வேறு பெயர்களில் பயணம் : சொந்த பிள்ளைகளை கைவிட்டு சகோதரியின் கணவனுடன் த.ப்பிய பெண்!!

கேரளாவில்…

கேரளாவில் சொ.ந்த பி.ள்ளைகளை கை.விட்டு சகோதரியின் க.ணவருடன் த.ப்.பி.ய பெ.ண்ணை பொ.லிசார் கை.து செய்.துள்ளனர். கொ.ல்லம் மா.வட்டத்தை சே.ர்ந்த ஐஸ்வர்யா(28) ம.ற்றும் இ.வரது ச.கோதரியின் க.ணவன் 36 வ.யதான சஞ்சித் ஆ.கியோரையே த.மிழகத்தின் ம.துரையில் வை.த்து ர.யில்வே பொ.லிசார் கை.து செ.ய்துள்ளனர்.

சஞ்சித் என்பவருக்கு இரண்டு பிள்ளைகளும் ஐஸ்வரியாவுக்கு ஒரு குழந்தையும் உள்ளனர். இருவரும் தங்கள் பிள்ளைகளை கைவிட்டு தப்பிய வழக்கிலேயே தற்போது சி.க்கியுள்ளனர்.

ஐஸ்வரியா மாயமானதை அடுத்து கணவர் பொலிசாரை நாடிய நிலையில், சஞ்சித்தும் மாயமானதாக உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில், இதை ஒரே வழக்காக விசாரித்த பொலிசார், இவர்கள் இருவரும் வேறு பெயர்களில் தமிழகத்தின் மதுரைக்கு பயணமாவது கண்டறிந்தனர்.

இதனையடுத்து, ரயில்வே பொலிசாரின் உதவியுடன், அவர்களை கைது செய்துள்ளனர். தற்போது கொல்லம் தனிப்படை பொலிசார் மதுரைக்கு சென்று இருவரையும் கொல்லத்திற்கு அழைத்து வந்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

வவுனியாவில் கொரோனா தொற்றால் ஒருவர் மரணம்!!

கொரோனா…

வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக முதியவர் ஒருவர் இன்று (27.06) மரணமடைந்துள்ளார்.

வவுனியா, தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த 85 வயது முதியவர் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து வவுனியா வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் குறித்த முதியவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

வவுனியா சகாயமாதாபுரம் 22 நாட்களின் பின் விடுவிப்பு!!

சகாயமாதாபுரம்..

கொரோனா பரவல் தீவிரமடைந்ததையடுத்து முடக்கப்பட்டிருந்த வவுனியா சகாயமாதாபுரம் கிராமம் விடுவிக்கப்பட்டது. வவுனியா, சகாயமாதாபுரம் கிராமத்தில் அதிக கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில்,

குறித்த கிராமத்தில் இருந்து வெளியேறவும், கிராமத்திற்குள் நுழையவும் தடைவிதிக்கப்பட்டு இராணுவம் மற்றும் பொலிசாரின் பாதுகாப்பின் கீழ் சகாயமாதாபுரம் கிராமம் இம் மாதம் 5 ஆம் திகதி கொண்டு வரப்பட்டு முடக்கப்பட்டிருந்தது.

குறித்த கிராமத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் முகமாக பயணத்தடை விதிக்கப்பட்டு முழுமையாக முடக்கப்பட்டிருந்த குறித்த கிராமத்தின் அச்சநிலை குறைவடைந்த பின்னர் 22 நாட்களின் பின் குறித்த கிராமம் விடுவிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியது.

இலங்கையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!!

அரிசி…

இலங்கையில் இன்னும் ஒரு மாதத்திற்கு மாத்திரமே நுகர்வோருக்கு அரிசி கொள்வனவு செய்ய சந்தர்ப்பம் கிடைக்கும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய நாட்டில் எதிர்வரும் நாட்களில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நெல் ஆலை உரிமையாளர்கள் வழங்கிய தரவுகளுக்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதனால் உடனடியாக ஒரு லட்சம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்தால் மாத்திரமே தட்டுப்பாடினை தவிர்க்க முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

வாகன இறக்குமதிக்கு இரண்டு வருடங்களுக்கு தடை : அரசாங்கம் அறிவிப்பு!!!

வாகன இறக்குமதி..

