மனைவி உயிரோடு இருக்கும்போதே இரண்டாவது திருமணம்.. கணவருக்கு நடுரோட்டில் வைத்து பாடம் கற்பித்த முதல் மனைவி!!

தெலங்கானாவில்..

இரண்டாவது திருமணம் செய்த கணவரை மின் கம்பத்தில் கட்டி வைத்து செருப்பால் அடித்த மனைவியின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், பெத்தப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஸ்வர்ணபள்ளி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த்.

இவர்க்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அகிலா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்துக்காக ரூ.20 லட்சம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தம்பதிக்கு ஒரு மகனும் உள்ளார்.

திருமணம் முடிந்து சில ஆண்டுகள் கழித்து இருவருக்கும் பிரச்சனை வரத்தொடங்கியுள்ளது. இந்த நிலையில், ஸ்ரீகாந்த் தனது மனைவி அகிலாவை பிரிந்து சென்று வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இந்த விவகாரத்தை தனது உறவினர் ஒருவர் மூலம் அறிந்த அகிலா தனது உறவினர்களை அழைத்துக்கொண்டு கணவரின் புதிய வீட்டுக்கு சென்றுள்ளார்.

மேலும், அங்கிருந்து தனது கணவரை அழைத்துவந்த அவர், கணவரை மின் கம்பத்தில் கட்டி வைத்துள்ளார்.பின்னர், கணவரை தொடர்ந்து செருப்பால் அடித்த அவர், செருப்பு மாலை அணிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலிஸாருக்கு தெரிந்த நிலையில், அவர்கள் விரைவாக வந்து ஸ்ரீகாந்தை மீட்டுள்ளனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேஸ்புக் காதல்.. 25 வயது இளைஞனுடன் 40 வயது பெண் ஓட்டம் : கதறும் கணவர் மற்றும் மகன்கள்!!

தஞ்சையில்..

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள கவரப்பட்டு கிராமம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மனைவி லலிதா (40). இவர்களுக்கு 22 மற்றும் 21 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.

அய்யப்பன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றார். இதனையடுத்து, கணவர் வெளிநாட்டிலும், மகன்கள் வேலை, படிப்பு என இருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த லலிதா பேஸ்புக் நண்பர்களுடன் நேரத்தை செலவிட ஆரம்பித்தார்.

தொடர்ந்து, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 25 வாலிபருடன் ஏற்பட்டது. மேலும் தன்னை அழகாய் காண்பிப்பதற்காக விதவிதமாக ஈர்க்கும் ஆடைகளை அணிந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட லலிதா, தான் திருமணமாகி, திருமண வயதில் 2 பிள்ளைகளாக கொண்டுள்ளார் என்பதையே மறந்து விட்டார்.

பின் இருவரும் புகைப்படங்களை அனுப்பி பேசி கொள்ள நேரில் சந்திக்க முடிவு எடுத்துள்ளனர். ஒரு கட்டத்தில் கடலூரில் இருந்து ஒரத்த நாட்டிற்கு வந்த வாலிபர், அங்கு தெரிந்த நபர் மூலம் ஆட்டோ ஒன்றை வாடகைக்கு ஓட்டி பிழைப்பும் நடத்தினார்.

ஆட்டோ ஓட்டிய நேரம் போக மற்ற சமயங்களில் லலிதாவுடன் தனிமையில் இருந்துள்ளார். தொடர்ந்து இவர்கள் சுற்றி வந்த நிலையில் தற்போது லலிதா 4 மாத கர்ப்பிணியானார்.

கள்ளக்காதலை மறைத்தாலும், கருவில் வளரும் குழந்தையை மறைக்க முடியாது என்று எண்ணிய லலிதா, அவருடன் குடும்பம் நடத்தவும் முடிவு செய்தார். இதன் பின் மகன்களுக்கு தெரியாமல் கணவர் அனுப்பி வைத்த பணம் மூலம் வாங்கி வைத்திருந்த 20 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார்.

மகன்கள் தந்தைக்கு தகவல் கொடுக்கற அவரை கண்டித்தே ஆகவேண்டும் என்ற வகையில், ஒரத்தநாடு போலீசில் புகாரும் கொடுத்தனர். இதனால், வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள கள்ளக்காதல் ஜோடியை தேடி வருகிறார்கள்.

