இதை மட்டும் செய்தால் போதும் : கொரோனா வைரஸ் பற்றி அ ச்சப்படத் தேவையில்லை!!

கொரோனா வைரஸ்

சீனாவில் பரவிவரும் கோரோனா வைரஸ் தொடர்பில் வடக்கு மக்கள் தேவையற்று அச்சமடையத் தேவையில்லை என்று மாகாண சமுதாய மருத்துவ பிரிவின் அதிகாரி மருத்துவர் எஸ்.சிவகணேசன் தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் தெரிவித்ததாவது,

இலங்கையைப் பொறுத்த வரையில் சீனாவுடன் தொடர்புகள் காணப்படினும் கோரோனா வைரஸ் தொற்றுள்ள பிரதேசமாகக் காணப்படவில்லை.

எனினும் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் இதுதொடர்பான தவறான விடயங்கள் வெளியிடப்பட்டு மக்களிடையே தேவையற்ற பயமும் கு ழப்பங்களும் ஏற்படலாம் என்பதனால் இந்த தகவல்களை பொதுமக்களின் நன்மைகருதித் தெரிவிக்கின்றோம்.

தற்போது சீனாவில் குறிப்பிட்டதொரு மாகாணத்தில் சுமார் 3 ஆயிரம் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் 120 நோயாளர்கள் உ யிரிழந்துள்ளனர்.

எனினும் ஏனைய நாடுகளில் சீனா போன்று கோரோனா வைரஸ் நிரந்தரமான தொற்றுக் காணப்படவில்லை. அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் சுகாதார ஊழியர்களிடம் கோரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் காணப்பட்டுள்ள போதும் சீனா போன்று ஆபத்துக்கள் இல்லை. இலங்கையிலும் கோரோனா தொற்றுக்குள்ளான இரண்டு நோயாளர்கள் இனங்காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

4 நோயாளர்களின் மாதிரிகள் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டு அவர்களுக்கு ஏற்பட்டது கோரோனா வைரஸ் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இந்தவிடயத்தில் தேவையற்றுப் அ ச்சம் கொள்ளத் தேவையில்லை.

கோரோனா வைரஸ் தொற்று சாதாரணமாக தடிமன், காய்ச்சல் ஏற்படுவது போன்றத் தொற்றுத்தான். ஆனால் 2019ஆம் ஆண்டு பிற்பகுதியில் சீனாவில் புதிய வகை கோரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன்மூலம்தான் தற்போது காணப்படுகின்ற நோய்நிலமை ஏற்படுகிறது.

இதுதொடர்பில் தற்போது ஆராய்ச்சிகளை சீன அரசும் உலக சுகாதார நிறுவனமும் மேற்கொண்டு வருகின்றன. அதன் ஊடாக மேலதிக தகவல்களை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

இலங்கையில் சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு உரிய தகவல்களை வழங்கும். எனினும் நாம் சில த ற்காப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியிருக்கும். கூடுதலாக சுற்றுலா பயணிகள் கூடும் இடங்களில் இதற்கான த ற்காப்பு நடவடிக்கைகள் அவசியமாகும்.

சவற்காரமிட்டு கைகழுவுதல் மிகவும் முக்கியமானது. எத்தகைய தொற்று நோயாக இருந்தாலும் சவற்காரமிட்டு கைகளைக் கழுவுவதன் மூலம் 90 வீதமாக நோய் பரவாமல் தடுக்க முடியும்.

பொதுவாக வைரஸ் தொற்றுக்களைத் தடுக்கும் உணவு வகைகள் உள்ளன. மரக்கறிகள், பழங்கள்(புளிப்பான பழங்கள்) போன்றவற்றை உணவுடன் சேர்த்துக் கொள்வதன்மூலம் கோரோனா வைரஸ் தொற்றைக் குறைக்கக் கூடியதாக இருக்கும்.