இரண்டு வருடங்களுக்கு வாகன இறக்குமதியை தடை செய்யும் வகையில் எட்டப்பட்ட தீர்மானத்தை, அவ்வாறே நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார். பொல்கஹவெலவில் உள்ள மைக்ரோ வாகன உற்பத்தி தொழிற்சாலையின் ஆய்வு சுற்றுப்பயணத்தின் பின்னர் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“உள்நாட்டில் வாகனங்களை உற்பத்தி செய்ய பல நிறுவனங்களை மீண்டும் ஊக்குவிக்க தற்போதைய அரசாங்கத்தால் முடிந்தது என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இரண்டு வருடங்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம்.

அது தொடர்ந்து அமுலில் இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். உள்நாட்டில் வாகன உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் தற்போதைய அரசாங்கம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

வாகனங்களின் சில உதிரிபாகங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவிக்கின்றார். எவ்வாறாயினும், சில உதிரிபாகங்கள் மாத்திரமே வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

இலங்கையில் மீண்டும் பொது முடக்கம் வரலாம் : டெல்டாவின் திரிபு தொடர்பில் எச்சரிக்கை!!

டெல்டாவின் திரிபு..

உலக நாடுகளில் வேகமாக பரவிக் கொண்டுள்ள டெல்டா வைரஸ் தொற்றானது தற்போது திரிபுபட்ட வைரஸாக மாற்றமடைந்து பரவுகின்ற காரணத்தினால்,

அது குறித்து இலங்கையிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன் நாட்டின் பயணத்தடை நீக்கப்பட்டுள்ளமையானது ஆரோக்கியமானதல்ல எனவும் எச்சரித்துள்ளனர்.

இப்போது பரவும் டெல்டா வைரஸ் நாட்டிற்குள் வேகமாக பரவ ஆரம்பித்தால் மீண்டும் பொது முடக்கத்துக்கு செல்ல வேண்டி வரும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

-தமிழ்வின்-

கொரோனா தொற்றால் அம்மா, அப்பா, மகன் மரணம்!!

கொரோனா..

பேராதனை, முருதலாவ பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அந்த பகுதி சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய சிறிபால ராஜபக்ஷ, 70 வயதுடைய அவரது மனைவி ஷீலா ராஜபக்ஷ மற்றும் அவர்களின் மகனான 38 வயதுடைய தம்மிக்க ராஜபக்ஷ என்ற மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

தந்தை 3ஆம் திகதியும், தாய் 14ஆம் திகதி மகன் கடந்த 23ஆம் திகதியும் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார். உயிரிழந்த தம்மிகவின் இறுதி அஞ்சலி நடவடிக்கை நேற்று முன்தினம் கண்டியில் கொவிட் கட்டுப்பாடுகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொற்றாளர் அதிகரித்தால் பயணத்தடை அல்லது முடக்கம் : கடும் எச்சரிக்கை!!

பயணத்தடை..

நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதையடுத்து எதிர்வரும் வாரங்களில் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏதாவது ஒரு முறையில் தினசரி தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்தால் மீண்டும் பயணத்தடையை அமுல்படுத்த நேரிடுமெனவும் இராணுவ தளபதி எச்சரித்துள்ளார்.

இதே முறையில் தொற்றாளர் எண்ணிக்கையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு மக்கள் உதவ வேண்டும். தொற்றாளர் அதிகரித்தால் பயணத்தடை அல்லது முடக்க நிலையை அமுல்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

-தமிழ்வின்-

எந்த நேரத்திலும் மீண்டும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படலாம் : இராணுவத் தளபதி எச்சரிக்கை!!

பயணக் கட்டுப்பாடு..

நாட்டில் எந்த நேரத்திலும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படலாம் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா எச்சரித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படாது என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் உண்மைக்குப் புறம்பானது அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை மற்றும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பயணக்கட்டுப்பாடு விதிப்பது தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும்.

இனிவரும் நாட்களில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட மாட்டாது என பரவும் செய்திகளில் உண்மை இல்லை என இராணுவதளபதி மேலும் தெரிவித்துள்ளார். சுமார் ஒரு மாத காலம் நாடு தழுவிய ரீதியில் அமுலிருந்து பயணத்தடை நேற்று அதிகாலை நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

சகோதரிக்கு பா.லி.ய.ல் தொ.ல்.லை கொடுத்தவனை பழிவாங்க பெண் வேடமிட்ட சகோதரன்!!

இந்தியாவில்..

மத்தியபிரதேச மாநிலம் நாயா என்னும் கிராமத்தில் சோனு என்னும் இளைஞர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அவருக்குச் சகோதரி ஒருவரும் உள்ளார்.

