18 வயது இளம்பெண் ஆணவக் கொலை செய்யப்பட்ட கொடூரம்!!

நெல்லை பேட்டை செக்கடியைச் சேர்ந்த பச்சிராஜன், அரசு பஸ் டிரைவர்; அவரது மனைவி ரேவதி, தனியார் பள்ளி ஆசிரியை. இவர்களின் இளையமகள் சிவமதி (18) பாளை கல்லூரியில் பிஎஸ்சி இயற்பியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

சிவமதி, பேட்டை கடசர் தெருவைச் சேர்ந்த ஆனந்த கிருஷ்ணனுடன் காதலித்து வந்தார். ஆனந்த கிருஷ்ணன் ஏர்டெல் நிறுவனத்தில் டீம் லீடராக பணியாற்றுகிறார்.

இருவரும் வெவ்வேறு பிரிவினரினால், சிவமதியின் பெற்றோர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உறவினர் மகனுடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.

இதையொட்டி, ஆனந்த கிருஷ்ணனும் சிவமதியும் வரும் 6-ஆம் தேதி திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர்.

கடந்த சில தினங்களில் சிவமதியின் உடல்நிலை சரியில்லை எனக் கூறி, மாலை 6 மணியளவில் அவரை டவுன் கண்டியபேரி அரசு மருத்துவமனையில் கழுத்தில் காயத்துடன் பெற்றோர் சேர்த்தனர்.

மருத்துவமனை பரிசோதனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என்று அறிவிக்கப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. பேட்டை போலீசார் மர்மச்சாவாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரீல்ஸ் மோகத்தால் பறிபோன உயிர்!!

இந்தியாவில் ரீல்ஸ் மோகத்தால் இளைஞர் தடுக்கி வீழ்ந்து பலியான சம்பவம் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய இளைய தலைமுறையினர் சமூகவலைத்தளத்தில் லைக்குகளை அள்ளும் ஆசையில் சாகச வீடியோக்கள் சில சமயம் அவர்களின் உயிருக்கு ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்து உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

அவ்வகையில் உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் மேலே ஏறி இன்ஸ்டா ரீல்ஸ் எடுக்க முயன்ற நபர் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.

மேம்பாலத்தின் மேலே கொன்க்ரீட் பலகை மீது ஏறி நடனமாடியபோது, Slabs சரிந்து 22 வயதுடைய குறித்த இளைஞரின் தலை மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இந்த ரீல்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் சரிவு : இலங்கையிலும் மாற்றம் – வெளியான பின்னணி!!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக சரிவதற்கு காரணம் இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் என்று அகில இலங்கை நகைக்கடைக்காரர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4737 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

அதன்படி, இலங்கையில் தங்கத்தின் விலை இன்றைய தினம் (03) 12,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது.அதேநேரம், 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் 349,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதற்கமைய,24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 380,000 ரூபாவாகவும், பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகைக்கடைக்காரர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கணவனின் சடலத்திற்காக இரு மனைவிகள் மோதல் : வைத்தியசாலையில் ஏற்பட்ட பரபரப்பு!!

கொழும்பின் புறநகர் பகுதியான ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த ஒருவரின் சடலத்தைப் பொறுப்பேற்பதில் இரு பெண்களுக்கு இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக திடீர் மரண விசாரணை அதிகாரி, தலையீட்டு சட்டப்பூர்வமான முதலாவது மனைவிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது. மீகொட பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதுடைய ஓய்வுபெற்ற சுகாதார உதவியாளர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரைத் திருமணம் செய்திருந்தார். அந்தத் திருமணத்தின் மூலம் இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

எனினும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் தனது முதல் மனைவியையும் பிள்ளைகளையும் பிரிந்து சென்ற இவர், மீகொட பிரதேசத்தை சேர்ந்த மற்றொரு பெண்ணைத் திருமணம் செய்து அவருடன் வசித்து வந்துள்ளார்.

இரண்டாவது பெண்ணின் முதல் திருமணத்தின் மூலம் மூன்று பிள்ளைகள் இருந்தபோதிலும், உயிரிழந்த நபருக்கும் அந்தப் பெண்ணுக்கும் பிள்ளைகள் இல்லை எனக் கூறப்படுகிறது.

