புகையிரத தண்டப்பணம் அதிகரிப்பு!!
பயணச்சீட்டு இன்றி புகையிரதத்தில் பயணம் செய்தால், இன்று முதல் பயணச்சீட்டின் பெறுமதியில் இருமடங்குடன் ரூபாய் 5000மும் தண்டப்பணமாக விதிக்கப்படும் என, போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதனுடன் எதிர் வரும் நாட்களில் இது தொடர்பான சோதனை...
வரவு செலவு திட்டத்தின் வரித் திருத்தங்கள் இன்று முதல் அமுல்!!
2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தினால் முன்வைக்கப்பட்ட வரி திருத்தங்கள் இன்று (1) முதல் அமுலுக்கு வரும் என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன்படி பெறுமதிசேர் வரி (VAT), என்.பீ.ரி (NBT) மற்றும்...
ரொமேனியாவில் நான்கு இலங்கையர் கைது!!
யுக்ரெயினில் இருந்து ரொமேனியாவுக்குள் பிரவேசிக்க முற்பட்ட நான்கு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரொமேனிய எல்லைப்பாதுகாப்பு படையினரால், அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யுக்ரெயின் - ரொமேனிய எல்லைப்பகுதியின் ஊடாக சட்டவிரோத அகதிகள், அதிகளவில்...
20 மைக்ரோன் இற்கும் குறைவான பொலித்தீன் பாவனைக்கு இன்றுமுதல் தடை!!
20 மைக்ரோன் இற்கும் குறைவான அளவுடைய பொலித்தீன் பாவனைக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக உணவு வகைகளை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் வகைகளின் மைக்ரான் அளவு 20க்கும்...
விபத்தில் இரு இளம் பெண்கள் உயிரிழப்பு!!
புத்தள, குகுரம்பொல பிரதேசத்தில் இடம்இபற்ற வாகன விபத்தில் யுவதிகள் இருவர் உயிரிழந்துள்ளனர். பெல்வத்தையில் இருந்து குகுரம்பொல நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று பாதையில் இருந்து விலகி மின்கம்பம் ஒன்றுடன் மோதியதில் இந்த...
பள்ளத்தில் விழுந்து 18 வயது மாணவர் உயிரிழப்பு!!
நோட்டன்பிரிஜ், விதுலிபுர பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார். நேற்றிரவு குறித்த மாணவன் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து அந்த மாணவனை வைத்தியசாலையில் அனுமதிக்க கொண்டு சென்ற போதே...
சிகரட் விலைகள் அதிரடியாக அதிகரிப்பு!! விபரம் உள்ளே
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சிகரட் வகைகள் அனைத்தினதும் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சிலோன் டொபாக்கோ நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.
அதன்படி அவற்றின் புதிய விலைகளாவன,
பிஸ்டல் (Bristol) ஒன்றின் விலை 1 ரூபாவினால்...
மன்னாரில் நடைபெற்ற கிறிஸ்து பிறப்பு பாிசளிப்பு விழா 2015!!
மேற்படி நிகழ்வானது வன்னிமாவட்ட கிறிஸ்தவ மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளா் அருட்கலாநிதி எஸ்.சந்திரக்குமாா் அவா்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக கௌரவ கித்சிறி அத்துலத்முதலி அவா்களும் அவருடைய குடும்பமும் கலந்து கொண்டனா்....
முருங்கன் மெதடிஸ்த தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்து பிறப்பு பாிசளிப்பு விழா2015!!
மேற்படி நிகழ்வானது வன்னி மாவட்ட கிறிஸ்தவ மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளராகிய அருட்திரு கலாநிதி எஸ். சந்திரக்குமாா் அவா்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
இவ்வைபவத்தின் பிரதம விருந்தினராக அமொிக்க தேசத்தில் இருந்து வருகை தந்த கௌரவ...
சீனாவின் பிக்குமார் குழு – ஜனாதிபதி சந்திப்பு!!
சீனாவின் பௌத்த மத தலைவர்களை கொண்ட குழுவொன்று இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளது.ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.சீனாவின் க்வொன்சு மாகாணத்தின் பிரதான பிக்கு யா ஓ ஷீ உட்பட்ட குழுவே...
மனநிலை பாதிக்கப்பட்ட யுவதியை துஷ்பிரேயோகம் செய்த நபர் கைது!!
புத்தளம், மாம்புரிய தலுவ பிரதேசத்தில் வசிக்கும் 18 வயதான, மனநிலை பாதிக்கப்பட்ட யுவதியை துஷ்பிரேயாகம் செய்த நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் இந்த சம்பவம் இடம் பெற்றதாக எமது...
பிறந்து ஒரு நாளே மதிக்கதக்க குழந்தையின் சடலம் மீட்பு!!
ஹொரனை தக்ஷிலா உயன வீட்டு குடியிருப்பு கட்டிட தொகுதிக்கு பின்னால் இருந்து, பிறந்து ஒரு நாளே மதிக்கதக்க குழந்தையின் சடலம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நேற்று மாலை காவல் துறைக்கு கிடைக்கபெற்ற தகவலையடுத்தே இந்த சடலம்...
இனி சீகிரிய ஓவியங்களை புகைப்படம் எடுக்க முடியாது!
சீகிரிய ஓவியங்களை புகைப்படம் எடுப்பது இன்று முதல் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது.தொல்பொருள் திணைக்கள பிரதானிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக, மத்திய கலாசார நிதியத்தின்...
ஆற்றுக்கு அருகில் சடலமாக கிடந்த இருவர்!!
உகன, ஹிமிதுராவ - கொண்டுவடுவான ஆற்றுக்கு அருகில் இருந்து ஆணொருவரும் பெண்ணொருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் குறித்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை உகன பொலிஸார்...
20 கர்ப்பிணிப் பெண்களுக்கு எயிட்ஸ்!!
எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான 20 கர்ப்பிணித் தாய்மார்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.கர்ப்பிணிப் பெண்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட எச்.ஐ.வி இரத்தப் பரிசோதனைகளில் இந்தத் தகவல் வௌியாகியுள்ளதாக, சுகாதார அமைச்சின் பாலியல் நோய்கள்...
தமிழகத்தில் கொள்ளையிட்டதாக கூறப்படும் நான்கு இலங்கையர் கைது!!
தமிழகத்தில் வீடொன்றில் கொள்ளையிட்டதாக கூறப்படும் நான்கு இலங்கைத் தமிழர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, மற்றுமொருவர் தேடப்பட்டு வருகின்றார். தமிழகத்திலுள்ள மொடக்குறிச்சி வட்டாரம் முத்துக்கவுண்டன்பாளையம், கேட்டுபுதூரில் வசிக்கும் ஓய்வு பெற்ற இராணுவ வீரரான கருப்பண்ணன் என்பவர் வீட்டிலேயே...
















