கல்லுக்குள் ஈரம் : சோகமே முடிவான ஒரு ரவுடியின் காதல் கதை : மனைவி இறந்த நாளில் அதே மாதிரி மரணம்!!

சென்னையில்..

சென்னை சூளைமேடு அருகே தனது மனைவியின் முதலாமாண்டு நினைவு நாளிலேயே கணவரும், சென்னையில் பிரபல ரவுடியுமான பிரசாந்த் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் பிரசாந்த். இவரது மனைவி குளோரி. பிரசாந்த் அப்பகுதியில் பிரபல ரவுடியாக சுற்றி திரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், பிரசாந்தின் மனைவி குளோரி கடந்த ஆண்டு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை நேற்று அனுசரித்த பின் ரவுடி பிரசாந்த் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

நள்ளிரவில் உடல் அடக்கம் ரவுடி பிரசாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ரவுடி பிரசாந்த் இன்று காலை உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனது மனைவியின் முதலாமாண்டு நினைவு நாளிலேயே கனவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிரசாந்த் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்தபோது நெகிழ்ச்சி தகவல் ஒன்று வெளியானது.

தீக்குளித்து தற்கொலை அதாவது பிரசாந்த் மீது சூளைமேடு காவல் நிலையத்தில் ஒரு கொலைவழக்கும், கோடம்பாக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த ஆண்டு இவரது மனைவி தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டார். இதனையடுத்து இவர், சூளைமேடு பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு குடிசை வீட்டில் இருந்த இவர், திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தீக்குளித்துள்ளார்.

தானும் தற்கொலை இவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த வீட்டில் வசித்து வந்த இவரது சகோதரர் பிரதீப் என்பவர் வெளியே வந்து பார்த்துள்ளார். வீட்டில் இருந்து புகை வந்துள்ளது. இதனையடுத்து பிரதீப் காவல் கட்டுப்பாட்டறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து, உடலில் தீக்காயத்துடன் இருந்த பிரசாந்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தீக்காய தடுப்பு பிரிவில் அனுமதித்தனர்.

மனைவியின் நினைவு ரவுடி பிரசாந்த், கடந்த ஓர் ஆண்டாக மனைவியின் ஞாபகமாகவே இருந்து வந்துள்ளார் எனவும் எப்போதும் மனைவியை பற்றியே சக நண்பர்களிடத்தில் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு நாளில், துக்கம் தாங்காமல் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது போலவே ரவுடி பிரசாந்தும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்உடலில் 67 சதவீத தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

நாளைமுதல் அதிகரிக்கும் மின்வெட்டு நேரம்!!

மின்வெட்டு..

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளை (23.09) முதல் ஞாயிறு (25.09) வரை 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

வெஸ்ட்கோஸ்டில் மின்நிலையத்தில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பழைய லக்சபான நிலையம் சேவையில் இன்மை ஆகிய காரணங்களால் மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏ முதல் டபிள்யூ வரையான 20 வலயங்களில் பகலில் 1 மணி நேரமும் இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாகும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இறந்த மகள் தூரிகை பற்றி பாடலாசிரியர் கபிலனின் கண்கலங்க வைத்த பதிவு!!

தூரிகை..

பிரபல தமிழ் திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை சில தினங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் மகளை நினைத்து கவிலன் வெளியிட்டுள்ள கவிதை அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

தமிழில் 500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியவர் பாடலாசிரியர் கபிலன், இவருடைய மகள் தூரிகை. இவர் எழுத்தாளர், ஆடை வடிவமைப்பாளர், ஸ்டைலிஸ்ட் என பன்முகத் தன்மையுடன் இயங்கி வந்தவர். ஆங்கில இதழ் ஒன்றை அண்மையில் தொடங்கியிருந்தார்.

இவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் கடந்த 9ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு பதிவினை போட்டிருந்த இவரா இந்த முடிவை எடுத்துள்ளார் என்ற கேள்வி தற்போதும் அனைவரையும் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்நிலையில் கவிஞர் மற்றும் பாடலாசிரியர் கபிலன், தன் மகள் தூரிகை குறித்து எழுதிய உருக்கமான கவிதைகளை தமது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

கபிலன் எழுதிய கவிதையில், “எல்லா தூக்க மாத்திரைகளையும் அவளே போட்டுக்கொண்டால் நான் எப்படி தூங்குவேன்” , “எங்கே போனாள் என்று தெரியவில்லை, அவள் காலணி மட்டும் என் வாசலில்” , “மின்விசிறி காற்று வாங்குவதற்கா… உயிரை வாங்குவதற்காக.?” , “அவள் கொடுத்த தேநீர் கோப்பையில் செத்து மிதக்கிறேன்,

எறும்பாய்..?” , “அவளுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா இல்லையா எனக்கு தெரியாது, அவளே என் கடவுள்..!” , “யாரிடம் பேசுவது.. எல்லா குரலிலும் அவளே பதிலளிக்கிறாள்..” , “பகுத்தறிவாளன் ஒரு கடவுளை புதைத்து விட்டான்..!” என்று மறைந்த தம் மகள் தூரிகை குறித்து கபிலன் கண்ணீரால் கவிதை வடித்துள்ளார்.

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தூரிகை கடந்த 2020ம் ஆண்டு தற்கொலை விழிப்புணர்வு குறித்த பதிவினை பதிட்டிருந்தார். அதில், “வாழ்க்கையில் எல்லா முடிவுகளுக்கும் ஒரு காரண காரியம் உண்டு. ஆனால் ஒன்றை முடித்துக் கொள்வது என்பது எஞ்சிய பயணத்தை முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டே இருக்கும்.

தற்கொலை என்பது எந்த பிரச்சினைக்கும் முடிவல்ல. நீங்கள் தற்கொலை செய்வதால் அணு அளவும் எதுவும் மாறிவிடப் போவதில்லை. வாழ்க்கையை இழக்கிறோம். மகிழ்ச்சியை இழக்கிறோம். அனுபவங்களை இழக்கிறோம். இன்பத்தை இழக்கிறோம். சிரிப்பு இழக்கிறோம். வாழ்க்கையை முழுமையாக இழக்கிறோம்.

உங்களை அறிந்தவர்கள் உங்களுடைய இழப்பினால், ஓரிரு நாள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு தங்களுடைய ஆற்றாமையை வெளிப்படுத்துவார்கள். அதன் பிறகு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடுவார்கள்.

ஆனால் பெற்றோருக்கு அது ஈடு செய்ய முடியாத வலி. நீங்கள் உங்கள் நினைவுகளை மட்டுமே அவர்களுக்கு கொடுத்துவிட்டு, கடைசி வரை அவர்கள் தனிமையில் தவிக்க விட்டு செல்கிறீர்கள். பெண்ணாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் இன்னும் வலிமையுடனும் துணிச்சலுடனும் இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

யாழில் பதின்ம வயது சிறுமியை சீரழித்த தாய்!!

யாழில்..

தாயாரினால் போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட பதின்ம வயது சிறுமி ஒருவர் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மீட்கப்பட்ட சிறுமி நீதிமன்றின் உத்தரவில் சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதேசயம் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டமை தொடர்பில் சிறுமியின் பெற்றோர் மீது நீதிமன்ற வழக்குகள் உள்ளதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளால் வெளிசத்துக்கு வந்த உண்மை
சிறுமி 4 மாதங்களுக்கு மேலாக பாடசாலைக்கு செல்லாத நிலையில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போதே குறித்த விடயம் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமியே நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழக மாணவன் மரணம் தொடர்பில் தீவிர விசாரணை!!

பல்கலைக்கழக மாணவன்..

