வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வர்த்தக சங்கத்தினால் கூடாரம் அமைப்பு!!

வர்த்தக சங்கத்தினால்..

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதினால் அவர்களிடையே சமூக இடைவெளியினை பேணுவதில் சிக்கல் நேர்ந்துள்ளமையினால்,

வைத்தியசாலையின் சில பகுதிகளில் தற்காலிக கூடாரம் அமைத்து நோயாளிகளிடையே சமூக இடைவெளியினை பேண உதவி செய்யுமாறு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் கே.நந்தகுமார் வவுனியா வர்த்தக சங்கத்தினரிடம் கோரிக்கையினை விடுத்திருந்தார்.

வைத்தியசாலை பணிப்பாளரின் கோரிக்கமைவாக மக்களின் நலனை கருத்தில் கொண்டு வவுனியா வர்த்த சங்கத்தின் அனுசரனையில் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் நான்கு கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக வவுனியா வெளிநோயாளர் பிரிவுக்கு முன்பாக , வவுனியா வைத்தியசாலை வாயில் அருகில் , திடீர் விபத்துப்பிரிவுக்கு முன்பாக இக் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அண்மைக்காலமாக வவுனியா வர்த்தக சங்கள் பொதுமக்கள் நலன் சார்ந்த பல்வேறு செயற்றிடங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கொரோனா நோயாளிகள் இனம்காணப்படாத 4 மாவட்டங்கள் எவை தெரியுமா?

கொரோனா நோயாளிகள்..

இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களில் 21 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்றாளிகள் பதிவாகியுள்ளனர். தொற்று நோய் விஞ்ஞான பிரிவு இந்த விடயத்தை அறிவித்துள்ளது.

இதன்படி, நுவரெலியா, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டுமே இதுவரையில் கொரோனா நோய்த் தொற்றாளர்கள் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு மாவட்டத்தில் மிக அதிகளவில் கொரோனா நோய்த்தொற்றாளிகள் பதிவாகியுள்ளனர். இதுவரையில் மொத்தமாக 582 கொரோனா நோய்த்தொற்றாளிகள் பதிவாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் மூன்றாம் கட்டத்தில்!!

கொரோனா வைரஸ்..

இலங்கை கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாவது கட்டத்தில் இருப்பதாக தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் விசேட மருத்துவ நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

மூன்றாம் கட்டம் என்பது கொத்து கொத்தாக நோயாளிகள் ஆங்காங்கே அடையாளம் காணப்படும் சந்தர்ப்பம் எனவும் அவர் கூறியுள்ளார்.

அனைத்து நோயாளிகளுக்கும் வைரஸ் எந்த விதத்தில் பரவியது என்பதை கண்டறிய முடியும். சமூகத்தின் ஊடாக பரவும் நிலைமை இலங்கைக்குள் இன்னும் ஏற்படவில்லை. இந்த நிலைமையானது நான்காம் கட்டத்திற்கு வந்தால், நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

மக்களின் உதவியுடன் நடமாட்டங்களை முடிந்தளவில் குறைப்பதன் மூலமே அந்த நிலைமை ஏற்படுவதை தடுக்க முடியும் எனவும் ஆகந்த விஜேவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

10 000 ற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 9 ஏ சித்திகள்!!

9 ஏ சித்திகள்..

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 10346 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை, பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 73.84 வீதமான மாணவர்கள் கல்விப்பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுக்கொண்டுள்ளனர்.

எவ்வாறெனினும், புதிய கல்விக் கொள்கைக்கு அமைய பரீட்சையில் சித்தி எய்த தவறிய மாணவர்களும் உயர்தரத்தில் தொழில்நுட்ப பாடங்களை கற்பதற்கு விண்ணப்பம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 68. 82 வீதமான மாணவர்கள் கணித பாடத்தில் சித்தி எய்தியுள்ளனர்.

கடற்படை அதிகாரியின் மனைவி மற்றும் இரண்டு வயது குழந்தைக்கும் கொரோனா!!

கொரோனா..

