வாகன இறக்குமதியால் ஏற்பட்டுள்ள சிக்கல் : ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்களுக்கு பாதிப்பு!!

இறக்குமதி செய்யப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இன்னும் துறைமுகங்களில் சிக்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.

அவற்றை விடுவிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், அதற்கு உரிய பதிலும் கிடைக்கவில்லை என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் நடத்துமாறு கோரிய போதிலும், இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த வாகனங்களை விடுவிக்காமல் கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களில் வைத்திருப்பதால், தாமத கட்டணங்களை இறக்குமதியாளர்கள் செலுத்த வேண்டியிருக்கும்.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் வேறொரு நாட்டிற்குச் சொந்தமானது என்பதால், செலுத்தப்படும் தாமதக் கட்டணங்கள் அந்த நாடுகளுக்கு டொலர்களில் மாற்றப்படுகின்றன .

கொழும்பு துறைமுகத்தில் உள்ள பெரும்பாலான வாகன நிறுத்துமிடங்களும் தனியார் துறையை சேர்ந்தவை என்பதால், அந்த தாமதக் கட்டணங்களும் அவர்களுக்கு செல்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை மற்றும் கொழும்பு துறைமுகங்களில் சுமார் இரண்டு மாதங்களாக சுமார் 1000 வாகனங்களை விடுவிக்க முடியவில்லை. அதற்கு முன்பு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர்களை செலவிட்ட பின்னர் 1.7 பில்லியன் டொலர் வருமானத்தை அரசாங்கம் எதிர்பார்ப்பதாக சங்கத்தின் செயலாளர் பிரசாத் குலதுங்க தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கையில் ரிக்ரொக் காதலனால் சிறுமிக்கு நேர்ந்த கதி : அதிர்ச்சியில் பெற்றோர்!!

களுத்துறையில் டிக்டொக் மூலம் அறிமுகமான காதலன் ஒருவர் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தப்பியோடிய காதலனை கைது செய்ய பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். வடக்கு களுத்துறை பொலிஸ் பிரிவில் வசிக்கும் மாணவி, ஜனவரி மாதம் ரிக்ரொக் மூலம் ஒருவருடன் அறிமுகமானார்.

இந்நிலையில் பெப்ரவரி மாதம் சிறுமி ரிக்ரொக் காதலனை தனது வீட்டிற்கு அழைத்து வந்து, தமது காதலை வெளிப்படுத்தியுள்ளார். சிறுமியின் பெற்றோரும் அவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் சிறுமியின் வீட்டில் காதலன் இரவை கழித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 10 ஆம் திகதி குறித்த சிறுமி உடல்நலக்குறைவு காரணமாக தனது தந்தையுடன் ஹொரணை மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

இதன் போது சிறுமி கர்ப்பம் தரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ரிக்ரொக் காதலனின் முழுப் பெயரோ முகவரியோ தனக்கு தெரியாது என சிறுமி குறிப்பிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வடக்கு களுத்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துஷார டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் காத்திருந்தவருக்கு அதிர்ச்சி!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்தின் குற்றப் புலனாய்வு பிரிவினால் நேற்று மாலை 150 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்களுடன் இந்திய நாட்டவர் கைது செய்யப்பட்டார்.

49 வயதான இந்தியர் இந்தியாவிலிருந்து இலங்கை வழியாக டுபாயிற்கு பயணம் செய்து கொண்டிருந்தார்.

அவர் இந்தியாவில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து டுபாய்க்கு விமானத்தில் ஏற விமான நிலையத்தில் காத்திருந்தபோது கைது செய்யப்பட்டார்.

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்திற்குள் பணம் மற்றும் தங்க நகைகளுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாகவும் இது தொடர்பாக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இந்திய பிரஜையிடம் 45 மில்லியன் ரூபாவுக்கும் மேல் மதிப்புள்ள 1,500 கிராம் தங்கம், 30 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள 103,700 அமெரிக்க டொலர்கள், 50 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 688,000 சவுதி ரியால்,

15 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள 335,000 திர்ஹாம்கள் மற்றும் 7 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள 21,500 யூரோக்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

 

இந்தியாவில் விவாகரத்து பெற்றதை கொண்டாடும் வகையில் பால் குளியல்!!