பின் கள்ளக்காதலனுடன் திருமணம் செய்த அவர், கணவருக்கு புகைப்படங்களையும் ஒரு ஆடியோ பதிவை அனுப்பி வைத்துள்ளார். அதில், தான் கடலூரை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டேன்.

அவருடன் குடும்பம் நடத்தப் போகிறேன், நான் தற்போது 4 மாத கர்ப்பிணியாகவும் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்துபோன கணவர் மகன்களிடம் அப்படி ஒரு தாய் இல்லை எனவும், திரும்பி வந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டாம எனவும் ஆறுதல் கூறியுள்ளார்.

பல கோடிகளுடன் சொகுசு வாழ்கை : மோசடி மன்னனை கனவு நாயகனாக கருதி மணக்க நினைத்த இலங்கை நடிகை!!

ஜாக்குலின் பெர்னாண்டஸ்..

தொழிலதிபரை மிரட்டி பல கோடிகளை பறித்த வழக்கில் கைதான சுகேஷ் சந்திரசேகரை இலங்கையை சேர்ந்த பாலிவுட் நடிகை ஜாக்குலின் கனவு நாயகன் என்று அழைப்பார் என தெரியவந்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாக கூறி மோசடி செயலில் ஈடுபட்டு வந்தார். சுகேஷ் சந்திரசேகர் ஏற்கனவே பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது 2 தொழில் அதிபருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

அப்போது ஜாமீன் பெற்று தருவதாக கூறி சுகேஷ் சந்திரசேகர் தொழில் அதிபர் மனைவியிடம் ரூ.215 கோடி மோசடி செய்துள்ளார். மிரட்டி பறித்த பணத்தை பாலிவுட் நடிகைகளுக்கு செலவு செய்தது அமலாக்கப்பிரிவின் விசாரணையில் தெரிய வந்தது.

இதில் அதிகமாக பயனடைந்த ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் அமலாக்கப்பிரிவு பல முறை விசாரணை நடத்தி இருக்கிறது. சுகேஷ் சந்திரசேகரின் குற்றப்பின்னணி குறித்து தெரிந்தும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் தொடர்ந்து சுகேஷுடன் தொடர்பில் இருந்து வந்ததாக அமலாக்கப்பிரிவு தனது குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் பொலிசார் நடத்திய விசாரணையில் இருவருக்கும் பணமோசடி வழக்கில் நேரடி தொடர்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது. நடிகை ஜாக்குலினிடம் சுகேஷ் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தார்.

அதோடு சுகேஷை ஜாக்குலின் கனவு நாயகன் என்று அழைப்பார் என்றும், அவரையே திருமணம் செய்யவும் நினைத்தார் என்றும் பொலிஸ் வட்டாரங்கள் மூலம் தகவல் கசிந்துள்ளது. சமீபத்தில் இது தொடர்பில் ஜாக்குலினிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தலை இல்லாமல் பெண்ணின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் : விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!!

மகாராஷ்டிராவில்..

இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் பெண்ணொருவர் கணவரால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் வசாய்,

புய்கான் கடற்கரையில் தலை இல்லாத பெண்ணின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாலச்சோப்ராவில் சானியா சேக் (25) என்ற பெண் மயமானது தொடர்பான புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில்,

பொலிஸாருக்கு கிடைத்த உடல் அப்பெண்ணுடையது தான் என்று உறுதியானது. அதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் பெண்ணின் கணவர் ஆசிப் சேக்கை (31) பொலிஸார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்குப்பிடி விசாரணையில், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார். சானியா சேக்கின் உடல் கைப்பற்றப்பட்ட 14 மாதங்களுக்கு பிறகு ஆசிப் சேக் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில் மனைவியை கொலை செய்த விவகாரத்தில் குடும்பத்தினர் சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து சானியா சேக் கொலை வழக்கில் ஆசிப் சேக் குடும்பத்தைச் சேர்ந்த இருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியாவை வந்தடைந்த திலீபனின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்தி : மக்கள் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி!!

தியாகத் தீபம் திலீபன்..

