பெற்றோர் தினசரி சண்டையால் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!!

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் 18 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவர், பெற்றோர் தினமும் சண்டையிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து மன உளைச்சலால்,

வீட்டிலுள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே செம்போடை பகுதியில் வசிப்பவர் ராமச்சந்திரன் (43) மற்றும் அவரது மனைவி ஆகியோர் தினமும் வீட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களது மகள் ஜெயந்தி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் BBA (பி.பி.ஏ.) முதலாமாண்டு படித்து வந்தார்.

ஜெயந்தி, பெற்றோரின் தொடர்ந்து போர் வாழ்க்கை அவளது கல்விக்கு தடையாக இருப்பதாக மன குழப்பத்தை வெளிப்படுத்தினாலும், அவரது கூறல்களை பெற்றோர் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த ஜெயந்தி, தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குடும்பத்தினர் மற்றும் அக்கறை உள்ளவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். வேதாரண்யம் போலீசார் சம்பவத்தை கடுமையாக எடுத்துக் கொண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வவுனியாவில் பயிர் நிலங்களை சேதப்படுத்தும் வனவளத்திணைக்களம் : மக்கள் கவலை!!

வவுனியா கள்ளிக்குளம் சிதம்பரம் பகுதியில் மக்களின் நெற்காணிகளை வனவளத்திணைக்களம் கையகப்படுத்தியுள்ளதுடன்,நெற்பயிரை சேதப்படுத்தி தேக்கு மரம் நாட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக அம்மக்கள் கருத்து தெரிவித்த போது….

நாங்கள் பூர்விகமாக குறித்த காணிகளில் பயிர்செய்து வந்தநிலையில் கடந்த 1987 ஆம் ஆண்டு ஏற்ப்பட்ட போரினால் இடம்பெயர்ந்திருந்தோம். மீண்டும் 2012 ம் ஆண்டு மீள் குடியமர்த்தப்பட்டதுடன் எமது காணிகளில் நெற்பயிர்செய்கைகளில் ஈடுபட்டுவருகின்றோம்.

தற்போது 13ஆண்டுகளின் பின் வனவள பிரிவு உத்தியோகத்தர்கள் எமது காணிகளை கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், அங்கு விதைக்கப்பட்டுள்ள பயிர்களை அழித்து தேக்குமரம் நாட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களது உழவு இயந்திரங்களை விவசாய பயிர்களுக்கு மேலாக ஓட்டிச்சென்று பயிர்களை சேதபடுத்தி வருகின்றனர். இதனால் எமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த காணியை பதிவுசெய்ததற்கான ஆவணமும் எங்களிடம் இருக்கிறது.

எனவே வனவளத்திணைக்களத்தின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தி எமது பூர்விக காணிகளை மீளவும் பெற்றுத்தருமாறு நாம் அரசிடம் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தனர்.

இது தொடர்பாக வவுனியா மாவட்ட செயலாளருக்கு அவர்களால் மகஜர் ஒன்றும் இன்று கையளிக்கப் பட்டிருந்தது.

சேலை பிடிக்கவில்லை.. மணப்பெண்ணை சுவரில் மோதி கொலை : திருமணத்திற்கு ஒரு மணிநேரம் முன்பு நடந்த கோரம்!!

சமூகம் நாளுக்கு நாள் வன்முறைகளால் மலிந்து வருகிறது. அதிலும் இளைஞர்கள் மிகவும் ‘Impulsive’ -ஆன உளவியலை கொண்டுள்ளனர் என்றே சொல்ல வேண்டும். இந்த உளவியல் சிக்கலில் பெரும்பாலான நேரங்களில் பெண்கள்தான் பாதிக்கப்படுகின்றனர்.

சமீபத்தில் இந்தியா முழுக்க இளைஞர்கள் தாங்கள் காதலிக்கும் அல்லது காதலிக்கப்படும் நபர்களால் கொல்லப்படுகின்றனர்.

காதல் எப்படி மூர்க்கத்தனமான கொலை வெறியாக மாறுகிறது? அந்த அளவுக்கு மனிதத்தை மீறும் வன்மம் நிறைந்த சூழலில் வாழ்கிறோமா என்ற அச்சமும் எழுகிறது.