வெலிசரை கடற்படை முகாமில் கடமையாற்றிய நிலையில் செவனகலை பிரதேசத்தில் உள்ள வீட்டுக்கு விடுமுறையில் சென்றிருந்த கடற்படை அதிகாரி, அவரது மனைவி மற்றும் இரண்டு வயதான மகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த கடற்படை அதிகாரிக்கு கொரோனா தொற்றியிருப்பது கடந்த 25 ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, அவரது குடும்பத்தினருக்கு பீ.சீ.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டதுடன் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து அவர்கள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக செவனகலை பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட கடற்படை அதிகாரியுடன் பழகிய நபர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் தத்தமது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

-தமிழ்வின்-

சடலங்களை பொதியிடும் உறைகளுக்கான கோரிக்கை : விசாரணை மேற்கொள்ளுமாறு முறைப்பாடு!!

சடலங்களை பொதியிடும்..

சுகாதார அமைச்சினால் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் சடலங்களை பொதியிடும் 1000 உறைகளுக்கான கோரிக்கை விடுக்கப்பட்ட கடிதம் ஊடகங்களுக்கு சென்றமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு முறையிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சுனில் டி அல்விஸ் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். இந்த உறைகள் கொரோனா வைரஸால் மரணமாவோரின் சடலங்களுக்காக கோரப்பட்டுள்ளது என்ற வகையில் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. இது பிழையான செய்தியாகும்.

இலங்கையில் நாளொன்றுக்கு பல்வேறு காரணங்களுக்காக 100இற்கும அதிகமான மரணங்கள் சம்பவிக்கின்றன. கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள தற்போதைய நிலையில் சந்தேகமான மரணங்கள் நிகழ்ந்தாலும் சடலங்களை உறைகளில் பொதியிட்டே அடக்கம் அல்லது தகனம் செய்ய வேண்டும்.

இந்த நிலையில் சுகாதார அமைச்சிடம் குறித்த உறைகளுக்கு தட்டுப்பாடு நிலவியது. இதனையடுத்தே ஒளி ஊடுருவ முடியாத உடலம் பொதியிடும் உறைகளை தாம் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் கோரியதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

திடீரென அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பரவல் : ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிகிச்சை மையம்!!

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வரும் நிலையில், தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு ஒவ்வொரு மாவட்டங்களிலும் மருத்துவமனைகளை அடையாளம் காணுமாறு கொழும்பு சுகாதார அமைச்சு அவசர பணிப்புரையை விடுத்துள்ளது.

வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் இதற்குரிய மருத்துவமனைகளை அடையாளம் காண்பதற்கான பொறுப்பு அந்தந்த மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு கொழும்பு தொற்று நோய் தடுப்பு மருத்துவமனை, இரணவில மருத்துவமனை, பொலனறுவை கந்தக்காடு மருத்துவமனை, கொழும்பு முல்லேரியா மருத்துவமனை ஆகியவற்றில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்தன.

நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால் மருத்துவமனைகளை விரிவாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதனையடுத்து ஒவ்வொரு மாவட்டங்களிலும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருத்துவமனைகளைத் தயார்படுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் மருத்துவமனைகளை அடையாளப்படுத்தும் பொறுப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

-தமிழ்வின்-

இலங்கையை சேர்ந்த தமிழ் குடும்ப கு ழந்தைகள் இருவருக்கு லண்டனில் நே ர்ந்துள்ள கொ டூரம்!!

லண்டனில்…

இங்கிலாந்தில் கிழக்கு லண்டனின் lford பிரதேசத்தில் தமிழ் குடும்பத்தை சேர்ந்த ஒ ரு வ யதான பெ ண் கு ழந்தை ம ற்றும் மூ ன்று வ யதான சி றுவன் ஆ கியோர் க த்தியால் கு த்தி கொ லை செ ய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை 40 வ யதான ந பர் ஒ ருவர் க த்தி கு த்து கா ரணமாக ப டுகாயம டைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

க த்தி கு த்து ச ம்பவத்துடன் தொ டர்புடைய ந பர்களை பொ லிஸார் தே டி வ ருகின்றனர். இந்த ச ம்பவம் நே ற்று மா லை 5.30 அளவில் ந டந்துள்ளது. ச ம்பவ இ டத்திலேயே பெ ண் கு ழந்தை உ யிரிழந்துள்ளதுடன், மூ ன்று வயது சி றுவன் வை த்தியசாலையில் அ னுமதிக்கப்பட்ட பி ன்னர் உ யிரிழந்துள்ளார்.

