ஊமாரெட்டியூர் சுந்தராம்பாளையம் காலனியை சேர்ந்தவர் முருகன் என்கிற குருசாமி. இவருக்கு புஷ்பராஜ்(13), அபினேஷ் (6) என்ற 2 மகன்களும், ஹர்த்திகா (3) என்ற மகளும் உள்ளனர்.
இதில் ஊமாரெட்டியூரில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வரும் அபினேஷ் வழக்கம்போல் நேற்று பள்ளி முடிந்து அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்தான்.
அப்போது எதிர்பாராதவிதமாக வீடு கட்ட தோண்டப்பட்ட 8 அடி பள்ளத்தில் மழைநீர் தேங்கி இருந்ததை பார்க்காமல் அதில் விழுந்து சிறுவன் உயிரிழந்துள்ளர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓராண்டு காலமாக மனைவியின் நினைப்பிலேயே வாழ்ந்து வந்த ரவுடி அவரது முதலாம் ஆண்டு நினைவஞ்சலியன்று தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டார். சென்னை சூளைமேடு ராஜா புரனிகர் தெருவைச் சேர்ந்தவர் ரவுடி பிரசாந்த்(34).
இவர் மீது சூளைமேடு காவல் நிலையத்தில் ஒரு கொலைவழக்கும், கோடம்பாக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த ஆண்டு இவரது மனைவி தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டார். இதனையடுத்து இவர், சூளைமேடு பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு குடிசை வீட்டில் இருந்த இவர், திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தீக்குளித்துள்ளார்.
இவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த வீட்டில் வசித்து வந்த இவரது சகோதரர் பிரதீப் என்பவர் வெளியே வந்து பார்த்துள்ளார். வீட்டில் இருந்து புகை வந்துள்ளது. இதனையடுத்து பிரதீப் காவல் கட்டுப்பாட்டறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
சம்பவம இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து, உடலில் தீக்காயத்துடன் இருந்த பிரசாந்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தீக்காய தடுப்பு பிரிவில் அனுமதித்தனர்.
இதனையடுத்து கோடம்பாக்கம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பிரசாந்தின் மனைவி குளோரி கடந்த ஆண்டு இதே நாளில், இருவருக்கும் இடையேயான பிரச்னையில் தீக்குளித்து இறந்துவிட்டதாகவும் நேற்று மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் எனவும் தெரியவந்துள்ளது.
ரவுடி பிரசாந்த், கடந்த ஓர் ஆண்டாக மனைவியின் ஞாபகமாகவே இருந்து வந்துள்ளார் எனவும் எப்போதும் மனைவியை பற்றியே சக நண்பர்களிடத்தில் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு நாளில், துக்கம் தாங்காமல் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது போலவே ரவுடி பிரசாந்தும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ரவுடி ஒருவர் மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் அவரது நினைவு நாளிலேயே தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தங்கை வேலை செய்த வீட்டில் அவருக்கு ஏதோ பிரச்சினை நடந்துள்ளது எனவும் அவர் வீட்டுக்கு வந்தால், அவை வெளியாகிவிடும் என்ற அச்சத்தில் தங்கைக்கு இந்த நிலைமையேற்பட்டிருக்கலாம் எனவும்,
முன்னாள் அமைச்சர் றிசார்ட் பதியூதீனின் வீட்டில் வேலை செய்த போது தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த இஷாலினியின் சகோதரர் கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திரா ஜயசூரிய முன்னிலையில் நேற்று நடைபெற்ற மரண விசாரணையில் சாட்சியமளிக்கும் போது கூறியுள்ளார்.
மரண விசாரணை சாட்சியங்கள் நேற்று விசாரிக்கப்பட்ட போதே சாட்சியாளரான விக்னேஸ்வரன் திருபிரசாத் இதனை கூறியுள்ளார்.
“றிசார்ட் பதியூதீனின் பௌத்தாலோக மாவத்தையில் உள்ள வீட்டில் தங்கை வேலை செய்து வந்தார். அப்போது தனக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அம்மாவிடம் தொலைபேசியில் கூறியுள்ளார்.
