இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இந்த நிலையில், தற்போது தங்கத்தின் விலையானது நேற்றையதினத்துடன் ஒப்பிடுகையில் இன்றையதினம் சற்று அதிகரித்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 340,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 314,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 39,313 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவின் டெல்லியில் கடந்த திங்கட்கிழமை கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு காரணமான மருத்துவர் உமர் நபியின் வீட்டை பாதுகாப்பு படையினர் வெடி வைத்து தகர்த்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
டெல்லி செங்கோட்டை அருகில் கடந்த திங்கட்கிழமை மாலை ஹூண்டாய் ஐ20 கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
காரை ஓட்டி வந்தவர் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது தொடர்பான விசாரணையில், வெடிபொருளுடன் காரை ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியை சேர்ந்த மருத்துவர் உமர் முகமது நபி ஓட்டி வந்தது தெரியவந்தது.
வெடித்த காரில் இருந்து சேகரிக்கப்பட்ட உடற்பாகங்கள் மற்றும் உமரின் தாயாரிடம் சேகரிக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரியை பகுப்பாய்வு செய்ததில் உறுதியானது.
இந்தச் சூழலில் இன்று (14) புல்வாமாவில் உள்ள மருத்துவர் உமர் நபியின் வீட்டை பாதுகாப்பு படையினர் வெடி வைத்து தகர்த்தனர். குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் போலீஸார் தீவிர சோதனை நடத்தியதில் அங்கு ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் மூவர் மருத்துவர் உமர் நபியின் உறவினர்கள். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை மற்றும் கைது படலத்தை விசாரணை அமைப்புகளை மேற்கொண்டு வருகின்றன.
சந்தேக நபர்கள் மூவரும் சுவிட்சர்லாந்தின் ‘திரீமா’ செயலியைப் பயன்படுத்தி சதி திட்டம் தீட்டியதாகவும், சுமார் 26 லட்சம் ரூபாயை இதற்காக அவர்கள் நிதியாக திரட்டி உள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆராச்சிகட்டுவ பிரதேச சபையின் இளைய உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதியுமான நிகினி அயோத்யா (21), பிரதேச சபை தவிசாளரால் அச்சுறுத்தப்பட்டதையடுத்து, தனது பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளார்.
பிரதேச சபை தலைவர் ஜயரத்ன ஜயசேகர தன்னைத் திட்டி, முட்டாள் என்று கூறி, சபைக்கு மீண்டும் வர வேண்டாம் என அச்சுறுத்தியதாகக் கூறி, நிகினி அயோத்யா நேற்று முன்தினம் (12.11.2025) பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
சிலாபத்தில் நேற்று (13.11.2025) ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தமது பதவி விலகல் முடிவை அறிவித்தார்.
இங்கு பேசிய உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள், ஒரு பெண்ணை இழிவுபடுத்திய தவிசாளரை கடுமையாகக் கண்டித்ததுடன், அவர் மனநல மருத்துவரை அணுக வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இந்நிலையில், சம்பவம் குறித்து பிரதேச சபை தலைவர் ஜயரத்ன ஜயசேகர கருத்து தெரிவிக்கையில், அந்த நேரத்தில் சில பிரச்சினைகள் மற்றும் வரவு செலவு திட்ட அமர்வில் எதிர்க்கட்சியின் நடத்தை காரணமாக தான் மன அழுத்தத்தில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அதனால் அந்தப் பெண் உறுப்பினரை அலுவலகத்திலிருந்து வெளியேறுமாறு தெரிவித்ததாகவும் ஏற்றுக்கொண்ட போதும், இந்தச் சம்பவம் தொடர்பாக ஆராச்சிகட்டுப் பொலிஸார் விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
இலங்கையில் ஐந்தில் ஒரு வயது வந்தவர் நீரிழிவு நோயுடன் வாழ்வதாகவும், அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கண் தொடர்பான சிக்கல்கள் உருவாகும் அபாயத்தில் இருப்பதாகவும் இலங்கை சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய கண் வைத்தியசாலையின் ஆலோசகர் கண் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் கபில பந்துதிலக இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் வயது வந்தோரிடையே நீரிழிவு நோயின் பரவல் 23% முதல் 30% வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது, சுமார் ஐந்தில் ஒருவரை இது பாதிக்கிறது. சமீபத்திய தரவுகளின்படி, பொது நீரிழிவு நோய் பாதிப்பு 73% அதிகரித்துள்ளது. உலகளவில், ஒன்பது பெரியவர்களில் ஒருவருக்கு நீரிழிவு நோய் கண்டறியப்படுகிறது.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு கண் நோய்களை உருவாக்குகிறது. மேலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் 11% பேருக்கு கண்பார்வை இழக்கும் அபாயம் உள்ளது.
