கோர விபத்தில் பாடசாலை மாணவர்கள் 3 பேர் பலியான சோகம்!!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், லாரி மீது பைக் மோதி விபத்திற்குள்ளானதில், பைக்கில் சென்ற அரசு மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரைப் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா நவதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன். மாரியம்மன் கோவில் பூசாரியான இவருடைய மகன் மதன் (14). மத்திகிரி கூட்டு ரோடு அருகில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படித்து வந்த மதன்,

அதே பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த ஆரியன் சிங் (13), அதே பகுதியைச் சேர்ந்த 9ம் வகுப்பு படித்து வந்த ஹரீஷ் (14) ஆகிய 3 பேரும் நண்பர்கள்.

இந்நிலையில் நேற்று மாலை, பள்ளிக்கு செல்லாத மதன், தனது தந்தையின் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு பள்ளி அருகில் சென்றுள்ளான்.

அங்கு ஆரியன் சிங்கை ஏற்றிக் கொண்டு அந்திவாடி சென்று, அங்கிருந்த ஹரீசை ஏற்றிக் கொண்டு 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

இவர்களது வாகனம் மத்திகிரி கூட்டு ரோடு பக்கமாக சென்றுக் கொண்டிருந்த போது, அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லாரி ஒன்றின் பின்புறம் பயங்கரமாக மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அதில் ஆரியன்சிங் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தான்.

மற்ற இருவரும் பலத்த காயமடைந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மதன், ஹரீஷ் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்ததும் மத்திகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் 3 மாணவர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் 3 மாணவர்கள் பலியான தகவல் அறிந்து கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர், ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அனில் அக்ஷய் வாகரே ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

இது தொடர்பாக மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஓசூர் அருகே லாரியின் பின்புறம் மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் 3 பள்ளி மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

3ம் வகுப்பு மாணவியின் நாக்கில் சிக்கிய தண்ணீர் போத்தல் மூடி!!

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் தனியார் பள்ளியில் படித்து வரும் 3ம் வகுப்பு மாணவி ஆதித்ரி சிங். இவர், கடந்த சனிக்கிழமை தண்ணீர் குடிக்க முயற்சித்த போது பாட்டிலின் பிளாஸ்டிக் ஸ்க்ரூ மூடியில் அவரது நாக்கு சிக்கிக்கொண்டது.

இது ஒரு சாதாரண விஷயம் போலத் தோன்றினாலும், சிறுமி மூடியை அகற்ற முயற்சிக்கும்போது, நாக்கு மேலும் சிக்கிக்கொண்டு வலியால் கதறித் துடித்தார். சிறுமியின் அழுகையை பார்த்து வகுப்பு ஆசிரியர் உடனே உதவி செய்தார்.

ஆனாலும், மூடியை எடுக்க முடியவில்லை. உடனடியாக பள்ளி நிர்வாகம் மாணவியை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது.

அங்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலையில், ராஜேந்திர நகரில் உள்ள ஈ.என்டி நிபுணர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

நுட்பமான அறுவை சிகிச்சை மூலம், மருத்துவர் மூடியை வெட்டி, நாக்கை பாதுகாப்பாக வெளியே எடுத்து, சிறுமியின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். தற்போது மாணவி முழுமையாக மீண்டு, ஆரோக்கியமாக உள்ளார்.

இச்சம்பவம் பெற்றோர்களிடமும் பள்ளிகளிடமும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் தந்தை வினீத் சிங், “பள்ளி ஆசிரியர்களின் சிக்கன நடவடிக்கையும், மருத்துவரின் தன்னலமற்ற சேவையும் என் மகளின் உயிரை காப்பாற்றியது,” என நன்றி தெரிவித்துள்ளார்.

சாதாரணமாகத் தோன்றும் ஒரு விஷயம் கூட குழந்தைகளுக்கு பெரிய ஆபத்தில் முடியலாம் என்பதற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டு என சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முச்சக்கரவண்டி விபத்தில் தந்தை பலி : தாய், பிள்ளைகள் படுகாயம்!!

அநுராதபுரத்தில் கெக்கிராவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏ9 வீதியில் மிரிஸ்வத்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் தந்தை உயிரிழந்துள்ளதுடன் தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் படுகாயமடைந்துள்ளதாக கெக்கிராவை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (15.07.2025) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கெக்கிராவையிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. .

விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த தந்தையும் தாயும் இரண்டு பிள்ளைகளும் படுகாயமடைந்துள்ள நிலையில் கெக்கிராவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கெக்கிராவை பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கெக்கிராவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குளத்தில் விழுந்து 2 வயதுக் குழந்தை பரிதாபமாக பலி!!

அம்பாறை அக்கரைப்பற்று பகுதியில் உள்ள மீரா ஓடை குளத்தில் விழுந்து 2 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

தண்ணீரில் மிதந்த குழந்தையை அவதானித்த உறவினர்கள், குழந்தையை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போதும் குழந்தை உயிரிழந்தது.

இன்று தனது இரண்டாவது பிறந்தநாளை கொண்டாடவிருந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது. கடந்த ஜனவரி மாதமும் மீரா ஓடை குளத்தில் விழுந்து 6 வயது பிள்ளையொன்று உயிரிழந்திருந்தது.

இந்த இறப்புகளால் பெரும் சோகத்திற்கு உள்ளாகியுன்ன அப்பகுதி மக்கள், நேற்று (15) மாலை, “மீரா ஓடை குளத்தை சுற்றி பாதுகாப்பு வேலி அல்லது சுவர் கட்டப்பட வேண்டும்” என்று கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.

மாதுளைப்பழ பிரியர்களா நீங்கள்? சாப்பிடும் போது தவறியும் இதை மட்டும் செய்யாதீர்கள்!!

மாதுளை பழம் மிகவும் சுவையான, சத்துக்கள் நிறைந்த பழம் தான். தினமும் சிறிதளவு சாப்பிடுவது நல்லதுதான். ஹீமோகுளோபின் அதிகரிப்பது முதல் ரத்தத்தை சுத்தப்படுத்துவது வரை நிறைய நன்மைகளை தரும்.

ஆனால் அதை நீங்கள் தப்பா தான் சாப்பிடறீங்கனு உங்களுக்கு தெரியுமா? மாதுளை பழம் சாப்பிடும்போது பொதுவாக செய்யும் 5 தவறுகள் என்ன? அதை ஏன் செய்யக்கூடாது? என்பது பற்றி நாம் இங்கு பார்க்கலாம்.

நிறைய பேர் மாதுளை பழத்தை நறுக்கும்போது ஒழுங்காக நறுக்கத் தெரியாமல் அதன் சாறு முழுக்க கீழே சிந்திவிடுவார்கள். அதிலேயே பாதி சத்துக்கள் வீணாகி போய்விடும். அதோடு பழத்தை மென்று விட்டு அதன் விதைகளை தூக்கி கீழே வீசி விடுவார்கள். அப்படி செய்ய கூடாது.

மாதுளை பழத்தை பொறுத்தவரை அதன் விதைகளையும் சேர்த்து தான் சாப்பிட வேண்டும். அதில்தான் நிறைய ஆண்டி அக்கிட்சிட்டுங்கள் இருக்கின்றன. குறிப்பாக குழந்தைகளுக்கு கொடுக்கும்போது அவர்களுக்கு விதைகளோடு சாப்பிட கற்றுக் கொடுங்கள். பெரும்பாலான குழந்தைகள் விதைகளை துப்பி விடுகிறார்கள்.

மாதுளை சாப்பிடும்போது செய்யும் இரண்டாவது தவறு என்னவென்றால் மாதுளையின் மேல் பகுதி தோலை உரித்தவுடன் அதன் உட்புறத்தில் இருக்கும் மெலிதான வெள்ளை நிற தோல்களை நீக்கிவிட்டு மாதுளையின் முத்துக்களை மட்டும் சாப்பிடுவார்கள். அது மிக மிகத் தவறு.

மாதுளையின் உட்புறத்தில் இருக்கும் மெல்லிய தோலில் உள்ள துவர்ப்புத் தன்மை தான் அந்த பழத்தின் ஒட்டுமொத்த பயன்களையுமே தாங்கி இருக்கிறது. குறிப்பாக அந்த பகுதியில் தான் நார்ச்சத்து இருக்கிறது. அது செரிமான ஆற்றலை மேம்படுத்த உதவி செய்யும். அதை நீக்கிவிட்டால் அதிலுள்ள நார்ச்சத்துக்கள் முழுமையாக நீங்கிவிடும்.

மாதுளை பழம் மட்டுமல்ல எந்த வகை பழமாக இருந்தாலும் அது உடலுக்கு நல்லது என்பதற்காக நிறைய சாப்பிடக் கூடாது. ஏனென்றால் பழங்களில் இயற்கையாகவே சர்க்கரை இருக்கும். அது ரத்தத்தின் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்து விடும்.