தியாகத் தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி இன்று (19.09) வவுனியாவை வந்தடைந்த நிலையில் மக்கள் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் இளைஞர் அணியினரின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ‘திலீபன் வழியில் வருகின்றோம்’ என்ற ஊர்தி பவனியானது கிழக்கு மாகாணத்தின் பொத்துவிலில் ஆரம்பித்து யாழ் நல்லூர் நோக்கி செல்கின்றது.

5 ஆம் நாளான இன்று (19.09) குறித்த திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி வவுனியாவிற்கு வருகை தந்த நிலையில், வவுனியா பண்டாரவன்னியன் சதுக்கம், பொங்கு தமிழ் நினைவுத்தூபி, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்ட தளம்,

மொத்த மரக்கறி விற்பனை நிலையம், இலுப்பையடி என நகரின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் உணர்வெழுச்சியுடன் ஊர்தியில் இருந்த தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு தீபம் ஏற்றியும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அகவணக்கத்துடன் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியிருந்ததுடன், சில பகுதிகளில் மக்கள் கண்ணீர் சிந்தி அஞ்சலி செலுத்தியதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

பல்கலைக்கழக மாணவரொருவர் மாயம் : கடிதமொன்றும் மீட்பு : விசாரணைகள் தீவிரம்!!

மாணவரொருவர் மாயம்..

பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் காணாமல்போனமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் நான்காம் வருட மாணவர் ஒருவரே காணாமல்போயுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

கலைப் பீடத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்கும் யக்கல பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த 24 வயதுடைய மாணவன் சில தினங்களுக்கு முன்னர் இருந்து காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் காணாமல்போன இளங்கலை மாணவர் எழுதியதாக சந்தேகிக்கப்படும் கடிதம் ஒன்று அவர் தங்கியிருந்த தங்கும் அறையில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டதாக தெரியவருகிறது.

எனினும் இன்று காலை வரை அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை என்றும், சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மனைவியின் இரண்டு கைகளையும் வெட்டி வீசிய கணவர் : நெஞ்சை உலுக்கும் கோர சம்பவம்!!

கேரளாவில்..

தன்னை விட்டு பிரிந்து சென்று ஐந்து வருடங்களாக தனியாக வாழ்ந்து வந்த மனைவியின் இரண்டு கைகளையும் வெட்டி வீசி விட்டு தப்பி ஓடி இருக்கிறார் கணவர். அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலத்தில் பத்தினம் திட்டாவில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ஏழாம் குளம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் வித்தியா என்கிற பெண்ணுக்கு கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இருக்கிறது. ஒரு வருடம் மட்டுமே இவர்கள் சேர்ந்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

அந்த ஒரு வருடத்திற்கு உள்ளேயே கணவன் மனைவிக்கு இடையே பலமுறை தகராறு ஏற்பட்டு இருக்கிறது. இதன் பின்னர் வித்தியா கணவனை விட்டு பிரிந்து சென்று கடந்த ஐந்து வருடங்களாக தந்தையின் வீட்டில் வசித்து வருகிறார். இருவரும் விவகாரத்தை கோரியும் மனு தாக்கல் செய்திருக்கின்றனர்.

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு 9 மணி அளவில் வித்தியாவின் வீட்டிற்கும் சென்றிருக்கிறார் சந்தோஷ். ஐந்து வருடங்களுக்கு பின்னர் திடீரென்று கணவர் தன் முன் வந்து நிற்பதை பார்த்து வித்தியா கடும் அதிர்ச்சியில் இருந்து இருக்கிறார்.

அந்த அதிர்சியில் இருந்து வித்யா மீள்வதற்குள் அவரை கடுமையாக அடித்து உதைத்து இருக்கிறார். அடிபட்ட வித்தியா வலியால் துடித்து கொண்டிருந்தபோது, தான் கொண்டு சென்றிருந்த பட்டா கத்தியை எடுத்து வித்தியாவின் இரண்டு கைகளையும் வெட்டி இருக்கிறார். ஒரு கையை மணிக்கட்டு வரைக்கும் வெட்டி இருக்கிறார். இன்னொரு கையை முழங்கை வரைக்கும் துண்டாக வெட்டி இருக்கிறார்.