குஜராத்தின் பாவ்நகரில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. திருமணத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே மணமகன் மணப்பெண்ணை இருப்புக்கம்பியால் தாக்கி, கொலைசெய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சஜன் பரையாவும், சோனி என்ற பெண்ணும் கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக ‘லிவ் இன்’ உறவில் இருந்து வந்துள்ளனர். இவர்களுக்கு பெற்றோர் தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த சூழலில் இவர்கள் இருவரும், திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து உள்ளார். நேற்று இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆக இருந்த நிலையில், திருமண நாளன்று காலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

திருமணச்சேலை பிடிக்காததால் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அது அப்படியே வரதட்சணை, பணப்பிரச்சனை என நகர்ந்து பெரும் சண்டையாக மாறி உள்ளது.

இதில் ஆத்திரமடைந்த சஜன், சோனியை இரும்புக்கம்பியால் தாக்கி, சுவற்றில் அவரின் தலையை மோதி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். போலீசார் சோனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை நடத்தி, குற்றம் சாட்டப்பட்ட சஜனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருமண நாளுக்கு முதல் நாளில் அண்டை வீட்டாரோடு, தகராறில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் இவர் மீது 2 FIR பதிவுசெய்யப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

சம்பளம் குறைந்ததால் கணவரை விவாகரத்து செய்த மனைவி : இளைஞரின் பதிவால் சர்ச்சை!!

சீனாவில் வசிக்கும் சியான்சியான் என்ற இளைஞர் தனது வாழ்க்கை அனுபவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்ததைத் தொடர்ந்து, திருமண உறவுகளில் பொருளாதார நிலை மற்றும் பரஸ்பரப் புரிதல் குறித்து பெரிய விவாதம் எழுந்துள்ளது.

சியான்சியான் தனது பதிவில், “சில ஆண்டுகளுக்கு முன்பு நான் பெரிய நிறுவனம் ஒன்றில் வேலை செய்து, மாதம் ரூ. 6.23 லட்சம் வருமானம் பெற்றேன். அப்போது மனைவியுடன் நலமான வாழ்க்கை இருந்தது.

குடும்பத்தின் செலவுகள் அனைத்தையும் நான் பார்த்துக் கொண்டேன்; மனைவிக்காக செலவிடுவதிலும் எந்த தயக்கமும் இல்லை” என்று கூறியுள்ளார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக திடீரென அந்த உயர்ந்த சம்பள வேலையை இழந்து விட நேர்ந்தது. வருமானம் குறைந்ததால், வாழ்வாதாரத்திற்காக உணவு டெலிவரி செய்யும் வேலைக்கு மாற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இந்த மாற்றத்திற்குப் பிறகு குடும்பத்திலும் அதிருப்தி ஏற்பட்டதாக அவர் தனது பதிவில் எடுத்து கூறியுள்ளார்.

“நான் வேலை இழந்து, வருமானம் குறைந்ததும், மனைவி என்னிடம் நடந்து கொண்ட விதம் மாறியது.

எனது வாழ்வாதார போராட்டத்தை புரிந்து கொள்ளாமல், வசதிகள் குறைந்து விட்டதற்காகவே அவர் என்னை விலக்கிப் பார்க்கத் தொடங்கினார்.

சில வாரங்களுக்குள் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுவும் அளித்துவிட்டார்” என்று சியான்சியான் குறிப்பிட்டுள்ளார்.

சம்பள உயர்வு, சமூக அந்தஸ்து போன்ற பொருளாதார காரணங்களின் அடிப்படையில் தனது திருமணம் தகர்ந்துவிட்டதாக அவர் வருத்தமும் தெரிவித்துள்ளார். “அவர் உண்மையாக என்னைக் காதலித்திருந்தால்,

இந்த சிக்கலான நேரத்தில் என்னை விட்டுப் பிரிந்திருக்க மாட்டார். வருமானத்திற்குத் தான் முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்பதை அவர் எடுத்த முடிவு நிரூபித்து விட்டது” என்று பதிவில் எழுதியுள்ளார்.

சியான்சியானின் இந்த பதிவு சீன சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. பலர் அவருக்கு ஆதரவு தெரிவிக்க, சிலர் குடும்பத்தில் பொருளாதார நிலைத்தன்மை அவசியம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

திருமணத்தில் பணம் முக்கியமா, பரஸ்பர அன்பும் புரிதலும் முக்கியமா என்பது குறித்து இணையத்தில் பெரிய விவாதம் உருவாகியுள்ளது.

உலக மேசைப்பந்து தரவரிசையில் இலங்கையை உச்சத்திற்கு உயர்த்திய வீரர் தாவி சமரவீர!!