இந்தியாவை சேர்ந்த நபரொருவர், தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றதைக் கொண்டாடும் விதமாக 40 லீற்றர் பாலில் குளிக்கும் வகையில், வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.

இந்தியாவின் அசாம் மாநிலத்தின் நல்பாரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணிக் அலி என்பவரே தனது விவாகரத்தை இவ்வாறு கொண்டாடியுள்ளார்.

மாணிக் அலி பாலில் குளித்தவாறு “நான் விடுதலையாகிவிட்டேன்” எனக் கூறி வெளியிட்டுள்ள இந்த காணொளி 3 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.

அவரின் இந்த செயலை சிலர் பாராட்டி வருவதுடன், ஏனையோர் பாலை வீணடித்ததாக அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

 

ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட பேருந்துகள் : நால்வர் படுகாயம்!!

மஹரகம, நாவின்ன பகுதியில் இன்று (14) மணியளவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.

நாவின்ன பேருந்து நிறுத்தத்திலிருந்து பிரதான வீதிக்குள் நுழைந்த பேருந்து, மஹரகமவிலிருந்து கொழும்பு நோக்கி பிரதான வீதியில் பயணித்த மற்றொரு பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் தற்போது களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது விபத்துக்குள்ளான பேருந்து பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதோடு, மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவில் இளம் குடும்பஸ்தரின் மரணத்தால் சோகத்தில் தவிக்கும் குடும்பம்!!

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரந்தன் – முல்லைத்தீவு வீதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பரந்தனில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கிய பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்திசையில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இருவர் மற்றும் பின் இருக்கையில் பணித்த நபர் ஒருவர் சிகிச்சைக்காக மூங்கிலாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு,

பின்னர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.​ சம்பவத்தில் 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் தற்போது மாஞ்சோலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கடலில் மூழ்கிய இரு வெளிநாட்டுப் பிரஜைகள் மீட்பு!!

மிரிஸ்ஸ கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இரண்டு வெளிநாட்டுப் பிரஜைகள் கொடவில பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) காலை இடம்பெற்றுள்ளது. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவனும் 17 வயதுடைய யுவதியுமே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் மிரிஸ்ஸ கடலில் நீராடிக்கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கியுள்ளனர். இதன்போது அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த கொடவில பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர், கடலில் மூழ்கிய இரு வெளிநாட்டுப் பிரஜைகளையும் காப்பாற்றி அவர்களுக்கு முதலுதவி அளித்துள்ளனர்.

பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலமானார்!!

தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் கோலோச்சிய கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என அழைக்கப்படும் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி தனது 87 வயதில் காலமானார்.

உடல்நலக்குறைவால் பெங்களூருவில் உள்ள அவரது ல்லத்தில் இன்று திங்கட்கிழமை (14.05.2025) காலமானார். நடிகை சரோஜா தேவி, கடந்த 1938 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7ஆம் திகதி பிறந்தார்.

17 வயதிலேயே திரைப்படத் துறையில் அறிமுகமான இவர், தனது அற்புதமான நடிப்பால் இரசிகர்களின் விருப்பத்துக்குரிய நடிகையாக மாறினார்.

1955 ஆம் ஆண்டு மகாகவி காளிதாசா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்த சரோஜா தேவிக்கு அபிநய சரஸ்வதி என்ற பட்டமும் உண்டு.

இவருக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு இந்திய அரசிடமிருந்து வாழ்நாள் சாதனையாளர் விருதும், 1969 இல் பத்மஸ்ரீ விருதும், 1992 இல் பத்ம பூஷண் விருதும் வழங்கப்பட்டது.

இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார். இறுதியாக 2009ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ‘ஆதவன்’ படத்தில் நடித்திருந்தார்.

சரோஜா தேவியின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளதுடன் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இன்று சனி வக்ர பெயர்ச்சி : இந்த 4 ராசிக்காரர்களுக்கு அடித்தது யோகம்!!

