உழைப்பிலும் கடமை உணர்விலும் முன்மாதிரியான அன்னை மகேஸ்வரி சிவசிதம்பரம் அவர்கள்!!(ஓர் அஞ்சலி குறிப்பு)

ஈழத்திருநாட்டின் சிரசாகத் திகழும் புகழ்மிகு யாழ் நகர் தன்னில் கண்போல் அமைந்து, அழகு தரும் தென்னந்தோப்பும், வயல்களும் தோட்டங்களும் மற்றும் அனைத்து வளங்களும் கொண்ட மாதகல் பதிதன்னில் இல்லறத்தின் இலக்கணமாய் நல்லறம் நடத்திய சங்கரப்பிள்ளை – சிவபாதம் தம்பதியினருக்கு மூத்த புதல்வியாக அமரர் மங்கையர்க்கரசி அவர்களுக்குப் பின்னர் இரண்டாவது அருந்தவப் புதல்வியாக மகேஸ்வரி அவர்கள் 14.04.1933 ஆம் திகதி பிறந்தார். அவர் தனது கல்வியை மாதகல் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கற்றார்.

புன்சிரிப்புடன் கூடிய இனிய சுபாவமும், இறையன்பும், இனசனத்தார் உறவு பேணும் பண்பும் சிறுவயது முதலே அவரிடம் குடிகொண்டிருந்தன. பெற்றோர் இவரை, அராலியில் வாழ்ந்த தம்பாப்பிள்ளை – வள்ளியம்மை தம்பதியரின் புதல்வரான சிவசிதம்பரம் அவர்களுக்கு 1952 ஆம் ஆண்டு கரம் பிடித்துக் கொடுத்தனர்.

அன்பும் அறனும் உடைய இல்வாழ்வைச் சிறப்புடன் நடாத்திய இக்குடும்பம் வவுனியா இறம்பைக்குளத்தில் குடியேறி பின்னர் வெளிக்குளத்தில் வசித்து வந்தது. சிவசிதம்பரம் -மகேஸ்வரி தம்பதியினர் பெற்றோரைப் போற்றி வாழும் நற்குணங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்தவர்களாக பெண்பிள்ளைகள் எண்மரை ஈன்று சிறப்புப் பெற்றனர்.

வவுனியா சமளங்குளம் கிராமத்தில் 1958 ஆம் ஆண்டு அரசினால் வழங்கப்பட்ட காணியில் குடியேறி நீர்ப்பாசன நெற்காணியைப் பயிரிட்டு, பசுக்களை வளர்த்து பராமரித்து வந்த இக் குடும்பம் ஊரிற் சிறந்த விவசாய குடும்பமாக மிளிர்ந்தது. மகேஸ்வரி அவர்கள் போற்றி வளர்த்த பசுக்கள் மேய்ச்சல் நிலம்தேடி அயற் கிராமங்களுக்குச் செல்லும்போது, சகமொழி பேசும் அப்பகுதி மக்கள்; ‘பெரிய பட்டி அம்மாவின் பசுக்கள்’ எனக்கூறி, அவர்களே நேரில் வந்து அவருக்கு விபரம் தெரிவிப்பார்கள். அந்த அளவுக்குப் பசுக்களால் அவர் மேன்மை அடைந்திருந்தார்.

மகேஸ்வரி அன்னையவர்கள் இளவயதிலேயே – 1969 ஆம் ஆண்டு கணவரை இழந்து விதவையான பின் மனம் தளரவில்லை. விவசாயத்தில் சொந்த உழைப்பை மட்டும் நம்பி குடும்பச் சுமையை இன்முகத்துடன் ஏற்று வாழ்ந்து வந்தார். வாகன வசதிகள் இல்லாத அக்காலத்தில் தொலை தூரம் நடந்து சென்று குடும்பத்திற்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் வாங்கி தலையில் சுமந்து வந்து பிள்ளைகளை வளர்த்தார்.

ஓர் இல்லத்தரசியாக, அன்னையாக, மாமியாக, தங்கையாக, மைத்துனியாக, பாட்டியாக, சிறந்த அயலவராக பல்வேறு உறவுமுறைகளைக் கொண்டிருந்த அன்னையவர்கள் தூய வெள்ளை ஆடையும் சிரிப்பு மாறாத முகமும், திருநீறு நிறைந்த நெற்றியும் தாய்மையை வெளிப்படுத்துகின்ற அன்புடன் காண்போரை நலம் விசாரிக்கும் பாங்கும் கொண்டவராக விளங்கினார். இவரை உறவாலும் நட்பாலும் தெரியாதவர்கள் இல்லையென்றே கூறலாம்.