உலக மேசைப்பந்து தரவரிசையில் இலங்கையரொருவர் இதுவரையில் அடைந்த மிக உயர்ந்த இடத்தைப் பெற்ற வீரரான தாவி சமரவீர, தனது ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று (16) நண்பகல் மீண்டும் நாட்டுக்குத் திரும்பினார்.

குறித்த தொடரில் அவர் வெளிப்படுத்திய சிறப்பான திறமைகள் காரணமாக, தற்போது அவர் சர்வதேச மேசைப்பந்து தரவரிசையில் 11 வயதுக்குட்பட்டோர் பிரிவில் உலகின் 3வது இடத்தில் உள்ளார்.

இத்தாலியில் நடைபெற்ற உலக இளையோர் மேசைப்பந்துத் தொடரில் அவர் தங்கப் பதக்கத்தை வென்றார். அதனைத் தொடர்ந்து, ஸ்லோவாக்கியா மற்றும் ஹங்கேரியில் நடைபெற்ற மேசைப்பந்துத் தொடர்கள் இரண்டிலும் வெண்கலப் பதக்கங்களை வென்றார்.

ஹங்கேரியில் வைத்து உலகச் செம்பியனான போலந்து வீரரைத் தோற்கடித்ததன் மூலம், தாவி உலகத் தரவரிசையில் மூன்றாம் இடத்தைப் பிடிக்க முடிந்தது.

தாவியின் தந்தையான ஹசித சமரவீர மற்றும் அவரது தாயார் ஆகிய இருவரும் மேசைப்பந்துப் பயிற்றுநர்கள் ஆவர்.

இந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் தாவி, ஒரு தங்கப் பதக்கம், 5 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 4 வெண்கலப் பதக்கங்கள் என சர்வதேச மட்டப் போட்டிகளில் 10 பதக்கங்களை வென்றுள்ளார். தாவி கல்கிஸ்ஸை புனித தோமஸ் கல்லூரியில் 5ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஆவார்.

20 வயது யுவதி மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம்!!

இரத்தினபுரி ஹப்புகஸ்தன்னை யுவதி மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவ தினமான சனிக்கிழமை (15.11.2025) மாலை யுவதியுடன் சென்ற இளைஞர் அப்பர் வேவல்கட்டி தோட்டத்தைச் சேர்ந்தவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. யுவதி கீழ் இறத்கங்க பிரிவைச் சேர்ந்த மோகன்ராஜ் பேபி ஷானி (20) என கூறப்படுகின்றது.

யுவதியின் சடலத்தைப் பொதுமக்கள் கண்டுபிடித்ததன் பின்னர் அங்கு யுவதியின் காதலன் என கூறப்படும் நபர் சென்று வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. சந்தேக நபர் அணிந்திருந்த றப்பர் கைப்பட்டி இறந்த யுவதியின் கையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதோடு குறித்த நபர் யுவதியைக் காதலித்து வந்தார் என்ற விடயத்தை யுவதியின் தங்கை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இவர் லெல்லுப்பிட்டி, பானகொடை தோட்டத்திற்குத் தப்பிச்சென்றிருப்பதாகவும் அவரைக் கைதுசெய்ய வேவல்வத்தைப் பொலிஸார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபரைக் கைதுசெய்ய வலியுறுத்தி இன்று காலை கம்பி அடி – செட்டிக்கடை பகுதியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

வெளிநாட்டில் கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்ட இலங்கையர் : வழியின்றி தவிக்கும் மனைவி, பிள்ளைகள்!!

இஸ்ரேலில் படுகொலை செய்யப்பட்ட தனது கணவனுக்கு இலங்கை அரசாங்கமும், வெளிநாட்டு அமைச்சும் நீதியை பெற்றுத் தர வேண்டும் என உயிரிழந்தவரின் மனைவியான சருக்கலி தினேஷா லக்மாலி கோரிக்கை விடுத்துள்ளார்.

படபோலாவின் கொண்டகலாவில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான தரிந்து ஷனகா என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சிகரெட், மதுபான பாவனையை விரும்பாத என் கணவன் விருந்தொன்றின் போது கொலை செய்யப்பட்டமை ஏற்றுக்கொள்ள முடியாது என மனைவி குறிப்பிட்டுள்ளார்.

“என் கணவர் ஒரு தச்சர். எங்களுக்கு திருமணமாகி 17 வருடங்கள் ஆகிறது. எங்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகள் 7ஆம் வகுப்பு படிக்கிறார். இளைய மகள் பாலர் பாடசலையில் படித்து வருகிறார்.