ஜூலை 13, 2025 அன்று சனி பகவான் வக்ர நிலையில் சஞ்சரிக்கிறார். அதாவது, சனி பகவானின் பின்னோக்கி செல்லும் காலம், ஜூலை 13 அன்று காலை 7.24 மணியளவில் தொடங்கி பின் நவம்பர் 28, 2025 அன்று காலை 7.26 மணியளவில் இயல்பு நிலையில் பயணிக்கிறார்.

சுமார் 138 நாட்களுக்கு நிகழும் இந்த சனி வக்ர பெயர்ச்சி, குறிப்பிட்ட சில ராசிகாரர்கள் நேர்மறை பலன்களை பெறுகின்றனர்.

பலன்களை பெறும் ராசிகாரர்கள்

ரிஷபம் : சனி வக்ர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்கள் கலவையான பலன்கள் கிடைக்கும். நன்மைகளைப் பெற நேரம் ஆகலாம், ஆனால் அனைத்து வேலைகளும் நிறைவடையும். உங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்தவும்.

புதிய வேலையைத் தேடுகிறீர்கள் என்றால், இந்த 138 நாட்கள் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். உங்கள் கடின உழைப்பின் முழு பலனையும் பெறுவீர்கள்.

துலாம் : சனி வக்ர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்கள் நல்ல பலன்களைத் தரும். வெற்றியை அடைய நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். திடீரென்று எங்கிருந்தோ பணம் அல்லது சொத்து உங்களுக்குக் கிடைக்கலாம்.

தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். பணியிடத்தில் பாராட்டுதல்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

தனுசு : சனி வக்ர பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்கள் மகிழ்ச்சியையும் வசதிகளையும் குறைக்கும். வாழ்க்கையில் சில ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம். வேலையில் இடம் மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வீடு மாறுவதற்கான சூழ்நிலை இருக்கலாம்.

இந்த காலகட்டத்தில் கவனமாக வாகனம் ஓட்டுங்கள். புதிய வீடு கட்டவோ அல்லது புதிய நிறுவனம் அமைக்கவோ வாய்ப்பு ஏற்படும்.

மகரம் : சனி வக்ர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்கள் உடல்நலம் நன்றாக இருக்கும். பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். பணம் சம்பாதிப்பதில் சிரமம் இருக்கலாம். வேலை செய்பவராக இருந்தால் உங்கள் நடத்தையை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். தொழிலதிபராக இருந்தால், பெரிய லாபம் கிடைக்கும். 138 நாட்களுக்கு குடும்ப சூழலும் மிகவும் நன்றாக இருக்கும்.

யாழில் தெய்வாதீனமாக உயிர் தப்பிய சுற்றுலாப் பயணிகள்!!

யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்றிருந்த பயணிகள் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இதன்போது 12 பயணிகள் 02 பணியாளர்கள் உட்பட 14 பேர் உயிராபத்து இன்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு சொந்தமான சிறியரக சுற்றுலா படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக படகு மூழ்கியுள்ளதுடன் இதன்போது பணியாளர்கள் உள்ளுர்சுற்றுலா பயணிகள் உட்பட 14 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பிராந்தியத்தில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தென்பகுதியைச் சேர்ந்த 12 சுற்றுலா பயணிகள் நெடுந்தீவுக்கு சென்று குறிகாட்டுவான் திரும்பும் போதே இந்த அனர்த்தத்தினை எதிர்கொண்டுள்ளனர்.

குறித்த சுற்றுலா படகில் இருந்து வெள்ளைக்கொடி சமிக்ஞையை அவதானித்த நெடுந்தீவு தனியார் படகு பணியாளர்கள் விரைந்து செயற்பட்ட நிலையில் படகில் இருந்த 12 பயணிகள் 02 பணியாளர்கள் உட்பட 14 பேர் உயிராபத்து இன்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

சேதமடைந்த படகில் இருந்து சகல சுற்றுலாப் பயணிகளையும் பாதுகாப்பாக தங்களின் படகிற்கு மாற்றியுள்ளனர்.

இதேவேளை குறித்த படகில் இருந்து உள்ளுர் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட சிறிது நேரத்திலேயே படகு முழுமையாக கடல் நீரில் முழ்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நீர்த்தேக்கத்தில் விழுந்து பலியான மாணவன் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை : துயரத்தில் கதறும் பெற்றோர்!!