தங்கை வைத்தியசாலையில் இருப்பதாக கூறி கடந்த 2021 ஆம் ஆண்டு 7 ஆம் மாதம் 3 ஆம் திகதி அம்மாவுக்கு பொரல்லை பொலிஸ் நிலையத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
நான் தங்கையை பார்க்க வைத்தியசாலைக்கு சென்றேன். பார்க்கவிடவில்லை. அதே மாதம் 15 ஆம் திகதி எனது தங்கை உயிரிழந்தார். தீயில் எரிந்து எனது தங்கை உயிரிழந்துள்ளார்.
தனக்கு பிரச்சினை இருப்பதாக தங்கை கூறிய போது 2021 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் திகதி வந்து அழைத்துச் செல்வதாக அம்மா கூறியிருந்தார்.
இதனிடைலேயே தங்கை தீக்காயங்களுக்கு உளளாகியுள்ளார். தங்கை வேலை செய்த வீட்டில் தங்கைக்கு பிரச்சினை நடந்துள்ளது. அவர் வீட்டுக்கு சென்றால், அவை வெளியாகி விடும் என்பதால் இப்படி செய்துள்ளனர் என நான் நினைக்கின்றேன். இது சம்பந்தமாக நான் பொலிஸாரிடமும் வாக்குமூலம் வழங்கியுள்ளேன்” என விக்னேஸ்வரன் திருபிரசாத் கூறியுள்ளார்.
“எனது மகள் வேலை செய்த காலத்தில் தனக்கு பிரச்சினை இருப்பதாக என்னிடம் கூறினார். இறுதியாக என்னிடம் பேசும் போது பொறுத்திரு நான் வந்து அழைத்துச் செல்கிறேன் என்று கூறினேன்.
எனது மகள் அந்த வீட்டுக்கு வேலைக்கு சென்ற பின்னர் ஒரு நாள் கூட விடுமுறையில் வீட்டுக்கு வரவில்லை. நாங்களும் அவரை பார்க்க அங்கு சென்றதில்லை.
மகள் எரிக்காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் இருப்பதாக பின்னர் அறிந்துக்கொண்டேன். நாங்கள் மகளை பார்க்க சென்றோம். வைத்தியசாலைக்கு சென்று பார்த்தோம் மகளுக்கு தையல் போடப்பட்டிருந்தது.
ஜூலை 15 ஆம் திகதி எனது மகள் இறந்து போனாள். நான் மரண விசாரணைகளில் கலந்துக்கொள்ளவில்லை. நன்றாகவே எனது மகள் வீட்டில் இருந்து சென்றார். அவளுக்கு என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது.
வீட்டில் இருந்த காலத்தில் எனது மகளுக்கு எந்த காதல் தொடர்பும் இருக்கவில்லை” என இஷாலினியின் தாய் தனது சாட்சியத்தில் கூறியுள்ளார். இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஓவம் விளையாட்டு கழகத்தின் 2022ம் ஆண்டிற்கான மென்பந்து சுற்றுபப்போட்டி கடந்த 18.09.2022ம் திகதி ஓவம் விளையாட்டு கழகத்தின் மைதானத்தில் நடைபெற்றது.
இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா தமிழ் பிரதேச சபை தவிசாளர் திரு.தர்மலிங்கம் யோகராசா, சிறப்பு விருந்தினர் கதிர்காமசேகரன் சசீலன் (Herlish Agriculture ஏற்றுமதி பிரிவு வடமாகாண முகாமையாளர்) மற்றும்,
விருந்தினர்களாக வவுனியா மாவட்ட கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.J. தாட்சாயினி, வன்னாங்குளம் கண்ணகி அம்மன் ஆலயத்தின் செயலாளர் திரு.பா.திபாகரன் மற்றும் கழகத்தின் தலைவர் திரு வரதகுமார் மற்றும் செயலாளர் திரு.விஸ்ணுதாஸன் ஓவம் விளையாட்டு கழகத்தின் ஒழுங்கமைப்பாளர் திரு தமிழருவி சிவகுமாரன்,
கழகத்தின் ஒழுக்காற்று குழு உறுப்பினர் திரு. முரளிதரன் (ஆசிரிய கல்வியாளர் வான்மை விருத்தி நிலையம் – புளியங்குளம்) ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இறுதி பேட்டிக்கு ஓவம் A அணி மற்றும் புதிய ஒளி அணியினர் மோதிகொண்டனர். நாணைய சுழற்சியில் வெற்றி பெற்ற ஓவம் A அணியின் தலைவர் கோகுலதாஸன் கழத்தடுப்பை தெரிவுசெய்தார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய புதிய ஒளி அணியினர் 06 ஓவரை எதிர்கொண்டு 04 விக்கெட் இழப்பிற்கு மொத்தமாக 25 ஓட்டங்களை பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓவம் A அணியினர் 4 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 26 ஓட்டங்களை பெற்று கிண்ணத்தை கைப்பற்றினர்.
இதில் ஆட்டநாயகன் விருதை யது பெற்றுக்கொண்டார். Play Boys அணிக்கு எதிராக பெற்றுகொண்ட 50 ஓட்டங்களுக்கு மற்றும் சிறந்த பந்துவீச்சாளருக்கான பரிசை ஓவம் A அணியின் யெனோஜன் பெற்றுக்கொண்டார்.
வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் 2022 ஆம் ஆண்டுக்கான (NVQ Level 3,4) கள உதவியாளர் – விவசாயம் கற்கைநெறி
ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் அதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
பாடநெறிக்கான விண்ணப்பத்தினை கல்விப் பொது சாதாரண தரம் வரை கல்விகற்ற 17வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்
என்பதுடன் குறித்த கற்கை நெறிகள் 6 மாதம் முழுநேரமாக இடம்பெறும் விண்ணப்பப் படிவங்களை தொழில்நுட்பக் கல்லூரியில் பெற்றுக் கொள்ள முடியும்.
மேலதிக தொடர்புகளுக்கு அதிபர் , தொழில்நுட்பக்கல்லூரி , மன்னார் வீதி , நெளுக்குளம் ,வவுனியா என்ற முகவரயில் நேரில் சென்று அல்லது 024 2223664 , 024 2226720 , 024 2050177 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தவும்
இந்திய மாநிலம் கேரளாவில் பெண்ணொருவர் கணவரின் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா. இவருக்கும் வழக்கறிஞரான கண்ணன் நாயர் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் ஐஸ்வர்யா வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து அவரது சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது ஐஸ்வர்யா எழுதிய கடிதம் ஒன்று பொலிஸாருக்கு கிடைத்தது. அதில் ‘கணவர் என்னை அடிக்கடி அடிப்பார். என்னிடம் மோசமாக நடந்துகொள்வார். அவர் என்னை அன்பாக நடத்தியதே இல்லை.
என்னை மோசமாக கொடுமைப்படுத்துவார். என் தாலியையும் அவர் அறுத்துவிட்டார். என் சம்பள பணத்தை எல்லாம் வாங்கிக்கொண்டு செலவிற்கு கூட பணம் தர மாட்டார். அவர் தான் என் மரணத்திற்கு காரணம்’ என தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கண்ணன் நாயரை கைது செய்த பொலிஸார், அவரிடம் ஐஸ்வர்யா தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக வரதட்சணை கொடுமையால் விஸ்மயா என்ற பெண் தற்கொலை செய்துகொண்டது கேரள மாநிலத்தையே உலுக்கியது.
அதன் பின்னர் வரதட்சணை கொடுக்க மாட்டோம், வாங்க மாட்டோம் என்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் கணவரின் கொடுமையால் மீண்டும் ஒரு பெண் உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்ற தியாக தீபம் திலீபனின் ஊர்திப் பவனிக்கு போக்குவரத்து பொலிசார் இடையூறை ஏற்படுத்தியுள்ளனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் இளைஞர் அணியினரின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ‘திலீபன் வழியில் வருகின்றோம்’ என்ற ஊர்தி பவனியானது கிழக்கு மாகாணத்தின் பொத்துவிலில் ஆரம்பித்து யாழ் நல்லூர் நோக்கி செல்கின்றது.