இது கொடூரம் போதாது என்று வித்தியாவின் தலை முடியை வெட்டி இருக்கிறார். தலையிலும் அவர் வெட்டி வெட்டியதால் காயங்கள் உள்ளன. அப்போது தன் மகள் வித்தியாவை காப்பாற்ற அவரின் தந்தை விஜயன் போராடி இருக்கிறார். அவரையும் கடுமையாக தாக்கி விட்டு சந்தோஷ் தப்பி ஓடி இருக்கிறார்.

வித்தியா, அவரது தந்தை விஜயன் இருவரும் திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விசாரணை நடத்தி வந்ததபோது, சந்தோஷை சம்பவத்திற்கு முன்பாக அந்த பகுதியில் பார்த்ததாக அக்கம் பக்கத்தினர் சொல்லி இருக்கிறார்கள்.

இதன் மூலம் முன்கூட்டியே சந்தோஷ் திட்டமிட்டு மனைவியின் வீட்டிற்குள் புகுந்து அவரை அவர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு வந்திருக்கிறார் என்பது தெரிய வந்த வந்தது.

இதை அடுத்து போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு சந்தோஷ் செல்போன் நம்பரை வைத்து, பல்வேறு காவல் நிலையங்களில் உதவியுடன் செல்போன் சிக்னலையும் வைத்து அவரை கைது செய்துள்ளார்கள் போலீசார்.

சமையல் வேலைக்கு வெளிநாடு செல்ல திட்டமிட்ட ஆட்டோ டிரைவரின் வாழ்க்கையை ஒரே நாளில் மாற்றிய அதிர்ஷ்டம்!!

கேரளாவில்..

மலேசியாவுக்குச் சென்று சமையல்காரராகப் பணிபுரியத் திட்டமிட்டிருந்த ஒரு ஆட்டோ டிரைவருக்கு லொட்டரியில் ரூ. 25 கோடி பரி விழுந்தது. இன்னும் சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், அவர் பரிசு அறிவிப்பதற்கு ஒரு நாள் முன்னரே அந்த லொட்டரி சீட்டை வாங்கியுள்ளார்.

கேரளாவில், திருவனந்தபுரத்தில் ஸ்ரீவராஹம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ரிக்ஷ ஓட்டுநரான அனூப், குடும்ப சூழ்நிலைக்காக மலேசியாவுக்குச் சமையல்காரராக செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவருக்கு ரூ.25 கோடி மதிப்பிலான ஓணம் பம்பர் லாட்டரியை வென்றார்.

பரிசு விழுந்த TJ 750605 எனும் எண் கொண்ட அந்த லொட்டரி சீட்டை ஒரு நாள் முன்பு தான் (சனிக்கிழமை) வாங்கியுள்ளார். ஆனால் அது தனது முதல் தேர்வு அல்ல என்றும், முதலில் ஒரு டிக்கெட்டை வாங்கி, அது பிடிக்கவில்லை என்பதால் இந்த டிக்கெட்டை வாங்கியதாக அனூப் கூறினார்.

அது அவரது வாழ்க்கையே மாற்றியுள்ளது. வீடு கட்டுவதற்காக வங்கியில் லோன் வேண்டு விண்ணப்பித்திருந்த அனூப் கூறுகையில், “கடன் தொடர்பாக இன்று வங்கி அழைத்தது, இனி அது தேவையில்லை. நானும் மலேசியா செல்லமாட்டேன்” என்று கூறினார்.

அவர் கடந்த 22 ஆண்டுகளாக லாட்டரி சீட்டுகளை வாங்கி வருகிறார், கடந்த காலங்களில் சில நூறுகள் முதல் அதிகபட்சம் ரூ. 5,000 வரையிலான தொகைகளை வென்றுள்ளதாக அனூப் கூறினார்.

“நான் வெற்றி பெறுவேன் என்று எதிர்பார்க்கவில்லை, அதனால், நான் டிவியில் லாட்டரி முடிவுகளைப் பார்க்கவில்லை, ஆனால், நான் எனது தொலைபேசியைப் பார்த்தபோது, ​​​​நான் வெற்றி பெற்றதைக் கண்டேன், என்னால் நம்ப முடியவில்லை, அதை என் மனைவியிடம் காட்டினேன். அவள் அதை உறுதிப்படுத்தினாள்” என்று அவர் கூறினார்.