அத்துடன், தேவையற்ற பயணங்களை தவிர்க்கவேண்டும். குறிப்பாக கட்டுநாயக்க விமான நிலையம், சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடங்களைத் தவிர்த்துக் கொள்வது உதவியாக இருக்கும்.

சுகாதார அமைச்சு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைரஸ் தொற்று நோயாளர்களை இனங்கண்டு கொள்வதற்கான நவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதால் நாம் தேவையற்ற வகையில் அ ச்சமடையத் தேவையில்லை- என்றார்.

ஏழு பெண்களை மணந்த 65 வயது கோடீஸ்வரர் : 8வதாக 23 வயது பெண் மீது ஆசை!!

65 வயது கோடீஸ்வரர்

தமிழகத்தில் 7 திருமணம் செய்து கொண்ட 65 வயது கோடீஸ்வரர், தங்களது மகளை 8வது திருமணம் செய்ய முயற்சிப்பதாக பெற்றோர் க ண்ணீர் மல்க கூறியுள்ளது ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வடபழனியை சேர்ந்தவர் பஷீர். இவருடைய மனைவி பாத்திமா. இவர்களது 23 வயது மகள் நெல்லையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் கடையில் வேலைக்கு சேர்ந்தார். இந்த நிலையில் பஷீர் மற்றும் பாத்திமா ஆகியோர் சேர்ந்து நெல்லை பொலிசில் ஒரு புகார் கொடுத்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், எங்களுடைய மகள் நெல்லையில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார். அப்போது ஒரு கோடீஸ்வர தொழில் அதிபர், மகளை திருமணம் செய்து கொள்வதாகவும், ஹொட்டல், சூப்பர் மார்க்கெட்டுகளை தருகிறேன் என்றும் ஆசை வார்த்தை கூறியும் தனி வீட்டில் தங்க வைத்துள்ளார்.

அவருக்கு 65 வயதுக்கு மேல் ஆகிறது, ஏற்கனவே 7 பெண்களை திருமணம் செய்துள்ளார், தற்போது எங்களுடைய மகளை 8வதாக திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்கிறார். இதை தடுத்து நிறுத்த வேண்டும்.

அவரிடம் இருந்து எங்களுடைய மகளை மீட்க சென்றபோது கொ லை செய்து விடுவதாக மி ரட்டி வி ரட்டி அ டித்தார். எனவே, எங்களுடைய மகளை உடனடியாக மீட்டுத்தர வேண்டும் என கூறி கதறிய அழுதார்கள். இது தொடர்பில் பொலிசார் தங்கள் வி சாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

அழகாக இல்லாததால் புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு!!

புதுப்பெண்

தமிழகத்தில் அழகாக இல்லை என கூறி கணவர் தொ ல்லை செய்ததால் புதுப்பெண் த ற்கொ லை செய்து கொண்டுள்ளார். நாகர்கோவிலை சேர்ந்த அர்ச்சனா (24) என்ற பெண் சிறு வயதிலேயே தாயை இழந்தவர். அதே பகுதியை சோ்ந்த சிவனை பல கனவுகளோடு கரம் பிடித்தார்.

திருமணமாகி 7 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் அர்ச்சனா நேற்று த ற்கொ லை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அர்ச்சனாவின் தந்தை பொன்னு முத்து கூறும்போது, மூன்று பெண் குழந்தைகளில் மூன்றாவது தான் அர்ச்சனா.

தாய் இல்லாத குறையை காட்டாமல் தாயாகவும் தந்தையாகவும் மூன்று பேரையும் வளா்த்தேன். மகளை விருப்பப்பட்டு பெற்றோர்களின் சம்மதத்துடன் தான் சிவன் திருமணம் செய்தான்.

இரண்டு மாதம் சந்தோஷமாக இருந்த அவர்கள் அதன்பிறகு கணவனுக்கும் மாமியாருக்கும் தன்னை பிடிக்கவில்லையென்றும் நான் ஒல்லியாக அழகு இல்லாமல் இருக்கிறேன் என கு ற்றம் சொல்லி தினமும் கணவா் ச ண்டை போடுவதாக என்னிடம் சொல்லுவாள்.