5 ஆம் நாளான நேற்றும் (19.09), 6 ஆம் நாளான இன்றும் குறித்த திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி வவுனியாவின் பல்வேறு கிராமங்களுக்கு சென்றிருந்தது. இதன்போது மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
இதன்போது தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய வாகனம் கண்டி வீதி மற்றும் மன்னார் வீதிகளில் பயணித்த போது கடமையில் நின்ற போக்குவரத்து பொலிசார் குறித்த ஊர்திப் பவனிக்கு இடையூறை ஏற்படுத்தி வாகனத்தை வழி மறித்து,
ஊர்திப் பவனி தொடர்பான விளக்கங்களை கேட்டதுடன், அதில் பயணித்தவர்களின் பெயர் விபரங்களையும் பதிவு செய்திருந்ததுடன், சாரதியின் சாரதி அனுமதிப் பத்திரத்தையும் புகைப்படம் எடுத்ததன் பின் செல்வதற்கு அனுமதி வழங்கியிருந்தனர்.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், ரெலோ அமைப்பின் மத்திய குழு உறுப்பினருமான து.நடராஜசிங்கம் (ரவி) மரணமடைந்துள்ளார்.
வீட்டில் தனது பிள்ளைக்கு கட்டியிருந்த தொட்டில் கயிற்றை விளையாட்டாக கழுத்துக்கு போட்ட போது அது இறுகியிருந்தது. இதனை அவதானித்த குடும்பத்தினர் மற்றும் அயலவர்கள் அவரை மீட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும், அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னரே மரணடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் முன்னிலையில் இன்று (20.09) மரண விசாரணைகள் இடம்பெற்ற நிலையில், தனது குழந்தையின் தொட்டில் கயிற்றினை தளபாடம் ஒன்றின் மேல் ஏறி நின்று கழுத்தில் போட்ட போது,
அவர் ஏறி நின்ற தளபாடம் வீழ்ந்தமையால் கயிறு இறுகி மரணமடைந்துள்ளதாக மரண விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. விசாரணைகளின் பின் சடலம் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சங்கரன்கோவிலில் தனது காதல் மனைவியை கடத்தியதாக கூறி கணவர் அளித்த புகாரின் பேரில் 10 பேர் மீது சங்கரன்கோவில் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பால்பண்ணை தெருவை சேர்ந்தவர் சங்கர் முருகன். இவர் திருப்பூர் பகுதியில் பனியன் கம்பெனியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது கோமதி என்ற பெண்மணிக்கும் சங்கர்முருகனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
இருவரும் கடந்த 28.8.2022 அன்று திருப்பூர் பகுதியில் இருந்து சங்கரன்கோவில் வந்து ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தனது மனைவியை காணவில்லை என்றும், யாரோ கடத்திச் சென்று விட்டார்கள் எனவும் சங்கரன்கோவில் நகர காவல் நிலையத்தில் சங்கர் புகார் மனு அளித்தார்.
இதைத் தொடர்ந்து கோமதியின் உறவினர்களான பவுன்பாண்டியன், அணில், ராஜம்மாள், அனிதா உட்பட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
டிக்டாக் மூலம் வாழ்ந்தவர்களும் உண்டு,அதனால் தொல்லைகளை அனுபவித்து வருபவர்கள் ஏராளம். ஆனால் Khaby Lame என்பவர் டிக்டாக் வாயிலாக தொட்டு பார்க்க முடியாத அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?
கொரோனா காலத்தில் உலகம் முழுவதும் பிரபலமான ஒருவர் தான் இந்த Khaby Lame. ஹோட்டல், வீடுகளில் வேலை செய்து வந்தநிலையில், வேலை இழந்த விரக்தியில் டிக்டாக் செய்து பிரபலமானார்.
டிக்டாக் தளத்தில் உலகளவில் அதிகப் பாலோவர்களைக் கொண்டு உள்ளது Khaby Lame தான். இவரது டிக்டாக் கணக்கை சுமார் 150 மில்லியன் பேர் பாலோ செய்கின்றனர்.
