காணாமல் போன மலேசிய விமானத்தின் தடயங்கள் கண்டுபிடிப்பு!!
காணாமல் போன மலேசிய விமானத்தின் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் இரு தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் தெரிவித்துள்ளார்.
இந்திய பெருங்கடலின் தெற்குப் பகுதியில் அவுஸ்திரேலியா விமானத் தேடுதலை தீவிரப்படுத்தி இருப்பதாகவும் அதன்போதே...
இந்திய மீனவர்கள் 75 பேர் கைது..!
சட்ட விரோதமாக இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்ததாக கூறப்படும் இந்திய மீனவர்கள் 75 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று 18 படகுகளில் வந்த இவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவு பகுதியில் வைத்து அவர்கள்...
சந்திரிக்காவை சந்திக்க மஹிந்த இணக்கம்..!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை சந்திக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இணக்கம் வெளியிட்டுள்ளார்.
நாட்டின் மத ஒற்றுமை தொடர்பில் பேச்சு நடத்த சந்தர்ப்பம் தருமாறு சந்திரிக்கா விடுத்த வேண்டுகோளுக்கே ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டுள்ளார்.
முதல்...
பெண்ணை எரித்து கொன்ற நபருக்கு மரண தண்டனை!!
பெண்ணொருவரை எரித்து கொலை செய்த ஒருவருக்கு புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்ணான்டோ நேற்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
ஹிங்ரக்கொட - மெதிரிகிரிய பிரதேசத்தை சேர்ந்த 46 வயதான பீ.அன்டனி பெர்ணான்டோ...
வடக்கு மாணவர்களின் கல்வித் திறமையுடன் தென்பகுதி மாணவர்கள் போட்டியிட முடியவில்லை : ஜனாதிபதி!!
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் உள்ள மாணவர்கள் போரில் சிக்கியிருந்தாலும் கல்வியை சிறந்த முறையில் பயின்றதால் அதிகளவில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கரந்தெனிய பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற ஆசிரியர் மற்றும் மாணவர்கள்...
வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு நீதிமன்றம் அழைப்பாணை!!
வட மாகாண முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட 7 பேருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு தெரிவித்தே அவர்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு. வலிகாமம் பிரதேச சபை...
யாழ். வடமராட்சியில் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை!!
வடமராட்சியில் குடும்பஸ்தர் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு 9 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வல்லிபுரக்குறிச்சி சிங்கை நகரைச் சேர்ந்த தில்லையம்பலம் விமலநாதன் (41) என்பவரே இவ்வாறு...
ஆயுதங்கள் வைத்திருந்த ஆணும் பெண்ணும் கைது!!
பெட்ரோல் குண்டுகள் மற்றும் கூரிய ஆயுதங்களை தம்வசம் வைத்திருந்த பெண் மற்றும் ஆண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாணந்துறை - வலானை குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மீகாவத்தை...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் பேச வட மாகாண சபை அனுமதி!!
தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இணங்கினால், அவருடன் பேச்சுவார்த்தை நடத்த வடக்கு மாகாண சபை அனுமதி வழங்கியுள்ளது.
ஜனாதிபதியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்த வடக்கு மாகாண...
15 வயது சிறுமியை பலாத்காரத்திற்கு உட்படுத்திய 64 வயது நபர் கைது!!
மாரவில பிரதேசத்தில் 15 வயதான சிறுமி ஒருவரை பாலியல் பாலத்காரத்திற்கு உட்படுத்திய 64 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நாத்தண்டிய, மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் டிசம்பர்...
வீடொன்றில் பொருட் கொள்ளையிட்ட சிறுவர்கள் இருவர் கைது!!
மதவாச்சி, வகமல்கொல்லாவ பிரதேச வீடொன்றில் பொருட் கொள்ளையிட்ட சிறுவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வீட்டில் பொருட் கொள்ளையிட்டபோது அவ் வீட்டு உரிமையாளர் சிறுவர்களை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
மதவாச்சி பிரதேசத்தைச் சேர்ந்த 14 வதான சிறுவர்கள்...
வடக்கு முதல்வரின் ஆலோசகராக அங்கஜன் மற்றும் தர்மபால செனவிரட்ன நியமனம்!!
வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரனின் ஆலோசகர்களாக எதிர்க்கட்சியை சேர்ந்த அங்கஜன் இராமநாதன், தர்மபால செனவிரட்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏனைய நான்கு அமைச்சுக்களுக்கும் இரண்டு ஆலோசகர்கள் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர் என வடமாகாண சபையின் அவைத்...
அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாகாண சபையில் போராட்டம்!!(படங்கள்)
வடக்கில் இடம்பெறும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகவும், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் வடமாகாண சபையில் கண்டனப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
ஆளும்கட்சி உறுப்பினர்கள் மட்டுமே இந்த கண்டனப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இப்போராட்டத்தில் ஜெயக்குமாரியின் விடுதலை,...
இலங்கையின் விமான ஓடுபாதை தொடர்பாக, காணாமல் போன மலேசிய விமானத்தின் விமானி அறிந்து வைத்திருந்ததாக தகவல்!!
இலங்கை உள்ளிட்ட மூன்று ஆசிய நாடுகளின் விமான ஓடுபாதைகள் குறித்த தகவல்களை, காணாமல் போயுள்ள மலேசிய விமானத்தின் விமானி ஒருவர் அறிந்து வைத்திருந்தாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
பேரிட்டா ஹாரியன் என்ற மலேசிய செய்தித்தாள்...
காப்பகத்தில் இருந்து தப்பி வந்த கர்ப்பிணிச் சிறுமிகள் இருவர் கைது!!
காப்பகத்தில் இருந்து தப்பி வந்ததாக கூறப்படும் இரண்டு கர்ப்பிணிச் சிறுமிகள் கல்பிடிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு (17) கல்பிட்டி - நாரக்கல்லிய பிரதேசத்தில் பஸ்தரிப்பிடத்திற்கு வந்திருந்த வேளையே இரு சிறுமியரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அதில் ஒருவர்...
இலங்கையில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்திய இருவர் கைது!!
கொழும்பில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்திச் சென்ற தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் நேற்று (17) காலை சென்னை சென்ற பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதித்தனர்.
அப்போது சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த...
