அவருக்கு தினமும் வேலை இல்லாததால், வீடு கட்டவும், பிள்ளைகளை படிக்க வைக்கவும் வெளிநாடு சென்றார். கடந்த செப்டெம்பர் 17 ஆம் திகதி இஸ்ரேலுக்கு சென்றார்.

வெளிநாடு செல்வதற்காக சுமார் 15 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். 7 வீத வட்டியில் 5 லட்சம் ரூபாய் பணமும் வாங்கினார்.

இந்த மாதம் 12 நாட்கள் மட்டுமே வேலை செய்திருந்தார். அந்தப் பணத்தில் அவர் எனக்கு 100,000 ரூபாய் அனுப்பியிருந்தார். அடுத்த மாதம் வேலை செய்யும் போது, ​​கடனை அடைக்க எங்களுக்கு பணம் அனுப்புவதாகக் கூறினார்.

இவ்வாறான நிலையில் கழுத்து துண்டிக்கப்பட்டு கணவன் கொலை செய்யப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கடன்களை எப்படி நான் அடைப்பேன். பிள்ளைகளை எப்படி பார்த்துக் கொள்வேன்.

என் கணவரின் உடலை விரைவில் இலங்கைக்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் பணியாற்றிய வேளையில் ஆபிரிகர் ஒருவரினால் இலங்கையரான தரிந்து ஷனகா கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இளம் தாயை கொலை செய்த சிறுமியின் கொடூர செயல்!!

பதுளையில் தாயை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்த மகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெற்றோர் தங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், சிறுமி ஒருவர் தனது தாய் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.

பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தாய் நேற்று உயிரிழந்துள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறுமி பதுளை, எகொடவெலவைச் சேர்ந்த 13 வயது மாணவி என தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த பெண், பதுளை, எகொடவெலவைச் சேர்ந்த 28 வயது துலாஞ்சலி குமாரி என்ற பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த 4 ஆம் திகதி நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வடக்கு – கிழக்கில் கனமழை இன்னும் 2 நாட்கள் நீடிக்கும் வாய்ப்பு!!

வடக்கு, கிழக்கில் பல பகுதிகளுக்கும் கிடைத்து வரும் கனமழை மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது என யாழ். பல்கலைக்கழக புவியியல் துறைத் தலைவரும் காலநிலை அவதானிப்பாளருமான பேராசிரியர் நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள குறிப்பில், “மட்டக்களப்பில் நேற்று மதியம் ஒரு மணி வரையான 48 மணிநேரத்தில் 250 மில்லிமீற்றருக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சியும், யாழ்ப்பாணத்தில் நேற்று மதியம் ஒரு மணி வரையான 36 மணி நேரத்தில் 125 மி. மீற்றருக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சியும் பதிவாகின.

தொடர்ந்து இரு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்பதால் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு நகர பிரதேசங்களை அண்மித்த – தாழ்நிலப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வெள்ளம் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியமாகும்.

எதிர்வரும் 23ஆம் திகதியிலிருந்து 28ஆம் திகதி வரையும் வங்காள விரிகுடாவில் புயல் ஒன்று உருவாகுவதற்கான வாய்ப்பு காணப்படுவதால் அந்தக் கால பகுதியிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மிகக் கன மழையைப் பெறும்.

இம்முறை மழையின் போக்கில் மிகப்பெரியளவிலான இடம் சார்ந்த வேறுபாட்டை உணர முடிகின்றது. குறிப்பாக அதிகளவிலான மழையைப் பெறுகின்ற வவுனியா மற்றும் முல்லைத்தீவு , கிளிநொச்சி மற்றும் மன்னர் மாவட்டங்கள் ஒப்பீட்டளவில் குறைந்த மழையைப் பெற்றிருக்கின்றன.

காலநிலை மாற்றத்தின் மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்ற நுண் காலநிலை வேறுபாடுகளை நாம் உணரத் தொடங்கி இருக்கிறோம். வடகீழ்ப் பருவக்காற்று இன்னமும் உச்சம் பெறவில்லை.

பருவ மழைக்கான காலம் இன்னமும் போதுமானதாக உள்ளது. எதிர்பார்க்கும் மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.” – என்றுள்ளது.

