வவுனியா நகரில் பள்ளிவாலுக்கு அருகே கட்டப்படும் அனுமதியற்ற கட்டிடட நிர்மாணத்திற்கு எதிராகவும் அப்பகுதியில் அமைந்துள்ள மேலும் சில வர்த்தக நிலையங்களுக்கு எதிராக மாநகரசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஹொரவப்பொத்தானை வீதியில் நகர பள்ளிவாசல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்கள் மாநகரசபையின் அனுமதியின்றி நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில்,
இன்று (07.07) குறித்த இடத்திற்கு விஐயம் மேற்கொண்ட மாநகர துணை முதல்வர், ஆணையாளர், செயலாளர் ஆகியோர் கட்டுமானத்தினை பார்வையிட்டதுடன் அனுமதியின்றி தொடர்ச்சியாக இக் கட்டுமானத்தினை தொடர வேண்டாம் என கட்டளை விதித்தமையுடன் எச்சரிக்கை அறிவித்தலையும் ஒட்டினர்.
மேலும் மரக்கறி சந்தைக்கு முன்பாக மாநகரசபைக்கு சொந்தமான நிலத்தில் அனுமதியற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள இரு வர்த்தக நிலையங்களுக்கு குறித்த வர்த்தக நிலையத்தினை அகற்றுமாறு தெரிவித்து எச்சரிக்கை சுவரொட்டியும் ஒட்டப்பட்டுள்ளன.
அத்துடன் நகரை அழகுபடுத்தும் முகமாக இலுப்பையடிசந்தியில் வீதியோர வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் எதிர்வரும் திங்கட்கிழமை (14.07) திகதிக்கு முன்பாக அவ்விடத்திலிருந்து அகன்று பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவுள்ள மாநகரசபைக்கு சொந்தமான இடத்தில் தற்காலிக கூடாரங்களை அமைத்து இருக்குமாறும் மீறினால் மாநகரசபையினால் இலுப்பையடி வீதியோர வியாபார நிலையம் அகற்றப்படும் எனவும் மாநகரசபையினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவடக்கு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட வெடிவைத்தகல் கிராமஅலுவலர் பிரிவில் திரிவைத்தகுளத்தின் கீழான தமிழ் மக்களின் வயல்நிலங்கள் பெரும்பான்மையினத்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுடன், மகாவலி (எல்) திட்டத்தினூடாக சுமார் 1000 ஏக்கர் வரையான பாரிய வனப்பகுதிகளும் பெரும்பான்மை இனத்தவர்களால் அழிக்கப்பட்டு ஆக்கிரமிப்பு முயற்சிகள் இடம்பெற்றுவருகின்றன.
இந்நிலையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன், இதுதொடர்பில் அப்பகுதிக்குரிய வனவளத் திணைக்கள உத்தியோகத்தருடனும், வவுனியா வடக்கு பிரதேச செயலருடனும் கலந்துரையாடியுள்ளார்.
அதேவேளை இந்த ஆக்கிரமிப்பு முயற்சியைத் தடுப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா வடக்கு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட, வெடிவைத்தகல் கிராமஅலுவலர் பிரிவில், திரிவைத்தகுளம்பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பெரும்பான்மை இனத்தவர்களால் தமிழ் மக்களின் பூர்வீக விவசாயக்காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதுடன்,
மகாவலி (எல்) வலயத்திட்டத்தினூடாக பாரிய வனப்பகுதிகளும் பெரும்பான்மை இனத்தவர்களால் பெருமளவில் அழிக்கப்பட்டு ஆக்கிரமிப்புச்செயற்பாடுகள் மிகத் தீவிரமாக இடம்பெற்றுவருகின்றன.
இந்நிலையில் அப்பகுதி மக்களின் அழைப்பையேற்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குறித்த பகுதியை நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.
இந் நிலையில் தமிழ் மக்கள் பூர்வீகமாக பயிற்செய்கை மேற்கொண்டுவந்த திரிவைத்த குளம் பகுதியை முற்றாக அபகரித்துள்ள பெரும்பான்மையினத்தவர்கள் அங்கு நெற்பயிற்செய்கை மேற்கொண்டுவருவதை நாடாளுமன்ற உறுப்பினர் பார்வையிட்டார்.