இன்று டிக்டாக், இன்ஸ்டா தளத்தில் ஒரு போஸ்ட் போடுவதற்கு 750000 டாலர் வாங்குகிறார், அதாவது கிட்டதட்ட 6 கோடி ரூபாய். இதுமட்டும் அல்லாமல் இந்த வருட இறுதிக்குள் 10 மில்லியன் டாலர் சொத்து மதிப்பு அளவை எட்ட உள்ளார் Khaby Lame.
இவருடைய வளர்ச்சி பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சாதாரண வேலையைச் செய்து வந்த Khaby Lame இன்று 700 கோடி ரூபாய் சொத்து மதிப்பை எட்டவுள்ளார்.
அதனோடு, Khaby Lame தன்னைப் போவே இருக்கும் பிற விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள், சமுகவலைதள influencer-களை இணைக்கும் Iron Corporation என்னும் நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். Khaby Lame சற்று வித்தியாசமானவர் ரியல் எஸ்டேட்-ல் அதிகளவில் முதலீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செம்பரம்பாக்கம் ஏரியில் செல்ஃபி எடுக்கும் போது தவறிவிழுந்து நீரில் மூழ்கி இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம், பாரதியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன்.இவரது மகன் விக்னேஷ் (20). இவர் கார் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.
இவரது நண்பர் தரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரிச்சர்ட்ஸ் (16) 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் செம்பரம்பாக்கம் ஏரியைச் சுற்றிப் பார்ப்பதற்காகச் சென்றனர்.
அங்குச் சென்ற இவர்கள் செம்பரம்பாக்கம் ஏரியைச் சுற்றிப் பார்த்துவிட்டு மதகின் அருகே இறங்கி தங்களது செல்போனில் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் நீரில் விழுந்து மூழ்கியுள்ளனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள் இருவரையும் மீட்க முயன்றனர். மேலும் இது குறித்து உடனே தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஏரியில் இறங்கி நீண்ட நேரத்திற்கு இருவரின் உடலையும் இறந்த நிலையில் மீட்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்கள் இருவரும் செல்ஃபி எடுக்கும் போது ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலுாரைச் சேர்ந்தவர் வரதராஜன். 73 வயதுடைய இவர், TVS நிறுவனத்தில் ‘பார்சல்’ லாரி டிரைவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு சாந்தி, ஹாமலா, சங்கீதா, ஷோபனா என 4 மகள்களும், செந்தில்நாதன் என்ற மகன் என 5 பிள்ளைகள் உள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் திருமணமான நிலையில், முதியவருக்கு 8 பேரகுழந்தைகள் உள்ளனர். கடந்த ஆண்டு முதாயவரின் மனைவி இறந்ததையடுத்து தனது மகன் செந்தில்நாதனுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தனது பேரக்குழந்தைகளோடு விளையாடிக்கொண்டிருந்த முதியவர், அவர்களிடம் ‘தனக்கு சிறு வயதில் காத்து குத்தவே இல்லை’ என்று விளையாட்டாக கூறியிருக்கிறார். இதனை கேட்ட அவரது மகள்கள் தனது தந்தைக்கு காது குத்தி அவரது ஆசையை நிறைவேற்ற முடிவு செய்துள்ளனர்.
அதன்படி சேந்தமங்கலம் அருகே நைனாமலை பொன் வரதராஜ பெருமாள் கோவிலில் வைத்து முதியவர் வரதராஜனுக்கு நேற்றைய முன்தினம் மொட்டை அடித்து, காது குத்தப்பட்டது. இந்த விழாவில் மகன், மகள்கள், உறவினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து முதியவர் வரதராஜன் கூறுகையில், ‘சிறு வயதில் எனக்கு காது குத்த வைத்திருந்த தோடு, துணிகள் திருடு போனது. தாயும் இறந்து விட்டதால், காது குத்தாமல் விட்டு விட்டனர்.