பேராதனை பல்கலைக்கழக கலைப்பீட இறுதியாண்டு மாணவன் உயிரிழந்தமை தொடர்பில் காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

கடந்த 16ஆம் திகதி முதல் குறித்த மாணவன் காணாமல் போயிருந்த நிலையில், நேற்றைய தினம் மகாவலி கங்கையில் அவரது சடலம் மீட்கப்பட்டது. குறித்த மாணவன் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

சடலம் கண்டி தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பேராதனை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த 16 ஆம் திகதி குறித்த மாணவர் காணாமல் போனதாக பேராதனை காவல்துறைனருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைவாக அவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

காணாமல் போனவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் மனோதத்துவ துறையில் பயின்று வந்த மாணவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவர் எழுதியதாக சந்தேகிக்கப்படும் கடிதம் ஒன்றும் அவர் தங்கியிருந்த அறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பேராதனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

துபாயில் அறை ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 85 இலங்கைப் பெண்கள்!!

துபாயில்..

துபாயில் தடுப்பு முகாம் ஒன்றில் அறைக்குள் இலங்கை பெண்கள் 85 பேர் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக அந்த அறையில் பல்வேறு துன்பங்களை அனுபவித்த நிலையில் நாடு திரும்பிய பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் உள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையத்தின் ஊடாக துபாய் சென்ற தம்புளு ஓய பிரதேசத்தை சேர்ந்த லலிதா பத்மினி என்ற பெண் துபாய் தடுப்பு முகாமில் மூன்று மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் நாடு திரும்பியுள்ளார்.

தான் அங்கு அனுபவித்த கசப்பான அனுபவங்கள் தொடர்பான அந்த பெண், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம், தம்புள்ளை பொலிஸ் நிலையம் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனத்திற்கும் அறிவித்த போதிலும் இதுவரை எந்த நியாயமும் கிடைக்கவில்லை என அந்த பெண் கூறியுள்ளார்.

தம்புள்ளையில் உள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனத்தின் ஊடாக துபாய் அனுப்பி வைக்கப்பட்ட தனது சகோதரியான துலிகா பிரியந்தி என்பவர் அங்கு கைவிடப்பட்ட நிலைமையில் இருப்பதாகவும் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் மூன்று மாதங்கள் துபாய் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், தமது பிள்ளைகள் பெரும் தொகை பணத்தை கடனாக பெற்று தன்னை இலங்கைக்கு வரவழைத்ததாகவும் லலிதா பத்மினி கூறியுள்ளார்.

உயிருக்கு போராடும் நடிகர் போண்டா மணி : கண்ணீர் விட்டு கதறிய சக நடிகர்!!

போண்டா மணி..

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரான போண்டா மணி கடந்த மே மாதம் இருதய கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவருக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாக சக நடிகர் பெஞ்சமின் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

அவர் இதுகுறித்து பேசுகையில், “நாடுவிட்டு நாடு வந்து, இலங்கையில் இருந்து தமிழகம் வந்து பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தற்போது நடிகராகி, திருமணம் செய்தி இரு குழந்தைகளைப் பெற்று தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் அவருக்கு காப்பாற்ற வேண்டும்.

மேலும், இலங்கையிலிருந்து அனாதையாக வந்தவர். அனாதையாகவே போகக் கூடாது. தயவு செய்து உதவி பண்ணுங்க ப்ளீஷ்” என அந்த வீடியோவில் பெஞ்சமின் கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டுள்ளார்.

71 வயதில் இப்படி ஒரு சாதனை? இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த பாட்டி!!

கேரளாவில்..

இன்றைய காலகட்டத்தில், வயது என்பது ஒரு தடையில்லை என்பதை உணர்த்தும் வகையில், சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் என பலரும் தங்களுக்கு விருப்பமான துறையில் அபராமான சாதனைகள் பலவற்றை செய்து தான் வருகின்றனர்.

சமீபத்தில் கூட ஐந்து வயது சிறுவனின் கால்பந்து திறமை தொடர்பான வீடியோ, இணையத்தில் வெளியாகி ஏராளமானோரை ஆச்சரியப்பட வைத்திருந்தது. அந்த வகையில், தற்போது 71 வயதாகும் பெண்மணி ஒருவர் இந்த வயதிலும் செய்துள்ள விஷயம் ஒன்று, இணையத்தில் பலரையும் சபாஷ் போட வைத்துள்ளது.