குறிப்பாக மாதுளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம். அதிலும் சிலருக்கு குடல் சென்சிடிவிட்டி அதிகமாக இருக்கும். அவர்களுக்கு இந்த அஜீரணக் கோளாறு சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும்.

மற்ற பழங்களையாவது நறுக்குவதற்கு முன்போ பின்போ கழுவிவிட்டு சாப்பிடுவோம். ஆனால் நன்கு யோசித்துப் பாருங்கள். மாதுளை பழத்தை நாம் கழுவுவதே கிடையாது. மாதுளை முத்துக்கள் உள்ளுக்குள் தானே இருக்கிறது என்று உரித்து அப்படியே சாப்பிடுகிறோம். அப்படி செய்யக்கூடாது.

மாதுளை பழத்தின் தோலில் நிறைய பாக்டீரியாக்கள் இருக்கும். அதேபோல பழங்களில் நிறைய பூச்சிக்கொல்லிகள் தெளித்து இருப்பார்கள். அதனால் மாதுளை வெட்டுவதற்கு முன் பழத்தை நன்கு கழுவிவிட்டு தான் நறுக்க வேண்டும்.

 

ஓடும் பேருந்தில் குழந்தை பெற்று வீதியில் வீசி எறிந்த கொடூரம் : இளம்பெண்ணின் ஈவிரக்கமற்ற செயல்!!

இந்தியாவின் மகாராஷ்டிராவில் ஓடும் பேருந்திலேயே டெலிவரி பார்த்து குழந்தையை சாலையில் வீசிக் கொன்ற 19 வயது இளம்பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மகாராஷ்டிராவில் உள்ள பர்பானி பகுதியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண் ரிக்கிகா தேரே. இவரும் அல்தாப் ஷேக் என்ற இளைஞரும் ஸ்லீப்பர் கோச் பஸ் ஒன்றில் புனேயில் இருந்து பர்பானிக்கு பயணம் செய்துள்ளனர்.

ரித்திகா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் பேருந்தில் ஏறிய பிறகு ரித்திகாவிற்கு பிரசவ வலி எடுத்துள்ளது. ஆனால் சத்தமே இல்லாமல் ஸ்லீப்பர் கோச்சுக்குள் அல்தாப் ஷேக்கின் உதவியோடு குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார் ரித்திகா.

அதன்பின்னர் குழந்தையை ஒரு துணியில் சுற்றி ஜன்னல் வழியாக சாலையில் வீசியுள்ளனர். ஜன்னல் வழியாக எதையோ வீசுவதை கண்டு டிரைவர் என்னவென்று விசாரித்தபோது மனைவி வாந்தி எடுத்ததாகவும், அதை கவரில் வைத்து வீசியதாகவும் சமாளித்துள்ளார்.

அல்தாப் ஷேக். ஆனால் குழந்தை துணியில் சுற்றப்பட்டு வீசப்பட்டதை சாலையில் சென்ற ஒரு நபர் பார்த்துள்ளார். பிறந்த சிசு அதில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக அதை போலீஸுக்கு தெரிவித்துள்ளார்.

அதன்பேரில் பேருந்தை துரத்தி சென்று நிறுத்திய போலீஸ் அதுகுறித்து பேருந்தில் இருந்தவர்களிடம் விசாரித்தனர். அப்போது ரித்திகா பேருந்தில் ஏறியபோது கர்ப்பமாக இருந்ததும், தற்போது வெறும் வயிறாக இருப்பதையும் கண்டு டிரைவரும், நடத்துனரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர் ரித்திகாவையும், அல்தாப் ஷேக்கையும் அழைத்துச் சென்று போலீஸார் விசாரித்ததில் அவர்கள் இருவரும் திருமணமானவர்கள் எனக் கூறியுள்ளனர்.

ஆனால் அதற்கு அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. தொடர்ந்து விசாரித்ததில் இருவரும் உல்லாசமாக இருந்ததில் கரு உருவாகிவிட்டதாகவும், அதை ரகசியமாக வெளியேற்ற ஆம்னி பஸ்ஸில் சென்றதாகவும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

சாலையில் வீசப்பட்டதில் அந்த குழந்தை இறந்துவிட்டதாக கூறப்படும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடா அனுப்புவதாக ஏமாற்றப்பட்ட யாழ். இளைஞன் உயிர் மாய்ப்பு!!