இது என் மனதில் நீண்ட நாட்களாக பெரும் குறையாகவே இருந்தது. அதை தற்போது என் மகள்கள் நிறைவேற்றியுள்ளனர். இந்த நிகழ்வால், நான் குழந்தையாகவே உணர்கிறேன். வயதான பெற்றோர்களின் தீராத ஆசைகளை, பிள்ளைகள் நிறைவேற்ற வேண்டும்.” என்றார். இந்த நிகழ்வு அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகனின் உண்டியலை உடைத்து தந்தை செய்த காரியம் கோடீஸ்வரராக மாற்றியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் ஸ்ரீவரஹம் பகுதியைச் சேர்ந்த அனூப் என்பவர் ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகின்றார். இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வாழ்ந்து வரும் நிலையில், குடும்ப கஷ்டம் காரணமாக மலேசியாவிற்கு வேலைக்கு சேர திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் மகன் உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை எடுத்து கடந்த சனிக்கிழமை லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார். இவர் வாங்கிய டிக்கெட்டிற்கு ரூ.25 கோடி ரூபாய் ஓணம் பம்பர் பரிசு விழுந்துள்ளது.
இவரது வெற்றிக்கான டிக்கெட் TJ 750605 என்பதாகும். குறித்த டிக்கெட்டினை இவர் இரண்டாவது தான் தேர்வு செய்து வாங்கியுள்ளாராம். முதலில் வேறு டிக்கெட் எடுத்ததாகவும், அதன் பின்பு இரண்டாவதாக மாற்றம் செய்த டிக்கெட்டிற்கே லாட்டரி விழுந்துள்ளதாக கூறியுள்ளார்.
கடந்த 22 ஆண்டுகளாக லாட்டரி சீட்டுகளை வாங்கிவரும் இவர், அவ்வப்போது 100, 200, முதல் 5000 வரை பரிசு பெற்றுள்ளார். ஆனால் இந்த முறை எதிர்பார்க்காத வெற்றியினை பெற்று 25 கோடி வென்றுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் டிவியில் லாட்டரி முடிவுகளைப் பார்க்கவில்லை. இருப்பினும், எனது தொலைபேசியைச் சரிபார்த்தபோது, நான் வெற்றி பெற்றதைக் கண்டேன். என்னால் நம்ப முடியாமல் என் மனைவியிடம் காட்டிய பின்பு, அவர் தான் வெற்றி எண் என்பதை உறுதி செய்ததாக கூறியுள்ளார்.
வரி பிடித்தம் செய்த பின்பு ரூ.15 கோடியை வீட்டிற்கு எடுத்துச் செல்லும் இவர், தனது கடனை அடைத்துவிட்டு, சொந்தமாக வீடு மற்றும் கடை ஒன்றினை வைத்து வாழ்வதாகவும் கூறியுள்ளார்.
கர்நாடகாவில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்து வந்த கணவன், மனைவி ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடாக மாநிலம் சிக்கபள்ளாப்பூர் அடுத்த சூலகுண்டே பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (32) ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி சசிகலா (24). இந்த தம்பதிக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகின்ற நிலையில் குழந்தை பாக்கியம் இல்லை.
குழந்தை வேண்டி நீண்ட நாட்களாக ஏங்கி தவித்து வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று இரவு வழக்கம்போல உணவருந்திவிட்டு தம்பதி தூங்க சென்றனர். காலை வெகுநேரம் ஆகியும் இவர்களது வீட்டு கதவு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகித்து ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளனர்.
அப்போது, கணவன் மனைவி இருவரும் ஒரே சேலையில் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு பேரதிர்ச்சி அடைந்தனர். உடனே சிக்கபள்ளாப்பூர் ஊரக காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்தனர்.
கதவுடைத்து உள்ளே சென்ற போலீசார் இருவரது உடல்களையும் கீழே இறக்கி பிரேதப் பரிசோதனைக்காக சிக்கபள்ளாப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் தற்கொலைக்கான உண்மை காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக உறவினர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தம்பதி இருவரும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் சரியாக யாரிடமும் பேசாமல் இருந்து வந்ததாகவும், அதனால்கூட தற்கொலை செய்திருக்கலாம் என்றும் தெரிய வந்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த தண்டு மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (25). பிஇ பட்டதாரியான இவர் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் செல்போன் உதிரிபாகம் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அதே தனியார் தொழிற்சாலையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த தேன்மொழி (24) பணியாற்றி வந்தார்.