இதனால் அர்ச்சனா குண்டாக அக்கம் பக்கத்தினா் சொல்வதையெல்லாம் கேட்டு அதை வாங்கி சாப்பிட்டு வந்தாள். அதன் பிறகு சுவையாக சமையல் செய்யவில்லை என்று அதையும் கு ற்றம்சொல்லி அவளை அடிக்கடி அ டிப்பதால் தினமும் நிம்மதி இல்லாமல் ம னவே தனையில் இருந்து வந்தாள்.

இந்தநிலையில் தான் அவள் த ற்கொ லை செய்து இருக்கிறாள். அது கொ லையாக கூட இருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது என கூறியுள்ளார். இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து வி சாரணை நடத்தி வருகின்றனர்.

வவுனியாவில் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் சாதித்த வீரர்களுக்கு கௌரவிப்பு!!

சாதித்த வீரர்களுக்கு கௌரவிப்பு

வடமாகாண குத்துச்சண்டை வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் பணிப்பாளர் மு.ராதாகிருஸ்ணன் தலைமையில் இன்று (29.01) நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள இலங்கை திருச்சபை தமிழ்கலவன் பாடசாலையில் தரம் 7 இல் கல்வி பயிலும் மாணவன் ஆர்.கெ.கெவின் (11) உட்பட ஏழு வீரர்களும் பாடசாலையின் அதிபர் இ.நவரட்ணம் தலைமையில் பாடசாலை சமூகத்தால் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வை தொடர்ந்து வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தின் மாணவன் க.நிரோஜன் (தங்கப்பதக்கம்) கல்லூரியின் அதிபர் எஸ்.சிவநாதன் தலைமையில் கௌரவிக்கப்பட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துசேனவை சந்தித்த கிக் பொக்சிங் வீரர்கள் அவரின் ஆசிகளை பெற்றுக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து வவுனியா பிரதேச செயலாளர் என்.கமலதாசனை சந்தித்த வீரர்கள் அவருடன் அளவளாவியிருந்தனர்.

இலங்கையை பிரதிபலித்து பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச கிக்பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவை சேர்ந்த ஏழு வீரர்கள் கலந்துகொண்டு ஏழு பதக்கங்களை இலங்கைக்கு பெற்றுக்கொடுத்துள்ளனர்.

பாகிஸ்தான் லாகூரில் அமைந்துள்ள கடாபி விளையாட்டு மைதானத்தின் உள்ளக விளையாட்டு அரங்கில் கடந்த 23.01.2020 தொடக்கம் 26.01.2020 ஆம் திகதி வரை நடைபெற்ற சர்வதேச கிக்பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்ட,

வடக்கு மாகாண ஏழு குத்துச்சண்டை வீரர்கள் இலங்கைக்கு ஐந்து தங்கப்பதக்கங்களையும், இரண்டு வெள்ளி பதக்கங்களையும் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

வடக்கு மாகாண கிக் பொக்சிங் குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளரும், வடக்கு மாகாண ஏழாம் அறிவு தற்காப்புகலை சங்கத்தின் தலைவருமான எஸ்.நந்தகுமாரினால் பயிற்றுவிக்கப்பட்ட மாணவர்களான,

வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியை சேர்ந்த எஸ்.சஞ்சயன் (18) தங்கப்பதக்கத்தையும், பி.ராகுல் (17) தங்கப்பதக்கத்தையும், ரி.நாகராஜா (18) தங்கப்பதக்கத்தையும், வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை மாணவன் ஆர்.கெ.கெவின் (11) தங்கப்பதக்கத்தையும்,

வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவன் கெ.நிரோஜன் (16) தங்கப்பதக்கத்தையும், வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தை சேர்ந்த வி.வசீகரன் (17) என்ற மாணவன் வெள்ளி பதக்கத்தையும், வவுனியா காமினி மகாவித்தியாலயத்தை சேர்ந்த எஸ்.ஸ்ரீதர்சன் (18) வெள்ளிப்பதக்கத்தையும் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

சர்வதேச குத்துச்சண்டை பயிற்சிப்பாளரும், பிரன்ஸ் சவாட் குத்துச் சண்டை அமைப்பின் தலைவருமான சி.பூ.பிரசாத் விக்கிரமசிங்க தலைமையில் இலங்கையில் இருந்து வடமாகாணத்தின் வவுனியாவை சேர்ந்த ஏழு வீரர்களும்,

தென்னிலங்கையை சேர்ந்த பதின்நான்கு வீரர்களுமா 21 வீரர்கள் இலங்கையை பிரதிபலித்து பாகிஸ்தானுக்கு பயணமாகியிருந்தனர்.

இவ்வீரர்கள் இலங்கைக்கு 13 தங்கப்பதக்கங்களையும் 06 வெள்ளிப்பதக்கங்களையும் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் : நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பு!!

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் தொடர்பில் சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பப்படும் தகவல்களை வைத்து நாட்டு மக்கள் அ ச்சம் கொள்ள தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அணில் ஜாசிங்க கூறுகையில்,
சமூக ஊடகங்கள் ஊடாக பரிமாற்றப்படும் விடயங்கள் தொடர்பில் விசேடமாக கவனம் செலுத்த வேண்டும்.

தவறான சில தகவல்கள் பொது மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
கொரோனா வைரஸ் தொடர்பில் ஏதேனும் பொது மக்கள் அறிந்துகொள்ள வேண்டுமாயின் சுகாதார அமைச்சினை தொடர்பு கொள்ள முடியும்.

அதற்காக இரு விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார். சுகாதார மேம்பாட்டு பிரிவு : 071 0107107, அனர்த்த பிரிவு: 011 3071073/ 071 3071083

அவுஸ்திரேலியாவில் தமிழ் சிறுமியான கோபிகாவிற்கு ஆ யுதமேந்திய பொலிஸ் பா துகாப்பு!!

அவுஸ்திரேலியாவில் நா டுகடத்தப்படும் அ பாயத்தை எதிர்நோக்கியுள்ள நடேசலிங்கம் – பிரியா குடும்பம் கிறிஸ்மஸ் தீவில் த டுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த தம்பதியினரின் மூத்த மகள் கோபிகா, ஆ யுதமேந்திய பொலிஸ் பா துகாப்புடன் பாலர் பாடசாலைக்கு செல்லவுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதனால், நடேசலிங்கம் – பிரியா தம்பதியினர் மகிழ்ச்சியில் இருப்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு படகு வழியாக இலங்கையிலிருந்து வெளியேறி அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருந்த நடேசலிங்கமும், 2013ம் ஆண்டு தஞ்சமடைந்திருந்த பிரியாவும் அவுஸ்திரேலியாவில் சந்தித்த பின் திருமணம் செய்து கொண்டனர்.

தஞ்சக்கோரிக்கையாளர்களான அவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலேயே இரு பெண் குழந்தைகள் (கோபிகா, தருணிகா) பிறந்தன.

அவுஸ்திரேலியாவின் பிலோயலா (Biloela) நகரில் வசித்து வந்த இவர்களின் விசா, கடந்த மார்ச் 2018ல் காலாவதியாகியதாக தெரிவித்து, கை து செய்யப்பட்டு மெல்பேர்ன் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டனர்.

இதனையடுத்து, அவர்கள் இலங்கைக்கு நா டுகடத்தப்பட இருந்த நிலையில் அம்முயற்சி கடைசி நிமிட நீதிமன்ற தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர், அவர்களை கிறிஸ்துமஸ் தீவுக்கு கொண்டு சென்றது அவுஸ்திரேலிய அரசு.

