சாரதி அனுமதிப் பத்திரங்களை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
வேரஹெர பிரதான அலுவலகம் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள அலுவலகங்களில் சாரதி அனுமதி பத்திரம் வெளியிடுதல் உட்பட சேவைகள் துரிதப்படுத்தப்படவுள்ளன. அதற்கான திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு அந்த மாவட்டங்களின் அனைத்து பொறுப்பான அதிகாரிகளிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேரஹெர மற்றும் கம்பஹா அலுவலகங்களில் சாரதி அனுமதி பத்திரத்திற்கான கோரிக்கை அதிகரித்துள்ளமையினால் பல பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் சுமித் அலஹகோன் தெரிவித்துள்ளார்.
அந்த நடவடிக்கைகளை வேகப்படுத்துவதற்காக சனிக்கிழமை மற்றும் ஞாயிறுக்கிழமை ஆகிய மேலதிக நேர கடமைகளை மேற்கொள்ளுமாறு தங்கள் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தொடர்ந்து மட்டுப்படுத்தி சேவை வழங்குவதாக ஆணையாளம் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் பட்டப்பகலில் பெண் ஒருவர் கு த்திக் கொ லை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கு ற்றவாளியை பொலிசார் கைது செய்தனர்.
தாம்பரத்தை அடுத்த புது பெருங்களத்தூரின் பாரதி நகரை சேர்ந்தவர் கோபி, இவரது மனைவி யசோதா ராணி, இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர்.
யசோதா அவர்களது ஏரியாவில் துணிக்கடை வைத்திருக்கிறார், இந்நிலையில் நேற்று மதியம் கடையில் துணி தைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கே வந்த ம ர்ம நபர் ஒருவர் யசோதாவிடம் பேசிக் கொண்டிருந்தார், திடீரென இருவருக்கும் வா க்குவாதம் முற்ற, கடையில் இருந்த கத்திரிக்கோலால் யசோதாவின் க ழுத்தி கு த்தி கொ லை செய்தார்.
உடடினயாக அக்கம்பக்கத்தினர் வரவும் த ப்பியோ டிவிட்டார், க ழுத்தில் கு த்தியதால் சம் பவ இ டத்திலேயே ய சோதாவின் உ யிரும் பி ரிந்தது. விரைந்து வந்த பொலிசார் யசோதாவின் உ டலை மீ ட்டு பி ரேத ப ரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வி சாரணை நடத்தினர். கடந்த மூன்று ஆண்டுகளாக சேலையூர் கணபதிபுரத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவருக்கும் யசோதா ராணிக்கும் உறவு இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து செல்வகுமாரை கைது செய்த பொலிசார் வி சாரணை நடத்தியதில், தன்னுடனான தொடர்பை துண்டித்து பேசாமல் இருந்ததால் கொ லை செய்ததாக தெரிவித்துள்ளார்.
தனியார் வகுப்புக்களை ஆரம்பிக்கும் திகதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி அனைத்து கட்டுப்பாடுகளுடனும் இம்மாதம் 29ஆம் திகதி தனியார் வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு அனுமத வழங்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு : இலங்கையில் தனியார் வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு அனுமதி!!
தனியார் வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 15ம் திகதி முதல் தனியார் வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தனியார் வகுப்பின் இட வசதிக்கு ஏற்பட்ட சமூக இடைவெளியைப் பேணி வகுப்புக்களை நடாத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் ஒர் வகுப்பில் அதிகபட்சமாக 100 மாணவ மாணவியரே கல்வி கற்க முடியும் என வரையறை விதிக்கப்பட்டுள்ளது.
போதியளவு இட வசதி இல்லாத தனியார் வகுப்புக்களில் முன்னதாக வகுப்புக்களில் கலந்து கொண்ட மாணவ மாணவியரின் எண்ணிக்கையில் அரைவாசி மாணவ மாணவியர் பங்கேற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கு டிபோ தையில் க டப்பாரை க ம்பியால் நான்கு மாத கர்ப்பிணி ம னைவியைக் கொ லை செ ய்த க ணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தின் காஞ்சிபுரம் அருகே கிழம்பி புதூர் பகுதியில் வசித்து வருபவர் ஹரி(25). இவரது மனைவி தேவி(21). இருவரும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனர். தேவி 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
ஹரி கு டிபோ தைக்கு அடிமையானதால் கு டித்துவி ட்டு அடிக்கடி தேவியிடம் த கராறு செ ய்துவ ந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் நேற்றும் கு டித்துவி ட்டு தேவியிடம் பி ரச்சனை செய்த ஹரி ஆ த்திரத்தில் வீட்டிலிருந்த க டப்பாரை க ம்பியை எ டுத்து தேவியின் த லையில் ஓ ங்கி அ டித்துள்ளார்.