திடீர் சுகவீனம் காரணமாக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், கடந்த 30ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது மரண விசாரணை கடந்த 31ஆம் திகதி நடைபெறவிருந்த நிலையில், உயிரிழந்த நபரின் சட்டப்பூர்வமான முதல் மனைவி திருமணச் சான்றிதழுடன் வருகை தந்து சடலத்தை தன்னிடம் ஒப்படைக்குமாறு கோரினார்.

கடந்த 20 வருடங்களாகத் தன்னுடனேயே அவர் வாழ்ந்ததாகக் கூறி, இரண்டாவது மனைவியும் திருமணச் சான்றிதழைச் சமர்ப்பித்து சடலத்திற்கு உரிமை கோரினார். இதனால் வைத்தியசாலை வளாகத்தில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.

இந்தச் சிக்கலான நிலையைத் தணிப்பதற்கு ஹோமாகம திடீர் மரண விசாரணை அதிகாரி தலையிட்டார்.

இரண்டாவது பெண்ணுடன் எவ்வளவு காலம் வாழ்ந்திருந்தாலும், சட்டப்பூர்வமாக முதல் மனைவியிடமிருந்து விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்திருப்பது செல்லுபடியாகாது.

எனவே, சட்டத்தின்படி சடலத்தைப் பொறுப்பேற்க முதல் மனைவிக்கே முன்னுரிமை உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.

235 அடி பள்ளத்தில் விழுந்து முச்சக்கர வண்டி விபத்து : ஒருவர் படுகாயம்!!

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா, கிளாரண்டன் பகுதியில் அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டியொன்று பிரதான வீதியை விட்டு விலகி செங்குத்தான சரிவில் 235 அடி பள்ளத்தில் விழுந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று (02) திங்கட்கிழமை மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் முச்சக்கர வண்டியின் சாரதி படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நானுஓயா பொலிஸார் கூறுகையில்,

நுவரெலியா – கந்தப்பளை பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 235 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது என தெரிவித்தனர் .

மேலும் குறித்த விபத்தில் முச்சக்கர வண்டி கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 

மோட்டார் சைக்கிள் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு!!

அனுராதபுரம் – மாத்தளை சந்தி பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று(02.02.2026) மதியம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக மிஹிந்தலை பொலிஸ் போக்குவரத்துப்பிரிவு தெரிவித்துள்ளது.

மிஹிந்தலையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, மேற்படி பெண் மீது மோதியதில், இந்த விபத்து நேர்ந்துள்ளது.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் மற்றும் பாதசாரி பெண் ஆகியோர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் பாதசாரி உயிரிழந்தார்.

இவ்வாறு உயிரிழந்த பெண் சுமார் 65 வயது மதிக்கத்தக்கவர் எனவும், அவரது அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மிஹிந்தலை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு சிக்கல்!!

இலங்கையின் வாடகைச் சந்தை மற்றும் பொருளாதாரத்தில் பாரிய சட்டச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டிற்கான குடியிருப்பாளர்கள் பாதுகாப்புச் சட்டமூலம் தற்போதைய வடிவில் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்த சிக்கல் தீவிரமடையும் என்றும் எச்சரித்துள்ளார்.

மேலும், இந்த வரைவுச் சட்டம் வாடகைச் சந்தையையும் நீண்டகால அடிப்படையில் வாடகைக்கு இருப்பவர்களையுமே பாதிக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீர்திருத்தம் என்ற பெயரில் நாடு மீண்டும் காலாவதியான சட்டங்களை நோக்கிச் செல்லக்கூடாது என அவர் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கை ஏற்கனவே 1972ஆம் ஆண்டின் வாடகைச் சட்டம் போன்ற கடுமையான சட்டங்களிலிருந்து விலகி, 2023ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க சட்டத்தின் மூலம் சமநிலையான ஒரு கட்டமைப்பை அடைந்துள்ள நிலையில், மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவது ஆபத்தானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாடகைதாரர் ஒருவர் மாதாந்த வாடகை, நீர், மின்சாரக் கட்டணங்களைச் செலுத்தத் தவறினாலும், நீதிமன்ற நடவடிக்கைகள் முடியும் வரை அவர்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்க நில உரிமையாளர் கடமைப்பட்டுள்ள, இச்சட்டம் நில உரிமையாளர்களுக்கு அச்சத்தை எற்படுத்தும் என கூறியுள்ளார்.