கேரள மாநிலம் தோப்பும்படி என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ராதாமணி அம்மா. இவர் மணியம்மா என்றும் அழைக்கப்படுகிறார். இவருக்கு தற்போது 71 வயதாகிறது. அப்படி இருக்கையில் ஜேசிபி, கிரேன், பஸ், லாரி, ஆட்டோ ரிக்ஷா உள்பட 11 கனரக வாகனங்களை ஓட்டுவதற்கான லைசன்ஸ் பெற்றிருக்கிறார் ராதாமணி அம்மா.

முன்னதாக, தனது முப்பதாவது வயதில் தான் வாகனங்களை ஓட்டவே ராதாமணி கற்றுக் கொண்டுள்ளார். அதுவும் மறைந்த அவரது கணவர் லாலின் உந்துதல் பெயரில் வாகனம் ஓட்ட கற்றுக் கொண்ட ராதாமணி அம்மா, ஒரு கட்டத்தில் வாகனம் ஓட்டுவது மிகவும் சிறப்பாக இருப்பதாக உணர்ந்துள்ளார். இதன் பின்னர் பல்வேறு வகையான வாகனங்களை ஓட்ட கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் விருப்பப்பட்ட ராதாமணி, தொடர்ந்து ஏராளமான கனரக வாகனங்களை ஓட்ட ஆரம்பித்துள்ளார்.

கடந்த 1978 ஆம் ஆண்டில் டிரைவிங் ஸ்கூல் ஒன்றை கணவர் லால் ஆரம்பித்தது முதல் வாகனங்களை ஓட்டி வரும் ராதாமணி, 1988 ஆம் ஆண்டு பஸ் மற்றும் டிரக் வாகனங்களுக்கான லைசென்ஸ் பெற்றிருக்கிறார். மேலும், கடந்த 2004 ஆம் ஆண்டு, கணவர் மறைந்த பிறகு தனது பிள்ளைகளுடன் சேர்ந்து டிரைவிங் ஸ்கூலையும் நடத்தி வருகிறார் ராதாமணி.

11 கனரக வாகனங்களுக்கு ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் முதல் கேரள பெண் என்ற பெருமை பெற்றிருக்கும் ராதாமணி அம்மா, தற்போது பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ புரோகிராம் படித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

வயது என்பது எந்த ஒரு விஷயத்துக்கும் தடை இல்லை என்பதை ராதாமணி அம்மா உணர்த்தும் வகையில் இருக்கும் நிலையில் பலரும் இவரை பாராட்டி கருத்துக்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

ஹோட்டலில் வேறு ஒரு பெண்ணுடன் தனியாக இருந்த கணவன்.. கையும் களவுமாகப் பிடித்த மனைவி செய்த காரியம்!!

டெல்லியில்..

வேறு ஒரு பெண்ணுடன் ஓட்டலில் தனியாக இருந்த கணவனை கையும் களவுமாகப் பிடித்து மனைவி தாக்கிய சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. டெல்லி ஆக்ரா பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் கோபால். இவரது மனைவி நீலம்.

இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் தினேஷ் கோபாலுக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் இருந்துள்ளது. இதையடுத்து அவர் டெல்லியில் ஓட்டல் ஒன்றில் அறை அடுத்து அந்த பெண்ணுடன் தனியாக இருந்துள்ளார்.

இது பற்றி அவரது மனைவி நீலத்திற்குத் தகவல் தெரிந்துள்ளது. உடனே அவர் தனது உறவினர்களை அழைத்துக் கொண்டு அந்த ஓட்டலுக்கு சென்றுள்ளார்.

அங்கு அறையில் கணவனும் அந்த பெண்ணும் தனியாக இருந்ததைப் பார்த்து அவர் ஆவேசமடைந்துள்ளார். உடனே தனது செருப்பைக் கழற்றி கணவரைச் சரமாரியாகக் தாக்கியுள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனே அவரை தடுத்துள்ளனர். மேலும் அந்த பெண்ணின் கணவருக்கும் நீலம் போன் செய்து இது பற்றித் தெரிவித்துள்ளார்.

இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் மூன்று பேரையும் அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் வறுமையில் வாடும் மக்கள் : மதிய உணவுக்கு தேங்காய் துண்டுகள் கொண்டுசென்ற மாணவி!!

வறுமையில் வாடும் மக்கள்..

மினுவாங்கொடை கல்வி வலயத்திலுள்ள பாடசாலையில், மாணவ தலைவியொருவர், பகலுணவுக்காக தேங்காய் துண்டுகளைக் கொண்டுசென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

தரம்-9 இல் கல்விப்பயிலும் குறித்த மாணவி, கல்வியில் சிறந்து விளங்குவதுடன் மாணவ தலைவியாகவும் பணியாற்றுகின்றார்.
நிரந்த தொழில் இல்லாத அவருடைய தந்தை பிரதேசத்தில் கூலி வேலைச்செய்து வருகின்றார்.

அவருடைய தாய், வீட்டு வேலைகளைச் செய்துக்கொண்டு வீட்டிலேயே இருக்கின்றார். அந்த மாணவிக்கு மூத்த மற்றும் இளைய சகோதர சகோதரிகளும் உள்ளனர்.

பாடசாலையின் இடைவேளையில் ஏனைய மாண, மாணவிகளுடன் சென்ற இந்த மாணவ தலைவி, பகலுணவை சாப்பிடும் போதே, விடயம் வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த சம்பவம், ஆசிரியர்களின் காதுகளுக்கு எட்டியதை அடுத்து ஆசிரியர்கள் தமது உணவுப் பொதிகளை கொண்டுவந்து அந்த மாணவிக்கு கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், அதே பாடசாலையில் தரம் மூன்றில் கல்விப்பயிலும் மாணவர்கள் சிலரும் பகலுணவு இன்றி இருக்கின்றனர். அதேவேளை அப் பாடசாலையில் கல்விப்பயிலும் மாணவர்களில் பலர் முதல்நாள் இரவு உணவை உட்கொண்டிருக்க வில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

18 வயது இளைஞனின் விபரீத முடிவு : பரிதாபமாய் பறிபோன உயிர்!!

வாகரை..

வாகரைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காயங்கேணி கடற்கரைப் பிரதேசத்தில் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் 18 வயது இளைஞனின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

வாகரைப் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த இளைஞனின் உடல் மீட்கப்பட்டு பொலிஸாரின் உத்தரவின் பேரில் அக்கீல் அவசர சேவை வாகனத்தின் உதவியுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மரணத்துக்கான சரியான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில் விசாரனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த இளைஞன் அதிகமாக தொலைபேசி பாவிப்பவர் எனத்தெரிய வருகின்றது.

இவர் காயங்கேணி மத்தி, மாங்கேணி எனும் முகவரியைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை வாகரைப் பொலிஸார் மேற்கொண்டு வரும் நிலையில், பிரதேச பரிசோதனைகளின் பின்னர் இன்று மாலை உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

குண்டும் குழியுமான சாலையில் புகைப்படம் எடுத்த மணப்பெண் : ஏன் தெரியுமா?

கேரளாவில்..

பூக்கோட்டு பாலம் பகுதியை சேர்ந்தவர் ஸீஜீஷா(23). இன்று காலை இவருக்கு திருமணம் நடைபெற்றது.

திருமண மண்டபத்துக்கு இவர் காரில் சென்றபோது குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்காததை கண்டித்து அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

மேலும், அந்த சாலையில் நின்று புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். குண்டும் குழியுமான சாலையில் நின்று மணப்பெண் ஸீஜீஷா எடுத்த புகைப்படம் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

காணாமல்போயிருந்த பேராதனை பல்கலைக்கழக மாணவன் சடலமாக கண்டெடுப்பு : விசாரணைகள் தீவிரம்!!

அஞ்சன குலதுங்க..