இந்த நிலையில் The Gladstone Observer பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ள அவர்களுடைய குடும்ப நண்பர் ஏஞ்சலா ஃபிரடெரிக்ஸ், திங்கட்கிழமையிலிருந்து பாடசாலை ஆரம்பிக்கின்றது.

இதனால் கோபிகா மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதாக கூறியுள்ளார். சிறுமி பாலர் பாடசாலைக்கு செல்லும்போது, அவருக்கு ஆ யுதமேந்திய காவலர்களால் சூழப்பட்ட பா துகாப்பு வழங்கப்பட உள்ளது.

அத்துடன், பெற்றோர் சார்பில் ஒருவர் மட்டுமே உடன் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், அவருடைய தந்தை நடேசலிங்கம் செல்ல உள்ளார்.

கோபிகாவின் தாயார் பிரியா, சிறுமியின் முதல் நாள் பாடசாலை பற்றி பெரிதும் கவலைகளை கொண்டிருந்தார்.

ஆனால் தற்போது ஒரு பா துகாப்புடன் பாடசாலை செல்வதை நினைத்து பெரும் மகிழ்ச்சியடைந்திருப்பதாக கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த குடும்பம் நாடு க டத்தப்படுவது பற்றிய வழக்கு எதிர்வரும் 21 மற்றும் 25 திகதிகளில் பெடரல் நீதிமன்றத்தில் வி சாரணைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் சந்தேகம் : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!!

கொரோனா வைரஸ்

இலங்கையில் கொரோனா நோய் தொற்றுக்குள்ளாகி உள்ளதாக சந்தேகிக்கப்படும் பத்து பேர் சிகிச்சை பெற்று வருவதாக அரசாங்க வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு அனைத்து பிரிவும் உடனடியாக தலையிட வேண்டும் என சங்கத்தின் செயலாளர் ஹரித அழுத்தே தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த கருத்தினை வெளியிட்டார்.

தற்போது கொரோனால் வைரஸ் தொற்றுக்குள்ளாகியதாக சந்தேகிக்கப்படும் 10 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொதுமக்கள் முகத்தை மறைக்கும் வகையில் முக கவசம் அணிவது கட்டாயம் இல்லை எனவும் தேவையற்ற அச்சங்களை ஏற்படுத்தி கொள்ள வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலையில் கொழும்பு உட்பட பல பகுதிகளில் முகத்தை முறைக்கும் முக கவசங்களுக்கு பெரும் தடுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வைரஸ் தாக்கத்திற்கு அச்சப்பட்ட அதிக விலை கொடுத்து Face mask கொள்வனவு செய்ய வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஒரு Face mask ஒன்று சுமார் ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட சீனப் பெண் : உதவி செய்தவர்களுக்கு தீவிர சோதனை : அ ச்சத்தில் மக்கள்!!

சீனப் பெண்

உலகளாவிய ரீதியில் பெரும் அ ச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட சீனப் பெண் தொடர்ந்தும் அங்கொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் குறித்த பெண் மத்திய மாகாணம் முழுவதும் சுற்றித் திரிந்ததாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

குறித்த பெண்ணின் சுற்றுலா பயணத்தின் போது அவருக்கு உதவியவர்களுக்கு தீவிர சோ தனை நடத்துமாறு மத்திய மாகாண சுகாதார சேவை இயக்குனர் வைத்தியர் அர்ஜுன திலகரத்ன தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக மத்திய மாகாணத்தில் பல பகுதிகளில் மக்கள் அ ச்சமடைந்துள்ளதுடன் வீடுகளுக்கு மு டங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் தேவையற்ற அ ச்சம் கொள்ள வேண்டாம் என்று வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் மத்திய மாகாணத்திற்குள் பயணம் மேற்கொண்ட குறித்த சீன பெண்ணுக்கு உதவிய 6 பேரை பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் பயணித்த அனைத்து இடங்களையும் சோ தனையிட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இந்தப் பகுதிகளிலுள்ள எவருக்காவது காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற நோய்குறிகள் காணப்பட்டால் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு செல்லுமாறு அவர் அறிவித்துள்ளார்.