நீரிழிவு நோய் குறிப்பாக உழைக்கும் வயதுடைய மக்களிடையே பார்வையை கணிசமாகப் பாதிக்கிறது. இதனால், ஆண்டுதோறும் சுமார் ரூ. 923 மில்லியன் வருமான இழப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய கண் வைத்தியசாலையின் நீரிழிவு கண் சிகிச்சைப்பிரிவுக்கு வரும் பெரும்பாலான நோயாளிகள் முதியவர்கள் அல்ல; மாறாக, அவர்கள் 40 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்று மருத்துவர் பந்துதிலக மேலும் தெரிவித்தார்.
“இந்த நபர்கள் பார்வையிழக்க எந்த காரணமும் இல்லை. ஆரம்பத்திலேயே கண்டறிதல், வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் சரியான சிகிச்சையின் மூலம்,
இந்த நிலையை நிர்வகிக்கலாம் அல்லது தடுக்கலாம். தடுப்பு தோல்வியடைந்தாலும், ஆரம்ப கட்ட சிகிச்சைகள் கிடைக்கின்றன,” என்றும் அவர் கூறினார்.
அநுராதபுரம் – எப்பாவல பிரதேசத்தில் போதைப்பொருள் சர்ச்சையில் சிக்கியுள்ள பாடசாலை அதிபர் இலங்கை அதிபர் சேவையின் தரப்படுத்தப்பட்ட அதிகாரி அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட அதிபர் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் இலங்கை தொழிற்சார் அதிபர்கள் சங்கம் இன்று (14) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதிபர் தொடர்பில் சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அநுராதபுரம் – எப்பாவல பிரதேசத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் ஒரு கிலோ கிராமுக்கு அதிகமான ஹெரோயினுடன் கடந்த மாதம் (5) கைது செய்யப்பட்டிருந்தார்.
போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட அதிகாரி ‘அதிபர்’ எனக் குறிப்பிடப்பட்டாலும், அவர் இலங்கை அதிபர் சேவையின் தரப்படுத்தப்பட்ட அதிகாரி அல்ல.
அவர் இலங்கை ஆசிரியர் சேவையின் அதிகாரி என்பது உறுதியாகியுள்ளதுடன், அவர் அதிபர் பதவியை தற்காலிகமாகப் பொறுப்பேற்று (Covering duties) பணியாற்றியுள்ளார்.
‘அதிபர்’ என்று அழைக்கப்படக்கூடியவர்கள் இலங்கை அதிபர் சேவையின் தரப்படுத்தப்பட்ட அதிகாரிகள் மாத்திரமே என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை தொழிற்சார் அதிபர்கள் சங்கம் மேலும் கூறுகையில், அதிபர் சேவையின் தரப்படுத்தப்பட்ட அதிகாரிகள் அல்லாதவர்கள் இவ்வாறு ‘அதிபர்’ என்ற பெயரைப் பயன்படுத்துவது அதிபர் சேவைக்கு செய்யப்படும் அநீதியாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், குறித்த அதிகாரியைப் பற்றிய தகவல்களை வெளியிடும்போது, அவரை “இலங்கை ஆசிரியர் சேவையின் அதிகாரி” என்று அடையாளப்படுத்த வேண்டும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
திருமணத்தைப் பற்றி யோசிக்காமல் பெற்றோரை பராமரிப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் பிள்ளைகளுக்கு ஓய்வூதியம் வழங்க சட்ட ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பிள்ளைகளுக்கு 26 வயதை எட்டிய பின்னர் ஓய்வூதியம் வழங்க சட்ட ஏற்பாடுகள் செய்யப்படும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபயரத்ன நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வயதான பெற்றோரைப் பராமரிப்பதற்காக பிள்ளைகள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்பது ஒரு சிறப்பு விடயம் எனவும், இதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை செய்ய முடியும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை, ஓய்வூதியம் பெறுபவரின் மரணத்திற்கு பின்னர் வாழ்க்கைத் துணைவருக்கும், வாழ்க்கைத் துணையின் மரணத்திற்குப் பிறகு 26 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு தற்போது ஓய்வூதிய சலுகைகள் வழங்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சேனா நாணயக்கார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் சந்தன அபயரத்ன இதனைத் தெரிவித்தார்.