அத்தோடு மகாவலி (எல்) வலயத் திட்டத்தினூடாக திரிவைத்தகுளம் பகுதியை அண்டியுள்ள பாரிய வனப்பகுதிகளில், சுமார் 1000 ஏக்கர் வரையில் பெரும்பான்மையினத்தவர்களால் சட்டவிரோத காடழிப்பு மேற்கொள்ளப்பட்டு அபகரிப்புச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இது தொடர்பாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நேரடியாகப் பார்வையிட்டார்.
இதனைத்தொடர்ந்து இது தொடர்பில் வனவளத் திணைக்கள உத்தியோகத்தர் மற்றும், வவுனியா வடக்கு பிரதேசசெயலாளர் ஆகியோரையும் நாடிளுமன்ற உறுப்பினர் நேரடியாகச் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
மேலும் இதுதொடர்பில் உரிய அமைச்சுக்களுடனும் பேசுவதுடன், பாராளுமன்றிலும் இந்த விடயம் தொடர்பில் வெளிப்படுத்தவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்தார்.
குறித்த களவிஜயத்தில் வன்றிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுடன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் இராசரத்தினம் கிரிதரன், சமூகசெயற்பாட்டாளர் பூபாலசிங்கம், வெடிவைத்தகல்லு கிராம மக்கள் என பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புத்தளம், கட்டுனேரிய பகுதியில் கோடீஸ்வர தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் பாடசாலை மாணவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிரிகம்பள பகுதியில் உள்ள கார் கழுவும் இடத்திற்கு தண்ணீர் வரும் குழாயில் தொழிலதிபரின் உடலை மறைத்து வைத்ததற்காக சகோதரர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
19 வயது மெக்கானிக் மற்றும் அவரது 15 வயது தம்பி ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 15 வயது சகோதரன் மாரவில பிரதேசத்தில் உள்ள உள்ள பிரபலமான பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார்.
கோடீஸ்வர தொழிலதிபரின் கொலையில் முக்கிய சந்தேக நபராகக் கருதப்படும் 20 வயது இளைஞரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பாடசாலை மாணவனும் அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரத்தினபுரியில் பெண் ஒருவர் தங்க சங்கிலிக்காக கொலை செய்யப்பட்டதாக வெளியான சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுவன் அதிர்ச்சிகரமான தகவல்களை பொலிஸாரிடம் வழங்கியுள்ளார்.
குருவிட்ட, தேவிபஹல பகுதியில் 26 வயதுடைய பெண் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 17 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் சிறிது காலமாக அந்தப் பெண்ணை காதலித்து வந்ததாகவும், அவர் தொடர்ந்து நிராகரித்ததால் தான் அவரை கொலை செய்துள்ளதாக சிறுவன் ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெண் கொலை
குருவிட்ட, தேவிபஹல பகுதியைச் சேர்ந்த 26 வயது ஷானிகா மதுஷானி, வேலை முடிந்து திரும்பும் போது கடந்த 2 ஆம் திகதி கொலை செய்யப்பட்டார்.
பாலியல் வன்புணர்வுக்கு முயன்றபோது குறித்த பெண் சத்தம் போட்டமையால் இந்தக் கொலையைச் செய்ததாக சந்தேக நபர் கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் பயணித்த வீதியில் உள்ள காட்டுப் பகுதியில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது, மேலும் அவர் கழுத்து வெட்டி கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுவர் காப்பகம்
அவரது தங்க சங்கிலி, கைப்பை மற்றும் கையடக்க தொலைபேசி ஆகியவையும் திருடப்பட்டன.