இலங்கையை சேர்ந்த இவர்கள் lford பிரதேசத்தில் உள்ள தமிழ் வர்த்தக நிலையத்திற்கு மேல் உள்ள தொடர்மாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர்.

இலங்கையை சேர்ந்த இவர்கள் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு குடியேறியதாகவும் தா ய், த ந்தை ம ற்றும் இ ரண்டு கு ழந்தைகளை கொண்ட இந்த கு டும்பம் தனது வீட்டுக்கு அயல் வீட்டில் வசித்து வருவதாகவும் 64 வயதான ஹர்ஷத் பட்டேல் என்பவர் தெரிவித்துள்ளார்.

இந்த கொ லை ச ம்பவத்துடன் தொ டர்புடையவர்களும், ச ம்பவத்தில் பா திக்கப்பட்டவர்களும் அ றிந்தவர்களாக இரு க்கலாம் என பொ லிஸார் ச ந்தேகம் வெ ளியிட்டுள்ளனர்.

க.பொ.த உயர்தர பரீட்சைகள் ஒத்தி வைக்கப்படுமா? கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்!!

உயர்தர பரீட்சைகள்..

க.பொ.த உயர்தர பரீட்சைகள் ஒத்தி வைக்கப்படாதென கல்வி அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள உயர்தர பரீட்சைகளை பிற்போடுவதற்கு இதுவரையில் எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தற்போது வரையில் 367000 உயர்தர பரீட்சை விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இன்று மாலை சாதாரண பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் நாளை அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு அரச அதிபர் கோரிக்கை!!

வவுனியாவில் நாளை..

வவுனியா நகரப்பகுதியை சுத்திகரிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதால் வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் மூடி ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட அரச அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெலிசறை இராணுவ முகாமில் இருந்து விடுமுறையில் வவுனியா, மகாகச்சகொடி பகுதிக்கு வந்த கடற்படை வீரருக்கு கொரேனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த கடற்படை வீரர் வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வந்துள்ளார். இதனால் பலர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகவுள்ளனர்.

குறித்த கடற்படை வீரர் சென்ற இடங்களை முழுமையாக தனிமைப்படுத்துவதற்காகவும், நகரை மருந்து தெளித்து சுத்திகரிப்பு செய்வதற்காகவும் சுகாதார துறையின் ஆலோசனைக்கு அமைவாக இந்த தீர்மானம் எடுக்கப்படுகிறது.

எனவே மக்கள் தமது நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதுடன், வர்த்தக நிலையங்களை பூட்டி கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அரச அதிபர் கோரியுள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

கொரோனா..

நாட்டில் இன்றை தினம் மேலும் 10 கொரோனா தொற்றார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் மட்டும் 44 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். இவ்வாறு இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 44 தொற்றாளர்களும் கடற்படை வீரர்கள் ஆவர்.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 567 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 434 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, 295 பேர் சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளதுடன் இதுவரை 126 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இலங்கையில் கொரோனா தொற்றினால் 7 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படை வீரர் சென்ற இடங்கள் வெளியானது!!

கடற்படை வீரர் சென்ற இடங்கள்..

வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றி விடுமுறையில் வவுனியா மகாகச்சகொடி பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு வந்திருந்த கடற்படை வீரரிடம் மேற்கொள்ளப்பட்ட இரத்த பரிசோதனையின் போதே குறித்த வீரருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்றையதினம் (26.04.2020) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடற்படை வீரரிடம் வவுனியாவில் சென்ற இடங்கள் தொடர்பாக தகவல்களை சுகாதார திணைக்களத்தினர் வெளியிட்டுள்ளனர்.

பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள சேவீஸ் நிலையம் மற்றும் பலசரக்கு வாணிபம், கந்தசாமி கோவில் வீதியில் அமைந்துள்ள இரு வாகன உதிரிப்பாக விற்பனை நிலையங்கள் மற்றும் பலசரக்கு வாணிபம், சூசைப்பிள்ளையார் வீதியிலுள்ள வாகனம் திருத்தும் நிலையம்,