இதனால் வீடுகளுக்கான விநியோகம் குறைந்து, வாடகை விலைகள் அதிகரித்து, இறுதியில் வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கே பாதிப்பு ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

வெளிநாடொன்றில் விபத்தில் மட்டக்களப்பு இளைஞன் உயிரிழப்பு : துயரத்தில் உறவுகள்!!

ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான கட்டார் நாட்டில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிழக்கு மாகாணம் மட்டக்களப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி – மகிளூர் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என கூறப்படுகின்றது.

இந்நிலையில் இளைஞனின் மரணம் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் பெரும் துஇஉயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

உலகை உலுக்கிய கனடா கொலைகள் : குடும்பத்தை இழந்த இலங்கையருக்கு கனடா அரசு வழங்கிய அந்தஸ்து!!

கனடா, ஒட்டாவாவில் கடந்த 2024-ஆம் ஆண்டு நிகழ்ந்த மிகக்கொடூரமான கத்திக்குத்துத் தாக்குதலில் தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளை இழந்த இலங்கையரான தனுஷ்க விக்ரமசிங்கவின் தந்தை மற்றும் சகோதரருக்குக் கனடா அரசாங்கம் நிரந்தர குடியிருப்பு அந்தஸ்தை வழங்கியுள்ளது.

2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம், தனுஷ்கவின் மனைவி தர்ஷனி அவர்களது பிள்ளைகளான இனுக்க அஸ்வினி, 3வயதான ரனாயா, 2 வயதான கெல்லி மற்றும் அவர்களது குடும்ப நண்பர் காமினி அமரகோன் ஆகியோர் ஒட்டாவாவில் உள்ள அவர்களது இல்லத்திலேயே கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலில் தனுஷ்க விக்ரமசிங்க மட்டும் காயங்களுடன் உயிர் தப்பினார். இந்தநிலையில், இந்த கொலைகளை செய்த ஃபெப்ரியோ டி-சொய்சாவுக்கு கடந்த நவம்பர் மாதம் 25 ஆண்டுகள் விடுமுறை இல்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இதனையடுத்து, குடும்பத்தை இழந்த தனுஷ்கவுக்குத் துணையாக இருப்பதற்காக அவரது தந்தை மற்றும் சகோதரர் கனடாவுக்கு சென்றனர்.

அத்துடன், கனடாவில் அவர்கள் நிரந்தரமாகத் தங்குவதற்கு விடுத்த கோரிக்கையை ஏற்று, இந்த மாத தொடக்கத்தில் அவர்களுக்கு நிரந்தர குடியிருப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண் தொடர்பில் வெளியான தகவல்!!

புதிய இணைப்பு : மொனராகல, பிபிலை – ரதலியத்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய சந்திரிகா ஷியாமலி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, வீட்டின் வரவேற்பறையில் பெண் இரத்த வெள்ளத்தில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

இதன்போது அவருக்கு அருகிலேயே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சந்தேக நபரான துமிந்த என்பவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததை பொலிஸார் கண்டறிந்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவர் பொலிஸாரிடம் தெரிவிக்கையில், தனது மனைவி கொழும்பில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர், அழகு நிலையத்திற்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்ய, தற்போது காயமடைந்துள்ள துமிந்த என்பவருடன் தனது மனைவி டுபாய் சென்று திரும்பியுள்ளார்.

அதன் பின்னர், மனைவியை என்னிடம் அனுப்பு, இல்லையென்றால் உன்னைக் கொன்றுவிடுவேன் என அந்த நபர் தொலைபேசியில் மிரட்டியுள்ளார்.

மனைவியின் சில புகைப்படங்களை தனது கைபேசிக்கு அனுப்பியதாக கணவர் தெரிவித்துள்ளார். இது குறித்து மனைவியிடம் கேட்டபோது, அவருக்கும் அந்த நபருக்கும் இடையில் தொழில் ரீதியான தொடர்பே தவிர வேறெதுவும் இல்லை என அவர் மறுத்துள்ளார்.

சம்பவத்தன்று கணவர் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில் இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

முதற்கட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்த பெண்ணிற்கும் சந்தேகநபருக்கும் இடையில் நிலவிய தகாத உறவு அல்லது கொடுக்கல் வாங்கல் தகராறு இந்த கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

முதலாம் இணைப்பு : மொனராகல, பிபிலை – ரதலியத்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரதலியத்த பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணுக்கு தகாத உறவில் இருந்த நபருக்கு இடையே ஏற்பட்ட தகராறு நீடித்த நிலையில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பெண்ணைக் கொலை செய்த பின்னர், சந்தேகநபர் தனது கழுத்தை வெட்டி உயிரை மாய்க்க முயன்றுள்ளார். சந்தேகநபர் தற்போது பொலிஸ் பாதுகாப்பின் கீழ் பிபிலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் பிபிலை வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பிபிலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கொழும்பில் பலியான இளம் தமிழ் குடும்பஸ்தர் : தீவிர சிகிச்சையில் ஒருவர்!!