 

வெளிநாட்டில் கழுத்தறுத்து கொல்லப்பட்ட இலங்கையர் : சடலம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

இஸ்ரேலில் கழுத்து துண்டிக்கப்பட்டதாக கூறப்படும் இரண்டு பிள்ளைகளின் தந்தையின் உடல் ஒரு வாரத்திற்குள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

அம்பலங்கொடை, காலி, படபோலாவைச் சேர்ந்த 38 வயதான தரிந்து ஷனகா, கட்டுமானத் துறையில் தச்சராக வேலை செய்ய கடந்த செப்டெம்பரில் இஸ்ரேலுக்கு சென்ற நிலையில் கழுத்து துண்டிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அவரது உடலை நாட்டிற்கு கொண்டுவர உதவுமாறு மனைவி கோரிக்கை விடுத்திருந்த நிலையில்,அவரது உடல் ஒரு வாரத்திற்குள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டார நேற்று (16.11.2025) தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் இலங்கையர்கள் சாலை விபத்துகள் மற்றும் உடல்நலக் காரணங்களால் இறந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறை.

இரண்டு இலங்கையர்களுடன் இருந்தபோது ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த ஒரு கருப்பினத்தவருடன் உடலுறவு கொண்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு பிறகு அவர் இந்த கொலையை செய்ததாகக் கூறப்படுகிறது.

இஸ்ரேலிய பொலிஸார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படும் வரை குறிப்பிட்ட காரணத்தை அறிவிக்க முடியாது என்றும் நிமல் பண்டார கூறியுள்ளார்.

நேற்றைய நிலவரப்படி உடல் தடயவியல் மருத்துவ நிறுவனத்தில் இருப்பதாகவும்,உடலை இந்த நாட்டிற்குக் கொண்டுவர சுமார் 1.5 மில்லியன் ரூபாய் செலவாகும் என்றும், தூதரகம் அந்த பணத்தைச் செலவழித்து உடலை கொண்டுவர தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் தூதர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் வேலையில் ஈடுபடும்போது விபத்து ஏற்பட்டால், இழப்பீடு வழங்கப்படும் என்றும், தற்போது ஒரு சிலருக்கு அத்தகைய இழப்பீடு (மாதாந்திர சம்பளம்) வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

தற்போது சுமார் 26,000 இலங்கையர்கள் இஸ்ரேலில் இருப்பதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 1,000 பேர் வரவிருப்பதாகவும் தூதர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இளம் தம்பதியினர் அதிரடியாக கைது : சிக்கிய கோடிக்கணக்கான பணம்!!

கொழும்பு – மொரட்டுமுல்ல பொலிஸ் பிரிவின் கட்டுபெத்த பகுதியில் 25 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் திருமணமான தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (17) போதைப்பொருள் கடத்துவதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில், முச்சக்கர வண்டியின் சாரதியான கணவரை 15 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அகுலானா பகுதியில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது, ​​சந்தேகநபரின் மனைவி மேலும் 10 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரட்டுவையில் உள்ள அங்குலானா புகையிரத நிலைய சாலை பகுதியைச் சேர்ந்த 31 மற்றும் 21 வயதுடைய தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவரும் நீண்ட காலமாக இந்த மோசடியில் ஈடுபட்டு வருவதுடன், இதன் மூலம் கோடிக்கணக்கான பணத்தினை சம்பாதித்துள்ளனர். இதற்கமைய,சந்தேகநபர்கள் மொரட்டுவை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளனர்.

மேலும் அவர்கள் யாரிடமிருந்து போதைப்பொருள் பெற்றார்கள், மோசடியில் இருந்து அவர்கள் சம்பாதித்த பணம் மற்றும் அவர்களின் கணக்கு விவரங்கள் குறித்து இருவரையும் தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸார் அனுமதி கோரியுள்ளனர்.

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட மாற்றம்!!

இலங்கையில் நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது இன்று தங்கத்தின் விலையில் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு, 24 கரட் தங்க கிராம் 44,260 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் 354,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்க கிராம் 40,580 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் 324,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 38,730 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 309,850 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது.

அதனடிப்படையில், இன்றைய (17.11.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,254,650 ரூபாவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொடூரமாக கொலை செய்யப்பட்ட மனைவி : உயிருக்கு பயந்து தப்பியோடிய கணவன்!!