சிங்கமலை நீர்த்தேக்கத்தில் விழுந்து உயிரிழந்த மாணவன் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும் குடும்பத்தினருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியில் கல்வி கற்ற 17 வயது ராம் மூர்த்தி தமிழ் மாறன் என்ற மாணவனே உயிரிழந்தவராவார்.

இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சையை முடித்துவிட்டு, பெறுபேறுகளுக்காகக் காத்திருந்த மாணவன், ஹட்டனில் உள்ள சிங்கமலை நீர்த்தேக்கத்திற்கு புகைப்படம் எடுக்கச் சென்று நீர்தேக்கதில் விழுந்ததுடன் சிங்கமலை நீர்த்தேக்கத்தில் விழுந்து காணாமல் போன மாணவனைத் தேடும் பணி முன்னெடுக்கப்பட்ட நிலையில் குறித்த மாணவன் ரங்கல கடற்படையின் சுழியோடிகளால் கடந்த 9ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார்.

க.பொ.த சாதாரண தரப்பரீட்சைப் பெறுபேறுகள் நேற்றுமுன்தினம் வெளியாகியிருந்த நிலையில் பரீட்சைப் பெறுபேறுகளுக்காகக் காத்திருந்து உயிரிழந்த மாணவனின் பெறுபேறுகள் வெளியாகியது.

குறித்த மாணவன் ஆங்கில மொழியில் கற்று 7A, 1B, 1C பெறுபேறுகளைப் பெற்றுள்ளார். அவரது பெறுபேறுகளே பாடசாலையில் சிறந்த பெறுபேறுகளாக வெளிவந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவனின் பரீட்சைப் பெறுபேறுகளைப் பார்வையிட்ட குடும்பத்தினர் மற்றும் பாடசாலைச் சமூகத்தினர் உள்ளிட்டோர் மனமுடைந்து கவலைகளை வெளியிட்டுள்ளனர்.

யாழில் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம் : 9A எடுத்த மகள், அடுத்தநாளே விபத்தில் பலியான தந்தை!!

பிள்ளைகளுக்கு உணவு வாங்கி சென்றவர் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலை காப்பாளரான , நயினாதீவை சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார்.

திருநெல்வேலி, பலாலி வீதியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகத்தில் உணவருந்திய பின்னர் பிள்ளைகளுக்கும் உணவு வாங்கிக்கொண்டு பலாலி வீதியில் துவிச்சக்கர வண்டியில் ஏற முற்பட்டவேளை, வீதியில் மிக வேகமாக வந்த ஹயஸ் ரக வாகனம் மோதியுள்ளது.

அதில் படுகாயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவரது இரு பிள்ளைகள் பேராதனை மற்றும் ஶ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவரும் நிலையில், இளைய மகள் வெளியான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9A பெறுபேறுகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா நெடுங்கேணி ஒலுமடு தமிழ் மகாவித்தியாலயத்தில் 77சதவீத மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!!

2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் நேற்று நள்ளிரவு பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிட்டிருந்த நிலையில் வவுனியா நெடுங்கேணி ஒலுமடு தமிழ்மகா வித்தியாலயத்தில் 77சதவீதமான மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.

பாடசாலை வரலாற்றில் முதற் தடவையாக ஒரு மாணவர் 9ஏ சித்தி் பெற்றுள்ளமையுடன் 35 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி அதில் 77 சதவீதமான மாணவர்கள் உயர்தரம் கற்கும் வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.

மிகுந்த அர்ப்பணிப்புடன் செயலாற்றி வழிப்படுத்திய ஆசிரியர்கள், அதிபர், ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்கள், வழிகாட்டல்களை வழங்கிய கல்வியதிகாரிகள் அனைவருக்கும் நன்றிகலந்த வாழ்த்துகளை பாடசாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

தமிழர் பகுதியில் சவால்களை வென்று சாதனை படைத்த மாணவன்!!

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் அண்மையில் வெளியாகி இருந்தன. இதில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மாணவர்களின் பெறுபேறுகள் வெளியாகிய வண்ணம் இருந்தது.