இலங்கையில் இதுவரை இரண்டு சீனப் பெண்கள் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் காணி அபகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!

காணி அபகரிப்புக்கு எதிராக..

வவுனியா மாவட்டத்தில் அதிகாரத்தை பயன்படுத்தி பொதுமக்களின் காணிகளை அபகரித்த அதிகாரிகளை கண்டித்து போ ராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக இன்று வடமாகாண மக்கள் திட்ட ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த போ ராட்டம் இடம்பெற்றுள்ளது.

அரசே யு த்தத்தால் இடம்பெயர்ந்து இந்தியாவில் அகதிகளாக இருக்கும் மக்களின் காணிகளை அபகரிக்காதே, காணி விற்பனையால் கிடைத்தது எத்தனை கோடி?, காணி ஊழல்வாதிகளை வீட்டுக்கு அனுப்பு போன்ற கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை ஆ ர்ப்பாட்டக்காரர்கள் கருத்து தெரிவிக்கையில், வவுனியா நகர பிரதேச செயலாளராக கடமையாற்றிய உதயராசா பல காணி மோ சடிகளில் ஈடுபட்டமை தொடர்பில் தகவல்களை வெளிக்கொணர்ந்ததை அடுத்து அவர் இடமாற்றப்பட்டுள்ளார்.

எனினும் அவரை பணி இடைநிறுத்தம் செய்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். அரசியல்வாதிகளினால் இம் மோ சடிகள் தொடர்பில் கேள்வி எழுப்பப்படாத நிலையில் சாதாரண மக்களே இவ்விடயங்களை ஆதாரத்துடன் வெளிப்படுத்தியிருந்தனர். வன்னியைச் சேர்ந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்களோ, அரசியல்வாதிகளோ இது தொடர்பில் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர்.

உயர் அதிகாரிகளின் ஊழல்கள் இவ்வாறே மறைக்கப்பட்டு வருகின்றது. எனவே இதில் சம்பந்தப்பட்ட கிராம சேவகர்கள் குடியேற்ற உத்தியோகத்தர்கள் தொடர்பிலும் விசாரணை செய்ய வேண்டும்.

மக்கள் தாமாக துணிந்து வந்து முறைப்பாடு செய்ய ஆவணம் செய்யப்பட வேண்டும். இன்று இந்தியாவில் உள்ளவர்களின் காணிகளில் கிரவல் அகழப்படுகின்றது. இதனை உடன் தடுத்து நிறுத்தவேண்டும். ஊழல் அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

எனவே நாம் 3 கோரிக்கைகளை முன்வைக்கின்றோம். அவையாவன காணி சம்பந்தமான விசாரணை ஆணைக்குழு நிறுவ வேண்டும். அது வடக்கில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்கள் வாரியாகவும் விசாரணை நடத்த வேண்டும் மற்றும் இந்தியாவில் உள்ள எங்களது மக்களின் காணிகளை எந்த பாவனையும் இல்லாமல் பாதுகாக்க வேண்டும்.

அடுத்து ஊழல் அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றோம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பில் சீனர்கள் பேருந்துகளில் ஏறியதால் உடனே இறங்கிய ஏனைய பயணிகள்!!

கொழும்பில்..

கொழும்பு உட்பட பல பகுதிகளில் பேருந்துகளில் சீனாவை சேர்ந்தவர்கள் ஏறிய போது ஏனைய பயணிகள் அங்கிருந்து விலகிச் செல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன் காரணமாக பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். சீன நாட்டவர்கள் அதிவேக நெடுஞ்சாலை பேருந்துகளில் ஏறிய போது ஏனைய பயணிகள் பேருந்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

மாத்தறையில் இருந்து கொட்டாவ மற்றும் கடுவெல பேருந்தில் பயணிகள் குவிந்திருந்த நிலையில் ஒரு வெளிநாட்டு பயணி பேருந்தில் ஏறியமையினால் ஏனைய பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளனர்.