இரத்தினபுரி, நிவிதிகல பகுதியில் 10 ஏக்கர் தனியார் தோட்டத்தில் 68 வயதுடைய பெண்ணை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய 2 சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலை கடந்த 14 ஆம் திகதி இரவு நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 15 ஆம் திகதி காலை பெண் கொலை செய்யப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

குறித்த பெண் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 2 இளைஞர்கள் அப்பகுதியை விட்டு தப்பி ஓடிவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2 சந்தேக நபர்களும் கொலை செய்யப்பட்ட பெண்ணின் 2 உறவினர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட பெண் பதுரலியவில் உள்ள பெலவத்த பகுதியை சேர்ந்தவர் எனவும் 8 மாதங்களுக்கு முன்பு அந்த தோட்டத்திற்கு குடியேறியுள்ளார் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

2 சந்தேக நபர்களும் அங்குள்ள தோட்டத்தில் வசித்து வந்துள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண்ணும் அவரது கணவரும் இருந்த இடத்திற்கு அடுத்துள்ள தோட்டத்தில் தங்கியிருந்தனர்.

2 இளைஞர்களும் மது அருந்திய பின்னர் கொலை செய்யப்பட்ட பெண்ணையும் அவரது கணவரையும் தடிகளால் தாக்கியதாகவும், கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் தப்பியோடியுள்ளார்.

அவர் அடுத்த நாள் காலையில் நிவிதிகல பொலிஸ் நிலையத்திற்கு வந்து சம்பவம் குறித்து முறைப்பாடு செய்துள்ளார். கொலை செய்யப்பட்ட பெண்ணும் அவரது கணவரும் மதுபானத்திற்கு அடிமையானவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சாரதி அனுமதி பத்திரத்திற்காக காத்திருப்போருக்கு முக்கிய தகவல்!!

இலங்கையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்டுநர் உரிமங்களை அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அச்சிடும் அட்டைகள் இல்லாததால் நிறுதி வைக்கப்பட்டிருந்த செயற்பாடு, மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, தினமும் சுமார் 6,000 ஓட்டுநர் உரிமங்களை அச்சிட திட்டமிடப்பட்டுள்ளது. ஓட்டுநர் உரிமங்களை அச்சிடுவதற்கு தேவையான அட்டைகள் இல்லாததால், கடந்த காலங்களில் கிட்டத்தட்ட 350,000 ஓட்டுநர் உரிமங்கள் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த அச்சிடும் அட்டைகளை வழங்குவதன் மூலம், தொடர்புடைய ஓட்டுநர் உரிமங்களை அச்சிடும் பணி உடனடியாக தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் குவிந்து கிடக்கும் ஓட்டுநர் உரிமங்களை அச்சிடும் பணியை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை எதிர்காலத்தில் சாரதி அனுமதி பத்திரத்திற்கு விண்ணப்பித்து 14 நாட்களுக்குள் ஓட்டுநர் உரிமத்தை வழங்கவும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் கோர விபத்து மக்காவுக்கு புனிதப்பயணம் சென்ற 42 இந்தியர்கள் பலி!!

சவுதி அரேபியா மதீனா அருகே மக்காவுக்கு புனிதப்பயணம் சென்ற பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று டீசல் தாங்கியுடன் மோதியதில் குறைந்தது 42 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனித பயணம் மேற்கொண்ட நிலையில், ஜோரா என்ற இடத்தில் பேருந்து சென்று கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக பேருந்து மீது டீசல் லொரி மோதியது.

இந்த கோர விபத்தில் பேருந்தில் இருந்த 20 பெண்கள், 11 சிறுவர்கள் உள்பட 42 பேர் பலியாகியுள்ளார்கள். பேருந்து முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் அவர்கள் உடல் கருகிய நிலையில் கிடந்தன.

இதை தொடர்ந்து மீட்பு படையினர் விரைந்து சம்பவ இடத்துக்கு சென்றனர். பலியான அனைவரும் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்ததுள்ளது.

இந்தசம்பவம் குறித்து அறிந்த தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, உயிரிழந்தவர்கள் குறித்து முழு விவரங்களை கண்டறியவேண்டும் என்றும் களத்தில் இறங்கி உரிய நிவாரண முயற்சிகளை வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் தலைமைச் செயலகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இதனிடையே, பேருந்து விபத்தை அடுத்து ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு 8002440003 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றிரவு வரை பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பலத்த மின்னல் குறித்து வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (15.11.2025) இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என்று நிலையம் தெரிவித்துள்ளது.

தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், களுத்துறை, இரத்தினபுரி, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல் பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் அபாயங்களைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வானிலை நிலையம் பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றது.