கைது செய்யப்பட்ட 17 வயது சந்தேக நபர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறுவர் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் வல்லிபுரம் ஆலயத்திறக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வல்லிபுர கோவிலடியை சேர்ந்த பொன்னையா தேவராசா என்கின்ற 64 வயதுடைய முதியவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
இவர் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதேவேளை விபத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் மகேந்திரா ரக வாகனம் தப்பிச் சென்ற நிலையில் குறித்த வாகனத்தை கைப்பற்றும் நடவடிக்கையில் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலமையிலான குழுவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில்,
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறப்பு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரின் 21 வயது மகள், லஞ்சம் மற்றும் ஊழல் சாத்துதல்களை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படிருந்தது.
அது தொடர்பில் , சிறப்பு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரின் மகளை ஆணைக்குழு அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.
வைத்தியர் மகேஷி விஜேரத்ன, தான் இணைந்த தனியார் நிறுவனம் மூலம் நோயாளிகளுக்கு ரூ.50,000 மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை ரூ.175,000க்கு விற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதனால் நோயாளிகளுக்கு ரூ.300 மில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாகக் குற்றம் சாட்டிய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு,
மருத்துவர் அதிகாரப்பூர்வ மருத்துவமனை நடைமுறைகள் மூலம் அறுவை சிகிச்சை பொருட்களை வாங்காமல் பொது சேவை கொள்முதல் விதிகளை மீறியதாகக் கூறியது.
அதற்கு பதிலாக அந்தப் பொருட்கள் அவரது தனியார் நிறுவனம் மூலம் சுமார் 300 நோயாளிகளுக்கு விற்கப்பட்டன.
பல நாட்களாக மூளைச் சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மகேஷி விஜேரத்ன அறுவை சிகிச்சை செய்துள்ளார் என்பதும் சமீபத்தில் தெரியவந்தது.
குறித்த வைத்தியரும் அவரின் மருத்துவ மோசடிக்கு உதவிய அவரது இரண்டு கூட்டாளிகளும் தற்போது தடுப்புக் காவலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாடளாவிய உள்ளூர் சந்தையில் தேங்காய் விலை வேகமாக சரிந்து வருவதாலும், தேங்காய் விற்பனை அதிகரிப்பதாலும் தங்கள் வருமானமும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில மாதங்களாக, ஒரு தேங்காய் ரூபா. 220க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது, ரூபா.100 முதல் ரூபா.170 வரை தேங்காய்கள் விற்கப்படுகின்றன.
சில வியாபாரிகள், அதிக இலாபத்துடன் தேங்காய்களை விற்பனை செய்வதாகவும், அப்போது தேங்காய் விற்பனை குறைந்ததால் தங்கள் வருமானமும் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
அதேவேளை எதிர்வரும் மாதங்களில் தேங்காய் விலை மேலும் குறைவடையும் என்றும், தற்போது சந்தையில் ஏனைய தேவையை விட தேங்காய் உற்பத்தி அதிகமாக இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
தனது மகளின் திருமணத்தில் நடனமாடிக் கொண்டிருந்த தந்தை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாதுவ மொல்லிகொட பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர், வாதுவ பகுதியில் நடைபெற்ற தனது மகளின் திருமண விழாவின் இறுதியில் நடனமாடிக் கொண்டிருந்துள்ளார்.
இதன்போது திடீரென மயங்கி விழுந்த அவரை, உறவினர்கள் பாணந்துறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தெற்காசிய உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ணப் போட்டியில் பங்குபற்றும் இலங்கை 20 வயதுப் பெண்கள் தேசிய அணியில் மகாஜனக் கல்லூரி வீராங்கனைகள் மூவர் இடம்பிடித்துள்ளனர்.
J.லயன்சிகா, T.சஸ்மி, S.கம்சியா ஆகிய வீராங்கனைகளே இடம்பெற்றுள்ளனர். இப்போட்டி பங்களாதேஸில் ஜூலை 11 தொடக்கம் 21 வரை நடைபெறவுள்ளது. இந்த வீராங்கனைகளை பலரும் வாழ்த்திப் பாராட்டுகின்றனர்
மேலும் இந்த வீராங்கனைகளை தேசிய அணியில் இடம்பிடிக்கும் வகையில் சிறப்பான பயிற்சிகளை வழங்கிய பாடசாலைப் பயிற்றுநர் திரு.சி.சாந்தகுமாருக்கு பாடசாலை சமூகத்தினர் நன்றிகளை தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு- வாகரை, பனிச்சங்கேணி வாவியில் நீராடச்சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று (06.07.2025) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு- வாகரை பகுதியில் மீன்பிடிக்கச் சென்று வந்த குடும்பம் ஒன்றின் மூன்று பிள்ளைகளே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். வாகரை,கறுவாச்சேனை பகுதியில் மீன்பிடிக்கச்சென்று திரும்பிய நிலையில் குளத்தில் மூழ்கியே உயிரிழந்துள்ளனர்.