நெடுஞ்சாலையில் பயணிகள் இறங்கினால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் இதனால் பேருந்திற்கு ஏறுமாறு நடத்துனர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏதாவது ஒரு வகையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாத்திக்கப்பட்ட சீன நாட்டவர் பேருந்தில் இருந்தால், ஒன்றரை மணி நேரத்திற்குள் தங்கள் உடலிலும் தொற்றும் ஆபத்து உள்ளமையினால் தாம் ஏற முடியாதென பயணிகள் கூறியுள்ளனர்.

இந்த நிலைமையின் போது, தான் பேருந்தை விட்டு வெளியேற முடியாதென கூறி சீன நாட்டவர் தெரிவித்துள்ளார். இதனால் குறித்த நெடுஞ்சாலையில் நீண்ட தாமதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வேறு பேருந்துகளில் பயணிகள் ஏறிச் சென்றுள்ளனர்.

இவ்வாறான சம்பவங்கள் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும் ஏற்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பலர் பதிவு இட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை வரையில் நகர்ந்துள்ள கொரோனா வைரஸின் தாக்கம் : பாடசாலைகள் மூடப்படுகின்றனவா?

கொரோனா வைரஸின் தாக்கம்

கொரோனா வைரஸ் அ ச்சம் காரணமாக பாடசாலைகள் மூடப்படமாட்டாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

பாடசாலைகள் மூடப்படுவது தொடர்பில் எந்தவித தீர்மானமும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை. பாடசாலைகளில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விளையாட்டுப் போட்டிகளை நிறுத்துவதற்கும் கல்வி அமைச்சு தீர்மானிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கமானது முதன் முதலில் சீனாவிலேயே ஆரம்பமாகியிருந்த நிலையில் தற்போது இலங்கை வரையில் அதன் தாக்கம் நகர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மயங்கி விழுந்த பாடசாலை மாணவி : கொரோனா வைரஸ் அ ச்சத்தால் உதவ மறுத்த பாடசாலை சமூகம்!!

பாடசாலை மாணவி

கண்டியில் பிரபல பாடசாலை ஒன்றில் சுவாச கோளாறு காரணமாக மயங்கி விழுந்த பாடசாலை மாணவியை வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என எவரும் முன்வராத சந்தர்ப்பமொன்று அண்மையில் பதிவாகியுள்ளது. கொரோனா வைரஸின் அச் சம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 13 வயதுடைய குறித்த மாணவி பாடசாலைக்கு சமூகமளித்து கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளையில், திடீரென சுகயீனமடைந்துள்ளதோடு சுவாசிக்கவும் சிரமப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பாடசாலை நிர்வாகம் 1990 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி நோயாளர் காவு வண்டியினை வரவழைத்துள்ளனர். இதன்போது குறித்த பாடசாலை பகுதிக்கு நோயாளர் காவு வண்டி வருகை தந்த நிலையில், மாணவியை அழைத்து செல்வதற்கு பாடசாலை சமூகத்தினர் யாரும் முன் வராத நிலையேற்பட்டுள்ளது.

குறித்த மாணவிக்கு கொரோனா வைரஸின் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் ஆசிரியர்கள் மாணவியின் அருகில் சென்று உதவ மறுத்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இதன்போது யாரும் உதவ முன் வராத காரணத்தினால் நோயாளர் காவு வாகனத்தின் சாரதி தானே முன்வந்து மாணவியை வைத்தியசாலைக்கு அழைத்து சென்று அனுமதித்துள்ளார்.