இதில் தேவி ச ம்பவ இ டத்திலேயே உ யிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் ச டலத்தைக் கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்குப் பி ரேதப் ப ரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குப் பதிவு செய்து தேவியின் கணவர் ஹரியைக் கைது செய்து வி சாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பொலிஸ் தரப்பில் கூறுகையில், ஹரி மற்றும் தேவி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.
இவர்களின் காதலுக்குத் தேவியின் பெற்றோர் எ திர்ப்பு தெரிவித்த நிலையில், காவல்நிலையத்தில் வைத்து இருவருக்கும் ஆலோசனை வழங்கினோம். இதனையடுத்து ஹரியைத் திருமணம் செய்யத் தேவி சம்மதம் கூறியதின் அடிப்படையில் ஹரிக்கும் தேவிக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
தேவிக்குத் தனது கணவர் ஹரி கு டிபோ தைக்கு அ டிமையாகி இருந்தது தெரியாது. திருமணத்திற்குப் பின்னர் ஹரி தினமும் ம துக கு டித்து வந்ததால் இருவருக்கும் இடையே அ டிக்கடி த கராறு ஏற்பட்டு வந்துகொண்டிருந்தது.
அந்த வகையில் நேற்று இருவருக்கும் பி ரச்சனை மு ற்றியதால் கு டிபோ தையிலிருந்த ஹரி க டப்பாரை க ம்பியால் தே வியை அ டித்து கொ டூரமாகக் கொ லை செ ய்துள் ளார். தற்போது ஹரியைக் கை து செ ய்து வி சாரணை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் வடமாகாண மோட்டார் போக்குவத்து திணைக்களத்தினால் வாகன வருமான உத்தரவுப் பத்திரம் தானியங்கி இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.
வாகன வருமான உத்தரவுப் பத்திரத்தினை பெறுவதினை இலகுபடுத்தும் முகமாக அமைக்கப்பட்ட இவ் இணையத்தின் ஊடாக வாகன வருமான வரி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ப்பிப்பத்திற்குத் மின்னஞ்சல் முகவரி,
கடனட்டை (Credit Card) அல்லது டெபிட் காட், வாகனத்தின் பதிவுச்சான்றிதழ் , வலுவில் உள்ள காப்புறுதிப்பத்திரம், இறுதியாகப்பெற்ற வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம், புகைப்பரிசோதனை அறிக்கை என்பன அடிப்படைத் தேவைப்பாடுகளாகும்.
வாகன வருமான உத்தரவுப் பத்திரம் தானியங்கி இயந்திரத்திற்கு முன்பாக இணையத்தின் ஊடாக வாகன வருமான வரி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிப்பதற்கான படிமுறைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா பண்ணைக்கு அருகாமையில் இன்று (10.06.2020) மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.
அட்டன் பகுதியை சேர்ந்த 28 வயதான மனோகரன் கணேஷ் என்பவரே மோட்டார் சைக்கிள் விபத்தில் உ யிரிழந்துள்ளார். நண்பர் ஒருவரின் வீட்டில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்டு அட்டன் நோக்கி பயணிக்கையிலேயே அவர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.
கொட்டகலை நகரிலிருந்து லொக்கீல் நோக்கி பயணிப்பதற்கு தயாரான ஆட்டோவொன்றில், வேகக்கட்டுப்பாட்டை இழந்து அவர் செலுத்திய மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் இருந்து அவர் வீசப்பட்டுள்ளார். வீதிக்கு அருகாமையில் இருந்த ‘காட் கல்’ எனப்படுகின்ற எல்லை நிர்ணய கல்லில் தலைபட்டதாலேயே உ யிரிழந்தார்.
அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து வீசுபடும் போது தலைக்கவசமும் கழன்றுள்ளது. படுகாயமடைந்த அவர் கொட்டகலை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்படும் வழியில் உ யிரிழந்தார் என்றும், சடலம் பிரேத பரிசோதனைக்காக கொட்டகலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தியாவில் சிறிய விடயத்துக்கு ம னைவியுடன் ச ண்டைபோ ட்ட க ணவன் தூ க்கி ட்டு த ற்கொ லை செய்து கொண்ட ச ம்பவம் சோ கத்தை ஏ ற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியை சேர்ந்தவர் நிகில். இவருக்கு திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில் ம னைவி மற்றும் குடும்பத்தாருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் மாலை ம னைவியுடன் சி றிய வி டயத்துக்கு ச ண்டைபோ ட்ட நிகில் பி ன்னர் த னது அ றைக்குள் செ ன்றுவிட்டார். வெகுநேரமாகியும் நிகில் வெ ளியில் வ ராததால் ப யந்து போ ன ம னைவி க தவை த ட்டியும் அ வர் தி றக்கவில்லை.