தனது 36 ஆம் வயதில் வெள்ளை சாறி உடுத்து அம்மனின் திருவுருவாகத் திகழ்ந்த அவர். தன்னைப்போல் தன் பிள்ளைகள் இளமையில் வறுமைப்படவும் பொறுப்புக்களுக்கு அஞ்சி ஒடுங்கவும் கூடாதென அவர்களைப் புடம்போட்டு வளர்த்தார். அவர் வாழ்ந்த சமளங்குளம் கிராமத்தினதும் அதனைச் சூழ்ந்த பிரதேசத்தினதும் முதலாவது பட்டதாரியாகத் தனது ஒரு மகளை உருவாக்கி சாதனை படைத்தார்.

ஆசிரிய சேவையில் புகுந்த அந்தப் புதல்வி நாகேஸ்வரி, வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் அதிபராகப் பொறுப்பேற்று நடத்தியும், பின்னர் வவுனியா தெற்குக் கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றியும் வவுனியா பிரதேசத்தின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் சேவையாற்றியதன் மூலம், ஈன்ற பொழுதிலும் பெரிதும் உவந்து பெருமை பெற்ற உத்தம அன்னையானார். அவரது மற்றுமொரு புதல்வி சர்வேஸ்வரி உளவியல்துறை ஆசிரியராகப் பணியாற்றி அக்குடும்பத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

தன் மக்களுக்குக் கல்வியூட்டி அவையவத்து முன்நிற்கச் செய்து சான்றோர்களாக்கி, சமுதாயத்தில் பவனிவரச் செய்த அந்தத் தாயின் திறமையால் அவரது வழிவந்த பேரப் பிள்ளைகளும் சிறப்பான கல்வி பயின்று மருத்துவம், வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சிறப்பாகப் பணியாற்றுகின்றனர். அந்த வகையில் சமூகத்தில் சிறப்பாகச் செழித்துள்ள ஆலமரம் போன்ற அக் குடும்பத்தலைவியாகிய அந்த அன்னையின் கடின உழைப்பு, கடமையுணர்வு என்பன பலருக்கும் முன்மாதிரியானவை. போற்றுதலுக்குரியவை.

ஆரம்பக் கல்வியை மட்டுமே கற்றிருந்தாலும் இதிகாசப் புராணங்களையும் பஞ்சதந்திரக் கதைகளையும் ஆர்வமுடன் கற்றுத் தேறியிருந்த அவர் தேவையான சந்தர்ப்பங்களில் உபகதைகளின் மூலம் நல்லறிவைத் தன் பிள்ளைகளுக்குப் போதித்தார். தோத்திரப்பாடல்களை வரிசைக்கிரமமாக பாடும் ஆற்றல் கொண்டிருந்த அவர் தனது குலதெய்வமாகிய நுணசை முருகனையும், வீரபத்திரரையும் அனுதினமும் பாடிப் பரவி ஆண்டுதோறும் தன்னால் முடிந்த காணிக்கையை செலுத்தி வந்தார்.

கந்தசஸ்டி கவசம் அவரிடம் எந்தச் சந்தர்ப்பத்திலும் கைவசமிருக்கும். இடர் வருங்கால் அவர் ஓதுவது கந்தசஸ்டி கவசமும் சிவகாமி பத்தையும்தான்.

தான் வாழ்ந்த சமளங்குளம் கிராமத்தில் கல்லுமலைப் பிள்ளையார் ஆலயத்தை அமைப்பதற்கு ஊர் முக்கியஸ்தர்களுடன் இணைந்து அத்திவாரமிட்டதுடன், ஆலய வளர்ச்சிக்கும் ஆன்மீக வளர்ச்சிக்குமாக அரும் பாடுபட்டார். வெள்ளிதோறும் கல்லுமலைப் பிள்ளையாரையும் தன் வீட்டருகில் உள்ள முத்துமாரி அம்மனையும் தரிசிக்கத் தவறுவதில்லை.

பலரும் இவரைப் பின்பற்றி வாழத்தக்க வகையில் சமூகப்பற்றும், பிறருக்கு உதவும் பாங்கும், ஆன்மீகத்தில் மிகுந்த விருப்பும் கொண்டவராகத் திகழ்ந்தார். ‘வலது கை கொடுப்பதை இடது கை அறியாத’ வகையில் இவர் பலருக்கு ஆற்றிய உதவிகளை இவர் இருந்தபோதும், மறைந்த போதும் உணராதவர்களே இல்லை எனலாம்.

அன்பையும் அரவணைப்பையும் கண்டு பூரிப்புடன் வாழ்ந்த எமது அன்னை முதுமை காரணமாகத் தளர்ந்தார். இறை நம்பிக்கையில் தன்னைப் பூரணமாக அர்ப்பணித்ததால், இவரை எதுவித நோயும் தீண்டவில்லை. இறை சிந்தனை நீங்காதவராக தனது 89 ஆவது வயதில் 14.11.2020 சனிக்கிழமையன்று பூதவுடலை நீத்து புகழுடம்பைப் பெற்று இறைபதம் எய்தினார்.