எனினும் குறித்த மாணவியை பரிசோதித்த வைத்தியர்கள் மாணவிக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை எனவும், மாணவி சுவாசக்கோளாறு காரணமாகவே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மாணவிக்கான சுவாச மட்டம் மிக குறைந்தளவிலேயே காணப்பட்டுள்ளதாகவும், மேலும் 10 நிமிடங்கள் தாமதித்திருந்தால் மாணவி உ யிரிழந்திருக்க கூடுமெனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸினால் உ யிரிழந்தோரின் எண்ணிக்கை 106ஆக உயர்வு : வழங்கப்பட்டுள்ள எ ச்சரிக்கை!!

கொரோனா வைரஸ்

சீனாவில் கொரோனா வைரஸினால் உ யிரிழந்தோரின் எண்ணிக்கை 106ஆக உயர்ந்துள்ளதுடன், 1300 பேர் வரை இந்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக தெரியவருகிறது.

ஹூபாய் மாகாணத்தில் மாத்திரம் மேலும் 24 பேர் உ யிரிந்துள்ளதுடன், ஏனைய பிரதேசங்களில் குறைந்தது 4 பேர் உ யிரிந்துள்ளனர்.

இந்த நிலையில் வெளிநாட்டு பயணங்களை குறைத்து கொள்ளுமாறு சீனாவின் குடிவரவு அதிகாரிகள் அந்த நாட்டு மக்களிடம் கோரியுள்ளனர்.

இதேவேளை சீனாவின் அனைத்து இடங்களிலும் கல்விக்கூடங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றை பருவ காலத்தில் திறப்பது பிற்போடப்பட்டுள்ளது.

அத்துடன் வீடுகளில் இருக்கும் மாணவர்கள் ஒன்றுகூட வேண்டாம் என்றும், வெளியிடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் எ ச்சரிக்கப்பட்டுள்ளனர். உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் நிலைமைகளை பார்வையிடுவதற்காக பீஜிங்கிக்கு சென்றுள்ளார்.

அமெரிக்காவும் தமது பிரஜைகள் சீனா செல்வது தொடர்பில் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

சீன மற்றும் ஹொங்கொங் பங்குச்சந்தைகள் தொடர்ந்தும் மூ டப்பட்டுள்ளன. பங்குகளின் பரிமாற்றங்களும் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளன.

சீனப் பயணிகளுக்கான ஒன் அரைவல் விசா தற்காலிகமாக நிறுத்தம்!!

ஒன் அரைவல் விசா

சீனாவில் இருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் ஒன் அரைவல் விசா வழங்கும் வசதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் சீனாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அவர்கள் சீனாவில் வசிக்கும் பிரதேசத்தை கவனத்தில் கொண்டு சீனாவில் உள்ள இலங்கை தூதரகம் ஊடாக விசா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் 106 பேர் உயிரிழந்துள்ளனர்.

செல்வச்சந்நிதி முருகன் ஆலய கேணியில் மூழ்கி சி றுவன் ஒருவன் உ யிரிழப்பு!!

ஆலய கேணியில்

யாழ். தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய கேணியில் மூ ழ்கி சி றுவனொருவர் உ யிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆலயத்துக்கு வந்த பக்தர்கள் கேணியில் நீராடியுள்ளனர். இதன்போதே ச டலம் மி தப்பதை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மேலதிக வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை வரும் பயணிகளுக்கான உள்நுழையும் விசா தடை : உடன் அமுல்படுத்துமாறு உத்தரவு!!

உள்நுழையும் விசா

சீனாவில் இருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வருகை விசா தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி சற்று முன்னர் இந்த அறிப்பை வெளியிட்டுள்ளார்.

அதற்கமைய உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த விசா நடைமுறையை தடை செய்யுமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி அறிவித்துள்ளார். இலங்கையில் கொரோனா வைரஸ் நோய் தாக்கத்திற்கு உள்ளான பெண்ணொருவர் நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டார்.

இதனையடுத்து இலங்கையில் நோய்த் தொற்று ஏற்படாத வகையில் பல்வேறு பா துகாப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.