இதையடுத்து கு டும்பத்தார் அனைவரும் சேர்ந்து க தவை உ டைத்து பா ர்த்த போ து நிகில் தூ க்கில் தொ ங்கியப டி உ யிருக்கு போ ராடியதை க ண்டு அ திர்ச்சியடை ந்தனர். பின்னர் அ வரை மீ ட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை ப லனின்றி உ யிரிழந்தார்.
சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரித்தனர், அவர்கள் கூறுகையில், சின்ன விடயத்துக்கு கூட நிகிலும் அவர் மனைவியும் அ டிக்க டி ச ண்டை போடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். ச ம்பவம் ந டப்பதற்கு முந்தைய நாள் இரவு கூட வெகுநேரம் குடும்பத்தாருடன் சிரித்து பேசி கொண்டிருந்தார்.
பின்னர் நடுஇரவில் தான் தூங்க சென்றார், அடுத்தநாள் மதியம் மனைவியுடன் ஏ ற்பட்ட ச ண்டையின் போதே திடீரென இந்த மு டிவை நிகில் எடுத்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் வி சாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.
வெளிநாட்டில் உ யிரிழந்த கணவரின் சடலம் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் நேற்று குழந்தை பெற்றெடுத்த அவர் மனைவி கணவரை இறுதியாக தொட்டு கூட பார்க்க முடியாத சூழலுக்கு ஆளானது பலரின் மனதை கலங்கடித்துள்ளது.
கேரளாவை சேர்ந்த தம்பதி நிதின் சந்திரன் (28) மற்றும் அதிரா (27). இருவரும் துபாயில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றி வந்தனர்.
இந்த நிலையில் கர்ப்பமாக இருந்த அதிரா கடந்த் மாதம் பிரசவத்துக்காக இந்தியா வந்த நிலையில் அவர் கணவர் நிதின் துபாயிலேயே இருந்தார்.
நிதின் இதயநோயாளி ஆவார், அதற்கான சிகிச்சையை எடுத்து வந்த அவர் கடந்த 8ஆம் திகதி தூக்கத்திலேயே மாரடைப்பால் உயிரிழந்தார். ஆனால் கர்ப்பிணியான அதிராவிடம் இந்த தகவல் தெரிவிக்கப்படாத நிலையில் நேற்று அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
இந்த சூழலில் நிதினின் உடல் இன்று சிறப்பு விமானத்தில் சொந்த ஊருக்கு வந்தது. இதையடுத்து கணவர் இறப்பு குறித்து அதிராவிடம் உறவினர்கள் கூறினார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த அதிராவுக்கு இரத்த கொதிப்பு அதிகமானது.
பின்னர் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சையளித்தனர், ஏற்கனவே நிதின் ஏன் தனக்கு போன் செய்யவில்லை, எனக்கு குழந்தை பிறந்த செய்தி கேட்டும் அவர் போன் செய்யாதது ஏன் என அதிரா சந்தேகப்பட்டுள்ளார்.
இதை தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் கொண்டு வரப்பட்ட நிதின் உடல் அருகே வீல் சேரில் அதிரா கொண்டு வரப்பட்டார்.
கணவரை தொட முடியாமல் அவர் கலங்கியது பலரின் மனதை உருக்கியது. இதன்பின்னர் நிதின் உடல் குடும்ப வழக்கத்தின் படி தகனம் செய்யப்பட்டது.
தனியார் வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 15ம் திகதி முதல் தனியார் வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தனியார் வகுப்பின் இட வசதிக்கு ஏற்பட்ட சமூக இடைவெளியைப் பேணி வகுப்புக்களை நடாத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் ஒர் வகுப்பில் அதிகபட்சமாக 100 மாணவ மாணவியரே கல்வி கற்க முடியும் என வரையறை விதிக்கப்பட்டுள்ளது.