இந்நிலையில், தன்னுடைய குறைபாடுகளை கருத்தில் கொள்ளாது Laxman Leonshan என்ற மட்டக்களப்பு கருவேப்பங்கேணி விபுலானந்தக் கல்லூரியில் கல்வி கற்ற மாணவனே 9ஏ தித்தியைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

பிறந்து 26 நாட்களில் எலும்புகளில் பாதிப்பு காணப்பட்டதால் குறித்த மாணவனால் தனியாக நடந்து எங்கும் நடந்து செல்ல முடியாது. இதனால் தன்னை தமது பெற்றோரே எங்கும் அழைத்துச் செல்வதாக மாணவன் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து வெளியிட்ட மாணவன் நம்மிடம் குறைபாடுகள் எவ்வளவுதான் இருந்தாலும் அந்த குறைபாடுகளை எல்லாம் தாண்டி வாழ்க்கையில் சாதிக்க வேண்டும்.

மேலும் .நம்மிடம் உள்ள திறமைகளை முடிந்த வரையில் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, இந்த மாணவனுடைய குறித்த சாதனையானது முடங்கிக் கிடக்கும் பல திறமையாளர்களுக்கான ஒரு உந்துகோலாக காணப்படும் என்பதில் ஐயமில்லை.

காதல் திருமணம் செய்தவர்களை மாடு போல் ஏறில் பூட்டி நிலத்தை உழச் செய்த கிராமத்தினர்!!

காதலித்து திருமணம் செய்துள்ள ஜோடிகளுக்கு கிராமத்தினர் சேர்ந்து நூதனமான தண்டனையை வழங்கியுள்ளனர்.

இந்திய மாநிலமான ஒடிசா, ராயகடா மாவட்டம் கஞ்சமஜ்ஹிரா கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது சொந்த அத்தை மகனை காதலித்து திருமணம் செய்துள்ளார். ஆனால், அம்மாநில வழக்கப்படி அத்தை மகன் மற்றும் மகளை திருமணம் செய்வது சமூக வழக்கத்துக்கு எதிரானது.

இதனால் கிராமத்தினர் சேர்த்து அவர்களுக்கு தண்டனை வழங்க முடிவு செய்தனர். இதற்காக காதல் ஜோடிகளை வயலுக்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களை மாடு போல் ஏரில் பூட்டி நிலத்தை உழச் செய்ய வைத்துள்ளனர்.

அப்போது நபர் ஒருவர் அவர்களை பிரம்பால் அடித்து நிலத்தை உழ வைக்கிறார். இதையடுத்து, அவர்களை கோயிலுக்கு அழைத்துச் சென்று சடங்குகள் செய்ய வைக்கின்றனர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது, இது குறித்து மாவட்ட எஸ்.பி. ஸ்வாதி குமார் விசாரணை நடத்தி வருகிறார். மேலும், தண்டனை வழங்கிய கிராம மக்கள் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்ய இருக்கின்றனர்.

பூனை கீறியதால் 11 வயதுச் சிறுமி உயிரிழந்த சோகம்!!

இந்திய மாநிலம் கேரளாவில் 11 வயது சிறுமி பூனை கீறியதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேரளாவின் பந்தளத்தைச் சேர்ந்த அஷ்ரப் என்பவரின் 11 வயது மகள் ஹன்னா. இவர் அதேபகுதியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் சிறுமி ஹன்னாவின் கழுத்தில் பாடசாலை ஆசிரியர்களை வீக்கத்தைக் கவனித்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக அவர்கள் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் அளித்தனர். அப்போதுதான் சமீபத்தில் சிறுமியை பூனை ஒன்று நகத்தால் கீறியது தெரிய வந்தது.

பூனை கீறியதால் காயமடைந்த சிறுமிக்கு அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்டது. அதன் பின்னரும் வீக்கம் ஏற்பட்டதால் இரண்டாவது முறையாக அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு அவருக்கு மீண்டும் தடுப்பூசி போட்ட பின்னர் ஹன்னாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் பத்தனம்திட்டா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சிறுமி ஹன்னா கோட்டயம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக