இலங்கை செய்திகள்

ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவை கலைக்க முடிவு!!

ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவை கலைத்து விட்டு பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி விரைவில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு கலைக்கப்படும் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன்...

இன்று முதல் கடவுச்சீட்டைப் பெற கைவிரல் அடையாளம் அவசியம்!!

இனிவரும் காலங்களில் இலங்கையில் கடவுச்சீட்டில், கைவிரல் அடையாளத்தை பதிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்படி அனைத்து விண்ணப்பதாரிகளும் தமது கைவிரல்...

புதிய அரசின் கீழ் வௌிநாட்டுக் கடன்கள் வீழ்ச்சி!!

புதிய அரசாங்கத்தின் கீழ் வௌிநாட்டுக் கடன்கள் குறைவடைந்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.மேலும் இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் வௌிநாட்டில் இருந்து பெறப்பட்ட கடன் தொகை 43 பில்லியன் ரூபாய்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, நிதி...

வேகமாக வாகனத்தை செலுத்தும் சாரதிகள் இனிமேல் கவனம்!!

வேக எல்லைகள் குறிக்கப்பட்ட பாதைகளில் கட்டுப்பாட்டை மீறி அதிக வேகத்தில் வாகனங்களை செலுத்துவோருக்கு எதிராக இம்மாதம் 11ம் திகதி முதல் வழக்குத் தாக்கல் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிக வேகத்தில் வாகனங்களை செலுத்துவோருக்கு...

பெண்ணை கைது செய்வதற்கு இடையூறு விளைவித்தவர் மரணம்!!

ஹெரோயின் வைத்திருந்த பெண் ஒருவரை கைதுசெய்ய முற்பட்டவேளை, கிரான்பாஸ் பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இதன்போது நபர் ஒருவர் இடையூறு விளைவித்ததோடு, அவர் நிலத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதனையடுத்து மக்கள் பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்...

தரம் 5 புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையில் 3 இலட்­சத்து 40 ஆயிரம் மாண­வர்கள்!!

இம்­முறை நடை­பெ­ற­வுள்ள தரம் 5 புல­மைப்­ப­ரிசில் பரீட்­சைக்கு நாட­ளா­விய ரீதியில் 3 இலட்­சத்து 40 ஆயி­ரத்து 926 மாண­வர்கள் தோற்­ற­வுள்­ளனர். பாட­சா­லை­க­ளுக்கு மாண­வர்­களைத் தெரிவு செய்­வ­தற்கும் புல­மைப்­ப­ரிசில் வழங்­கு­வ­தற்­கு­மாக தரம் 5 மாண­வர்­க­ளுக்­காக நடத்­தப்­படும்...

11 ஆம் திகதியும் தபால் மூலம் வாக்களிக்க முடியும்!!

தபால் மூலம் வாக்களிக்கத் தவறியவர்கள் எதிர்வரும் 11 ஆம் திகதி வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கடந்த வாரம் 3ஆம், 5ஆம் மற்றும்...

கட்டுநாயக்க விமானநிலையத்தில் ஒருதொகை மருந்து மாத்திரைகளுடன் ஒருவர் கைது!!

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் ஒருதொகை மருந்து மாத்திரைகளை கொண்டுவந்த நபரை கட்டுநாயக்க விமானநிலை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 13 இலட்சத்து 34 ஆயிரம் ரூபா பெறுமதியான...

இசை நிகழ்வின்போது ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் பலி!!(படங்கள்)

ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளர்கள் இருவர் இணைந்து பதுளை-அட்டாம்பிட்டிய பகுதியில் ஏற்பாடு செய்திருந்த இசை நிகழ்வின்போது, ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும்...

பெண்களின் வாழ்வியலில் அனைவரும் அவதானத்துடன் செயற்படவேண்டும் : பத்மினி சிதம்பரநாதன் வலியுறுத்தல்!!

போரால் பாதிக்கப் பட்ட பெண்களுக்கான ஆற்றுப்படுத்தல் அரங்கு நேற்று கோப்பாயில் நடைபெற்றது . பெண்கள் பண்பாட்டு மையத்தின் ஒழுங்கமைப்பில் முத்துச் சிற்பி அரங்க கூடத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேட்பாளர் பத்மினி...

தேர்தலை முன்னிட்டு அமமெரிக்கா பயண எச்சரிக்கை!!

இலங்கையில் இருக்கும் அமமெரிக்கர்களுக்கு அந்த நாட்டு அரசாங்கம் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் இம்மாதம் 17ம் திகதி பொதுத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் இலங்கையில் வன்முறைகள் வெடிக்கக் கூடுமென்ற அடிப்படையில் அமமெரிக்க அரசாங்கம்...

இரத்தினபுரி மாணிக்க கல் சுரங்கத்தில் இருந்து புராதன சிவலிங்கம் கண்டெடுப்பு!!

இரத்தினபுரி மாணிக்க கல் சுரங்கத்தில் புராதன சிவலிங்கம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுமார் 80 அடி ஆழத்தில் இருந்து இந்த சிவலிங்கம் வடிவிலான புராதன பொருள் மீட்கப்பட்டுள்ளது. இரண்டு தட்டுகள் கொண்டு இந்த புராதன பொருள்...

இதுவரை 500 க்கும் அதிகமானோர் கைது!!

தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இதுவரை 512 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பிலும் மற்றும் தேர்தல் சம்பந்தமாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பிலும் மேற்படி...

தனியார் துறை ஊழியர்களின் சம்பளங்கள் உயர்த்தப்பட வேண்டும் – பிரதமர்!!

அரச துறையினர் போன்றே தனியார் துறை ஊழியர்களினது சம்பளங்களும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தனியார் துறை ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக உரிய அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன்...

தகுதியானவர்களை மட்டுமே தெரிவு செய்யுங்கள் : ஜனாதிபதி வேண்டுகோள்!!

எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் பாரா­ளு­மன்­றத்­திற்கு பொருத்­த­மா­ன­வர்­களை மட்­டுமே தெரிவு செய்ய வேண்­டி­யது நாட்டில் உள்ள எல்லா வாக்­கா­ளர்­க­ளி­னதும் மிகப் பெரும் பொறுப்­பாகும் என்று ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தின் நற்­பெ­யரை மதித்து பாது­காக்­கின்ற...

சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முயன்றவர் கைது!!

தலவாக்கலை ட்ரூப் பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முயற்சித்தார் என்ற சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் பிரதேச வாசிகள் கொடுத்த முறைப்பாட்டினையடுத்து...