உத்தம தாயாக வாழ்ந்த எமது அன்னை மகேஸ்வரி அவர்கள் ஆத்மா சாந்திபெற்று அன்னாரின் குலதெய்வத்தின் பாதத்தில் ‘இறவாமையும் இனிப்பிறவாமையும் கொண்ட வரமெனும் முக்தியாகிய பூரண நித்திய ஆனந்தத்தில்’ திகழ எல்லாம் வல்ல இறைவனின் பாத கமலங்களை வேண்டி நிற்போமாக.

– சமளங்குளம் கிராம மக்கள் சார்பாக சத்தியபாமா லெட்சுமணன் –

முகக் கவசம் குறித்து இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

முகக் கவசம் குறித்து..

இலங்கையில் பயன்படுத்தும் முகக்கவசம் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முகக் கவசம் பயன்படுத்தும் போது மஞ்சள் நிறத்திலான சின்னத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள முகக் கவசத்தை பயன்படுத்த வேண்டாம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த முகக் கவசத்தை தடை செய்யுமாறு தான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக பேராசிரியர் வைத்தியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார்.

N95 எனப்படும் அந்த முகக் கவசத்தில் பாதுகாப்பு குறைவாகவே உள்ளது. சர்ஜிக்கல் முகக் கவசம் பாதுகாப்பானதாகும். அதிக விலையுடனான N95 பயன்படுத்த வேண்டாம்.

வசதி குறைந்தவர்கள் சாதாரண துணியை பயன்படுத்தி முகக் கவசத்தை தயாரித்துக் கொள்ள வேண்டும். ஆனால் இரண்டு துணிகள் வைத்து தயாரிக்க வேண்டும்.

N95 முகக் கவசத்தில் உள்ள ஒரு சிறிய ஓட்டையில் கிருமி தொற்று மூக்கினுள் செல்ல வாய்ப்புகள் உள்ளது. இதனால் அதனை தடை செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள எச்சரிக்கை!!

மஹிந்த ராஜபக்ஷ..

மக்களிடமிருந்து சுரண்டும் செயற்பாடுகளை வர்த்தகர்கள் முழுமையாக நிறுத்த வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதற்கமைய நுகர்வோர் அதிகார சபையினால் தீவிர சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நுகர்வோர் அதிகார சபையின் உத்தரவினை கருத்திற்கொள்ளாமல் வர்த்தகர்கள் தாங்கள் நினைப்பதனை போன்று பொருட்களை விற்பனை செய்தவாக முறைப்பாடு கிடைத்துள்ளமை அடுத்து பிரதமரின் இதனை தெரிவித்துள்ளார்.

எந்தவொரு பற்றாக்குறையும் இன்றி மக்களுக்கு மிகவும் சலுகை விலையில் உணவுப் பொருட்களை வழங்குமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அறவுறுத்தியிருந்தார். அதற்கமைய சதொச நிறுவனம் செயற்பட்டு வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

சட்டவிரோத இலாபம் ஈட்டாமல் மக்களுக்கு சலுகை விலையில் உணவுப் பொருட்களை விற்க வேண்டும் என்றும், அதிக விலைக்கு பொருட்களை விற்பவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யாழில் பாடசாலை மாணவிகள் இருவருக்கு கொரோனா தொற்று : 80 மாணவர்கள் தனிமைப்படுத்தல்!!

கொரோனா தொற்று..

மருதனார்மடம் கொரோனா பரவலில் தொற்றாளர்களாக அ டையாளம் கா ணப்பட்டவர்களில் பாடசாலை மா ணவிகளும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து தெல்லிப்பழையை சேர்ந்த பிரபல பாடசாலையின் மா விவகள் 80 பேரை த னிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மா ணவிகள் இருவருக்கு நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட ப ரிசோ தனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இப் பாடசாலையில் தரம் ஏழு மற்றும் தரம் ஒன்பது ஆகிய வகுப்புகளில் கல்வி பயிலும் ச கோதரிகளான இருவருக்கே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த மா ணவிகள் இருவரும், மருதனார்மடம் தொ ற்றாளருடன் தொடர்பைப் பேணியவர்களுள் இரண்டாவது நாள் இ னங்கா ணப்பட்ட கீரிமலை கூவில் பகுதியைச் சேர்ந்த தொ ற்றாளரின் பிள்ளைகள் என அ டையாளம் காணப்பட்டுள்ளனர்.