இந்நிலையில் அவரது சகோதரி ஒருமுறை வெளியே சென்று வரும்போது, வேறு ஒரு நபர் அவருக்கு பா.லி.ய.ல் தொ.ல்.லை கொ.டு.த்துள்ளார். இதனை அந்த பெ.ண் தனது சகோதரன் சோனுவிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் பா.லி.ய.ல் தொ.ல்.லை கொடுத்தவருக்குத் தகுந்த பாடம் கற்றுக்கொடுக்க நினைத்த சோனு பெ.ண் போல வே.ட.மிட்டுச் சென்று அந்த நபரிடம் தன்னுடைய பெயர் சோனியா எனக்கூறி அறிமுகமாகியுள்ளார்.

மேலும் அந்த நபருடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் சோனு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் இருவரும் பக்கத்தில் இருக்கும் கிராமத்திற்குச் சென்று தனிமையான இடத்தில் ம.து அ.ரு.ந்.தியுள்ளனர்.

இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் தி.ருடர்கள் என நினைத்து ச.ந்தேகத்தின் அடிப்படையில் அவர்களை சுற்றி வ.ளைத்து பி.டி.க்க முயன்றனர். ஆனால் அந்த நபர் அங்கு இருந்து த.ப்.பி ஓடிவிட்டார்.

இதனால் கிராம மக்கள் பெ.ண் வே.ட.மிட்டிருந்த சோனுவை மட்டும் பி.டி.த்து போ.லீ.சாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் சோனுவிடம் த.ப்பிச் சென்ற இ.ளை.ஞர் குறித்து வி.சா.ரித்துள்ளனர்.

அப்போது சோனு, தான் பெ.ண் இல்லை எனவும், தனது சகோதரிக்கு பா.லி.ய.ல் தொ.ல்.லை கொ.டுத்தவனுக்குப் பாடம் புகட்டவே பெ.ண் வே.டமிட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய திட்டம் நிறைவேறுவதற்கு மு.ன்னமே போ.லீசாரிடம் சி.க்.கி.க்.கொண்டதையும் கூறியுள்ளார்.

இதனால் போ.லீசார் த.ப்பிச் சென்ற இ.ளைஞரை சுமார் இரண்டு மணி நேரத் தே.டு.தல் வே.ட்.டைக்குப் பிறகு அப்பகுதியிலிருந்த புதர் பகுதியில் பி.டி.த்தனர். பின்னர் சோனு அளித்த புகாரின் அடிப்படையில் அவரை கை.து செ.ய்.தனர்.

தனது சகோதரிக்கு பா.லி.ய.ல் தொ.ல்.லை கொ.டுத்தவனைப் ப.ழி வா.ங்குவதற்காகச் சகோதரன் பெ.ண் வே.டமிட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆ.ச்.ச.ரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப் பெண் : அம்பலமான மாப்பிள்ளையின் பித்தலாட்டம்!!

இந்தியாவில்…

இந்தியாவில், மாப்பிள்ளை கருப்பு கண்ணாடி போட்ட படியே இருந்ததால், சந்தேகமடைந்த மணப் பெண் அவரை வாசிக்க சொன்ன போது, உண்மை தெரியவந்து திருமணத்தை நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் Auraiya-வில் வசிக்கும் Arjun Singh என்ற நபர் தன்னுடைய மகள் அர்ச்சனாவிற்கு, சிவம் என்ற நபருடம் திருமணம் நிச்சயம் செய்திருந்தார்.

அதன் படி கடந்த 20-ஆம் திகதி திருமண நாள் அன்று, மணமகள் மற்றும் மணமகன் இருவரும் ஊர்வலம் சென்று திரும்பிய பின்பு, பெண்ணின் குடும்பத்தினருக்கும், மாப்பிள்ளை மீது சந்தேகம் வந்துள்ளது.

ஏனெனில், அவர் கருப்பு கண்ணாடி அணிந்த படியே இருந்தார், அவர் அந்த கண்ணாடியை கழட்டவேயில்லை. இதனால் அவர் கண் குறைபாடு ஏதேனும் இருக்குமோ? அதன் காரணமாக அவர் கண்ணாடியை கழட்டவில்லையோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதனால், அந்த சந்தேகத்தை தீர்க்க, மணப்பெண் வீட்டில் இருந்த செய்தித்தாளை, கண்ணாடி இல்லாமல் படிக்கும் படி கூறியுள்ளார். அப்போது அவர் வாசிக்க தவறியதால், மணப்பெண் மற்றும் குடும்பத்தினர் அ.திச்சியடைந்தனர்.