“ஆனால் நான் இன்னும் டென்ஷனாக இருந்ததால், எனக்கு தெரிந்த லாட்டரி சீட்டு விற்கும் ஒரு பெண்ணுக்கு போன் செய்து எனது டிக்கெட்டின் படத்தை அனுப்பினேன். அது வெற்றி எண் என்பதை அவர் உறுதிப்படுத்தினார்” என்று அனூப் கூறினார்.

வரிகள் கழிக்கப்பட்ட பிறகு, அனூப் சுமார் ரூ.15 கோடியை வீட்டிற்கு எடுத்துச் செல்வார். விழுந்த பரிசில் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு, அவர் தனது குடும்பத்திற்கு ஒரு வீட்டைக் கட்டுவதும், அவர் செலுத்த வேண்டிய கடன்களை அடைப்பதும் தான் தனது முதல் முன்னுரிமை என்றார்.

அதுமட்டுமின்றி, அனூப் தனது உறவினர்களுக்கு உதவுவதாகவும், சில தொண்டு வேலைகளைச் செய்வதாகவும், கேரளாவில் உள்ள ஹோட்டல் துறையில் ஏதாவது தொடங்குவதாகவும் கூறினார். தற்செயலாக, கடந்த ஆண்டும் ஓணம் பம்பர் லொட்டரியை (ரூ.12 கோடி) ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர் ஒருவர் தான் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லிப்டுக்குள் ஆசிரியைக்கு நேர்ந்த விபரீதம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

மும்பையில்..

மும்பை மலாடு சிஞ்சோலி பந்தர் பகுதியில் இயங்கிவரும் உயர்நிலை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஜெனல் பெர்னாண்டஸ் (வயது 26).

இவர் பள்ளியின் 6-வது மாடியில் மாணவர்களுக்கு பாடம் நடத்திவிட்டு ஆசிரியர்கள் ஓய்வு அறைக்குச் செல்வதற்காக 2-வது மாடிக்கு லிப்ட் ஏறியுள்ளார். அப்போது லிஃப்டின் முன் கதவு மூடப்படாத நிலையில் லிப்ட் நகரத்தொடங்கியுள்ளது.

இதில் லிஃப்ட் கதவுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டார். லிப்ட் மேலே செல்ல செல்ல ஆசிரியரின் தலையில் பயங்கரமாக அடிபட்டுள்ளது. பின்னர் அவரின் அலறல் சத்தம் கேட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அங்கு வந்து அவரை மீட்டுள்ளனர்.

மேலும் அந்த காயமடைந்த ஆசிரியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

அந்த பள்ளியில் சிறிது மாதத்துக்கு முன்புதான் அவர் பணியில் சேர்ந்ததாகவும் ஒரு வருடத்துக்கு முன்புதான் அவருக்கு திருமணம் முடிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர். சம்மந்தப்பட்ட அந்த லிப்ட் சிறிது நாட்களுக்கு முன்னர்தான் பழுது பார்க்கப்பட்டது என்றும் இது போன்ற சம்பவம் நடைபெறுவது இதுதான் முதல் முறை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

நாளை முதல் மின்வெட்டு நேரம் அதிகரிப்பு!!

மின்வெட்டு..

மின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, நாளை(20.09) மற்றும் நாளை மறுதினம்(21.09) ஒரு மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் ஒரு மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, மாலை 6 மணி தொடக்கம் 10 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மின்வெட்டு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றுவரை 1 மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் நாளை முதல் ஒரு மணிநேரமும் 20 நிமிடங்களாக மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

காதல் தோல்வியால் விஷால் பட நடிகை தூக்கு போட்டு தற்கொலை!!

தீபா..

விஷாலின் துப்பறிவாளன் படத்தில் நடித்த தீபா என்பவர் காதல் தோல்வியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வந்தவர் தீபா என்கிற ஜெஸி பவுலின். 29 வயதான அவர் வாய்தா படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் அவர் தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதல்கட்ட விசாரணையில் காதல் தோல்வியால் தீபா இப்படி ஒரு விபரீத முடிவு எடுத்தது தெரிய வந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதல் தோல்வியால் ஒரு நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவின் மரணம் குறித்து அறிந்த திரையுலகினரும், ரசிகர்களும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். காதல் தோல்விக்கு இது தீர்வில்லையே தீபா, அவசரப்பட்டுவிட்டீர்களே என்று சிலர் கூறியுள்ளனர்.