போதியளவு இட வசதி இல்லாத தனியார் வகுப்புக்களில் முன்னதாக வகுப்புக்களில் கலந்து கொண்ட மாணவ மாணவியரின் எண்ணிக்கையில் அரைவாசி மாணவ மாணவியர் பங்கேற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலை நடத்தும் திகதி தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள தேர்தல்கள் ஆணைக்குழு இன்றைய தினம் கூடியிருந்தது. இதன்போதே குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்ட போதும், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நீண்ட இழுபறியின் பின்னர் இன்றையதினம் பொதுத் தேர்தலுக்கான திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணப்பெட்டியை க டத்திச் செல்ல முயற்சித்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் து ப்பா க்கி ஒன்றை காட்டி அங்கிருந்தவர்களை அ ச்சுறுத்தி பணப் பெட்டியுடன் தப்பிச் செல்ல முயன்ற சந்தர்ப்பத்தில் பெண் பொலிஸ் அதிகாரி சாமர்த்தியமாக செயற்பட்டுள்ளார்.
குறித்த பெண் பொலிஸ் அதிகாரியும் புலனாய்வு அதிகாரிகள் இருவரும் சந்தேக நபர்களை து ரத்தி சென்று பிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பணப்பெட்டியில் சுமார் 79 இலட்சம் ரூபா பணம் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அனுராதபுரம் வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் கு டிபோ தையில் இருந்துள்ளார் என குறிப்பிடப்படுகின்றது. அத்துடன் சந்தேக நபரிடம் போலி து ப்பா க்கி ஒன்றே இருந்ததாக பொலிஸ் விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் போது சந்தேக நபரை கைது செய்வதற்கு பெண் பொலிஸ் அதிகாரியான வருனி போகஹவத்தயின் வீர செயலுக்கு பலரும் பாராட்டினை தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடம் உயர்தர பரீட்சையில் விஞ்ஞான பிரிவில் கேகாலை மாவட்டத்தில் 4வது மற்றும் 5வது இடங்களை பிடித்த இரட்டை சகோதரர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பல்கலைக்கழகத்திற்கு ஒன்றாக தெரிவாகிய இரட்டை சகோதரர்கள் தொடர்பில் முழு நாட்டினதும் அவதானம் செலுத்தப்பட்டிருந்தது.
ருசிரு தேஷான் மனதுங்க மற்றும் இசுரு ஹேஷான் மனதுங்க என்ற இந்த சகோதர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவர்கள் உயிரிழந்த செய்தி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பலரும் தங்கள் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.
இசுரு ஹேஷான் மனதுங்க என்ற மாணவர் சுகயீனம் காரணமாக கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று பிற்பகல் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா, மடுகந்தையில் பட்டா ரக வாகனம் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று(10.06.2020) காலை இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவில் இருந்து ஹொரவப்பொத்தானை நோக்கி பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை ஏற்றிச் சென்ற பட்டா ரக வாகனம் ஹொரவப்பொத்தானை வீதி, மடுகந்தை பாடசாலை முன்பாக பயணித்த போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் அவ் வாகனத்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து தொடர்பில் மடுகந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
ஹெ ரோய்ன் போ தைப்பொ ருளை வைத்திருந்த கு ற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுஷங்கவின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
அவரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை வி ளக்கமறி யலில் வைக்குமாறு குளியாப்பிட்டிய நீதிவான் ஜனனி சசிகலா வீரதுங்க நேற்று உத்தரவிட்டார்.
மதுஷங்கவும் அவருடைய நண்பரும் போ தைப்பொ ருளை வைத்திருந்த நிலையில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Zoom தொழில்நுட்பத்தின் 4.6.10 முறைமையின் (Zoom Application version 4.6.10) ஊடாக அதனைப் பயன்படுத்திவோரின் தரவுகள் திருடப்படக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக எ ச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை கணினி விவகார அவசர ஆயத்தக்குழு இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,
“தொடர்பாடல் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்குப் பயன்படும் Zoom தொழில்நுட்பத்தின் 4.6.10 முறைமையின் (Zoom Application version 4.6.10) ஊடாக அதனைப் பயன்படுத்திவோரின் தரவுகள் திருடப்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.
இந்த Zoom முறைமையில் இடம்பெறும் கலந்துரையாடல்கள் ஊடாகத் தகவல்களைத் திருடுவதற்காக இரு வாய்ப்புக்கள் காணப்படுகின்றமை சைபர் பாதுகாப்பு தொடர்பான ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளன.
அதன்படி இந்த Zoom முறைமையின் பயனர்கள் தமது கலந்துரையாடல்களின் போது ஜிப் வீடியோக்களைப் (GIF) பரிமாற அனுமதிகப்பபடுக்கின்றது. இதனுடாகத் தகவல்கள் திருடப்படும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
அதேபோன்று Zoom முறைமையை பயன்படுத்துவதற்காக இரகசிய இலக்கத்தை (Process code) கலந்துரையாடல்களில் பரிமாறுவதன் மூலமும் இந்த முறைமையில் தகவல்கள் களவாடப்படும் சந்தர்ப்பங்கள் உள்ளன.