மா ணவிகள் இருவரும் கடந்த வாரம் பா டசாலைக்குச் சென்று வந்துள்ளதுடன், ஒன்பதாம் தரத்தில் கல்வி கற்கும் மா ணவி கடந்த சனிக்கிழமையும் பாடசாலையில் இடம்பெற்ற பரீட்சை ஒன்றில் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில் குறித்த மா ணவிகளின் வகுப்பைச் சேர்ந்த மா ணவிகள் மற்றும் கற்பித்த ஆ சிரியர்கள் என 80இற்கும் மேற்பட்டவர்களை த னிமைப்ப டுத்த சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு : குறைந்த வட்டி வீதத்தில் அனைவருக்கும் கடன்!!

அனைவருக்கும் கடன்..

எதிர்வரும் நத்தார் மற்றும் புதுவருட பண்டிகை காலத்தில் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக அனைத்து குடும்பத்திற்கும் நிவாரண வட்டி வீதத்தில் கடன் வசதியை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பண்டிகை காலத்திற்காக அரச மற்றும் தனியார் பிரிவின் ஊழியர்களுக்கு விசேட கடன் யோசனை முறை, நத்தார் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அனைத்து குடும்பத்திற்கும் இலகு வட்டிக்கு கடன் வசதி வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

3 கடன் வழங்கல் பிரிவுகளின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாதாந்தம் 50ஆயிரத்திற்கு அதிகமான சம்பளம் பெறுபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற முடியும். மாத சம்பளம் 25ஆயிரம் முதல் 50ஆயிரம் ரூபாவுக்கு இடைப்பட்ட சம்பளம் பெறுபவர்களுக்கு 25ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாத வருமானம் 25000 இற்கும் குறைவான சம்பளம் பெறுபவர்களுக்கு 10ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்படவுள்ளது. இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிபப்பு வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி மற்றும் சமூர்தி வங்கிகளில் இந்த கடன் பணத்தை பெறலாம்.

இந்த நிதி உதவியை பெற விரும்பும் அரச மற்றும் தனியார் பிரிவு ஊழியர்கள் தங்கள் பிரதானிகளுக்கு அது தொடர்பில் தெரியப்படுத்த வேண்டும்.

நிறுவனத்தின் பிரதானி தங்கள் ஊழியர்களுக்கு உறுதி வழங்கினால் பணி இடத்திற்கு அருகில் உள்ள அரச வங்கிகளில் தகவல்களை வழங்கினால் அந்த வங்கி கிளையினால் ஊழியர்களின் வங்கி கணக்கிற்கு தாமதமின்றி பணம் வழங்கப்படும்.

கடன் பணத்தை 10 மாதங்களுக்குள் செலுத்தி நிறைவு செய்ய வேண்டும். அதற்கு வட்டி அறவிடப்படும். நூற்றுக்கு 0.625 என்ற வட்டி வீதத்தில் இந்த கடன் பெறலாம். 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதிக்குள் ஊழியர்களின் கடன் பணம் அறவிடப்படும்.

அரச ஓய்வு பெற்றவர்கள் மற்றும் சமூர்த்தி பயனாளர்கள் இந்த கடன் பணத்தை ஓய்வூதிய திணைக்களம் மற்றும் சமூர்த்தி வங்கிகளில் வழங்கப்படுகின்றது.

முச்சக்கர வண்டி, பாடசாலை வேன் மற்றும் பஸ் வண்டி உரிமையாளர்கள் மற்றும் தனியார் பஸ் ஊழியர்கள் தங்கள் கணக்கு வைத்திருக்கும் அரச வங்கிகளில் அடையாள அட்டைகளை சமர்ப்பித்து கடன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் எல்.பி.எல் போட்டித் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற யாழ்ப்பாண அணி!!

சம்பியன் பட்டம் வென்ற யாழ்ப்பாண அணி..

முதல் தடவையாக இலங்கையில் நடைபெற்ற எல்.பி.எல் எனப்படும் லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் எனும் யாழ்ப்பாண அணி சாம்பயின் பட்டம் வென்றுள்ளது.

இறுதிப் போட்டியில் காலி க்ளெடியேட்டர்ஸ் கழகத்தினை 53 ஓட்டங்களினால் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய யாழ்ப்பாண அணி முதலில் துடுப்பெடுத்தாடியதுடன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விட்டக்களை இழந்து 188 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதில் சொயிப் மலிக் 46 ஓட்டங்களையும், அணித் தலைவர் திசர பெரேரா 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் காலி அணி சார்பில் தனஞ்சய லக்ஸான் மூன்று விக்கட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய காலி க்ளெடியேட்டர்ஸ் கழகம் 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுகளை இழந்து 135 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.

இதில் அணித் தலைவர் பானுக ராஜபக்ச 40 ஓட்டங்களையும், அசாம் கான் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில் யாழ்ப்பாண அணியின் சார்பில் சொயிப் மாலிக் மற்றும் உஸ்மான் ஷின்வாரி ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.