குளத்தின் ஆழமான பகுதியில் மூழ்கிய நிலையிலேயே சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த மூவரும் 10 மற்றும் 11 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்ததோடு, மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சம்பவம் தொடர்பில் வாகரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.பி.எச். சில்வா தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இதேபோன்று மட்டக்களப்பு-கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் பகுதியில் பேருந்து மோதியதில் ஏழு வயதுடைய பி.கவிசேக் என்னும் சிறுவன் உயிரிழந்துள்ளார்.
செங்கலடியிலிருந்து உறுகாமத்திற்கு சென்று பேருந்திலிருந்து இறங்கி வீதியை கடக்க முனைந்தபோது எதிர்திசையில் வந்த பேருந்து மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மேலும், சடலம் பிரேத பரிசோதனைக்காக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள திக்கணங்கோடு கிழக்கு தாறாவிளையில் வசித்து வருபவர் ராபின்சன். இவருடைய மகள் ஜெமலா மேரி (26), பி.எஸ்சி. நர்சிங் முடித்துள்ளார்.
இவரும், இனயம் சின்னத்துறையை சேர்ந்த மரிய டேவிட் மகன் பிஇ முடித்துள்ள நிதின் ராஜும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இதனால் மேரியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
காதல் ஜோடி திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தனர். இதையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஜனவரி மாதம் 8-ந் தேதி திருமணம் நடைபெற்றது.
பெண் வீட்டார் சார்பில் மேல்மிடாலம் கூண்டுவாஞ்சேரியில் புதிய வீடு கொடுத்ததில் அதில் ஜெமலா மேரியும், நிதின் ராஜும் குடும்பம் நடத்தி வந்தனர்.
நிதின் ராஜ் பி.இ. படித்திருந்த நிலையில் சரியான வேலை கிடைக்கவில்லை. இதனால் கணவன்-மனைவி இடையே சிறு சிறு குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
ஜூலை 4ம் தேதி பிற்பகல் 12 மணிக்கு ஜெமலா மேரி பெற்றோரை தொடர்பு கொண்டு, உங்களுடைய மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும்,
அவருடைய உடல் கருங்கலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நிதின்ராஜின் உறவினர்கள் தகவல் தெரிவித்தனர்.
உடனே ஜெமலா மேரியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பதறி துடித்து மருத்துவமனை சென்றனர்.
தொடர்ந்து உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன. உறவினர்கள் கதறி அழுதபடி திடீரென உடலை வாங்க மாட்டோம் என்று கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடலை வாங்கிக்கொண்டு உறவினர்கள் சென்றனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஜெமலா மேரியின் வீட்டை போலீசார் சோதனையிட்ட போது, அவர் இறப்பதற்கு முன்பு எழுதி வைத்த கடிதம் கிடைத்தது.
அதில், நான் சுய நினைவுடன் எழுதுவது. என் சாவிற்கு என் கணவனோ அல்லது அவரின் குடும்பமோ காரணம் அல்ல.
நான் சுயமாக முடிவெடுத்தது. என்னை யாரும் தற்கொலைக்கு தூண்டவில்லை என எழுதப்பட்டிருந்தது. இது மட்டுமின்றி அவரது உள்ளாடையில் எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை எனவும் எழுதப்பட்டிருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் கேதனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் 40 வயதான அபிஷேக். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார்,
40 வயதாகியும் விவசாயம் செய்வதால் அபிஷேக்குக்கு திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் இருந்துள்ளது.
