வவுனியா பூவரசன் குளத்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் மூவர் காயம்..!

வவுனியா மாவட்டத்தின் பூவரசன்குளம் 16ஆம் மைல்கல் பகுதிக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். நேற்று சனிக்கிழமை இரவு சைக்கிளொன்றில் சென்றுகொண்டிருந்தவர் மீது மோட்டார் சைக்கிளொன்று மோதியே இவ்விபத்து ஏற்பட்டதாக பூவரசன்குளம் பொலிஸார்...

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய தேர் திருவிழா காணொளி..!

பல்லாயிரக் கணக்கான அடியவர்களின் அரோகரா கோசம் முழங்க அழகிய சிற்பத் தேரில் பவனி வந்து அடியோர்க்கு அருளளித்த நயினை நாகபூஷணி அம்பாள் மற்றும் அம்பாள் தேரில் இருந்து பச்சை சாத்தி வரும் காட்சிகள்.

காட்டுத் தீ பரவ காரணமான நிறுவனங்களுக்கு எதிராக சிங்கப்பூர் சட்ட நடவடிக்கை..!

இந்தோனேசியாவில் காட்டுத் தீயை உண்டுபண்ணி தமது காற்றுமண்டலத்தை மாசுபடுத்திய நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக சிங்கப்பூர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். சிங்கபூர், மலேசியா மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்தக் காடுகளை எரித்து அங்கு பால்ம்...

காசல்ரீ நீர் தேக்க வான் கதவுகள் திறப்பு..!

காசல்ரீ நீர் தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்து நிலையம் அறிவித்துள்ளது. மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நீர்த்தேக்கங்களும் நிரம்பி வழிகின்ற மட்டத்தை அடைந்துள்ளது. காசல்ரீ நீர் தேக்கத்தின் அணைக்கட்டின் அடிப்பகுதியில்...

சவுதியிலிருந்து 13,000 இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை..!

சவுதி அரேபியாவில் விசா இல்லாது தங்கியிருக்கும் 15 லட்சம் வெளிநாட்டவர்கள் விசா பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சவுதியில் விசா இல்லாது வாழும் வெளிநாட்டவர்களுக்கு எதிர்வரும் ஜூலை மாதம் மூன்றாம்...

முஸ்லிம் காங்கிரஸ் புறக்கணிப்பு: ஹக்கீம் கடும் கண்டனம்

இலங்கையில் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை திருத்துவது குறித்து ஆராய இலங்கை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவிக்குழுவில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய சிறுபான்மைக் கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு இடமளிக்கப்படாதது குறித்து அந்தக்...

இன்றும் மீன்பிடியில் ஈடுபடுவது நல்லதல்ல..!

புத்தளத்திலிருந்து காலி நோக்கி ஹம்பாந்தோட்டை வரையாக கடற் பரப்பு இன்றும் கொந்தளிப்பாக காணப்படும் என வானிலை அவதான நிலைம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் கடற்தொழில் தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும்...

நெடுந்தீவில் 40 அடி உயர மனிதனின் பாதச்சுவடு!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பிரதேசத்தில் மனித பாத சுவட்டினை ஒத்தமாதிரியான கற்பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.சுமார் 40 அடி மனிதனின் பாதச் சுவட்டினை ஒத்த பாதச்சுவட்டைப் பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் உட்பட பெருமளவானோர் அப்பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர். இந்த...

வவுனியாவில் சுயதொழில் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா..

வவுனியா மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தால் முதல் தடவையாக வழங்கப்பட்ட குறுகியகால சுயதொழில் பயிற்சி நெறியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் நேற்று (21) வவுனியா றோயல் காடின் மண்டபத்தில் வழங்கப்பட்டது. பாடசாலையை விட்டு விலகிய...

வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் நடாத்தும் TM.சௌந்தரராஜன் நினைவு நாள்..!

வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் மாதம்தோறும் நடாத்தி வரும் மாதாந்தமுழு நிலா கருத்தாடல் நிகழ்வின் 158 வது நிகழ்வாக தமிழ் திரை இசைஉலகின் முடிசூடாமன்னன் ரி.எம். சௌந்தரராஜனின் நினைவு நிகழ்வு கலாநிதி தமிழ்மணி...

தமிழக முகாமில் உள்ள 60 இலங்கை அகதிகள் ஆஸி. தப்பிச்செல்ல முயற்சி?

தமிழகத்தில் நெல்லை மாவட்டம் தோகை மலைநல்லூர் கிராமம், வேலூர் மாவட்டம் வாலஜாப்பேட்டை, குடியாத்தம், காஞ்சிபுரம் மாவட்டம் கும்மிடிப் பூண்டி போன்ற பல்வேறு இடங்களில் அகதிகளுக்கு அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் இலங்கை தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் வசித்து...

தமிழ் பேசத்தெரியாமை குறித்து நான் வெட்கப்படுகின்றேன்! -அபிவிருத்தி லொத்தர் சபை பணிப்பாளர்

இலங்கையில் பிறந்த மனிதராக இருந்துகொண்டு தமிழ் பேசத்தெரியாமை குறித்து நான் வெட்கப்படுகின்றேன் - இவ்வாறு அபிவிருத்தி லொத்தர் சபையின் தேசிய பணிப்பாளர் சட்டத்தரணி காமினி ஏக்கநாயக்க தெரிவித்தார். மட்டக்களப்பு வை. எம். சீ....

சிங்கப்பூர் மாசு மண்டலம் 3-வது நாளாக ‘அளவு கடந்து’ செல்கிறது

சிங்கப்பூரைச் சூழ்ந்துள்ள மாசு மண்டலம் வயோதிபர்களுக்கும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் தீங்கு ஏற்படுத்தும் அளவுக்கு காற்றினை மாசுபடுத்தியுள்ளது. மாசு மண்டலத்தின் அளவு இன்று வெள்ளிக்கிழமை நண்பகலின்போது 401-PSI ஐ தாண்டியிருந்தது. 300 PSI-ஐ தாண்டிவிட்டால் அது ஆபத்தான அளவைத்...

மும்பையில் கட்டிட விபத்து: 9 பேர் பலி..!

இந்தியாவில் மும்பை நகரின் புறநகர்ப்பகுதியொன்றில் கட்டிடமொன்று இடிந்துவிழுந்ததில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளனர். 14 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளுக்குள்ளே சிக்கிக்கொண்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்கின்றன. மும்பை நகரிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில், தானே...

பஸ் கட்டணம் உயருமா? திங்களன்று பேச்சுவார்த்தை..!

பஸ் கட்டண உயர்வு குறித்த தீர்மானமிக்க பேச்சுவார்த்தை ஒன்று எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறும் என தனியார் போக்குவரத்து அமைச்சர் சிபி.ரத்நாயக்க தெரிவித்தார். இலங்கை போக்குவரத்து சபை, மாகாண போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் பஸ் சங்க...

வட இந்திய வெள்ளம்: ஐநூறுக்கும் மேற்ப்பட்டோர் உயிரிழப்பு..!

வட இந்தியாவில் கடுமையான பருவ மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கிலும் நிலச்சரிவிலும் சிக்கி ஐநூறுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய அரசாங்கம் கூறுகிறது. பாலங்களும் சாலைகளும் வீடுகளும் அடித்துச் செல்லப்பட்டிருப்பதை அடுத்து ஐம்பதாயிரம் பேர் வரையிலானோர் சிக்குண்டுள்ளனர். உத்தராகண்ட்...