கொவிட் நோய்த் தொற்று நிலைமைகளுக்கு மத்தியில் இந்தப் போட்டித் தொடர் நடாத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சூ தாட்டத்தில் மனைவியை நண்பர்களிடமே விட்டுகொடுத்த கணவன் : அ திர்ச்சி சம்பவம்!!

பாட்னாவில்..

பீகார் மாநிலம் பாட்னாவில் ந டந்த சூ.தா.ட்.ட.த்.தி.ற்.கு அ டிமையான 36 வ ய து ந ப ர், த ன து ம னைவியை ப ந்தயம் க ட் டி த ன து ந ண்பர்களிடம் இ ழந்த தாகக் கூ றப்படுகி றது. அ தைத் தொ டர்ந்து அ ந்த பெ ண் பா.லி.ய.ல் கொ.டு.மை.க்.கு ஆ ளாகியு ள்ளார்.

இதையடுத்து, இந்த சம்பவம் பீகார் பாகல்பூர் மாவட்டத்தில் நடந்தது, ஹசங்கஞ்ச் குடியிருப்பாளரான ரவி, தனது மனைவி ஆஷாவை ப ல மு றை பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை செ ய் ய தனது நண்பர்களை அனுமதித்துள்ளார்.

மேலும், சமீபத்திய சூ தாட்டத்தின்போது, தனது மனைவியை ப ந்தயம் கட்டி தன் நண்பர்களிடம் அவளை இ ழந்தார். அந்த பெண், அவனின் நண்பர்களுடன் செல்ல மறுத்தபோது,

அவன் மனைவி மீது ஆ.சி.ட் வீ.சி தா.க்.க மு.ய.ன்.று, தன் நண்பர்கள் பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை செ.ய்.ய அ னுமதித்துள்ளான்.

பின்னர் அந்த பெண் தனது கணவனின் வீட்டிலிருந்து த.ப்.பி தனது பெற்றோரின் வீட்டிற்குச் சென்று, தீபக் சிங் என்ற சமூக ஆர்வலரின் உதவியை நாடினார். இதைத் தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த நபர் கை து செய்யப்பட்டார்.

ஆஷாவுக்கும் ரவிக்கும் திருமணமாகி பத்து வருடங்களுக்கும் மேலாகிவிட்டன, ஆனால் ரவியின் கு.டி.ப்.ப.ழ.க்.க.ம் கா ரணமாக அவர்களுக்கு கு ழந்தைகள் இல்லை. கருத்தரிக்க முடியாததால் ரவி தன்னை உ ட ல் ரீ தியாக சி.த்.தி.ர.வ.தை செய்வதாக ஆஷா போலீசாரிடம் தெரிவித்தார்.

த ற்கொ லைக்கு முன்னர் பல மணி நேரம் மாமனாருடன் பேசிய சித்ரா : அழிக்கப்பட்ட ஆதாரம் மீட்கப்பட்டது எப்படி?

நடிகை சித்ரா..

சித்ரா உ யிரிழப்பதற்கு முன்னர் பல மணி நேரம் மாமனாருடன் போனில் பேசியுள்ள நிலையில் அந்த ஆடியோ ஆதாரங்கள் தொடர்பில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ராவின் த.ற்.கொ.லை விவகாரத்தில் நாளுக்கு நாள் புதிய தகவல்கள் வெளியாகி வருகிறது. கடந்த 9ஆம் திகதி சித்ரா தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய.தை பார்த்ததும் ஹேமந்த்தும், விடுதி ஊழியர்களும் அ திர்ச்சியில் உ றைந்திருக்கின்றனர்.

உடனடியாக சித்ராவை ஹேமந்தும் விடுதி ஊழியரும் சேர்ந்து கீழே இறக்கி முதலுதவி அளித்திருக்கின்றனர். பின்னர் ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து சித்ராவைப் பரிசோதித்த பிறகுதான் அவர் உ யிரிழந்தது தெரியவந்திருக்கிறது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிசார் புதிய தகவலை வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் கூறுகையில், சித்ரா ஹேமந்த் ஆகியோரின் செல்போன்களைப் ப றிமுதல் செய்து விசாரித்தோம். சைபர் கிரைம் பொலிசாரின் உதவியோடு, அந்த இரண்டு செல்போன்களிலிருந்து சில தகவல்கள் கிடைத்தன.

அதில் சித்ராவும் ஹேமந்த்தின் அப்பாவான ரவிச்சந்திரன் பேசிய ஆடியோ எங்களுக்குக் கிடைத்தது. போனில் இருந்து அது அ ழிக்கப்பட்ட நிலையிலேயே சைபர் கிரைம் மூலம் மீ ட்டெடுத்தோம். இருவரும் வெகுநேரம் பேசியிருக்கின்றனர்.