இஸ்ரேலில் வேலைவாய்ப்புக்காக சென்ற இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 2 மாதங்களுக்கு முன்னர் நிர்மாணத்துறை வேலைக்காக இஸ்ரேலுக்கு சென்ற 38 வயது இலங்கையரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இஸ்ரேலில் வசிக்கும் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரால் அவர் கொல்லப்பட்டதாக இலங்கைக்கான இஸ்ரேலிய தூதர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவில், அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நேற்று இரவு இந்த கொலை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த இலங்கையரின் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலிய பொலிஸாரின் இன்டர்போல் பிரிவு இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி வருகின்றது.
மேலும் கொலை செய்யப்பட்ட நபர் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பணி விசா மூலம் இஸ்ரேல் சென்றவர் என தெரியவந்துள்ளது. தெரிவிக்கப்படுகின்றது.
பதுளையில் தனது காதலுக்கு தாயார் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த 13 வயது சிறுமி ஒருவர், தனது தாயின் உறங்கிக் கொண்டிருந்த படுக்கையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.
இந்த அனர்த்தம் காரணமாக பலத்த தீக்காயங்களுக்குள்ளான தாய் தற்போது பதுளை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் 11 ஆம் திகதி மாலை சந்தேக நபரான சிறுமியை கைது செய்தனர். பதுளை பகுதியில் உள்ள பாடசாலையில் படிக்கும் சிறுமி, ஒரு இளைஞனுடன் காதல் உறவில் இருந்துள்ளார்.
இதை அறிந்ததும், அவரது தாயார், நன்கு படித்து வேலை கிடைத்த பின்னர் பொருத்தமான துணையை தேடுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதனை ஏற்றுக்கொள்ள முடியாத மகள், தாயின் படுக்கையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். சந்தேக நபரான சிறுமி தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.
காதலுக்கு தாய் கடும் எதிர்ப்பு தெரிவித்தமையினால் இவ்வாறு செய்ததாக பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
அநுராதபுரம் – தலாவ சுனாமி சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளும், மோட்டார் வாகனமும் மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்த இருவர் தற்போது அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர் கவலைக்கிடமான நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அநுராதபுரம் திசையிலிருந்து தலாவ நோக்கிச் சென்ற மோட்டார் வாகனம் திடீரென பிரதான வீதியில் வைத்து மீண்டும் அனுராதபுரம் நோக்கி ‘யு-டர்ன் எடுத்தபோது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.
மோட்டார் வாகனத்தை செலுத்தி வந்த ஆசிரியையும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பில் தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இந்த நிலையில், தற்போது தங்கத்தின் விலையானது நேற்றையதினத்துடன் ஒப்பிடுகையில் இன்றையதினம்(14) சற்று அதிகரித்துள்ளது.
இதனடிப்படையில், இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது இலங்கை மதிப்பில் 1,284,352 ரூபாவாக காணப்படுகின்றது.
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 45,310 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்கப் பவுண் 362,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.
2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி வரிகள் எதிர்பார்த்ததை விட ரூ.100 பில்லியனுக்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையிலான பொது நிதி குழு நாடாளுமன்றத்தில் கூடியபோது இந்த உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இருப்பினும், வாகன இறக்குமதி குறைவதால் அடுத்த ஆண்டு வருவாய் வளர்ச்சி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, இந்த வருட இறுதி 04 மாதங்களில் 582 மில்லியன் அமெரிக்க டொலருக்கு வாகனம் இறக்குமதி செய்யப்படுமென எதிர்பார்ப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நடப்பாண்டின் முதல் 10 மாதங்களில் 2,50,000 வரையான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 63,000 கோடி ரூபா வரி வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த வருடத்தின் முதல் 09 மாதங்களில் மாத்திரம் வாகன இறக்குமதிக்காக 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் (36,431 கோடி அமெரிக்க டொலர்) நிதி செலவு செய்யப்பட்டுள்ளதுடன்,
வாகன இறக்குமதிக்காக அதிக நிதி கடந்த செப்டெம்பர் மாதமே செலவிடப்பட்டுள்ளதாக புதிய தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
வாகன இறக்குமதிக்காக கடந்த செப்டெம்பர் மாதத்திலேயே அதிக நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த செப்டெம்பர் மாதம் வாகன இறக்குமதிக்காக 286 மில்லியன் அமெரிக்க டொலர் (8,682 கோடி ரூபா) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கோட்டை பொலிஸ் பிரிவில் பிரபல ஹோட்டல் அறையில் தங்கியிருந்த வெளிநாட்டு பெண்ணின் பணப்பையை திருடிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு நேற்று (13) கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பேரில் உடனடியாக செயல்பட்ட பொலிஸ் அதிகாரிகள் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
வெளிநாட்டுப்பெண் ஹோட்டலில் உள்ள சிறப்பு விருந்தினர் அறையில் மற்றொரு பெண்ணுடன் தங்கியிருந்ததாகவும், அவரது பணப்பையில் இருந்த திர்ஹாம்கள் மற்றும் யூரோக்கள் (உள்ளூர் நாணயத்தில் 330,000 ரூபாய்) காணாமல்போயுள்ளதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் 41 வயதான கந்தானையை சேர்ந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் விசாரித்தபோது, வெளிநாட்டுப் பெண்கள் அறையில் இல்லாதபோது திருட்டு நடந்ததாகவும், திருடப்பட்ட வெளிநாட்டுப் பணம் ஜா-எல பகுதியில் உள்ள நிதி நிறுவனத்தில் மாற்றப்பட்டமையும் தெரியவந்துள்ளது.