பார்த்திபனை பிரிந்தது இதற்காக தான் : மனம்திறந்த நடிகை சீதா!!

நடிகை சீதா..

எதிர்பார்த்த அன்பு கிடைக்காததால் தான் நடிகர் பார்த்திபனை பிரிந்ததாக நடிகை சீதா தெரிவித்துள்ளார். ஆண்பாவம் படம் மூலம் அறிமுகமான சீதா, புதிய பாதை படத்தில் பார்த்திபனுடன் இணைந்து நடித்தார்.

அதன் பிறகு பார்த்திபனும், சீதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இந்த நட்சத்திர ஜோடி 11 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்டது.

இந்த நிலையில் நடிகை சீதா அளித்த நேர்காணல் ஒன்றில் பார்த்திபனை பிரிந்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘பார்த்திபன் தினமும் தொலைபேசியில் அழைத்து அந்த மூணு வார்த்தையை மட்டும் சொல்லிவிடுங்கள் என கேட்பார்.

ஒருநாள் பேசும்போது ஐ லவ் யூ என்று நான் சொன்னேன். திருமணம் முடித்த பின்னர் எதிர்பார்ப்புகள் இருந்தது. என்னுடைய எதிர்பார்ப்பு என்னவாக இருந்தது என்றால், கணவனிடம் இருந்து முழுதாக அன்பு கிடைக்க வேண்டும் என்பது தான்.

இது கூட இல்லை என்றால் பின் வாழ்க்கையில் என்ன தான் இருக்கிறது’ என தெரிவித்துள்ளார். மேலும் அவர், ஒரு பெண்ணுக்கு சுயமரியாதை இருக்க வேண்டும். கணவர் எந்த வேலை செய்தாலும் மனைவியை மதிக்க வேண்டும். அவருடைய கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

இருவருக்குள்ளும் மரியாதை என்பது இருக்க வேண்டும். மரியாதை கொடுத்து நடந்தால் எந்த துறையில் கணவன், மனைவி வேலை பார்த்தாலும் விவாகரத்து என்பது இருக்காது எனவும் தெரிவித்தார்

மனைவியின் சிறுநீரகத்தை திருடி இரண்டாம் திருமணம் செய்த கணவன் : உண்மை தெரிந்தவுடன் நடந்த சம்பவம்!!

ஒடிசாவில்..

இந்திய மாநிலம் ஒடிசாவில் தனது ம.னைவியின் சி.றுநீரகத்தை தி.ரு.டி, அதில் வந்த பணத்தில் இரண்டாம் திருமணம் செய்த நபர் கை.து செ.ய்யப்பட்டுள்ளார்.

ஒடிசா மாநிலம் மல்கான்கிரி மாவட்டம் கட்டமீத்தா கிராமத்தில் வசித்து வந்தவர் பிரசாந்த் (34). வங்கதேசத்தைச் சேர்ந்த இவர் ச.ட்.ட.வி.ரோதமாக அங்கு குடியேறியுள்ளார்.

அதே கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சிதா என்ற பெண்ணை பிரசாந்த் காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு இரண்டு கு.ழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் வ.யிற்று வ.லி கா.ரணமாக ரஞ்சிதா ம.ருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அவரது உ.டலை ப.ரிசோதித்தபோது ஒ.ரு சி.றுநீரகம் இ.ல்லை என்பது தெரிய வந்தது.

இதனால் அ.தி.ர்.ச்சியடைந்த ரஞ்சிதாவுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் நியாபகம் வந்துள்ளது. வ.யிற்று வ.லி ஏ.ற்பட்டபோது சி.றுநீரகத்தில் கல் இருக்கலாம் எனக் கூறி அ.று.வை சி.கி.ச்சை செய்துகொள்ள ரஞ்சிதாவை அவரது கணவர் பிரசாந்த் க.ட்.டாயப்படுத்தியுள்ளார்.

ஆனால் மனைவிக்கு தெரியாமல் சி.றுநீரகத்தை எடுத்து அவர் விற்றுள்ளார். அதில் வந்த பணத்தை எடுத்துக் கொண்டு பெங்களூருக்கு சென்று, அங்கே ஒரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்திருக்கிறார்.