அதில்தான் சித்ரா, ஹேமந்த் தொடர்பான முக்கியத் தகவல்களைக் கூறியிருந்தார். அந்த ஆடியோ அடிப்படையில் விசாரித்த பிறகுதான் ஹேமந்த், சம்பவத்தன்று என்ன நடந்தது என்பதைச் சொல்லத் தொடங்கினார்.

அறைக்கு வந்த பிறகு சித்ராவைப் பார்த்து ஹேமந்த் கூறிய வார்த்தைகள் அவரைக் க டும் ம னவே தனையில் தள்ளியிருக்கின்றன. அதன் பிறகுதான் சித்ரா, த.ற்.கொ.லை மு டிவை எடுத்திருக்கிறார் என கூறியுள்ளார்.

உலக சாதனை படைத்த 9 வயது தமிழ் சிறுமி!!

சாய் ஸ்ரீ..

சென்னை பழைய வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த சிறுமி ஒருவர் ஒரு மணிநேரத்தில் 45 வகையான உணவுகளை சமைத்து யூனிகோ உலக சாதனையை படைத்துள்ளார்.

ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியான லட்சுமி சாய் ஸ்ரீ (9 வயது) ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே ஆன்லைன் வகுப்புகளில் கல்வி பயின்று வந்துள்ளார்.

இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் ஓய்வு நேரங்களில் தாயுடன் இணைந்து சமையலுக்கு சிறு சிறு உதவிகளை செய்து வந்த லட்சுமி அதன் பின் அதன் மீது அதிக அளவு நாட்டம் கொண்டு உணவுகளை சமைக்க தொடங்கியுள்ளார்.

இவரின் ஆர்வத்தை பார்த்த தாயார் கலைமகள் யுனிகோ சாதனை முயற்சியில் ஈடுபடுத்த வழிநடத்தியுள்ளார். இதற்கமைய சென்னையில் நடைபெற்ற போட்டியில்,

தமிழர்களின் பாரம்பரிய உணவுகளான கம்பு தோசை, கேழ்வரகு இட்லி, கேழ்வரகு புட்டு, சிறு தானியங்கள், மீன் வருவல், இறால் வறுவல், சிக்கன் 65 என்று அந்த அரங்கத்தையே நறுமணத்தால் ஈர்த்து விருந்து படைத்துள்ளார்.

லட்சுமி ஒரு மணிநேரத்தில் 45 வகையான உணவுகளை சமைத்து சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து பெருமை சேர்த்துள்ளார். இதனை பார்த்த பலர் இவரை பாராட்டி வருகின்றனர்.

காதல் திருமணம் செய்த தம்பதிக்கு நேர்ந்த விபரீதம்!!

கன்னியாகுமரி..

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் வி.ஷ.ம.ரு.ந்.தி த.ற்.கொ.லை செ ய்து கொண்ட சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிதம்பர நகர் பகுதியை சார்ந்தவர் மகா வைகுண்டம் (வயது 25). திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்து பகுதியை சார்ந்தவர் கரிசூழ்ந்தாள் என்ற கஸ்தூரி (வயது 24).

இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பறக்கை பைத்துல்மாநகர் பகுதியில் வீடெடுத்து வசித்து வந்துள்ளனர்.

இவர்களுக்கு குழந்தைகள் ஏதும் இல்லாத நிலையில், மகவைகுண்டம் கேமரா பொருத்தும் ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் இவர்களின் வீட்டு கதவு திறக்கப்படாததால், ச ந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து பார்க்கையில், இருவரும் வாயில் நு.ரை.த.ள்.ளி.ய நி லையில் ச டலமாக இ ருந்துள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய வி சாரணையில், இவர்களுக்கு திருமணம் முடிந்து 4 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாத ம ன உ ளைச்சலில் த.ற்.கொ.லை செ ய்திருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகித்து வி சாரணை செய்து வருகின்றனர்.

இந்து பெண்ணை காதலித்து திருமணம் செய்த இஸ்லாமிய இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் இந்து பெண்ணை காதலித்து திருமணம் செய்த இஸ்லாமிய இளைஞனை பஜ்ரங் தள அமைப்பினரின் லவ் ஜிகாத் புகாரின் பேரில் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவத்திற்கு நீதிமன்றம் பொலிசாரை கண்டித்துள்ளது.

உத்திரப்பிரேதச மாநிலம் முரதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் பிங்கி (22). இவரும் ரஷீத் என்ற இளைஞரும் சில மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்கள் திருமணத்தை பதிவு செய்து கொள்வதற்காக கடந்த 6-ஆம் திகதி பதிவு திருமண அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.