இதனூடாக மிகவும் இரகசியமான தகவல்கள் கூட தொடர்பற்ற மூன்றாம் தரப்பினருக்குச் செல்லக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பல லட்சம் உ யிர்களைக் காவுகொண்டு மேலும் அனைவரையும் ம ரண ப யத்திற்குள்ளாக்கிவரும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் சில விபரங்கள் வெளியாகியுள்ளன.
காகிதம் அல்லது கூரியர் ஆகியவற்றால் பரவல் ஏற்படும் வாய்ப்பு குறைவு. பிளாஸ்டிக் மற்றும் உலோக மேற்பரப்பில் வைரஸ் வீரியம் சில மணி நேரங்களில் குறைந்து விடும் என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கொரோனா வைரஸ் தொடர்பான மறுவரையறுக்கப்பட்ட நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
தொற்று ஏற்பட்டுள்ள நபரிடமிருந்தே நோய் பரவும் வாய்ப்பு அதிகம் , வைரஸ் இருக்கும் மேற்பரப்புகளிலிருந்து எளிதாக பரவாது. இதேப்போல் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்து பரவும் வாய்ப்பும் மிகக் குறைவு.
தும்மல் அல்லது பேசும் போது வெளியிடப்படும் நீர்துளிகள் மூலம் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக காணப்படும் என்றும், வைரஸ் பரவலுக்கு காரணமானவர், நோய் வாய்ப்பட்டிருக்கவோ, அறிகுறியுடனோ இருப்பது அவசியமல்ல. 6 அடிக்கும் குறைவான இடைவெளியுடன் இருக்கும் போது வைரஸ் பரவல் அதிகமாக இருக்கும்.
மருத்துவமனைகள், சிறைச்சாலைகள், கப்பல்களில் அதிகமாக நோய் பரவல் இருக்கும். பலர் ஒன்றாக கூடும் போதே அதிகமாக தொற்று ஏற்படுகிறது. மார்ச் மாதத்தில், வாஷிங்டனில் நடந்த இசை பயிற்சியின் போது வைரஸ் பாதித்த ஒருவர் தும்மியதால் 52 பேர் நோய்வாய் பட்டு உள்ளனர்.
நோய் பாதித்தவருடன் ஏற்படும் நேரடி தொடர்பினாலேயே ஒருவர் பாதிக்கப்படுவர். அவர் கொடுக்கும் காகிதம் அல்லது கூரியர் ஆகியவற்றால் பரவல் ஏற்படும் வாய்ப்பு குறைவு. பிளாஸ்டிக் மற்றும் உலோக மேற்பரப்பில் 3 நாள்கள் வரை வைரஸ் வாழும் என்ற போதிலும், அதன் வீரியம் சில மணி நேரங்களில் குறைந்து விடும்.
ஒருவருக்கு தொற்று ஏற்பட ஆயிரம் வைரஸ் துகள்கள் தேவைப்படுகின்றன. மூச்சு விடும் போது நிமிடத்திற்கு 20 வைரஸ் துகள்கள் உள் இழுக்கப்படுகின்றன. பேசும் போது நிமிடத்திற்கு 200 வைரஸ் துகள்கள் வெளியிடப்படுகின்றன.
இருமல் மற்றும் தும்மலின் போது 200 மில்லியன் வைரஸ் துகள்கள் வெளியிடப்படுகின்றன. இவை காற்றோட்டம் இல்லாத இடங்களில், காற்றில் பல மணி நேரம் உயிர் வாழும். 6 அடி இடைவெளியுடன் 45 நிமிடங்கள் வரை இருக்கும் போது வைரஸ் பரவாது.
பாதிக்கப்பட்டவருடன் முகக்கவசம் அணிந்து 4 நிமிடங்களுக்குள் பேசினால் வைரஸ் தொற்று ஏற்படாது. காற்றோட்டம் மிக்க இடங்களில் வைரஸ் பரவும் வாய்ப்பு குறைவு. ஆனால் மூடப்பட்ட இடங்களில் மக்கள் கூடும் போது வைரஸ் பரவல் அதிகரிக்கும். பொது கழிப்பிடங்கள், பொது இடங்கள் வைரஸ் பரவலை வேகப்படுத்தும் இடங்களாகும்.
அலுவலகங்கள், பாடசாலைகள், விடுதிகள், திருமண நிகழ்ச்சிகள், கேளிக்கை நிகழ்ச்சிகள், சினிமா அரங்குகள் ஆகியவை வைரஸ் பரவலை மிகவும் அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.