அப்போது இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட காதல் தேன்மொழியின் வீட்டிற்கு தெரிய வரவே தேன்மொழியை பணியில் இருந்து அவர்களது பெற்றோர் நிறுத்தியுள்ளனர். தேன்மொழி பணியிலிருந்து பாதியில் நின்ற பிறகும் 3 ஆண்டுகளாக அவர்களது காதல் தொடர்ந்து வந்துள்ளது.
சக்திவேலின் தாய் மற்றும் தந்தை கொரோனாவால் ஓராண்டிற்கு முன்பு மரணடைந்தனர். இதனை அடுத்து சக்திவேல் தன் ஒரே தங்கை பவானியுடன் வாலாஜா பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பவானிக்கு திருமணம் நடந்து முடிந்தது.
அதே நேரத்தில் தேன்மொழி கடந்த ஆகஸ்ட் மாதம் 5 தேதி வீட்டை விட்டு வெளியேறி சக்திவேலுடன் பதிவு திருமணம் செய்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து 10 ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்ட SP அலுவலகத்தில், தங்கள் இருவரும் (சக்திவேல் வன்னியர் தேன்மொழி அம்பலத்தார்) வேற்று சமுதாயத்தை சார்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் பெற்றோர்களால் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி தஞ்சமடைந்தனர்.
இந்த புகார் வாலாஜாபேட்டை காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு காவல் நிலையத்தில் பெண்ணின் வீட்டாரை அழைத்துப் பேசி சுமூகமாக இந்த பிரச்சனை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதற்கிடையே நண்பர்கள் உதவியோடு இருவருக்கும் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது.
இதன் காரணமாக வாலாஜா காவல் நிலையத்தில் பெற்றோர்களிடம் சுமுக பேச்சுவார்த்தை முடித்த அன்று இரவே வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியில் இருந்து பெங்களூரு செல்லும் பேருந்தில் பெங்களூரை நோக்கி சென்றுள்ளனர்.
இதனை நோட்டமிட்டு இருந்த பெண்ணின் உறவினர்கள் பேருந்தை பின் தொடர்ந்து சென்று வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்த சேர்காடு பகுதியில் பேருந்தை மரித்து சக்திவேலை தாக்கி பெண்ணை தங்களுடன் காரில் அழைத்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து மீண்டும் ராணிப்பேட்டை மாவட்ட SP அலுவலகத்தில் புகார் அளித்தபோது அந்தப் பெண்ணை வழிமறித்து அழைத்துச் சென்ற இடம் வேலூர் மாவட்டம் திருவலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடம் எனவே திருவலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தியுள்ளனர்.
திருவலம் காவல் நிலையத்தில் ஏற்கனவே இது தொடர்பான புகார் ராணிப்பேட்டை SP அலுவலகத்திலும் வாலாஜாபேட்டை காவல் நிலையத்திலும் விசாரிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் அங்கேயே சென்று புகார் அளிக்கும்படி சக்திவேலை திருப்பி அனுப்பியுள்ளனர்.
எந்த காவல் நிலையத்திலும் புகார் ஏற்றுக் கொள்ளப்படாத காரணத்தினால் வேலூர் சரக டிஐஜி அலுவலகத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார் சக்திவேல். அப்போது சக்திவேலை நீதிமன்றம் அணுகி ஆட்கொணர்வு மனு போடுமாறு அறிவுறுத்தி அங்கிருந்தும் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
மணு தாக்கல் செய்ய போதிய பணம் இல்லாத காரணத்தினால் சம்பள பணம் வந்த பிறகு அந்த மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் என காத்திருந்த சக்திவேல் கடந்த 13ஆம் தேதி அன்று அதீத மன உளைச்சல் காரணமாக எலி மருந்தை அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அவரை மீட்ட நண்பர்கள் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து பின்பு மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூன்று நாள் தொடர் சிகிச்சைக்கு பின்பு 16 ஆம் தேதி இரவு சக்திவேல் உயிர் இழந்தார்.