கனடா அனுப்புவதாக முகவர் ஒருவர் ஏமாற்றிய நிலையில், இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு 8 மில்லியன் ரூபாய் வழங்கிய நிலையில் ஏமாற்றப்பட்ட நபரே உயிரை மாய்த்துள்ளார்.

புங்குடுதீவை சேர்ந்த 34 வயதான செல்வராசா பாஸ்கரன் என்பவரே உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடா அனுப்புவதாக வெளிநாட்டு முகவர் நிறுவனம் ஒன்று எட்டு மில்லியன் ரூபாவை அவரிடமிருந்து பெற்றுள்ளது.

எனினும் இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதும், கனடாவுக்கு அனுப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படாத நிலையில், தனது பணத்தை மீள கேட்டுள்ளார்.

இந்நிலையில் பணத்தை வழங்குவதில் நிறுவனம் இழுத்தடிப்பு செய்து வந்ததுடன், அது குழுவொன்றினால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த இளம் குடும்பஸ்தர் உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மகளை கடித்த குரங்கு : நீதி கேட்க சென்ற தந்தைக்கு நேர்ந்த கொடூரம்!!

செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்டு வந்த குரங்கு ஒன்று சிறுமியொருவரை கடித்ததால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளார்.

மாத்தளை – யடவத்தை, துத்திரிபிட்டிய, டல்லேவாவ பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட குரங்கு உயிரிழந்தவர்களின் மகள்களை கடித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றியதில் குரங்கை வளர்த்து வந்த நபர், சிறுமியின் தந்தையை கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கொலை தொடர்பில் சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யடவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

நச்சு வாசனைத் திரவியத்தை முகர்ந்த பாடசாலை மாணவர்கள் மூவர் வைத்தியசாலையில் அனுமதி!!

தலவாக்கலை பகுதியில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் தரம் 6இல் கல்வி கற்கும் 3 மாணவர்கள் நச்சுத்தன்மை வாய்ந்த அல்லது தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களைக் கொண்ட வாசனைத் திரவியத்தை முகர்ந்ததால் திடீர் சுகவீனமுற்று இன்று (16) லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

நச்சுத்தன்மை வாய்ந்த வாசனைத் திரவியத்தை முகர்ந்ததன் காரணமாக இந்த மாணவர்கள் தலைசுற்றல், தலைவலி, குமட்டல், வாந்திபேதி மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,

சிகிச்சை பெற்று வருவதாக லிந்துலை பிரதேச பிராந்திய வைத்திசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி அசேல மல்லவாராச்சி தெரிவித்தார்.

அத்தோடு, மாணவர்களின் உடல்நிலை மோசமானதாக இல்லை எனவும் வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.

குறித்த பாடசாலையில் தரம் 6இல் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் பாடசாலைக்கு வாசனைத் திரவியமொன்றைக் கொண்டுசென்றதாகவும் அதனை ஏனைய மாணவர்களுக்கும் பூசியதாலேயே, அவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவில் இரவில் நடந்த பரபரப்பு சம்பவம் : அதிரடி காட்டிய மக்கள்!!

முல்லைத்தீவு – முள்ளியவளை பொன்னகர் கிராமத்தில் மோட்டார் சைக்கிளில் வீதியால் சென்ற பெண்னை வழிமறித்து தங்க சங்கிலியை பறிமுதல் செய்த கொள்ளையர்கள் இருவர் ஊர்மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் (15.07.2025) இடம்பெற்றுள்ளது.

முள்ளியவளை பொன்னகர் கிராமத்தில் உள்ள வளர்மதி மைதானத்திற்கு அருகாமையில் நேற்று இரவு 7 மணியளவில் வீதியால் பயணித்துள்ளார்.

இதன்போது இனந்தெரியாத கொள்ளையர்கள் இருவர் பெண்னை வழிமறித்து கழுத்தில் கத்தியினை வைத்து மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த நான்கரை பவுண் தங்க சங்கலியை பறித்து கொண்டு தப்பி சென்றிருந்தனர்.

சம்பவம் தொடர்பில் உடனடியாக குறித்த கிராம மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டதனையடுத்து ஊர்மக்கள் இணைந்து கொள்ளையர்கள் இருவரையும் மடக்கிப்பிடித்து முள்ளியவளை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சம்பவத்தில் 32, 22 வயதுடைய தர்மபுரம் விசுவமடு பகுதியினை சேர்ந்தவர் சந்தேக நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

சாதாரண பரீட்சையில் சித்தியடையாததால் மாணவி எடுத்த விபரீத முடிவு!!