உடனடியாக மணப்பெண் திருமணத்தை நிறுத்தினார். அதன் பின், மாப்பிள்ளை வீட்டார் தங்களிடம் உண்மையை கூறாமல் ஏமாற்றிவிட்டதாக கூறி, மணப் பெண் வீட்டார் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

அதில், கொடுக்கப்பட்ட வரதட்சணை அனைத்தையும் திருப்பித் தரும்படியும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், சிவாமின் குடும்பத்தினர் தற்போது வரை அதை இன்னும் திருப்பித் தராத காரணத்தினால், அவருக்கு எதிராக எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, வி.சாரணை நடைபெற்று வருகிறது.

ம.னைவியை கொ.லை செ.ய்.தா.ன் : பி.ணையில் வெ.ளிவந்தவன் இ.ன்னொரு தி.ருமணம் செ.ய்தான் : ஒ.ரு த.ந்தையின் க.ண்ணீர்!!

கேரளா..

கேரளாவின் கொ.ல்லம் மா.வட்டத்தில் ம.னைவியை கொ.லை செ.ய்.த வ.ழக்கில் கை.தான ந.ப.ர் பி.ன்னர் இ.ன்னொரு தி.ருமணம் செ.ய்து கொ.ண்ட ச.ம்பவத்தில் பெ.ண்ணின் த.ந்தை உ.ருக்கமாக பே.சியுள்ளார்.

கொல்லம் மாவட்டத்தில் கடந்த 2019ல் கிருதி என்ற இளம் தாயார் படுக்கையறையில் மர்மமான முறையில் இ.ற.ந்.து கி.டந்தார். விசாரணையில் கணவன் வைஷாக் என்பவரே, ம.னைவியை த.லையணையால் மு.க.த்.தி.ல் அ.ழு.த்.தி கொ.லை செ.ய்.த.து வெ.ளிச்சத்துக்கு வந்தது.

தொடர்ந்து வைஷாக் கைது செய்யப்பட்டு வி.சாரணை கைதியாக சி.றையில் இருந்தார். ஆனால் 42 நாட்களாக கு.ற்.றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்ற காரணத்தால் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியது.

இந்த விவகாரம் அப்போது கொல்லம் மாவட்டத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், பொலிசார் வேண்டும் என்றே கு.ற்.றவாளிக்கு உதவியதாக கு.ற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில், கொ.ல்.ல.ப்.ப.ட்.ட இளம் தாயார் கிருதியின் தந்தை தற்போது கேரளாவை உ.லுக்கும் ம.ர்.ம கொ.லை.க.ள் தொ.டர்பில் உருக்கமாக பேசியுள்ளார்.

வைஷாக் வெறும் 42 நாட்கள் மட்டுமே சி.றையில் இருந்ததாகவும், செல்வாக்கு மற்றும் பணம் இருப்பதால் தற்போது அவர் பிணையில் வெளிவந்துள்ளதாகவும் கூறும் அவர்,

சி.றையில் இருந்து வெளியான இரண்டு வாரத்திலேயே பெண் தேடும் நடவடிக்கையில் வைஷாக் மற்றும் அவரது தந்தை இறங்கியதாக இவர் கு.ற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஆனால், குறித்த பெண்ணின் வீட்டார் தம்மை தொடர்பு கொண்டு விசாரித்ததால் அந்த திருமணம் முடங்கியதாகவும், அதற்கு பின்னர் வைஷாக் தற்போது இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமது மகளை பணம் கேட்டு கொ.டு.மை.ப்.ப.டு.த்.தி.ய.த.ன் வி.ளைவாக தாம் இப்போது 80 லட்சம் ரூபாய் கடனில் தத்தளிப்பதாக கூறும் அவர், ஆனால் வைஷாக் இன்னொரு திருமணம் செய்து கொண்டு மீண்டும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துகிறார் என்றால், தனது ம.களின் கொ.லை.க்.கு நீதி கிடைப்பது எப்போது என அவர் கண் க.லங்கியுள்ளார்

