கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி பணிகளை மீளவும் ஆரம்பிக்க திட்டம்!!
அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி பணிகளை இன்னும் சில மாதங்களில் மீளவும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம். இதன்போது நாட்டிற்கு தீங்கான அனைத்து அம்சங்க ளும் ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்டு மீள்திருத்தம் செய்யப்படும். அதன்...
குவைத்தில் தவித்த 80 பணிப் பெண்கள் தாயகம் திரும்பினர்!!
வௌிநாட்டு வேலை வாய்ப்புக்காக சென்று பல்வேறு துன்புறுத்தல்களுக்கும் ஆளான பணிப் பெண்கள் சிலர், குவைத் நாட்டில் இருந்து தாயகம் திரும்பியுள்ளனர்.இன்று காலை 06.50 அளவில் இலங்கைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் இவர்கள் கட்டுநாயக்க...
புதிய யாப்பு பற்றி 25 மாவட்டங்களிலும் மக்கள் கருத்து திரட்டப்படும்!!
இலங்கையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பில் மக்களின் கருத்துக்களையும் திரட்டுவதற்கான சிறப்புக் குழுவொன்று அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர் லால் விஜேநாயக்க தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் வழக்கறிஞர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளிட்ட...
பிறந்து ஒன்பது மாதங்களான ஆண் சிசுவை நிலத்தில் அடித்துக் கொலைசெய்த தந்தை!!
பிறந்து ஒன்பது மாதங்களான ஆண் சிசுவை நிலத்தில் அடித்து கொலை செய்த சந்தேக நபரான சிசுவின் தந்தையை இன்று (13.01.2016) அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக திம்புள்ள – பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்....
பாடசாலை விளையாட்டுப் போட்டிகளுக்கு இனி மருத்துவ சான்றிதழ் அவசியம்!!
பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைத்து வீர, வீராங்கனைகளும் உடற்தகுதிக்கான மருத்துவ சான்றிதழைப் பெற்றுக் கொள்ள வேண்டியது, கட்டாயம் என, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்காக கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் அனுமதி...
இலங்கையை தொழில்நுட்பத்தில் முன்னேற்ற புதிய திட்டம் – பிரதமர்!!
இலங்கையை தொழில்நுட்பத்தில் முன்னிலைப்படுத்தும் நோக்கில், புதிய தொழில்நுட்ப நகரத்தை உருவாக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பம்பலபிட்டிய இந்து மகளிர் கல்லூரியில் நேற்று இடம் பெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட போதே, இதனை...
மதுவிற்பனை நிலையங்களை கட்டுப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!!
பெருந்தோட்டங்களுக்கு அருகில் மது விற்பனை நிலையகங்கள் அமைக்கப்படுவதை தடுக்கவேண்டும், என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது. இந்தக்கோரிக்கையை, தாம் இந்த வாரம் இடம்பெற்றவுள்ள அமைச்சரவை கூட்டத்தின்போது ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவரவுள்ளதாக மலைநாட்டு புதிய கிராமம்,...
இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கை வருகை!!
இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர் சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இவருடன் 3 பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழில் உறவினரிடம் இருந்து தப்பிக்க கிணற்றில் குதித்த காதல் ஜோடி – காதலன் பலி!!
யாழ். - கோப்பாய் - இராசபாத வீதியிலுள்ள தோட்டப் பகுதியிலுள்ள கிணறு ஒன்றினுள் குதித்த காதலர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய காதலன்...
யாழில் கைதியைப் பார்க்க ஹெரோயினுடன் சிறைச்சாலைக்குச் சென்றவர் கைது!!
120 கிராம் ஹெரோயினுடன் சிறைச்சாலைக்கு உறவினரைப் பார்க்கச் சென்ற இளைஞரை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பிடித்து யாழ். பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். பருத்தித்துறை - மணற்காடு பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த...
பேக்கரி உற்பத்திப் பொருட்களுக்கான விலை அதிகரிக்காது!!
பேக்கரி உற்பத்திப் பொருட்களுக்கான விலையை அதிகரிக்க எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என, அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. சில பேக்கரி உரிமையாளர்கள் பான் உள்ளிட்ட பொருட்களுக்கு விலையை உயர்த்தியுள்ளதாக தெரியவந்துள்ளது என,...
இன்புஃளுவன்சா வைரஸ் பரவ சாத்தியக் கூறுகள் இல்லை !!
புதிய வகையான இன்புஃளுவன்சா ஏ.எச்.வன்.என்.வன் வைரஸ் இலங்கையினுள் பரவக்கூடிய சாத்தியக் கூறுகள், இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் வெளிநோயாளர், பிரிவுகளில் தொற்றுள்ள நோயாளர்கள், பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக அந்த அமைச்சு...
வருட இறுதியில் புதிய யாப்புத் திட்டம் – ரணில்!!
21 ஆம் நூற்றாண்டுக்கு உகந்த வகையிலான அரசியலமைப்பு ஒன்று இந்த வருட இறுதிக்குள் தயாரிக்கப்படும், என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இளைஞர் நாடாளுமன்றம் மற்றும் இளைஞர் சமூக சம்மேளனங்களின் உறுப்பினர்களின் சந்திப்பொன்று,...
மீள் குடியேறியவர்களுக்கு உதவ நோர்வே முன் வந்துள்ளது!!
அண்மையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மீள குடியேறிய சமூகத்திற்கு மேலும் உதவி மற்றும் ஒத்துழைப்பினை வழங்க, நோர்வே முன் வந்துள்ளது. இதற்கமைய இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் நோர்வே அரசாங்கத்துடன் இணைந்து இதற்கான...
அரசியலமைப்பு தொடர்பாக நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த திட்டம்-
புதிய அரசியலமைப்பு தொடர்பாக தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி, நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சித்து வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டையில் உள்ள ஸ்ரீ போதிராஜா விகாரையில் ஆரம்பமான...
கட்டிடம் ஒன்றில் இருந்து கீழே விழுந்த இரு நபர்கள் பலி!!
அநுராதபுரத்தில் கட்டிடமொன்றை நிர்மாணிக்கும் வேலைத்தளமொன்றில், மூன்று மாடி கட்டிடம் ஒன்றில் இருந்து, கீழே விழுந்த இரு நபர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை இடம் பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள், குறித்த கட்டிடத்தில் கட்டுமான...
















