இலங்கை செய்திகள்

சூரியனில் ஐம்பது பூமிகள் அளவிலான பெரிய ஓட்டை!!

நாசாவின் சூரியனைச் சுற்றி புகைப்படங்கள் எடுத்துவரும் ‘சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரி’ விண்கலம் சமீபத்தில் அனுப்பிய படங்கள் மூலமாக சூரியனில் மாபெரும் துளை உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சூரியனில் உள்ள இந்த ஓட்டை சுமார் ஐம்பது...

மாத்திரைகள் தொண்டையில் சிக்கி சிறுமி பலி!!

மிஹிந்தலை பகுதியில் மாத்திரைகள் தொண்டையில் சிக்கி சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். மூன்றரை வயதான சிறுமி ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சுகயீனம் காரணமாக குறித்த சிறுமியை அவரது தந்தை நேற்று காலை மிஹிந்தலை...

30 வருட அனுபவமுடைய பாகனையே அடித்துக் கொன்ற யானை!!

கோடகவெல - மல்வத்தை பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி பாகன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (18.10) காலை யானைக்கு உணவு வைக்கச் சென்ற வேளையே இவர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பின்னர் படுகாயமடைந்த நிலையில்...

விபத்தில் யாழைச் சேர்ந்த மொறட்டுவ பல்கலைக்கழக மாணவன் பலி!!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மொரட்டுவ பல்கலைக்கழக மாணவன் ஒருவர் விபத்தில் பலியானதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் சென்.ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவனான அமில்தன் மகேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மாணவர்கள் பயணம் செய்த மோட்டார்வண்டி,...

4 வயது பிள்ளை சாட்சியமளித்ததால் தாய்க்கும் மகனுக்கும் மரண தண்டனை!!

பெண் ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக தாயொருவருக்கும் மகனுக்கும் மரண தண்டனை விதித்து கண்டி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் கணவனின் தாய் ஆகிய இருவருக்குமே இவ்வாறு மரண...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்த பிரச்சினைக்கு தீர்வு!!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்த பிரச்சினைக்கு தீர்வொன்றை எதிர்வரும் நவம்பர் மாதம் 07ம் திகதிக்கு முன்னர் பெற்றுத் தருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் தலைவரும்,...

நீரோடையில் அடித்துச் செல்லப்பட்ட 8 வயது சிறுவன் சடலமாக மீட்பு!!

கம்பளை, அட்டபாகே, அட்டபாககந்த பிரதேசத்தில் வசிக்க கூடிய பாடசாலை செல்லும் 08 வயது மாணவர் ஒருவர் நீரோடையில் அடித்து செல்லப்பட்ட நிலையில், நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, தந்தையுடன் இரவு...

புதிய முறையில் உள்ளூராட்சித் தேர்தல்!!

உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­தல்கள் புதிய முறை­மையில் எதிர்­வரும் மார்ச் மாதம் நடை­பெறும். இதற்­கான ஏற்­பா­டுகள் மேற் ­கொள்­ளப்­பட்­டு­வ­ரு­கின்­றன. அதா­வது 70 வீத தொகுதி வாரி மற்றும் 30 வீத விகி­தா­சார முறை­மை­யைக்­கொண்ட புதிய தேர்தல்...

ரயிலில் பிச்சை எடுக்க தடை !!

ரயில்களில் பிச்சை எடுப்பதற்கு நவம்பர் மாதம் 01ம் திகதியிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளது. ரயில்வே திணைக்களம் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளது. ரயிலில் பிச்சை எடுத்தல் மற்றும் வழிப்பறி கொள்ளையர்களினால் பயணிகள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காகவே இந்த...

அரசாங்கத்தின் உறுதி மொழியை ஏற்க முடியாது! அரசியல் கைதிகள்!

தமிழ் அரசியல் கைதிகளை நவம்பர் 7ம் திகதியில் இருந்து கட்டம் கட்டமாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் வெளியிட்டுள்ள உறுதி மொழியை ஏற்கமாட்டோம் என தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர். நவம்பர் மாதம் 7ம்...

முல்லைத்தீவு மாவட்டத்தில் பனம் விதைகள் நடுகை செயற்திட்டம்!!(படங்கள்)

முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று (15.10.2015) ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவின்கீழ் காரிப்பட்ட முறிப்புக்கும் மணவாளன்பட்ட முறிப்புக்கும் இடையில் ஒட்டுசுட்டான் பிரதான வீதியின் இரு மருங்கிலும் பனை அபிவிருத்திச் சபையினால் 9500 பனம் விதைகள் நடுகைசெய்யப்பட்டன. இந்நிகழ்வு...

வீடியோ கதையாக்கச் செயற்றிட்டம் : இளம் நாடக, திரைப்பட மற்றும் வீடியோ தயாரிப்பாளர்கள் விண்ணப்பிக்கலாம்!!

வீடியோவை ஊடகமாகப் பயன்படுத்தி பின்தங்கிய மக்களின் கதைகளை வெளிஉலகிற்கு எடுத்துக்கூறி, அச் சமூகத்தினை வலுப்படுத்தும் உத்திமுறை உலகம் முழுவதிலும் அதிகம் பயன்படுகின்றது. இத்தகைய கதைகூறல் மூலம் இளம் வீடியோ தயாரிப்பாளர்களும் பின்தங்கிய நிலையில் வாழும்...

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனையானது அனைத்து உலக நாடுகளிலும் உள்ள பிரச்சனை!!

போதைப்­பொருள் கடத்தல் மற்றும் பாவனை என்­பன சகல நாடு­க­ளிலும் காணப்­படும் பொதுப் பிரச்­சி­னை­யாகும். சக­லரும் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வதன் மூலமே அவற்றை ஒழிக்க முடியும் என்று பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவன் விஜே­வர்­தன தெரி­வித்­துள்ளார். இந்து...

பதவியிலிருந்து ஓய்வு பெற்றதும் சொந்த ஊருக்கு சென்றுவிடுவேன்- ஜனாதிபதி!!

பத­வி­யி­லி­ருந்து ஓய்வு பெற்­றதும் சொந்த ஊரான பொலன்­ன­று­வைக்கு சென்று எனது வீட்டில் வசிப்­பேனே தவிர ஜனா­தி­ப­திக்­கான உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லத்தில் வசிக்க மாட்டேன் எனத் தெரி­வித்­துள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, கொழும்பு கோட்­டை­யி­லுள்ள ஜனா­தி­பதி...

வெளிநாடுகளின் வங்கிகளில் பல பில்லியன் ரூபா கணக்குகள்- விசாரணைகளின் முடிவுகளில் திடுக்கிடும் தகவல் வரும்!!

இலங்­கையின் முன்னாள் ஆட்­சி­யா­ளர் களின் உற­வி­னர்­களின் பெயர்­களில் வெளி­நா­டு­களின் வங்­கி­களில் பல பில்­லியன் ரூபா கணக்குகள் உள்­ளன. அவற்றை முடக்கி அந்த பணத்தை இலங்­கைக்கு கொண்­டு­வர நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று அமைச்­ச­ர­வையின் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான...

மனைவியை கத்திரிகோலால் குத்தி கொன்றவருக்கு சிறை – ஒருவர் அடித்துக் கொலை!!

இரத்தினபுரி - கரன்கோட பிரதேசத்தில் பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த நபரின் சகோதரரே அவரைக் கொன்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். போதையில் இடம்பெற்ற மோதலே கொலைக்குக் காரணம் என தெரியவந்துள்ளது. சம்பவத்தில் 30 வயதான...