உயிரிழந்த சக்திவேலின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்பு நேற்று அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு இன்று தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில், சக்திவேல் இறப்பதற்கு முன்பு தனது டைரியில் எழுதியிருந்த கடிதம் கிடைத்தது.
அந்த கடிதத்தில் ” i am quit” என ஆரம்பித்து, என்னை மன்னித்துவிடு உன் முகத்தை பார்க்கும் அருகதை எனக்கு கிடையாது. இனிமேல் இனி ஒரு பிறவி இருந்தால் நாம் அங்கு சந்திக்கலாம். உன்னுடம் இருந்த 5 நாட்கள் என் உறவு, நண்பர்கள் அனைவரையும் தூக்கி எறிந்தேன்.
உன் அன்புக்கு நான் அடிமை ஆனேன். தற்கொலை என்பது கோழைத்தனம் என பலமுறை உன்னிடம் கூறியிருக்கிறேன். வேறு என்ன செய்வது தெரியாமல் உன்னை விட்டு இவ்வுலகை விட்டு என் அன்னையிடம் செல்கிறேன். யாரை நம்புவது என்று தெரியவில்லை முடிந்தால் நான் சென்ற பிறகு என்னை மறக்காமல் இரு.
என் ஆசை பொண்டாட்டி நாம் மூன்று வருடம் காதலில் இருந்தோம். இந்த 5 நாட்கள் நம் திருமண வாழ்க்கை சீக்கிரம் முடிவடையும் என கனவில் கூட நினைக்கவில்லை. போலீஸ் பஸ் ஏற்றிவிட்ட பிறகு எல்லாம் முடிந்து விட்டது. இனி நமக்கு எந்த தொந்தரவும் இல்லை. இனி நம்மை யாராலும் பிரிக்க முடியாது. என பேசிக்கொண்டு பேருந்தில் சென்ற போது உன் வீட்டு உன் விசுவாசிகள் இப்படி செய்வார்கள் என நான் ஒருபோதும் கனவில்கூட நினைக்கவில்லை .
நானும் வாலாஜா போலீஸ் ஸ்டேஷன், திருவலம் போலீஸ் ஸ்டேஷன், ராணிப்பேட்டை எஸ்பி ஆபிஸ் வேலூர் டிஐஜி ஆபீஸ் சென்று புகார் கொடுத்தும் உன்னை மீட்டு விடலாம் என எண்ணி ஏமாந்து போய் விட்டேன். கையில் கிடைத்த பொருளை தொலைத்த பாவி ஆனேன்.
நான் நீ ஆசைப்பட்டபடி உன் புகைப்படம் என் வீட்டில் மாட்டி விட்டேன். அதுபோல் நீ ஆசைப்பட்டது போல் உன் கணவனாய் உயிர் நீக்கம் செய்கிறேன் பாப்பு. ஐ அம் ரியலி சாரி பாபு ,மிஸ் யூ சோ மச் பாப்பு, லவ் யூ சோ மச் பாப்பு, என் ஆசை பொண்டாட்டி என இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இந்நிலையில், இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 609,534 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கையில் கடந்த மாதங்களை விட தற்போது தங்கத்தின் விலையில் நாளுக்கு நாள் பாரிய வீழ்ச்சி பதிவாகி வருகின்றது. கடந்த காலங்களை விட தற்போது தங்கத்தின் விலை கணிசமான அளவு குறைந்துள்ளதாக உள்ளூர் தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 172,050 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 157,750 ரூபாவாக பதிவாகியுள்ளது. எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது. எனினும், அடுத்து வந்த சில நாட்களில் 20 தொடக்கம் 40 ஆயிரம் ரூபாவால் இலங்கையில் தங்கத்தின் விலை குறைவடைந்து தற்போது 160,000 என்பதை அண்மித்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.