பேராதனை பல்கலைக்கழக கலைப்பீடத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்று வந்த நிலையில், கடந்த 16 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவனின் சடலம் கெட்டம்பே பிரதேசத்தில் உள்ள மகாவலி ஆற்றில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பேராதனை பல்கலைக்கழக கலைப்பீடத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்று வந்த 24 வயதுடைய அஞ்சன குலதுங்க என்ற மாணவனின் கையடக்கத் தொலைபேசி கடந்த 16 ஆம் திகதி முதல் செயலிழக்க செய்யப்பட்டிருந்த நிலையில், அவரது பெற்றோர் பேராதனைக்கு வந்து பார்த்தபோது அவர் எழுதிய கடிதமொன்று கிடைத்துள்ளது.

இதனை தொடர்ந்து மாணவனின் பெற்றோர் பேராதனை பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஆற்றிலிருந்து சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், பெற்றோர் அடையாளப்படுத்தியுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் வீரர் மகேஸ் தீக்‌ஷனவிற்கு இராணுவத்தில் புதிய பதவி மற்றும் பணப்பரிசு!!

மகேஸ் தீக்‌ஷன..

பிரபல கிரிக்கெட் வீரரும் இராணுவ வீரருமான மகேஸ் தீக்‌ஷனவிற்கு இலங்கை இராணுவம் பதவி உயர்வு வழங்கியுள்ளது. அண்மையில் ஆசிய கிண்ண போட்டித் தொடரின் சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக தீக்‌ஷன திகழ்கின்றார்.

இந்தநிலையில் விளையாட்டுத்துறையில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய இராணுவத்தை சேர்ந்த வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் வகையில் இராணுவ தலைமையகத்தில் நேற்று நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி, ஆசிய கிண்ண வலைபந்தாட்டம் மற்றும் ஆசிய ஆணழகன் போட்டி போன்றவற்றில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய வீர வீராங்கனைகள் இவ்வாறு கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் மகேஸ் தீக்‌ஷன இராணுவ சார்ஜன்டாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். குறித்த நிகழ்வில் மகேஸ் தீக்‌ஷன உள்ளிட்ட வீர வீராங்கனைகள் கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு பணப்பரிசில்களும் வழங்கப்பட்டுள்ளன.

தடயத்தை அழித்தது ஏன்? நடிகை தீபா தற்கொலையில் புதுத் தகவல்!!

சென்னையில்..

சினிமா நடிகை தீபா தற்கொலையில் , அங்கிருந்த தடயத்தை அழித்தது ஏன் எனவும், தயாரிப்பாளர் சிராஜிதீன் சொல்லி, ஆண் நண்பர் செய்தாரா என்ற கோணத்தில் விசாரணை விறுவிறுக்க தொடங்கியுள்ளது.

சென்னையில் நடிகை தீபா தற்கொலை செய்துகொண்ட வழக்கில் முக்கிய தகவலாக தீபாவின் காதலனிடம் போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர். ஆந்திராவை சேர்ந்தவர் தீபா (எ) பவுலின் ஜெசிகா(19).

இவர், சினிமாவில் நடித்து வந்ததால் சென்னை, விருகம்பாக்கம், மல்லிகை பூ காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். கடைசியாக வாய்தா படத்தில் தீபா கதாநாயகியாக நடித்துள்ளார்.

வளர்ந்து வரும் நாயகியாக வளம் வந்த தீபா, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று , வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், தீபா, நான்கு செல்போன்கள் பயன்படுத்தி உள்ளார்.

அதில் ஒன்று ஐபோன், அது மாயமாகி விட்டது. மற்ற மூன்று செல்போன்களை போலீசார் கைப்பற்றி ஆய்வு நடத்தி வருகின்றனர். ஆனால், அதில் எந்தவித துப்பும் துலங்கவில்லை. தற்கொலைக்கு முன் தீபா எழுதியதாக கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றி இருந்தனர்.

ஆனால், அந்த கடிதத்திலும், நான் ஒருத்தரை காதலித்தேன், அவர் காதலை ஏற்கவில்லை , அதனால், நான் உயிரை மாய்த்துக்கொள்கிறேன் என தான் இருந்தது. இந்த நிலையில் போலீசார் துப்பு துலக்கியதில், சினிமா தயாரிப்பாளர் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சிராஜிதீன் என்பவர் தான் தீபாவின் காதலனாக இருக்கலாம் என சந்தேகித்தனர்.

மாயமான ஐபோனின், சிம்கார்டு நம்பரை வைத்து, போலீசார் கால் ஹிஸ்ட்ரியை சேகரித்தனர். அதில் தீபா, கடைசியாக சிராஜிதீனிடம் வாக்கு வாதம் செய்து பேசிய உரையாடல் இருந்தது. இந்த அடிப்படையில் தான், சிராஜீதினை விசாரிக்க, அவரின் செல்போனில் தொடர்புக்கொண்டபோது, காரைக்குடியில் பட வேலையில் இருப்பதாக தெரிவித்தார்.

போலீசார் முறைப்படி, அவரின் வீட்டுக்கு சென்று சம்மன் வழங்கி உள்ளனர். காரைக்குடியில் இருந்து, சிராஜிதீன் கிளம்பிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் இன்று இரவு வந்து விடுவார் எனவும், நாளை நேரில் ஆஜராகி, போலீசாரிடம் விளக்கம் அளிப்பார். அப்போது தான் தீபாவின் தற்கொலைக்கான காரணம் முழுவதும் தெரியும் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், தீபாவின் சகோதரர் ரமேஷ், தீபாவின் மரணம் சந்தேகமாக உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். தீபா கடைசியாக , தனது ஐபோனில், சிராஜிதீனிடம் கோபமாக பேசி, நான் தற்கொலை செய்துக்கொள்ள போகிறேன் என கூறியுள்ளார். அதோடு, அவரின் ஐ போனும் சுவிட்ச் ஆப் ஆகிவிட்டது.

தீபாவின் ஆண் நண்பர் பிரபாகர், அவர், சிராஜிதீனுக்கும் பழக்கம் ஆனவர். தீபா கோபமாக பேசியதையும், அவர் தற்கொலை செய்துக்கொள்ளப்போவதாக கூறியதையும், பிரபாகரிடம், சிராஜிதீன் தெரிவித்துள்ளார். அவரும், தீபா வீட்டிற்கு அன்று பதட்டத்துடன் வந்தார். இந்த வீடியோ காட்சி வெளியானது.

தீபா வீட்டிற்கு சென்ற பிரபாகர், அங்கு தீபா தூக்கில் பிணமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக, சிராஜிதீனுக்கு அவர் தன்னுடையை செல்போன் மூலம் தகவல் தந்தார். அதன் பிறகே, அந்த ஐபோன் மாயமானது.

20 நிமிடம் கழித்து தான், பிரபாகர் , கோயம்பேடு போலீசாருக்கு தகவல் கூறியதாக தெரிகிறது. அங்கிருந்த தடயங்களை அவர் அழித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆரம்பத்திலேயே, பிரபாகரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினால், சிராஜிதீன் தலைமறைவாக வாய்ப்பு இருப்பதாக எண்ணிய போலீசார், பிரபாகரை விசாரிக்காமல் இருக்கிறது.

சிராஜிதீன் சொல்லி, பிரபாகர், அங்கிருந்த தடயத்தை அழித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சிராஜிதீன் ஆஜராகும் பட்சத்தில், தீபாவின் மர்ம மரணம் முடிச்சு அவிழும் என தெரிகிறது.

இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்கத்தின் விலை!!

தங்கத்தின் விலை..

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இந்நிலையில், இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 609,534 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் கடந்த மாதங்களை விட தற்போது தங்கத்தின் விலையில் நாளுக்கு நாள் பாரிய வீழ்ச்சி பதிவாகி வருகின்றது. கடந்த காலங்களை விட தற்போது தங்கத்தின் விலை கணிசமான அளவு குறைந்துள்ளதாக உள்ளூர் தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 172,050 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 157,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது.

எனினும், அடுத்து வந்த சில நாட்களில் 20 தொடக்கம் 40 ஆயிரம் ரூபாவால் இலங்கையில் தங்கத்தின் விலை குறைவடைந்து தற்போது 160,000 என்பதை அண்மித்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.