மேலும்,கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று (14) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தபொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திருகோணமலை -ஹொரவ்பொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் கபுகொல்லாவ-ஆனவிழுந்தான் பகுதியைச் சேர்ந்த எஹியா உல்முதீன் சஹீல் அஹமட் (வயது 19) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
மஹதிவுல்வெவ பகுதியில் இருந்து தம்பலகாமம் நோக்கி ஆடை தொழிற்சாலைக்கு சென்ற பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த இளைஞன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் விபத்து தொடர்பிலான விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நோய்வாய்ப்பட்ட பிள்ளையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளையில் ஏற்பட்ட விபத்தில் குடும்பம் ஒன்று காயமடைந்துள்ளது. மாவனெல்ல-ஹெம்மாதகம வீதியில் நேற்று முன்தினம் பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
ஓட்டுநர் தூங்கியதால் பாடசாலை பேருந்து கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த முச்சக்கர வண்டியில் மோதியது.
மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்த தாய், தந்தை மற்றும் பிள்ளையை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியே விபத்தில் சிக்கியது. மூவரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதேவேளை, பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று மதியம் நடந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்த அவரது மகள் மற்றும் மற்றொரு நபர் தற்போது பேராதனை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்தவர் 35 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று வேகமாகச் சென்று வீதியில் இருந்து விலகி நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியின் மீதும், அருகிலுள்ள கடையின் மீதும் மோதியது. கடையில் இருந்த ஒரு பெண் உயிரிழந்த நிலையில் அவரின் ஆறு வயது மகள் காயமடைந்துள்ளார்.
இன்று (13) நண்பகல் வரை 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 336,000 ரூபாயாக விற்பனையாகிய நிலையில், பிற்பகலுக்கு பின் 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 4,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில், இன்று மாத்திரம் 14,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 340,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 314,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 39,313 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் இரட்டைக் குழந்தைகள் (உடலால் ஒட்டிய இரட்டையர்கள்) பிறந்துள்ளதாக மருத்துவமனை பணிப்பாளர் வைத்தியர் அஜித் தன்தநாராயன குறிப்பிட்டார். இந்தக் குழந்தைகள் கடந்த 10ஆம் திகதி பிறந்துள்ளன.
ஒரு குழந்தையின் எடை 2 கிலோ 200 கிராம் எனவும், மொத்தமாக இரண்டு குழந்தைகளும் 4 கிலோ 400 கிராம் எடையுடன் ஆரோக்கியமாகப் பிறந்துள்ளதாக மருத்துவமனை பணிப்பாளர் குறிப்பிட்டார்.
வயிற்றுப் பகுதியால் ஒன்றிணைந்துள்ள இந்தக் குழந்தைகளைப் பிரிக்கும் சத்திரசிகிச்சை மூன்று மாதங்களுக்குப் பிறகு சிறுவர் சீமாட்டி மருத்துவமனையில் நடைபெற உள்ளது என்றும் அவர் கூறினார்.
காசல் மருத்துவமனையில் இரட்டைக் குழந்தைகளின் பிறப்புகள் இதற்கு முன்பு நிகழ்ந்துள்ள போதிலும், அண்மைக் காலத்தில் இவ்வாறானதொரு குழந்தை பிறப்பு இடம்பெற்றது இதுவே முதல் சந்தர்ப்பம் என மருத்துவமனை பணிப்பாளர் தெரிவித்தார்.