காதலில் விழுந்த 16 வயது சிறுமி : காதலன் சூழ்ச்சியை உணராமல் உ.யிரைவிட்ட பரிதாபம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் காதலனின் ஏமாற்று வேலையை உணராமல் வி.ஷ.ம் கு.டித்த இலங்கை தமிழ் சி.றுமி பரிதாபமாக உ.யிரிழந்துள்ளார். தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வாணியாறு அணை இலங்கை தமிழர்கள் முகாமில் 250-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முகாமில் வசித்து வந்த 16 வயது சி.றுமி, முள்ளிக்காடு பகுதியை சேர்ந்த குமார் (22) என்பவரை காதலித்து வந்துள்ளார். காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வந்ததால், கடந்த 13ஆம் திகதி சி.றுமி வி.ஷ.ம் கு.டித்து த.ற்.கொ.லை.க்.கு மு.ய.ன்றார்.

ம.ய.ங்.கி கி.ட.ந்.த சி.று.மி.யை, உறவினர்கள் மீ.ட்.டு தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு சிகிச்சைப் பலனின்றி உ.யிரிழந்தார்.

இதனிடையே, சி.று.மி உ.யி.ரிழப்புக்கு அவரது காதலன் குமார் தான் காரணம் என்றும், அவரை கை.து செய்யக் கோரியும் சி.றுமியின் உறவினர்கள் சமீபத்தில் போ.ராட்டத்தில் ஈ.டுபட்டனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், 16 வயது சி.றுமியை குமார் காதலித்து ஏமாற்றியுள்ளார். காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிந்ததால், இருவரும் த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ள்.ள மு.டிவெடித்து, குமார் பூ.ச்.சி ம.ருந்து வாங்கி வந்துள்ளார்.

முதலில் சி.று.மி வி.ஷத்தை கு.டி.த்.த நிலையில், குமார் அதனை குடிக்காமல் ஏ.மாற்றி உள்ளார். இதனால் சி.றுமியை ஏ.மாற்றிய குமார் மீது பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் பு.கா.ர் செய்தும், பொலிசார் நடவடிக்கை எடுக்க வில்லை என கு.ற்.ற.ம்சாட்டினர்.

தொடர்ந்து, தகவல் அறிந்த பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் பார்வதி மற்றும் பொலிசார், மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது, சி.று.மி இ.ற.ப்.பு.க்.கு காரணமான இளைஞரை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில், அவர்கள் கலைந்து சென்றார்கள்.

இராணுவ ரக்வண்டி விபத்து : இருவர் பலி, நால்வர் படுகாயம்!!

விபத்து..

மட்டக்களப்பு – செங்கலடி கறுப்பு பாலத்தில் இராணுவ வாகனம் வீதியை விட்டுவிலகி பாலத்திற்கு அருகில் உள்ள நீரோடையில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 இராணுவத்தினர் உயிரிழந்ததுடன், 4 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (24) இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கரடியனாறில் இருந்து செங்கலடி பகுதியை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த இராணுவ வாகனம் கறுப்பு பாலம் அருகில் கட்டுப்பாட்டை மீறி பாலத்திற்குக் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் சென்ற இரு இராணுவத்தினர் உயிரிழந்ததுடன், 4 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதேவேளை நீரோடையிலிருந்து ரக்வண்டியை கரைசேர்க்கும் நடவடிக்கையில் கனரக வாகனம் கொண்டு இராணுவத்தினர் ஈடுபட்டு வருவதுடன், ஒருவரின் சடலத்தைத் தேடி வருவதாகத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வி.சாரணைகளை ஏறாவூர் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கோவிட் தொற்று உச்சமடைந்தால் கடும் பயணக் கட்டுப்பாடு : சுகாதார அமைச்சு எச்சரிக்கை!!

பயணக் கட்டுப்பாடு..

கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படுமாயின், பயணக் கட்டுப்பாடு கடுமையாக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன ஊடகங்களிடம் தெரிவித்தார்.

எனவே, பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், அவசியமின்றி வீடுகளிலிருந்து வெளியேற வேண்டாம் எனவும், இயலுமானவரை வீடுகளிலிருந்து பணிபுரியுமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் கோவிட் மரணங்களின் எண்ணிக்கை குறைவடையக்கூடும் எனவும் அவர் எதிர்வு கூறினார்.

-தமிழ்வின்-

வார இறுதியில் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படுமா? வெளியாகியுள்ள அறிவிப்பு!!

பயணக்கட்டுப்பாடு..

இந்த வார இறுதி நாட்களில் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் தடுப்பு செயலணி இன்றைய தினம் கூடியபோது குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம், மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.