இலங்கை செய்திகள்

அதியுயர் வலுவுடைய மின்சாரக்கம்பம் வாகனத்தின் மீது விழுந்ததில் மூவர் பலி!!

அதியுயர் வலுவுடைய மின்சாரக் கம்பமொன்று வாகனத்தின் மீது முறிந்து விழுந்ததில் மின் சாரம் தாக்கி மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் காலியின்தொட்யில் இன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த ஒன்பது மாதங்களில் இணையத்தளம் தொடர்பில் 2000 முறைப்பாடுகள்!!

இவ்வாண்டின் கடந்த 9 மாதங்களில் இணையத்தளம் தொடர்பிலான 2000 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றத்தின், பிரதான தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொசான் சந்திரகுத்தா தெரிவித்துள்ளார். இவற்றில் 80 சதவீதமானவை...

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய மூலஸ்தான அடிக்கல் நாட்டும் விழா!!(படங்கள்)

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய மூலாலய நிர்மாண அடிக்கல் நாட்டும் கிரிகைகள் நேற்று ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆலயத்தின் பிரதம குருக்கள் திரு.கிஸ்ணபவன், பரிபாலனசபை தலைவர் திரு.இ.குகதாசன், திரு.இ.சபேசன், திரு.கு.மகேந்திரன் மற்றும்...

மீள்குடியேற்ற நடவடிக்கையில் தமிழ்-முஸ்லிம் பாகுபாடின்றி வடமாகாண சபை நடவடிக்கைகளை முன்னெடுக்கும்!அமைச்சர் சத்தியலிங்கம் !

மீள்குடியேற்ற நடவடிக்கையில் தமிழ்-முஸ்லிம் என்ற பாகுபாடுகள் இல்லாமல் வடக்கு மாகாண சபை நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்றும், இரண்டு சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கம்-நல்லுறவுக்கான நடவடிக்கைகள் வடக்கு மாகாண சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சத்தியலிங்கம்  நேற்று 02.11.2015...

இனமதமொழி பேதமின்றி தமிழ்,முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு ஒன்றுபடுவோம்! ரிசாட்!!

நேற்று (02.11.2015) வவுனியா கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர்களை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு வவுனியா  வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற வேளையில் கலந்து கொண்டு உரையாற்றிய கைத்தொழில்  வாணிப அமைச்சர்  ரிசாட்...

அரசியல் கைதிகள் விடயத்தில் காத்திரமான நடவடிக்கை இல்லையேல் அரசுடனான உறவு மீள்பரிசீலனை செய்யப்படும்!சிவசக்தி ஆனந்தன்!

அரசியல் கைதிகள் விடயத்தில் காத்திரமான நடவடிக்கை இல்லையேல் அரசுடனான உறவு மீள்பரிசீலனை செய்யப்படுமென வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். வவுனியா வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் நகரசபை கலாசார மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை...

உயர்தர செயன்முறை பரீட்சை 7 ஆம் திகதி!!

உயர்தரப் பரீட்சையின் தொழில்நுட்ப பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சை வருகின்ற சனிக்கிழமை 07 ஆம் திகதி நடைப்பெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே புஷ்பகுமார தெரிவித்துள்ளார். இந்த செயன்முறைப் பரீட்சைக்கு சுமார் 5074 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்....

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழை : பல குடும்பங்கள் இடம்பெயர்வு!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழை பெய்து வருகின்ற காரணமாக பல குடும்பங்கள் இடம்பெயர்ந்து உறவினர்,நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர். கடந்த மணிநேரத்தில் 100.9 மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி...

தந்தையை நாய்க் கூட்டில் அடைத்து வைத்த பெண்ணுக்கு பிணை!!

தனது வயோதிபத் தந்தையை நாய்க் கூட்டில் தங்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட பெண் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கண்டி நீதவான் ஶ்ரீநித் விஜேசேகரவால் நேற்று  இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதன்படி குறித்த பெண்ணை 5000 ரூபா ரொக்கப் பிணை...

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட 75 பேருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சரவையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட 75 பேருக்கு உயர்நீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்காக நிலக்கரி கொள்வனவு செய்வது தொடர்பில்...

மாலைதீவு ஜனாதிபதி கொலை முயற்சி- சந்தேகநபர் தெஹிவளையில் கைது!!

மாலைதீவு ஜனாதிபதி அப்துல் யாமீன் பயணித்த படகை வெடிக்க வைத்து அவரை கொலை செய்ய முயன்றதாக சந்தேகிக்கப்படும் நபரை தெஹிவளை பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே...

கொழும்பை அண்மித்த புறநகர் பகுதிகளில் வாகனங்கள் நிறுத்த தடை!!

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த புறநகர் பகுதிகளின், இரு மருங்கிலும் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு இன்று முதல் தடை விதிக்கபட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கொழும்பு நகர், பொரலஸ்கமுவ, கொஹவளை, தெஹிவளை, மஹரகம, பேலியகொடை,...

இயல்பு நிலை இன்னும் திரும்பவில்லை!

யுத்தம் நிறைவடைந்த பின்னரும் இயல்பு நிலை இன்னும் திரும்பவில்லை எனவும் கடந்தகால தவறுகளை சீர் செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கார்த்திகை மாதம் மரம் நடுகை மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டு...

குவைட் விமான திடீரென மத்தலவில் தரையிறக்கம்!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்க தீர்மானிக்கப்பட்ட குவைட்டில் இருந்து வந்த விமானம் திடீரென மத்தல விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. அதிக பணிமூட்டம் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மாணவர்கள் மீதான தாக்குதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!!

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது.மாணவர்களால் இன்று இந்த முறைப்பாடு வழங்கப்படவுள்ளது. மாணவர்களின் எதிர்ப்பு நடவடிக்கைக்கு தாம் பொறுப்பேற்பதாகவும் மாணவர்களைத்...

யாழில் நீரினால் பரவும் நோய்கள் அதிகரிப்பு : பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!

யாழ்.மாவட்டத்தில் நீரால் பரவும் நோய்களின் தாக்கம் அண்மைக்காலமாக சடுதியாக அதிகரித்து வருகின்றது என்று தெரிவித்துள்ள யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நந்தகுமார் இந் நோய்கள் தொடர்பாக பொது மக்களை அவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கை...