையையும் உள்ளே இழுத்தபடி பிடித்துக்கொண்டார்.
தன்னை விட்டுவிடும்படி கேட்ட திருடன், இப்போது தனது கைகளை தயவுசெய்து விட்டுவிடவேண்டாம் என கெஞ்சி, தான செய்த குற்றத்திற்கு மன்னிப்பே கேட்டபடி, வேறு வழியில்லாமல் 15 கிலோமீற்றர்கள் வெளியே தொங்கியபடி பயணித்தார். அதுவரை பயணிகளும் அவரது கைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டனர்.
இறுதியாக ரயில் ககாரியாவுக்கு அருகில் வந்தபோது அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் அங்கிருந்து எப்படியோ தப்பித்து ஓடிவிட்டார் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
பொலிஸ் இந்த சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுத்ததா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. திருடன் வெளியே தொங்கியபடி பயணித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
Train passengers hanged the thief for 15 km!
Bihar: Passengers handed over the thief who tried to snatch the cell phone by hanging it from the window for 15 km. pic.twitter.com/z17vUJQjxD
பாகிஸ்தானின் கராச்சியில் செயல்படும் ஜின்னா முதுகலை மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கலாபுலில் வசிக்கும் ஹினா ஜாஹித் என்ற நிறைமாத கர்ப்பிணிப் பெண் அனுமதிக்கப்பட்டார்.
அந்தப் பெண்ணுக்கு ஒரே நேரத்தில்4 ஆண் மற்றும் 2 பெண் குழந்தைகள் என 6 குழந்தைகள் சுகப்பிரசவத்தின் மூலமாக பிறந்தது. அதில் ஒரு குழந்தை பிறந்தவுடன் இறந்து விட்டது.
இந்நிலையில் நேற்று மற்ற 5 குழந்தைகளும் உயிரிழந்தன. மூச்சு திணறல் மற்றும் எடை குறைவு காரணமாக குழந்தைகள் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது ஹினா நலமாக உள்ளனர்.
உலக அளவில் பல மனிதர்கள் பலர், தாங்கள் எதிர் கொள்ளக்கூடிய முக்கிய ஹார்மோன் மாறுபாட்டினால், அவர்கள் மூன்றாம் பாலினத்தவர் என்கிற அடையாளத்தை பெறுகின்றனர்.
சமூகத்தில் இவர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருந்தாலும், தற்போது போராடி தங்களுடைய சுய அடையாளத்தை மீட்க பலரும் முயற்சித்தும் சாதித்தும் வருகின்றனர். இந்த நிலையில் தான் பிரபல 10 வயதேயான இளம் நியூயார்க் ஃபேஷன் மாடல் ஒருவர் தற்போது வைரலாகி வருகிறார்.
10 வயதில் இளம் திருநங்கை மாடலாக நியூயார்க் ஃபேஷன் வீக்கினை சிறப்பித்தவர் நோயெல்லா மெக்மேஹர் (Noella McMaher). இவர் பிரபல டிரான்ஸ் ஆடை நிறுவனத்திற்கான 7 நிகழ்ச்சிகளில் மாடலாக பங்கேற்றவர்.
இவர் 2 வயதிலேயே தான் ஒரு பெண் என்பதை உணர்ந்து தன்னுடைய பெற்றோரிடம் கூறியிருக்கிறார். இவருடைய பெற்றோரும் இவருடைய பயணத்துக்கு மிகவும் ஆதரவாக இருந்திருக்கிறார்கள்.
தொடர்ந்து தம்முடைய செயல்பாடுகள் மூலம் திருநங்கை குழந்தைகள், மற்ற குழந்தையிலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல என்பது குறித்த புரிதலை மக்களிடம் ஏற்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் நோயெல்லா மெக்மேஹர்.
மேலும் தவறான உடலில் தாங்கள் பிறந்து விட்டதாகவும், அதை கண்டுபிடித்து தன்னுடைய பாலினத்தை மாற்றுவதாகவும் கூறும் நோயெல்லா மெக்மேஹர் , திருநங்கைகளாக இருப்பது என்பது மோசமானது அல்ல என்று மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
அத்துடன் குழந்தைகளுக்கு, தான் செய்யும் செயல்கள் மூலமும் அவற்றை காட்டுகிறார். அப்போதுதான் வளரும் போது அந்த குழந்தைகள் அதை புரிந்து கொள்வார்கள் என்று நோயெல்லா மெக்மேஹர் விரும்புகிறார்.
இந்த நிலையில்தான் சுமார் 6 மாதங்களுக்கு முன்பாக நியூயார்க் பேஷன் வீக்கின் மிகவும் இளம் திருநங்கையாக வலம்வந்து மிகப்பெரிய வரலாற்றையே, தான் சாதித்தது குறித்து தன்னால் நம்ப முடியும் இல்லை என்றும்,
சர்வதேச அளவில் வரலாறு படைப்பதற்கு அடுத்த மாதமே பாரீசில் நடக்கும் ஃபேஷன் வீக்கில் வரவிருப்பதாகவும், நோயெல்லா மெக்மேஹர் தம்முடைய இன்ஸ்டா பதிவில் தெரிவித்து இருக்கிறார். இவருடைய பதிவு தற்போது வைரலாகி வருகிறது.