அப்போது திடீரென்று, பஜ்ரங் தள் அமைப்பினர் அப்பெண்ணை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்ததுடன், அவர்களது திருமணம் லவ் ஜிகாத் என்று புகார் அளித்தனர்.

இதையடுத்து இது குறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார், பிங்கியை பெண்கள் பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். அவரது கணவர் மற்றும் மைத்துனரை மதம் மாற கட்டாயப்படுத்தியதாக சமீபத்தில் இயற்றப்பட்ட புதிய சட்டத்தின் படி சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை, முரதாபாத் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு வந்தது. நீதிபதியிடம் பிங்கி, தான் விருப்பப்பட்டு ரஷீத்தை திருமணம் செய்ததாகவும், மேஜர் என்றும் கூற, இதனை கேட்ட நீதிமன்றம் அவரை கணவர் வீட்டிற்கு செல்ல அனுமதித்தது. பொலிசாரின் இந்த நடவடிக்கையை நீதிமன்றம் கண்டித்தது குறிப்பிடத்தக்கது.

பள்ளத்தில் குடைசாய்ந்த பெக்கோ இயந்திரம் : ஒருவர் உயிரிழப்பு!!

பெக்கோ இயந்திரம்..

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிஓயா – ஆக்ரோயா பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்குவாரி ஒன்றில் இடம்பெற்ற பெக்கோ இயந்திர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று மதியம் கல்குவாரி வளாகத்திலேயே இடம்பெற்றுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் பெக்கோ இயந்திரத்தை செலுத்துகையில் அதன் கட்டுப்பாட்டை இழந்து 20 அடி பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனையடுத்து, குறித்த சாரதியை மீட்டு, உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவ்வாறு உயிரிழந்தவர், மஸ்கெலியா கோர்த்தி பகுதியை சேர்ந்த மொஹமட் அலீம் (வயது – 36) ஒரு பிள்ளையின் தந்தை என பொலிஸாரின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளன.

உயிரிழந்தவரின் சடலம் வட்டவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பப்படும் என தகவல்கள் தெரியவந்துள்ளன.

இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் நூதன முறையில் வங்கி ஏ.ரி.எம் இயந்திரங்களில் பணம் திருடிய நபர் கைது!!

நூதன முறையில்..

வவுனியாவிலுள்ள வங்கி ஏ.ரி.எம் இயந்திரங்களில் நூதன முறையில் பணங்களை களவாடிய நபரை வவுனியா சிறு குற்றத்தடுப்பு பொலிஸார் நேற்று (15.12.2020) மாலை கைது செய்துள்ளனர்.

வவுனியா நகரில் அமைந்துள்ள அரச வங்கிகளான மக்கள் வங்கி, இலங்கை வங்கி ஆகியவற்றின் ஏ.ரி.எம் இயந்திரங்களில் பணம் மீளப்பெறுவதற்கு வருகை தரும் நபர்களுக்கு உதவி செய்கின்ற போல் சென்று அவர்களின் ஏ.ரி.எம் அட்டை, இரகசிய இலக்கம் என்பவற்றினை பெற்று பண மோ சடி இடம்பெற்றுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலைய சிறு குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த ஐந்து நபர்களின் முறைப்பாட்டினையடுத்து சிறு குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் இரகசிய முறையில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

சிசிரிவி மற்றும் பொதுமக்களின் உதவியுடன் இம் மோ சடியில் ஈடுபட்ட மதவாச்சி அடவீரகொல்லாவா பகுதியினை சேர்ந்த 35 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் குறித்த நபர் கடந்த ஒரு வருடகாலமாக இந் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையுடன் பல லட்சம் பெறுமதியான பணமும் நூதன முறையில் பெறப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபரை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை வவுனியா சிறு குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா நீதிமன்றில் பணியாற்றும் சட்டவாதிக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா..

வவுனியா நீதிமன்றில் பணியாற்றும் அரச சட்டவாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கல்முனையை சேர்ந்த அவருக்கு நேற்றய தினம் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனினும் குறித்த சட்டவாதி வவுனியாவிலிருந்து கல்முனைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான விசாரணைகளை சுகாதார துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை வவுனியா நீதிமன்ற செயற்பாடுகள் ஏற்கனவே மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், உயர் நீதிமன்றத்தின் ஏனைய ஊழியர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வவுனியாவில் தனியார் காப்புறுதி நிறுவனம் முற்றுகை : சுகாதார பரிசோதகர்கள் அதிரடி நடவடிக்கை!!

சுகாதார பரிசோதகர்கள் அதிரடி..

வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு அருகாமையிலிருந்த தனியார் காப்புறுதி நிறுவனத்தில் இன்று (16.12.2020) காலை 100க்கு மேற்பட்டவர்களுடன் ஒன்று கூடல் கூட்டம் இடம்பெற்ற நிலையில் சுகாதார பொது பரிசோதரின் உத்தரவின் பேரில் தடுத்து நிறுத்தப்பட்டது.

நாட்டில் தற்போது கோவிட்-19 தொற்று அதிகரித்து வருகின்ற இந் நிலையில் நாடு முழுவதும் கோவிட் -19 சுகாதார நிபந்தனைகளுடன் கூட்டங்கள், நிகழ்வுகள் , அலுவலக பணிகள் என்பன இடம்பெற்று வருகின்றமையுடன்,

வவுனியா மாவட்டத்தில் கடந்த 4 நாட்களிக்குள் மாத்திரம் 8 கோவிட்-19 நோயாளர்கள் இணங்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் சமூகத்துடன் தொடர்புடைய நிலையில் எழுமாற்றாக பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட சமயத்தின் போதே கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இவ்வாறான சூழ்நிலை வவுனியா மாவட்டத்தில் நிலவி வருகின்ற இந் நிலையில் வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு அருகாமையிலிருந்த தனியார் காப்புறுதி நிறுவனத்தில் இன்று காலை 100க்கு மேற்பட்டவர்களை ஒன்றுதிரட்டி கோவிட் -19 நடைமுறையினை பின்பற்றாது ஒன்று கூடல் ஒன்று இடம்பெற்றது.

இவ்விடயம் தொடர்பில் பொலிஸார், பொது சுகாதார பரிசோதகர் ஆகியோருக்கு பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டினையடுத்து குறித்த தனியார் காப்புறுதி நிறுவனத்திற்கு சென்ற பொது சுகாதார பரிசோதகர் ஒன்றுகூடல் நிகழ்த்துவதற்கு தடை உத்தரவு பிறப்பித்தமையுடன் அனைவரையும் அவ்விடத்திலிருந்து செல்லுமாறு பணிப்புரை வழங்கினார்.

அதன் பின்னர் குறித்த தனியார் காப்புறுதி முகாமையாளருக்கு கோவிட் -19 விதிமுறை தொடர்பாக பொது சுகாதார பரிசோதகரினால் (வருகை தருவர்களின் பெயர்களை பதிவு செய்தல் , கைகளுவும் வசதி , சமூக இடைவெளி போன்றன ) அறிவுறுத்தல் வழங்கப்பட்டதுடன் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

வவுனியாவில் நான்கு மேற்பட்ட பாடசாலைகள் காலவறையின்றி மூடப்பட்டதுடன் மூன்று கிராமங்களும் சுகாதார பரிசோதகர்களினால் மூடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா வெண்கல செட்டிகுளம் பிரதேச சபையின் தவிசாளராக கூட்டமைப்பின் சு.ஜெகதீஸ்வரன் தெரிவு!!

சு.ஜெகதீஸ்வரன்

வவுனியா வெண்கல செட்டிகுளம் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுப்பையா ஜெகதீஸ்வரன்(சிவம்) தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

செட்டிகுளம் பிரதேச சபையின் வரவுசெலவுத்திட்டம் இரண்டு தடவைகள் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு தோல்வியை தழுவியிருந்தது.

அந்தவகையில் புதிய தவிசாளருக்கான வாக்கெடுப்பு வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் டிறெஞ்சன் தலைமையில் இன்று(16.12.2020) இடம்பெற்றது.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சு.ஜெகதீஸ்வரனும், சுதந்திரகட்சி சார்பில் ஏற்கனவே தவிசாளராக பதவி வகித்த ஆ.அந்தோணியின் பெயரும் முன்மொழியப்பட்டது.

தெரிவிற்கான வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுப்பையா ஜெகதீஸ்வரன் (சிவம்) 10 வாக்குகளை பெற்று தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு கூட்டமைப்பின் 05 உறுப்பினர்களும் ஈபிஆர்எல்எப் 03, தமிழ் தேசிய மக்கள் முன்னனி 01, முஸ்லிம் காங்கிரஸின் 01,உறுப்பினரும் வாக்களித்தி்ருந்தனர்.

சுதந்திரகட்சியின் வேட்பாளரான அந்தோணி 06 வாக்குகளை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தார். அவருக்கு அந்த கட்சியின் 4 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 2 உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர். பொதுஜனபெரமுனவின் ஒரு உறுப்பினர் நடுநிலைமை வகித்திருந்தார்.

இந்நிலையில் மூன்றுவருடங்களின் பின்னர் வெண்கல செட்டிகுளம் பிரதேச சபையின் புதிய தவிசாளராக சு.ஜெகதீஸ்வரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.