அப்போது தான் அபிஷேக் பக்கத்து ஊரை சேர்ந்த 36 வயதான பூர்ணிமாவை பற்றி அறிந்துள்ளார். 36 வயதான பூர்ணிமா அதே ஊரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.
36 வயதாகியும் பூர்ணிமாவுக்கும் திருமணமாகாத நிலையில் அவரது வீட்டில் மாப்பிள்ளை தேடி வந்துள்ளனர்.
எனவே அபிஷேக் பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்து பூர்ணிமாவை பள்ளிக்கு செல்லும் போது பின் தொடர்ந்து வந்துள்ளார்,
இதனை அறிந்த பூர்ணிமா அபிஷேக்கிடம் தன்னை பின் தொடர வேண்டாம் என கூறியுள்ளார்.
அதற்கு அபிஷேக் பூர்ணிமாவை காதலிப்பதாக அவரிடம் கூற இதனை மறுத்த பூர்ணிமா தனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும் பெற்றோர்கள் பார்க்கும் மாப்பிள்ளையை தான் திருமணம் செய்து கொள்வேன் என கூறியுள்ளார்.
பூர்ணிமா கூறியதை கேட்ட அபிஷேக் அவரிடம் “நீங்கள் என்னை காதலிக்கா விட்டாலும் பரவாயில்லை நல்ல நண்பர்களாக இருக்கலாம்” என கூறியுள்ளார்,
பின்னர் பூர்ணிமாவும் அபிஷேக்குடன் நட்பாக பழகி வந்துள்ளார். ஆனால் தனது எண்ணத்தை மாற்றிக் கொள்ளாத அபிஷேக் தன்னுடைய காதலை மீண்டும் பூர்ணிமாவிடம் தெரிவித்துள்ளார்.
எனவே பூர்ணிமா அபிஷேக்குடன் பழகுவதை முற்றிலுமாக தவிர்த்து இதை பற்றி தனது பெற்றோர்களிடமும் தெரிவித்துள்ளார்.
அபிஷேக்கை அழைத்து பேசிய பூர்ணிமாவின் பெற்றோர்கள் தங்களது மகளுக்கு நல்ல இடத்தில் சம்பந்தம் அமைந்துள்ளதாக கூறி அவரை விட்டு விலகி விடுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அபிஷேக் தனக்கு கிடைக்காத பூர்ணிமா வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர்.
அதன்படி பூர்ணிமாவுக்கு போன் செய்த அபிஷேக் கடைசியாக உன்னிடம் பேச வேண்டும் என தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். இதனை நம்பி பூர்ணிமாவும் அபிஷேக் வீட்டிற்கு வெளியில் சென்று அவரை சந்தித்துள்ளார்.
பூர்ணிமாவை அபிஷேக் வீட்டிற்குள் அழைத்துள்ளார், அதற்கு மறுத்த நிலையில் அவரை ரோட்டில் வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
இந்நிலையில் சடலத்தை வீட்டிற்குள் எடுத்து சென்று அதற்கு தாலி காட்டியுள்ளார். பின்னர் அந்த சடலத்துடன் போட்டோ எடுத்த அபிஷேக் அதனை வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ் வைத்து அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.
பின்னர் அவ்வழியே சென்ற மக்கள் வீட்டு வாசலில் இருந்த ரத்தத்தை பார்த்து சந்தேகம் அடைந்து வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர்.
அப்போது பூர்ணிமா சடலமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பூர்ணிமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
தனது மகள் கொலை செய்யப்பட்டதை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பூர்ணிமாவின் பெற்றோர்கள் நடத்தை போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
பூர்ணிமாவின் பெற்றோர்கள் அளித்த தகவலின் படி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ஆதாரங்களை வைத்து அபிஷேக் தான் குற்றவாளி என்பதை உறுதி செய்து, தப்பி சென்ற அபிஷேக்கை தேடி வருகின்றனர்.
இளம் பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று(07) முதல் கொழும்பு – யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சொகுசு ரயில் சேவைநாளாந்தம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பிலிருந்து தினமும் காலை 5.45க்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதுடன் காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 02 மணிக்கு மீண்டும் கொழும்பு நோக்கி பயணிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.