புத்தளம் – கற்பிட்டி , கண்டக்குளி கடற்கரை வீதியில் வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்ற வீதி விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் இடம்பெற்ற வெள்ளிக்கிழமை (30) குறித்த வீதியில் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதன்போது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், சிகிச்சைக்காக உடனடியாக கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

இதனையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக அவ்விருவரும் கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் இருந்து புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட இருவரில், ஒருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக காணப்பட்டதுடன், அவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவிற்கு அன்றைய தினமே மாற்றப்பட்டிருந்தார்.

இவ்வாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தவர் நேற்று (31) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த மற்றைய நபர் தொடர்ந்தும் புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். குறித்த விபத்து தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாட்டு பெண் பயணிக்கு தென்னிலங்கையர் செய்த முகம்சுழிக்கும் செயல்!!

ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்த சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான கையடக்கத் தொலைபேசியைத் திருடிய நபர் ஒருவரை, உனவட்டுன சுற்றுலாப் பொலிஸ் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

குறித்த வெளிநாட்டுப் பெண் செய்த முறைப்பாட்டுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போதே இந்தச் சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து, அப்பெண்ணுக்குச் சொந்தமான கையடக்கத் தொலைபேசியும் இதன்போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைதான சந்தேகநபர் தொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதியின் செயல்பாட்டால் தவிர்க்கப்பட்ட பாரிய விபத்து : உயிர்பிழைத்த 40 பயணிகள்!!

நுவரெலியா – வலப்பனை, நில்தண்டாஹின்ன பிரதேசத்தில் ஏற்படவிருந்த பாரிய பஸ் விபத்தொன்று சாரதியினால் தவிர்க்கப்பட்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இலங்கைப் போக்குவரத்துக் சபைக்குரிய பஸ் வண்டி ஒன்று, நில்தண்டாஹின்ன பகுதியில் 50 அடி பள்ளத்தில் வீழக்கூடிய ஒரு சூழ்நிலையில்யிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் பஸ்ஸானது குறிப்பிட்ட வளைவில் திரும்பும்போது ஏற்பட்ட சத்தத்தை அடுத்து பஸ் ஓட்டுநர் பிரேக்கைப் பயன்படுத்தி பஸ் வண்டியை நிறுத்தி விட்டு பஸ்வண்டியின் அடிச்சட்டத்தை இணைக்கும் பிரதான பகுதி உடைந்துள்ளதை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து பஸ் வண்டியை இயக்காது அப்படியே வைத்துவிட்டு திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பஸ்வண்டி தொடர்ந்து செலுத்தப்பட்டிருந்தால் ஏற்கனவே மண்சரிவு அபாயத்தில்பாதிக்கப்பட்ட அவ்விடத்தில் மீண்டும் ஒரு பாரிய அனர்த்தம் ஏற்பட வாய்ப்பு இருந்துள்ளது.

அச்சமயம் பஸ்வண்டியில் 40 பயணிகள் இருந்துள்ளனர். சாரதியில் துரித நடவடிக்கையால் 40 பயணிகள் மயிரிழையில் உயிர் காப்பாற்றப்பட்டதாகத் தெரிவித்தனர்.

அநுராதபுரத்தில் வாகன விபத்து : ஐவர் காயம்!!

அநுராதபுரம், கற்குளம் பொலிஸ் வீதித் தடைகு அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை (01) அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் திறப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரம் நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த இளைஞர்கள் நால்வர் பயணித்த காரும், களனியிலிருந்து அநுராதபுரத்திற்கு வழிபாட்டிற்காகச் ஒரே குடும்பத்தினர் பயணித்த கார் ஒன்றுமே இவ்வாறு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்து இடம்பெற்ற இடம் வளைவான பகுதி என்பதால், அநுராதபுரத்திலிருந்து வந்த கார் வேகக் கட்டுப்பாட்டு இழந்து, வீதியின் வலது பக்கமாகச் சென்று மற்றைய காருடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தில் அநுராதபுரத்திலிருந்து பயணித்த காரின் சாரதி உட்பட அதில் பயணித்த நால்வரும், மற்றைய காரில் பயணித்த ஒருவரும் அடங்கலாக 5 பேர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தினால் இரண்டு கார்களின் முன்பகுதிகளும் பலத்த சேதமடைந்துள்ளன. சம்பவம் தொடர்பில் திறப்பனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அனைத்து மின் விளக்குகளும் அணைக்கப்பட்டு கிளிநொச்சியில் கொலை குற்றவாளிக்கு மரண தண்டனை!!

கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் கொலை குற்றவாளி ஒருவருக்கு இன்றைய தினம் (02-02-2026) மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட குரவில் கிராமத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலையின் பிரதான சந்தேகநபருக்கு இன்றைய தினம் பகல் 12 மணிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் குறித்த மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

கடந்த 2014 ஆம் ஆண்டு மாசி மாதம் 11ஆம் திகதியன்று புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடையார் கட்டு குரவில் பகுதியில் பூப்புனித நீராட்டு விழா நிகழ்வில் கலந்து கொண்ட இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

அதன்போது அதே இடத்தை சேர்ந்த அர்ச்சுனன் றஜீபன் என்ற 19 வயதுடைய நபர் கத்தியால் வயிற்றில் குத்தப்பட்டு படுகாயமேற்பட்ட நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில்

அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த புதுக்குடியிருப்பு பொலிசார் சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபரை கைது செய்து இரத்த மாதிரிகள் சான்றுப் பொருட்கள் என்பவற்றையும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.

குறித்த வழக்கானது ஆரம்பத்தில் வவுனியா மேல் நீதிமன்றத்திலும் பின்னர் கிளிநொச்சி மேல் நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குறித்த வழக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில்;

முன்னெடுக்கப்பட்டு விசாரணைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் இன்றைய தினம்(02-02-2026) குறித்த வழக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி G. அலெக்ஸ்ராஜா முன்னிலையில் தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

சந்தேகநபருக்கு எதிர் தரப்பு சட்டத்தரணி S. ஸ்ரீகாந்தா முன்னிலையில் தீர்ப்பு வாசித்துக் காட்டப்பட்டதுடன் அவருக்கு மன்றிற்கு ஏதாவது கூற விரும்புகின்றீர்களா?

என்று கேள்வி கேட்கப்பட்டு அவருக்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டதையடுத்து நீதிமன்றத்தின் அனைத்து மின் விளக்குகளும் அணைக்கப்பட்டு அனைவரும் எழுந்து நின்று குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குரங்கு என கணவர் அழைத்ததால் 23 வயது இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் மொடலிங்கில் ஆர்வம் கொண்ட பெண்ணை, அவரது கணவர் குரங்கு என்று அழைத்ததால் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த தம்பதி தன்னு சிங், ராகுல் ஸ்ரீவஸ்தவா. இவர்கள் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தவர்கள் ஆவர்.

இருவரின் குடும்பத்தினரும் அந்தத் திருமணத்தை ஏற்றுக்கொண்ட நிலையில், தம்பதியர் இந்திரா நகரில் வசித்து வந்தனர். ராகுல் ஆட்டோ சாரதியாக பணியாற்றி வருகிறார்.

ராகுல், தன்னு மற்றும் அவரது தங்கை ஆகியோர் ஒன்றாக பேசிக்கொண்டிருந்தனர். அப்போது தன்னு கேலி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் உணவு வாங்க வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய ராகுல், மனைவி தன்னுவை அழைக்குமாறு அஞ்சலியிடம் கேட்டுள்ளார். அப்போது அறையின் கதவு உள்ளே பூட்டப்பட்டிருப்பது தெரிந்து, அழைப்பிற்கு பதில் வராததால் அஞ்சலி ஜன்னல் வழியாக பார்த்துள்ளார்.

தன்னு ஒரு துணியால் ஆன கயிற்றில் தூக்கிட்டு தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே ராகுல் உட்பட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தன்னுவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். இதனையடுத்து தன்னுவின் உடலைக் கைப்பற்றிய பொலிஸார் விசாரணையைத் தொடங்கினர்.

மொடலிங்கில் ஆர்வம் கொண்டிருந்த தன்னுவை அவரது காதல் கணவர் குரங்கு என்று அழைத்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.