இதனை க.ண்டுபிடித்த ரஞ்சிதா ஆ.தாரத்துடன் பிரசாந்த் மீ.து பொ.லிசில் பு.கா.ர் அ.ளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பிரசாந்தை கை.து செ.ய்த பொலிசார் அவரிடம் வி.சாரணை நடத்தி வருகின்றனர்.

நண்பர்கள் கொடுத்த திருமண பரிசு.. மேடையிலேயே கதறி அழுத மணமகன்!!

கள்ளக்குறிச்சியில்..

கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன். இவருக்கும் மதி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. அதனைத் தொடர்ந்து நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், மணமகனின் நண்பர்கள் திருமண பரிசு கொடுத்து அதனை திறந்து பார்க்குமாறு கூறியுள்ளனர்.

மணமகன் அறிவழகன் பரிசை திறந்தபோது இன்ப அதிர்ச்சியில் மேடையிலேயே கதறி அழுதார். அதற்கு காரணம் உயிரிழந்த அறிவழகனின் தந்தையின் உருவ படத்தை தான் சிறிய கட்-அவுட்டாக செய்து பரிசளித்துள்ளனர்.

பின்னர் ஆனந்த கண்ணீர்விட்ட மணமகனை அவரது நண்பர்கள் கட்டியணைத்து ஆசுவாசப்படுத்தினர். நண்பர்களின் இந்த செயல் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் மணமகனின் நண்பர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.

திருமணமான 4 மாதத்திலேயே இளம் பெண் எடுத்த விபரீத முடிவு : விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!!

ஈரோடில்…

ஈரோடு மாவட்டத்தில் திருமணமாகி 4 மதமே ஆன நிலையில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், தோட்டக்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் இந்து.

ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவருக்கு விஷ்ணு பாரதி என்பவருடன் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து தம்பதிகள் சென்னையில் தங்கி வேலைபார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் 10 நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத பாட்டியைப் பார்ப்பதற்காக இந்து வந்துள்ளார். பின்னர், நேற்று வீட்டில் தனது அறைக்குச் சென்ற இந்து நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் முகத்தில் பிளாஸ்டிக் கவரை சுற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதைப்பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் போலிஸார் நடத்திய விசாரணையில், ஹீலியம் வாயுவை பிளாஸ்டிக் கவருக்குள் செலுத்தி அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

அதேபோல் ஹீலியம் வாயு சிலிண்டரை ஆன்லைனில் வாங்கியதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமாகி நான்கு மாதங்களே ஆவதால் இந்துவின் தற்கொலைக்கான காரணம் குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். திருமணமாகி நான்கு மாதத்திலேயே புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலியிடம் தப்பியோட முயன்ற இளம் பிக்குவுக்கு நேர்ந்த பரிதாபம்!!

இளம் பிக்கு..

டுபாயில் உள்ள தனது முஸ்லிம் காதலியிடம் செல்வதற்கு முயன்ற இளம் பிக்கு ஒருவை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சீதுவை நந்தாராம விஹாரையின் விஹாராதிபதி நெதகமுவ மஹாநாம படு கொலை சம்பவம் தொடர்பாக இளம் பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.

தடுப்புக்காவல் உத்தரவில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரான இளம் பிக்குவை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறையில் வைக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதவான் மிலான் ஜயசூரிய நேற்று (17) சனிக்கிழமை உத்தரவிட்டார்.

ஏக்கல சுகந்தசிறி (வயது 18) என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்படுள்ளார். சீதுவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனுஷ்க பண்டாரவின் வழிகாட்டலின் கீழ் குற்றத்தடுப்பு பிரிவினர் சந்தேக நபரை கட்டுநாயக்காவில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

சந்தேகரபராக பிக்கு விஹா​ராதிபதியை கொலைச் செய்துவிட்டு, விஹாரையில் இருந்த பெறுமதியான இரண்டு வாகனங்களை விற்றுள்ளார். இதனையடுத்து டுபாயில் உள்ள தனது முஸ்லிம் காதலியிடம் செல்வதற்கு முயன்ற போதே கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

விஹாராதிபதியை படுகொலை செய்வதற்காக முஸ்லிம் காதலியின் உறவினர்கள் சிலர் ஒத்துழைத்தாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.