ஹொரவப்பொத்தானை வீதியிலுள்ள பலசரக்கு வாணிபம், பழைய பேருந்து நிலைய கட்டிடத்திலுள்ள பார்மசி, மணிக்கூட்டு கோபுரத்திற்கு அண்மையிலுள்ள எரிபொருள் மீள் நிரப்பு நிலையம், பஜார் வீதியிலுள்ள பிரபல ஆடை விற்பனையகம், இரண்டாம் குருக்குத்தெரு வீதியிலுள்ள காப்புறுதி நிலையம் போன்றவற்றிக்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படை வீரர் சென்ற இடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டதுடன் மேலே குறிப்பிட்டுள்ள இடங்களின் உரிமையாளர், ஊழியர்கள் அவர்களின் குடும்படுத்தினருடன் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் ஊடரங்கு தளர்த்தப்படும் சமயத்தில் அவதானத்துடன் இருக்குமாறு சுகாதார பிரிவினர் பொதுமக்களிடம் வேண்டுகொள் விடுத்துள்ளனர்.

வவுனியாவில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சென்று வருவோருக்கு கொரோனா பரிசோதனை!!

கொரோனா பரிசோதனை..

வவுனியாவில் இருந்து அத்தியாவசிய தேவைகளுக்காக பிற மாவட்டங்களுக்கு சென்று வரும் வாகன சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைகளத்தில் இன்று (27.04) காலை குறித்த பரிசோதனை சுகாதார பரிசோதகர்களால் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியாவில் இருந்து அத்தியாவசிய தேவைகளின் பொருட்டு கொழும்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வரும் சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஆகியோருக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பதை அறிவதற்கான பீ.சீ.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

வவுனியாவில் கொரோனா தொற்றையடுத்து அரச அதிபர் தலைமையில் அவசர கலந்துரையாடல்!!

கொரோனா..

வவுனியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன தலைமையில் அவசர கலந்துரையாடல் ஒன்று இன்று (27.04.2020) இடம்பெற்றது.

மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் சுகாதார துறையினர், பாதுகாப்புத் துறையினர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது வெலிமடை இராணுவ முகாமில் இருந்து வவுனியா, மகாகச்சகொடி பகுதிக்கு விடுமுறையில் வந்த கடற்படை வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போதைய நிலமைகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன்,

குறித்த கடற்படை வீரரரின் வீடு அமைந்துள்ள மகாகச்சகொடி பகுதி முழுமையாக முடக்கப்பட்டுள்ளதுடன், குறித்த நபர் வவுனியாவில் நடமாடிய இடங்களையும் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறையினரால் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த வவுனியா மாவட்டத்தில் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதற்கும் அரசாங்கத்திடம் இக் கூட்ட தீர்மானத்திற்கு அமைவாக மாவட்ட அரச அதிபரால் ஆலோசனை முன் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், அத்தியாவசிய தேவைகளும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளதுடன் தொற்றை கட்டுப்படுத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் பாதுகாப்பு தரப்பினர், பொலிசார் மற்றும் சுகாதார துறையினருக்கு அரச அதிபரால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சற்று முன்னர் வெளியிடப்பட்ட சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்!!

சாதாரண தரப் பரீட்சை..

கல்விப் பொதுத் தரதார சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் சற்று முன்னர் இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

இலங்கை பரீட்சை திணைக்களத்தின் இணைய தளத்தில் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.doenets.lk/examresults என்ற இணை முகவரிக்குள் பிரவேசித்து பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

வவுனியாவில் ஊரடங்கிலும் மருந்தகங்கள் திறப்பு!!

மருந்தகங்கள் திறப்பு..

நாட்டில் கொரனா தொற்று தீவிரம் அடைந்ததையடுத்து நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இந்நிலையில் வவுனியாவில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள சமயத்தில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு மருந்தகங்கள் திறந்துள்ளன.

ஊடரங்கு அமுலில் உள்ள காலப்பகுதியில் நோயாளர்களின் நலனை கருத்தில் கொண்டு மருந்தகங்களும் திறக்கப்பட்டுள்ளது.

நாளையதினம் வவுனியா உட்பட நாட்டின் பல பாகங்களில் ஊடரங்கு சட்டம் நாளை காலை 5.00 மணி தொடக்கம் இரவு 8.00 மணி வரையிலான காலப்பகுதியில் தளர்த்தப்படவுள்ள நிலையில் மக்கள் சமூக இடைவெளியினை பேணும் வகையில் வீதிகளில் நிறப்பூச்சினால் சதுர வடிவில் அடையாளமிடப்பட்டுள்ளது.