இரத்தினபுரியில் ஆற்றில் குதித்து உயிரை மாய்க்க முயன்ற பாடசாலை மாணவியை தீவிர முயற்சிகளின் பின்னர் உள்ளூர் மக்கள் காப்பாற்றியுள்ளனர்.

கலவான, வெட்டகல பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளார். இந்த மாணவி க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முகம் கொடுத்தவர் என தெரியவந்துள்ளது.

பரீட்சையில் தோல்வியடைந்ததால் ஏற்பட்ட கடுமையான மன அழுத்தம் காரணமாக அவர் இவ்வாறு உயிரை மாயக்க முயன்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இளைஞர்கள் குழு ஒன்று தங்கள் மகளை முச்சக்கர வண்டியில் கடத்தி சென்று ஆற்றில் தள்ளிவிட்டதாக பெற்றோரின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பாதுகாப்பு கமரா காட்சிகளை பயன்படுத்தி பொலிஸார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் உள்ளூர் மக்கள் சிறுமியை மீட்டு கலவான பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

விசாரணையின் போது, பரீட்சையில் தோல்வியடைந்தமையால் இந்த முடிவை எடுத்ததாக சிறுமி குறிப்பிட்டுள்ளார். சிறுமி மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ் பாடசாலை ஒன்றில் வரலாற்றில் முதல் தடவை 9ஏ சித்தி பெற்ற மாணவி கௌரவிப்பு!!

வெளியான கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் யா/மூளாய் சைவப்பிரகாச வித்தியாலய மாணவி செல்வி ஜெகதீஸ்வரன் நிரோஜா, பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக 9ஏ சித்திகளை பெற்றுள்ளார்.

இந்நிலையில் மாணவியின் வரலாற்றுச் சாதனையை பாராட்டும் முகமாக அவருக்கு நேற்றையதினம் (15) கௌரவிப்பு இடம்பெற்றது.

இதன்போது மாணவி, பாடசாலை அதிபர் பா.பாலசுப்பிரமணியம் தலைமையில் நேற்று (15) மூளாய் சித்திவிநாயகர் தேவஸ்தானத்திலிருந்து பான்ட் வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்டு பாடசாலை சிவமலர் மண்டபத்தில் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிகழ்வில் கல்வித் திணைக்களத்தின் சங்கீத ஆசிரிய ஆலோசகர், கிராம உத்தியோகத்தர் ந.சிவரூபன், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர் சங்கத்தினர், மலரும் மூளாய் அபிவிருத்தி அமையத்தினர்,

பாடசாலை முன்னாள் அதிபர், பொது அமைப்பின் பிரதிநிதிகள், நலன்விரும்பிகள் பெற்றோர் என பலரும் கலந்து கொண்டனர். அதேவேளை பாடசாலைக்கு வரலாற்று பெருமையை தேடிக்கொடுத்த மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

யாழில் கனடா செல்ல தயாரான இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயர் : மனைவியிடம் இறுதியாக கூறிய அதிர்ச்சி விடயம்!!

வெளிநாடு செல்வதற்கு முகவரிடம் பணத்தை வழங்கிய நபர் ஒருவர் ஏமாற்றப்பட்டதால் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

புங்குடுதீவு, 4ஆம் வட்டாரத்தை சேர்ந்த 34 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் கனடா செல்வதற்காக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் 80 இலட்சம் ரூபா பணத்தினை கொழும்பில் உள்ள முகவரிடம் கொடுத்துள்ளார்.

குறித்த முகவர் கனடாவிற்கு அனுப்பி வைக்கப்படாத நிலையில் தனது பணத்தினை மீள வழங்குமாறு தொடர்ச்சியாக முகவரிடம் கேட்டு வந்துள்ளார். இந்நிலையில் அந்த பணம் ஒன்லைனில் களவாடப்பட்டதாக முகவர் கூறியுள்ளார்.

இதனால் விரக்தியில் நேற்று முன்தினம் (14.07.2025) அரளிவிதையை அரைத்து குடித்துவிட்டு தூக்கத்திற்கு சென்றுள்ளார். வைத்தியசாலையில் அனுமதி பின்னர் காலை வாந்தி எடுத்துள்ளதுடன் மனைவியிடம் நடந்தவற்றை கூறியுள்ளார்.