இந்த சொகுசு ரயில் சேவை இதற்கு முன்னர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டது.
எனினும் தற்போது இந்த புதிய சொகுசு ரயில் சேவை ஆரம்பமானதன் பின்னர் யாழ்தேவி ரயிலானது கொழும்பு கோட்டையிலிருந்து தினமும் காலை 06.40க்கு புறப்படும் என ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர மேலும் தெரிவித்தார்.
தமிழக மாவட்டம் கன்னியாகுமரியில் இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் கடிதம் மூலம் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கன்னியகுமாரி மாவட்டம் திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த ஜெமலா மேரி (26) தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.
திருமணமான ஆறு மாதத்தில் இளம்பெண் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், தன் மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக ஜெமலா மேரியின் தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதற்கிடையில், பொலிஸாருடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஜெமலாவின் உடலை வாங்கிக் கொண்டு உறவினர்கள் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில், வழக்குப்பதிவு செய்த பொலிஸார் ஜெமலா மேரியின் வீட்டை சோதனையிட்டனர். அப்போது ஜெமலா இறப்பதற்கு முன் எழுதிய கடிதம் சிக்கியது.
அதில், “நான் சுய நினைவுடன் எழுவது; என் சாவிற்கு யாரும் காரணம் இல்லை. என் கணவனோ அல்லது அவரின் குடும்பமோ காரணம் அல்ல. நான் சுயமாக முடிவெடுத்தது.
என்னை யாரும் உயிரை மாய்த்துக் கொள்ள தூண்டவில்லை” என எழுதப்பட்டிருந்தது. இது மட்டுமின்றி அப்பெண்ணின் உள்ளாடையிலும் அதே வார்த்தைகள் எழுதப்பட்டிருந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் சந்தையில் தேங்காய் விலை வேகமாக சரிந்து வருவதாலும், தேங்காய் விற்பனை அதிகரிப்பதாலும் தங்கள் வருமானமும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில மாதங்களாக, ஒரு தேங்காய் ரூபா. 220க்கு விற்கப்பட்டது, தற்போது, ரூபா.100 முதல் ரூபா.170 வரை பல்வேறு விலைகளில் தேங்காய்கள் விற்கப்படுகின்றன.
சில வியாபாரிகள், அதிக இலாபத்துடன் தேங்காய்களை விற்பனை செய்வதாகவும், அப்போது தேங்காய் விற்பனை குறைந்ததால் தங்கள் வருமானமும் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
எதிர்வரும் மாதங்களில் தேங்காய் விலை மேலும் குறைவடையும் என்றும், தற்போது சந்தையில் ஏனைய தேவையை விட தேங்காய் உற்பத்தி அதிகமாக இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
தமிழக மாவட்டம் கன்னியாகுமரியில் இளம்பெண் திருமணமான 6 மாதத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியகுமாரியின் திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஜெமலா. பட்டதாரியான இவர் சின்னத்துறையைச் சேர்ந்த நிதின் ராஜ் (26) என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இருவரின் குடும்பத்தாரிடம் சம்மதத்துடன் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. அதன் பின்னர் பெண் வீட்டார் சார்பில் புதிய வீடு கட்டிக்கொடுக்கப்பட்டு தம்பதியர் குடியேறினர்.
இந்த நிலையில், நேற்றைய தினம் ஜெமலா தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக நிதினின் உறவினர்கள் ஜெமலாவின் பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளனர்.
மேலும், தனியார் மருத்துவமனையில் மகளின் உடல் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் பெற்ற ஜெமலாவின் பெற்றோர் அங்கு விரைந்துள்ளனர். இதனையடுத்து கருங்கல் பொலிஸார் ஜெமலாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
நிதினுக்கு சரியான வேலை இல்லாததாலும், அவர் வெளிநாடு செல்வதாக கூறி வந்ததாலும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், ஜெமலாவின் தாயார் தன் ‘மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக’ பொலிசில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.