பின்னர் அவர் புங்குடுதீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!!

வரலாற்றின் தடம் பதித்து முதல் பெண் தவிசாளராக வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளராக கிருஸ்ணவேணி திருநாவுக்கரசு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

அந்த வகையில் தவிசாளர் வடக்கு பிரதேச சபை மக்களுக்கு ஒர் அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளார். மக்களின் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்யும் முகமாக தொலைபேசி இலக்கத்தினை மக்களுக்கு வழங்கியுள்ளார்.

074 – 2433682 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி உடனடியாக தமது குறைகளை நிவர்த்தி செய்யுமாறு தவிசாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியா கூமாங்குளத்தில் இடம்பெற்ற வன்முறை தொடர்பில் இருவர் கைது!!

வவுனியா கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் இருவர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு வவுனியா, கூமாங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் வீதியில் விழுந்து மரணமடைந்திருந்தார்.

குறித்த மரணத்திற்கு அந்தபகுதியில் பயணித்த போக்குவரத்து பொலிஸாரே காரணம் எனத் தெரிவித்த ஒரு குழுவினர் குழப்பத்தில் ஈடுபட்டதுடன், பொலிஸார் மீதும் தாக்குதல் மேற்கொண்டனர்.

இந்நிலையில், மரணித்தவர் மாரடைப்பு காரணமாக மரணித்ததாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் வாக்குமூலம் பெறுவதற்காக இருவரை அழைத்திருந்தனர்.

அவர்களிடம் வாக்குமூலம் பெற்ற பொலிசார் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர்களை கைது செய்து வவுனியா நீதிமன்றில் முற்படுத்தினர்.

அவர்கள் இருவரையும் எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் சில நபர்களை கைதுசெய்யுமாறு பொலிசாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நேற்றயதினம் விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களுள் ஒருவர் தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபை உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பிரதேச பண்பாட்டு விழாவும் பண்பாட்டு ஊர்திப் பவனியும்!!

வவுனியா பிரதேச செயலகம் மற்றும் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில் வவுனியா பிரதேச கலாசார பேரவையும் பிரதேச கலாசார அதிகார சபையும் இணைந்து நடாத்தும் பண்பாட்டு ஊர்திப்பவனியும் பிரதேச பண்பாட்டு விழாவும் -2025 மிகச்சிறப்பாக இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (18.07.2025) பண்பாட்டுபவனி பிரதேச செயலகம் முன்பாக காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன் அரங்க நிகழ்வுகள் பிற்பகல் 3.00 மணிக்கு வவுனியா மாநகரசபை கலாச்சார மண்டபத்தில் நடைபெறும்.

பிரதேச செயலாளர் இ.பிரதாபன் தலைமையில் இடம்பெறவுள்ள இவ் விழாவில் கலைஞர்களுக்கான கலாநேத்ரா விருது வழங்களும் இடம்பெறுகின்றன.

அந்த வகையில் பாஸ்கரன் கதீஷன் (ஊடகத்துறை) , நாகராஜா செந்தூர்ச்செல்வன் (பரதம்), அல்போன்ஸ் மெலிஸ்ரன் (நாடகம்), சந்திரசேகர் அனோஜன் (ஓவியம்), செல்வரத்திணம் சண்முகரத்தினம் (இயல்), சுந்தரம் சிவயோகராஜா (கட்டுரை),

சிவராசா நாகராசா (அறிவிப்பு), வல்லிபுரம் கந்தப்பு (மெல்லிசை), சேனாதிராசா சந்திரகாந்தன் (வாத்திய இசை), மாசிலாமணி தர்மகுலசிங்கம் (வாத்திய இசை) ஆகிய துறைகளை சேர்ந்த கலைஞர்கள் விருதினை பெறுகின்றனர்.

வவுனியாவின் குரல் தெரிவில் தெரிவு செய்யப்பட்ட 18வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 18வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கான வவுனியாவின் குரல் விருதும் வழங்கி வைக்கப்படவுள்ளன.

இப் பண்பாட்டு பவனி ஊர்தியானது பிரதேச செயலக வரலாற்றில் முதன் முறையான அனைத்து கிராம அலுவலர்கள் பிரிவுகளையும் உள்ளடக்கி அவர்களின் கிராமத்தினை பிரதிபடுத்தும் வகையில் ஊர்தி அலங்கரிப்படவுள்ளமை சிறப்பம்சமாகும்.